” யாரு?.. “
அவனை முறைத்து.. ” உங்க அம்மா தானே காரணம். அத்த உங்க தங்கைக்காக சொல்லித் தரப்போய்தானே ” கூறும்போதே..
அவளை நெற்றிமுட்டி.. ” முயல்குட்டி.. அம்மா என்கிட்ட அந்நேரத்தில் எல்லாம் சொன்னாங்க தான்.. அதனால என் அரசிம்மாம பார்த்துக் கொண்டேன் தான். மறுக்கல.. அம்மாவ மறக்கல டா. ”
” அவங்களுக்கு என் கல்யாணம் பற்றிய பல கனவுகள் நினைத்துயிருப்பாங்க. அதில் செய்ய வேண்டியது நிறைய இருக்கு. உன்னோடது என்பது ஒரு சின்ன பகுதிதான். அதனால உனக்கானது தவிர.. மற்ற அவங்க விருப்பத்தில் நான் தலையிட மாட்டேன். அவங்க வருத்தப்படும் படியா நடந்துக்க மாட்டேன்.. கலந்துபேசி தான் முடிவு பண்ணுவேன். ”
” ஆனா நீ.. நான் சொன்ன ஒன்ன மறந்துட்ட. நான் அந்த நேரத்தில் நீ இல்லாம வேறு யார் இருந்தாலும் அழுததை பார்த்தவுடன்.. ஏன்னு தெரித்த பிறகு.. யாராவது கூட இருங்காங்களா ?.. சானிடரி நாப்கின் வைத்துயிருக்கிங்காளா?.. என்று வரை கேட்டுயிருப்பேன். இல்லையென்றால் ஒரு பொண்ண உடனே அழைத்து வந்துயிருப்பேன்.. அவங்க பாதுகாப்பிற்கு அவர்களை பார்க்கும் தூரத்தில் இருந்து தேவையானது எல்லாம் செய்து இருப்பேன். ”
” ஆனா அப்ப.. உன்னை பார்த்து எனக்கு தோன்றியது வேற முயல்குட்டி!.. உன்னைய அந்த நேரத்தில்.. எல்லாம நான் இருந்து.. நாப்கின் வைக்கலனா?.. நானே எல்லாம் வாங்கி வந்து.. உனக்கு சொல்லிக் கொடுத்து.. உன்னைய அழாம பார்த்துக் கொள்ளனும், அது என் கடமைனு, அதுக்கான உரிமை எனக்குயிருக்கு என் முயல்குட்டியேனு அப்ப தோனுச்சு. ”
” நீ சொன்னதில் நான் என்ன சொல்லவரேனா.. அப்ப எனக்கு தோன்றியதற்கு யாரும் காரணம் கிடையாது. என் முயல்குட்டிய அப்போ இல்லையென்றாலும் வேறொரு சமயத்தில் என் முயல்குட்டியா நீ எனக்கு கிடைத்துயிருப்பிங்க. அப்பவும் நான் இப்படிதான்.. இந்நேரத்தில் இருந்துயிருப்பேன். நான் உனக்கான என் விருப்பதில் இருந்து மட்டும் மாறமாட்டேன். ” என தன்னில் சாய்ந்துயிருந்தவளின் தலையை தடவிக் கொடுத்தவாறு கூறி முடித்தான்.
அரசிக்கும் அவனின் விளக்கம்…” ம்.. புரியது தனு. எல்லாம் நல்லபடியா நீங்க நினைத்தமாதிரி நடக்கனும். அதனால நீங்க ஒன்னும் செய்யும் போது கவனமா.. யாரு மனசு நோகாத மாதிரி நடந்துகனும் சரியா தனு. ”
” ம்.. சரி அரசி.. கவனமா இருக்கேன். “
சட்டென்று அவளிற்கு அப்போதான் ஞாபகம்வர.. ” தனு உங்க ஸ்கூல் போட்டோ காண்பிங்க. ”
மறந்துட்டனா?. ” ஸ்கூல் போட்டோ.. இங்க இல்ல முயல்குட்டி. அந்த போட்டோ எல்லாம் கீழ இருக்கு. நாளைக்கு உன் கையில் இருக்கும். ” கூற.. அவனை அவள் முறைக்க…
மெல்லிய புன்னகையுடன்.. ” புரியுது நான் வரப்ப சேர்ந்து பார்க்கலாம். இப்ப நீ இங்க வருவதை நினைச்சுட்டே இருந்தனா!.. போட்டோ எடுத்து வைக்க மறுந்துட்டேன். என் செல்ல முயல்குட்டிக்கு நான் இங்க இருக்கும் போது.. அது உனக்கு எதுக்கு?. ” அவளை சமாளிக்கும் விதமாக கூற..
