எதிர்பார்த்தபடியே , “சித்தா, ஸ்ட்ராபெர்ரி கப் வாங்கு”, என்று சிந்து சொன்னதும் நினைவுக்கு வந்தவன், “டேய், என்னடா இப்படியெல்லாம் யோசிக்கற ?” என்ற அறிவை அடக்கி, சிந்து கேட்ட ஸ்ட்ராபெர்ரி கப் வாங்கிக்கொண்டு , சிந்துவின் கவனம் ஈர்க்க வேதா அமர்ந்திருக்கும் புறமாக இருந்த ஒரு மேசைக்குச் சென்றான்.
சிந்துவும் தப்பாமல், அவளைப் பார்த்ததும், “ஹாய் அக்கா..”, என்று அவள் புறம் சென்றாள். “அஹா, ரெட் காயின் பாக்கெட் ஆகிடிச்சு. இப்ப வைட் காயின் பின்னாடியே விழுமா ?“ என்று ஆவலாய் பார்த்தான் ஒரு எட்டு மெதுவாய் வைத்தபடி.
சிந்துவின் குரலில் , சற்றே நிமிர்ந்து “ஹாய் சிந்து, யார் கூட வந்த ? உக்காரு.” என்றாள் வேதா. “ சூப்பர், வைட்டும் பாக்கெட் ஆகிடுச்சுடொய், இப்போ என்ட்ரி குடுக்கலாம் !”, என்று இவன் சிந்து அருகே சென்றான்.
சிந்து சென்று அமர்ந்தவுடன். சிந்துவின் முன் ஐஸ்கிரீம் கப்பை வைத்து, “ஹலோ”, என்று ஒரு அறிமுகப் புன்னகை சிந்தினான் கேடி விக்ரம்.
அவனைப் பார்த்து, சட்டென்று வேதா எழுந்து நின்றாள்.
“உக்காருங்க, நீங்க யாருக்கோ காதிருக்கா மாதிரி இருக்கு. பரவால்லையா சிந்து இங்க உட்கார்ந்தா ?”,
‘டேய், எப்படா இப்படி பச்சபுள்ள மாதிரி ஆக்ட் குடுக்க கத்துகிட்ட ?’, அவன் மனசாட்சி மிரண்டு போய் கேட்டது. அறிவோடு சேர்த்து மனசாட்சியையும் ஒதுக்கித்தள்ளினான்.
“ ஹலோ. நான் அண்ணாக்காக வெயிட் பண்ணறேன். “, என்றவள் கொஞ்சம் தயங்கி “உக்காருங்க…”, என்று அவளும் அமர்ந்தாள். சிந்து ஐஸ்கிரீமில் ஆழ்ந்திருந்தாள்.
அவள் தயக்கத்திற்கு மதிப்பு கொடுத்து, பக்கத்து மேசையில், அவள் எதிர்புறமாக அமர்ந்தான்.
“நான் விக்ரம், உங்க பேர் என்ன?”,என்று ஆரம்பித்து வைத்தான்.
சிந்து திடீரென்று நிமிர்ந்து, “வேதாக்கா, உங்களுக்கு தெரியாதா சித்தா?” என்றாள்.
‘ அடிப்பாவி, நேத்து அவ்ளோ பேசினா, ஒரு வாட்டிகூட பேர சொல்லல, இப்போ எப்படி கேக்கறா பாரு பிசாசு’, என்று உள்ளுக்குள் வைதான். பின்னே, தெரிந்துகொண்டே கடலை போட கேட்டது போல ஆகிவிட்டதே.
“ உனக்கு தெரியும்னு எனக்கு தெரியாதே சிந்துமா.. நீ அக்கான்னுதானே எங்கிட்ட சொன்ன..”, என்று இழுத்து வைத்து ஒரு சிரிப்பு சிரித்தான்.
“என் பேரு வேதவல்லி”, என்றாள்.
“பாட்டியோட ஞாபகமா வெச்சாங்களா ?” , கேட்டதும்தான், தான் செய்த மடத்தனம் உரைத்தது.
“இல்ல…நல்லாதான் இருக்கு…, நல்ல… தமிழ் பேரு…”, என்று திருட்டு முழி முழித்துக்கொண்டே உளறினான்.
