“யாராவது கொடுத்தால் நான் ஏன் டி உன்னை பிடிச்சு தொங்க போறேன்..!! எப்பவும் பசையுள்ள பார்ட்டி தான் சிக்கும்..!! என் கிரகம் உன்னை மாதிரி ஒரு ** போய் விழுந்துட்டேன்..”
என சொல்லி கெட்ட வார்த்தையில் முடிக்க இது போன்ற பேச்சுகள் எல்லாம் அறிந்தே இராத சிறு பெண்ணிற்கு உடல் நடுங்கியது. அந்த நொடி அத்தனை அசிங்கமாக உணர்ந்தாள். அத்தோடு பேச்சின் குழறல் அவன் அதீத போதையில் இருக்கிறான் என்பதை பறைச்சாற்ற முற்றிலும் அருவெறுத்து போனவளுக்கு தன் பயம், கட்டுப்பாடு எல்லாம் எல்லைகளை கடந்தது.
“ச்சை.. நீ இவ்வளவு கேடு கெட்டவனா இருப்பேன்னு நினைச்சே பார்க்கல.. நான் தான்டா உன்னை மாதிரி ஒரு சாக்கடையில் வந்து விழுந்துட்டேன்.. ஒழுங்கு மரியாதையா என் பணத்தை திருப்பி கொடுத்துட்டு நீ எவ கூடயோ
எப்படியோ போ..”
என்று ஆக்ரோஷமாய் சொல்லிட போதையில் கரிகாலன் கேடயமாய் வைத்திருக்கும் நிதானமும் இழந்து அரக்கனாய் பேசினான்.
“ஹோ அந்த அளவு ஆகிடுச்சா..?? பணமெல்லாம் திருப்பி கொடுக்க முடியாதுடி.. உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது.. தம்மாத்துண்டு பிஸ்கோத்து நீ என்னை மிரட்டி பார்க்கிறீயா..?? நான் மிரட்டினேன் நீ எல்லாம் உரு தெரியாம அழிஞ்சு போயிடுவ பார்க்கிறீயா..”
அடி வயிற்றில் சுருக்கென்று இருந்தது. இதுவரை எப்படியும் பிரச்சனை இல்லாமல் சாமர்த்தியமாய் விலகி விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் இருந்தாள். ஆனால் இப்போது அவன் பேசுவதை எல்லாம் கேட்கும்போது இதனை எப்படி கையாள வேண்டும் என்றே தெரியவில்லை. அடுத்து என்ன செய்யவேண்டும் என்றும் புரியவில்லை. பணம் போனால் போகிறது இவனிடம் தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடு,
“உன் மிரட்டல் எல்லாம் என்னை ஒன்னும் பண்ணிடாது.. அந்த பணத்தோடவே போய் சாவு.. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல…” என்று படபடப்பாய் சொல்லி அழைப்பை துண்டிக்க முற்பட,
“மவளே.. ஃபோன்னை வைச்ச காலைல உங்க ஏரியாவோட ஹாட் நியூஸே நீயா தான் இருப்ப..”
என அவன் சொல்லவும் ஆணி அடித்தாற்போல் நின்றுவிட்டாள். புலி வந்தே விட்டது..!
“என்ன பேச்சையே காணும்..!! ரொம்ப துள்ளிக்கினு இருந்த..?”
என படு நக்கலாய் கேட்டவன்,
“உன்னை அம்புட்டு ஈஸியாவிட தான் இத்தனை மாசம் விழுந்து விழுந்து மொப் போட்டேனா..? பைத்தியகாரி..!!
ஒரு ஓட்ட கடையை வைச்சு நடத்துறவன் பொண்ணு கிட்ட என்ன பெருசா கிடைச்சுட போகுது எனக்கு..? ஆனாலும் உன்னை பிடிக்க காரணம் உன் அழகு தான்டி..!!”
என சொல்ல இன்னமும் சரியாய் மூச்சே வராமல் திகைத்து நின்றாள்.
அவனும் அவளை எதிர்பார்க்காமல் தன் போக்கில் உளற ஆரம்பித்தான்.
“பத்தொன்பது வயசு சின்ன குட்டி.. வடிச்சு வைச்ச மெழுகு சிலை மாதிரி இருக்கிற உன்னை அனுபவிக்காமல் இப்ப எல்லாம் தூக்கமே இல்ல தெரியுமா..?? மாமாக்கு உன் மேல அவ்வளவு பியார்.. பிரேமா.. லவ்வு…!! கொஞ்ச நாள் போகட்டும் பாத்துக்கலாம்ன்னு விட்டு வைச்சேன்.. ஆனால் நீ எனக்கே டேக்கா கொடுக்க நினைக்கிற இல்ல.. வரேன்டி.. நாளைக்கே வரேன்.. வந்து பேசுற வாயை உண்டு இல்லைன்னு ஆக்குறேன்..”
