” அதான் வந்து.. உட்கார்ந்து இருக்கியே.. இப்ப நீ என்ன ?. எப்ப நடந்தது?.. என்று மட்டும் கூறு. ” திலகன் வேந்தன், எழிலரசியை பார்த்து.. பின் இன்பாவை பார்க்க.. அவனிற்கு இன்பாவின் கருத்து பற்றி அறிய நினைத்தான்.
இன்பா திலகனை பார்க்கவில்லை.. அவனாகவே புன்னகையுடன்.. “ நான் ஒன்னும் நினைக்கமாட்டேன் மாமா. அன்னைக்கு எழில் எங்களிடம் கூறிய போதே.. எழிலா சொல்வதுபோல இல்லேனு.. நினைத்தேன். எழில் நீங்க வரவரைக்கு எங்கு இருந்தா என்று?.. மதி அக்காவிடம் கேட்ட போது.. விளையாட்டு திடல்னு சொன்னாங்க. சரி அங்கு தனியா இருந்தப்ப.. யாரோ?.. அவளுக்கு இன்னைக்கு உதவி பண்ணியிருக்காங்குனு. உதவி பண்ணியது ஒரு பெண்ணாக இருக்கும்.. அப்ப அவங்க வேறு பெண் என்று சொன்னதை.. எழில் நான் அவ கூட அப்ப ஸ்கூல் படித்ததால்.. என்னைய பண்ண சொல்லி இருப்பானு நினைச்சேன். ”
இன்னும் மகிழ்ச்சியுடன் ” அப்படினா!. எழிலரசி பூப்பெய்த அன்று.. கிரவுண்டில் இருந்தபோது.. நீங்கதான் எழில் கூட இருந்திங்களா மாமா?.. “
‘ அய்யோ இப்படி மாட்டிக்கிட்டியே.. வேந்தா!.. முயல்குட்டி முகத்தை பார்த்திட்டு இருந்து.. சுற்றியிருப்பவர்களை மறந்துவிட்டியே.. ‘ அவர்களை யோசனையுடன் பார்க்க
திலகன் அவன் முகபாவத்தை பார்த்து.. ” ஆமாடா.. உன் அரசிம்மாவை பார்த்துட்டே இருந்ததால்.. எங்கள மறந்துட்டு.. மனசுல நினைப்பாத நினைத்து வெளிய சொல்லி மாட்டிக்கிட்டதான். இப்பஉண்மைய சொல்லப் போறியா?.. இல்லையா டா. ”
பதட்டத்துடன்.. ” டேய்.. ஏன்டா கத்துற?.. அரசிம்மா.. முழிச்சுக்க போறா?.. “
சிரிப்புடன்.. ” ஏன்டா?. குழந்தை பக்கத்தில் இருக்கு.. குழந்தை முழிச்சுக்க.. போகுதுனு சொல்லாம.. உன் அரசிம்மா முழிச்சுக்க போறானு சொல்லுற. இது ரொம்பவே ஓவர்டா. “
மற்றவர்கள் தங்களின் மனதில் உள்ளதை.. திலகன் கூறவும் அனைவரும் சிரிக்க..
” டேய்.. ஏன் கஷ்டம் உனக்கு புரியாது. இந்த குழந்தையை சமாளித்துவிடலாம் டா. ஆனா அரசிய சமாளிப்பது கஷ்டம் டா. “
” அப்ப ஷாட்டா சொல்லு.. எல்லாம் எழுந்துவர நேரம் ஆச்சு.. சீக்கிரம். ”
‘ அரசியிடம் முதலில் கூறிவிட்டோம்.. நாமே உளறியாச்சு!.. பிறகு இனிமேல் இவர்களிடம் மறைத்து என்னவாகப் போகிறது ‘
” சரி டா.. ” தன் அரசியை பார்த்துக்கொண்டே.. அன்று நடந்தை சிறிது கண் கலங்களுடன் கூறி முடித்தான்.