‘ம்ம் கேக்கறதயும் கேட்டு, அப்பறம் ஏண்டா உளறி, இன்னும் கேவலப் பட்டுக்கிறே…கிளம்பிடு அவ திட்றதுக்கு முன்னாடி’, என்று பரபரத்த மனதை இழுத்துப் பிடித்து, நிறுத்தினான்.
முகம் சுருங்கினாலும், கோவம் தெரியவில்லை, அவனைப் பார்த்து, கொஞ்சம் புன்னகைத்தவள்,” பாட்டி காலத்து பேருதான், ஏன் கஷ்டபட்டு சமாளிக்கரீங்க.” என்றாள்.
“ஹே. பரவால்லையே, தன்ன பத்தியே கிண்டல் பண்ணிகறா. நெறைய பேருக்கு இது வராதே..” என்று நினைத்தவன்
“சரி சமாளிக்கலை. நீங்களே பேர் காரணம் சொல்லுங்க..” என்று ஒரு மென்னகையுடன் அவள் முகத்தைப் பார்த்தான்.
“என் பாட்டிங்க பேர வெச்சிருந்தாக்கூட பரவால்லைங்க. சாந்தி, பானுமதின்னு இருந்திருக்கும்.”, என்று நொடித்தாள்.
அவள் முகத்தில் வந்து போன பாவனையைத்தான் புன்னகையோடே பார்த்திருந்தான்.
[the_ad id=”6605″]
“எங்க அம்மாவோட அம்மாவீட்ல கொஞ்சம் ஜாதக நம்பிக்கை ஜாஸ்தி. குடும்ப டாக்டர் மாதிரி, குடும்ப ஜோசியர் இருக்கார் அவங்களுக்கு. அதுவும் எங்கம்மாவுக்கு ரொம்பவே நம்பிக்கை…”, கைகளும் கண்களோடு ஆடியது.
“நான் பிறந்ததும், என் ஜாதகம் கணிச்சு பேர் வெக்கணும்னு தாத்தா கிட்ட சொன்னாங்களாம். அவரும், போய் அவர் ஆஸ்தான ஜோசியர பார்த்து கேட்டுருக்கார். அந்த மனுஷன் சும்மா இந்த எழுத்து வரிசைல வெய்ங்கன்னு சொல்லாம, என் ஜாதகத்தை கணிச்சு, வேதவல்லின்னு பேர் வைங்க, பொண்ணுக்கு அந்த சரஸ்வதி கடாட்சம் இருக்கு, நல்லா படிப்பாள்னு சொல்லிருக்கார்.”
ஆவென்று வாய் பிளக்காத குறையாக கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள் சிந்துவும் விக்ரமும்.
“அப்பறம் என்னாச்சுக்கா ?”, என்றாள் சிந்து.
“அவ்ளொதான். எனக்கு அங்கயே ஆப்பு வெசிட்டார் அந்த மனுஷன். எங்கப்பாவும் , சரஸ்வதி பேருதான, வித்யா, வாணி, வேணின்னு கொஞ்சம் புதுசா வெக்கலாம்னு அவரால ஆன மட்டும் சொல்லிருக்கார். குடும்பமே ஒண்ணா சேர்ந்து முடியவே முடியாதுனு, வேதவல்லின்னு பேர வெச்சிட்டாங்க.” என்று சோகமாக முடித்தாள்.
“குண்டம்மாக்கு அறிவேயில்லை போல. இவ்ளோ அழகா பொண்ண பெத்து, இப்படி ஹைதர் காலத்து பேர வெச்சி பாவம் எத்தன பேரு கேலி பண்ணிருப்பாங்க…” என்று உள்ளுக்குள் அவள் அம்மாவை அர்ச்சித்தான்.
“ பத்தாவதுல மாத்த ட்ரை பண்ண்லையா நீங்க ? “
“ ஒரு பெரிய சண்டையே போட்டேன். “, என்றவள் சிந்துவின் புறம் திரும்பி பார்த்தாள். கதை கேட்டதில், ஐஸ்கிரீம் சற்று கரைந்து விட்டதில், அவள் கவனம் அதில் இருந்தது.
