புன்னகையுடன்.. லைட்ஆரஞ் மற்றும் ப்ளூ வண்ணச்சுவருடன்.. தன் அறையை விட பெரியது. ஆனால் அதில் இருவர் படுக்கும் அளவிற்கான கட்டில்,. அதில் விரிப்பான், இரு தலையணையும்.. இவை இரண்டும், ஐன்னல் திரைச்சிலைகளும்.. சுவரின் கலர் அதற்கு ஏற்றவாறு கலந்துயிருந்த ட்ரஸ்ஸிங் டேபிள், வாட்ரோப் இருக்க.. அதன் அருகே கதவு திறத்தபடி ஒரு அறை.. பின் இருகதவு இருக்க.. பால்கனி, பாத்ரூம் என யூகித்தாள். தன்னவன் இங்கு இல்லாததால் அறையை பராமரிப்பதற்கு வசதியாக குறைந்த பொருட்கள் மட்டுமே இருக்கின்றனவோ!. தன்னவனின் அறையில் பார்வையை சுழற்றிய படியே உடையை மாற்றினாள்.
அவள் எல்லாம் செய்து முடிக்க.. வேந்தன் கதவை தட்ட சரியாக இருந்தது. பின் கதவை திறந்தவள்.. அவனை பார்க்க சற்று வெக்கப்பட்டாள். வேந்தன் தன் அரசியை பார்த்தவாறு கதவை சாற்றி.. ரசிப்பு புன்னகையுடன் உள் நுழைந்தான்.
‘ தன்னவள் சில்க் துணியினால் ஆன.. அடர்பச்சை வண்ண.. பிளைன் கிராப் டாப்ஸ், கிரீம் வண்ண சிலக் துணியில் பேபிபிங்க் பூக்கள் அதன் இலையோடு இருப்பது போலனான பிரண்ட்.. ஆங்காங்கே இருக்கும் லெஹாங்காவும், தோடு மட்டும் அழகாக ஆட.. கூந்தலில் இருந்த பூவை எடுத்து, பின்னலை முழுவதையும் தளர்த்தி.. இருபக்க சில முடிகளை ஹேர்பின் கொண்டு நடுவில் அடக்கி.. மீதியை விரித்து விட்டுயிருந்தால். பின்னிய முடிகள் சுருள் போல இருக்க.. அதுவும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ‘
‘ அழகு பதுமையாக இருந்தவள் தலை குனிந்தும்.. அவனை காண முடியாமல் ரூம்மை பார்ப்பதுபோல தலையை சுற்றிக்கொண்டு இருந்தது. காரணம் அவளின் உடை டாப் மற்றும் பாவாடைக்கும் இடையில் தெரியும்.. அவனிற்கான.. மறைக்கபடாத சிறிய இடைப்பகுதி.. மற்றும் அவளின் கள்ளன் அந்த உடைக்கு உடைய ஷால்லை வேண்டும் என்றே கொடுக்கவில்லையா.. இல்லை அது இல்லையா என தெரியவில்லை. முதன்முறை இதுபோலனா உடை.. அதுவும் தன்னவனின் கூர்பார்வையால் இவ்வளவு நேரம் வராத நாணம் அவளுள் வந்து.. அவளை ஆள ஆரம்பித்தது. ‘
கண்களில் கள்ளம் கலந்து தன்னவளின் தனக்கான இடையில் கைவைத்து இழுத்து அணைத்து வார்த்தையில் குழைவை சேர்த்து..” ம்.. ரொம்ப அழகாக இருக்க முயல்குட்டி.. ஆனா நான் இதை நான் கோயில் பார்த்த முயல்குட்டியை ஞாபகம் வைத்து வாங்கியது. பிறகு எப்படி?.. அப்படியே இப்ப இருக்க முயல்குட்டிக்கு வாங்கியது போல டாப்பில் இடுப்புபகுதி பிட்டா இருக்கு?. ” கடைசி வார்த்தை மற்றும் கையை அழுத்திக் கொண்டே கூற..
அவனின் அழுத்தம் அவளை ஏதேஏதோ செய்ய… ” ஹன்.. அது அது சேப்டி பின்னால் பின்னாடி சரிசெய்து இருக்கேன். தனு.. சரி இதை எப்ப வாங்கினீங்க?.. “
” ம்.. இரண்டு வருடம் இருக்கும் முயல்குட்டி. ” எனக் கூறியபடியே.. அவளை இறுக்க அணைத்து.. அவளின் கண்களையே பார்த்திருந்தான்.