‘ கேட்டவர்கள்.. சோ ஸ்விட்!. அண்ணா என சத்யா. திலகனும், வினோத்தும் தன் நண்பனை மெச்சுதல் பார்வையும்!.. இன்பா முகம்கொள்ளா ஆனந்தத்துடனும் இருந்தான். ‘
கலங்கிய முகத்துடன் இருந்த தன் நண்பனை அவன் மனதை மாறும் பொருட்டு.. ” டேய் வேந்தா.. எப்பவும் உன்கூட தானே நாங்கயிருப்போம். அப்ப நாங்க எங்கடா இருந்தோம்?.. “
புன்னகையுடன்.. ” ம்.. வினோத் லீவ், அன்னைக்குனு பார்த்து நீ கிளாஸ்சில் இருக்கிறேன் என்று சொல்லிட்ட. “
” பாரேன்!.. நான் ஒருநாள்.. ஒருவேலை உன்கூட இல்லாம போனதால.. எவ்வளவு நடந்துயிருக்கு?.. “
வினோத் புன்னகையுடன்.. ” அதனால என்ன டா பண்ணபோற?.. “
” என்னால தான் எழிலரசிய பார்த்துயிருக்கான். அதான் என்னைய சிறப்பா!.. அவன் கவனிக்க வேண்டும் என கூறவந்தேன். ”
” நானே உங்கள சிறப்பா கவனிக்கிறேன் திலகன்.. உங்களால தான் எழிலுக்கு வேந்தன் மாமா அறிமுகம்.. அதனால் நானும் பொறுப்பா எழில், சத்யாவ பார்த்துக் கொள்ளுற அற்புதமான வாய்ப்பு கிடைத்துயிருக்கு. என்னை பார்த்து எங்க வீட்டல இருக்க ஆண்கள்கூட அவங்க அவங்க தங்கச்சிய முடிந்தளவு பார்த்துக் கொள்ளுறாங்க. அதனால என்னிடம் என்ன வேண்டும் என கேளுங்க?.. ”
புன்னகையுடன்.. ” நான் சும்மா சொன்னேன் இன்பா. ஏதாவது வேண்டும் என்றால்?.. நன்றாக யோசித்து.. உங்களிடம் தான்!.. நான் வந்தாகனும். அப்ப மறுக்காம சம்மதம் சொல்லுங்க. அதுபோதும். ” என்று சற்று திரும்பி சத்யாவை ஒரு பார்வை பார்த்து அவன் கேட்க..
அவனின் கண்பார்க்கும் திசையை பார்த்துவிட்டு.. ஒஓஓ.. ” அப்ப சரி திலகன் மாமா. நல்லா யோசித்து.. வந்து கேளுங்க. அப்ப சிறப்பா செய்துவிடலாம்.. மாமா. ” புன்னகையுடன் கூற..
‘ மாமா ‘ என்ற அழைப்பில் மற்ற இருவரும் புரிந்து சிரிக்க.. சத்யா புரிந்தும், புரியாமலும் மென்புன்னகை புரிந்தாள்.
” சரி இன்பா.. என்னைய பற்றி இன்னொரு நாள் பேசலாம். இவனை விசாரிக்க இன்னும் நிறைய இருக்கு. இப்ப எழில் தூக்குவதால் தான் உண்மைய சொல்லியிருக்கான். அதனால் இப்பவே இன்னும் சில உண்மைய நாம்ம தெரிந்துக் கொள்ளலாம். சரி வேந்தா.. அப்ப பார்த்த பின் பிறகு திரும்ப எப்ப எழிலரசிய பார்த்த?.. “
வாய்தவறி இப்ப சொன்னா.. எல்லாம் விளக்கமா சொல்லிவிடுவனா?.. பிறகு நான் அவ்வளவுதான்.. ” ஒரு 6வருடத்திற்கு முன் ஒரு 5நமிடம் பார்த்துயிருப்பேன். அதன் பிறகு இப்ப வெள்ளிகிழமை தான் பார்த்தேன். ”
” நிஜமாவா டா. ” அவனை நம்பாத பார்வை அனைவரும் செலுத்த
” நிஜம்தான் டா. அரசிய பார்த்தவுடனே எனக்கு தெரிந்தது. “
“டேய்.. நீ எழிலரசிய முதலில் பார்த்தது.. 11வருடத்திற்கு மேல இருக்கும்.. இரண்டாவது தடவையும் 6வருடத்திற்கு முன்.. அதுவும் 5நமிடம் தான் பார்த்தேனு சொல்லுற?.. பிறகு எப்படி அந்த பொண்ணுதான் எழிலரசினு கண்டுபிடித்த?. “
புன்னகையுடன்.. ” அரசியோட முகம்.. அப்போதைக்கும்.. இப்ப பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கு. ”
அப்படியா??.. என்பது போல இன்பா, சத்யாவை பார்க்க.. அவர்களும் ஆமாம் என்பது போல தலையாட்ட..
” போதுமா. “
” ம்ஹூம்.. ஆனா நீ நடந்துக் கொள்வதை பார்த்தா.. சில பல வருடங்கள் கழித்து.. நேற்று முன்தினம் தான் பார்த்த மாதிரி தெரியலையே?.. ஏதோ சம்திங்??. மறைக்கிற. ”
” தப்பா எடுத்துக்காத வேந்தா.. ஏன் இப்படி நான் உன்னிடம் கேட்குறானா?. எழிலரசிக்கிட்ட உன்னோட நடவடிக்கையே ரொம்ப ரொம்ப புதுசா இருக்கு. இத்தனை வருடம் கூட இருந்த எனக்கும், வினோத்துக்குமே புரியல.. அது எங்களுக்கு பிரச்சனை இல்ல.. ஆனா மத்தவங்க அத நல்லவிதமா எடுத்துப்பாங்களானு தெரியாது?.. அவர்களால் உங்க இரண்டு பேருக்கும் பிரச்சனை வரக்கூடாது.. இல்ல வந்தாலும் உங்களுக்கு சப்போட்டா நாங்க இருக்கனும் நினைக்கிறோம். ” சந்தேகத்துடன் கேட்க ஆரம்பித்து.. பொறுப்பான தோழனாக வேந்தனிடம் கேட்டு.. பின் மற்றவர்களை பார்க்க.
