எழிலரசியும், வேந்தனும்.. அவர்களின் உறவினர்களுடன் வீட்டுமாடி.. ஹாலில் பேசிக்கொண்டுயிருந்த போது..
எழிலின் போனில் மெசேஜ்.. ” எழில்.. உறுதி நிகழ்ச்சிக்கான சேலை.. வேந்தன் வீட்டில் இருந்து கொடுத்து விட்டுயிருக்காங்க. சேலையை 4.30மணிக்கு முன்.. நீ கண்டிப்பாக வாங்கிக் கொள்ள வேண்டுமாம்.. அதனால் நீ பூஜை அறைக்கு வந்து பாட்டியிடம் வாங்கிக்கொள்.. சீக்கிரம் கீழே வா. “
இதனை பார்த்து.. என்ன செய்ய என யோசித்துக் கொண்டுயிருந்தவளிடம் வேந்தன் ” என்னயோசனை?.. ” கேட்க..
அவள் போனை வேந்தனிடம் கொடுக்க.. வாங்கி படித்து பார்த்தவன்.. ” இதில் என்னயிருக்கு?.. போய்யிட்டு வா. இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிற?.. “
” தனு நான் இப்ப எப்படி போக?.. என்னை?.. ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?. அக்காட்ட என்னை அடிவாங்கி கொடுக்காம விடமாட்டாங்க போல. “
‘ என்ன சொல்வாங்களா?.. கீழ போயிட்டு வருவதற்கு என்ன?.. எப்படி போகனு கேட்குறா?.. மீண்டும் அவளை பார்க்க.. அவனிற்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை!.. பின் அவளின் உடையை பார்க்க.. அப்போதுதான் புரிந்தது.. ஓ.. இதுதான் பிரச்சனையா முயலுக்கு?.. இப்போது அவளின் யோசனை.. அவனுக்கு இடம்மாறியது. எப்படி போக என்று?.. ‘ இருவரும் யோசித்துக்கொண்டுயிருக்க..
” எழில்.. எழில் கீழ வரச்சொல்லி உன்னை கூப்பிடுறாங்க.. நீ போனவும் எடுக்கல?.. போகமா என்ன பண்ணுற?.. போ.. சீக்கிரம் போ. ” என அவள் இருவர் முன்னும் வந்து கூறினாள் இளமதி.
இளமதி அவர்களிடம் உட்கார்ந்த இடத்திற்கே வந்தே கூறியதால்.. என்ன பதில் சொல்ல என்று வேந்தனை பார்க்க.. அவனுக்கும் அந்த நேரத்தில் என்ன சொல்ல?.. அரசியின் கூச்சமும் சரிதான்.. கீழே கூப்பிட்ட காரணமும் முக்கியமானது.. என்ன கூறிவது?.. பின் அரசியே..
” இல்ல அக்கா நான் கொஞ்சம் நேரம் கழித்து.. போய் எடுத்துக் கொள்கிறேன் க்கா. இப்ப எழுந்துக் கொள்ள முடியல?.. கால் மரத்துப்போச்சு.. ”
” அதனால என்ன?.. 4.30மணிக்கு முன் வாங்கனுமாம். ” சத்யாவை பார்த்து.. ” இங்க வா சத்யா.. நீயும், எழிலும் கீழ கொஞ்சம் போயிட்டு வாங்க. ”
சட்டென்று கூறியதால்.. அவள் எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லை.. ” சரி அக்கா ” என்று அவள் எழும்போது..
” சத்யா நீங்க உட்காருங்க.. ” இளமதியை பார்த்து.. ” இளமதி நான் போய் வாங்கியிட்டு வரேன்.. ” என வேந்தன் எழுந்துவிட்டான்.
“ நீங்க எதுக்கு வேந்தன் ?.. எழில் போய் வாங்கட்டும்.. அவ வாங்கினாதான் நல்லாயிருக்கும். நீங்க வாங்கினிங்கனு தெரிந்தா?.. ஏதாவது தவறா நினைப்பாங்க வேந்தன். “
” அரசி தான் முடியலனு சொல்லுறா?.. சொன்ன நேரத்திற்கு முன் வாங்கனும்.. யார் வாங்கினா என்ன?.. நான் போயிட்டு வரேன். ” என நகரும் போது..
‘ யோகா.. இவர்களின் பேச்சையும் கவனித்தாள்.. கீழே உட்கார்ந்து கள்ளத்தனம் செய்ததை போல.. திருதிரு என முழித்துக் கொண்டுயிருந்த எழிலையும் கவனித்தாள்.’
