புன்னகையுடனே.. ” இதனால் நான்.. இந்த மாதிரி நீங்க எல்லோரும்.. என்னையும், அரசியையும் பார்த்து கெட்டு போயிடக்கூடாது தான்.. ரகசியமா செய்தேன். ஆனா இதுக்கெல்லாம் காரணம்.. கமலேஷ், அரசியும் தான். நானேல்லாம் இல்ல. ” கூறியபடியே..
வேந்தன் கமலேஷை பார்க்க.. அவன் ‘ சாரி ‘ என்பது போலவும்.. அரசி அசட்டு சிரிப்புடன் பார்க்க.. மற்றவர்களை பார்க்க சிரிப்பை நிறுத்தி.. தங்களின் அருகில் இருந்தவர்களிடம் சிரியஸ்ஸாக பேசிக்கொண்டே அவனை பார்க்க.. ‘ நான் இல்லப்பா ‘ என பதறி..
” மாமா உங்கள வினோ கூப்பிடுறா.. போங்க.. போங்க. “
” டேய்.. அவ என்ன கேட்க போறாளோ?.. ” எனக் கூறி.. வினோவின் அருகில் அமர்ந்தான்.
விஸ்வநாதன் சென்ற பிறகு.. தன் அருகில் இருந்த தன்னவளை பார்க்க.. அவளும் அப்போது தான் அவனை பார்த்தாள்.
பயத்துடன் கலங்கியிருந்த கண்கள்.. இப்போது மகிழ்ச்சியால் கலங்கியிருப்பதில் நிம்மதி கொண்டு.. ” என்ன முயல்குட்டி சரியாகி விட்டிங்களா?.. சாரிடா ரொம்ப பயந்துட்டுயா?.. இனிமே இது மாதிரி நடக்கமா பார்த்துக் கொள்கிறேன். சரியா. ஆனா நீ எப்பவும், எதுக்கும் தேவையில்லாமல் கண்ணு கலங்க கூடாது. இதுதான் கடைசி சரியா. ”
‘ அப்போது அவனுக்கு தெரியாது.. தன்னவள் தங்களை நினைத்து!.. எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணிர் நிற்காமல் அழும் அவளை.. தான் ஒன்றும் கூறாமல்.. கூறவும் முடியாமல்.. அமைதியாக தான் பார்த்துயிருக்கும் காலம் வரும் என்று. ‘
‘ எழிலரசி தற்போது நடந்தில் இருந்து தேவையில்லாமல் கலங்கிவிட்டேன்.. இனிமேல் தனு கூறியது போல இருக்க வேண்டும் என நினைத்து.. தன்னுடைய பதிலை.. வாய்விட்டு கூறாமால்.. எதை பார்த்து அவனும் கலங்கினானோ.. அந்த கண்களின் மூலமாகவே.. தெளிந்த வழிகளுடன்.. ‘ சரி ‘ என்பது போல தலையை ஆட்டினாள் தன்னவனுக்கு. ‘
கண்ணால் பதில் கூறிய தன்னவளின் கண்களில் முழ்கியிருந்தவனின்.. தோளை யாரோ இருமுறை தட்டுவது போல இருந்தது. ‘ யாருப்பா இந்த நேரத்தில?.. ‘ என திரும்ப.. நீயா?.. நீங்களா?.. ” ஹாய் வசும்மா!.. ஹாய் சாருலதா.. என்ன இந்த பக்கம்?.. ” அசட்டுதனமான ஒரு கேள்வி கேட்க.
” அது வந்து இங்க வேந்தன்.. வேந்தன்னு என் அண்ணாவ தேடி வந்தேன். அவங்கள பார்த்திங்க?.. ”
புன்னகையுடன்.. ” இல்லையே ம்மா. ” அடுத்து கூற ஆரம்பிக்கும்..
” டேய் வேந்தா இங்க வந்து உட்கார்ந்து.. பேசுங்க.. ” திலகன் அழைத்தான்.