” ம்.. நீங்க எதுக்கு என் போட்டோ எல்லாம் கடத்திட்டு போறிங்களோ?.. அதுக்குதான். ”
அய்யோ!.. என நினைத்து பேக்கை பார்க்க.. ” நான் இன்பாகிட்ட எடுத்து தரச்சொல்லி.. என் முயல்குட்டி ரூம்மில் இருந்ததான் எடுத்துட்டு போறேன். இங்க இருந்தா நீ எடுத்துக்க. ”
” இருந்தா நான் ஏன் உங்கிட்ட கேட்க போறேன். அதுசரி.. அது என்ன? இன்பா அண்ணா.. சாய்ந்தரத்தில் இருந்து ஓவரா உங்களுக்கு உதவி பண்ணுறாங்க?.. நீங்க அவங்களிடம் ஏதாவது உளறி.. நம்மள பற்றி சொல்லிட்டிங்களா?.. ” என சந்தேகமாக கேட்க.
போச்சு திலகன் விட்ட சாபம் பலித்தா!.. ஞாபகத்திற்கு எடுத்தேன் போய்யிருக்கலாம். இன்பா பேர சொல்லி மாட்டிக்கியே வேந்தா.
அவனின் திருதிரு முழி.. சிந்தனையே.. அவளிற்கு புரிந்துபோனது. சிரிப்புடன்.. ” நம்ம விஷயம் யார்?.. யார்க்கு தெரியும்?. எப்படி தெரியும்?.. “
சொல்லாமலே கேட்குறா.. ” அது இன்பா, சத்யா, திலகன், வினோத்..” நடந்ததை இருவரியில் கூறினான்.
தன் அண்ணாவை நினைத்து மகிழ்ந்தாள்.. ” ஓ.. அதான் நிச்சய டேட் பிக்ஸ் பண்ணும் போது.. நீங்க கேட்டதிற்கு.. நான் அண்ணாவிடம் கேட்டு சொன்னதிற்கு.. இன்பாவிடம் நான் கேட்க வேண்டிய கேள்விய உன்கிட்ட மறந்து கேட்டுவிட்டேனு நினைத்து சிரித்திங்களா?.. “
புன்னகையுடன்.. ” ஆமாம். சரி இதை பற்றி பிறகு பேசலாம். கிளம்பலாமா?.. “
” ம்.. “ இவ்வளவு நேர புன்னகை குறைந்து.. வருத்ததுடன் தன்னவன் ரூம்மை சுற்றிப்பார்த்தவள்.. தன்னவனை அவள் இறுக்க அணைத்துக் கொண்டு.. தன்னவனின் இதயத்துடிப்பை தன் காதில்உள்வாங்கிக் கொண்டு.. கன்னத்தில் முத்தமிட்டு.. கன்னத்தை இழுத்துபிடித்து.. ” ஐ லவ் யூ தனுமாமா. ” கூறி பட்டும் படாமல் இதழ்முத்தம் கொடுத்தாள்.
” கிளம்பலாமா?..” அவளோ தன் உணர்வை காண்பித்தாள்.. அவன் காண்பிக்கவில்லை.. அவ்வளவே.
” ம்.. “ அவளை அள்ளிக் கொண்டு.. நேராக அவர்களின் சமையல்அறை மேடையில் உட்கார வைத்தான்.
மெல்லிய மஞ்சள்நிற விளங்கு ஒளிர.. அதன் கீழ் எழிலரசி மேடையிலும்.. வேந்தன் அவள் முன்நின்று.. “ அரசி இந்த பால் குடி.” அவள் அதனை வாங்கி குடித்துக்கொண்டே அவனை பார்த்தாள்.
‘ அவனிற்கோ.. மெல்லிய விளக்கு ஒளியில்.. பாவையின் கண்கள் தன்னை பருகுவதை பார்த்து.. இதயம் தாறுமாறாக துடித்தது. இவ பால்பார்த்து குடிக்காம என்ன இப்படி பார்த்து வைக்கிறா. நீயே ரூட்ட மாத்திக்கோ அப்பதான் நீ இவளிடம் இருந்து தப்பமுடியும். ‘
” என்ன முயல்குட்டி பசிக்குதா?.. “
” ம்.. மணி இப்ப 1 ஆகாப்போகுது.”