அவர்களின் அருகில் வந்தவள்.. ” வேந்தா.. எழில் வாங்கினா நல்லாயிருக்கும் என்று.. மதி சொல்லுறாங்க தானே.. வேண்டுமானால் நீயே எழிலை கூப்பிட்டு போய்.. இரண்டுபேருமா வாங்கிவாங்க. அது இன்னும் நல்லாயிருக்கும்.. சரி எழில் எழுந்திரி.. நடக்க முடியலையான வேந்தன பிடிச்சுக்கோ. ”
‘ யோகா சொன்னவுடன்.. அரசி.. என்ன செய்ய?. என வேந்தனை பார்க்க.. இனி ஒன்னும் பண்ணமுடியாது முயல்குட்டி.. என அவன் கையை அவளின் முன் நீட்டினான். ‘
‘ அவளோ.. தூக்கி எழுந்தவுடன்.. சத்யா மட்டும் இருக்கிறாள் என்று தனு.. கூறியதும் உடை மாற்றி வந்துயிருக்க வேண்டும்.. இனிமே யோசிச்சு என்ன பண்ண?.. விநாயகா!.. நீட்டிய தன்னவனின் கைகளை பிடித்து..ரோஜா, ஊதா நிற பாவாடை தாவணியில் எழுந்து நின்றாள். இவ்வளவு நேரம் அவள் போர்வையை போர்த்தியிருந்தாள்.. அவளை பார்க்க சேலை அணிந்துயிருப்பது போல்தான் இருந்தது. அதனால் அவள் அணிந்த உடையை யாரும் கவனிக்கவில்லை. ‘
தாவணி உடையில் எழிலை பார்த்த இளமதி.. எழிலை முறைத்துக் கொண்டுயிருக்க.. அவள் வேந்தனின் பின்னால் நின்றுக் கொண்டாள்.. யோகாவிற்கோ.. ‘ நம்ம தம்பி இப்படி மெதுவா பேசும் போதே.. ஏதோ இருக்குனு நினைத்தேன்!.. ‘ மனதில் புன்னகை புரிந்தாள்.
” மதி.. நீ எழிலை பார்த்து ரசித்தது போதும்.. அவங்க இரண்டு பேரும் சேர்ந்தே போய் வாங்கிட்டு வரட்டும். “
” சரிங்க அண்ணி.. ” கூறி.. வேந்தனிடம் திரும்பி.. ” என்ன இருந்தாலும் வேந்தன்.. நீங்க எழிலுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணக்கூடாது. சரி போங்க ”
யோகாவிடம் திரும்பி ” நீங்க தப்பா எடுத்துக்காதிங்க அண்ணி.. எப்போதும் போடுற ஞாபகத்தில் போட்டுயிருப்பா. “
‘ யோகா எழிலை பார்க்க.. அவள் ‘ ஆம்.. ‘ என்பது போல வேகமாக தலையாட்ட.. தன் அரசியை பார்த்துக் கொண்டுயிருந்த வேந்தனுக்கு சிரிப்பு வர.. உதட்டை கடித்து சிரிப்பை அடக்க முயற்சிக்க.. அரசி அவனை முறைக்க.. இருவரையும்.. பார்த்த யோகாவும், இளமதியும் தான் யார் இதில் கேடி?. என நினைத்தார்கள்!. ‘
” அதெல்லாம் ஒன்னும் இல்ல மதி.. அவளை போய் ஏன் நான் தப்பா நினைக்க போறேன்?. கல்யாணம் வரைக்கு தான் பீரியா போடமுடியும். நான் இப்ப இரண்டு நாளைக்கு முன்னாடி இந்த உடையில் பார்த்தத விட இப்ப இந்த கலர் தாவணியும் நல்லா இருக்கு. தாவணியோட எழில் லட்சணமா.. அழகா இருக்கா மதி. அப்படிதானே வேந்தா?.. ” என வாங்கி கொடுத்தவனிடமே கூற..
‘ இரண்டு நாளைக்கு முன்ன பார்த்தாங்களா?.. இது என்ன?. என்பது போல இளமதி.. எழிலை பார்க்க.. அவள் தன் அக்காவை பார்க்கலையாமா!.. என்பது போல யோகாவை பார்த்த படி இருந்தாள் எழிலரசி.
தன் அக்காவின் கேள்விக்கு.. வேந்தன்.. ” ம்.. ஆமாம் அக்கா.. செம்ம அழகாக தான் இருக்கா. ” என் முயல்குட்டி.. மனதில் நினைத்து.. நல்லபிள்ளை போல பதில் கூற..
அவனின் அரசியோ உன்னோட முடியலடா.. கடுப்புடன் ” போலாமா.. ” என அழுத்திக் கூற.. வேந்தன் சிரிப்புடனே அவளுடன் செல்ல..
கடந்து சென்ற அவர்களை பார்த்த இருவரின் அக்காக்களும், நண்பர்களும் தான்.. ‘ உறுதி நிகழ்ச்சி முன்பே இவங்களோட நடவடிக்கைய தாங்க முடியல.. இன்னும் கல்யாணம் முடியவதற்கு உள்ள என்ன?.. என்ன?.. சேட்டையெல்லாம் செய்து நம்மள ஒருவழி பண்ண போறாங்களோ தெரியல?.. இதுக இரண்டையும் சமாளிக்கவும்.. இவர்களால் மற்றவர்களை சமாளிக்கவும்.. எங்களுக்கு தனி தெம்ப கொடு கடவுளே!.. ‘ என வேண்டியபடியே அவர்களைபார்த்திருந்தனர்.