அங்கு திலகனுடன், சத்யா, வினோத், தர்ஷினி, மேகா, இன்பா, கதிரவன், கமலேஷ் எனஅனைவரும் இருக்க.. அமுதன், சுரேந்தர் அனைவருக்கும் டீயுடன் சிற்றண்டி சாப்பிட கொடுத்துக் கொண்டுயிருந்தனர்.
வேந்தன் அவர்களை பார்த்து.. ” இதோ வரேன் டா. ” அரசியிடம் திரும்பி..
” மு.. அரசி.. என்னோடதையும் சேர்த்து ரூம்மில் வை. நீ வேணா வேற உடை மாற்றிக்கோ. ”
” பரவாயில்ல தனு. நான் வைத்துவிட்டு வரேன்.. ” அவள் திரும்பும் நேரம்..
” அண்ணி நில்லுங்களே.. நீங்க வரும்போது.. அண்ணா வாங்கி கொடுத்தா சொன்ன உடையில் இன்னும்2 செட் இருக்கல.. அதை எடுத்துட்டு வாங்க. நான் அதை பார்க்கனும். “
‘ வசுந்தரா கூறியதை கேட்டு.. கூட இருந்த மூவருமே என்ன?. !. என்று நினைத்து புரியாத பார்வையில் அவளை பார்க்க. ‘
தன்னை பார்த்ததின் அர்த்தம் உணர்ந்தவள்.. ” நீ வாங்கி கொடுத்தற்கு.. எல்லாம் கேள்வி கேட்டாங்களே.. இவங்க போட்டுயிருப்பது நல்லா இருக்குனு வேற சொன்னாங்களா!.. அதான் எப்படி இருக்குனு?.. பார்க்க ஒரு சின்ன ஈகர் அண்ணா. அதனால்தான். ” என விருப்பம், ஆவல், பொறாமை கலந்த குரலில் கூற.
வசுந்தரா கூறியதில் சிலது ஏற்கும் படியாகவும்.. சில ஏதோ உள்நோக்கத்துடன் கூறுவதுபோல இருந்தது. ஆனால் அவள் பார்க்காமல் விடபோவது இல்லை.. வேறு எதுவும் இந்த இடத்தில் கேட்கமுடியாது.. எனவும் நினைத்தபடி.. அரசி வேந்தனை பார்க்க.. ” ம்.. கவரில் போட்டு எடுத்துவா டா. ”
” ம் ” என்று கூறிவிட்டு.. எழிலரசி கூறி தன் அறைக்கு செல்ல..
‘ வேந்தன் அரசி அறையினுள் செல்லும் வரை பார்த்துவிட்டு திரும்ப.. வசு புன்னகையுடன் வேந்தனை பார்த்தாள். அவன் அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல்.. திலகன் அழைத்த இடத்திற்கு சென்றான். ‘
‘ செல்லும் அவனை பார்த்த சாருலதாவிற்கு.. மாமா கோபமாக செல்கிறார் என நன்றாக புரிந்தது. வசு அதை புரிந்தும், புரியாதும் போல.. தன் அண்ணாதானே என்ற எண்ணத்தில் அவனை பொருட்படுத்தாமல்.. கமலேஷ் பக்கத்தில் இருவரும் அமர்ந்தார்கள். ‘
வேந்தன் அமராமல் நின்றிருக்க.. வினோத் ” நீ!.. உட்காரல?.. ”
” அரசி வரட்டும். “ அவன் கூறிய 5வது நிமிடத்தில்.. இவ்வளவு நேரம் விரித்துவிட்டு இருந்த.. முடியை ஒரு பேன்டில் அடக்கிய மாற்றத்துடன்.. புன்னகை முகமாக கையில் கவருடன் வந்தாள் அவனின் அரசி.