புன்னகையுடன்.. ” அது எனக்கு தெரியாத முயல்குட்டி. நான் என்ன கேட்டா?.. இது என்ன பதில்?.. “
” பசிக்குதுதான். இப்பவே 1மணி. நீங்க ஏதோ செய்ததா சொன்னீங்க. அத குடுக்கமா பால் கொடுக்குக்கிறீங்க. அத கொடுக்க நேரம், காலம் பார்த்திருக்கிங்களோ நினைத்தேன். ” சிரிப்புடன்கூற..
இவ அநியாத்துக்கு என்ன ஒட்டுறாளே. இதுவே கல்யாணம் முடிந்து இந்த மாதிரி ஒரு சூழ்நிலைவந்தா.. நான் கேட்க வேண்டிய கேள்விய இவ கேட்குற. ஆனா இது அதுக்கும்மேல இருக்கே.
மனதிற்குள் பெருமுச்சு ஒன்றைவிட்டு.. “ முயல்குட்டி.. நாம்ம சாப்பிட்டு நேரம் ஆச்சு.. அதான் பால் கொடுத்துட்டு.. உனக்கு ரொம்ப பிடித்த தேங்காய் ஸ்விட் செய்ததை தரலாம் நினைத்தேன். ” எனக் கூறி அவன் செய்தை தட்டியில் எடுத்து வைத்தான்.
” ம்.. ஆப்பிள், வாழைப்பழம் ஏதாவது. “
புன்னகையுடன் சென்று அவள் கேட்ட பழங்கள் மற்றும் வேறு ஒன்றையும் எடுத்து வந்தான்.
” முயல்குட்டி திரும்பு.. ” ஜாதிமல்லி பூவை கூந்தலில் வைத்து வாசம்பிடித்து, பின் முத்தமிட்டு அவளை நேரகாக திருப்பி.. தான் செய்த ஸ்விட் அவளுக்கு ஊட்டிவிட.. அவளும் பாதி சாப்பிட்டு அவனிற்கு ஊட்டினாள்.
அவள் கன்னத்தை பற்றியிழுத்து.. ” தனுமாமா.. ம்.. ஸ்விட் செம்மையா இருக்கு. இப்ப நீங்க கீழ வந்தப்ப செய்ததா?. ஆனா செய்த வாசனையே இல்ல. ”
” ஏன் முயல்குட்டி.. இப்படி அநியாயம் பண்ணுற. அமைதியா கைய வைச்சுட்டு சும்மா இருக்கமாட்டியா?.. “
‘ தன்னவன் கூறியவுடன் அவள் கையை எடுத்துவிட்டாள். பின் எதுவும் கூறவும், எதுவும் செய்யாமல் அமைதியாக சிறிது சிறிதாக பால் அருந்த ஆரம்பித்தாள். அவளுக்கு தெரிகிறது தான்.. இருவருக்கும் தங்களின் சிறு தொடுகை கூட.. தங்களை நிலையிலக்க செய்கிறது. இது சரியா?.. தவறா?.. கணிக்க முடியவில்லை. தன்னவன் அருகில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் வீண் செய்யாமல்.. அவனுடன் கொஞ்சி பேசி விளையாட தோன்றுகிறது. ஆனால் தோன்றும் உணர்வுகளால் பாதிப்புதான். ஆனால் அமைதியாக இருக்க முடியவில்லை என அமைதியாக யோசித்தாள். ‘
தன்னவள் அமைதியை பார்த்தவன்.. ‘ அய்யோ ஏன்டா?. அவ கொஞ்சுவது பிடிக்காத மாதிரி ரொம்பசீன் போடுற.. கூட இருக்க போறது கொஞ்சம் நேரம். பிறகு நீ நினைத்தாலும் கிடைக்குமா?.. போன்ல பேசதான் முடியும். இந்த மாதிரி சின்ன சின்ன தொடுகைதானே தங்களுக்கு அந்த நேரத்தில் இனிமையை தரும். இப்ப முயல்குட்டிக்கு கோபம் வந்துருச்சு. அவள சமாளிக்க இப்ப ஸ்விட் கொடுத்தாலும் சாப்பிட மாட்டா. இந்த அடிபாலையே இதில் இவ்வளவு நேரம் குடிக்க முடியாமா?.. என்பது போல வாய்ய எடுக்க.. வைக்கனு இருக்கா. ‘ என ஆப்பிள் கட் செய்தவாறேஅவளை பார்த்திருக்க.. அவளோ தரையை பார்த்திருந்தாள்.
