கன்னிப் பெண்களின் பேச்சு, சிரிப்பு சத்தத்துடன் எழிலரசியின் அறையானது உறுதி நிகழ்ச்சிக்கு உண்டான துள்ளலுடன் தயாராக இருந்தது. தங்களின் அக்கா, அண்ணி ரெடியாகும் வரை.. அவர்களின் இளைய குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் சிறிது நேரம் முன்பு வரை இருந்ததால்.. இப்போது பேச்சு, சிரிப்போடு தயாராகி முடிக்கும் தருவாயில் இருந்தார்கள். நம் நாயகி எழிலரசி அனைவரையும் பார்த்த வண்ணம் மெல்லிய புன்னகையுடன் அமைதியாக தயாரானாள்.
எழிலரசியின் முன் வந்து நின்ற வசுந்தரா ” அண்ணி நான் எல்லாம் சரியா கட்டியிருக்கனா ?. “
எழில் புன்னகையுடன் தன் முன் நின்ற இளைய நாத்தானாரை பார்த்தாள்.. சில மணிநேரம் முன்.. தன்னுடைய அண்ணாவின் மீதான உரிமையான பாசத்தால்.. அடம்பிடித்து வாங்கிய ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பாவாடை தாவணியில் அழகு தேவதையாக மிளிர்ந்தாள்.
‘ தனக்கு வாங்கிய உடை ஆரஞ்சு மற்றும் அடர்ஊதா தாவணியாக ஒரே மாதிரிதான் வந்தது.. ஆனால் ஒரேமாதிரி வேண்டாம் என்று.. அனைவரின் பேச்சை கேட்டபின்.. விரும்பியா?. இல்லை விரும்பாமலா?.. என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் தாவணியை மட்டும் வேறு வேண்டும் என்று.. தன் அண்ணியிடம் உள்ள சிவப்பு நிறத்திற்கு ஏற்றவாறு.. மஞ்சள் வண்ண தாவணியை வாங்கி இப்போது அணியிருக்கிறாள். ‘
புன்னகையுடன் ” ம்.. எல்லாம் சரியா இருக்கு. ”
” ம்.. சரி அண்ணி. நீங்க ரெடியா ?.. ”
” நான் தயார்தான். “
” ம் ” எனக் கூறி எழிலரசியை பார்க்க.. பின் ” அண்ணி தயாராகித்தான் இருக்கிங்க!.. ஆனா ஏதோ ஒன்னு குறையுதே. ”
அவள் மற்றவர்களை பார்க்க.. அனைவரும் கிளம்பியிருக்க.. யாரை அழைப்பது?. என்று நினைத்து.. பின் அனைவரையும் பார்த்தே.. ” ஹேய்.. எல்லாரும் இவங்களை பார்த்து.. ஏதோ ஒன்னு குறையுது?.. என்ன அது?. சொல்லுங்க?.. “
அங்குயிருந்த சத்யா, தர்ஷினி, சாரு, வசு.. சற்றுநேரம் முன் வந்த தீபிகா அனைவரும் எழிலரசியை பார்த்தனர். பின் அவர்கள் கூறவரும் வேலையில் கதவு தட்டும் சத்தம் கேட்க.. கதவின் அருகில் நின்ற தீபிகா கதவை திறக்க.. அங்கு புன்னகைமுகமாக நின்றிருந்தான்.. நம் அரசியின் வேந்தன்.
ஒரு நொடி மாப்பிள்ளை.. பெண்ணின் ரூம் முன் வந்து நிற்கவும்.. என்ன கேட்பது?. கூறுவது என்று?. அதிர்ந்து நின்றாள். தனக்கு பிடித்தவர் கேட்டால் செய்ய வேண்டுமே.. வினோத் அவளிடம் இவன் செய்யும் கூத்தத்தை பற்றி கூறவில்லை. அதனால்தான் இவ்வளவு யோசனை!.. அதனுடனே.. ” ஹாய் அண்ணா ”
” ஹேய் தீபிகா.. நீ எப்ப வந்த?.. ” கேட்டவாறே கதவை திறந்து உள்ளே நுழைந்து விட்டான்.
என்ன!. இவர் பாட்டுக்கு உள்ளே நுழையுறார்?.. எல்லாம் அண்ணாவ.. அண்ணியோட சேர்த்து தப்பா எடுத்துக்க போறாங்க?.. கவலைக்கொண்டு.. ” அண்ணா ” கூவலுடன் அவள் மற்றவர்களை தயக்கத்துடன் பார்க்க.. அங்கு இருந்தவர்கள் அவனை நக்கல் பார்வை பார்த்தும்.. சிரிப்புடனும் பார்த்தார்கள்.
வந்தவன் அங்கு இருப்பவர்களில் தன்னவளை தவிர.. வசு, சாரு பாவாடை தாவணியில் இருக்க.. தர்ஷினி, சத்யா, தீபிகா மெல்லிய பட்டுபுடவையில் அழகுற தயார் நிலையில் இருப்பவர்களை பார்த்தான்.
” அண்ணா.. நான் வரவேண்டாம் சொல்லும் முன்ன வந்துட்டாங்க?.. அவர தப்பா எடுத்துக்காதிங்க. ”
சத்யா புன்னகையுடன்.. ” தீபிகா.. நீங்க வேண்டாம் சொல்லியிருந்தாலும் வந்துயிருப்பாங்க. அவருக்காக நீ கவலைபடாத. ” வேந்தனிடம் திருப்பி.. ” நாங்க இப்ப பண்ணவேண்டும்?.. ”
புன்னகையுடன்.. ” செம்ம ஷார்ப் சத்யா. அது வந்து எல்லாம் கிளம்பிட்டிங்க?. அரசிய தவிர்த்து.. எல்லோரும் ஒரு ஐந்து நிமிடம் கொஞ்சும் வெளிய இருக்கிங்களா?. “
புன்னகையுடன்.. ” கண்டிப்பா போகனுமா?.. ”
” ஆமாம்.. ”
” நாங்க வெளிய இருக்கப்ப யாராவது?.. நாங்க சொல்லியும் கேட்காம கதவ திறத்தா என்ன சொல்லுவிங்க ?.. “
” எதுக்கு?.. “
” என்ன சொல்லுவிங்கனு தெரிந்தா?.. நாங்க அதன்பிறகு அவங்கள சமாளிக்கதான். “
” ஓ.. அப்படி யாராவது கேட்டா?. சீப்பு வாங்க வந்தேன் சொல்லுவேன். ” புன்னகையுடன் கூற..