‘ இவ்வளவு நேரமும் வேந்தன் சற்று வருத்ததுடன் இருந்தான். வசு பேசுவதை கேட்ட அரசியின் தெளிவான முகம்.. சட்டென்று!. முகம் மாறியது. இப்போதுதான் அவள் முகம். தான் அவளுக்கு உடை வாங்கி கொடுத்த விஷயத்தில் அவர்களுக்கு குழப்பம் வந்து தெளிவானது. ‘
‘ திரும்பவும் வசு உடையை பார்க்க கேட்க.. ‘ இவர்களுக்கு என்ன வந்தது?.. அதிலும் வசுக்கு தெரிய வேண்டாம்மா.. ஒருவர் ஒருவருக்கு பரிசு.. அதிலும் யாருக்கும் தெரியாமல் கொடுக்கும் பரிசை.. வேறு வழி இல்லையெனில் வாங்கியவர் தன் விருப்பத்துடன்.. மற்றவரிடம் காண்பிக்கலாம். தானாக கேட்டு பார்ப்பது.. அநாகரிகம்.. என்றுகூட இந்த வசும்மாக்கு தெரியாது. இப்ப முயல்குட்டி என்ன மனநிலையில் வரப்போறாளே?.. ‘ என அந்த 5 நிமிடத்தில்.. 10 தடவை அரசியின் அறைவாயிலை பார்த்துவிட்டான். ‘
‘ 11 தடவை பார்க்கும் போது தான் அவனின் வருந்தமான மனநிலையில் குளிர்விப்பதற்கே.. புன்னகை முகத்துடனும்!.. வெளியே வந்தாள் அவனின் அரசி. ‘ என்ன அவள் முகத்தில்?.. ‘ என முகத்தில் ஒரு சில நீர்த்துளிகளுடன்.. அவனை பார்த்தபடி அருகில் வந்து நின்றவளின் முகத்தில் ஆராய்ச்சி செய்யும் போது.. ‘
அங்குயிருந்தவர்கள் ‘ எப்படா இங்க இரண்டுபேரும் தனியா மாட்டுவாங்க.. ‘ என நினைத்தவர்களின் முன்னே.. அவனின் செயல்களை பார்த்து.. திரும்பவும் அவர்களை கடுப்பின் உச்சத்தில் நிற்க வைப்பது போல இருந்தது.
அரசியோ.. வேந்தன் தன்னை முகத்தையே பார்ப்பதை.. ” தனு.. அங்க பாருங்களோ!.. உங்கள என் அண்ணாக்கள். ” என்று கூறிவிட்டு.. அவள் கையால் சைகை செய்ய..
” என்ன இப்ப உன் அண்ணாக்களுக்கு?.. ” என்று கூறிய படி திருப்ப.. அரசியின் இன்பா, திலகன், வினோத், கமலேஷ் முறைத்துக் கொண்டுயிருந்தனர்.
இவனுங்க எதுக்கு முறைக்கிறாங்க.. ” என்ன டா. இங்க மாப்பிள்ள நிக்கிறேன்.. என்ன சாப்பிடுறிங்க?.. ஏது சாப்பிடுறிங்கனு கேட்காம?.. உட்கார்ந்து இருக்கிங்க. அதல முறைப்பு வேற.. மாப்பிள்ளைங்கற பயமே இல்ல உங்களுக்கு?.. ” அவர்களிடம் பேசிக்கொண்டே அண்ணாகளின் முன்பாகவே.. தங்கையை கையை பிடித்து.. வசதியாக தர்ஷினி, சத்யாவின் பக்கத்தில் அரசியும், அவளின் பக்கத்தில் அவன் அமர்ந்துவிட்டான்.