” மாமா.. நீங்க எழில்கிட்ட நடந்துக்கொள்வதை பார்க்க.. சந்தோஷமா இருக்கு. ஆனா லைட்டா கொஞ்சம் ஒவராவும் இருக்கு. ” புன்னகையுடன் கூற..
வேந்தன் புன்னகையுடன்.. ” அதுதான் எனக்கே தெரியுமே.. சாரி.. சாரி. ” சற்று நிதானித்து.. ” நீங்க எங்களுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கனும் நினைக்கிறிங்க. ஆனா நான் இப்ப சொல்லப்போறத தயவுசெய்து.. அரசிக்கிட்ட கேட்டுறாதிங்க.. வேந்தன் பாவம். சரியா. “
புன்னகையுடன்.. ” என்ன அண்ணா?. அவளுக்கு இப்படி பயப்படுறிங்க. “
சிரிப்புடனே.. ” பின்ன.. அரசி காலையில் சொன்னா.. நான் பண்ணுவதை பார்த்து.. அடக்கிவாசிங்க. இல்லையென்றால் இப்படி நீங்கயெல்லாம் ஒருநாள் சுத்தி நின்னு கேள்வி கேட்க போறாங்க?.. நீ மாட்டிக்கிட்டு முழிக்க போறிங்கனு!.. சொன்னா. அந்த ஒருநாள் இன்னைகே வந்துருச்சு.. திட்டிட்டு இருந்தவ.. என்னைய அடிக்ககூட வாய்ப்பு இருக்கு அதுக்குதான். “
” அடிவாங்கினா என்ன இப்ப?. எங்களால் முடியாததை அவங்க பண்ணுறாங்க. எங்களால் உனக்கு எந்த சேதாரமும் உனக்கு வராது. ஏன்னா?.. எங்களிடம் சொன்னதை. நீயே எப்பயாவது அவங்களிடம் உளறி.. மாட்டிக்கிட்டு அடிவாங்கிப்ப. ” சிரிப்புடன் கூற.
சிரிப்புடனே… ” ம்.. அது கண்டிப்பா நடக்கும். “
சாதாரண நிலைக்கு வந்தவன்.. ” ம்.. நான் இப்ப என்ன சொல்ல உங்களிடம்?.. சொல்லப்போன.. நான் நடத்துக் கொள்வது எனக்கே புதுசாதான் இருக்கு. சாரி சத்யா.. நீ தப்பா எடுத்துக்காத. ”
” நீங்களே சொல்லுங்க?.. நமக்கு ஒருத்தவங்கள.. முதல்தடவை பார்க்கறப்ப.. பார்த்தவுடன் ஒவ்வொரு மாதிரி பிடிக்கும். நான் அரசிய பார்த்து, பேசியநேரம்.. அரசிக்கு ஒரு பொண்ணா ரொம்ப முக்கியமான நாள்.. அந்தநாள்ல அந்த பொண்ண பார்க்கிற.. ஒவ்வொரு பையனுக்கும் ஸ்பெஷல்நாள் தான். அந்த பொண்ண ஏதோ விதத்தில் பிடிச்சா!.. அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாங்க. “
” அப்படிபட்ட நாளில்!.. நான் அரசியோட ஒருமணி நேரம் கூட இருந்தேன். அவளுக்கு எவ்வளவு அதிகமான வயிற்றுவலி இருந்தனு.. என் கைக்கு தெரியும். அப்ப அரசி அழாம இருக்க அவளிடம் பேசிய படியும்.. அப்ப சோர்வா இருந்தவள சாப்பிட வைத்து.. இனிமே என்ன சாப்பிட்டா நல்லாயிருக்கும் என கூறி.. தைரியம் சொல்லி.. பாதுகாப்புக்கு இன்பா ரொம்ப முக்கியமுனு சொல்லி.. அன்னைக்கும் என் தோளில் தூங்கினா. பிறகு இளமதி வந்ததும் கிளம்பிட்டா. ”
” ஆனா எனக்கு அப்பவே அரசிய ஏதோ விதத்தில் பிடித்து.. என் ஞாபகத்தில் நிலைத்து நின்னுட்டா. அதன் பிறகு அரசியை மறக்கவே இல்ல. கல்யாணம் பண்ணவேண்டும் என்ற சூழ்நிலை வந்தவுடனே.. ” இன்பாவை பார்த்து புன்னகையுடன்..
” கண்டிப்பா நானே என் குடும்பத்தில் அரசியை பற்றியும்.. அவதான் எனக்கு மனைவியாக முடியும் என்று தெளிவுபடுத்தி.. குடும்பத்துடன் அரசியை பார்க்க வந்துயிருப்பேன். ” என்றவனை
நண்பர்கள் ‘ அடப்பாவி ‘ என முறைப்புடன் பார்த்தனர்..