இதை கேட்டவர்களும்.. இவ்வளவு நேரம் சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டுயிருந்த.. அரசியும் சற்று சத்தமாக சிரித்துவிட்டனர். தீபிகா சிரிப்பும்.. குழப்பமும்மாக இருந்தாள். வேந்தனுமே மனதின் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். ‘ டேய் உன் நிலைமை இப்படி ஆகிடுச்சு. ‘ என ஏக்கத்துடன் தன்னவளை பார்க்க.. அவளும் அவனின் பார்வையை உணர்ந்து.. சிரிப்புடன் அவனின் அருகில் வந்தாள்.
” ஹேய் சத்யா.. என்னடி?.. நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாரு. யாராவது வந்தா என்ன ?.. அவருக்கு பயமா?.. எதுக்கு வந்தாரோ?.. அந்த உண்மைய சொல்லுவார். ”
” அப்படினா.. எதுக்கு வந்தார்?.. என்று எங்களிடம் சொல்ல.. சொல்லு பார்ப்போம். அப்பதான் நாங்க வெளிய போவோம். ”
வேந்தன் தன் அருகில் இருந்தவளிடம்.. ” ஏன் முயல்குட்டி இப்படி?.. அவங்க பாட்டுக்கு.. இந்நேரம் வெளிய போயிருப்பாங்க . நான் எப்படி சொல்ல?.. “
சத்யா.. ” இன்னும் பதில் வரல. ”
தன்னவனின் தயக்கத்தை உணர்ந்து.. ” நீங்க எல்லாம் என்னிடம் இப்ப சொல்ல வந்திங்களே!.. அதை வைக்கதான் வந்தாரு. போதும் மா. இப்ப ஐந்து நிமிடம் வெளிய இருக்கிங்களா. “
அனைவரும் ஒரு நொடி அதிர்ச்சி நிலையில் இருந்தவர்கள்.. பின் சத்யா சிரிப்புடன்.. “ ம்.. நடத்துங்க.. நடந்துங்க. அண்ணா.. 5நிமிடம் தான்.. பிறகு நாங்க கேட்காமலே உள்ள வந்துவிடுவோம். “
புன்னகையுடன்.. ” ம் ”
மற்றவர்களும் சிரிப்புடன் செல்ல நினைக்கையில்.. எழிலரசி அவர்களை பார்த்து.. நில்லுங்க ஒருநிமிடம்.. எனக் கூற.. என்னவென்று அவளை பார்க்க..
எழிலரசி வேந்தனிடம் இருந்த கவரை வாங்கி.. பின் ” நீங்க எல்லாம் பூ வைக்கல?.. வைத்து விட்டு போங்க. ”
‘ அவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்து.. வசு, தர்ஷினி, சாருவிற்கு அவளாகவே வைத்துவிட்டாள். மற்ற இருவர்!.. தங்களுக்குள் மாற்றி வைத்துக் கொண்டனர். பின் அவர்கள் சென்றவுடன்.. கதவை சாற்றி திரும்பிய தன்னவளை.. அவளின் மன்னவன் அவளை ஒரு நொடி.. இறுக்க அணைத்து விடுவித்தான். ‘
‘ அவனும் அவர்கள் பூ வைக்காததை கவனித்தான். அவர்கள் வைத்திருந்தாள்.. அரசி கூறியதற்கு பதிலாக அவனே கூச்சப்படாமல் கூறியிருப்பான். தான் அதை சொன்னால் மற்ற தங்கைகள் ஒன்றும் நினைக்க வாய்ப்பில்லை.. ஆனால் வசு கண்டிப்பாக வருத்தப்படுவாள். ஏதோ பூ வைத்து விடுவதை அரசிக்கு மட்டும் தான் செய்ய வேண்டும். மனம் தங்கையென்றாலும் மற்ற பெண்களுக்கு செய்ய விரும்பவில்லை. அதனால அவன் அமைதியாக இருக்க.. அரசி கூறிய பின்.. வசுவின் முகம் சற்று வாடியது போல இருந்தது. அவர்கள் செல்லும் போது தான் கொடுத்துவிடலாம் என நினைக்க.. அரசி அதனை கவனித்து பின் அவளே வைத்துவிட்டதில் இன்னும் மகிழ்ச்சி அடைய.. அதன் வெளிப்பாடுதான். இந்த அணைப்பு. ‘
‘ எழிலரசி தன்னவன் விடுவித்தவுடன்.. ‘ எப்பாடா ‘ என்று?.. தான் செய்ய நினைத்தை செய்தாள். ‘
புன்னகையுடன்.. ” தனு மாமா!. தனு மாமா!.. செம்ம கியூட்டா இருக்கிங்க!.. ” அவனின் கன்னத்தை கையால் பிடித்து இழுத்து.. அந்த கையை தன் உதட்டில் வைத்து முத்தம் கொடுத்தாள்.