திலகன் “சாப்பிடு.. டீ குடினு?. நாங்க உன்னைய எத்தனை தடவை கேட்டோம்.?. ஆனா நீ அப்படியே ஒரு இடத்தையே பார்த்து சிலைமாதிரி நிக்கிற.. நீ திரும்பி திரும்பி பார்ப்பதை வைத்துதான் சிலை இல்ல.. உயிர் உள்ள மனிஷன்தான் நீ!.. எங்களுக்கு தெரிந்தது. அதவிடு.. நீ எங்கள சொல்லுற?. உனக்கு கொஞ்சமாவது பயம் இருக்கா?.. இப்ப ஒன்னுக்கு நாலு.. இல்ல ஐந்து அண்ணாக்கள் முன்னாடியே.. எழில கையபிடிச்சு.. அங்க போய் உட்கார்ந்து இருக்க. உனக்கு தான் நாங்க இன்னும் மச்சான்கள் என்ற பயமும் இல்ல, மரியாதையும் இல்ல. எழிலரசி நீ இங்கவாம்மா. “
‘ சிலைமாதிரியா நின்னோம்.. ம்.. நிறையவே சான்ஸ்யிருக்கு.. என்னை மாதிரி ஒரு அண்ணா இருந்தாலே கஷ்டம்.. இதில ஐந்து. ம்.. சமாளி வேந்தா.. இன்னும் கொஞ்சம் நேரம் தான் முயல்குட்டியோட உட்கார முடியும். ‘
ம்.. ” டேய்.. சாரி. சாரி மச்சான்களா!.. அங்க இடம் இல்ல.. மச்சான்களா.. அதனால தான்அரசிய.. உங்க தங்கைய இங்கு கூப்பிட்டு வந்தேன்.. மச்சான்களா..கொஞ்சம் எங்களுக்கு.. சாப்பிட.. குடிக்க ஏதாவது நீங்க எடுத்து தருவிங்களா?.. மச்சான்களா.. இல்ல நானும், உங்க தங்கையும் சேர்த்து போய்.. அங்கயே சாப்பிட்டு வரட்டும்மா?.. மச்சான்களா. இந்த பயம் கலந்த மரியாதை உங்களுக்கு போதுமா மச்சான்களா!.. இன்னும் ஏதாவது.. ” அவன் எழப்போக..
அவனின் பேச்சில்.. அருகில் இருந்த சத்யா, தர்ஷினி.. ‘ நல்லா இந்த அண்ணா.. ஐஸ் பேக்டிரியவே தூக்கி வைக்கிறாங்கபா ‘ சிரிப்புடன் பார்க்க..
” டேய்.. டேய்.. இதுக்கும் மேல ஏதாவது பேசுன?.. யார் இருக்காங்கனு பார்க்க மாட்டேன்.. திட்டு இல்ல அடி வாங்கம போக மாட்ட. பார்த்துக்கோ. டேய் வினோத்.. இரண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும்.. இருந்த இடம் தெரியமா!.. ஒரு வரி.. இல்ல ஒரு வார்த்தை பேசுவதற்கு காசு கேட்பானே.. அந்த வேந்தனை.. தேடி கண்டுபிடித்து தருபவர்களுக்கு..தக்க சம்மானம் வழங்கப்படும் என அறிவித்து விடுடா. ” என பாவமாக கூற..
” ம்ஹூம்.. நீ உன்னோட டிரவல்ஸ்சை எழுதி வைத்தாலும்.. இனிமே அவன் கிடைக்க மாட்டான். சரியா. ” புன்னகையுடன் கூற.
” அப்படிங்கற!.. “
” ம்..”
” மச்சான்.. ” என வேந்தன் திலகனை அழைக்க..
” டீயும், ஸ்நாக்ஸ்சும் தானே.. வருவது டா.. அங்க பாரு உன் ஆசை மச்சான் இன்பா கொண்டு வரான். போதுமா. சாப்பிட்டு.. அமைதியா உட்காரு. ” அந்த அமைதியா உட்காரு என்ற இடத்தில் சிரிப்புடன் கூற.
” என் மச்சானின் விருப்பம்மே.. என் விருப்பமாக ஏற்று.. அதை நிறைவேற்றுவேன். ” என தலையை மட்டும் சாய்த்துக் கூறினான். சிரிப்பு மட்டுமே அவனின் பதிலாக வர.. ‘ அப்பாடா.. ‘ என்று சாயப்போனவன்..
‘ அப்போது தான் தன்னவளை கவனித்தான். இவ்வளவு நேரம் அவர்களை மட்டும் கவனித்து பேசியதால்.. அரசியை பார்க்கவில்லை. இன்பா அவர்கள் முன் வந்து நின்று.. முதலில் வேந்தனிடம் புன்னகையுடன் கொடுக்க. ‘
” எழில்.. எழில்மா.. அரசி.. ” அவள் அவர்களை பார்க்காமல் இருந்தாள்..
