12 வருடங்கள் முன்:
மதியம் 2மணி. தூய்மையான காற்றை வீசிக் கொண்டுயிருந்த வேப்ப மரத்தின் அருகே சற்று பெரிய சுற்று சுவரும்.. அந்த சுவரின் அடியில் சிறு உயரத்தில் உட்கார்ந்துக் கொள்ளும் அளவிற்கு.. நீளமான திட்டு அமையப் பெற்றுயிருந்தன. மேலும் சில மரங்களும் இருக்க.. அதன் முன்னால் விளையாட்டு திடல் இருந்தது. இவை அமையப்பெற்ற இடம்.. நகரத்தின் புகழ்பெற்ற இருபாலர் படிக்கும் பள்ளி.
‘ தன் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவளை இன்னும் சில மணித்துளியில் பார்க்கப் போகிறான் என்று தெரியாமல்.. அங்கு இருந்த வேப்ப மரத்தின் அடியில் சிறிது நாட்களில் வரப்போகிற.. அரசு பொது தேர்விற்கு தன் முழுகவனத்தையும் செலுத்தி படித்துக் கொண்டுயிருந்தான் வேந்தன். ‘
‘ அவர்கள் பள்ளியில் தேர்விற்காக தயார் செய்யும் காலத்தில்.. காலையில் கட்டாயம் வகுப்பிலும்.. மதியம் மாற்றம் வேண்டி மாணவர்களை.. எங்கு இருப்போம் என வகுப்பு ஆசிரியரிடம் கூறிவிட்டு.. வகுப்பிற்கு வெளி படிக்கட்டுகள்.. விளையாட்டு திடல் உள்ள பகுதிகள்.. போன்ற சில இடங்களில் மாணவர்கள் சென்று படிக்கலாம். அப்படி வேந்தன் வந்த இடம் தான் இது. ‘
வேந்தன் படித்துக் கொண்டுயிருந்த போது.. ” அம்மா.. அப்பா.. அப்பா.. ” என்ற சன்னமான பெண்ணின் அழும் குரல்.. அவனின் கவனத்தை கலைத்தது.
‘ முதல் தடவை திரும்பவில்லை.. யாரோ விளையாடுகிறார்களோ என்று முதலில் விட்டுவிட்டுவிட.. சிறிது நேரத்தில் சற்று அதிக சத்ததில் அழும்குரல் கேட்க.. உட்கார்ந்து இருந்தபடியே திரும்பி பார்க்க.. அவனுக்கு அங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை. ‘
‘ சரி என்று மீண்டும் படிப்பதில் கவனம் செலுத்த முயன்றான். ஆனால் தொடர்ந்து ஒலி மட்டும் கேட்டுக் கொண்டுயிருக்க.. அவனால் அதற்கு மேல் உட்கார முடியவில்லை. அழும் குரலுக்கு சொந்தம் யார் என்றும்?.. அதனை உடனே சென்று பார் என்று மனசு அவனை விரட்டியது. பின் எழுந்து நின்று பார்த்தான். சற்று தூரத்தில் பள்ளி சீர்உடையில் ஒரு பெண்.. உட்கார்ந்து இருப்பது தெரிய.. அழும்குரல் என்பதால் சற்று பதட்டத்துடனும்.. வேகநடையுடன் உட்கார்ந்து இருப்பவரை பார்த்துக் கொண்டே அருகில் சென்றான். ‘
‘ அருகில் வந்தும் பார்த்தால்.. அங்கு அமைய பெற்ற திட்டில் குட்டியாக.. சந்தன நிறத்தில்.. சற்றுசதை பற்றுடன் அமர்ந்திருந்து குழந்தையா?.. குமரியா?.. என்று தெரியாத அளவிற்கு… தன் இருகால்களை மடித்தமர்ந்து.. கைகளால் வயிற்றை பிடித்து தலையை குனித்த படி உட்கார்ந்து இருந்தாள். ‘
‘ ஏன்? எதற்கு?.. இந்த இடத்தில்.. இந்த குட்டிப்பெண் தனியாக.. இந்த நேரத்தில் அழுதுக் கொண்டுயிருக்கிறாள்?.. பதட்டத்துடன் பார்த்தான். ‘
” குட்டிம்மா.. குட்டிம்மா.. இங்க பாருங்க.. ”
‘ அந்த குட்டிம்மா இவனை நிமிர்ந்து பார்ப்பதாக தான் தெரியவில்லை.. அவள் நிமிராமல் இருக்கவும் திருப்ப இரண்டு முறை அழைக்க.. அப்போதும் நிமிரும் எண்ணமில்லை போலும்.. இருப்பினும் அவனுக்கு ஏன்?.. என்று கேட்டு.. அதனை சரி செய்ய வேண்டும் எனத்தான் தோன்றியதே தவிர.. விட்டுச் செல்ல மன வரவில்லை. ‘
” குட்டிம்மா.. பயப்படாதிங்க.. ஏன் அழுறிங்க?.. என்ன பண்ணுது?.. ” என்று கூறிக் கொண்டே அவளின் அருகில் சென்று அமர்ந்து.. வயிற்றை பிடிக்காமல் இருந்த கையை பற்றிக் கொண்டான். அவனுக்கு அவள் தன் தங்கையை விட சிறு பெண் என்பது மட்டுமே தோன்றியது. அதனால் அருகில் உட்கார்ந்து பேசினால் குட்டிம்மாவிற்கு நல்லாயிருக்கும் என நினைத்தான்.