புன்னகையுடன்.. ” ஆனா அது நடப்பதற்கு முன்பே.. நான் அரசிய கோயில்ல பார்த்தவுடன்.. அது யாருனு தெரிந்ததும்?.. 12 வருடத்திற்கு முன்ன பூப்பெய்த நாள்ள பார்த்த பொண்ண.. நான் பார்த்து பேச வேண்டும் என்று நினைத்த பெண்ணவே!.. இரு வீட்டிலும் உள்ளவர்களாளே!.. இப்ப எனக்கு கல்யாணம் பண்ண பார்த்திருக்கும் பொண்ணா பார்த்தா!.. என்னோட பிளிங் எப்படியிருக்கும்?.. சொல்லுங்க. என்ன என்னாலே கட்டுப்படுத்த முடியல.. அந்த அளவிற்கு சந்தோஷமா இருக்கு. ”
” அதனால்தான்.. என்னிடம் கடவுளா அனுப்பிய என் அரசிய. அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்குமுனு தெரியும்!.. அதை செய்தும்.. நான் அவளுக்கு என்ன பண்ண வேண்டும்?.. என நினைப்பதை செய்தும்.. என் சந்தோஷம் முழுவதும்!.. நான் உங்க முன்னாடி வெளிப்படையா காண்பித்துயிருக்கேன். அவ்வளவுதான் ”
‘ இதனை கேட்டவர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சிதான்.. என்ன பதில் கூறுவார்கள்?. ‘
திலகன் மெல்லிய புன்னகையுடன்.. ” டேய் வேந்தா.. நீ சொல்வதை பார்த்த.. என்ன சொல்வது என்று தெரியலடா. அதே சமயம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குடா!.. அதனால நீ பண்ணுற அலும்பு கொஞ்சம் ஓகே தான். “
இன்பாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. பின் ” அப்ப மாமா.. எழிலுக்கும் உங்களை பார்த்தவுடன் ஞாபகம் இருந்ததா?.. “
வருத்ததுடன்.. ” ம்ஹூம்.. அரசி என்னைய ஞாபகமே இல்ல இன்பா. நானே இன்னைக்கு காலையில் தான் நாங்க பார்த்துக் கொண்டதையே சொன்னேன். அப்ப அரசி சொன்னது.. அன்னைக்கு நடந்தது கொஞ்சம் தான் ஞாபகம் இருக்குனு. ஆனா எனக்கு ஒரு ஆச்சிரியம்!.. எனக்கு கொடுத்தா. ”
” என்ன மாமா?.. ”
புன்னகையுடன்.. ” ம்.. அரசி என்னைய அன்னைக்கு ஒரு 5நிமிசம் கூட என் முகத்தை பார்க்கல.. கண்ணமுடிதான் என் தோளில் சாய்ந்து உட்காருந்து இருந்தா. அரசி சென்னா.. இப்ப என் முகம்தான் ஞாபகம் இல்ல.. ஆனா என் குரல், நான் சொன்ன வார்த்தைகள்.. அதை கூறிய விதம். இதையெல்லாம் இந்த இரண்டு நாளில்.. முன் எப்போயோ கேட்டது போல் இருக்குனு சொன்னா. ”
” இதையெல்லாம் விட அப்ப என்னைய கூப்பிட்ட.. தனு!.. என்ற பெயரை சொல்லிதான். இப்ப முதன்முதலில் என்னை இந்த பெயரில் அழைத்தா!. “
” எனக்குனு தனியா இருந்த நினைவுகள்.. இப்ப நடந்த நிகழ்ச்சிகளினால் ஏற்கனவே என்னைய கைய பிடிக்க முடியாம இருப்பவனிடம்.. பின் இவ்வளவையும் நான் அரசியின் மூலம் வேற கேட்டு தெரிந்த பிறகு.. நான் எப்படி அரசியிடம் நடந்துக்கொள்வேன் சொல்லுங்க?.. யாரை பற்றியும் நினைக்க தோனல.. நான் விரும்புவது!.. அரசி விரும்புவது!.. இன்னும் என்ன பண்ணலாம்?. என்றுதான் நினைக்க தோனுது. “
‘ எப்படி என்று?.. நால்வரும் இன்னும் பிரமித்துயிருந்தனர்.’
” ம்.. வேந்தா.. நீ உன் உணர்வ சொன்னதவிட.. அரசி சொன்னதா நீ சொல்வதுதான் ஆச்சரியமாஇருக்கு. உனக்காவது அப்ப நல்ல மேச்சுரிட்டி.. நல்லா ஞாபகம் இருக்க வயசு. ஆனா எழிலரசிக்கு.. அதுவும் அந்த நேரத்தில் நடந்தது ஏதோ ஒன்னு ஞாபகம் இருந்தாலும் பெரிய விஷயம் தான். ஆனாஅதை நீ எங்களிடம் நிருபித்து காண்பி. அப்ப தான் நாங்க நம்புவோம். “
” என்ன?.. நிருபிக்கனுமா?.. அப்பதான் நம்புவிங்களா?.. என்ன டா?.. எங்க உணர்வுகள பார்த்தா விளையாட்டா இருக்கா திலகா?.. ” சற்று ஆதங்கமாகவும், கோபமாகவும் வேந்தன் கேட்க..
” அவன் கேட்டதில் தப்பு இல்ல வேந்தா ” என்ற வினோத்தை கோபமாக முறைத்தவன்..