சற்று இறங்கிய குரலில், ரகசியமாக, “எனக்கென்னவோ, அவரொட நிறைவேறாத காதல் ஞாபகமா, அவர் காதலி பேரத்தான் ஒரு புருடா விட்டு எனக்கு வெச்சிட்டார்ன்னு நெனக்கிறேன். அதை சொல்லப் போய், எங்கம்மா என் வாய்மேலயே ரெண்டு போட்டாங்க.”, அடி வாங்கியதையும் அழகாய் சிரித்துக்கொண்டே சொன்னாள். அவள் கூறிய அழகில் அவனும் சிரித்தான்.
“அதோட, பேர மாத்தறதைப் பத்தி பேசரதயே விட்டுடேன். அப்பறம் எதிர் நீச்சல் படம் பார்த்தேனா, நல்லவேளை, பிச்சையம்மாள், பச்சையம்மாள்ன்னு சொல்லாம, இந்த மட்டும் சுமாராவாச்சம் வெச்சாரேன்னு நெனச்சுகிட்டேன்.” என்று ஏற்ற இறக்கத்தோடு சொல்லி முடித்தாள்.
விக்ரம் இந்த கதைக்கே தலை குப்புற விழுந்திருந்தான். “இதுலையும் பாசிடிவ்வா யோசிக்கறா. அழகா கதை சொல்லுறாளே, அதுவே ஒரு கலையாச்சே. நம்மதான் பாதி நேரம் பன்ச் லைன சொதப்புவோம். என்னா டாலண்ட்…. சே, என்னா பொண்ணுடா…”, என்று மனதில் சூர்யா டயலாக் ஃப்ளாஷ் அடித்தது.
“ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்னே…” உள்ளுக்குள் சீட்டியடித்தது.
‘அடப்பாவி டேய், என்னக் கொண்டுபோய் எங்கடா அடமானம் வெச்ச…’, என்று அவன் அறிவு அலறியது. இப்படி ஒரு பெண்ணிடம் லயித்துப் போயிருப்பது நானா, என்று ஒருபுறம் யோசனை சென்றது. இதெல்லாம் அப்பறம் ஆராய்ச்சி பண்ணுவோம். ஃபோகஸ் விக்ரம்”, என்று சொல்லிக்கொண்டு அவள் புறம் கவனம் திருப்பினான்.
“ம்ம்..பிடிக்கும். அதுலயும் கேம் தியரி எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக். என் ப்ரொஜெக்ட் கூட அதுலதான் பண்ணப்போறேன்.”
“இப்ப கொஞ்ச வருஷமா ப்ரபலமாயிட்டு வருதில்லை. கேள்வி பட்டிருக்கேன் ஆனா அது பத்தி தெரியாது.”
அவளுக்குப் பிடித்தமான விஷயம் என்பதால் ஆர்வமாக விளக்க முற்பட்டாள் வேதா.
“ ஒரு சின்ன புதிர் மூலமா ஈசியா புரிஞ்சிக்கலாம். ராமு, சோமுன்னு ரெண்டு திருடங்க போலீஸ்ல மாட்றாங்கன்னு வெச்சிக்குவோம். அவங்கதான் குற்றத்தை பண்ணாங்கன்னு ப்ரூவ் பண்ண முடியலை. அதுனால போலீஸ் இரண்டு பேரையும் தனித் தனி ரூம்ல வெச்சிருக்காங்க. இரண்டு பேருக்கும் நாலு சாய்ஸ் குடுக்கறாங்க.
குற்றத்தை இரண்டு பேரும் ஒத்துக்கிட்டா, ஆளுக்கு 5 வருஷம் தண்டனையொட முடிஞ்சிடும்.
ராமு குற்றத்தை ஒத்துகிட்டு, சோமு ஒத்துக்கலைன்னா, ராமுவுக்கு மூணு வருஷம் தண்டனை, சோமுவுக்கு ஒன்பது வருஷம் தண்டனை கிடைக்கும்.
சோமு குற்றத்தை ஒத்துகிட்டு, ராமு ஒத்துக்கலைன்னா, ராமுவுக்கு பத்து வருஷம் தண்டனை, சோமுவுக்கு இரண்டு வருஷம் தண்டனை கிடைக்கும்.
இரண்டு பேருமே குற்றத்தை ஒத்துக்கலைன்னா, ஆளுக்கு இரண்டு வருஷம் தண்டனை.