” குட்டிம்மா.. என் பேர் வேந்தன்.. நான் 12வகுப்பு படிக்கிறேன்.. ஏன் அழுகுறிங்க?.. என்ன பண்ணுது குட்டிம்மாக்கு?.. “ என அவள் பயப்படக்கூடாது என்பதற்காக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் கேட்டான்.
‘இவ்வளவு நேரம் ஏன்?.. எதற்கும் வாயை திறக்கமாட்டேன் என்கிறாள்.. இந்த குட்டிம்மா என்று?.. வேந்தனை எண்ண வைத்தவள்.. ‘
” என்னை எதுக்கு?.. குட்டிம்மா.. குட்டிம்மானு சொல்லி கூப்பிடுறிங்க?.. என்னைய பார்த்தால் இப்பதான் நடப்பழகுற குழந்தை மாதிரி இருக்கா?.. நான் இன்னும் கொஞ்ச நாளில்.. 6 வகுப்புபே படித்து முடிக்கப் போகிறேன்.. சரியா. அப்புறம் என்ன வலினு தெரிந்தா?.. உங்ககிட்ட சொல்லமாட்டேனா?.. ” என விடாமல் பேசிவிட்டு.. அதற்கு மேல் பேசமுடியாமல் திரும்பவும் வயிற்றை பிடித்தபடியே மெல்லிய குரலில் அழுதாள்.
‘ குட்டிம்மாவின் கேள்வியிலும்.. அவள் பேச்சை கேட்டவுடன் முதலில் வேந்தனுக்கு சிரிப்புதான் வந்தது. அந்நேரத்தில் அவள் முகத்தையும்.. அவள் பேசிய விதத்தை நினைத்துப் பார்க்க.. அவளின் பூசு பூசு கன்னமும்.. அவளின் கண்கள் தன்னை பார்த்து அதட்டுகிறேன்!.. என்று நினைத்து.. அங்கும் இங்கும் கண்களை உருட்டி பேசிய விதமும்.. குழந்தை தனம் மாறாத முகத்தில் சிறு பயமும் இருந்தது. ‘
அதனை பார்த்த வேந்தனிற்கு.. நீ.. குட்டிம்மா இல்ல உடனே தோன்றிய பெயர் ‘ முயல்குட்டி.. முயல்குட்டி!. ‘ என்று மனதில் தான் அழைத்து பார்த்தான்.. பிறகு இந்த பெயரை வெளியில் சொல்லி அழைக்க.. அதற்கும் ‘ என்ன என்னை பார்த்தால் கேரட் சாப்பிடுற முயல்குட்டி மாதிரி இருக்கானு?.. கேட்டாலும் கேட்பா இந்த முயல்.. ‘ என நீண்டு யோசித்தான்.
வேந்தன் புன்னகையுடன்.. ” சரி.. உங்க பெயரை சொல்லிவிட்டு.. என்ன மாதிரி வலி இருக்குனு சொல்லுங்க?.. எனக்கு அதை பற்றி தெரிந்தால்.. நான் என்ன பண்ணலாம்?.. என்று சொல்லுகிறேன். ”
முயல்குட்டி ” என்.. என் பேர் எழிலரசி.. எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது.”
