உன்னவன் நான்
என்று உன்
உணர்வே
உணர்த்திடும்…??
அடுத்தநாள் காலை அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. நந்தினி சூர்யாவின் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியில் தத்தளித்தாள். அவளது மகிழ்வை மேலும் வரவேற்க அவளது அப்பு அவளை அழைத்துச் செல்வதற்காக ஊட்டி வந்து கொண்டிருந்தான்…
நந்தினி வீட்டின் வாசலையே பார்த்துக் கொண்டு ஜானு குட்டிக்கு ஊட்ட ஜானுவும் நந்தினியை போலவே எட்டி எட்டி பார்ப்பதுமாக இருந்தாள்.
இதனை கண்ட உதய் அவன் தலையில் அடித்துக் கொண்டு ” இதுங்க தொல்ல தாங்கல பா ” என்று நினைத்து அவனது வேலையை தொடர்ந்தான்…
ஜானுவிற்கு ஊட்டி முடித்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு வாஷ் ஃபேஷன் சென்று கை கழுவி விட்டு அவளது வாயையும் தொடைத்து விட்டு அவளுக்காக உருவாக்க பட்ட ப்லே ஏரியாவுக்கு சென்றாள்…
அவள் எதிர் பார்த்த படியே ஜீவா வர அவன் பின்னே ஹரியும் வந்தான். இருவரையும் ஒரே நேரத்தில் கண்ட நந்தினிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
நந்தினி வேகமாக வந்து ஜீவாவை அணைத்துக் கொண்டு நான் உன்ன எவ்வளோ மிஸ் பண்ணேன் அப்பு என்று சொல்லி கண்ணீர் சிந்த..
அவளை விளக்கி விட்ட ஜீவா இந்த அப்புவும் தான் உன்ன உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் அதுக்காக நான் உன்ன மாதிரி அழுகவா செஞ்சேன் என்று அவளது கண்ணீரை துடைக்க..
அது உன்ன பார்த்த சந்தோஷத்துல வந்த கண்ணீர் அப்பு என்று கூறி வா ஹரி எப்படி இருக்க என்றே பார்வையை அவனிடம் திருப்ப…
ஹப்பா இப்பவாவது கண்ணு தெரிஞ்சுதே உனக்கு எங்க டா உங்க தொப்பு வ பாத்தோன்ன என்ன மறந்துடு வீங்களோன்னு நினைச்சேன் என்று கூறி சிரிக்க ஜீவா அவனை பார்த்து முறைத்து வைத்தான்…
போதும் நீ கிண்டல் அடிச்சது நீ எப்படி இருக்கன்னு சொல்லவே இல்லையே என்றிட
எனக்கென்ன நான் சூப்பரா இருக்கும் சில ஜன்துக்கல் தான் எப்ப பார்த்தாலும் முறைச்சிக்கிட்டே திரியுதுங்க அதுங்க கிட்ட இந்த கேள்விய கேளு மா என்று சொல்ல
அம்மு அவன கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லு இல்லன்னா அடிச்சிற கிடிச்சிற போறேன் என்றவன் அந்த இடத்தை விட்டு ஜானு குட்டி இருக்கும் இடத்திற்கு சென்றான்..
அவன் அப்படி தான் ஹரி விடு என்றவள் சரி வா என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்..
இவர்கள் சென்றதை உணர்ந்த உதய் லேப்டாப்பில் இருந்த கண்ணை நிமிர்த்தி பார்த்து இது என்னங்கடா வம்பா போச்சி ஒரு டிக்கெட் இப்போ ஔட் ஆச்சின்னு சந்தோஷம் பட்டா என்ன விட சின்னதுங்களாம் எனக்கு போட்டியா வரும் போலயே அய்யோ ராமா அந்த சீதைய எப்படியாவது என் கூட சேர்த்து வச்சிடு பா அதுவே இப்போதைக்கு போதும் அப்புறம் என்னோட காதல்ல அவளுக்கு சொல்லி புரிய வச்சிக்கிறேன் என்று வேண்டுதலை வைத்தான் ( வேண்டுதல் நிறைவேறுமா????).