” கோபபடாதா டா. உங்க உணர்வுகள்.. மற்றவர்களின் பார்வையில் விளையாட்டா ஆகிவிடக்கூடாது டா. அதுக்காக தான் கேட்பது. நீ உங்களின் கடந்தகால நிகழ்வை சொன்னாலும்.. அதில் எங்களுக்கு சந்தோஷம்தான். ஆனா இப்ப உனக்கு ஒன்னு ஞாபகம் இருக்கனும். இப்ப நடக்க போற கல்யாணம்.. பெரியவர்களா பார்த்து பண்ணுற கல்யாணம். உங்க இரண்டு பேரோட நடவடிக்கையும் பார்ப்பதற்கு.. நல்ல பழகப்பட்டவங்களுக்கு நடக்க போகும் திருமணம் மாதிரிதான் இருக்கு. ”
” அதிலும் எழிலரசியின் நடவடிக்கை.. உன்னிடம் நார்மலாயிருப்பது ஏனு?.. உங்களுக்கு புரியது. ஆனா மற்றவர்களுக்கு.. அவங்க மேல ரொம்ப சந்தேகத்தை வர வைக்கும். இதுநாள் வரையில் எழிலரசி.. அவங்க மாமாக்களிடம் கூட பேச தயங்கினவங்க.. அது அவங்க அண்ணா.. என்கிற எண்ணத்தினால் தான். ”
” இருந்தாலும் அப்படிபட்ட எழிலரசி.. கல்யாணம் பண்ணப்போறவர் என்றாலும்.. எங்கள.. வீட்டல உள்ளவங்கள பொறுத்த வரைக்கும்.. உன்னை பார்த்து 2 நாள்.. கொஞ்சம் வெளிய ஆட்களை பொருத்த வரைக்கும் காலையில் பார்த்தவர். அவரிடம் எந்த தயக்கமும் இல்லாம பழகுவது, வெளிப்படையா பேசுவதை பார்த்து.. அவங்களை.. ஏன்?.. உன்னையும் சேர்த்து தப்பா புரிந்துக் கொள்ள.. இரண்டு பேரையும் தப்பா பேசவும் நிறைய வாய்ப்பு இருக்குடா. ”
” நீ உளறி.. அதனால இப்ப நீ உண்மைய சொன்னாலும்.. நீ நடந்துக்விகொள்ளும் விதத்தை பார்த்து.. இதே கேள்விய நாங்க நாளை கேட்க வேண்டும்தான் நினைத்தோம். அதையும் இப்ப கேட்டாச்சு. ”
” அதே மாதிரி எழிலரசி உணர்வுகளை நீ சொன்னத விட.. உன் முலமாக நாங்க அதிலும்.. இன்பாக்கும், அவங்களோட பிரண்ட்டுக்கும் தெரிந்தா நல்லாயிருக்கும் நினைக்கிறேன். அப்பதான் நீ இங்கு இல்லாத நேரத்தில்.. எதுனாலும் மற்றவர்களிடம் இருந்து இருவரால் மட்டும்தான் மறைமுகமாக எழிலரசிக்கு உதவி பண்ணமுடியும். அதுக்காக தான் கேட்பது. “
யோசித்தவன்…” ம்.. நீ சொல்வது சரிதான். என்னோட பிரியம் என்பதை தாண்டி.. நானே எதிர்பார்க்காத எங்களின் திருமணம்.. குடும்ப உறுப்பினர்களின் பார்த்து செய்து வைக்கும் திருமணம் என்று வந்துவிட்டது. அதனால் இரண்டுபோரும் பார்த்த அன்றே சாதாரணமாக பழகுவது பற்றிகுறையோ, தப்பாவோ.. அதுவும் அரசிய பற்றி.. நான் பேச யாரையும் அனுமதிக்க மாட்டேன். அதற்கு நானே காரணமாகவும் இருக்க மாட்டேன். “
பின் புன்னகையுடன் ” எப்படி நிருப்பிக்கனும்?.. “
” அண்ணா.. நீங்க சொல்வதை என்னால நம்பவே முடியல!.. எழில் அன்றைக்கு பிறகு திரும்பி ஸ்கூல்க்கு வந்த பிறகு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லயே.. யாருனு தெரியாம இருக்கலாம்?.. பரவாயில்லை.. ஆனா இந்தமாதிரி நடந்துனு கூட மேடம் என்கிட்ட சொல்ல. அப்புறம் ஒருநாள் இருக்கு இவளுக்கு. ” மற்றவர்களை பார்த்துவிட்டு..
” நான் சொல்வது ஓகேயா?.. சொல்லுங்க. எழிலுக்கு உங்க குரலும்.. உங்களுக்கு மேடம் அப்பவே ஸ்பெஷல்லா பெயர் வைச்சுயிருக்காயில்ல.. அதனால இப்ப எழில் பேர நீங்க கூப்பிடனும்.. அதுக்கு அவ உங்க பேரை சொல்லி என்னவென்று கேட்கனும்?.. மூன்று முறை தான் உங்களுக்கு வாய்ப்பு. இல்லையென்றால் உங்களை நேரா கேட்டது போல… அவளிடமும் நாங்க கேள்வி கேட்போம். ஓகேயா?.. ” என வேந்தனை பார்த்து கூறிவிட்டு.. பின் மற்றவர்களை பார்க்க..