‘ எழிலரசி!. அழகான பெயர். வயிற்று வலியா?.. ‘
” ம். அரசிம்மா.. மதியம் என்ன சாப்பிட்டிங்க?.. அது சேராம கூட வலிக்கும். ” என அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே..
” சாப்பாடு சேராம வர வயிற்று வலி மாதிரி தெரியல.. இது வேற மாதிரி வலிக்குது. நிமிர்ந்து உட்காரவும் முடியல.. இடுப்பும் வலிக்குது. அதுவும் இந்த மாதிரி வலி.. இப்பதான் முதல்தடவையா வலிப்பது போல் இருக்கு. ” எனக் கூறும் போதே திருப்பவும் வலிக்க..
‘ தன் வயிற்றை பிடித்தபடியே.. அவன் கையை அழுத்தப்பற்றி.. அவனின் தோள் மீதே சாய்ந்து அழுதாள். அவளின் கண்ணிர் அவனின் சட்டையை தாண்டி உடலின் மேல் கண்ணீரின் சூட்டை உணர்ந்தான் வேந்தன். ‘
‘ முயல்குட்டியின் அழுகையை அவனால் தாங்க முடியவில்லை.. அதனை போக்க என்ன வழி என்று யோசிக்க ஆரம்பித்தான். அவள் கூறியதில்.. ஏன் வலிக்கிறது என்று?.. முதல் தடவை புதுவிதமான வயிற்றுவலி.. இடுப்பு வலி.. என்றதும், அப்போ இப்படியும் இருக்குமோ என்று?.. அவன் மனதில் புன்னகை அரும்பியது. ‘
‘ முயல்குட்டிக்கு தான் நினைப்பது போலான வலியாக இருந்தால்?. இந்த வலியை போக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியாதே. ஆனால் அதனை உணராமல் இருக்க செய்ய முடியும். அதற்கு முன் சிலது இருக்கே.. வீட்டிற்கு செல்லாமல் இங்கு எதற்கு இருக்கிறாள்?.. யாருடன் இங்கு வந்தாள்?.. தனியாக இங்கு வந்துயிருந்தால் வீட்டிற்கு எப்படி போவா?.. அதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். ‘
தோள் சாய்ந்திருந்தவளின் தலைதடவி.. புன்னகையுடன் ” அரசி.. இந்த வலி ஒன்னும் இல்ல டா.. அழாதிங்க. அழுகைய முதலில் குறைங்க. “
அரசிக்கு வேந்தனின் செயல்.. தன் அப்பா மட்டும்.. அரசி என்று சிலநேரங்களில் பாசமாக கூப்பிடுவார். இந்த வலி ஒன்றும் இல்லை என அவன் கூறியதை கேட்டு சற்று பயம் விலகி.. புத்துணர்வு வந்ததைபோல உணரத்தோன்றியது.. ” ம்.. ” என்று கூற..
வேந்தனுக்கு அரசியின் ‘ ம்.. ‘ என்ற பதிலே அவள் அழுகையை குறைத்துக் கொள்வாள்.. அதுவே போதுமானதாக இருந்ததால்.. ” சரி அரசி.. நீ எப்படி இங்க வந்த?.. யாரோட வந்த?.. மதியம் என்ன சாப்பிட்ட?.. ” இவ்வளவு நேரமும்.. இவை அனைத்தும் அரசியின் கையை பிடித்துக் கொண்டுதான் கேட்டான்.
“ நான் மதியம் கொஞ்சம் மா சாம்பார் சாதம் தான் சாப்பிட்டேன். அப்பவே வயிறு வலிச்சதா.. அதனால சாப்பிடவே முடியல. இங்க என் அக்காவோட வந்தேன்.”
” என்ன அக்காவோடவா?. அவங்க எந்த கிளாஸ் படிக்கிறாங்க?.. நீ இப்படி அழுகற அளவுக்கு வலிக்குது.. அப்படி இருக்கும் போது.. உன்னய தனியா இங்க விட்டுவிட்டு.. அப்படி எங்க போனாங்க?.. உங்க அக்கா. ” என சற்று கோபமாக கேட்க..