‘ அவள் தான் அங்கு இல்லையே.. தன்னவனின் அருகில் இருந்தவள்.. வேந்தன்.. அரசி உறுதி நிகழ்ச்சிக்கு.. கிளம்ப போகும் வரை.. தன் அருகில் அமர்த்திக் கொள்வதற்காக.. அவர்கள் கேட்டதற்கு.. அவர்களிடம் பணிவாக பேசுகிறேன்.. என்று வேந்தன் சாதாரணமாக திரும்பி உட்கார.. ‘
‘அவளின் முகத்திற்கு சற்று அருகில் தன்னவனின் முகம். அவன் பேச பேச.. அதில் தோன்றிய.. அவனின் ஒவ்வொரு முகபாவனையும்.. அவளின் கண்களும், சிரிப்பானது அவளின் உதடுகளும், வார்த்தைகள் காதினுள்ளும்.. அவனின் மூச்சு காற்றானது.. அவளின் நாசிவழிச் சென்று.. உடல்முழுவதும் பரவி.. தங்கள் இருவரையும்.. ஒன்றுடன் ஒன்று கலப்பது!.. போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியிருந்தது. ‘
‘ தன்னவனின் முகத்தை அருகில் பார்த்தும், பேச்சில் மயங்கி.. கிறங்கி, ரசித்தபடியும் உட்கார்ந்துயிருந்தவளை.. தூரத்தில் யாரோ!.. அழைப்பது போல தோன்ற.. தன் காதின் அருகில் முயல்குட்டி என்ற அழைப்பில் தான் திடுக்கிட்டு.. நடப்பு உலகத்திற்கு வந்தாள் அவனின் அரசி. ‘
ஒலி வந்த திசைபக்கம் பார்க்க.. தன் மயக்கத்திற்கு காரணமானவன்.. பதட்டத்துடன்.. ” ஹேய்.. என்னாச்சு அரசி?.. ” எனவும் ” என்னாச்சு எழில்மா.. ” இரு குரல்கள் கேட்டது.
‘ ஏனெனில் இப்போது அவளின் முகம் குளிர்ச்சிக்காக.. குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தவளின் முகம்.. இப்போது வியர்வை துளிகள் முகம் முழுவதும் இருந்தது. ‘
இருவரையும் பதட்டத்தை பார்த்து.. ” ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல அண்ணா.. ”
கையில் இருந்த டீயை பார்த்து.. ” கொடு ண்ணா.. சாப்பிட ” என கேட்க .. அவன் வேந்தனை காட்ட.. ” சரி ண்ணா. நீ போய் உட்காரு. ” எனக் கூறி இருவரையும் பார்க்காமல் டீ குடிக்க ஆரம்பித்தாள்.
இன்பா அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு போய் உட்கார.. வேந்தன் ” இந்தா டா.. இது ஒருவாய் சாப்பிட்டு பிறகு டீ குடி.. சாப்பிட்டு நேரம் ஆச்சுல.. டீ மட்டும் குடுச்சா சேராது.. ” அவளும் அவன் கண்களை பார்க்காமல்.. அவல் உப்பும்மாவை சாப்பிட்டு.. டீ குடித்தாள்.
அருகில் இருந்தவன்.. ‘ ஏன் முயல்குட்டி?.. மந்திரித்து விடவ போல இருக்கா?.. நம்ம கண்ண வேற பார்க்கவே இல்ல?.. நம்ம சொல்வதை காது வழியா.. என கூறிக் கொண்டே அவளின் காதை பார்க்க.. அங்கே தன்னவனின் மயக்கத்தில்.. சிவந்துயிருந்த முகத்தை குனிந்து மறைக்க முடிந்த அவளால்.. காதை மறைக்க மறந்துவிட்டாள்.. அது அவளை மன்னவனிடம்.. காட்டிக் கொடுத்துவிட்டது. ‘
‘ அவன் காதை பார்க்க.. செக்கசெவேல் என்று சிவத்து.. அவளின் காதில் அணித்திருந்த.. வெள்ளை கல் தோடுடன்.. அவளின் நாணமும் சேர்ந்து மின்னியது. ‘
‘ அதனை பார்த்தபின் தான்.. தனக்கு தேன்றியது போல இவளுக்கும் தோன்றியிருக்கும்மா?.. அவனும் அதை நினைத்து பார்த்தான்.. ஆம்.. அவனும் அரசி உணர்ந்ததைதான் உணர்ந்தான்.. ஆனால் வார்த்தைகள் மட்டும் வேறு.. உணர்ச்சிகள் ஒன்று. ‘
பின் புன்னகையுடன் குனிந்து இருந்தவளை பார்த்துக் கொண்டே அவனும் சாப்பிட்டான். இருவரும் ஒரேதட்டில். ( ஒரு தட்டு என்பது இங்கு ரகசியம். )..