” முயல்குட்டி இத சாப்பிடு. ” அவள் பால் கப்பை அருகில் வைத்துவிட்டு.. அவனை கண்களை பார்க்காமல் கொடுத்தை வாங்கி சாப்பிட்டு முடித்தாள். ஆனாலும் அவளிற்கோ இந்த அமைதி பிடிக்காமல் கண்கள் கலங்க ஆரம்பிக்கலாமா?. வேண்டாமா?.. என்ற நிலையில் இருந்த நொடி..
தன்னவன் தன் கலைந்த முடிகளை காதின் பின்புறம் ஒதுக்கி.. நெற்றி, கண்கள், காதின் தோட்டில் இருந்த மணிகளை சுண்டி.. பின் காதின் மீதும், கன்னங்களை மென்மையாக வருடி.. அதில் ஆழ்ந்த முத்தம், மூக்கை நீவி.. அதன் நுனியின் மீதும் முத்தம் வழங்கியவன்.. அவளின் உதட்டை மென்மையாக தடவி.. பின் அவளின் கீழ்உதட்டை பிடித்து இழுத்து.. ” ஓய் முயல்குட்டி.. “
அவளின் அமைதிக்கு பின் தன்னவன் மெல்லிய புயலாக வந்து தன்னை தன்னவனின் சூழலுக்குள் கொண்டு வந்து தன்னை சூறையாடிக் கொண்டுயிருகிறானே.. என மனதில் கொஞ்சியபடி.. அவனின்அழைப்பில்.. ” ம். “
” நீ இப்படி தானே என் இதழை பிடிக்க நினைத்த?.. ம்..” கண்களிலும் அதே கேள்வியை வெளிப்படுத்த..
‘ அரசிக்கு தன்னை அறிந்துக் கொண்டதில்.. மேலும் அதிர்வுடன் அவனை பார்க்க.. அவளின் வேந்தனுக்கோ.. அந்த மெல்லிய வெளிச்சம்.. அதில் தெரிந்த தன்னவளின் விழிவிரித்த பார்வை.. கள்ளி என நினைத்து.. அடுத்த நொடி அவனின் இதழ்கள் அவ்விதழில் கவிபாடியது. அவளும் அதனை அழகாக ரசித்து.. பதில் கவிபாடி என இருந்தனர் சில நிமிடங்கள். ‘
‘ தன்னவளை மீண்டும் அள்ளிக்கொண்டு.. வீட்டின் ஹால், சாப்பிடும்பகுதி, முற்றம், முதல்மாடி, என சுற்றி முடித்து.. இரண்டாம் மாடியில் இருக்கும் ஊஞ்சலில் வேந்தனின் தோள் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அவனின் அரசி. ‘
அவளின் நெற்றியில் இதழ்பதித்து.. ” வீடு எப்படியிருக்கு?.. முயல்குட்டிக்கு பிடித்துயிருக்கா?.. “
” ம் நல்லாயிருக்கு. நீங்க இங்க அதிகம் இருந்தது இல்லையா?.. “
” ம்.. ஏன் முயல்குட்டி நம்ம ரூம்மில் திங்ஸ் இல்லாத வைத்து கேட்கிறியா?.. ” புன்னகையுடன் அவள் ‘ ஆம் ‘ என தலையாட்ட.. ” ஆமா நான் 4 இல்ல 6 மாதத்திற்கு ஒருமுறைதான்.. அதுவும் 2நாள்தான் இருப்பேன். அதனால வந்தா என்ன முக்கிய தேவையோ அது மட்டும் இருக்கு. “
அவன் கூறியதை கேட்டு அவள் சிரிப்புடன் பார்க்க.. ” என்ன நான் பொய் சொல்வது போல பார்க்குற?.. “
” ம்… ”
” ஹேய் நீ வால்கலர வைத்து சொல்லுறியா?. நான் உனக்காக எல்லாம் எதுவும் பண்ணாம இருக்க மாதிரி நினைப்பபோல!.. ”
சிரிப்புடனும், கவர்வத்துடனும்.. ” ஆமாம், உங்க முயல்குட்டிக்காக மட்டுமே.. நீங்க ஒன்னும் உங்களுக்குனு செய்யாம.. இருக்கும் பொருள் கூட எனக்கு பிடித்தத தான் செய்துயிருக்கிங்க. அதனால என்ன இப்ப?.. ம். “
புன்னகையுடன்.. ” அதனால ஒன்னும் இல்ல தான்.. நான் உன் ஞாபகத்திற்கு ஆகாதான் பண்ணேன். பிறகு ஏன்டா பண்ணேன் நினைச்சேன்!. ” என கூற.. அவள் அவனை கைகளில் கிள்ள.. அதை தடவிக்கொண்டே..