” என்ன அக்கா திட்டுற மாதிரியிருக்கு?.. அக்கா என்னைய ஒன்னும்.. தனியா விடல. அக்கா தனியா உட்கார்ந்து இருப்பியானு?. என்கிட்ட நிறைய தடவ கேட்டாங்க. எனக்கு இப்ப வலிச்ச மாதிரி.. அப்ப வலிக்கல அதனால சரினு சொல்லி போகச் சொன்னேன். “
” இங்க வருவதற்கு முன் அக்கா ஆபிஸ் ரூம்மிலிருந்து வீட்டிற்கு கால் பண்ணப்ப.. அப்பா, அம்மா,அண்ணா.. எல்லாம் வெளியூர் போயிருந்தாங்களா.. அதனால அவங்க வர லேட்டாகும் சொன்னார்கள் என்பதற்காக.. முன்பகுதியில் நிறைய பேர் வருவாங்க.. நான் இப்போதைக்கு அவங்களை பார்க்க வேண்டாம் என அம்மா சொன்னாங்களா. அதனால எனக்கு இங்க காற்றோட்டமா நல்லாயிருக்கும் என இங்க இருக்க கூறிவிட்டு அக்கா வந்து.. அப்பா அம்மாவ இங்க அழைத்துவர போயிருக்காங்க. என் அக்கா பேர் இளமதி.. 12வகுப்பு உயிரியல் பிரிவில் படிக்கிறாங்க. ”
‘ தன் அக்காவை திட்டுவதா என படபடவென கூறிவிட்டு.. மீண்டும் அவனின் தோளிலேயே சாய்ந்துக் கொண்டாள். அவளிற்கு இப்போது ஒரு ஆறுதல் அளிக்கும் தோள் தேவை. அது வேந்தனின் தோளாக அவளுக்கு அமைந்து. ‘
‘ வேந்தன் மனத்திற்குள் புன்னகைத்தான். எப்பா!.. என்னா கோபம் வருது நம் முயல்குட்டிக்கு.. ம்.. இளமதி?.. நம்ம செட்டில்?.. ஓ.. இளமதி தங்கையா நீ.. முயல்குட்டி!.. ‘
‘ பிறகு அரசி கூறியவற்றில் இருந்து.. அவளின் வயதும்.. அவளின் உடல்நிலை.. வீட்டில் கூறியது.. அதனால் இளமதி செய்துயிருக்கும் செயல்கள்.. என வேந்தன் சிலவற்றை கணித்தான். ‘
‘ முகம்மலர.. நம் முயல்குட்டியான.. எழிலரசி.. இப்போது தான் பூப்பெய்ந்து இருக்கிறாள். அதனால வந்த வலிதான் என்று.. தன் அனைத்து சந்தேகத்தையும் உறுதியாக்கினான். ‘
‘ 2வருடம் முன்.. வினோவும் இது போல தானே அழுதா. அக்காவும் நானும் தானே வீட்டிற்குஅழைத்து சென்றோம். ஏற்கனவே அம்மா தன்னிடம்.. வினோவிற்கு பள்ளியில் இருக்கும்போது பூப்பெய்தால்.. எப்படி அதனை தாங்கள் அறிவது?.. அப்போது அவள் எந்த மாதிரி உணர்வில்இருப்பாள்.. அந்த நேரத்தில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்.. அப்போது என செய்ய வேண்டும்.. என்று சொல்லி புரிய வைத்துயிருக்கிறார். ‘
‘ அதனால் முன்பே வேந்தனுக்கு இதுப்பற்றி சிலமுக்கிய குறிப்புகள் தெரியும் என்பதால்.. அவனால் எழிலரசியின் தற்போதைய நிலை என்னவென்றுஉணர்ந்து.. உடனே கண்டுக்கொண்டான். ‘
‘ அதன் பிறகு சிலவற்றை அவன் யோசித்தான்.. இவ்வளவு செய்த இளமதி.. இதையும் செய்துயிருப்பாங்க தான்.. ஆனாலும் கேட்காமலும் இருக்கதான் தோன்றவில்லை. முயல்குட்டியிடமும்.. வினோவிடம் கேட்டது போல கேட்கலாமா?.. வேண்டாம்மா?.. ஒரு நொடிமட்டுமே யோசித்தான்.. ‘