காலையிலிருந்து சுமி அறையினுளே இருந்தாள். இவளை அந்த வீட்டினுள் இருந்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
மதிய வேலை வரவும் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க சுமதியுடன் சேர்ந்து பரிமாறியவள் ஒரு தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு மரகத்தத்தை நோக்கி சென்றாள்.
அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க அந்த நேரம் மஹாலிங்கத்திற்கு அழைப்பு வர அதை எடுத்தவர்..
ஹலோ சிவா எப்படி இருக்க என்னடா அதிசயமா எனக்கு கூப்பிட்டு இருக்க என்றிட..
________________________
ஹான் நான் நல்லா இருக்கேன் டா அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா என்றே கேட்க…
________________________
ரொம்ப சந்தோஷம் டா அவனுக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லிடு சரியா அப்புறம் கண்டிப்பா வந்துடுறேன் என்று சொல்லி அணைத்தார்.
யார் ஆங்கில் போன்ல என்று உதய் கேட்க அது என்னோட ஃபிரண்ட் சிவா அவனோட பையனுக்கு எங்கேஜ்மென்ட்டாம் அதான் வர சொல்லி கூப்பிட்டு இருக்கிறான் என்றார்…
சரிங்க அங்கில் என்றவன் பார்வை நந்தினியிடம் செல்ல அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான். அவளை அனு அனுவாக இரசிக்க தொடங்கினான்.
எந்தன் உயிரை
உன்னுடன் சேர்க்க
தவிக்கிறேன் பெண்ணே..
உந்தன் உயிரைக்
கொண்டு என்னை
செதுக்கிடுவாயா நிதி…???
என்று அவளை பார்த்த படி மனதில் தோன்றிய வரிகளை சொல்ல இறுதியில் அவன் நிதி என்று கூறிய வார்த்தை அவளுக்கு கேட்டதோ என்னவோ உடனே உதயை திரும்பி பார்த்தாள்…
இதை கண்ட அவனுக்கு மனதில் அவளை அணைத்து அவள் காது மடலில் ஆடிக் கொண்டிருக்க ஜிம்முக்கியை ஆட்ட வேண்டும் என்று தோன்றியதை மனதை கடிவாளம் கொண்டு தடுத்து நிறுத்தினான்…
சாப்பிட்டு முடித்து அனைவரும் ஓய்வெடுக்க செல்ல நந்தினி ஜீவாவுடனும் ஹரியுடனும் ஜானுவை வைத்துக் கொண்டு கதை அளந்து கொண்டிருந்தாள். இதனை பார்த்துக் கொண்டே உதய் அவனது அறைக்குள் புகுந்து அவனது நிதி வாழும் உள்ளறைக்கு சென்றான்..
அங்கே இருந்த பெடில் படுத்துக் கொண்டு நிதியின் ஃபோட்டோ கையில் எடுத்து “ஏன் டி இப்படி என்ன பாடா படுத்துற. என்ன தவிற மத்த எல்லார் கூட்டும் பேசுற ஆனா என்கிட்ட மட்டும் நான்னா பேசுனா கூட சரியா பேசுறது இல்லை . நான் சென்னையில இருந்த வரைக்கும் டெய்லி உன்ன பாப்பேன் .ஆனா எப்போ நான் ஊட்டிக்கு வந்தேன்னோ அன்னைல இருந்து என்னால உன்ன பாக்க முடியாம போச்சி அந்த கேப்புல கார்த்திக் வருவான்னு நான் எதிர் பார்க்கல எப்போ நீ கார்த்திக் பாத்து பயப்பிட ஆரம்பிச்சியோ அப்போ உன்ன என்கிட்ட கொண்டு வரனும்னு முடிவு பண்ணிட்டேன்.இப்போ நீ என்கூட அதுவும் எங்க வீட்லயே இருக்க இத என்னால நம்பவே முடியல டி நிதி மா என்றவன் அந்த புகை படத்தை இறுக்கி அணைத்துக் கொண்டான்…
நந்தினியின் உடலில் சிலிர்ப்பு வந்து அடங்கியது. தன்னவன் தீண்டலில் ஏற்பட்ட சிலிர்ப்பு என்று அறியாமல் குளிரால் ஆனது என்று நினைத்துக் கொண்டாள்..
இரவு நேரம் வரவே ஜீவா கூட கிளம்புவதற்காக நந்தினி தயாராகி கொண்டு இருந்தாள்.