திலகன், வினோத் சரி என்று தலையாட்ட.. இன்பா இதை கண்டிப்பாக செய்தாக வேண்டுமா?.. என்று யோசித்து.. ” இது தேவையா சத்யா?. என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்களாம். எழில் சரியா பேர் சொன்னா சந்தோஷம்.. சொல்லலைனா?.. மாமாக்கு வருத்தம், அதன்பிறகு எழில்ல கேட்டாலும் அவளுக்கும் வருத்தமா இருக்கும். எவ்வளவு ஆச்சரியமான உறவு இது!.. அதை என்ஜாய் பண்ணுறத விட்டு.. ” எனக் கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
மெல்லிய புன்னகையுடன்.. ” விடுங்க இன்பா. சத்யா ஐடியா சூப்பரா!.. இருக்குங்க. பார்த்துக்கலாம். ” வேந்தன் அரசியை பார்த்தான்.. பின் அனைவரையும் பார்த்து..
” என்ன சொல்லிட்டிங்க தானே.. உங்களுக்கு இங்க என்ன பார்வை?.. நீங்க நிருபிக்க சொன்னத கேட்க.. காது மட்டும் போதும்.. முதல்ல கண்ணமுடுங்க. உங்களுக்கு கேட்காது நினைக்க வேண்டாம். நான் இந்த அருமையான வாய்ப்பை.. மிஸ் பண்ணுவனா.. போனில் ரெகார்ட் பண்ணுவேன். நீங்க அதில கூட கேட்டுக்கலாம். இங்க உட்கார்ந்தும் இருக்கலாம்.. இல்ல.. “
திலகன் பொறுமையிழந்து.. “. எங்களுக்கே ஒரு கண்டிசன் போடுவேனு.. நாங்க எதிர்பார்க்கலடா.. போதும்டா. ஆனா..நாங்க இங்க இருப்பதுதான் எழிலுக்கு பாதுகாப்பு. நாங்க கண்ணையே முடிக்கிறோம்.. நீ ஆரம்பி. ” புன்னகையுடன் அவர்கள் நால்வரும் கண்ணை மூட..
வேந்தன் அவர்களை பார்த்தபின்.. தன் அரசியை பார்த்தான்.. அவளின் கைகளை மென்மையாக பற்றியும்.. தலையை தடவிக்கொண்டே.. மனதினுள் ‘ அரசி.. எல்லாம் நம்மள நம்பமாட்டேகிறாங்கடா. நான் உன்னைய வெளிய சத்தம்மாக கூப்பிடனும் அவசியமே இல்லதான்.. மனசுல நான் ஆழ்ந்து கூப்பிட்ட கூட போதும்.. ஆனா நம் இருவருவரின் திருமண இணைப்பை.. கடவுளால் முன்பே நிச்சயக்கப்பட்ட உறவை.. அன்றியிருந்து இன்று வரை மறக்காமல்.. மனதில் ஆழமாக இருக்கும்.. நம் நினைவுகளை நம்ம வாழ்க்கையின் நலனின் மேல் அக்கறை உள்ளவர்களிடம்.. நிருப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்குகோம். நம் விருப்பம்.. அவங்க விருப்பம்.. இதுயெல்லாம் நீ சொல்லும்.. எனக்கே எனக்கான தனு!.. என்ற செல்ல அழைப்பு பெயரில் இருக்கும்மா. நிறைவேற்றிவிடு முயல்குட்டி. ‘
தன் போனை எடுத்து.. ரெகார்ட் பட்டனை அழுத்தினான். அவளின் சிப்பி போன்று மூடியிருக்கும் கண்களை பார்த்துக்கொண்டே.. அவளின் முகம், காதின் அருகில்.. ” அரசிம்மா.. ” கூறிய 15 நொடி கழித்து.. ” அ.. ” என ஆரம்பிக்கும் போதே..