‘ அடுத்த நொடி தங்கையிடம் அனைத்தையும் கேட்டு செய்தை போல.. சற்றுமுன் அறிமுகமான முயல்குட்டியிடமும்.. உரிமையுடன் எல்லாம் கேட்டு.. அதனை செய்யவில்லை என்றால்.. அனைத்தையும் தானே அவளுக்கு செய்து கொடுத்து.. அவளை அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தனது பொறுப்பு, கடமை என அவனுக்கு நினைக்கத் தோன்றியது.. ‘
” சரி.. சரி.. உன் அக்காவை நான் கேட்து தப்புதான். ம்.. அரசிம்மா.. உன் அக்கா.. உனக்கு இப்படி வலிவந்தா.. என்ன பண்ணவேண்டும்?.. என்பதை உனக்கு சொல்லி.. நீ எல்லாம் சரியா பண்ணியிருக்கியா?.. ”
அரசி.. வேந்தன் என்ன கேட்கிறான்?. என சில நொடிகள் யோசித்து.. பின் ” அது.. ம்..இந்த மாதிரி நேரத்தில்.. எனக்கு என்ன செய்யும்?.. பிறகு நான் என்ன பண்ணவேண்டும?.. பயப்படக் கூடாதுனு அம்மா, அக்கா எனக்கு சொல்லியிருங்காங்க. வயிறு வலிச்சாலும் வலிக்கும்.. இல்லாமலும் இருக்கும் என்றும் கூட கூறினாங்க தான்.. ஆனா இந்த மாதிரி வலிக்குமுனு நான் எதிர்பார்க்கவில்லை. ”
‘ அரசி கூறியதை கேட்டு வேந்தனுக்கு நிம்மதியானது.. அரசிக்கு ஏற்கனவே வீட்டில் சொல்லி புரிய வைத்துயிருக்கிறார்கள் என்று. அப்படியானால்.. இப்போது அரசி தன் வலியை உணராமல் இருந்தால் போதும்.. பிறகு வீட்டிற்கு போனவுடன் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முடிவெடுத்தவுடன். ‘
அவளை தோளில் இருந்து நிமிர்த்தி.. ” இரு அரசிம்மா. இதோ வந்துவிடுகிறேன். ” வேகமாக தான் உட்காந்து இருந்த இடத்தை நோக்கி சென்றான்.
‘ இவ்வளவு நேரமும் அரசி கண்களை மூடியும்.. கையை பிடித்தும்.. அவனின் தோள் மீது பட்டும்படாமலும் சாய்ந்து கொண்டேதான் பதில் அளித்தால். வேந்தன் நிமிர்த்த.. இதோ வருகிறேன் என்று கூறிய.. அவனின் பின்புறத்தை தான் பார்த்தாள். பிறகு கண்களை மூடி அவன் வரவை எதிர்பார்த்து.. உட்கார்ந்து இருந்தாள். ‘
வேந்தன் கண்களை மூடி உட்கார்த்து இருக்கும் அரசியை பார்த்த படியே வந்தான்.. ‘ மதியம் வேற சிறிதுதான் சாப்பிட்டாளாமே.. வலிச்சா என்ன முழுசா சாப்பிட வேண்டியது தானே. இப்ப பாரு வலியால் அழுது.. அழுது.. முகம் மிகவும் சோர்ந்துபோய் களைப்பாக இருக்கா.. ‘ பாசமாகவா?.. கோபமாகவா?.. என தெரியாத வகையில் அவளை பற்றி எண்ணிக் கொண்டே.. அரசியின் அருகில் வந்து உட்கார்ந்தான்.
” அரசி.. இத சாப்பிட்டு.. பிறகு இத குடிக்கனும். ” அவளிடம் தான் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட கொண்டு வந்த சுண்டல்.. வாழைப்பழம் மற்றும் இஞ்சி, புதினா போட்ட மோரை காட்ட.
அதனை பார்த்தவள்.. ” எனக்கு எதுவும் வேண்டாம். என்னால முடியாது. ” குழந்தையாக மறுக்க..
