ரோஷிணி தனது அறையில் இரவு பண்ணிரண்டு மணிக்கு கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு மறுநாள் நடக்கப்போகும் கடைசி பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு மனம் படிக்கும் புத்தகத்தில் இருக்க, மற்றொரு மனம் கழுத்தில் கிடக்கும் புது தாலிக்கு சொந்தக்காரனிடம் இருந்தது.
தாலிகட்டிய கையோடு, அனைத்து சடங்குகளிடம்,
‘இது என்ன?
அது ஏன்?
அருந்ததியா? அது என்ன அனுஷ்கா படமா?
யோவ், பட்டபகல்ல எப்படி நட்சத்திரம் தெரியும்?
மேரேஜ் அன்னைக்கே பொய் சொல்ல சொல்றீங்க? முடியாது… எனக்கு அனுஷ்கா தெரியல!’
இப்படி பலபல போராட்டங்கள் அவனோடு! இவன் செய்த அலும்பில் சங்கவி ஓடிப்போனது கூட மறந்துபோகும் அளவுக்கு ஆனது.
இதில் புகைப்படம் எடுத்த அழைத்தபோது, ‘ப்ளர் எபக்ட்’ல லோ ஆங்கிள் வச்சு நான் ‘லிப்லாக்’ பண்ற மாதிரி எடுங்க!’ என்று சொல்ல, ரோஷிணி, ‘ஐயையோ’ என அலறிக்கொண்டு ஓடினாள் அவனிடம் இருந்து.
ஒருவழியாய் மண்டபம் விட்டு வீட்டிற்கு வந்து ‘ஹப்பாடா’ என எல்லோரும் அமர, பரமு அந்த ஜோசியரை இழுத்து வந்தார்.
இருவரின் ஜாதகமும் பார்த்தவர், “ஹான்! இதுதான் பொருந்தி இருக்கு! ஏக பொருத்தம்!” என்று ஐஸ்மலை எழுப்பியவர், அடுத்து, “ஆனா, ரெண்டு ஜாதகருக்கு இப்போ நேரம் நல்லதா இல்ல… அதனால சாந்தி முகூர்த்தத்தை பத்து நாளுக்கு பிறகு வச்சா வம்சம் அம்சமா பெருகும்!” என்று அக்னிமலையை அதன் மீது தூவிவிட்டார்.
அவனோ, இதெல்லாம் புரியாமல், “அது யாரு சாந்தி?” என கேட்டுக்கொண்டிருந்தான்.
ரோஷிணிக்கு ஒரு வாரமாக தனக்கு நடக்கப்போகும் திருமணம், அதைத்தொட்ட எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் அதிகம் இருந்தது. இப்போது அதெல்லாம் தகர்ந்துப்போகும்படி இவர் ஒரு குண்டை போக, பாவமாக ஜேகோபை பார்த்தாள்.
அவனோ கொஞ்சமும் அசரவில்லை.
‘இவனுக்கு எந்த ஏக்கமும் இல்லையா?’ அவள் நினைக்க,
அவனோ, “ரோஷி’க்கு இன்னும் த்ரீ டேஸ்’ல பைனல் செமெஸ்டர் எக்ஸாம்ஸ் இருக்கு… அதெல்லாம் அவ முடிக்கட்டும்! நான் இங்க இருந்தா அவளுக்கு படிக்க டிச்டர்பென்ஸ்ஸா இருக்கும். சோ, நான் வெளில ஸ்டே பண்ணிக்குறேன்… எக்ஸாம் முடிஞ்சதும் வரேன்” என்றவன், அவளிடம் கண்களாலேயே விடைபெற்றுக்கொண்டு எல்லோரும் சொல்ல சொல்ல கேட்காமல் சென்றுவிட்டான்.
“பாவி… ப்ளான்…ப்ளான்’ன்னு சொன்ன… ஆனா, இப்படி ஒரு ப்ளான் இருக்குன்னு சொல்லவே இல்லையே!” என மனதுக்குள் பொருமிக்கொண்டாள்.
‘ஒரு கிஸ் பண்ணிட்டு போயிருந்தா என்னவாம்?’ இப்போது கூட அவளுக்கு அது தான் தோன்றியது.
திருமணத்திற்க்கு முன்பே எல்லாருக்கும் பாஸ்போர்ட் வந்திருந்தது. பிறகு, கையோடு அவன் மொத்தமாய் எல்லோருக்கும் டூரிஸ்ட் விசா அப்ளை செய்திருக்க, அதுவும் ஒரே வாரத்தில் அதிக சிரமமின்றி கிடைத்துவிட, நாளைய அவளது பரிட்சையை முடித்துவிட்டால், இரவு ஆஸ்திரேலியா’வை நோக்கி பயணம் ஆரம்பிக்கும்.