” தனு!.. நீங்க அப்ப கிளம்பும்போது.. நான் உங்க முகத்தை பார்த்தை கவனித்திங்களா?.. “
சிரிப்பும், கிறக்கமாக என அவளின் நெற்றிமீது தன் நெற்றி வைத்து.. ” ஆமாம். இப்ப என்ன சொல்லி கூப்பிட்ட முயல்குட்டி?.. “
‘ அவன் கேட்டபின் தான் உணர்ந்தாள்.. தன் தனுவிற்கான அழைப்பு.. பின் அவனை பார்க்க வெக்கம் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். ‘
கூப்பிட வேற நேரமே கிடைக்கலையா?. அவளின் முகத்தின் முன் தலையை சாய்த்து.. ” ம்.. முயல்குட்டி.. நானே நீ இப்ப கூப்பிட்டதற்கு உன்னை கொஞ்ச வேண்டும்தான் இருக்கு. ஆனா என்னால ஒன்னும் பண்ணமுடியாம இருக்கேன். நீ இப்படி இருந்தா.. நான் அவ்வளவுதான். என் செல்ல முயல்குட்டி தானே… வெக்கப்படாம திரும்பி நினைப்பியாமா!.. மாமா உனக்கு பூ வைத்துவிடுவனாம். சரியா. “
‘ தன்னவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டே அவனை பார்க்க.. அவன் முகம் அதிலும் அவனின் சற்றுமுன் ஷேவிங் செய்த வழுவழுப்பான கன்னமானது.. கடந்தநாட்களில் தன்னிடம் மறைத்து வைத்திருந்த வெக்கம், நாணம், உணர்வுகளின் தாக்கத்தினால்.. அடர்ரோஜா வண்ணநிறத்தில்இருந்த கன்னத்தில்.. அவளை அவனுக்கு முத்தமிடத் தூண்டியது. ம்.. ஆனா நான் அவனை விட அல்லவா இருக்கிறேன். அவனே கஷ்டப்பட்டு.. நான் பாவம் முயல்குட்டி.. என்று நினைத்து.. என்னை திருப்பி நிற்க செல்கிறான். தன்னவனிற்காக அமைதியா சொல்லும் போதே திருப்பி விடுவதுதான் நமக்கு நல்லது. இல்ல சேதாரம் நமக்குதான். ‘
புன்னகையுடன் அவன் கன்னத்தை செல்லமாக.. சின்னதாக இழுத்துவிட்டு.. ” சரி.. பூ வைத்துவிடுங்க தனு. ” திரும்பி நின்றாள்.
‘ அரசி தன் கன்னத்துடன் விளையாடுவதில்.. ம்.. நாம்ம ஒன்னு நினைத்தா!.. அவ ஒன்னு பண்ணுற?.. ஆனா இது அதைவிட கிக்காதான் இருக்கே. மனது துள்ளளுடன் தான் அவளிற்காக வாங்கிய நீண்ட பூச்சரத்தை நான்காக மடித்து.. பின் அவளை தங்கள் முன் இருந்த கண்ணாடியில் பார்க்க.. அரசி.. வேந்தனை பார்த்து கன்னச்சிவப்புடன் கண்ணடித்தாள்.. இவனிற்கு தான் வெக்கம் வெக்கம்மாகி போனது. ‘
பின்னால் இருந்து அவள் காதில்.. ” வேண்ணாம் முயல்குட்டி.. நானும் போனாபோகுதுனு.. நல்ல பையனா டிசென்ட்டா இருக்கனும் பார்க்கிறேன். ஆனா நீ விடமாட்ட போல. இன்னோரு தடவை ஏதாவது பண்ணின?. நீ ஏற்கவே மனதில் நினைத்தமாதிரி.. சேதாரம் உனக்குதான். பார்த்துக்கோ. ” என புன்னகையுடன் கூறி தான்விட்ட வேலை பார்த்தான்.
அவன் கூறியபின்.. புன்னகையுடன் ” ம் ” தலையாட்டி பின் அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தாள்.
” ம்.. முடித்துவிட்டேன். ” அவளை தன் பக்கமாக திருப்பி தன்னவளை பார்த்தான்.
‘ அடர்பச்சை வண்ண சேலை.. நேர்வரிசையாக பூக்களின் வடிவம் உடல்முழுவதும் இருக்க. சிவப்பு நிற பெரியபாடர் மற்றும் பிளவுஸ். அதில் கைக்கு சேலையின் பாடர் வைத்தும்.. சிறிது டிசைன்செய்த பிளவுஸ் அணிந்துயிருக்க. மெல்லிய அலங்காரம். நகையானது இரவிற்கு ஏற்ற வகையில்.. இருபக்கமும் வெள்ளை, ரூபிகற்கள் பதித்த ஆரமும்.. அதில் இருந்த பூங்களின் வடிவ பதக்கத்தின்.. வடிவத்தில் ஜிமிக்கியும்.. பூ போன்ற சிறிய நெற்றிச்சூட்டி மட்டும் அணிந்தயிருந்தவளை.. ‘
‘ சிறிது தலையலங்காரத்துடன் பின்னியிருந்த கூந்தலில் மல்லிகைச்சூடி.. நடுவில் மூன்றுநாட்டுரோஜா பூவைத்தும்.. பின் ஒருபின்னல் விட்டு பின்னல் சிறிதளவு மல்லிகையின் நடுவில் அதே ரோஜாவகையில் உள்ள சிறிய ரோஜாவைத்தும்.. பூ வைக்காத பின்னலில் கற்கள் பதித்த சிறியராக்கொடியினால்.. தன் அரசியை அலங்கரித்து இருந்தான். ‘
‘ எழிலரசி தன்னை தனு பார்க்கும் நேரத்தில்.. அவளும் தன்னவனை பார்த்தாள்.. தன் உடைக்குஏற்றவாறு.. சிவப்பு சட்டையும்.. சந்தனநிற பேன்ட் அணிந்து.. ஷேவ் செய்து.. அளவானமீசை வைத்து.. தன் அடர்முடியை சாதாரணமாக சீவி.. கழுத்தில் மெல்லிய செயின் அணிந்து.. தன் மன்னவனாக அவளை புன்னகை முகத்துடன் பார்த்துயிருந்தான். ‘
பின் வேந்தன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே.. தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த.. பாதுகாப்பு வெல்வட் பையில் இருந்ததை எடுத்து அரசியின் கண்முன்னால் விரித்து காண்பித்தான்.