என்ன வேண்டாமா?.. எவ்வளவு சோர்ந்து போய்யிருக்கா?.. சற்று கோபக்குரலில்.. ” அரசிம்மா.. வேண்டாம் சொல்லக் கூடாது. இப்ப நீ ரொம்ப களைப்பா வேற தெரியிற.. நீ இப்ப இதை சாப்பிட்டால் உன் வலி கொஞ்சம் குறையும்.. அதுவும் இல்லாம நீ இன்னும் வீட்டுக்கு போக நேரம் ஆகலாம்.. பிறகு உன்னை வீட்டுக்கு போன உடனே.. சாப்பிட சொல்லுவாங்களானு தெரியாது?.. அதுவரைக்கும் உனக்கு தெம்பு வேணும்மில்ல.. அதனால இத இப்ப கண்டிப்பா சாப்பிடனும். ” முடிவில் கட்டளையாக கூறினான்.
அரசி அவன் கூறியதையும்.. குரலின் கட்டளை, கோபத்தையும் கேட்டு.. இவங்க என்னை சாப்பிடாமல் இருக்க விடமாட்டாங்க போல?.. வேந்தன் கொடுத்ததை பார்த்தவள்.. ” என்ன இவ்வளவு இருக்கு?.. நீங்களும் என்கூட சேர்ந்து சாப்பிடுங்க. ”
வேந்தன் அவள் கூறியதை கேட்டதும்.. முயல்குட்டி சாப்பிட்ட வேண்டும் என்பதற்காக.. ” சரி.. எனக்கு கொஞ்சம் போதும்.. நீதான் இப்ப நல்லா சாப்பிடனும்.. அது ரொம்ப முக்கியம். ” கூறிவிட்டு அவனும் சாப்பிட ஆயத்தமானான்..
அரசி.. வேந்தன் தானும் சாப்பிடுவதாக ஒத்துக் கொண்டபின்.. “ ம்.. ம். நான் எப்போதுமே நல்லா தான் சாப்பிடுவேன்.. அப்புறம் ஏன் இப்ப நல்லா சாப்பிடனும்?.. ” எனக் கேட்டு விட்டு.. அவன் முதலில் கொடுத்த மோர் சிறிது குடித்து வைத்தவள்.. பின் மற்றத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
‘ வேந்தன் அரசி கூறியதை கேட்டு.. அவளை பார்க்க.. பார்க்கதான் இவ அப்படியே கன்னத்தை பிடித்து கொஞ்சம் வேண்டும் போல பூசுபூசு கன்னம்.. கொழுகொழுனு இருக்கா.. ஆனா உடம்பில சத்தே இல்ல. முதல்ல இப்ப சாப்பிட வைக்கனுமே.. வீட்டிற்கு போயும் இந்த நேரத்தில் நன்றாக சாப்பிட வேண்டும்.. அதுதான் அவளுக்கும், அவளின் உடல்நிலைக்கும் நல்லது. என்ன சொல்ல?.. கொஞ்ச ஆரம்பித்து.. யோசனையில் எண்ணி முடித்தான். ‘
” அரசிம்மா.. உங்களுக்கு இப்ப.. கடவுள் ஒரு ஸ்பெஷல் கிப்ட்.. பவர் ஒன்று கொடுத்து.. நீங்க இதுநாள் வரைக்கும் குழந்தை பெண்ணா இருந்த உங்கள இப்ப வலுவான.. பெரிய பொண்ணா மாற்றியிருக்காரு. அதனால நீங்க இப்ப சத்தான சாப்பாட்டை நல்லா சாப்பிடனும்.. அப்பதான் உங்களுக்கு இப்பவும்.. இனிமேல் மாத மாதமும் வயிற்று வலி.. இடுப்புவலி இருக்காது.. ” எனக்கூறும் போதே..