” முயல்குட்டி.. அக்கா சொன்னது போல செம்ம அழகா இருக்க.. நில்லு அரசிம்மா.. ”
‘ காலையில் வேந்தன்.. தன் அரசியை அள்ளித் தூக்கிய அதே இடத்தில் வேந்தன்.. நில் எனக்கூறி.. அவனின் சீர்ராக வாங்கிக் கொடுத்த.. தாவணி உடையில் அவர்கள் இருவருமாக புகைபடம் எடுக்க முடியவில்லை என்ற அவனின் ஏக்கத்தை தீர்க்க.. அரசியை ஒருபடி மேலே நிற்க வைத்தும்.. வேந்தன்அடுத்த படியில் நின்று.. அவளின் தோள் சற்று உயரத்தில் இருந்தால்.. வேந்தன் மென்மையாக அவளின் இடுப்பை பற்றினான். ‘
‘ பற்றிய நொடி.. இருவரும் ஒருநொடி அதிர்ந்தனர்.. அவனின் மென்மையான கையணைப்பின் கைவிரலானது.. அவளின் தாவணி மூடாத வெற்றிடையில் மென்மையாக பதிந்தது.. அவள் உடையணிந்து வந்தபோது.. இடுப்பு பகுதி நன்றாக முடியிருந்து.. தூக்கத்தில் எழுந்ததில் இருந்து.. இறக்கிய உடையை சற்று கவனிக்காமல்.. அவனுடன் வந்துவிட்டாள்.. அவனும் அரசியை கவனிக்கவில்லை. ‘
‘ இருவருக்குமே உடலில் புதுமாற்றம் தோன்றி.. உடல்சிலிர்த்தது.. உணர்ச்சி பூக்கள் அவர்களின் உடலினுள் மலர்ந்தது. இருவருமே அந்த உணர்வில் இருந்து விடுபட எண்ணம் இல்லாமலும்.. யாரும் வருவதற்கு முன்.. புகைபடம் எடுக்க வேண்டும் என நினைத்து.. அவர்கள் தங்களின் உணர்வுகளால் சிவந்துயிருந்த வதனத்துடனே புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர். அவனின் விரல்களோ.. அவளின் இடையில் கடம்இசை மீட்டிய பின்தான்.. கையை எடுத்தான். ‘
‘ இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை. நேராக பூஜை அறைக்கு வர.. அங்கு அரசியின் பாட்டி ரெங்கநாயகி, அம்மாச்சி விசாலாட்சி இருந்தனர். எழில் மட்டும் தான் வருவாள் என நினைத்துயிருக்க.. வேந்தன் வந்ததையும்.. அதுவும் அவர்களின் முகத்தில் இருந்து சற்றே சற்று குறைந்துயிருந்த இருவரின் சிவந்த முகத்தையும் பார்த்து.. எழிலின் பாட்டிற்கு அன்று அவன் வாங்கி கொடுத்த ஸ்விட்டும், பூவும் நினைவிற்கு வந்தது.. ( எப்படி மறப்பாங்க.. ஒருவாய் கூட அவருக்கு கொடுக்காமல் பேத்தி சாப்பிட்டாளே…) ‘
” என்ன பேரா?.. எல்லாம் நல்லபடியா நடந்ததா?.. என் பேத்தி.. அதான் உங்க அரசிம்மா.. உங்களிடம் எப்படி நடந்துக் கொண்டா?.. ” என தன் பேத்தியை ஒரு பார்வை செலுத்தி.. வேந்தனிடம் கேட்க..
‘ வேறு மனநிலையில் இருந்தவர்கள்.. பாட்டியின் கேள்வியில் முதலில் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க.. பின் வேந்தன் அவரை பார்த்து.. அவரின் கேள்வியை திருப்ப யோசிக்க.. நீங்கதானே வாங்கி கொடுத்த பூ, ஸ்விட்டையும் பார்த்து என்னை அரசியிடம் கிண்டல் செய்தது.. என்று அவனிற்கு விடைகிடைத்தது. ‘
புன்னகையுடன்.. ” ம்.. பாட்டி.. உங்க பேத்திய பற்றி உங்களுக்கு தெரியாத?.. பரவாயில்ல பாட்டி. ”
கண்டுபிடித்துவிட்டானா?.. ” ம்.. என் பேத்திய பற்றி தெரியும்.. ஆனா உங்க அரசிம்மா பற்றி தெரியாதே?.. அதான் கேட்டேன்.. ”
‘ எழிலுக்கு அவர்களின் உரையாடல் பொருள் என்னவென்று?.. இன்னும் புரியவில்லை.’
” என்ன நாயகி பாட்டி!.. இன்னும் உன் கண்ணுக்கு என்னைய தெரியலையா?.. உன் புது பேரனோட சேர்ந்து.. என்ன?.. எனக்கு புரியாத மாதிரி பேசிக்கிட்டுயிருக்கிங்க?.. ”
இவளை பார்த்து மூவரும் சிரிக்க.. ” பேரா.. உங்க அரசிம்மா கூட வாழ்ந்தா!.. உங்க நிலைமை கஷ்டம்தான்!.. போல.. ம்.. இப்ப ஒன்னும் பண்ண முடியாது வேற.. இவள கல்யாணம் பண்ண சம்மதம் வேற சொல்லிவிட்டிங்க!.. சமாளிச்சுக்கோங்க. வாங்க சாமி முன்னாடி நின்று தட்டை வாங்கிக்கோங்க. ” என்று வேந்தனிற்கு ஆறுதல் போல சொல்லி.. எழிலை கிண்டல் செய்தார்.