ஜானு தன் அன்னையை பிரிய போகிறோம் என்று தெரிந்தோ தெரியாமலோ அழுக தொடங்கினாள்.
உதய் தான் ஜானுவை தூக்கிக் கொண்டு வெளியே சென்று அவளை சமாதானம் படுத்த முயறச்சித்தான்.
ஆனால் குழந்தையோ இன்னும் விடாமல் அழுக அவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் நந்தினியிடமே விட வந்தான்..
நிதி என்று அழைத்தவன் நாக்கை கடித்து விட்டு நந்தினி என்று அழைக்க அவள் பேய் அறைந்தது போல் நின்றிருந்தாள்…
என்ன ஆச்சு ஏன் இவ இப்படி நிக்கிறா நாம அவள பேர் சொல்லி கூப்பிட்டது காதுல விழுந்திருச்சோ என்றே யோசித்து அவள் தோள் மேல் மெதுவாக கை வைக்க நந்தினி திடுக்கிட்டு அவனை பார்த்து நீங்க இப்போ என்ன என்ன சொல்லி கூப்பிட்டுங்க ஸ் ஸார் என்றே கண்கள் கலங்க அவனை பார்த்து கேட்க…
நான் இப்போ எதுவும் சொல்லையே மிஸ் நந்தினி என்றே அவன் சொல்ல…
இல்ல சார் இப்போ என்ன நிதின்னு நீங்க கூப்பிடிங்க தான சார் என்றே மீண்டும் அதையே கேட்க..
உண்மையாவே நான் உங்கள அப்படி எதுவும் சொல்லி கூப்பிடல நந்தினி ஜானு அழுது கிட்டே இருக்கா அதான் நீங்க கொஞ்சம் அவள சமாதானம் படுத்துங்கன்னு சொல்ல வந்தேன் என்றான்…
அவளது முகத்தை கண்டவனுக்கு நான் தான் டி சொன்னேன் என்று சொல்லனும் போல் இருந்தது. ஆனால் அவள் முன் அமைதியாக அவள் கண்ணீர் வடிப்பதை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.
இப்போ எதுக்கு அழுகிற உன்ன பார்த்து இன்னும் ஜானு அழுகவா என்று சிறிது கோபமாக அவன் சொல்ல அதை கேட்டவளுக்கு மேலும் அழுகை வர கிருஷ் என்ற பெயரை கூட வெறுக்க தொடங்கினாள்.
உனக்கு அந்த பேரு முக்கியமானவுங்க சொல்லி கூப்பிடுற பேரா கூட இருக்கலாம். அவுங்க ஞாபகமா இருந்திருப்ப அதுனால கூட அவுங்க கூப்பிட்ட மாதிரி உனக்கு இருந்திருக்கும் என்று உதய் சொல்ல..
இல்ல இல்ல எனக்கு ஒன்னும் அவன் முக்கியமானவன் கிடையாது. என்ன தவிக்க விட்டுட்டு போனவன நான் எதுக்கு நினைக்கனும் என்று கர்ஜித்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஜான்வியை தூக்கிக் கொண்டு ஜன்னல் அருகே சென்று சமாதானம் செய்தாள்…
என்ன அவ்வளவு வெறுக்கிறியா டி நான் பண்ணது தப்பு தான் உன்ன பாதியில விட்டுட்டு வந்திருக்க கூடாது. என்னால உன் முன்னாடி கூட வந்து நிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன் டி அப்ப. அது எவ்வளவு தப்புன்னு இப்போ புரியுது. என்ன மன்னிச்சிடு டி என்று மானசியமாக அவளிடம் அவன் மனதினுள் அவளை பார்த்த படி மன்னிப்பு வேண்டினான்..
அதன் பின் அவள் ஜானுவின் துணிகளையும் சேர்த்து அடுக்கி வைத்தாள் பெட்டியில்..
உதய் அவளை காண நந்தினி நான் பாத்துக்கிறேன் என்று இமை மூடி திறந்து சொன்னாள். அதை புரிந்துக் கொண்டவன் அவளை நெருங்கி அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு பத்திரமா இருங்க இரண்டு பேரும் என்று அந்த அறையை விட்டு வெளியே வந்தான்..