” முயல்குட்டி உனக்கு நான் முதன்முதலா வாங்கியது. ”
‘ காசுமாலை.. அதன்நடுவே மற்றும் இருபக்கத்தின் இடையில்.. பார்வையான பெரிய மரகதம், சிலவைர கற்கள் பதித்த.. மயில் வடிவம், தங்கமணிகள் இடம்பெற்ற பதக்கம் கொண்ட நெக்லஸ். ”
‘ புன்னகையுடன்.. அவள் கழுத்தில் அணிவித்தான். பின் அவள் கன்னம் தாங்கி.. அவள் நெற்றியில் அழுத்த முத்தம் ஒன்றை வழங்கி.. அவளை அவன் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.’
‘ வேந்தன் தன்னவளுக்கு அணிவித்த அந்த நிமிடத்தை தன் மனதிற்குள் நிரப்பியிருக்க.. அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளோ.. தன்னவனின் இதயத்துடிப்பில் தன்னையும் அதனுடன் இணைத்து.. அந்த நிமிடத்தை அனுபவித்து.. தன் நினைவிற்காக சேமித்துக் வைத்துக் கொண்டுயிருந்தாள். ‘ தாங்கள் மட்டுமே இருந்த உலகத்தில்.. இருநிமிடங்கள் பின்..
” அரசிம்மா.. முயல்குட்டி!.. ”
” ம் “
” நேரம் ஆச்சு.. நான் போய் கதவை திறக்கிறேன். “
” ம்.. ” எனக் கூறி நெஞ்சில் இருந்து எழும்போது.. மறக்காமல் அவன் எதிர்பார்த்த முத்தத்தை வழங்கிவிட்டு.. புன்னகையுடன் சற்று தள்ளி நின்றுக்கொண்டு… ” நேரம் ஆச்சு தனு.. போய் கதவை திறங்க. ”
‘ சோ ஸ்விட் முயல்குட்டிடி... என எண்ணிய படியே ‘ கதவை திறக்க.. அங்கு உள்ளிருந்து சென்றவர்களுடன்.. இவனின் நண்பர்களும் இருந்தார்கள்.
” சீப்பு வாங்கிட்டாயா மச்சான்?.. ” சாதாரணமாக கேட்க..
” இல்லடா.. அரசிகிட்ட இல்லையாம அதான் நான் வந்துட்டேன். அப்புறம் நீங்க எல்லாம் ரெடிபோல.. ” எனக் கூறிக் கொண்டுயிருக்கும் போது..
” நாங்க எல்லாம் ரெடிதான்.. நான் போய் அம்மாவ கூப்பிட்டு வந்த பின்.. நீ ரெடியானு பார்க்கலானு வந்தேன்.. ம்.. பல வருட தாடிய எடுத்து.. ஆளே மாறியது போல இருக்க. சரிசரி.. நாம்ம உள்ளே போய் பேசலாமா?.. ”
புன்னகையுடன்.. ” ம்.. பேசலாம்.. ஒருநிமிடம் ” எனக் கூறி அறையை பார்த்தான்.. ஏற்கனவே திலகனின் குரலை கேட்டு.. அரசி பெண்கள் சில எடுத்து வைக்காத உடைகளை சரியாக வைத்து முடிக்கும் நிலையில் இருந்தாள். ‘ முயல்குட்டி.. என் செல்லமே.. ‘
” வாங்க ” எனக் கூறி கதவை முழுவதும் திறக்க..
முதலில் பெண்கள் வர.. அடுத்து நண்பர்கள் வந்தனர். அவர்கள் இப்போதுதான் எழிலரசியின் அறைக்கு வருவதால்.. அவனின் நண்பர்கள் ஊஞ்சலை பார்த்தும்..வேந்தனை பார்த்தும் சிரித்தனர்.
” அண்ணா நீங்க தான் எல்லாம் செய்ததா?.. ” என எழிலரசியின் கூந்தல் பூ அலங்காரத்தை பார்த்து கேட்க.. நண்பர்களும் கூட பார்க்க..
புன்னகையுடன்.. ” ம்.. ”
” சிம்புள அழகா இருக்குண்ணா!.. ”
” டேய்.. ரொம்ப அழகாக இருக்குடா. கைவசம் நிறைய தொழில் வைத்துயிருக்க போல?. ”
” டேய்.. தொழில்னு சொன்ன பிச்சுவிடுவேன். என் அரசிக்கு மட்டும்தான் !.. நான் எல்லாம் பண்ணுவேன். ” சற்று கடின குரலில் கூற.