” ஹேய் முயல்குட்டி.. நான் பட்ட பாடு.. எனக்கு தான்டி தெரியும். நான் அந்த இரண்டுநாளும்.. எங்க உன்வீட்டுக்கு பக்கம் வந்து விடுவேனோ என்று!.. நான் என்னை கன்ட்ரோல் பண்ண.. அவ்வளவு கஷ்டபடுவேன். அதனால தான் அதிக வேலைனு சொல்லி இங்கு வரமாட்டேன். இருந்தாலும் அம்மா, அப்பா வருத்தபட்டு கேட்பாங்க தான். அப்பயெல்லாம் இன்னும் கொஞ்ச வருடத்தில் இங்கு வந்து செட்டில் ஆக தானே போறேன். அதுவரைக்கும் தான். அப்ப நீங்க கேட்பிங்க.. ஏன்டா வெளிய எங்கையும் போகலையானு?.. கேட்கும் வரை வீட்டல தான் இருப்பேன் சொல்வேன். ஆனா அது இன்னைக்குதான் நடந்துயிருக்கு. ”
தன்னவன் தன்னால் இன்ப அவஸ்தை பட்டதை நினைக்க சிரிப்புதான் வந்தது. ஆனால் கடைசிவரியில் குழப்பி.. ” புரியல. இன்னைக்கு என்ன நடந்தது?.. “
” சொல்லியிருக்கனே.. நான் இங்கு வந்தாலும் கடையில் இருப்பேன்.. தூங்க மட்டும்தான் வருவேன். அக்கா, வினோ யாராவது வந்தா மட்டும் தான் நைட் அவங்களோட இருப்பேன். ஆனா நான் ரொம்ப வருடத்திற்கு பிறகு.. இந்த இரண்டு நாளா தான் முழுநாளும்.. எல்லார் கூடவும் வீட்டுக்குள்ளயே இருக்கேன்.. அதுவும் இன்று என் முயல்குட்டியோடவே. ” அவள் தலையை தடவியபடியே… ” உன்கூட இருக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப வருட ஆசை முயல்குட்டி. “
‘ தன்னால்.. தன்னவன்.. தன் இளமையான பருவத்தை உறவினர்களுடன், நண்பர்களுடன் அனுபவிக்காமல் இருந்திருப்பது வருத்தத்தை தந்தது. அதைவிட இப்படி அவன் ஒரு காரணத்தற்காக தன் மனதை கட்டுப்படுத்தி இருப்பதுகூட.. மனத்திற்கு அழுத்தம் தரும் செயல்தானே. தன் மீது அவன் வைத்துயிருக்கும் இருக்கும் விருப்பம் சற்று அதிகம். நான் இப்போது கிடைத்துயிருக்கலாம். அதற்கு மாறாக கிடைக்கவில்லை என்றால்.. அவன் மனநிலை சற்றும் கணிக்க முடியாத எல்லையில் இருப்பானே.. அவன் தன்னை கவர்ந்து சென்றுயிருப்பேன் என்று கூறியது.. ஒருபக்கம் அதன் வார்த்தையில்.. அவனின் காதலில் கர்வம் வந்தாலும்.. அதை அவன் சொல்வது போல செய்யமாட்டான். ‘
‘ பெற்றோர் இருவரையும் அழைத்து.. தன் காதலை அவர்களிடமும், தன்னிடமும்.. நிதானமாக இல்லை.. கோபமாக கூறி.. எப்படியேனும் திருமணம் செய்வான்.. பின் என் சம்மதம், சமாதானத்திற்கு காத்துயிருப்பான். ஆனால் அதை செய்யும்முன்.. அவனின் மனநிலை.. நினைக்கவே பயம் வந்து!. அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள். ‘ பின் சில நொடிகள் கழித்து..