அவனின் மடியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டுயிருந்தவள்.. ” ம்.. சொல்லுங்க தனு.. ”
‘ தன்னவளின் முகத்தின் அருகில்.. தன் அரசி.. தன் பெயரை கூறியதை கேட்டவன்.. அவனின் மகிழ்ச்சியின் எல்லை என்று யாராலும் கூறமுடியா அளவிற்கு.. அவனின் உடல், உயிர், மனசு என்று அவன் சந்தோஷ வானில் பறந்துக் கொண்டுயிருந்தான். தன் மகிழ்ச்சியை வேந்தன்.. எப்போதும் போல் தன் அரசியின் நெற்றியில் தன் ஆழந்த முத்தத்தின் மூலம்.. செலுத்தி முடித்து.. தலையை நிமிர்வதற்கும்.. அனைவரும் அவரவர் கண்களை திறப்பதற்கும் சரியாக இருந்தது. ‘
அவர்களை பார்த்து வேந்தன் தன் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு.. பின் ‘ எப்படி என்று?.. ‘ புருவங்களை உயர்த்தி கேட்டான். அவனின் அருகில் இருந்த இன்பா தன் கைகளை நீட்டிவாழ்த்துக் கூற.. சத்யா புன்னகையுடன் ‘ சூப்பர் அண்ணா!. ‘ என்று கைகளால் சைகை செய்தாலும்.. அவளின் கலங்கிய கண்களோ எழிலை பார்த்தது.. அதில்எழிலையும்.. அவளின் வேந்தனின் மீதான ஆழ்ந்த அன்பை நினைத்து.. அவ்வளவு ஆனந்தம். ‘
‘ மற்ற இருவரும் கூட ஒருவித பிரம்மிப்பில் தான் இருந்தார்கள். அரசி படுத்துயிருப்பதால்.. உட்கார்ந்து இருந்தபடியே புன்னகையுடன் ஆசிர்வாதம் செய்வது போல திலகன் கைகளை உயர்த்தியும்.. வினோத் ‘ சபாஷ்!. ‘ என்பது போல கைகளை காண்பித்தான். இவ்வாறு இவர்களுக்கு வார்த்தை மூலம் பேச தோன்றவில்லை.. அவரவர் ஒருவித இன்பமான மனநிலையில் அந்த தருணத்தை கொண்டாடினார்கள். பிறகு சாதாரணமாக ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்தபடியே.. ஜாலியாக பேசிக் கொண்டுயிருந்தனர். ‘
” தனு.. தனு.. ” என்று அரசி மெதுவாக அழைக்க..
அரசியின் அழைப்பை சிறிதுநேரம் அனுபவித்து.. பின் ” என்ன அரசி?.. “
தன்னவனின் கால்களை தொட்டுணர்ந்து.. ” ம்.. தனு நான் உங்க மடியில் படுத்துயிருக்கனா?.. ”
” ம்.. ஏன்?.. ஏதாவது வேண்டும்மா?.. “
” ம்.. சத்யா பக்கத்தில் இருந்தா?.. அக்காவிடம்.. பாப்பாவ கொண்டு போய் கொடுக்க சொல்லுங்க. “
” ஏன் டா?.. பாப்பா நல்லாதனே தூங்குறா?.. தூக்கினா முழிச்சுக்குவா. இன்னும் கொஞ்சம்நேரம் இரண்டு போரும் தூங்குக.” எனக் கூறும் போதே..
” சத்யா இருக்கால?.. இல்லையா?.. இல்லாட்டி என் போனில் இருந்து அக்காவ கூப்பிட்டு.. பாப்பா தூக்கிட்டு போக வரச்சொல்லுங்க. நான் எழுந்து உட்கார்ந்துக் கொள்கிறேன். “
சொன்னா கேட்க மாட்டா.. ” அதெல்லாம் அவசியம் இல்ல.. சத்யா இங்குதான்.. நீ சொல்வதை கேட்டுதான் இருந்தாங்க. ” சத்யா எழுந்து வந்து குழந்தையை தூக்கிச் செல்ல..
அரசி அதனை உணர்ந்து.. பின் அவள் கண்களை திறக்காமலே.. ” தனு.. வேறு யாராவது இங்கு இருக்காங்களா?.. ”
அரசி கேட்ட பின்.. மற்றவர்களை பார்த்தான்.. இன்பா சற்று தள்ளி போனில் பேச.. மற்ற இருவரும் தங்களின் போனில் ஏதோ பார்த்த படியிருக்க.. உட்காருவதற்கு தானே கேட்கிறாள் என்று நினைத்து.. ” இல்ல அரசி.. ஏன்?.. “
” ம்.. ஒன்னும்மில்ல.. நான் உங்க தோளில் சாயனும்.. உட்கார்ந்துக் கொள்கிறேன். ” என்று கூறி கண்களை முடிய படியே எழுந்து.. அவனின் தோளின் நுனியில் சாய்ந்தவாறு அமர்ந்தாள்.
அவளின் கையை பிடித்துக் கொண்டான்.. ” முயல்குட்டி என்ன இது?.. இப்படி நுனில சாய்ந்து உட்காருவதற்காகவா.. மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்த?. பாருங்க இன்னும் தூக்கம் கூட போகல. ” வேந்தன் கூறிக் கொண்டுயிருக்கும் போது..
” தனு.. பாப்பா பக்கத்தில் படுத்துயிருந்தது.. எனக்கு ஒருமாதிரி இருந்தது. நான் இப்ப இருக்க மனநிலையில்.. உங்க மேல நல்லா சாய்ந்தா நல்லாதான் இருக்கும். ஆனா தனு.. நாம்ம இப்ப ஹாலில் இருக்கோம் யாராவது வந்து நம்மள பார்த்தா கண்ணு வைச்சு விடுவாங்க. அதான். எனக்கு இப்ப தூக்கம் இல்ல. சும்மா தான் கண்ண மூடியிருக்கேன். ” புன்னகையுடன் கூற..