அனைவரின் பார்வையும் இவர்கள் மீது திரும்ப.. தன் தங்கை மற்றும் தியாவை வம்பிழுக்க.. ” டேய்.. அப்ப உன் அருமை தங்கை வசு, வளர்ப்பு தங்கை தீபிகா, இப்ப அண்ணாவா உன்னை நினைக்கும்.. வேந்தன் கொள்கை பரப்பு செயலாளர் சத்யா என்ற உன் தங்கை.. இவங்க யாருக்கும் கூட நீ பண்ண மாட்டியா டா?.. “
‘ திலகன் கூறியதில் கடைசி வரியை கேட்ட வேந்தன்.. என்னவென்று சத்யாவை பார்க்க.. அவள் திலகனை முறைத்துக் கொண்டுயிருந்தாள்.. என்னமோ நடந்துயிருக்கு?.. ‘
” ம்.. நான் எதுக்குடா அவங்களுக்கு வைத்துவிடனும்?.. என் தங்கைகளுக்கு எல்லாம் அவங்க அவங்க புருஷன் வைத்து விடுவாங்க. வசுக்கு ரெடி.. தீபிகாவுக்கு நான் நல்ல பையான பார்த்து வைத்துயிருக்கேன்.. சத்யாவிற்கு தான் நல்ல பையான மாப்பிள்ளை பார்க்கனும்.. அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். அதுவரைக்கும் தங்கைகளுக்கும்.. என்னையவிட என் அரசி அழகாக வைத்துவிடுவா. நான் வைத்தா என்ன?.. அரசி வைத்தா என்ன?.. ” என புன்னகையுடன் அவனை நக்கல் பார்வை பார்த்து வைக்க..
இதை கேட்ட மற்றவர்கள் சிரிக்க.. திலகன் டேய்.. ‘ நீ என்னைய தவிர சத்யாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்ப்ப?.. ‘ என எண்ண.. அவன் எண்ணத்தை நினைத்து.. ஒரு நொடி அதிர்ந்து.. பின் மகிழ்ந்தான்.
‘ அவன் சத்யாவை பார்த்த இரு நாட்களிலேயே.. சத்யாவின் அனைத்து குணங்களும் பிடித்துவிட.. இவள் தனக்கு மனைவியாக வந்தாள்.. அப்பா இல்லாமல் இருக்கும் எங்களுக்கு தன்னையும்.. தன்அம்மா, அக்கா, தங்கையை அன்புடன், பொறுப்புடனும் பார்ப்பாள். தானும் அவள் குடும்பத்தின் முத்தமகனாக இருந்து அவள் தங்கை மற்றும் பெற்றோரை பார்த்துக் கொண்டு.. தன் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்தான். ஆனால் சிறிது நாள் தன் மனதில் அவளின் மீதான விருப்பத்தின் உறுதியை சோதித்து.. பின் முடிவு எடுக்க நினைத்தவன்.. வேந்தன் வேறு மாப்பிள்ளைஎன்று விளையாட்டிற்கு கூறியதை கூட ஏற்க முடியாமல்.. நான் தான் அவளின் கணவன் என்று முடிவு எடுத்துவிட்டான். ‘
பெண்கள் அவன் கூறியதை கேட்டு.. புன்னகையுடன் எழிலரசியை பார்த்துவிட்டு.. கடைசி கட்ட வேலைகளையும் பார்த்திருக்க..
இவனை பார்த்துயிருந்த வேந்தன்.. ” என்னடா முடிவு பண்ணிவிட்ட போல!.. என் புது தங்கை சத்யாவிற்கு மாப்பிள்ளையாக நீங்க ரெடியா?.. ” எனக் கூறி தீபிகாவை ஒரு பார்வை பார்க்க.. அவளும் அருகில் வந்தவள்..
” அண்ணா.. நீங்க செய்ததெல்லாம் இப்ப தான் சத்யா அவங்க சொல்லி கேள்விபட்டேன். நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் வெளிய வரல.. ” எனக் கூறும் போதே..
” இன்னும் ஒரு அதிர்ச்சி இருக்கு.. அதையும் கேட்டு பிறகு வெளியவா.. உங்க வீட்டுக்கும் உன் அண்ணிய திலகன் சீக்கிரமா கூட்டி வரப் போறான். அதுயாருனா?.. ”
புன்னகையுடன்.. ” சத்யா தானே?.. “
” ஹேய் எப்படி தீபிகா கண்டுபிடுச்ச?.. ம்.. கண்டுபிடிச்சு என்ன ஆக போகுது?.. அவங்க நான் சொன்னா என்ன சொல்வாங்க?.. இல்ல தப்பா எடுத்துப்பாங்களோ பயமா இருக்கு?.. அதனாலையும் கூட நான் இந்நேரம் வரை முடிவுக்கு வரமா இருந்தேன். “
” இன்னும் கொஞ்சும்நாள் கழித்து சொல்லுணா.. கண்டிப்பா ஒத்துப்பாங்க. எப்படி சொல்லுறனா?.. அவங்க என்னிடம் பேசும்போது வினோத், வேந்தன் அண்ணாவை.. அண்ணானு சொல்லுறாங்க. ஆனா உன்னைய உங்க அண்ணானுதான் சொன்னாங்க. அதனால் அவங்களை இன்னும் நல்லா புரிந்துக்கொள்ள கொஞ்சம்நாள் டைம் எடுத்து பின்.. சொல்லு!.. கண்டிப்பா ஜெயம்தான் உனக்கு. ”
தங்கை கூறியதை கேட்டு.. மனம் ம்.. நல்லாவே டைம் எடுத்து பிறகுதான் சொல்லனும்.. அதைவிட அவங்களும் நம்மை தானாக புரிந்துக் கொள்ள வேண்டும். புன்னகையுடன்.. ” ம்.. சரிங்க பெரியமனுஷி. “
வேந்தனிடம் திரும்பி.. ” சரிடா. நாம்ம இன்பா ரூமிற்கு போவோம்.. இனி உன்னை முதலில் அழைக்க வந்துவிடுவாங்க. வா அங்கு போகலாம். ”
‘ வேந்தன் அவன்கூறுவது சரி என்று உணர்ந்து.. தன்னவளின் அறையை ஒரு பார்வை சுற்றிபார்த்து.. பின் தன்னவளை பார்க்க.. ‘
‘ புன்னகையுடன் தன் தங்கையுடன் அவர்களின் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டுயிருந்தவள்.. தன்னை அவ்வப்போது நாங்கள் பேசும் போது பார்த்து கொண்டுயிருந்து இருப்பாள் போல.. நான் அவளை பார்த்தவுடன்.. வேந்தனை பார்த்தவள்.. தன் தங்கையிடம் கூறி.. பின் அவனின் அருகில் வந்தாள். ‘
” தனு அண்ணா ரூம்மிற்கு போறிங்களா?.. “
” ம்.. “
அருகில் இருப்பவர்களை பார்த்துவிட்டு.. ” நாம்ம மட்டும் ஒரு இரண்டு போட்டோ.. பின்ன எல்லோரும்மா ஒன்னு எடுத்துக் கொண்டு.. பின்ன கிளம்புக. ”
புன்னகையுடன்.. ” சரி முயல்குட்டி. ” மெதுவாக கூறி..