இவர்கள் இவ்வாறு இருக்க.. இவர்களின் பக்கத்தில் இருந்தவர்கள்.. திலகனின் பேச்சை கேட்ட கதிரவன்.
” திலகன் அண்ணா.. நீங்க வேந்தன் அண்ணாவ பற்றி சொல்வது.. நிஜமா?. இல்ல அவரை கலாய்க்க சொல்லுறிங்களா?.. அவங்க இருக்க இடம் தெரியாம அமைதியாகவா இருப்பாங்க?.. இன்னைக்கு நான் பார்த்த வரைக்கும் அப்படி தெரியலையே?.. “
‘ எழிலரசிய பார்க்கும்வரையில்.. இத்தனைநாளா அவன் எங்கள.. அப்படித்தானே டா நம்ப வைத்துயிருக்கான். இனிமே நான் தலைகீழா நின்னு சென்னா கூட நம்ப மாட்டாங்களே!.. எப்படி இவனிடம் சொல்வது?. ‘
” கதி தம்பி... இன்னைக்கு வேந்தன் நடந்துக் கொள்வதை பார்த்த உன்னால.. நான் வாயால சொன்னா நீ!.. நம்புவது கஷ்டம் தான். இந்தா இதில் இருக்கும் வீடியோவ பாரு.. அப்ப புரியும். “
திலகன் கொடுத்த வீடியோவை அருகில் இருந்த வேந்தன், எழிலரசி, இன்பா தவிர பார்த்தனர். அதில் வேந்தன் தானா என எண்ணும் அளவிற்கு.. சிறு புன்னகையுடன் அமைதியின் சொருபமாக இருந்தான்.
அந்த வீடியோ அவர்களின் பள்ளி நண்பன் ஒருவரின் திருமண வரவேற்பு, திருமணம் நடைபெற்றபோது எடுத்த படங்களும், வீடியோவும். அதில் வரவேற்பும், பின் மணமகன், மகளின் நண்பர்கள், இளையவர்கள் மட்டுமேயான சங்கீத்தில்.. சிலரும், திலகனும் கூட நடனமாட, சிலர் பாட்டு பாட.. நண்பனை புகழ, கலாய்க்க என மேடையிலும்.. கீழே அமர்ந்தவர்களில் அந்த இடத்தில் அவ்வப்போது சேர்ந்து கலாய்க்க இருந்தனர்.
‘ மேடையில் இருந்தவர்கள் களைப்படைந்த பின் நெருங்கிய நண்பர்கள் சேர்ந்து.. தங்களின் சிலர் நீண்ட நாட்கள், சிலர் அவ்வப்போது சந்திந்துக் கொள்ளவர்கள்..என 15 பேர் இருப்பர். அனைவரும் நன்றாக ஒருவரை ஒருவர் வாரியும், நக்கல், கிண்டல், தாங்கள் விரும்புவர்களை பற்றி என.. பேசியபடியிருந்த அனைவரும் இருக்க.. அதில் எதற்கும்.. எனக்கும் சம்பந்தம் இல்லை போல நடப்பதை, பேசுவதை மட்டும் கேட்டு.. புன்னகை மட்டுமே… அவனிடம் கேட்கும் கேள்விக்கு ஒருசில வார்த்தைகள். திருமணத்தில் இன்னும் அமைதி.. போட்டோவிற்கு மட்டுமே புன்னகை என இருந்தான். ‘
” பார்த்தியா தம்பி.. உங்க வேந்தன் அண்ணாவ?.. இப்பவாது நம்புவியா. அவன் எவ்வளவு அமைதினு. ஆனா இப்ப நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கு.. என்னமா வரிக்கு வரி.. அந்த பேர சொன்னான். அதல பாரு.. நான், சிலர் டான்ஸ் ஆடுறோமே.. அதற்கு டான்ஸ் கொரியோ கிராஃப் பண்ணது.. அவன் தான். ஏன்?.. ஸ்கூலிருந்து இப்ப வரைக்கும் சும்மா கூட எங்களோட ஆட மாட்டான். ஆனா டான்ஸ் கொரியோகிராஃப் இப்ப வரைக்கும் பண்ணுவான். வினோத் காலேஜ் பசங்களுக்கு முக்கியமான ஏதாவது விழாக்களுக்கு பண்ணிக் கொடுப்பான். ஏன்டா ஆடமாட்டேன் என்று சொல்லுறேனு கேட்டா?.. ஸ்டேஜ்ல ஆட தோனல!.. அதோட முடித்துக் கொள்வான். ” சொல்லி கொடுக்கும் போது எடுத்த வீடியோவை காண்பித்தான்.