இப்ப ராமு, சோமு இரண்டு பேரும் பேசிக்கமுடியாது. அடுத்தவன் என்ன செய்வான்னு யூகம் பண்ணி, இவன் முடிவு சொல்லணும். இப்ப நீங்க ராமுவா இருந்தா, என்ன சாய்ஸ் எடுப்பீங்க ?”
“கரெக்ட். கேம் தியரியும் அதான் சொல்லும். இப்படி பிரித்து ஆளும்போது, அவங்க மொத்தமா பார்த்தா, இருக்கறதுலயே மோசமான சாய்ஸ்தான் தேர்ந்தெடுப்பாங்க.” என்றாள் வேதா.
“எப்படிங்க, ஆளுக்கு அஞ்சு வருஷம் கம்மிதானேங்க. ஒருத்தன் சொல்லி இன்னொருத்தன் சொல்லாட்டா ஒன்பது – பத்து வருஷம் கிடைக்குமே ?”
“ மொத்தமா ரெண்டு பேருக்கும் சேர்த்து பாருங்க. A தான் ரெண்டு பேரும் அதிகபட்ச தண்டனை தருது. மற்றதுல ஒருத்தர் இல்லாட்டி இரண்டு பேருமே அதை விட கம்மியாதானே கிடைச்சிருக்கும் ? அதுதான் collective choice அடிப்படையில, மோசமானதைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. தனிப்பட்ட முறையில சாதகமானதை தேர்ந்தெடுப்பாங்க “, இந்த மாதிரி கோட்பாடுகள் வரையறுக்கறதுதான் கேம் தியரி. “, பொறுமையாக விளக்கினாள்.
“அப்ப மனுஷங்க இந்த சூழ்னிலைல இப்படித்தான் முடிவெடுப்பாங்கன்னு தெரிஞ்சுடுமா உங்களுக்கு ? அது நிறைய தப்பான விஷயத்துக்கு பயன்படுத்துவாங்களே ?”
கல கலவென்று சிரித்தவள், “உங்க பயம் தேவையில்லாதது. நான் சொன்ன புதிர்ல சோமு ,ராமுவோட மச்சான்னு வெச்சிக்குவோம். சோமு மனைவி மாசமா இருக்கா. இது இரண்டு பேருக்கும் தெரியும். இப்ப நீங்க ராமுவா இருந்தா உங்க சாய்ஸ் ?”
“ம்ம்…ராமு ஒத்துக்காம இருக்கறதுதான், சோமுவுக்கு நல்லது, அப்பதான் அவன் சீக்கிரம் வெளிய போகமுடியும்.”
“கரக்ட், ராமு அவனுக்காக யோசிக்காம அடுத்தவனுக்காக யோசிக்கிறான். அப்ப இங்க அந்த தியரி அடிபட்டுப் போயிடும். கேம் தியரி அடிப்படையே, இதுல இருக்க ஆட்டக்காரங்க (stake holders) அவங்களோட அதிகபட்ச சுயலாபத்துக்காக யோசிச்சு முடிவு எடுக்கணும். பொருளாதாரம், போர், பிஸ்னஸ்லதான் இது நிறைய உபயோகப்படுத்துவாங்க.”
வேதா இவ்வளவு சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் சொன்னது விக்ரமைக் கவர்ந்தது. உன்னைவிட எனக்குத் தெரியும் என்ற அலட்டல் இல்லாமல், எனக்கு தெரிந்ததை உனக்கும் புரியும்படி சொல்கிறேன் என்று விளக்கியது அவள்பால் ஒரு மரியாதையை கொடுத்தது.
“இன்ட்ரெஸ்டிங்… புரியறா மாதிரி சொன்னீங்க வேதா.”
“தாங்க்ஸ், நெட்ல தேடிப்பாருங்க, நான் சொன்ன மாதிரி வேற புதிர்கள் கூட இருக்கு,” என்றவள், அவன் பின்னால் யாருக்கோ கைகாட்டினாள். திரும்பினால் மா நிறத்தில், ஆறடிக்கு சற்று குறைவாக ஓங்குதாங்காக ஒருவன். ஓ, அண்ணனோ ?
அண்ணனும் விக்ரமை நோக்க, விக்ரமும் அவள் அண்ணனை நோக்க, இருவருக்கும் எங்கயோ பார்த்த ஞாபகம்.
