“பொண்டாட்டியா” உறவுகள் அனைவரும் “இது எப்ப?” என கேள்வி எழுப்ப அப்பத்தா, செந்தில்நாதன், மலர்,பூரணி, விஸ்வநாதன்என அனைவருக்கும்பெருத்த நிம்மதி.ஒரு வழியா அவனே ஒத்துகிட்டான்என்று.
“ஐயோமாப்பிளைஇருங்கபோலாம், ஒருவாய் சாப்டதகூடகிளம்புறங்கன்றீங்க” என செந்தில்நாதன்கவலைபட,
“பரவாயில்லண்ணாஇங்கவந்ததுக்குமனசும்,வயிறும்நிறைஞ்சுகிடக்கு, நாங்க எங்க பொண்ணு மலருக்காக தான் வந்தோம் வேறயாருக்காகவும் இல்லை வந்த வேலை முடிஞ்சுதுநாங்ககிளம்பறோம்” என பூரணிகூறினார் .
“என்ன விஷ்வா தமிழ் என்னென்னமோசொல்றான்நம்மஇளாக்குகல்யாணம் ஆயிடுச்சாஎப்போ” என ஒன்றும் அறியாதவர் போல் மருதாச்சலம்கேட்க,
“ஆமாண்ணேநாம அதை வீட்டில் போய்பேசிக்கலாம் இப்ப நாங்க கிளம்புறோம்” என பூரணி அங்கிருந்து கிளம்ப,
“அம்மா நாங்க கிளம்புறோம், மலருஉடம்பபார்த்துக்கோமா நாங்க போயிட்டுவரோம்எதுனாலும் எங்களுக்கு ஒரு போன் பண்ணு” என கூறிவிட்டுநடக்க,
இளாவும்தமிழை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்ப,
அருளோ என்ன சித்தப்பா என்பது போல் பார்த்தான்,
இரு இரு நான் பார்த்துக்கிறேன் என்பது போல்கைகாட்டி விட்டு,
“என்னமாபூரணி நீ எங்ககிளம்பிட்ட”, என கேட்க
“ எங்க வீட்டுக்கு தாண்ணாகோயம்புத்தூருக்கு”
“நீ புரிஞ்சுதான்பேசுறியா”,
“என்னஅண்ணா சொல்றீங்க”
“பின்ன என்னம்மா இன்னும் எத்தனை நாளைக்கு தான் பிரச்சனை தள்ளி போட்டுட்டே இருக்கிறது இதற்கு முடிவேஇல்லையா”,
“அவங்கஅன்னைக்கே முடிவு எடுத்துட்டாங்கஅண்ணா”,
“அவங்கமுடிவெடுக்குறாங்கன்னா அது அவங்க மட்டும் சம்பந்தப்பட்டிருந்தா சரி நம்மளும்சம்பந்தப்பட்டிருக்கும்போதுஅவங்க மட்டும் எப்படி முடிவெடுக்க முடியும்” என கேட்டவர், “சரி வா வீட்டுக்கு போலாம்” என அழைக்க,
“ நம்ம வீட்டுக்குஇல்லன்னா அப்பா எப்பஇறந்தாரோ, அன்னக்கி நாங்க வீட்ல இருந்து வெளியிலவந்தோமோ இனிமே அங்க நாங்க வர்றதேஇல்லைன்னா” என கூற,
“ நீ அங்க போக வேண்டாமா அண்ணன் நான் இருக்க என் வீட்டுக்கு வாஇது பொதுவெளியில்வைச்சுபேசுற விஷயம் இல்லடா நீ வா நான் சொல்றேன் வா ஒரு முடிவு எடுத்துக்கலாம்அதுக்கப்புறம்அவங்கஅவங்க வாழ்க்கையை அவங்கஅவங்கபாக்கட்டும் சரியா நம்ம வீட்டுக்கு போகலாம்” என கூறினார்.
“விஷ்வாநீயாவதுசொல்லுடாரிலேடிவா வேண்டாம் நான் உன்னோட பெஸ்ட்பிரண்டுஅதுக்காகவாது என் வீட்டுக்கு வரலாம்மலப்ளீஸ்டா அங்க போகலாம்” என கூறி அனைவரையும் அங்கிருந்து அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்
இங்கோ மண்டபத்தில் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து கிளம்பி சென்றனர்.
போகும்போதுபார்வதியிடம் “என்னபார்வதி பையன்கல்யாண சாப்பாடு போடுவீனு பார்த்தேன் போட மாட்ட போல இருக்கு சேரி எதுனாலும்சொல்லு என்ன நாங்க வாரோம்”என ஒருவர் வம்புபேச,
“ பேசாமபோயிடுபாத்துக்க” என பார்வதி பாய்ந்துவிட்டார்.