‘ அரசி.. இருவரையும் கண்ணால் எரிக்கும் அளவிற்கு பார்த்துவிட்டு.. ஒன்றும் கூறாமல்.. அருகில் இருந்த அறையினுள் நுழைந்தாள். ‘
‘ தங்களின் செல்ல பேத்தியின் மீது இவன் அளவு கடந்த பாசம் வைத்துள்ளான் எனவும்.. பேத்தியை இவனை தவிர வேறு யாரும் அவளை இனிமேல் பார்த்துக் கொள்ளவும் முடியாது.. பார்த்துக் கொள்ளவும் விடமாட்டான் என்றும்.. காலையில் அவர்கள் அவனை பார்த்து முதல் இப்போது வரை எழிலரசியிடம் நடந்துக் கொள்ளும் முறையில் இருந்தே இவற்றை அறிந்தனர் நன்கு தம்பதியார் வாழ்ந்துக் கொண்டுயிருக்கும் இருவரும் அறைக்குள் போகும் எழிலரசியை உதட்டில் மகிழ்ச்சி புன்னகையுடன், ஆசையான பார்வையுடனும் பார்த்திருந்த வேந்தனை பார்த்து ஆனந்தம் கொண்டனர். ‘
சிறிது நேரத்தில் வெளிவந்து.. உட்கார்ந்து இருந்தவர்களிடம் நெருங்கி வந்த எழிலரசியை கவனித்தான். கவனித்த அவன் பார்வை கண்டுக்கொண்டாள் அவனின் அரசி. ‘ என்ன பார்வை?.. ‘ என குறும்பாக புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க.. அவன் தன் தொடையின் மீது வைத்துயிருந்த இடதுகையை அவளிடம் காண்பித்து பின் தலையை சரி செய்வது போல செய்துவிட்டு பின் புன்னகையுடன் எழுந்தான். இருவரும் பாட்டி சொன்ன இடத்தில் நின்றனர்.
‘ கடவுளின் முன் இரு தட்டுகள்.. வேந்தனிற்கு ஒன்றும், எழிலரசி ஒன்றும் இருந்தது. பிறகு வேந்தனுக்கு கொடுக்கலாம் என்று இருந்தார்கள். இருவரும் சேர்ந்தே வரவும்.. இரண்டையும் ஒன்றாகி இருந்தது. அந்த தட்டை எடுத்து எழிலரசியின் அம்மாச்சி கொடுக்க.. இருவரும் தங்களின் திருமண ஆரம்பித்திற்கான முதல் உடை!.. என்ற மகிழ்ச்சியை முகத்தில் காண்பித்தும்.. புன்னகை புரிந்தும்.. தட்டை இருவரும் சேர்ந்து கை பிடித்து வாங்கிக் கொண்டனர். ‘
‘ அதில் வேந்தன் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்ட இருவருக்கும்மான உடைகள் இருந்தது. இதை காலையில் நிகழ்ச்சி நடந்துயிருந்தால்.. சபையில் கொடுத்து.. உடை மாற்றி வரச் சொல்லியிருப்பார்கள். மாலையில் நடைபெறுவதால்.. அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும்.. எழிலரசி நிதானமாகவும் உடை அணிந்து வரலாம் என இப்போதே கொடுக்கப்பட்டது. ‘
பின் நால்வரும் அங்கு இருந்த ஷோபாவில் அமர.. பாட்டியின் அருகில் உட்கார்ந்த எழிலரசி.. ” பாட்டி ரொம்ப ஒவரா பேசிட்டல்ல பாட்டி.. தனியா என்னிடம் மாட்டிவ அப்ப இருக்கு உனக்கு. அப்ப உன் புது போரனாலும்.. உன்னை காப்பாற்ற முடியாது.. பார்த்துக்கோ. ” என அவரின் காதில் மெதுவாக கூற..
அவரோ சத்தமாக.. ” போடி முயல்குட்டி.. உன்னைய மாதிரி நிறைய போற பார்த்துயிருக்கேன்.. நீயெல்லாம் எனக்கு சாதாரணம்.. ” என்று அவளிடம் கூறி..
” பேரா இவ ரொம்ப முயல்குட்டி மாதிரி துள்ளுவா.. எப்படி அடக்குவது என்று நான் சொல்லிதரேன். ”
” ம்.. சரி பாட்டி.. எனக்கும் இந்த முயல்குட்டிய அடக்க கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு பாட்டி.. அது எப்படினு?.. சொல்லித்தாங்க. ” என முயல்குட்டியில்.. அழுத்ததைக்கூட்டி.. புன்னகையுடன்கூற..
” ம்.. சரி பேரா. நீ எனக்கு தனியா அப்ப அப்ப போன் பண்ணு.. அப்ப சொல்லுறேன். நீங்க இப்பமாடிக்கு போங்க.. கொஞ்ச நேரத்தில் டீயும்.. சாப்பிட ஏதாவது கொண்டு வருவாங்க.. சாப்பிட்டு.. நீங்க கிளம்ப ஆரம்பித்தா நேரம் சரியாக இருக்கும். “
” ம்.. சரி. கண்டிப்பா போன் செய்து தெரிந்துக் கொள்கிறேன்.. பாட்டி. போகலாமா அரசி?.. “
‘ இவ்வளவு நேரமும்.. இருவரும் அவளை நடுவில் வைத்தே பேச.. இருவரின் பேச்சை இதற்கு மேல் கேட்ட முடியாமல் முதலில் எழிலரசி எழுந்துவிட.. எழுந்த பிறகு தான்.. அவன் முன்பு செய்த செயல்கள் எல்லாம் எதை உணர்த்தினான்.. என்பது ஞாபகம் வந்து.. இவனுடன் இப்போது கூட செல்ல வேண்டும்மா?.. ஆனா போகவில்லை என்றாலும்.. இந்த பாட்டிய சமாளிக்க முடியாது வேற.. அதுக்கு இவனை சமாளித்து விடலாம். ‘
பின் வேந்தனும்.. எழிலும் ‘ பார்க்கலாம் பாட்டி.. ‘ என்னும் விதமாக இருவரையும் புன்னகைத்துவிட்டு.. வேந்தன் இருவரின் உடையினை தனித்தனியாக வைத்துயிருந்த கவரை எடுத்துக்கொண்டு.. மாடியை நோக்கி செல்ல..