‘ கண்களின் சொந்தகாரியோ அவனின் பார்வையாலும்.. அவளின் கண்களுக்கு நேராக தெரியும் அவனின் செந்தாமரை நிற இதழ்கள்.. சற்றுநேரம் முன் அவன் கொடுத்த இதழ் முத்தத்தை ஞாபகப்படுத்தி மீண்டும் கொடுத்தால் எப்படி இருக்கும்?.. என அவளின் கள்ளி மனம் கேட்க.. தன்னவன் கன்னத்தை பிடித்து கொஞ்சுவதை போல.. அவனின் இதழை பிடித்து கொஞ்சி விளையாட அவள் கை துருதுருத்தி.. அவளை பாடாய்படுத்தியது. தன்னவனை நினைத்து.. ஆனா முடியாதே என எச்சில் விழுங்கி.. தன்னை மறைக்க பெரும்பாடுபட்டு.. அவனின் நெஞ்சிலேயே அவள் முகத்தை அழுத்தி அவனை பட்டும்படாமல் கட்டிக்கொண்டாள். ‘
தன்னவள் தன்னை முழுங்கும் பார்வையை பார்த்திருத்தவன்.. அவனை வெக்கப்பட வைத்து.. ஒன்னு கொடுத்ததிற்கே இப்படியா முயல்குட்டி!.. மேலும் அவளின் எண்ணத்தை படித்தவன்.. அவள் நெற்றியின் ஓரத்தில் தன் முகத்தை வைத்து.. ” இந்த மூனுநாளா நீ தான் என்னை ரொம்பவே படுத்துற முயல்குட்டி !.. ”
” நான் பார்த்த அன்றைக்கே உங்க பாட்டி சொன்ன மாதிரி செய்து!.. என் முயல்குட்டிய.. முழுசா என் முயல்குட்டியா, நான் உன் தனுவா மாறியிருக்கலாம்.. என ஒருசமயம் தோனும். ”
” ஆனா மற்றொரு சமயம்.. நான் இத்தனை நாளா உன்னிடம் காண்பிக்காத காதலை கணவனா இல்லாம்ம.. காதலனா இருந்து.. உறுதிக்கும், கல்யாணத்திற்கும் இடைப்பட்ட நாளில் எல்லோருரையும் அழகா சமாளித்து.. திட்டு வாங்கி, கிண்டல் பண்ணி.. உன்னை நினைத்த நேரத்தில் பார்க்க.. சென்னையிருந்து இங்கு ஆவலுடன் வந்து பார்க்கனும்.. நாம்ம நமக்கு பிடித்ததை வாங்கி, பிடித்த செயல் செய்தும் என நாம்ம காதல் பண்ண வேண்டும். ” அவன் கூறிக் கொண்டுயிருக்கும் போது.. அவன் அவனின் மீது இளஞ்சூடான வெப்பத்தை உணர்ந்தான். என்ன?.. என்று அவன் தன்னவளை பார்க்க.. அவள் கண்களில் இருந்துதான் கண்ணீர் வந்துக் கொண்டுயிருந்தது.
அவன் பதட்டம் கொண்டு.. ” முயல்குட்டி.. என்னடா.. எதுக்கு?.. எதுக்கு இப்ப இந்த.. ” கண்ணீர்!.. என்று அதை கூட அவனால் கூற முடியவில்லை. தன் கேட்க வந்த கேள்விக்கு??.. அவளே பதில் கூறுவாள் என.. அவன் ஒரு நொடி அமைதியாக இருக்க..
அவன் எண்ணத்தை போல.. அவள் அவனை பார்த்து.. ” நீங்க தான் தனு என்னை!.. எல்லா விதத்திலும் படுத்துறிங்க. நீங்க சொல்வதை கேட்டா.. நான் என்ன நினைக்க சொல்லுங்க. நீங்க என்னை மட்டும் தான் நினைத்து.. பல வருடங்களா உங்களோட செயல்கள், முடிவு எல்லாம் எடுத்து செய்திருக்கிங்க.. இப்பவும்!… இனிமே இதுதான் செய்யப் போறேனும் எல்லோரிடமும் சொல்லிட்டிங்க. ஆனா எனக்கு ஒன்னு மட்டும் என்னை நினைத்தா உறுத்தல இருக்கு தனு. ” என அவள் கூறக்கொண்டுயிருக்க..
‘ வேந்தன் தன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் தன்னவளில்.. குரல் மற்றும் உடம்பு சிறு நடுக்கத்துடன்இருந்ததை ஆரம்பத்திலே உணர்ந்து.. அவளை தூக்கிக்கொண்டு.. அந்நிலையிலேயே கட்டிலில்சாய்ந்து அமர்ந்துக் கொண்டான். ஆனால் எதற்கு பதில் அப்போதையே கூறவில்லை.. அவள் முழுவதும் கூறியப் பின் தான் கூறவேண்டும் என்று இருந்தான். ‘
ஆனால் அரசியே அவன் செய்த எதையுமே!.. அவள் உணரவில்லை.. அவன் முகத்தை பார்த்தது படியே தான் பேசினாள்.. ” தனு நான் நான் வந்து.. இன்னைக்கு வசுவிடம் நான் கூறினேன் இல்ல.. நீங்க எனக்கு உடை வாங்கியதை.. அவங்களுக்கு கொடுக்க மறுத்த காரணம்.. அது என்னோட பொதுவான எண்ணம். ” அவளது கண்ணிர் அதிகமாக வர..
” முயல்குட்டி அழமாம சொல்வதுனா சொல்லு.. இல்ல வேண்டாம்டா. நீ இப்ப தேவையே இல்லாத கேள்வி தான் கேட்க போறேன்னு தெரியுது. ”
” இல்ல.. இல்ல தனு. நான் உங்களிடம் கேட்கனும்.. அப்பதான் எனக்கு உறுத்தல் இல்லாம இருக்கும். ” என சற்று நிதானித்து.. ” நான் கூறியது என்னோட பொதுவான எண்ணம். நீ.. நீங்க மட்டும் மாப்பிள்ளையா வராம வேறு ஒருவர் வந்தாலும்.. எனக்கு அவங்கள பிடித்துயிருந்தா?.. நான் நான்.. அவங்களிடமும்.. ”
‘ வேந்தனிற்கு அவளின் இந்த எண்ணத்தை கேட்க கூட மனதில் துணிவில்லை. என் அரசி.. அவள் கூறும் வெறும் வார்த்தையில் கூட தான் தான் மட்டும் இருக்க வேண்டும்.. இதற்கு மேல் அவளை பேசவிட வேண்டாம்.. இதுவே அதிகம். ‘
சற்று கடுமையாக.. ” போதும் நிறுத்து அரசி. ஏன் முயல்குட்டி?. உனக்கு இந்த தேவையில்லாத எண்ணம் வருது. அப்படியென்றால்?.. நீ இவ்வாறு நினைத்து.. உன்னை கஷ்டபடுத்தி.. அழ காரணம் நான் தானே. சாரி முயல்குட்டி. ” என கண்கள் கலங்கி.. அவளை இறுக்க அணைத்துவிடுவிக்க.