நந்தினி சிலை போல் அப்படியே நிற்க ஜீவா தான் அவளை உலுக்கி சுய நினைவிற்கு வர வைத்து வெளியே அழைத்து வந்தான்..
எல்லாரிடமும் சொல்லிட்டு நந்தினி ஜீவா ஜானு குட்டி என் கிளம்ப வெயிட் நானும் வரேன் என்று சொல்லி பேக்கை எடுத்துக் கொண்டு வந்தான் ஹரிசரன்.
என்னது நீயும் எங்களோட வரியா என்று ஜீவா அதிர்வில் கேட்க
ஆமாம் என்று கூலாக சொல்லி அவர்களுக்கு முன் வெளியே போய் நின்றான்…
ஜீவா நந்தினியை முறைக்க அவளோ அதை எல்லாம் கண்டுக்காமால் அவளது கண்கள் உதயினை தேட அவனோ அங்கில்லாமல் போனான்.
பின் நால்வரும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர். ஓடி வந்து சுமி நந்தினி என்று கூறி அனைத்துக் கொண்டு மிஸ் யூ நந்தினி அண்ட் சூர்யாவுக்கு இந்த கிஃப்ட் ட கொடுத்திடு என்று சொல்லி ஒரு கிஃப்ட் பாக்ஸை அவளிடம் கொடுக்க அதை வாங்கி பையில் வைத்தவள் சரிங்க அக்கா என்று சொல்லிவிட்டு சென்றாள்…
உதய் அவள் செல்வதை மாடியில் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்…
அதற்குள் சரவணனிடமிருந்து போன் வர அதை எடுத்து பேசியவன் சரி நான் வரேன் என்று வைத்து விட்டு சரவணனை காண்பதற்காக கிளம்பி சென்றான்…..
காரில் வந்துகொண்டிருந்த நந்தினிக்கு உதயின் ஞாபகம் தான்.. ஜீவாவும் ஹரியும் முறைத்துக் கொண்டே இருந்தனர்…
வேகமாக காவல்நிலையம் வந்த உதய் சரவணன் இருக்கும் அறைக்கு வந்து சொல்லுங்க சரவணன் எதுக்கு இப்போ என்ன அவசரமா வர சொன்னீங்க அந்த பொண்ண பத்தின தகவல் எதாவது கிடைச்சுதா என்றே கேட்க…
ஆமாம் மிஸ்டர். உதய் ஆனா கரக்டா நம்மால சொல்ல முடியாது அவுங்க எங்க இருக்காங்கன்னு என்றே புதிர் போட …
என்ன தான் இப்போ சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியல கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா என்றிட
“அத நான் சொல்றேன் ” என்று உள்ளே வந்தான் ஆதி .
அப்போ சொல்லுங்க சார் என்று ஆதியின் பதிலுக்காக காத்திருக்க அவனோ பதில் கூற ஆரம்பித்தான்..
இங்க பாருங்க உதய் நாங்க அந்த பொண்ணோட நம்பர கண்ட்ரோல் நம்பருக்கு கொடுத்து அதோட லோக்கேஷன்ன செக் பண்ண சொன்னோம். ஆனா அந்த நம்பர் நாங்க கொடுத்த நேரத்துல ஃபோன் ஆஃப் ல இருந்துச்சி . ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் அக்டிவெட் ஆயிருக்கு அத உடனே ட்ரேஸ் பண்ணி பார்த்ததுல அது இப்போ பீஹார காட்டுது .அடுத்த சில நேரத்திலே அது டிஅக்டிவெட் ஆயிடுச்சி . ஆனா அதுல இருந்து ஒரு நம்பர்க்கு கால் பொயிருக்கு என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்த ஆதி இந்த நம்பர் உங்க பேர்ல தான் ரெஜிஸ்டர் ஆயிருக்கு அந்த நம்பரை நீட்ட அதை வாங்கி பார்த்தவன் இது என்னோட பழைய நம்பர் ஆச்சே என்று சொல்ல…
இப்ப சொல்லுங்க மிஸ்டர் உதய் ஸ்ருதிக்கா ஃபோன் ல இருந்து எப்படி உங்க நம்பருக்கு கால் வந்திருக்கு அது இப்போ நீங்க பழைய நம்பர்ன்னு சொல்றீங்க ஆனா அந்த நம்பர் எப்படி அவுங்களுக்கு தெரிய வந்தது என்று சரவணன் உதயை நோக்கி கேட்க..