சத்யா.. புன்னகையுடன்.. “அப்ப.. அண்ணா போலதான்.. இந்த எழில் மேடமும் இருப்பா போல.. இல்ல அவள போல அண்ணாவா?.. ” தனக்குள்ளாக சற்று மெதுவாக கூறிக் கொண்டு தனியாக சிரிக்க. அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டுயிருந்த திலகன்..
” என்ன சத்யா தனியா சிரிக்கிறிங்க.. என்னனு சொன்னா?. நாங்களும் சிரிப்போம் இல்ல. இல்ல ரகசியம் ஏதாவது?.. “
” ம்.. ரகசியம் தாங்க.. ஆனா சொல்ல கூடாது என்று இல்ல.. ஆச்சரியமா!.. இருக்கு..அதான். ”
“என்ன?.. “
” இந்த எழில் மேடமும்.. அண்ணா போலதான்.. அமைதியாவே தான் இருப்பா. எழிலும் நல்லாபாடுவா!. ஆனா ஸ்டேஜ்ல பாட சொன்னா.. அண்ணா சொன்னாத சொன்னிங்களே.. தோனல என்று.. அதுமாதிரி தான் இவளையும் கேட்டா.. தோன்லனு சொல்லுவா. ஆனா அவளுக்கு அப்பப்ப தோணுற பாட்டை பாடி.. அதை ரெகாட் பண்ணி.. ஓரிஜினல் மியூசிக்கோட எடிட் செய்து.. அவ போனுக்கு மட்டும் ரிங்டோனா வைத்துக் கொள்ளுவா. யாருக்கும் பண்ணி கொடுக்கமாட்டா லூசு. “
” யாருக்கும் மா?. உங்களுக்கே கொடுக்கவில்லை என்றா?.. ” புன்னகையுடன் கேட்க..
” அப்படியில்லைங்க.. வாய்ஸ் நல்லாயிருக்கே.. கால் பண்ணுறவங்க கேட்டா.. அவங்களுக்கு நல்லாயிருக்கும் என்ற சமூக சேவைங்க. ” என்று சிரிப்புடன் கூறி
எழிலரசியின் போனிற்கு அழைத்து.. ஸ்பிக்கரில் போட.. எழிலின் குரலில் பாடல் ஒலித்தது..