“அசிங்கமா பேசினே கொன்றுவேன்..”
கோபமாய் பேச நினைத்தாலும் அழுகையாக தான் வந்தது.
“நான் அசிங்கமா பேசுறேன்..??? நீ ரொம்ப உத்தமின்னு நினைப்பு..! நான் அழகா இருக்கவும் தானே சுத்தி சுத்தி வந்த.. அது இல்லைன்னா திரும்பி பார்த்து இருப்பியா..?? உனக்கும் அதான் வேணும்.. எனக்கும் அதான் வேணும்..!!! என்ன ஒன்னு.. நான் வெளிப்படையா இருக்கேன்.. நீ நடிச்சுட்டு திரியுற..!”
இதற்கும் மேல் அவளை கேவலப்படுத்திட முடியுமா என்ன..?? கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. புறத்தோறத்தில் ஈர்க்கப்பட்டு
தான் அவனை கவனித்தாள் என்றாலும் நேசித்தது என்னவோ மனதார தானே..!! இதயம் இரணமாய் வலித்தது. அனன்யாவின் உள்ளே இருந்த வெகுளியை துடிக்க துடிக்க கொன்று இருந்தான் கரிகாலன்..!!
அவள் அழுதபடியே இருப்பதில் எரிச்சல் அடைந்த கரிகாலன்,
“ஏய்.. சும்மா ‘நை..நைன்னு’ அழுத்துட்டு இருக்காத..!! நம்ம தேவையை காதும் காதும் வைச்ச மாதிரி நமக்குள்ள முடிச்சிக்கலாம்..!! உன்னை தேடி நானே வரேன்.. நான் சொல்ற இடத்துக்கு வந்தால் மட்டும் போதும்.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. யாருக்கும் தெரியாத வரை என்ன பிரச்சனைடி..?? ஜாலியா என்ஜாய் பண்ணுவோம்..
பின்னாடி வேற ஒரு இழிச்ச வாயன் வருவான்.. அவன் கிட்ட இந்த நடிப்பை எல்லாம் கண்டினியூ பண்ணிக்க…”
“ப்ளீஸ்..!!! நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல.. தயவு செஞ்சு என்னை விட்டுடு கே.கே..!!! இனி சத்தியமா உன் வழியில் வரவே மாட்டேன்.. உன்னை பத்தி யாருக்கும் தெரியாது.. இனியும் சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ்.. என்னை விட்டுடு.. நான் எங்கேயும் வர மாட்டேன்..”
“நீ ஒப்பாரி வைச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல..!! நான் சொன்னால் நீ கேட்கணும்..!! இல்லைன்னா நான் சொல்றதை ஊரே கேட்கும்.. வகை வகையாக ஏகப்பட்ட மேட்டர் எங்கிட்ட இருக்கு.. உன் காலேஜ் பசங்களுக்கு போட்டு விட்டேன் வையு.. உன்னோட கிளாஸ் குரூப்பிலே நேரடியாக வந்து விழுகும்..!! உன் காலேஜ் ஸ்டாஃப்ல இருந்து வாட்ச்மேன் வரை எல்லாரும் பாப்பானுங்க..!! உன் அப்பனுக்கும் தெரிய வரும்போது மனசு அப்படியே குளிர்ந்து போயிடுவான் இல்ல.. கற்பனை பண்ணி பாரேன்.. ஒரே மஜாவா இருக்கும்..!!”
என்று வக்கிரமாய் பேசி வந்தவன் கடைசியில்,
“சாம்பிள் வேணா அனுப்பி வைக்கிறேன்.. பார்த்துட்டு புத்திசாலியா முடிவு எடுத்துக்கனும்.. என்ன..!!! ஐ அம் வெய்டிங் பேபி..”
என கொஞ்சலாய் சொல்லி வைக்க சில நிமிடங்களில் அவனிடம் இருந்து வந்த புகைப்படங்களை பார்த்து நடுங்கி போனாள். அது அவளே இல்லை. ஆனால் சொன்னால் யார் நம்புவார்கள்..?? தத்ரூபமாய் தன்னை பொருத்தி அவன் உருவாக்கி இருந்த புகைப்படங்களை கண்டு உமட்டிக் கொண்டு வந்தது.
பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்து விட்டவளுக்கு கரிகாலன் வார்த்தைகள் எல்லாம் சுற்றி சுற்றி வர,
‘செத்தாலும் அவன்கிட்ட போகவே மாட்டேன்.. ஆனால்
அவன் சொன்னது போல எல்லாருக்கும் தெரிந்தால் என்னை எப்படி பார்ப்பார்கள்..?? யாரும் நான் இல்லை என்றாலும் நம்ப மாட்டார்களே.. அப்பா அம்மா நிலை..?? எல்லார் பார்வையிலும் நான் கேவலமான ஒரு பிறவியாக தானே தெரிவேன்..”