‘ பின் இருவரும் தங்களின் விருப்பமான இடத்தில் நின்று.. இன்னும் சிறிதுநேரத்தில் தங்களை தன் துணைகள், புது உறவுகளோடு இணைக்கப்போகும்.. ஆரம்ப நிகழ்ச்சியை மனதில் நினைத்து.. ஆனந்தம்!.. கொண்டு அதன் வெளிப்பாடு முகத்தில் தோன்றிய உணர்வுடன் இருந்தவர்களை போன்காமிரா அழகாக படமெடுத்தது.. அதன் பிறகு எல்லோரும்மாக தன் துணைகளுடன் அருகிலே.. பின்புறத்திலே நின்றுக்கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மறக்காமல் தன்னவளின் கைகளை பிடித்துக் கொண்டான் வேந்தன. ‘
‘ வேந்தன் மீண்டும் ஒருமுறை அறையை பார்த்துவிட்டு.. இன்பா அறைக்கு செல்ல.. அங்கு இருந்தவள் தான் சற்று சோர்ந்துபோனால். தன் கை அவனின் ஸ்பரிசத்தில் இன்னும் இருப்பது போல இருக்க.. இருநிமிடம் அமைதியாக ஏதோ எடுத்து வைப்பது போல இருந்தவள்.. பின் தன்னை வைத்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.. என்ற நாணத்தால் பெண்களுடன் சென்று ஐக்கியமாகி உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள். ‘
இவர்கள் இவ்வாறு இருக்க.. நம் நாயகன், நாயகியின் உறுதி நிகழ்ச்சி ஏற்பாடுகள் முடிந்து.. உறவினர்கள் அனைவரும் வந்து ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது.
அப்போது அங்கு.. யாரால் காலையில் முடிய வேண்டிய நிகழ்ச்சி மாலை நேரத்திற்கு மாற்ற காரணமாக இருந்த வேந்தனின் மாமா கணேஷ். அவர் தன் அதிர்ச்சியை மறைத்து.. புன்னகைமுகமாக தன் அண்ணாவிடம் பேசியபடியே நிகழ்ச்சிக்கு தயாரான வீட்டை பார்வையிட்டார்.
‘ கணேஷ் பெண் பார்க்கும் படலம் தானே.. அவராகவே பெண்ணின் தகுதியை வைத்து வேந்தன் சம்மதம் கூறமாட்டான். அதனால் எதற்கு தான் அங்கு செல்ல வேண்டுமா?. என நினைத்தவருக்கு.. சாதகமாக வண்டி பழுதடைந்து விட.. விரையில் முடித்து வரக் கூடிய சூழ்நிலை இருந்தும்.. அவரின் வேண்டாம் என்ற எண்ணத்தால்.. அவர் தாமதம் செய்து அவர் வர முடியாது எனக்கூறி அவர் ஒன்று நினைத்து செயல்பட.. ஆனால் இங்கோ வேந்தன் சம்மதம் தெரிவித்து.. தன்னால் மாலை நிகழ்ச்சி என மாற்றியமைத்து. ‘
‘ அதனைவிட.. எந்த பெண்ணின் தகுதியை அவர்.. தவறாக கணித்தாரோ!.. அந்த பெண்ணான எழிலரசியின் யோசனையால் தான்!. அனைவரும் பழக நாட்கள் எடுத்துயிருக்கலாம்.. ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில்.. இரு குடும்பமாக இருந்தவர்கள்.. இப்போது ஒருகுடும்பம் என்று நினைக்கும் அளவிற்கும்.. அனைவரையும் உரிமையாக.. பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நன்கு பழகியிருந்தனர். அதன்பிறகு சாதாரணமாக சிப்புளாக முடிந்துயிருக்க வேண்டிய உறுதிநிகழ்ச்சியானது..’