‘ அரசிக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன சொல்கிறான்?.. என அவனை பார்க்க.. ‘
அவளின் கேள்வி புரிந்து.. ” முயல்குட்டி.. எனக்கு.. என் காதல், உன் வீடு, வீட்டில் உள்ளவர்களை தெரியும். என் அன்பை, காதலை!.. நீ படிக்கும் பெண் என்று ஆரம்பத்தில் விட்டுயிருக்கலாம்.. ஆனா உனக்கு 21வயது வந்த பிறகாவது.. நான் உன்கிட்ட.. இல்ல இளமதி மூலமா உங்க வீட்டில் என்னையும், என் குடும்பத்தை பற்றி கூறி.. இல்ல என் பெற்றோருடன் எனக்கு உங்க மகளை 2 இல்ல 3வருடம் கழித்து திருமணம் செய்ய அனுமதி தாங்கனு நாங்க வந்திருந்திருந்தா?. உனக்கு இந்த கேள்வியே வந்திருக்காது இல்ல முயல்குட்டி. ”
பின் அவளின் கண்களில் முத்தம், கண்ணிர் தடம் துடைத்து.. இரு கன்னத்திலும் மன்னிப்பான அழுத்த முத்தமிட்டு.. ” இந்த மாதிரி நீ, நான் நினைப்பது. இது தான் கடைசி அரசி.. நான் சொல்வதை நல்லா புரிந்துக் கொள். உனக்கு!.. கல்யாணத்தை பற்றிய ஆசை, விருப்பம் மற்றும் உன்னோட எண்ணம் பொதுவானது தான். ஆனா நீ என்னை தவிர யாரையும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்கமாட்ட முயல்குட்டி. அப்படியே.. ” ஒரு தன்னை நிதானித்து..
” அப்படியே நீ சம்மதம் சொல்லியிருந்தாலும்.. கல்யாணம் என்ற ஒன்று என்கூட தான் நடந்துயிருக்கும். உன் மனத்தில் இருக்கும் எண்ணத்தை, ஆசையை என்னிடம் மட்டும் தான் நீ எந்த தயக்கம் இல்லாம சொல்லுவ.. செய்வ. அதை நிறைவேற்றுபவன் நான் மட்டுமே தான். ” என புன்னகையுடனும், கர்வத்துடன் கூற.
அரசி இவன் கூறுவதை கேட்டு.. அவள் எதற்கு கலங்கினாள் என்பதில் பாதி குறைந்துயிருந்தால்.. அவள் தன்னவன் கூறியதில் ஆர்வம் கொண்டு அவனை பார்க்க.
” எப்படினு பார்க்கிறியா?.. ”
” ம்.. ” என தலையாட்ட..
அவன் நெற்றிமுட்டி.. ” என் முயல்குட்டிய கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்காங்க என்றாளே?.. என் மனசுக்கு தெரிந்துயிருக்கும்.. அப்படினா.. இப்ப தெரிந்தா??. அப்படினு கேட்காத.. நான் தான் உனக்கு பார்க்கபோகும் மாப்பிள்ளை என்பதாலும்.. எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கதான் என்னவோ!.. எனக்கு ஒன்னும் இப்ப தோனல. ”
” ஆனா இப்ப வரும்போது இதுநாள் வரைக்கும்.. எல்லோரையும் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தை விட.. இப்ப ஏதோ ரொம்ப புசுசா!.. சொல்லத் தெரியாத சந்தோஷம் எனக்கு இருந்தது. ஏனா?.. நான் இப்ப வந்த இரயில் டிக்கேட் இரண்டுமாதம் முன்னமே புக் செய்தது. “
அவளின் கன்னத்தை கிள்ளி.. ” உன் எண்ணத்திற்கான பதிலுக்கு வரேன். நீ வேறு ஒருவருக்கு சம்மதம் என்று நீ சொல்லியிருந்தா?.. என் மனசானது உன் முயல்குட்டிய எவனோ?.. உன்னிடம் இருந்து கொண்டுச் செல்லப் பார்க்கிறான்.. அவளிடம் போ வேந்தானு சொல்லியிருக்கும். ”
” நானும் நேரம், காலம் பார்க்கம.. வீடுபுகுந்து.. நேர உன் அறைகே வந்து.. என் முயல்குட்டிய.. அவசம்மதம் இல்லாவிட்டாலும்.. அப்பவே கல்யாணம் பண்ணி.. நான் அப்படியே அள்ளி தூக்கிட்டு வந்து.. ரூம்மில் இப்ப இருக்கியே.. அதுமாதிரி.. என் காதலை உனக்கு சொல்லி புரிய வைத்து.. பின் உன் சம்மதத்துடன் செயலிலும் புரிய வைத்து.. நீ என்னிடம்.. உன் இந்த மாதிரி.. இல்ல இல்ல ” பின் படுக்கையை காண்பித்து ..