” ஏன் தனு என்னை நினைத்து இப்படி பண்ணிங்க?.. வீட்டிற்கு அதிகம் வராம.. அதிக வேலை செய்தும் இருந்துயிருக்கீங்க. இப்படி இருந்ததல மன அழுத்தம் வந்துயிருந்தா?.. உங்க உடம்புக்கு இது நல்லது இல்ல தானே. ஏதாவது உடம்பு முடியாம.. பிரச்சனை வந்திருந்தா?.. அதுக்கு காரணம் நான்தான் என்று உங்க வீட்டல தெரிந்தா?.. என்ன நடக்கும் சொல்ல முடியுமா?.. “
” உங்க அன்பு, காதலை!.. நீங்க என்னிடமோ?. இல்ல உங்க நண்பர்களிடமே பகிர்ந்திருந்தா பரவாயில்ல.. ஆனா நீங்க யாரிடமும் சொல்ல. ஆனா இது யாருக்கும் அந்த நேரத்தில் புரியாது. என்னைய எல்லாம் தப்பா நினைக்கமாட்டாங்க. அதுவிட உங்க விருப்பத்தையே தப்பா புரிந்துக் கொண்டாங்கனா?.. அதுக்கு என் மேல உங்களுக்கு விருப்பம் வராமலே இரு… ” அவள் முடிப்பதற்குள்..
அவளின் இதழ்கள் அவன் இதழிலில் அடங்கியும்.. அவளின் வார்த்தை அவளிற்கு உள்ளேயும் சென்று விட்டது. அவனின் அதரமுத்தம் மென்மையாகவும், அழுத்தமாகவும், இருக்க. ‘ ஏன் முயல்குட்டிஇப்படி சொல்ல வந்த?.. ‘ என கண்கள் கண்ணீர் சிந்தியது. அவன் இரண்டையும் நிறுத்துவதாக இல்லை. பின் அவளுக்கு மூச்சுவிட நேரம் கொடுக்கும் பொருட்டு.. அவள் முகம்மெங்கும் கொடுத்து.. மீண்டும் அவள் இதழில் இதழ்பதித்தான். ஆனால் கண்ணீர் மட்டும் நின்ற பாடு இல்லை. சில பலநொடிகள் கழித்துதான் தன்னவளின் இதழுக்கு விடுதலை கொடுத்தான். அவளை மார்பில் இறுக்க அணைத்துக் கொண்டான். அவன் நிதானத்திற்கு வர சில நிமிடங்கள் ஆனாது.
” ஏன் முயல்குட்டி இப்படி நினைச்ச?.. நான் உன் நினைப்பு வராம இருக்க கஷ்டப்பட்டேன் தான். ஆனா மனசு.. உடம்பை நல்லா பார்த்துக் கொண்டேன் டா.. நான் என் முயல்குட்டியோட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழனும் நினைக்கும் போது.. எப்படி என் உடல்நிலையை கவனித்துக் கொள்ளாம இருப்பேன் சொல்லு?. நான் உன்னால தான்.. எனக்காக என்று ஹாஸ்பிடல் போய்கூட ரொம்ப வருஷம் ஆச்சு முயல்குட்டி.” என சற்று கடினம், கோபத்துடன் கூறியவன்..
அவளின் கூந்தலை ஒதுக்கி.. காதின் அருகே மிக மெல்லிய குரலில் ” இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாள் தான்.. உன் தனுவும்.. அவனின் உடம்பும் எவ்வளவு பலமான இருக்கோம் என.. என் முயல்குட்டி அறிந்து.. பார்த்து.. புரிந்து தெரிந்துக் கொள்ளுவியாம். அதுவரைக்கும்.. ”
‘ அவனின் அதிரடியோ அதிரடியான செயல், அவனின் கண்ணீர் அருவியின் மூலமே.. தன் மீது அவன் தன்மேல் வைத்துயிருக்கும் அன்பிற்கு இதுதான் என்று.. ஒரு வரையறை பேர் வைக்க முடியாது. அதனால் எழிலரசி.. நீ அவனின் காதலில் தலையிடாதே. அவன் உன்னையும்!.. உன்னைவிட உனக்கு சொந்தமான அவனையும், அவன் உடல்நிலையையும் நன்றாக பார்த்துக் கொள்ளவான் என முடிவெடுத்து.. ‘ அவள் நினைக்கும் வேலையில்..
அவனின் கடைசி வரி.. அவளை டேய் டேய் தனு.. இதுக்கும் மேல என்னால முடியாதுடா.. அவனின் இதழ் மேல் விரல் வைத்து.. வார்த்தையை நிறுத்தி.. ” தனு.. நான் நான் இனிமே இப்படி நினைக்க மாட்டேன். நினைக்கவே மாட்டேன் டா. என் தனுமாமா. ” அவனின் கன்னம் பிடித்துகொஞ்ச.