‘ இனிமேதான் வைக்கனுமா என்ன?.. ஏற்கனவே நாலு போரோட கண்ணும் இங்கதான் பார்த்தும் பார்க்காமல் இருக்கு. ‘
” ஆமாம்.. ஆமாம் முயல்குட்டி.. நீ சொல்வது ஏற்றுக் கொள்ளகூடியது தான். சரி.. பாப்பா இங்கு வந்தா.. உன் கூட எப்பவும் படுக்க வைத்துக் கொள்வேன் தான் நீ சொல்லியிருக்க.. அப்படியிருக்கப்ப ஏன்?. இன்னைக்கு ஒரு மாதிரியிருக்கு சொல்லுற?..”
‘ இவன் கூட இதே தொலையா போச்சு. இப்ப மனசில் இருப்பதை சொன்னா.. போனில் பேசியதையும்.. இப்ப சொன்னதையும் வைத்து கேள்வி கேட்பான். இப்ப சொல்லவும் முடியாது.. கேட்ட பிறகு சொல்லாமையும் இருக்க முடியாதே. ‘
மெல்லிய குரலில்.. ” அதுவந்து தனு.. பாப்பாக்கு இன்னும் தாய்ப்பால் கொடுக்கப்படுது. இப்ப என்கூட படுத்துயிருக்கப்ப தூக்கத்தில்.. என்னை அக்கானு நினைச்சு.. என்னிடம் எதிர்ப்பார்த்தா.. இது எப்பவும் நடப்பதுதான். அந்த மாதிரி நேரத்தில் பாட்டில்பால் பக்கத்தில் இருந்தா.. அதை நான் கொடுப்பேன்.. இல்ல திருப்பி படுக்க வைப்பேன்.. முடியாத பட்சத்தில் அக்காவ கூப்பிடுவேன். ”
” பாப்பா என்னிடம் எதிர்பார்க்கப்ப.. எனக்கு எதுவும் தோனாது. இப்ப.. இப்ப.. எனக்கு அந்தநேரத்தில்.. ” அமைதியாக இருந்தாள்.
வேந்தனுக்கு.. அரசி சொல்ல.. சொல்லவும்.. அவள் முகம் செவ்வானமாய் சிவந்துயிருப்பதையும் பார்க்க.. ஏதோ புரிவது போல் இருந்தது. பின் மென் புன்னகையுடன்.. ” என்ன முயல்குட்டி?.. அந்த நேரத்தில்.. ” என கள்ளச்சிரிப்புடனே கேட்க..
தன்னவன் சிரிப்புடனே கேட்பதில் இருந்தே.. அவன் தான் நினைத்தை ஓரளவிற்கு கணித்துவிட்டான் என்று புரிந்தது.. ” அது.. அதுவந்து தனு.. நமக்கும் பாப்பா மாதிரியே.. ” எனகூறியவுடனே..
யாருக்கும் தெரியாதபடி அவளை அணைத்து விடுவித்து.. பிறகு கைகளை பற்றியபடியே.. புன்னகையுடனும்.. ” எனக்கும் நீ நினைத்து போலதான்.. நீ என் தோளில்.. பாப்பா உன் மடியில படுத்துயிருந்தப்ப.. நீ, நான், என் முயல்குட்டி மாதிரியே பெண் குழந்தையோட என் மடியில் படுத்துயிருந்தா எப்படியிருக்கும்?. என நினைத்தேன்.. அதிலும் டுவின்ஸ் பேபினா!.. இன்னும் சூப்பரா!. இருக்கும் இல்ல.. ” ஆசையுடன் கூற..
‘ அவன் கூறியதை கேட்டதும்.. என் தனுவிற்கு என்னை போலவே பெண் குழந்தை.. அதுவும் டுவின்ஸ்!.. நினைக்கையில் இனிமையாக இருந்தது. ‘
இருந்தாலும் புன்னகையுடன்.. ” இதெல்லாம் ரொம்ப ஒவர் தனு.. ” என்று கூறியதும்.. கண்களை முடியிருந்தவளின் காதில்..
சிலரின் வெடிப்பு சிரிப்புடன் ” ஆமாம் ஆமாம்.. உன்னை மாதிரியே இரண்டு பேபிஸ்.. கொஞ்சம் ஓவர்தான். ” சத்யா கூற..
வேந்தன் வேறு யாரும் இல்லை என்று கூறியதை மட்டும் நினைத்துக் கொண்டுயிருந்தாளும்.. நாங்கள் மட்டுமே இருப்பதால் சற்று தாங்கள் பேசியது அவளின் காதிற்கு கேட்டுயிருக்கும்.. சத்யா தானே என்று.. “ ஹேய் சத்யா!.. எங்க குழந்தை என்னை மாதிரிதான் இருந்தா உனக்கு என்னடி?.. ” எனக் கூறிய படியே கண்திறக்க..
‘ நீண்ட நேரம் கண்களை மூடியிருந்து.. பின் சட்டென்று கண்களை திறந்தாலும்.. வேந்தனுடன் பேசிய உணர்வின் தாக்கத்தில் இருந்தாலும்.. அரசிக்கு கண்களை திறந்தும் நேராக சத்யா தான் தெரிந்தால். ‘
‘ ஆனால் அரசி இவர்கள் எல்லாம்.. அங்கு இருப்பார்கள் என கனவிலும் நினைத்துயிருக்க மாட்டாள். ‘