“ஏன் இப்படி பண்ற ஜாக்? யார் கண்ணுலையாவது பட்டுட்டா என்னாகும்?” அவள் சீற, “ம்ம்… கல்யாணம் ஆகும்!” என்று நொடித்த ஜேகோப், “உன்னோட சில டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வேணும், உடனே!” என்றான். அவன் என்ன என்ன வேண்டும் என லிஸ்ட் போட, இவளுக்கு தலையில் பல்ப் எரிந்தது.
“இதெல்லாம் என்கிட்ட வாங்கி ஒரு பிரயோஜனமும் இல்லை. சங்கவி கிட்ட கேளு!” கசப்பை மறைத்துக்கொண்டு அவள் பேச, “அதெல்லாம் நான் வாங்கிப்பேன்! இப்போ நீ குடு” என்றான்.
“குடு குடுன்னா, நான் என்ன டாக்குமெண்ட்ஸ்’ஸ மடிலயா வச்சுருக்கேன்!?” என்று கேட்க, “மொபைல்ல இருக்கும்ல? எனக்கு ஸாஃப்ட் காப்பி போதும்” என்றான்.
“சரி அனுப்புறேன், மொபைல் ரூம்க்குள்ள இருக்கு”
“ஓகே!” என்றதோடு நிறுத்திவிட்டான் ஜேகோப். அந்த வளைவில் இருந்து வெளியேற ரோஷினியும் நினைக்கவில்லை, ஜேகோப்’பும் வெளியேற சொல்லவில்லை.
சிறிது நேரம் நின்றவள், அவனாக எதுவும் பேசப்போவதில்லை என்று உணர்ந்து, “விட்டுடு ஜாக்… நடக்குறது நடக்கட்டும்!” என்றாள் கெஞ்சலாய்.
“ஓகே!” என்றான்.
“யாருக்கு யாருன்னு பொறக்கும்போதே எழுதி வச்சுடுவாங்கன்னு சொல்லுவாங்க! உனக்கு நான் தான்னு கடவுள் எழுதல போல” அவள் சொல்ல,
“ஓ..ஓகே” என்றான் அதற்கும்.
“நான் உங்க ஊருக்கு எல்லாம் செட்’டே ஆக மாட்டேன்! பாஷை கூட சரியா பேச வராது… உங்க ஊரு பொண்ணுங்க மாதிரி ட்ரெஸ் பண்ணிக்க தெரியாது! உன் அளவுக்கு நான் நிறம் கூட இல்ல…” அவள் அடுக்கிக்கொண்டே போக,
“ம்ம்ம்… இன்னும் சொல்லு… என் ஊருல ஆட்டோ இல்ல, ரோட்’ல நாலு எருமைமாடு மேயல… என் இடுப்புல லுங்கி நிக்கல” ஜேகோப் அடுக்க, ரோஷிணி தன்னை மீறி ‘களுக்’ என சிரித்துவிட்டாள்.
சிரிக்கும் அவள் முகத்தை அந்த அரை இருளில் பார்த்த ஜேகோப், “இதான் அழகா இருக்கு! இப்படி சிரிச்சுட்டு இரு! எனக்கு நீதான், உனக்கு நான்தான்னு… நீ சொன்ன ‘காட்’ எப்பவோ டிசைட் பண்ணிட்டான்! எதாவது மிராக்கிள் நடக்கும் கண்டிப்பா! இல்லன்னாலும் நான் நடத்துவேன்!” என்றவனை கலவரமாக பார்த்தவள்,
“வேண்டாம் ஜாக்… சங்கவி பாவம்!” என்றாள்.
“எல்லாரும் சங்கவி.. சங்கவி… சங்கவி’ன்னு அந்த ஒரு பேரை வச்சே என்னை கார்னர் பண்றீங்க! ஆனா, அந்த ஆளு இப்போவரை வாயே திறக்கல! அவளுக்கு இதுல இஷ்டமான்னு கூட யாரும் கேட்கல” என்று சொல்ல,
ரோஷிணி யோசித்துப்பார்த்தாள். கடந்த நான்கு நாட்களாக சங்கவி யாரிடமும் பேசவே இல்லை. எப்போதும் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு சோகமே உருவாக தான் இருக்கிறாள். ஒருவேளை அவளுக்கு ஜேகோபை பிடிக்கும் என்றால் இந்த கல்யாண ஏற்ப்பாட்டில் கொஞ்சத்திலும் கொஞ்சமாவது அவள் ஈடுப்பாட்டோடு இருக்க வேண்டுமே!? என்று தோன்ற,
“அவ என்கிட்ட கூட சரியா பேசல.. நானும் உன் நினைப்புலையே இருந்ததால அவக்கிட்ட என்னனு விசாரிக்கல!” என்றாள்.
“இப்போ சங்கவி எங்க?”
“குளிக்குறா!”