” வேறுவிதமா என்னை இறுக்க அணைத்து ஐ லவ் யூ தனு மாமானு கூறி.. ” அவன் கூறும் போதே..
‘ எழிலரசி அவனின் செவ்விதழ்களில் தன் இதழை பதித்து.. மென்மையாக தன் காதலை கூறினாள்‘
‘ இப்போது அவளிற்கு இருந்த சிறு உறுத்தலும் காற்றில் பறந்துபோனது. தனது எண்ணம் என்பது பொதுவானது. அதை நான் யாருக்கு காட்டவேண்டும் என்பது இருக்கிறது. அதை காட்டினால் அதற்கு பதில் வரும்மா?.. பிரதிபலன் கிடைக்கும்மா?.. என்றும் இருக்கிறது. ‘
‘ எனக்கு முதல் நபராக.. எப்படியோ?.. எத்தனை வருடங்கள் கழித்தோ?.. யார் மூலமாகவோ?.. தனக்கு என்று உரியவன்.. வாழ்க்கைதுணை என்றால் வேந்தனாகிய தனு!.. தன்னவன் அவன் மட்டுமே தான். ‘
‘ அவன் தன்னிடம் இப்போது வந்துவிட்டான். பலவருடங்கள் முன்.. தான் சொன்ன என் விருப்பங்களை நினைவில் நிறுத்தி.. நிறைவேற்றுவதே ஆச்சரியம்!.. ஆனால் என் கணவன், மனைவி பற்றிய எண்ணத்தை இவனிடம் கூறியது இல்லை.. என்னிடம் இவன் கேட்டது கூட இல்லை. ஆனால் இருவருக்கும் அதே எண்ணம். ஏன் அதைவிட கூடுதலாக!.. என்னிடம் காண்பிக்கிறான். இதோ!.. இதுபோல.. இப்படி தானே.. என் ஆசையை முதலில் நிறைவேற்றி.. பின் அவன் ஆசையையும் நிறைவேற்றிக் கொள்கிறான். எதிர்பார்க்காத பல விஷயங்கள் செய்து.. என்னை ஆச்சரியம், அதிர்ச்சி கொள்ள வைக்கிறான். ( இன்னும் அவளுக்கு பல காத்திருக்கிறது.) ‘
‘ தன்னவன் கூறியது போல அவன் என்னிடம் காதலன், கணவன், இல்லை என்னை கவர்ந்து கொண்டுச் செல்லும் கள்வனாக என்னிடம் வந்து.. அவன் காதலை புரியவைத்து.. என்னை அவனிடம் சேர்த்து கொள்வான். உன்னிடம் நான்!.. என்னிடம் நீ!. என்றும் நாம்!. என இருப்போம். யாரும் நம்மிடையே வரமுடியாது.. வந்தாலும் நான் உன்னை விடமாட்டேன். உனக்கு என்று உரியவன் நான்மட்டும் தான்.. என்று அவன் என்னை தன்னுள் அடக்கி புரியும் படியாக கூறிவிட்டான். ‘
‘ இதன் பிறகு தன்னவனை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.. அவனை இவ்வளவு நேரம் கஷ்டப்படுத்தியதற்கும்.. தான் கேட்ட கேள்வியால் வருந்தும் தங்கள் இருவருக்கும்.. இனி வார்த்தைகளால் சமாதானம் ஆகிக்கொள்வதை விட.. என எண்ணும்போது.. அவன் என்னை கவர்ந்து வந்து.. அவன் அழுத்தி.. வேறு விதமாக கூறி.. பின் நான் வேறு விதமாக காதலை கூறியிருப்பேன் என கூறியவுடனே.. அவனின் செந்தாமரை இதழில் விருப்பியே சரணடைந்தாள். ‘
‘ வேந்தனோ தனக்கு.. தான் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னவளின் தேன்இதழ் தன்னிடம் சரணடைந்தவுடனே.. முதலில் அதிர்ந்து.. ஆனந்தம் கொண்டு.. பின் அவளின் ஆதரவனாகி.. அவளின் வருத்தத்தை போக்கி… உன் தலைவன் நானிருக்க.. நீ இனி எதற்கும் வருந்தக்கூடாது.. என மென்மையாக பதில் கூறிமுடித்து.. பின் அவளை தன்னிடமிருந்து வேறு வழியின்றி தற்போதைக்கு விடுவித்தான். ‘
தன்னவன் கூறியதை புரிந்து.. தெளிந்து.. பின் நான் ஏதாவது கூறி அழுதேனா?.. என்னும் அளவிற்கு.. அவள் முகம்கொள்ளா மகிழ்ச்சியுடன் புன்னகையை வெளிப்படுத்தி.. ” இப்படியா கூறியிருப்பேன் தனு மாமா. ” என செல்லமாக அவன் கன்னத்தை வேறு பிடித்திழுத்து அவனை தன்நிலையிழக்க செய்துக் கொண்டுயிருந்தாள்.