புன்னகையுடன்.. ” என்ன முயல்குட்டி என்னை சமாளித்து விடுவாயா?.. ” எழுந்த பின் அவளின் முகத்தை கவனித்தவன் கேட்ட படியே நடக்க.
” ம்.. ம்.. ” என்று மட்டும் கூறி.. மனதினுள் ‘ விநாயகா.. ‘ என வேண்டியபடியே அவனுடன் செல்ல..
இருவரும் அந்த படிக்கட்டின் அவர்களின் பகுதிக்கு வந்தவுடன்.. வேந்தன் நின்று தன்னவளின் கையை பிடித்து நிறுத்தி.. ” முயல்குட்டி.. நமக்கு இந்த இடம் ரொம்ப ஸ்பெஷலான!.. இடம் டா. நடந்த இரண்டு நிகழ்வு மாதிரியே.. எதார்த்தமா நடந்தாதான்.. இப்போதைக்கு நமக்கு அழகானது.. நல்லதும் கூட. “
மாடி படியின் மேலே யாராவது நிற்கிறார்களா?.. என்று பார்த்துவிட்டு.. மென் முத்தம் நெற்றியில் கொடுத்துவிட்டு.. ” அதனால முயல்குட்டி.. நாம்ம நடந்த நிகழ்வ மட்டும் சந்தோஷமா நினைந்துக் கொண்டே மாடிக்கு போகலாம் மா?.. “
அவளும் அவன் கன்னத்தில் மென்முத்தம் பதிலுக்கு கொடுத்து.. ” நீ!. மட்டும் தான் எப்பவும் கொடுப்பியா?.. போடா.. ” புன்னகையுடன் கூறிவிட்டு.. அவனை கடத்து அவள் முன்னே ஓட..
தன்னவளின் முத்தத்தை அனுபவித்தபடி.. ‘ போடாவா!.. ம். அரசிம்மா!.. நீ இப்ப இந்த இடத்தை ஸ்பெஷ்சல் ஆகிட்டு.. இப்ப முயல்குட்டி மாதிரி துள்ளி ஒடிட்டல!.. போடானு சொன்னதுக்கு நீ பதில் சொல்லியாகனும் ‘ என புன்னகையுடன் நினைத்தபடியே மேலே ஏறி அவன் ஹாலில் நிற்கவும்.. அவனின் நெஞ்சின் மீது.. பின்புறமாக மோதி நின்றாள் அவனின் அரசி.
‘ யாரால் மகிழ்ச்சியுடன் வந்தானோ.. தன்னவளே தன் மீது சட்டென்று பின்புறமாக மோதி நிற்கவும்.. ஒரு நொடி தடுமாறி நின்றான். பின் அவன் தன் முன்னால் இருப்பவர்களை பார்க்க.. அவர்கள் தன்னை ஆராய்ச்சி பார்வையோடு பார்ப்பதாக தெரிந்தது. ஏன் இப்படி பார்க்கிறார்கள்?.. ‘
” டேய் வேந்தா நேற்று வாங்கி.. இன்னைக்கே கொடுப்பனு நினைக்கல டா.. பாவாடை தாவணிய துணியா பார்த்தவிட இப்ப எழில் தங்கச்சி.. அதை போட்டு பார்க்க.. நல்லாயிருக்கு டா. ” கமலேஷ் கூற..
‘ அரசியிடம் இதே போல் கேட்டுள்ளான்.. அதனால் தான் தன்னவள் தன் மீது மோதி நின்றதும்.. அனைவரின் ஆராய்ச்சி பார்வையும் ஏன்?.. என்று. கமலேஷ் பேச்சை கேட்டு புரிந்தது. ‘
‘ வேந்தன் நினைத்து போலதான் நடந்தது. அரசி புன்னகையுடன் மேலே வந்து நிற்கவும்.. அவளின் பக்கத்தில் கமலேஷ் வந்து நின்றான்.. வந்தவன் அரசியை தாவணி உடையில் பார்க்க.. பார்த்ததும் தெரிந்தது.. உடையை வைத்து தாங்கள் நீண்ட நேரம் பேசியதால் வேந்தன் வாங்கியது என்று.. அவன் நன்றாக ஞாபகம் வைத்திருந்தான். ‘
” ஹாய் எழில் தங்கச்சி.. வேந்தன் வாங்கி கொடுத்த இந்த பாவாடை தாவணி.. உங்களுக்கு சூப்பரா!. நல்லாயிருக்கு. நீங்க என்னிடம் கேட்டிங்க. அவன் தான் என்னைய தவிர யாரையும் வாங்கி கொடுக்க விட மாட்டேனு சொல்லி.. அவனே 3செட் வாங்கினான். நீங்க என்னிடம் கேட்டத.. என்னால வாங்கி கொடுக்க முடியல. ”