“ஃபைன்… நான் மாடில வாட்டர் டேங்க் கிட்ட வெயிட் பண்றேன்! நீ அவளை கூட்டிட்டு வா! நான் பேசுறேன்” என்றதும், “வேண்டாமே ஜாக்… பாவம்!” என்று அவள் சொல்ல,
“உனக்கு நான் வேணுமா? வேணாமா?” என்றான் கடுகடுவென.
ரோஷிணி கண்கள் கலங்க, “உன்னை எப்படி எனக்கு பிடிச்சு தொலைஞ்சுதுன்னே தெரியல… என்னவோ வருஷக்கனக்கா உங்ககூட பழகிட்ட மாறி தோணுது… உன்னோடவே இருக்கனும்ன்னு தோணுது!” வரப்பார்த்த அழுகையை அடக்கிக்கொண்டு சொல்ல,
“தோணுதுல? அப்பறம் என்ன!? எதையுமே பேசாம சொல்யுஷன் கிடைக்காது ரோஸ்! சங்கவி ஹர்ட் ஆகாத மாதிரி பேசுவோம்! எனக்கு என்னவோ அவக்கிட்ட பேசுனா ஒரு ரூட் கிடைக்கும்ன்னு தோணுது!” என்றான்.
ரோஷிணி முகம் அப்போதும் யோசனயாய் இருக்க, “இல்லனா நம்ம மேரேஜ் பண்ண இன்னொரு ஷார்ட் கட் இருக்கு!” என்றான் குறும்புடன் கண்ணடித்து.
இருளில் அவன் குறும்பை கண்டுப்பிடிக்க முடியாது போக, “என்ன? என்ன?” என்றாள் வேகத்துடன் ஆவலாய்.
“இப்போ சங்கவியும் நானும் ஒரு போட்டோ’ல ஒன்னா இருந்துட்டோம்ன்னு தானே கல்யாணம் பண்ண சொல்றாங்க…!?”
“ஆமா…” முகம் சுருங்கியது அவளுக்கு.
“நம்ம ரெண்டு பேரும் ஏன் ஒரு நைட் முழு…..க்க, ரூம்குள்ள….” என்று முடிப்பதற்க்குள், “ஏய்…” என கையை ஓங்கிக்கொண்டு அவள் வர, “அட, ரூம்க்குள்ள தனியா இருந்தா, இந்த பெருசெல்லாம் சேர்ந்து நமக்கு மேரேஜ் செஞ்சு வைப்பாங்கள்ல? அதை சொன்னேன்! நீ ஏன் தப்பா நினைக்குற?” என்றான் நல்லாப்பிள்ளை போல.
“அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்” அவள் முறைக்கவே, “அப்போ மேல நான் வெயிட் பண்றேன்… சங்கவியை கூட்டிட்டு வா!” என்றவன், வேகமாய் அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு மாடிக்கு விரைய, இவளுக்கு சட்டென கன்னங்கள் சூடேறியது.
மாடி படிகளில் தாவி தாவி செல்பவனை ரசனை பொங்க ஒரு நிமிடம் பார்த்தவள், பின்னே சட்டென முகம் மாற, சங்கவியை அழைத்து வர சென்றாள்.
மாடியில் அங்கும் இங்குமாய் குறுக்கே நடந்துக்கொண்டிருந்தான் ஜேகோப்.
படிகளில் ஆள் வரும் அரவம் கேட்டது.
சங்கவி தான் மெல்லிய குரலில், “எதுக்கு இங்க அழைச்சுட்டு வர என்னை?” கேட்டுக்கொண்டு வந்தாள்.
ரோஷிணி, “வா… சொல்றேன்!” என்று அழைத்து வந்தாள்.
மேலே ஜேகோப் நிற்ப்பதை கண்டதும், சங்கவி அப்படியே நின்றுவிட்டாள்.
ரோஷிணி, “வா… ஜாக் உன்கிட்ட பேசனும்ன்னு சொன்னான்!” என்று இழுத்து வர, “ஹாய் சங்கவி!” என்றான் ஜேகோப்.
தலையை குனிந்தவள், மெளனமாக நின்றாள்.
ஜாக், ரோஷிணியிடம் சைகை செய்து, ‘கேள்’ என ஊக்க, “சங்கவி?” என்றாள்.
அவள் நிமிர்ந்து பார்க்க, “உனக்கு ஜாக்கை பிடிக்குமா?” என்றாள் ரோஷிணி. கேட்டுவிட்டு திக்திக்கென அவள் நிற்க, சங்கவிவோ, தலையை குனிந்தபடி, “ம்ம்!” என்று தலையை ஆட்டினாள்.
நெஞ்சுக்கூடு ஒரு நொடி நிற்க, “வாய திறந்து சொல்லுடி” என்றாள் அவள்.
சங்கவி, “பிடிக்கும்” என்று மெல்லிய குரலில் சொல்ல, ரோஷிணி மூக்கு விடைக்க, அழுகையை சத்தமின்றி ஆரம்பித்தாள்.