அந்த இடத்தில் நிறுத்தி பார்க்கவே பயமாக இருந்தது. பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வரும் மிக கடினமான நேரம் இது..!!அதனை எப்படி கடக்கிறாள் என்பதில் தான் அவளின் மிச்ச வாழ்க்கை இருக்கிறது என அவளே அறிந்து இருக்க மாட்டாள்.
சிலருக்கு மரணமாகவும் சிலருக்கு மறைக்கப்பட்ட இரகசியமாகவும் கடந்துவிட வெகு சிலரால் மட்டுமே இது போன்ற விஷமிகள் துணிவுடன் வேரறுக்க படுகிறது. அனன்யாவின் பயமும் அவமானமும் அவளை முதலாம் பாதையில் இழுத்து செல்ல இந்த இன்னல்களுக்கு மரணமே மேல் என்ற முடிவை எடுத்து இருந்தாள்.
*
கமலினியை முடிந்தவரையில் தவிக்கவிட்டு ஒரு வழியாய் தினகரன் அழைத்துவிட முதல் ரிங் ஒலிக்கும்போதே ஏற்று விட்டவள்,
“காலைல இருந்து எந்த வேலையும் எனக்கு ஓடவே இல்ல.. இப்ப எல்லாம் சேர்த்து வைச்சு என்னை பிடிச்சுக்கிட்டு.. அதான் கூப்பிட முடியல.. என்னாச்சு.. உங்க அப்பா எதுவும் சொன்னாரா..??”
என்று கேட்க
“இல்ல.. அதனால தான் டென்ஷன்..!! சரி பேசிட்டீங்களா..? என்ன சொன்னாங்க..”
என்று மெல்லிய குரலில் பேசியபடி
கமலினி அறைக்குவர கதவு உள்ளிருந்து தாழிடப்பட்டு இருந்தது.
திறன்பேசியை காதில் வைத்துக் கொண்டே,
“அனு.. கதவை திற..”
என்று சாதாரணமாக தான் கூறினாள். உள்ளே பதில் இல்லை என்றாலும் பொருட்களை உருட்டும் சத்தம் மட்டும் கேட்க இங்கே நின்று பேசினால் கீழ்வரையில் எக்கோ அடிக்கும் என்பதால்,
“ஒன் மினிட் தீனா..”
என்றுவிட்டு,
“ஏய்.. என்னடி பண்ணுற இந்நேரத்தில்..!! சாப்பிடவும் வரல.. என்ன கோபமா இருக்கியாக்கும்.. நீ கத்தின கத்துக்கு நான் தான் கோபப்படணும்.. ஸீன் போடாம திற…”
என்று சொல்ல உள்ளே அனன்யாவின் விசும்பல் தான் கேட்டது. அதில்,
“அனு.. அழறியா..?? ஹேய்.. என்ன பண்ற நீ அனு..” என பதட்டமாய் சத்தமிட்டாள். என்னவோ தவறாக தோன்றியது.
“ஸாரி கமலி.. அப்பா அம்மா எல்லாருக்கும் ஸாரி.. நான் தப்பு பண்ணிட்டேன்.. ஸாரி..”
என கேவி கேவி அவள் சொல்ல விஷயம் பெரிதென உணர்ந்த கமலினி வேகமாய் கதவை திறக்க முயன்றப்படி,
என்று கமலியும் பதட்டமாய் சொல்ல பெற்றோருக்கு பகீரென்றது.
“அனு.. அனு கதவை திற டி..” என்று அம்பிகா பதறி துடிக்க சுந்தரமூர்த்தி யோசிக்க நேரம் இன்றி வேகமாய் கதவை முட்டி தாழ்பாளை உடைக்க முயல கமலியும் அவருடன் சேர்ந்து முயற்சித்தாள்.
நடப்பது புரியாமல் மாடி ஏறவும் முடியாமல் அமிர்தம் பாட்டியோ,
“என்னடி நடக்குது.. என்னாச்சு..??? அனுக்கு என்ன..??” என பதற்றமாய் கத்த அவருக்கு பதில் சொல்ல அங்கே யாருக்கும் முடியவில்லை..
வேகமாய் மோதப்பட்டதால் சில அடிகளில் தாழ் விலகிவிட பட்டாரென திறந்த கதவின் வழியே கண்டது தாவணியை கழுத்தில் சுத்தி தூக்கில் தொங்க ஏறி நிற்கும் அனன்யாவை தான்..!!
ஆணின் உலகில் விசுற பட்டோம் மௌனம் பேச படைக்க பட்டோம் அளவே இல்லா விடுதலை ஆனால் இரவாகும் நொடிவரை