“அண்ணா, இவங்க விக்ரம். கோவில்ல பார்த்ததா சொன்னேனே, ஒரு குட்டிப் பொண்ணு சிந்து, இவ தான் அது. விக்ரம் சிந்துவோட சித்தப்பா. இவர் எங்கண்ணா இராஜேன்திரன்.”, என்று அறிமுக படலத்தை முடித்தாள்.
இருவரும் கைகுலுக்க, ‘ஹாய் அங்கிள்,” என்று சிந்து கை ஆட்டினாள்.
அவளிடம் ஹாய் சொன்ன, இராஜேன்திரன் “இவனப் பத்திதானே இவ்ளோ நேரம் ஆடிட்டர் கிட்ட விசாரிச்சிட்டு வர்றோம், இவன், வேதாகிட்ட கடலைய போட்டுட்டு இருக்கான். “ என்று நினைத்தவாரே, “பரவால்லை, ஆள் பார்க்க நல்லாத்தான் இருக்கான். எங்க பார்த்தோம்…” என்று யோசித்தான்.
“அட, பி.காம் பாட்ச்தானே. ரகோத்தமன், ரவி செட் ?, நான் பி.பி.ஏ. கிரிக்கெட் காப்டனா இருந்தானே சசிகுமார், அவன் செட். உன்னை விட ஒரு வருஷம் சீனியர் நான்.” என்று அடையாளம் கண்டிருந்தான் இராஜேன்திரன்.
ஒரு புன்னகையோடே, “ கரெக்ட். இப்போ ஞாபகம் வந்துடுச்சு சீனியர்.” என்று கூறினான் விக்ரம்.
இராஜேன்திரன் மனதில் இப்போது சந்தோஷமே. கல்லூரியில் விக்ரம் தான் உண்டு, தன் படிப்பு, பகுதி நேர வேலை உண்டு என்று கருத்தாய் இருப்பான். சி.ஏ படிக்க இரண்டாம் வருடத்திலேயே பரீட்சை எழுதி, ப்ரீ-என்ட்ரன்ஸ் தேர்வு பாசானது அப்போது பேசப்பட்டது. குடும்பத்து கஷ்டம் தெரிந்து, பகுதி நேரம் வேலைக்கு சென்றது, அவன் மீது ஒரு மரியாதையை கொடுத்திருந்தது. அந்த உழைப்புதான் சென்னை மாகாணத்தில் முதலாவதாக சி.ஏவில் தேர்வு பெற்றிருக்கிறான் போல என்று நினைத்துக்கொண்டான். விக்ரம் வேலை பார்க்கும் ஆடிட்டர், அவர் வீடு கட்ட, மெடீரியல் சப்ளை இராஜேன்திரன்தான் செய்தான். அதனால், அவரிடம் தான் விசாரித்தான். மனிதர் ஆகா, ஓகோ என்று புகழ்ந்திருந்தார்,
தங்கையை பார்க்க, அவளுக்கும் பிடித்திருக்கணும் போல. இல்லாவிட்டால் அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்க மாட்டாள். இது சரி வரும் போலவே என்று முதல் முறையாக நினைத்தான். அவன் அம்மா சொன்னதிலிருந்து அவ்வளவு ஒன்று பிடித்தமில்லாமல் தான் இருந்தான். ஆடிட்டர் சொன்னது கொஞ்சம் யோசிக்க வைத்தாலும் , தோற்றம் எப்படியோ, தங்கைக்கு பிடிக்குமோ என்று எண்ணி ஆர்வமில்லாதுதான் திரும்ப அவளை அழைக்கவந்தான். இப்போது எண்ணம் முற்றிலும் மாறியிருந்தது.
இத்தனையும் மனதில் ஓடினாலும், சிந்துவிடம் பேச்சு கொடுத்து, விக்ரமுடன் கைபேசி எண் பரிமாறிக்கொண்டான். வேதாவிற்கு ஜாதகம் பொருந்தி வந்தால், படிப்பு முடிஞ்சதும், கல்யாணம் பண்ணிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.
“அட அறிவே, அவனை இங்க வரவெச்சதே நானு, இதுல நீ ப்ளான் போடறியா ? அடுத்து ஒரு ஸ்கெட்ச் போடபோறேனே விக்ரமுக்கு… டண்டனக்கா..”, என்று ஆர்பரித்தது விதி.