அவர் கவலை அவருக்கு இந்த பங்க்ஷனசாக்காவச்சுதன் அண்ணன் பொண்ணை எப்படியாவது தமிழுக்கு கட்டி வைச்சுடலாம்னுநினைச்சாருநடக்காமபோயிடுச்சு அப்புறம் என்ன செய்ய,
பாட்டி மலரைஅழைத்துக் கொண்டு வீடு சென்றார் தன் மகளின் கவலையில் கண்ணீர்பாட்டி
“ கவலைப்படாதீங்க பாட்டிமருதாசலம் மாமா தான் சொல்லி இருக்காரு எப்படியாவது இன்னிக்கு பேசி இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு எடுத்து விடுவோம்னு”
“என்னத்தாமலருசொல்ற”,
“ஆமாம் பாட்டி அவர்தான் மருதாசலம் மாமா கிட்ட என் வளைகாப்புக்குஅழைச்சுட்டு , தமிழ்தம்பிக்கும்இளாக்கும்தாத்தா கல்யாணம் நடத்தி வெச்சது கல்யாணத்துக்கு அப்புறம் அத்தை செஞ்ச கூத்து எல்லாத்தையும் சொல்லி எப்படியாவது தமிழையும்இளாவையும் ஒன்று சேர்த்து வைக்க சொல்லி கேட்டார் அதனால் தான் மாமாதமிழையும்இளாவையும் சேர்த்து வைக்கிறதா சொல்லி இருக்காரு”,என்று கூற
“பாரேன்பெரியவனுக்கு இருக்கிற அக்கறையும் கூட உன் மாமனாருக்குஇல்லையே”,
“பாவம் அவர் என்ன பாட்டி செய்வாரு ,யார் அவர் பேச்சு கேட்டாங்கஅவசரமா செய்ய வேண்டாம்னு தாத்தா கிட்ட சொன்ன போதும் தாத்தாவும்கேட்கல, இந்த மாதிரி முடிவு எடுத்து தாலிய வாங்க வேண்டாம்னுசொன்னப்போதமிழும்கேட்கல, அத்தை கிட்ட கோபப்படாதன்னுசொன்னப்பஅத்தையும்கேக்கல, பூரணிசித்திகிட்டயாவது அமைதியாக இருக்கசொன்னாஅவங்களும்கேட்கல அப்புறம் அவர் என்ன பண்ணுவாரு.
யாராவது அவரை மதிக்கிறாங்களாஇல்ல தான், அப்புறம் அவருக்கு யாரை பத்தி கவலை இருக்கணும் இப்பவும் அவர் இவ்வளவு தூரம் ஓடுறதுக்குகாரணம் இது அவர் குடும்பம் சொல்லி மட்டும் தான்” என்று கூற,
“அதுவும் வாஸ்தவம்தான் என்ற மகன் எல்லாருக்கும் நடுவுலமாட்டிகிட்டு சிக்கி சீரழியாறான்” என்ன வேதனையுடன் கூறினர்.
“எல்லாம் சரி பண்ணிடலாம் பாட்டி கவலைப்படாதீங்க” என மலர் சமாதானம் செய்தாள்.
இளாவின் முகத்தில் இருந்த வலி தமிழைக்கொன்றது. அங்கேயே ஆடாமல் அசையாமல்நின்றான்.
பார்வதி பார்த்துவிட்டு “இங்க பாரு தமிழு, நீ அம்மாகிட்ட சத்தியம் செஞ்சி இருக்க தானே சாமி நான் பார்த்து சொல்றபொண்ணகட்டிக்கிறேன், இப்போ எல்லார் முன்னுக்கும்இவ தான் என் பொண்டாட்டினுசொல்ற, அப்ப உனக்கு அம்மா வேண்டாம் தானே” என வழக்கம் போல தன் பிளாக்மெயில்வேலையைதுவங்க,
சலித்து போனது தமிழுக்கு.
எத்தனை தான் இவங்களுக்காக பார்த்தாலும் இவங்க என்ன புரிஞ்சிக்கவேமாட்டாங்களா என்ன நினைத்தான்.
“இங்கபாருயா யாரு அவங்க வீட்டுக்கு போனாலும் சரி என்ன பேசினாலும் சரி நீ இதுக்கெல்லாம்ஒத்துக்கவே கூடாது. உனக்கு இப்பவும் சொல்றேன் அம்மா வேணும்னா உனக்கு அவ வேண்டாம் இல்லஅவதான்வேனும்னா சொல்லு நான் உனக்கு இருக்க மாட்டேன் முடிவ நீயே எடுத்துக்கோ” எனகூறிவிட்டு சென்று விட்டார்.
எப்போதும் போல்எந்த முடிவெடுப்பது என்று தெரியாமல் சமைந்து நின்றான் தமிழ்…..