‘ அவனிற்கு தன்னவள் தன்னிடம் இப்பவே இந்த கேள்வி கேட்டதுகூட நல்லதுதான் என நினைத்தான். தன்னிடம் இந்த கேள்வியை வருங்காலத்தில் யாரேனும் வேறு மாதிரி கூட கேட்க வாய்ப்பு உள்ளது என நினைத்தான். தனக்காக தன்னவள் யோசிக்கும் விதத்தில்.. அவனுக்கு அவளின் மீது இன்னும் இன்னும் தன் முயல்குட்டியின் மீது காதல் பெருகியது. ‘
அவளின் கொஞ்சலில்.. ” ம்.. அந்த பயம் இருக்கனும். “
” ம்.. ” தலையை வேகமாக ஆட்டி.. பின் அவனின் கண்களில் இதழ் பதித்தாள். பின் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள். ” தனு.. எனக்கு உங்க அன்பு கர்வமாவும் இருக்கு.. சில சமயம் பயமாவும் இருக்கும். யாரும் கஷ்டப்படக் கூடாது. எல்லாம் நல்லபடியா நடக்கனும். ” அவள் திரும்பவும் கூற..
” கண்டிப்பா முயல்குட்டி.. நான் பார்த்து கவனமா பண்ணுறேன். ” என அவள் தலையை தடவிக்கொடுக்க.. இருவரும் அமைதியாக இருந்தனர்.
வேந்தனின் மார்பில் நீண்ட நேரமாக வந்த.. போனின் அதிர்வில் தூக்கம் கலைந்த எழிலரசி.. நிம்மதியான உறக்கத்தின் பிடியில் இருக்கும் தனுவின் முகத்தை பார்த்தாள். மீண்டும் போனின் அதிர்வு, வெளிச்சம் தெரிய.. போனை தன்னவனின் பாக்கெட்டில் இருந்து எடுக்க.. அதில் தெரிந்த பேரை பார்த்து.. தன்னவனையும் எழுப்ப மனம்இல்லாமல்..
சற்று தயக்கத்துடன்.. ” அண்ணா.. “
எதிரில் இருந்தவர் சற்று குழம்பி.. ” வேந்தன் போன்தானே…”
” ம்.. தனு தூங்குறாங்க. ”
” நீ எங்கயிருக்கீங்க?.. “
” அவங்க வீட்டு மாடியில் ”
” அவன் எங்க?..”
” என் பக்கத்தில். “
” அவன்ட்ட கொடு. “
” தூங்கு ” முடிக்கும் முன்..
” அடுச்சு எழுப்பி கொடு. “
” ம்.. ” தனு.. தனு அவனை கன்னத்தில் தட்ட.. அவனும் கண்களை திறக்க.. அவளை பெயர் சொல்லி அழைக்கும் முன்.. ” தனு போன் இந்தாங்க. “
அவனும் பேர் பார்த்து பின் நிதானித்து.. ” திலகா நான் கொஞ்சம் நேரத்தில் கிளம்பிடுவேன். நீ வீட்டுக்கு வந்துடு. “
” டேய் டேய் எழிலரசி உங்க வீட்டில் என்னடா?.” அவன் முடிக்கும் முன்..
” திலகா நான் அரசிய அவங்க வீட்டில் விடனும்.. மணியாச்சு… பார்க்கும் போது பேசலாம்… வைக்கிறேன். “
‘ போனை வைத்துவிட்டு.. தன் எதிரே அந்த அதிகாலையில் வேளையில் தன்னவனை ரசித்து பார்த்துக் கொண்டுயிருந்த தன் அரசியை.. திலகனின் போனை அவள் எடுத்து பேசியதற்காக முறைத்துக் கொண்டுயிருந்தான். அது சில நொடிகள் மட்டுமே அவனால் அதை செய்ய முடிந்தது. ‘
‘ புன்னகையுடன் அவளுக்கு நெற்றியில் முத்தமிட்டு.. அவளை அள்ளிக்கொண்டான்.. அவளும் தன்னவனின் கழுத்தில் தோள் சாய்ந்து.. இறுக்க இறுக்க கட்டிக்கொண்டாள். அவர்கள் ஏதும் பேசும் நிலையில் இல்லை. இந்த அணைப்பு.. இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும். பேசினால் அணைப்பின் இதத்தை அவளால் உணர முடியாமல் போய்விடுமே. அதனால் இல்லை பேச்சு. ‘
‘ வேந்தனும் அமைதியாக அவளின் மூச்சுக்காற்று தன் கழுத்தில்பட.. அவனின் இடை இறுக்கத்தை கூட்டி அணைத்தில்.. அவளின் மூச்சுக்காற்றோடு.. அவளின் ஸ்பரிசம் முழுவதும் உள்வாங்கிக் கொண்டு.. படிகளில் மெதுவாக இறங்கி.. வீட்டின் முன்பகுதி இருக்கும் திண்னையில் அமர வைத்தான். ‘
” என் முயல்குட்டியோட தோட்டத்தை பார்த்துட்டு இரு.. இதோ வரேன்.. ” அவள் தலையாட்டிய பின்..