அதெல்லாம் விட அவனை பார்த்தே முழுதாய் ஆறு நாட்கள் ஆகியிருந்தது.
‘வரட்டும்… கிட்டயே சேர்க்க மாட்டேன்!’ கருவிக்கொண்டு படுத்தாள்.
மறுநாள் பொழுது அவனை காணப்போகிறோம்… இனி அவனுடனே இருக்கப்போகிறோம் என்ற உவகையுடன் ஆரம்பிக்க, உற்சாகமாக கிளம்பி பரீட்சைக்கு சென்றாள்.
பரீட்சை முடிந்ததும் அவள் கிளம்பி வீட்டுக்கு வர, வீடே இரவு பயணத்துக்காக கிளம்பிக்கொண்டிருந்தது. பல பெட்டிகள் இப்போதே தயாராக இருந்தது.
இவள் வந்ததை கண்டதும், “மசமசன்னு நிக்காம கிளம்புடி! இங்கிருந்து மதுரை போனும்… அப்பறம் பிளைட்டு! நேரமாகிட போது” போறப்போக்கில் சொல்லிவிட்டு போனார் தேவி.
பரமுவும் ருக்மணியும் ‘தாங்கள் எதற்கு?’ என கேட்டதற்கு ‘உங்க தங்கட்சி வீட்டுக்கு வரக்கூடாதா?’ என்று பேசி கிளம்ப வைத்திருந்தார் தேவகி. அதனால், அவர்களும் கிளம்பிக்கொண்டிருக்க, கமலமும் வீரைய்யணும் கூட கிளம்பி இருந்தனர்.
“என்னமா நிக்குற? போ” சத்தியநாதன் சொல்ல, எங்கும் ஜேகோபை காணாத கசப்போடு தன் அறைக்குள் நுழைந்து பையை வீசி எறிந்துவிட்டு தன் டவலோடு குளியலறைக்குள் நுழைந்தாள் ரோஷிணி.
தேகத்தில் நீர் பட்டு ஓடும் சிலிர்ப்பு கூட அவனை நினைக்க வைத்தது. நெஞ்சுக்குழியில் தாலி உரச, ‘தண்டம்!’ என திட்டிக்கொண்டே குளித்துவிட்டு டவலை ஏனோதானோவென சுற்றிக்கொண்டு வெளியே வர, நொடிப்பொழுதில் அவள் கரத்தை பிடித்து இழுத்து சுவரோடு சாய்த்தது ஜேகோபின் கரங்கள்.
டவலை இறுக பிடித்துக்கொண்டு சிலைப்போல நின்றுவிட்டாள் ரோஷிணி. அவள் இதயம் துடிப்பது வெளியே கேட்டது.
வந்தவோ, அவளை மேலிருந்து கீழ் கிறக்கத்துடன் பார்க்க, அவன் பார்வையில் தெளிந்தவள், “தள்ளு.. தள்ளு…ஊஊ” என்றாள் அவன் மீது மோதிக்கொண்டு.
மீண்டும் பிடித்து சுவரோடு வைத்தவன், அவள் ஆடையற்ற தோள்பட்டையில் தன் பெருவிரலை அழுத்த, அவள் கால் பெருவிரல்கள் தரையில் அழுந்த ஊனியது.
மெல்ல அவள் காதருகே சென்றவன், அங்கிருந்த முடிகளை ‘உப்ப்’ என்றூத இவளுக்கு நெஞ்சு நடுங்கியது. அவள் உதடு உரச காது மடலில் நிறுத்தியவன், “நேரமாச்சு… கிளம்பு” என்று சொல்ல, எதையோ பெரிதாய் எதிர்ப்பார்த்தவளுக்கு பெருத்த ஏமாற்றம்!
மோகம் களைய, “ச்சீ… தள்ளு… தள்ளிப்போடா!” இம்முறை உண்மையாகவே தள்ளினாள்.
“ஏன் ரோஸ் பாப்பா?” அவன் குரலில் கிறக்கம் மிச்சம் இருந்தது.
“ஒரு வாரம் பாக்கணும்ன்னு தோனல… இப்போ எதுக்கு வந்த?” அவள் முறுக்க, “மொத்தமா பாக்கலாம்’ன்னு வந்தேன்!” கண்ணடித்தான் அவன்.