‘ கமலேஷ் தலைவலி என்று ஓய்வு எடுத்துவிட்டு வந்தவன். முதலில் வேந்தன் வாங்கிய உடையை அணிந்திருந்த எழிலரசியை தான். எழிலரசி அனைவரும் இருக்கும்.. ஹாலில் அவள் நிற்கவும்.. அனைவருக்கும் வேந்தன் வாங்கிக் கொடுத்துயிருப்பது என்று தெரியும் என்று.. நினைத்து கூற.. அவனிற்கு தெரியாதே?.. யாருக்கும் தெரியாது?.. என்பது. அவன் கேட்டு வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற வருத்ததில் அவன் தன் ஏன் முடியவில்லை?.. என விளக்கி கூறி.. வேந்தன் ரகசியம் காக்க நினைத்தை.. அனைவர் முன்னும் போட்டு உடைத்தான். ‘
‘ இதனை அங்கு இருந்த அனைவரும் கேட்டுவிட்டனர். வேந்தனும், எழிலரசியும் கீழே சென்றபிறகு.. யோகா வெள்ளியன்று பார்த்ததை.. இளமதியிடம் சந்தோஷமாக பகிர்ந்து விட்டு.. பின் சிற்றுண்டி சாப்பிட்டு கிளம்ப சரியாக இருக்கும் என இருவரும் உறங்கிய அனைவரையும் எழுப்பவும்.. அவர்கள் அனைவரும் அப்போது தான் வந்து உட்கார.. உட்கார்ந்தவர்களும்.. ஏற்கனவே அமர்ந்திருந்தவர்களும் பார்த்தது.. ‘
‘ தன்னவனிடம் முத்தம் வாங்கியும்.. அவனின் பேச்சை கேட்டு.. தானாகவே தன்னவனுக்கு முத்தம் கொடுத்த மகிழ்ச்சியில்.. துள்ளுடன் பாவாடை தாவணியிலும்.. புன்னகை முகமாக வேந்தனின் அரசியாக வந்து நின்றவளை தான். ‘
‘ முதலில்.. அவர்கள் அனைவரும் எழிலரசி பார்த்து அழகாக இருக்கிறாள்!.. என்று தான் நினைத்தார்கள். ஆண்களுக்கும் ஒன்றும் தோன்றவில்லை.. இப்போது பட்டு முற்கொண்டு.. அனைத்துவித சேலையிலும் பாவாடை தாவணி மாடலில் தன் மனைவிகள் போட்டு பார்த்திருப்பதால்.. கமலேஷ் போன்று நன்றாக இருக்கிறாள் என்று மட்டும் தான் நினைத்தார்கள். ‘
‘ ஆனால் அடுத்த நிமிடத்தில் கமலேஷ் அரசியிடம் கூறியதை கேட்டுதான் புரியாமல் நின்றனர். வேந்தன் வாங்கியது.. அதுவும் நேற்று வாங்கி.. இன்று கொடுத்து.. அதையும் இப்பவே எழிலரசி அணியச் சொல்லியிருக்கான். அப்போது தான் வேந்தனும் புன்னகையுடன் வந்து நிற்க.. கமலேஷ் கேட்க கேள்வியில் என்ன கூறுவது?.. என்று தெரியாமல் ஒருஅடி பின்னால் வைக்க.. அவள் வேந்தனின் மீது மோதி நிற்கவும் சரியாக இருந்தது. ‘
‘ வருங்கால மனைவியை பார்த்த அடுத்தநாளே!.. அவளிற்கு தாவணி உடை வாங்கிக் கொடுத்துயிருப்பது.. அதை எவ்வித தயக்கம், கூச்சம் இல்லாமல் எழிலரசி அணிந்துயிருப்பது.. என்பதை நால்வரை தவிர. மற்றவர்கள் அனைவரும் இருவரையும் புரிந்துக் கொள்ள முடியாமல் பார்த்தார்கள். ‘
வேந்தன்.. தன்னிடம் கேட்ட கமலேஷையும்.. அவனின் நண்பர்களை பார்க்க.. வேந்தனோடு சேர்த்து.. அவர்களும் இவனை என்ன பண்ணுவது?.. என்று. கமலேஷைதான் பார்த்திருந்தார்கள். அப்போது தான் தன் மீது சாய்ந்துயிருந்த தன்னவளின் உடலில் சிறு நடுக்கம் தோன்றுவது போல இருந்தது. ‘ சாரி முயல்குட்டி.. துள்ளி ஒடிவந்தவள.. கமலேஷ் கேட்ட கேள்வியில் இப்படி பயப்பட வைத்துவிட்டேன். ‘
வேந்தன் அவளின் கையை பிடித்து.. தனது வலதுபக்கம் நிறுத்தி.. ” ஏன் முயல்குட்டி நடுக்குற?.. இப்ப என்னச்சு?.. ” மெதுவாக கேட்க..
” இல்ல.. இல்ல தனு எல்லாரும் என்னை மேலும், கீழும் பார்த்தாங்களா!.. அது எனக்கு ஒருமாதிரியிருந்தது. ” என கூறும் போதே கண்கள் கலங்க ஆரம்பித்தது.