‘ இப்போது.. பாசமுள்ள ஒரு அண்ணா இருந்தாலே.. தன் தங்கையின் திருமண நிகழ்ச்சி எல்லாவற்றையும் பொறுப்புடன் இருந்து சிறப்பாக அனைவரும் வியக்கும் அளவிற்கு இருக்கும். ஆனால் எழிலரசிக்கு தான்.. தன் சொந்த அண்ணா இன்பா இல்லாது.. அண்ணாவாக நினைக்கும் மாமாக்கள் நால்வர்.. தன்னவனின் குடும்பத்தில் எழிலின் மீது நம்பிக்கை வைத்துயிருக்கும் இருஅண்ணாகள்.. அதனைவிட தங்கள் குழந்தைகளின் விருப்பம்படி தான் அனைத்தும் நாங்கள் செய்வோம் என அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அதனை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.. என நினைக்கும் இருவரின் பெற்றோர்கள் என.. ‘
‘ தங்கள் விருப்பமானவர்களின் நிகழ்ச்சியை ஞாயிறு என்பதால் தாங்கள், தங்கள் கடைகளின் வேலை செய்பவர்களின் அனைவரின் ஒத்தழைப்புடன்.. அதிவிரைவாக அனைத்து வேலைகளை திட்டமிட்டு.. மூன்றுமணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை ஒருமணி நேரத்தில் எழிலரசியின் வீட்டை.. ‘
‘ சாமந்தி, ரோஜா, வாடாமல்லி, தாமரை, துளசி இவைகளை கொண்டு கட்டப்பட்ட சரங்களால்.. ‘ வீட்டை பூக்களால் அலங்கரித்து வைத்துவிட்டனர். ‘
‘ அத்தனையும் பார்த்து கணேஷ் மனதினுள் பிடிக்காத மனநிலையில் இருந்துக் கொண்டே வெளியில் புன்னகை முகமாக இருந்தார். இவருடன் எழிலரசியின் அத்தைகள் ராதா, தேவகியும். ஏனெனில் இவைகளில் பெரும்பான்மையை செய்தது தங்களின் மகன்கள் அருட்செல்வம், அருள்நிதியும் தான். ‘
‘ இவர்கள் இருவரும் தான் எழிலரசியின் அன்பை கண்கூட பார்த்தனறே.. அன்பு என்றால் அவள் தங்கள்மீதும், அவளை தன் இதயத்தில் தாங்கும் வேந்தனையும் பார்த்தனறே.. அதனால் இவ்வளவு நாள் அவளை சரியாக புரிந்துக் கொள்ளாமல் இருந்ததற்கும், அவளின் கண் கலங்களை வைத்தே.. அவளின் மனவருத்தத்தை போக்க.. தன்னாக இதை அவளுக்கு செய்யுங்கள் எனக்கூறிய வேந்தன் அவளுக்கு கிடைத்துயிருப்பதை கொண்டாடவும்.. அவர்கள் வேந்தனின் மாமா கார்த்திக், விஸ்வநாதன், அண்ணா ஈஸ்வருடன் சேர்ந்து செய்தார்கள். ‘
‘ அன்னையர்கள் அதனை பார்த்துயிருந்த போதும்.. ஒன்றும் கூற முடியவில்லை. இருந்தாலும் இந்த அளவிற்கு.. அவர்களும் கூட எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நாள் நடந்த திருமணங்கள் அனைத்தும் திருமணம நாள் அன்று ஆடம்பரமாக நடக்கும். ஆனால் பிற சடங்குகள் அனைத்தும் நடக்கும் அனைவரும் வருவர்.. ஆனால் இவ்வளவு அலங்காரம் இருக்காது. அதனால் இதை பிடித்தும், பிடிக்காத மனநிலையில் பார்த்திருந்தார்கள்.
‘ இவர்களுடன் இவர்களின் மகள் மேகாவும் தான். மேகா எழிலரசியை விட சிலமாதங்கள் மட்டுமே இளையவள். இன்பாவிற்கும், மேகாவிற்கும் இந்நேரம் திருமணம் நடந்துயிருக்கலாம்.. ஆனால் நடக்கவில்லை. அதற்கு காரணம் எழிலரசி தான். அவளின் எண்ணம் எழில் தன் அண்ணா அஸ்வினை திருமணம் செய்திருந்தால்.. தனக்கு திருமணம் முடிந்துயிருக்கும். ஆனால் யாரும் கேட்கவில்லை.. கேட்கவிடவும் இல்லை இன்பா. அவனிற்கு அவளின் அண்ணா என்ற எண்ணம்தான் தெரியுமே. ‘
அதனால் மேகா சாதாரணமாக அவளின் எண்ணத்தை அவனிடம் இருவருடம்முன் ஒருநாள்கூறினாள்.. ” அது எப்படி மாமா?.. எழில் என் அண்ணாவை. மாமானு நினைக்காம.. அண்ணானு நினைக்க தோன்றும். நான் அப்படி யாரையும் நினைத்தது இல்லை. அம்மா, அப்பா விவரம் தெரிந்து என்ன முறை என்று அவர்களை அறிமுகம் செய்தார்களோ.. அப்படிதான் நினைத்தேன்.. கூப்பிட்டேன். புசுசா உங்க தங்கச்சி கூறுகிறாள்.. ரொம்ப ஒவராத பண்ணுறா. நீங்களும் அதற்கு ஒன்னும் சொல்லமா இருக்கிங்க. ” என்று கூறி. அவனின் கோபத்திற்கு ஆளாகி.. அவன் ஒருவருடம் அவளிடம் பேசவில்லை. அவள் எவ்வளவு பேசிப்பார்த்தும் பேசவில்லை.