ஜேகோப் தலையில் அடித்துக்கொண்டு, “சங்கவி, என்னை பிடிக்கும் ஓகே… என்னை மேரேஜ் பண்ணிக்குற அளவுக்கு பிடிக்குமா?” என்று வினவ, மூச்சை கூட விடாமல், நிமிடத்திற்குள் இருக்கும் எல்லா கடவுளிடமும் பாரபட்சமின்றி வேண்டுதலை வைத்துவிட்டு ரோஷிணி உயிரை கையில் பிடித்து நிற்க, அவளுக்கு குறையாத நிலையில் தான் ‘பிங்கர்ஸ் கிராஸ்ட்’டாக நின்றிருந்தான் ஜேகோப்.
இருவரையும் வெகுவாக சோதித்த சங்கவி, பின் மெதுவாக, மென்மையாக தன் தலையை ஆட்டினாள்… இடமும் வலமுமாய்!
பதில் புரிந்தாலும் இன்னும் தெளிவாக்க வேண்டி, “அப்படின்னா? கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?” என்றாள் ரோஷிணி.
சங்கவி, இம்முறை தலையாட்டாமல், “இல்லை!” என்றாள் வாயை திறந்து.
ஜேகோப் பிடித்து வைத்திருந்த மூச்சை நிம்மதியாய்… அதிநிம்மதியாய்… நிதானமாய் வெளியிட, ரோஷிணி வாயை இறுக்கமாய் பொத்திக்கொண்டு நின்ற இடத்திலேயே குதித்தாள். அவளுக்கு இப்போது இருக்கும் சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை.
சங்கவி இருவரையும் பேந்த பேந்த விழித்தபடி பார்க்க, ஜேகோப், ரோஷினியை பார்த்தான்.
அவ்வளவு தான்… காந்தம் போல வந்து பஜக்கென அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு இறுக அணைத்தவளை, இவனும் பதிலுக்கு அணைக்க, இருவரையும் கண்டு திகைத்துப்போய் நின்றாள் சங்கவி.
அவள், “என்ன நடக்குது இங்க?” என்று கேட்க, “உனக்கு ஏன் இந்த மேரேஜ்’ல இஷ்டம் இல்ல?” என்று கேட்டான் ஜேகோப்.
அப்படியே மௌனமானாள் அவள். பின் இருவருமாய் சேர்ந்து அவளிடம் மாறி மாறி விசாரிக்க, இறுதியில் பெரும் தயக்கத்தோடு தன்னிடம் இருக்கும் காரணத்தை அவள் சொல்ல, அதைக்கேட்ட இருவருமே சிலை போல நின்றனர் அதிர்ச்சியில்.
முதலில் தெளிந்த ரோஷிணி, தலையில் கைவைத்து அப்படியே கீழே அமர்ந்தாள்.
“போச்சு மொத்தமா போச்சு! இது மட்டும் நம்ம வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சுது…?” என்று புலம்ப, சங்கவி கண்களை கசக்கிக்கொண்டு நின்றாள்.
பார்க்கவே அநாதரவான குழந்தை போல அவள் இருக்க, அருகே சென்றவன், அவளை தோளோடு ஆதரவாய் அணைத்தபடி, “டோன்ட் வொர்ரி! நான் இருக்கேன்! நாங்க இருக்கோம்! கண்டிப்பா ஹேப்பி என்டிங் தான் உனக்கு… சரியா?” என்று கேட்க,
“நடக்குமா?” என்றாள் சங்கவி நம்பமுடியாத பாவனையில்.
“நான் இருக்கேன்ல? எல்லாம் நான் பாத்துப்பேன்! நீ நான் சொல்றதை மட்டும் பண்ணு… போதும்!” என்று விட, அவன் தோள்வளைவில் முகத்தை லேசாக சாய்த்து, “உங்களை தான் நம்பி இருக்கேன்!” என்றாள் கண்களை துடைத்தபடி.
ஒலியில்லா, இந்த காட்சியை பக்கத்து வீட்டு மாடியில் தனித்து நின்றிருந்த திரவியன் பார்க்க அவன் நரம்புகள் எல்லாம் புடைத்தது. ரோஷிணி கீழே அமர்ந்திருந்ததால் இருட்டில் அவன் கண்களுக்கு அவள் தெரியவில்லை.
இப்போதே வீட்டினரை எழுப்பி இவர்கள் நடத்தையை சொல்வோமா என்று தோன்ற, ‘இதில் ஜேகோபை தாண்டி சங்கவியின் பெயரும் சேர்ந்தே கெடும்’ என்று எண்ணியவன், கெட்டவரை போதுமென விட்டுவிட்டான்.
ஆனாலும், அவனுக்கு ஜேகோபை பார்க்க பார்க்க காரணமேயின்றி ஆத்திரம் பெருகியது.