தன்னவளின் உறுத்தல் மறைந்து.. மறந்து.. தெளிந்த.. மகிழ்ச்சியான.. குறும்பான முயல்குட்டியின் முகத்தையே ஒரு நிமிடம் பார்த்தான். பின் தான் தன்னை நினைத்து!.. ‘ இந்த முயல்குட்டி அராஜகம் தாங்கமுடியில!.. இப்படியே விட்டோம் நம்மளையே தூக்கி சாப்பிட்டு விடுவா.. இப்பவே தட்டிவைக்கனும்.. இல்ல நம்மள முழுசா சென்னை போய் சேரவிடமாட்டா.. அங்க போய் நம்ம பாடுதான் திண்டாட்டம். ‘
” முயல்குட்டி உன்னைய மடியில் உட்கார வைத்தது தான் தப்பா போச்சு. அமைதியா உட்காருவது என்றால் உட்கார்.. “
தன்னவனை பார்த்திருந்தவள்.. பதில் அளிக்காமல் தன்னை பார்த்திருந்ததிலிருந்தும்.. முகபாவனையுடன் கூறுவதில் இருந்து புரிந்தது. அவனின் நிலைமை என்னை விட படுமோசம். ஆனால் நானா ஆரம்பித்தேன்?.. போடா.. ” இல்லையென்றால் என்ன தனுமாமா பண்ணுவிங்க?.. நீங்க தான் என்னை பழக்கி விட்டுவிட்டீங்க. ” என இதழ் பார்த்துக்கூற..
கொல்றாளே என்னை!.. இவள பற்றி தெரிந்தும்.. நானே எனக்கு ஆப்பு வைத்துக் கொள்ளுவதுபோல பேசி.. அனுப்பவிக்கிறேன். ” தப்புதான்டி முயல்குட்டி.. உன்கிட்ட இருந்து.. இப்படியொரு அதிரடிய எதிர்பார்க்கல உன் தனுமாமா. கொஞ்சம் இறக்கம் காட்டுடி எனக்கு. நான் சென்னையில் தனியா இருக்கனும் முயல்குட்டி ” எனக் கூறி அவள் மறந்த ஒன்றை ஞாபகப்படுத்த..
தன்னவன் கூறுவதை புன்னகை முகமாக கேட்டுக் கொண்டுயிருந்தவள்.. கடைசி வரியை கேட்டு.. ” ஆமா தனு நீங்க என்னை கூப்பிட்டு வந்த காரணம்.. நான்.. நாம்ம இன்னைக்கு என் ரூம்மில் இனி இருந்தது போல.. இந்த அறையில் இருக்கனும் என நினைத்து அழைத்து வந்தா சொன்னிங்க. இப்ப சென்னையில் தனியா இருக்கனும் சொல்லுறிங்க. அப்ப எதுக்கு என்னை அழைத்து வந்திங்க?.. இப்ப பாருங்க உங்களுக்கு தானே கஷ்டம். ” கடைசி வரியை.. அவனை நினைத்து வருத்தமா?.. நக்கல்லா??.. என பிரித்தறிய வார்த்தையில் கூற..
‘ தெரியும் முயல்குட்டி நீ இந்த கேள்வி கேட்பேனு. சென்னையில் முயல்குட்டி என்னுடன் இருப்பதுபோல நான் இருக்க.. நான் நினைத்ததை விட எனக்கு நிறைய நிகழ்வுகள், உணர்வுகள், ஞாபகசின்னங்கள் ஒரு மாதத்திற்கு தேவையானதை கொடுத்துயிருக்க.. இப்ப கொடுக்கவும் போற. ‘
” ம்.. சென்னையில் தனியா கஷ்டம்தான் முயல்குட்டி. அதுக்குதான் உன்னைய அப்படியே சென்னைக்கு எடுத்துச் செல்லலாம் என்று.. உன்னைய இங்கு வர வைத்தேன்.” சாதாரணமாக.. உள்ளுக்குள் புன்னகையுடன் கூற..
வழிவிரித்து.. ” என்ன தனு சொன்னீங்க?.. என்னைய எடுத்தா?.. புரியும் படியா சொல்லுங்க. இல்ல இன்னொரு முத்தம் கொடுத்துடுவேன். ” முத்த மிரட்டல் விட..
புன்னகையுடன்.. ” இப்படியெல்லாம் என்னை மிரட்டி பயம்முறுத்தா முயல்குட்டி. இவ்வளவு நீ பண்ண வேலைக்கே.. அங்குபோய் நான் என்ன பண்ணப்போறேன்?. நினைத்தாலே பயமா இருக்கு. இதுக்கும் மேலையா!.. என்னால தாங்க முடியாது. அதை தாங்க உடம்பில் தெம்பு இல்ல முயல்குட்டி. தெம்பே இல்ல. ” வருத்தத்துடன் கூறி முடிக்க..
கேட்டவளோ சிரிப்பை அடக்கி.. ” ரொம்ப கஷ்டபடுத்துறனா தனு?.. “
” ம் ” என தலையாட்ட..
” சரி. மிரட்டாம!.. பொறுமையா கேட்கிறேன்.. எதுக்கு என்ன இங்கு இப்ப அழைத்து வந்திங்க?.. ”
அவளின் முகத்தை பின்புறமாக திருப்பி படுக்கையை காண்பித்து.. ” இதுக்குதான்!..”
‘ தன்னவன் காண்பித்து கூறியதை கேட்டு.. அவளின் இதயத்துடிப்பு அவளிற்கே கேட்டது.. என்ன?.. என்று அவனை பார்க்க.. அவனோ.. அவளின் பார்வை அர்த்தம் புரிந்து.. இவ்வள.. என்னைய தப்புதப்பா புருஞ்சுப்பா. ‘
” முயல்குட்டி நான் ஏற்கனவே சொல்லிட்டேன். கல்யாணத்திற்கு முன்.. நீ என்ன மாதிரி மிரட்டல் விட்டாலும் உன் ஆசை நிறைவேறாது. ” அவளை மிரட்ட.