அரசி பயத்துடன் அவனை வேகமாக நிமிர்ந்து பார்த்து.. ” என்ன மாத மாதம் இதே மாதிரியே வலிக்குமா?.. ”
‘ அய்யோ வேந்தா.. சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக.. பயப்பட வைச்சுட்ட.. முயல்குட்டி வேற.. நம்மள பாவமா பார்க்கிறாள்.. ‘
” அப்படியில்ல அரசி.. சில பேருக்கு இப்ப வலிப்பது போல வலி இருக்கும்.. உனக்கும் அதேமாதிரி வலி இருக்கும்மானு தெரியாது?.. அப்படியே இருந்தாலும் அதை நினைத்து பயப்படாத. இந்தமாதிரி வலி இருக்கும் நேரத்தில்.. அம்மா என் தங்கைக்கு உளுந்தங்களி, புட்டு, உளுந்த வடை, நாட்டுக்கோழி முட்டைனு கொடுப்பதை நான் பார்த்துயிருக்கேன். ஆரம்பத்தில் தங்கை கூட அந்த நேரங்களில் ரொம்ப அழுவா.. நானு.. அப்பா.. அம்மா எல்லாம் அவளிற்கு புரியவைத்து.. நான் இப்ப சொன்னதெல்லாம் சாப்பிட வைப்போம்.. இப்ப எல்லாம் அவ அழவேமாட்டா. ”
” அதனால் நீ எப்போதும் சத்தான உணவும்.. இந்த மாதிரி சாப்பிடும்.. உன் அம்மாவும் இந்த மாதிரி நேரத்தில் நல்லது என கூறி.. சாப்பிட கொடுத்தா.. அது எதையும் மறுக்காம சாப்பிடனும். பிறகு உனக்கு வலி வராமல் இருக்கலாம்.. இல்ல அதை ஏற்று.. தாங்கிக் கொள்ளும் அளவிற்கு நீ உடல்அளவிலும்.. மனசு அளவிலும்.. பலமான பொண்ணா மாறிவிடுவ. சரியா. ” என கூறி கொண்டே அவன் கொடுத்தை ஓரளவிற்கு சாப்பிட வைத்துவிட்டான்.
‘ பிறகு அவளை பார்க்க.. இன்னும் தெளிவு இல்லாத.. பயம் போகாத.. அதில் இன்னும் அதிகமாக வலியை தெரிவிக்கும் முகத்தையும் பார்த்தான். ‘
” அரசி.. இங்க உன் வலது கையை காண்பி.. ” அவன் கேட்க.. அவளும் ஏன்னென்று கேட்காமல் கைய நீட்ட..
” அரசி.. என்னோட இந்த மோதிரத்தை உனக்கு நான் போட்டுவிடுறேன்.. இது எனக்காக.. நான் ஆரோக்கியமா, பலமா.. இருக்க வேண்டும் என்று சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்தது!.. என்று வீட்டல எனக்கு கொடுத்தாங்க. இப்ப நான் உனக்கு போட்டு விடுறேன். இனிமே நீ ஸ்ட்ராங்கான பெண்ணா மாறி.. எதுக்கும் அழாம.. பயப்படாம இருப்ப பாரேன். ” முயல்குட்டியின் பஞ்சு போன்ற விரலில்.. வேந்தன்.. அரசியை பார்த்தவாறு மோதிரம் அணிவித்தான்.
‘ அரசிக்கு வேந்தன் கூறுவது உண்மையா?.. என்று ஆராய தோன்றவில்லை.. இப்போது இருக்கும் வலியால்.. இந்த வலி குறைந்தால் போதும் என தோன்றியதால்.. வேந்தன் அணிவித்த மோதிரத்தை ஒருநொடி பார்த்து.. மீண்டும் சாய்ந்துக் கொண்டாள். ‘
‘ அரசி மோதிரத்தை பார்த்துக் கொண்டுயிருப்பதை பார்த்தவன்.. இந்த மோதிரம் அவன் அக்கா.. இன்னும் சில நாட்களில் திருமணம் ஆகி செல்லப்போவதால்.. அண்ணாவிற்கும், தனக்கும் சில தினங்களுக்கு முன்.. அவள் வாங்கி கொடுத்தது. சாமி கயிறை.. கழுத்தில், கையில் கட்டுவோம் இல்லையா… கடவுள் நம் கூடவே இருப்பது போல் தோன்றி.. தைரியம், பாதுகாப்பு உணர்வு ஏற்படும். அதுபோலவே அரசியும் சற்று தைரியம் பெற வேண்டும் என்பதற்காக அந்த மோதிரத்தை போட்டுவிட்டான். ‘
‘ ஆனால் இந்த மோதிரம் வருங்காலத்தில் அவர்களை இணைக்கும் அடையாளமாக இருக்கப்போகிறது என்று தெரியாமல்.. இன்று இந்த மோதிரத்தை போட்டு விட்டான். ‘
.