‘ அதன்பின் ஒருநாள் பெரியவர்கள் ஜாதகம் எழிலரசிக்கு பார்க்க போகும் நாள்.. அவர்களின் தங்கைகள் வீட்டிற்கு வர.. மேகாவிற்கும் பார்க்கலாம் என நினைத்து பார்க்க.. எழிலிற்கு ஒருவருடம் கழித்து வரம் பார்க்க கூற.. மேகா, இன்பாவிற்கு.. திருமணம் செய்தால் உடனடியாக செய்ய வேண்டும்.. இல்லையெனில் மூன்றுவருடம் கழித்துதான் செய்ய வேண்டும் என கூறி விட்டார்கள். ‘
‘ இன்பா தன் தங்கைக்கு திருமணம் முடியாமல் தான் செய்துக் கொள்ள விரும்பவில்லை.. கண்டிப்பாக திருமணம் வேண்டும் எனில் மேகாவிற்கு வேறு யாரை வேண்டுமானாலும் செய்யலாம்.. பிறகு என்னை காரணம் கூறக்கூடாது எனக் கூறிவிட. ‘
‘ அவனின் அத்தைகள் தன் அண்ணாகுடும்பத்தில் கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்து.. மூன்றுவருடம் கழித்தே செய்துவிடலாம் எனக் கூறிவிட்டார்கள். அதனால் இப்போது மேகா தன் அண்ணா கம்பெனியிலேயே வேலைக்கு முயற்சி செய்கிறாள். ‘
‘ இன்பாவிற்கு மேகா மீது.. அத்தை மகள் என்ற முறையில் மட்டும் பாசம் உள்ளது. மற்றபடி எதுவென்றாலும் திருமணம் முடிந்தபிறகு தான். அவர்கள் வீட்டில் உள்ள அனைத்து ஆண்கள் அப்படிதான் இருந்தார்கள். யாரும் தன் மனைவியாக வருபவர்களை பிடிக்கும். அதிக உரிமை எடுத்துக் கொள்ளவில்லை. அப்படிதான் இவனும் பொதுவான பேச்சுகள் மட்டுமே. அந்த ஒருவருடத்திற்கு பிறகு அதுவும் குறைந்துவிட்டது. ‘
‘ மேகாவும் எழிலரசி திருமணம் முடியட்டும்.. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இன்பாவிடம் அமைதியாக உள்ளாள். அவளிற்கும் பெரியவர்களின் விருப்பம்.. அதனால் வந்த சாதாரணமான அன்பு மட்டும்.. அதிலும் அவனிடம் ஒருவருடம் பேசாமல் இருந்த காரணத்தால்.. அதில் அன்பு சற்றுக்குறைந்து.. கோபம் கூட. நான்கு ஆண்கள் ஒரு பெண்ணாக வளர்ந்தவள்.. மற்றொரு பெண்ணால்.. தன்னை இன்பா உதாசினம் செய்தது பிடிக்கவில்லை.. மேகாவிற்கு அதைவிட அவள்கூறிய காரணம் சுத்தமாக பிடிக்கவில்லை. ‘
‘ மேகாவின் குடும்பத்தில் மேகா, அஸ்வின் சிவந்த நிறமும், மற்றவர்கள் சந்தனநிறத்தை உடையவர்கள்.. எழிலரசியின் வீட்டில் இளமதி தன் அம்மாவை போன்று நல்லசிவந்த நிறம் உடையவள். அப்பா போன்று எழிலும், இன்பாவும் சந்தனநிறம் உடையவர்கள்.
அதனால் எப்படி மறுக்கலாம் என் அண்ணாவை.. படிப்பில், அழகில், இப்போது பார்க்கும் வேலையில் எழிலைவிட அண்ணா அஸ்வின் உயர்தகுதி உடையவன் என்று அவளின் எண்ணம். எழிலை காரணமாக வைத்து தன்னிடம் ஒருவன் தன்னை புறக்கணிப்பதா?.. பின்னால் பார்த்துக்கொள்கிறேன் என்று.. அவளும் தற்போதைக்கு அமைதியாக இருக்கலாம் என நினைத்து இருந்தாள். ‘
‘ அவளிற்கு தெரியவில்லை. திருமணத்தில் ஒருவர் மீது வரும் அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு என்பதும்.. படிப்பு, அழகு அதற்கு அப்பாற்பட்டது என்று. ‘
‘ அப்படி அமைதியாக இருந்து.. இன்று நடந்தை பார்த்துக் கொண்டுயிருந்ததில் எழிலரசி, வேந்தன் நடவடிக்கைகள் சந்தேகத்தையும், எழிலின் மாமாக்களை அண்ணா என்ற நினைப்பிற்கு வேந்தனும் சரி எனக்கூறி.. தன் அண்ணாக்களையே வெளிப்படையாக சம்மதிக்க வைத்தது.. பின் ஆடி, பாடி இருந்தது, ஒரு உடைக்கு தங்கையுடன் சண்டை.. அதற்கும் ஒரு காரணம்.. அதை வேந்தன் ஏற்று அமைதியாக, புன்னகை முகத்துடன் எழிலிற்கு ஒத்துழைப்பு.. அதைவிட இன்பா மற்றும் அங்கு உள்ளவர்களும்.. சரி என்பது போல இருப்பதை பார்த்து.. அவளால் அங்கு இருக்க பிடிக்காமல்.. பெரிய மாமா வீட்டிற்கு வந்து அம்மாவுடன் தலைவலி எனக் கூறி.. அங்குயிருந்து கிளம்பி வந்திருந்தாள். ‘
‘ மேகாவிற்கு எழிலரசியின் மீது.. இந்த அண்ணா, உறவுமுறை கல்யாணம் வேண்டாம் என்பதை தவிர.. வேறு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அவர்களின் 20வயது முன்வரை நன்றாக பழகியவர்கள்தான். அதனால்தான் பெரியமாமா வீட்டிற்கு போகும் போது எதுவும் இல்லாமல் இருந்தவீடு.. இப்போது முழு அலங்காரத்துடன் இருப்பதை பார்க்க பார்க்க.. அவளிற்காக அனைவரும் சேர்ந்து செய்வதை பார்த்து.. சந்தோஷப்படுவதா?.. கோபப்படுவதா தெரியாமல் உள்ளே இருந்த தன் அண்ணி, குழந்தைகள் இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தாள். ‘
மாலை 7. காலையில் பையன்வீடு, பெண்வீடு என இருபிரிவாக அமர்ந்துயிருந்தவர்கள் இப்பொது அந்த இடமே பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் எல்லோரும் யார் யார்வீடு?. தெரியாத அளவிற்கு அமர்ந்திருந்தார்கள்.
அமர்ந்தவர்களில் இளையவர்கள் ஒருவனை பார்த்து சிரிப்புடனும்.. பெரியவர்கள் ஏன்டா இவனை மட்டும் போய் அழைத்தோம்?. என. அவனை பார்த்து சடங்கடத்துடனும் அமர்ந்துயிருந்தார்கள்.