” ம்.. ஏன் செல்லமாட்டிங்க.. படுக்கைய காண்பித்து என்னைய யோசிக்க வைக்கிற.. ரவடி, கேடி வேலையெல்லாம் செய்யறது நீங்க. பழி என்மேலையா. போங்க. ” எனக் கூறி அவள் எழப்பார்க்க.. அவளால் முடிந்தால் தானே.. தன்னவன் தன் முகத்தில் மாறுதல் கண்டவுடனே.. தன் செயல் இதுவாக தான் இருக்கும் என கணித்து.. அவன் கையின் இறுக்கம் கூடிவிட்டது.
” முயல்குட்டி ரொம்ப பண்ணாதடி.. நான் காண்பித்ததில் நீ சரியா பார்க்கல!.. நல்லா திரும்பி அங்க என்னயிருக்கு பாரு. ”
அவள் திருப்பி படுக்கையை பார்க்க.. அங்கு இப்போது தான் அவிழ்த்து வைத்துயிருந்த சேலை.. மடிக்காமல் இருந்தது. அவன் வந்துவிடுவான் என்று மற்ற அனைத்தும் வேகமாக செய்தவள்.. முடிந்தவுடன் மடிக்கலாம் என நினைத்துயிருக்க.. பின் அவன் வந்தவுடன் அதனை மறந்துபோனாள். அதைதான் காண்பித்து தனு கூற..
” என்ன சேலையா?. “
அவனின் பார்வை மாறி ” ம்…” எனக்கூற..
‘ தான் அணிந்திருந்த அந்த சேலையில் பல நினைவுகள் உள்ளன தான். ஆனால் தன்னவனின் சேலையின் மீதான குறுகுறுப்பான பார்வைக்கே எனக்கு உடல் முழுவதும் சுரிர் என்று மின்சாரம் பாய்ந்து சூடாவது போன்ற உணர்வால்.. அவன் தன்னை அள்ளி மடியில் வைத்து கொஞ்ச வேண்டும்.. என தோன்றும் உணர்வுபோல.. அந்த சேலையால் அவனுக்கும் அப்படிதானே தோன்றும். ‘
அதனால் ‘ வேண்டாமே.. ‘ என அவள்.. அவனை தலை ஆட்டியபடியே பார்க்க.
” எனக்கு வேண்டும் முயல்குட்டி. என் மடியில் நீ இருப்பது போல இருக்கும். ஆனா நான் நீ இல்லனு வருத்தப்படமாட்டேன் சரியா. ” அவளை தன் தோள் சாய்த்துக்கூற.. அவளும் ” ம்.. ” சாய்ந்துக்கொண்டாள்.
சில நிமிடங்களில்.. அவளின் நெற்றியில் இதழ் பதித்து கூறிவிட்டு.. இருவரும்மாக எழுந்தார்கள். ” முயல் நான் சேலைய மடித்துக் கொள்கிறேன். நீ உன்னோட பிளெளஸ் மடித்து.. இதில் வைத்து பேக்கில் வைத்துவிடு. ” ஒருகவர் மற்றும் தான் கொண்டுச்சொல்லும் பேக்கை கொடுத்தான்.
சட்டென்று அவனின் செயல்புரியாமல்.. ” ஏன் அதைமட்டும் நான் எடுத்து வைக்கனும்?.. “
சேலையை மடித்துக் கொண்டுயிருந்தவன்.. ஏக்கமாக ” ஏன் முயல்குட்டி?.. ஏன்?.. நான் கல்யாணம் வரைக்கும் நிம்மதியா இருக்கனும் நினைக்கிறேன். ” சத்தமில்லாமல் கூறி அமைதியாகி விட்டான்.
‘ அவன் வார்த்தையின் ஒலி.. பின் தன் கையில் இருப்பதை பார்த்து.. அவளிற்கு சற்று புரிய.. அய்யோ!.. என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.. அவனை ஒரப்பார்வை பார்க்க.. சேலையை மடித்துக் கொண்டுயிருந்தவன்.. நான் எப்ப பார்ப்பேன்!.. என காத்திருந்தவன்.. நான் புரிந்துக் கொண்டேன் என அறிந்து.. அவன் கண்ணடித்து சிரிக்க.. அவள் ஒளித்துக் கொள்ள இடம் இல்லாமல்.. முதன்முறையாக அவனின் முதுகில் சென்று ஒளிந்துக் கொண்டு அவனின் இருதோளை பிடித்துக்கொண்டாள். ‘
இருவரும் உணர்வின் பிடியில் ஒருநிமிடம் தடுமாறி நின்றனர்.. ” தனு எனக்கு இந்த சட்டை வேண்டும் ”
” சட்டையெல்லாம் வேண்டாம் ”
” ஏன்?.. ஏன்?? ”
அவளவனோ.. தன்னவளின் சேலையை பேக்கில் வைத்துவிட்டு.. அவளை பின்னிருந்து முன்இழுத்து.. அவளின் வெற்றிடையை தன் இருகைகளாலும் இறுக்க கட்டி.. அவளை உள்இழுத்துக்கொண்டு.. ” இந்த இடைஇறுக்கம், அணைப்புதான் என் முயல்குட்டிக்கு என் நினைவுப்பரிசு. என் நினைவு உனக்கு ஸ்பெஷல்லா!.. எனக்கு மட்டும் ஸ்பெஷல்லான இடத்தில் தான் இருக்கனும். அதை கொடுக்கதான் இந்த உடை உனக்கு. ஞாபகத்திற்கு போதுமா?.. இல்ல.. ”
‘ அவள் என்ன செல்வாள்?.. தன்னை நினைத்து முன்பே வாங்கிய இந்த உடை. ஆனால் அதிலும் கள்ளத்தனம். தன் முன்பு இருந்த சற்று பூசிய உடல்வாகிற்கு.. இந்த உடையில் இன்னும் சற்றுமேல்யேறி தெரியும் என் இடை.. இந்த இறுக்கம், அந்த உடலமைப்பு. நினைக்கவே சிலிர்த்தது.. ஆனாலும் இந்த கள்ளனின் பரிசும் மிகவும் பிடித்துயிருந்தது.. பரிசு கொடுத்தவனிற்கு கன்னத்தில் அழுத்தமான முத்தம் கொடுத்துவிட்டு.. அவள் அவனை பார்க்க.’