அவன் பேச்சில் தேகம் கிளர்ந்தாலும், “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை… போறப்போ ஒரு கிஸ் குடுத்துட்டு போகணும்ன்னு கூட தோனல உனக்கு… என்மேல ஆசை இருந்துருந்தா அப்படி அம்போ’ன்னு விட்டுட்டு போயிருப்பியா?” என்று திட்ட,
“ஆரம்பிச்சா நிறுத்த முடியாது ரோஸ் பாப்பா!” கட்டிலில் படுத்துக்கொண்டு ஜம்மென சொன்னான் அவன்.
“சும்மா வாய் தான்… இதுக்கு முன்ன நீ கிஸ் பண்ணதே இல்லையா நீ!?” அவன் முன்னே டவலுடன் நின்றுக்கொண்டு கட்டிய கைகளுடன் அவள் விசாரணை செய்ய,
“அதெல்லாம் கிஸ்’ஸா?” என்றான் அவன்.
“பின்ன… இல்லையா?” என்று அவள் கேட்க, “கிஸ்’ல எவ்ளோ வெரைட்டி இருக்கு தெரியுமா? ஜஸ்ட் கன்னத்துல குடுக்குறதெல்லாம் கிஸ்’ன்னு நம்புற குட்டி பாப்பா’வா இருக்கே என் ரோஸ் பாப்பா?” அவன் சீண்ட,
“பிரெஞ்சு கிஸ்…” சொல்லிவிட்டு அதற்கே வெட்கப்பட்டவளை ரசனையாய் பார்த்தவன், சட்டென அவள் கையை பிடித்து இழுக்க, கட்டிலில் வந்து விழுந்தாள் அவள்.
“அவ்ளோதான் தெரியுமா?”
“ம்ம்ம்!!!” என்றவளுக்கு அவன் நெருக்கம் என்னவோ செய்தது.
“பட்டர்ஃளை கிஸ் தெரியுமா?” என்றதும், அவள் விழிகள் திருதிருவென விழிக்க, அந்த விழிகளில் மெல்ல இதழ் ஒற்றியவன், “இதான் பட்டர்ஃளை கிஸ்” என்றான். அவள் கண்கள் பட்டாம்பூச்சியை போல சிறகு விரித்து இமைத்தது.
அடுத்து அவள் மூக்கோடு மூக்கு உரச, கன்னத்தில் மெல்ல உதடு பதித்தவன், “இது எஸ்கிமோ கிஸ்” என்றான்.
அடுத்து அவள் உதடுகள் மீது தன் உதடுகள் உரச வர, அவள் இதழ்கள் தன்னால் விரிந்தது. அதை ஒரு சிரிப்போடு பார்த்தவன் அவளிடம் முன்னேறாமல், நான்கு உதடுகளும் உரசும் படி, “இப்படி இவ்ளோ க்ளோசா இருந்து பேசிட்டு இருந்தா, அது ‘டாக்கிங் கிஸ்” என்றான். அவன் உதடுகளும் அதன் மேலிருந்து சிறு சிறு மீசை முடிகளும் அவள் அடிபாதம் வரை சிலிர்க்க வைத்தது.
தன் நாவால் அவள் உதடுகளை மெல்ல, நிதானமாய் உரச ஆரம்பித்தான் ஜேகோப். அவன் ஒரு சுற்று முடிப்பதற்குள் அவளுக்கு என்னென்னவோ செய்தது.
“இது லிக்கிங் கிஸ்” அவன் சொன்னது கூட அவள் செவியை சேரவில்லை.
இரு உதடுகளும் விரிந்துக்கிடக்க, கண்ணை மூடி கிடந்தவளை பார்த்தவன், அவள் கீழுதட்டை கவ்வி இழுத்தான். அவன் உதடுகளுக்குள் இவள் கீழுதடு சிக்கிக்கொள்ள, மெல்ல மென்று நிறுத்தியவன், ‘இது சிங்கிள் லிப் கிஸ்’ என்றுவிட்டு, உடனே அவள் மேலுதடையும் சேர்த்து கவ்விக்கொண்டான்.
நீண்ட நேரம் அவனிடம் சிக்கிக்கொண்ட அவள் உதடுகளை அவன் விட்டபோது, ‘இது தான் லிப்லாக்’ என்றான்.
அடுத்து அவள் யோசிக்கும்முன்னே, அவள் உதடுகளுக்கு நடுவே புகுந்தவன், இம்முறை தன் நாவை அவள் நாவோடு கட்டிக்கொள்ள, அவள் கரங்கள் அவனை இறுக அணைத்துக்கொண்டது.