அவளின் பதில்.. அதனால் தோன்றிய கலங்கிய கண்களை பார்த்தும்.. ‘ அரசியின் வீட்டினர் உடன் பழகிய வரையும்.. இதனை வருட வேலை செய்யும் இடத்தில் பல ஊர்.. சில நாட்டு மக்களிடம் பழகிய அனுபத்திலும், தன் குடும்ப உறுப்பினர் பற்றி தெரிந்தாலும்.. தவறான கண்ணோடத்தில் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் என் அரசிம்மாக்கு அவள் இதுவரை வெளி மனிதர்களிடம் பழகிய அனுபவம்.. இருந்தாலும் கூட.. இந்த சூழ்நிலை புதிது.. அதனால பயந்துயிருப்பாள் என் செல்லலூசு முயல்குட்டி!.. ‘
புன்னகையுடன்.. ” ஓய் முயல்குட்டி.. அது அவங்க எல்லோரும்.. என்னோட முயல்குட்டி இந்த உடையில் ரொம்ப அழகாக இருக்கிங்கனு!.. நினைத்து உன்னைய அப்படி பார்த்துயிருப்பாங்க டா. ம்.. இது ரொம்ப தப்பு அரசிம்மா.. ஒருத்தவங்க பார்க்கும் பார்வை எப்படினு?. எதுக்குக்குனு ?.. தெரியாதா அவளுக்கு.. நீங்க இன்னும் குட்டி அரசிம்மாவ இருக்கிங்க.!.. நான் தான் சொல்லியிருக்கேன் தானே.. எதுக்கும் பயப்படக்கூடாது.. யாரும் இல்லையென்றாலும் தனியா பேஸ் பண்ணவேண்டும் என்று. ம்.. ”
அரசி அவன் கேட்கும்.. கூறும் அறிவுரையை கேட்கும் மனநிலையில் அப்போது இல்லை.. அதனால் மற்றதை விட்டுவட்டு.. ” நிஜம்மா தனு!.. நீங்க சொன்ன மாதிரி.. நினைச்சுதான் என்னைய பார்த்தாங்களா?.. ”
‘ மற்றவை எதுவும் இவளுக்கு கேட்கவே இல்ல போல. ‘ சிரிப்புடனே.. ” ஆமாம் ” என்று கூறிவிட்டு.. மற்றவர்களை பார்க்க..
‘ அனைவரும் இவர்களை தான்.. சிரிப்புடனும், கவிதையாகவும், முடியலடா சாமி இதுகளோட.. கொஞ்சம் கூட பயமே இல்லாம நட்ட நடு ஹாலில் எல்லாருக்கும் முன்னாடி ரொமான்ஸ் பண்ணி நம்மளையே கூச்சப்படவக்குதுங்க.. என்று செல்லமாக திட்டியும்.. என்பது போன்ற மனநிலையில் பார்த்தும் பார்க்காததுமாக இருந்தார்கள். ‘
‘ இடுப்பில் கை வைத்து.. என்ன?.. எப்போதுபோல அனைவரையும் அழுத்தமான ஒரு பார்வை பார்க்க.. சிறியவர்களுக்கு சிறு பயம் கூட வந்துவிட்டது.. பெரியவர்கள் இப்படி பார்த்த நாங்க பயந்துவிடுவோமா?. என்று அவர்களும் திரும்பி பார்க்க.. டேய் நாங்க பார்க்க வேண்டிய பார்வை நீ பார்க்கிற என நினைத்து..’
யோகா ” என்னடா பார்க்கிற?.. நாங்க பார்க்க வேண்டிய பார்வை நீ பார்க்கிற. இப்ப என்னாச்சு?.. கமலேஷ் சொன்ன மாதிரி நீதான் அரசிக்கு தாவணி உடை வாங்கிக் கொடுத்தாயா?.. ” எனஅனைவரின் சார்பாக.. எல்லோரையும் பார்த்துக் கொண்டே கேட்க. மற்றவர்களும் அப்படி கேளுங்க?.. அக்கா, அண்ணி, டி என்று மனதில் நினைத்தார்கள்.
” ஆமாம். நான்தான் வாங்கி கொடுத்தேன். அதுக்கு என்ன இப்போது?.. ” என்று கோபம் கலந்த குரலில் அழுத்தாமான குரலில் கூற..
‘ இதனை கேட்ட அனைவரும்.. அவனின் கோபம் கலந்த குரலில் கேட்டவும். வேறு ஒன்றும் கேட்க தோன்றவில்லை.. அமைதியாக இருக்க. ‘
அனைவரும் அமைதியாக இருக்கவும்.. ” இப்ப நீங்க நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க. கமலேஷ் அரசிக்கிட்ட.. நான் வாங்கி கொடுத்து பற்றி கேட்டா.. அப்படியா?. என்று?.. நினைத்து.. நீங்க மனதில் நினைப்பதை அவனிடம் என்னவென்று கேட்கனும்?.. இல்லையா வாங்கி கொடுத்த என்னிடம் கேட்கனும்?. அதவிட்டு அரசிய அவ பயந்து கண்ணு கலங்குற அளவிற்கா அவள பார்த்து வைப்பிங்க?.. “
வேந்தனின் சொன்னதை கேட்டவர்கள்.. என்ன கண்ணு கலங்குனாளா?.. ஓ.. கடவுளே.. தோழி மட்டும் லூசு.. என நினைத்து அவளை பார்த்தாள்.
கார்த்திக் ” என்ன டா செல்லுற?. நாங்க எங்கடா?.. எழில் பயப்படும் படியாக பார்த்தோம்.. நல்லாயிருக்காங்க என நினைச்சு தாண்டா பார்த்தோம்.. ” என கூறியவரை.. வேந்தன் அரசியை கண் காண்பிக்க.. அவர் புரிந்துக்கொண்டு.. எழிலரசிய பார்த்து..