‘ சும்மாவே அருகில் அவள் இருந்தால் ஒரு முத்தம் கொடுப்பான். இப்போ அவன்.. அவளின் சிலிர்ப்பில் உடலை உணர.. பூரித்து முகம் செவ்வானமாய் மின்ன.. தன் கன்னத்தில் கொடுத்த ஒருமுத்ததினால்.. தன் அணைப்பில் இருப்பவளுக்கு தன் பரிசை முகமெங்கும் அளித்தான். இருவரும் தங்கள் உணர்வுகளில் இருந்துவிடுபட முயற்சித்தனர்.. ஆனால் முடியவில்லை. தனு தனு எனஅவளும்.. முயல்குட்டி முயல்குட்டி என அவனும்.. நெற்றிமுட்டி நின்றிருந்தனர். ‘
முதலில் மீண்டவன்.. தன்னவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு.. ” முயல்குட்டி, முயல்குட்டி. ”
” ம்.. சொல்லுங்க தனு. “
” நான் ஆபிஸ் இருக்கும் நாளில் என்னால அடிக்கடி.. இல்ல இந்த நேரத்திற்கு என்று என்னால போன்.. இல்ல வீடியோ கால் பண்ணமுடியாது. நான் ஏற்கனவே வேலை சம்பந்தமா நிறைய கமிட் பண்ணிட்டேன். அதை மாற்றவும் இப்ப முடியாது. அப்புறம் கல்யாணத்திற்கு லீவ் நிறைய போடமுடியாது. நடுவில் கடை வேலை பார்க்கனும். ”
” அதனால நீ இப்போதைக்கு.. நானா கால் பண்ணுவேனு.. எதிர்பார்க்காத முயல்குட்டி.. மெசேஜ்கூட அதுபோலதான். உனக்கு எப்ப எனக்கு கால், மெசேஜ் பண்ணும் தோணுதோ கண்டிப்பா பண்ணுடா. நான் அந்த நாள் முடிவதற்கு உள்ளாக.. உனக்கு பதில் வரும் முயல்குட்டி. கால்பண்ணலனா. அப்ப நீ என்னை நினைக்கும் போது.. என்ன தோணுதோ?. அதை மெசேஜ் அனுப்பிட்டு.. நீ வருத்தப்படாம இருக்கனும். சரியா. ம். “
” ம்.. சரி தனு. நீங்க கவலைபடாதீங்க. நான் என் தனுவ நினைக்கும் போதெல்லாம் வாய்ஸ் மெசேஜ் பண்ணுறேன். நீங்க நேரம் கிடைக்கும் போது பண்ணுங்க. நீங்களும் முயல்குட்டிய நினைக்கும் போது பண்ணவேண்டும். ம். “
” ம்.. ”
சிறிதுநேரம் கழித்து.. ” தனு.. அது அதுவந்து ” தயக்கத்துடன் ஆரம்பிக்க..
தயக்கம் புரிந்து.. ” என்ன.. கடை, கல்யாணசெலவு, சேலை, நகை வாங்க தனிப்பட்ட என்னோட பணம் இருக்கா?.. இல்ல கடை இப்ப வேண்டானு சொல்ல வர.. அதானே?.. ” வேண்டாம் என்ற வார்த்தையில் சற்று கடினம் இருந்தது.
அவனின் முதல்கோபம்.. அதுவும் தன்மீதான சுயநலகோபம்.. ” ம்… எப்பவும் உங்களுக்கு விரும்பாத ஒன்னு நான் சென்னா.. நான் சொல்ல வருவதை முழசா கேட்டு.. பிறகு என்னவென்றாலும் எனக்கு புரியவைங்க. உங்க கண்ணில் நான் எப்பவும் கோபத்தை பார்க்கக் கூடாது. “
” அப்ப நீ சொன்னதுக்கு கொஞ்ச வேண்டும்மா?.. ” அவன் கோபத்தை இறுக்கத்தில் காட்ட..
” ம்.. இப்படியும் காட்டலாம். சரி பேச்சை மாத்தாதிங்க. ஒண்ணும் பிரச்சனையில்லை தானே. இல்ல இதையெல்லாம் சமாளிக்கதான்.. அதிக வேலையில் கமிட் பண்ணியிருக்கீங்களா?.. “
வேந்தன் குரல் சற்று தளர்ந்தி.. ” அது வந்து அரசி.. இப்ப இதுக்குனு இல்ல.. நான் நான் இந்த கம்பெனியில் வேலைக்கு சேரும் முன்பு இருந்தே.. என் காலேஜ் படித்த பிரண்ட்ஸ் அவங்களோட சேர்ந்து சாய்ந்திரம், வார இறுதிநாட்களில் நான் வேலைகள் பண்ணுவேன். அது அது.. “
” என்ன அது?.. “
” திட்டமாட்டேனு சொல்லு. ” அவள் மாட்டேன் என தலையசைக்க..