இந்த நம்பர் நான் யூஸ் பண்ணியே பல வருஷம் ஆச்சு .ஒரு சின்ன ஆக்சிடன்ட் ல இந்த நம்பர் தொலைஞ்சு போச்சி என்றான்…
இப்போ என்ன பண்றது நாம பீஹார் ல உள்ள போலிஸ் ஸ்டேஷன்க்கு கால் பண்ணி சொல்லி தேட சொல்லனும் என்று சரவணன் சொல்ல…
நம்மள டைவேர்ட் பண்ண கூட அவுங்க இத ட்ரை பண்ணலாம். அவுங்களுக்கு நம்ம கிட்ட இருந்து என்ன வேணும்னு கூட தெரியல என்றான் ஆதி..
இதையெல்லாம் கேட்ட உதய் தலையில் கை வைத்த படி அமர்ந்து விட்டான்…
அடுத்தநாள் சென்னையில் பல நாள் கழித்து கால் வைத்தனர் நந்தினி மற்றும் ஜீவா அவர்களை ஒட்டி ஹரியும் ஜானுவை தூக்கிய படி இறங்கினான்…
உதய் சொல்லி அனுப்பியது போல் அனைவரும் அவர்களின் கெஸ்ட் ஹௌஸ் முன் இறங்கினர்.
அங்கே இருந்து நால்வரும் கிளம்பி ஜீவா வீட்டிற்கு சென்றனர்.
அங்கே சென்றதும் நந்தினிக்கு அந்த வீட்டில் இருந்த பழைய நினைவுகள் எல்லாம் வர அந்த வீட்டினுள் கால் எடுத்து வைக்க கடினப் பட்டால். அவளுக்கு உறுதுணையாக இருந்து ஜீவா உள்ளே அழைத்து வந்தான்.
ஹரியும் ஜானுவை தூக்கிக் கொண்டு அவர்களுக்கு பின்னாடியே வந்தான் சுற்றி பார்த்த படி…
நந்தினி வந்ததை கவனித்த கவி மற்றும் சுஜி என இருவரும் வேகமாக ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.
ஜீவா இதனை புன்னகையுடன் பார்க்க ஹரி அவர்கள் யார் என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான்.
இவர்களின் சத்தத்தை கேட்டு சிவசங்கரன் மற்றும் கங்கா வெளியே வந்தனர்.. நந்தினி வந்ததை கவனித்த கங்கா ஒரு புன்முறுவலிட்டு அறைக்கு சென்று விட்டார்..
அனைவருடனும் நல்ல விசாரிப்பு முடித்த பிறகு ஹரியை அனைவருக்கும் அறிமுகம் படுத்தி வைத்தாள்…
சூர்யா நிருஷித்தாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வந்தான்.. இருவரும் நெருங்கி பழகி இருந்தனர் இந்த சில தினங்களிலேயே…
இதனை கண்ட ஜெயந்திக்கு மனம் குளிர்வுற்றது.
நாட்கள் ஓட நிச்சயதார்த்த நாளும் வருகை தந்தது .ஒரு பெரிய மண்டபத்தில் நிச்சயம் வைத்திருந்தனர்.
மஹாலிங்கம் தன் நண்பன் சிவாவின் மகன் நிச்சயத்திற்கு சுமியை அனுப்பி வைத்தார்.
சுமியின் தந்தையின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து தனக்கும் ஒரு மாற்றம் வேண்டும் என கருதி அந்த நிச்சயத்திற்கு செல்ல முடிவு எடுத்து சென்னை வந்து சேர்ந்தாள்..
ஹோட்டல் சென்று ரெஃபிரஷ் ஆகிவிட்டு தந்தை கொடுத்த முகவரிக்கு கேப் பிடித்து அங்கே சென்றாள்…
அங்கே வந்த சுமி உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சியுற்றாள். மணக்கோலத்தில் நந்தினியும் சூர்யாவும் ஸ்டேஜில் இருந்து நிச்சய மோதிரம் மாற்றிக் கொண்டனர்…
தேடல் தொடரும்….???
?????????????????????
Stay tuned….✌️✌️✌️✌️