“ரொம்ப நாளாவே உன்னை கவனிச்சுட்டு தான் வர்றேன்.. என்ன விஷயம்னு தான் கண்டுபிடிக்க முடியல.. இன்னைக்கு தொக்கா உன் லேப்டப் மாட்டும் போது விட்டு வைப்பேனா என்ன..”
என நக்கலாய் கூறிய அருள்,
“நீ ஒழுங்கு கிடையாதுன்னு தெரியும்.. ப்ளேபாய்ன்னு மட்டும் தான் நினைச்சேன்.. ஆனா நீ இவ்வளவு கேடு கெட்டவனா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல டா.. எத்தனை பொண்ணுங்க..
எத்தனை விதமான போட்டோஸ் வீடியோஸ்..!! ஹப்பாடி அரண்டு போயிட்டேன் ஒரு நிமிஷம்…!! ஈவு இரக்கமே இல்லாம டோக்கன் நம்பர் போட்டு வைச்சு இருக்க..”
என்று சொன்னதற்கு எகத்தாளமாய் சிரித்த கரிகாலன்,
“நீ என்ன ஈயம் பூசினாலும் உன் லட்சணத்தை நான் மத்தவங்களுக்கு சொன்னால் என்ன நடக்கும்ன்னு நான் தனியா விளக்க வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்..”
என்று கேலியாய் கேட்க அதற்கும் பெரிதாய் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
“உன் மனசுல இந்நேரம் ஏதோ திட்டம் போட்டு வைச்சு இருப்பேன்னு தெரியும்.. வளவளன்னு சுத்தாம நீ நேராவே சொல்லலாம்..”
என்று சுருக்கமாய் கேட்க கோணலாய் சிரித்த அருளும்,
“பாய்ன்ட் மச்சான்.. என்னோட குறி பணம்.. பணம் மட்டும் தான்.. நீ எவ்வளவு வாங்கிற என்ற விபரம் எல்லாம் தேவையில்லை.. ஆனா நான் தேவைன்னு கேட்கிற பணத்தை கேள்வி கேட்காம நீ கொடுக்கணும்.. ஓகே வா..?”
என தந்திரனாய் பேரம் பேச மனதில் ஆயிர கணக்குகளோடு அதற்கு சம்மதம் தெரிவித்தான் அந்த சாணக்கியன்.