” எழில் நீ இந்த உடையில் நல்லாயிருக்க என்று தான் பார்த்தோம் மா. நீ அதிகமாக இதை தான் வெளிய.. வீட்டலையும் போடுவ என்று இப்பதான் உன் அக்கா கூறி கேட்டேன். இப்பயெல்லாம் ரொம்ப பார்த்துயில்லையா அதான். ஏன்?.. நான் எங்க வீட்லையே யாரும் போட்டு நான் பார்த்து இல்ல.. ” என தன் தம்பிகளை பார்த்தபடி சொல்ல.. அவர்களும் கடைசிக்கு வரிக்கு இல்லை என்பது போல ஆட்ட..
கார்த்திக் கூறியதும், மற்றவர்களும்.. தன்னவன் சொன்னது போலவே தலையசைக்கவும்.. எழிலரசி சற்று தெளிந்தாள். அவளையே பார்த்திருந்தவனும் ‘ அப்பாடா.. முயல்குட்டி தெளிந்து விட்டா!.. ‘ அவள் கேட்க வருவதை கவனித்தான்..
பெருத்த சந்தேகத்தை கேட்டாள்.. ” ஏன் யோகா அண்ணி கூடவா போடல?.. ”
இதனை கேட்ட அனைவரும் சிரிக்க.. அருகில் இருந்தவன்.. ‘ ஆமாம் இது இப்ப ரொம்ப முக்கியம். ‘
” இல்லம்மா.. அப்ப எல்லாம் சுடிப்போட்டா தான் பேஷன்.. தாவணி போட்டா கிண்டல் பண்ணுவாங்கனு சொல்லுவா. ”
தன் தங்கைகளின் சார்பாக யோகா.. அவர்களின் கணவர்கள், கமலேஷ் பார்த்துபடியும்.. ” என்ன?.. என்ன சொன்னிங்க நான் போடலையா?.. வீட்டல இருங்கவங்க போடலையா?.. சரி.. நீங்களே எல்லாம் சொல்லுங்க?.. உங்களுக்கு நாங்க அப்ப போடனும் விருப்பம் இருந்தா?.. நீங்க அப்பவே வேந்தன் மாதிரி.. வாங்கிக் கொடுத்து போட சொல்லியிருந்தா?.. நாங்க போடமாட்டோம் என்றா சொல்லி இருப்போம். ”
புன்னகையுடன் ” நீ போடுவனா?.. கேட்டுயிருக்க வேண்டியது தானே?.. “
” நான் ஏன் கேட்கனும்?.. ” வேந்தனிடம் திரும்பி அதிகாரமாக..
” டேய் வேந்தா.. நீ என்ன அரசி வாங்கி கொடுக்க சொல்லியா வாங்கி கொடுத்த?.. ”
புன்னகையுடன் இல்லை என தலையாட்ட.. அங்கு சிரிப்பு சத்தம் அதிகமானது.. யோகாவின் கேள்வி.. கார்த்திக்கின் பதிலில்.
” பாருங்க.. அவனா தான் விருப்பப்பட்டு வாங்கி கொடுத்துயிருக்கான். கேட்காம வாங்கி கொடுத்தா தான்.. அது உங்க விருப்பம். அதையே எங்களிடம் கேட்டு வாங்கி கொடுத்தா அது எங்க விருப்பம். உங்க விருப்பம் நிறைவேற வேண்டுமானால் .. கேட்காம செய்யனும். இதில் எங்க விருப்பத்தை தெரிந்து.. நாங்க சொல்லாம நீங்களா எங்களுக்கு செய்வது.. அதுவேற.. இதே இப்ப வேந்தன் சட்டை போட்டுயிருக்கானே.. அது மாதிரி. இந்த மாதிரி அவனை பார்த்து கத்துக்கோங்க. ” புன்னகையுடன் கூறிவிட்டு.. ஆர்த்தி பக்கத்தில் உட்கார..
புன்னகையுடன் ” ம்.. ம்.. அவனை பார்த்துக் கத்துக்கிறேன்.. ” யோகாவிடம் கூறி.. பின் வேந்தனை முறைக்க..
‘ இதனை பார்த்திருந்தவர்களில் சிலர் உண்மைதான் என எண்ணிக் கொண்டுயிருக்கும் போது.. யோகாவின் கடைசி வரியை கேட்டும், கார்த்தின் பதிலுடன் கூறிய முறைப்பையும் பார்த்து.. இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை.. வெளிப்படுத்தி விட்டார்கள்.. சிறுவர்கள் கண்ணிர்வர சிரிக்க.. பெரியவர்கள் அடங்க பட்ட சிரிப்பை உதித்தனர்.’
விஸ்வநாதன் ” ஏன்டா!.. ஏன்?.. மாப்பிள்ள.. நீ பண்ணுற அலப்பறைய பார்த்து.. கல்யாணம் ஆகப்போற பொண்ணுங்களாதான்.. அவங்க வருங்காலத்துடன் சண்டை வரவைக்க போறேனு.. நாங்கஇரண்டு பேரும் நினைத்தோம்.. ஆனா நினைத்த அவரையே.. இப்படி கல்யாணம் பண்ணி 12வருஷம் ஆனவங்கள இப்படி நடு ஹாலில் சின்னபிள்ளை தனமான அவங்கள சண்டை போட வைச்சுட்ட டா. ” புன்னகையுடன் கூற..