” அதுவந்து முயல்குட்டி.. என் முயல்குட்டிய.. எனக்கு.. உன் ஞாபகம்.. ”
எழிலரசிக்கு சட்டென்று கண்கள் கலங்க.. கோபம் கூட முளைத்தது. ” போதும். பணம் இருக்கு. இப்ப உடனே அதில் இருந்து வரமுடியாது. அப்படிதானே. ”
‘ அவளில் எந்த அழைப்பு பெயர் இல்லாமல்.. மறைத்து வைக்கப்பட்ட கோபம், கலங்கிய கண்கள் அவை அவனை குற்றம்சாட்டி.. கலங்கவும், குற்றவுணர்வையும் தந்தது. இருந்தாலும் தான் இதுநாள்வரை செய்தை கூறினால் பணம், என் அதிக வேலை பற்றிய கவலையும் தன்னவளுக்கு இருக்காது என எண்ணினான். ‘
” சாரி முயல்குட்டி.. நான் நினைத்தபோது உனக்கு வயசு இல்ல.. எனக்கு அப்ப வேற வழியும் தெரியல டா. இன்னைக்கு நான் உடை , நகை இப்படி எல்லாம் சொன்னது.. இப்ப எடுத்த முடிவு இல்லடி. உன்னை கல்யாணம் பண்ணினா இப்படிதான் நான் இருப்பேனு நினைத்தேன். எப்பயோ நடக்கும் கல்யாணத்திற்கே இப்படி நினைப்பவன்.. அப்ப உன்னிடம் வந்தா. உனக்கான என் உரிமை எல்லாவிதத்திலும் இருக்கனும்.. உன் சம்பந்தபட்ட எல்லாவற்றிற்கும் செய்யனும். ஆனா என்னால அப்ப முடியுமா?.. இல்ல நம்ம வீட்டில் வீட்டு விடுவாங்களா சொல்லு?. அதனாலதான்.. என் கவனத்தை இப்படி திருப்பினேன். ” வருத்தத்துடன் கூறினான்.
“ஆனாலும்.. “
” திருப்ப வேற ஆரம்பிக்காத அரசி.. நான் என் முயல்குட்டி விஷயத்தில் ரொம்ப ரொம்ப பிடிவாதமா தான் இருப்பேன். அதான் இன்னைக்கு எல்லார் முன்பும் எல்லாருக்கும் மறைமுகமாக.. நான் இப்படிதான்.. என் அரசியிடம் அதுக்கும்மேல இருப்பேன் எங்களை கண்டுக்காதிங்க. எங்களால் யாருரையும் பாதிக்கும் அளவிற்கு பாதிப்பு வராதுனு சொல்லிட்டேன். சம்பந்தம் இல்லாமல் ஏதாவது பிரச்சனை வந்தா சமாளிக்கலாம் முயல்குட்டி. ”
” கிளம்ப வேண்டுமே.. பாவம் முயல்குட்டி பார்க்கிறேன். இனிமே மத்தவங்கள பற்றி பேசுன. அப்புறம் நான் வாய்யடைக்க என்ன வழியோ அதை பார்ப்பேன். ” எனக் கூறியவுடன்.. அவளோ ‘ அப்படியா ‘ என அவனை குதுகலபார்வை பார்த்துவைக்க..
” இதுதான் சாக்குனு பேசின.. உனக்கு நான் ஒன்னு செய்து வைத்துயிருக்கேன். உனக்கு கொடுக்காம.. நேரா வீட்டுதான். நல்லா யோசித்துக்கோ. ”
புன்னகையை அடக்கி.. ” ஓ.. என் வீக்பாண்ட் வைத்து நீங்க மிரட்டினா??. நாங்க பயந்து விடுவோம்மா!.. எனக்கு கொடுக்காம.. என்னிடம் பதிலுக்கு வாங்காம??. என்னைய நீங்க வீட்டில் போய் விட்டுவிடுவீங்க. இத என்ன நம்ப சொல்லுறிங்க. ”
‘ அரசி கூறியதை கேட்டு.. இவளோட!.. அவன் நெற்றியை சொரிந்து.. அசட்டுபுன்னகை மட்டுமேஅவனின் பதில். தன்னை புரிந்து வைத்துயிருக்கும் தன் முயல்குட்டியை பார்க்க. ‘
நாங்கயெல்லாம் யாரு?.. என்ற பதில் பார்த்துவிட்டு.. ” நான் வேறு யாரையும் பற்றி பேசல தனு. அத்தை, மாமா பற்றி மட்டும் தான். நீங்க என் சின்னவயதில்.. நாம்ம அப்ப பார்த்து.. பேசி.. பழக காரணம் அவங்க உங்களுக்கு சொல்லிக் கொடுத்தினால்.. நீங்க செய்து தானே. நீங்களே நினைத்து பாருங்க.. நீங்க அந்த வயசில்.. எனக்கு ஏன் என்றும்?.. என்ன நிலைமையில் அப்ப இருப்பேன், என் தேவை என்ன?.. என்று தெரிந்ததும்.. என்னைய பாதுகாப்பா, என் பயத்தை போக்கி என்னைய அந்த நேரம் பாதுகாக்க காரணம் யாரு?.. “
” யாரு?. ”