‘ இவர்கள் பேசும் நேரத்தில்.. வேந்தன் என்பவன் மெல்லிய புன்னகையுடன்.. 10நிமிடமாக.. டீசூடாயிருக்கு.. உப்புமா சூடாயிருக்கு எனக் கூறி.. வெக்கத்துடன் தன்னை காண முடியாமல் குனிந்த தலைநிமிரால் சாப்பிட்டுக் கொண்டுயிருக்கிறாள் அவனின் அரசி. ‘
‘ அப்போது அவளின் போனின் அழைப்பு ஒலிக்கேட்க.. எழிலின் போன் இருவரின் நடுவில் இருந்ததால்.. எழில் இருந்த மனநிலையில் ஸ்பிக்கரில் தன்னுடைய வாய்மொழியான பாடலை கவனிக்காமல்.. எழில் யார் அழைத்தது?. என்று பார்க்க. ‘
‘ வேந்தன் தன்னவளின் குரலில் உருவாகிய பாடல் என்று தெரியும் ஆகையால்.. பாடல் வந்த திசையில் சற்று முன் வந்து பார்க்க.. அங்கு இருந்தவர்களும் பார்த்தனர்.. ஆனால் எழில் பார்ப்பாள் என நினைக்க.. வேந்தன் மட்டும் பார்ப்பான் என எதிர்பார்க்கவில்லை. ‘
” என்ன திலகா?.. எதுக்கு இப்ப அரசி பாடுனத ஸ்பிக்கரில் போட்டு கேட்குறிங்க?.. “
” டேய்.. இது எழில் வாய்ஸ் என்று உனக்கு தெரியும்மா?.. “
வேந்தன் அவனை முறைக்க.. அப்போதுதான் எழிலரசியும்.. சத்யாவிடம் தன் போனை காண்பித்து என்னவென்று கேட்டாள்.
” எழில் சும்மாதான்.. உன் வாய்ஸ்ல பாடுன பாட்டை.. இவங்க கேட்கதான்.. ” என்று இழுக்க..
” ம்.. சரி.. ” அவள் சற்று தெளிந்துயிருந்தால்.. அதனால் வேந்தனிடம் பேசலாம் என திரும்பபோகும் நேரம்..
” அக்கா உங்க வாய்ஸ் நல்லாயிருக்கு!.. இந்த பாட்டை நான் கேட்டுயிருக்கேன்.. நல்லாயிருக்கும். நீங்க இப்ப பாதி தானே பாடியிருக்கிங்க!.. முழுபாட்டை பாடுறிங்களா?.. “
எழில் சாரு கூறுவதை முதலில் புன்னகையுடன் கேட்டுக் கொண்டுயிருந்தவள்.. கடைசி வரியை கேட்டு.. ‘ என்ன முழுப்பாட்டா?.. அதுவும் தனு முன்னாடி!.. ‘ என்று நினைத்து அவனை பார்க்க.. அவன் அவளை ஒரு பார்வை பார்த்து திரும்பிக் கொண்டான்.
” என்ன அக்கா பாடுறிங்களா ?.. “
” கண்டிப்பா பாட வேண்டும்மா?.. ” அனைவரையும் பார்க்க..
” ம்.. ” என தர்ஷனி, சத்யா, சாரு மூவரும் ஆர்வமாக தலையாட்ட..
‘ ஆசையுடன்!.. கேட்கிறார்கள் ‘ ஒரு நொடி யோசித்தவள்.. தன்னவனின் முன் பாடலாமே!. . ” ம்.. சரி. ”
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா… அன்பால் கூடவா… ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னைச்சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித்தர தானாக வந்துவிடு
என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித்தந்துவிடு
அன்பே ஓடி வா… அன்பால் கூடவா…
அன்பே ஓடி வா… அன்பால் கூடவா… ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு….
‘ தன்னை முழுவதுமாக.. அள்ளி திருடிச்சென்று.. தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு.. தன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்.. புது புது உணர்வுகளை அறிமுகப்படுத்தி.. அநிதமும் அவனின் நினைவிலேயே வைத்துயிருக்கும்.. தன் கள்ளன், காதலன், மன்னவனை…தன் முன் இருக்கும் கண்ணாடியில் தன்னை கண்களாலே ரகசியாமாக களவாடும் தன் தனுவை பார்த்துக் கொண்டே பாடி முடிக்க. ‘
‘ அவனோ!.. கள்ளச் சிரிப்பையும்.. சட்டென்ற கண்சிமிட்டளையும் வெளிப்படுத்தி.. தன்அரசி முன் நின்று.. (https://wbctx.com) எவரும் எதிர்பாக்காத செயலை செய்து அங்குயிருக்கும் அனைவருக்கும் இன்ப நிலநடுக்கம், பூகம்பம், இன்பமான அதிர்ச்சியை ஏற்படுத்தினான் அவளவனின் வேந்தன். ‘