வேந்தன் வீட்டினுள் வேகமாக செல்ல.. அரசி அதிகாலை நிலவொளியில் தெரிந்த மலர்களின் அழகை!.. படியில் அமர்ந்து பார்த்திருந்தாள். தன் வீட்டில் இருப்பதுபோல பல வண்ண ரோஜாசெடிகள்., தனக்கு பிடித்த மல்லி, ஜாதி முல்லை, முல்லை பூக்கள், வேப்பமரம், முருங்கை வாழை, தென்னைமரம் இவற்றை ரசித்திருந்த வேலையில்.. தன்மேல் ஒரு மெல்லிய துணியை போர்த்தி.. பின் தன்கையில் அவன் செய்த ஸ்விட் அடங்கிய பாக்ஸ் கொடுத்து.. பின் அவளை அள்ளிக்கொண்டு தன் பைக் அருகில் இறக்கிவிட்டான்.
அரசி தன் மேல் இருந்த அந்த உடையின் ஷாலை பார்த்தும்.. தன்னவனை பார்த்தும்.. கேடி கேடி.. நினைக்க.. சட்டென்று.. அவள் காதருகே.. ” என் முயல்குட்டி, அரசிம்மாக்கு மட்டும். நான் ரொம்பவே கேடி பையன் தான். ”
‘ போடா ‘என நினைத்து.. பின் தன்னவனின் வீட்டை பார்த்து பின் இருவரும்மாக புகைபடம் எடுத்த பின்.. தன்னவனை இறுக்க கட்டிக்கொண்டு தன் வீடு நோக்கி சென்றாள் எழிலரசி. வேந்தன் இன்பாவிற்கு மாடிக்கு சொல்லும் போதே அழைத்து கூறிவிட்டான்.
” முயல்குட்டி.. நல்லா சாப்பிடு.. வீட்டல மேக்ஸிமம் எல்லோர்கூடவும் இரு. என்னிடம் பேச நினைத்தா?.. கால் பண்ணு.. எடுக்கலைனா மெசேஜ் பண்ணு.. சரியா. நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் கிளம்பி விடுவேன்.. திலகன் காரில் தான் சென்னைக்கு போறேன். நான் காரில் ஏறியதும்.. உனக்கு கால் பண்ணுறேன். நீ பால்கனியில் நில்லு. முயல்குட்டிய இரண்டு நிமிடம் பார்த்துட்டு போறேன். ”
அதுவரை ம்..ம்.. என கூறியபடி வந்தவள்.. கடைசி வரியை கூறியவுடன் அமைதியானாள். ” முயல்குட்டி என்ன பதில காணும்.?. “
” தனு.. நீங்க எனக்கு சென்னை போனதும் கால் பண்ணுங்க போதும். ” அவள் கூறியவுடன் வண்டி சட்டென்று நின்றது. வேந்தன் ஏன்?.. என்பது போல திரும்பி அவளை பார்க்க..
” நமக்கு கஷ்டமா இருக்கும். வேண்டாமே. “
வேந்தன்.. அவள் கூறுவதும் உண்மைதான். அவளை தூரத்தில் நின்று பார்த்து மட்டும் தன்னால் செல்ல முடியாது. அவ்வாறே சென்னை சொல்வது அதைவிட கடினம்.
” ம்.. சரி. உன்னை பார்த்துட்டு மட்டும் போறது.. கொஞ்சம் கஷ்டம்தான். ” அந்த மட்டும் என்றதில் அழுத்த..
” கேடி தனுமாமா. ” சிரிப்புடன் கூறவும்.. வீடு வந்துவிட்டது.
அவள் இறக்கும் முன் வேந்தனிற்கு அழுத்தமான இறுக்கம் கொடுத்து.. பின் தனுவின் முன் நின்றாள். அவன் வண்டியில் இருந்தவாறே.. அவளின் கையை பற்றி மோதிர விரலை தடவியபடி.. ஒருநிமிடம் இருந்தான். அவளின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டான். பின் வெறும் தலையசைப்புடன் எழிலரசி உள்ளே செல்ல.. அவளின் அறையின் விளக்கு வெளிச்சத்தை பார்த்து பின்.. வண்டிய திருப்பி.. அவன் வீடு சென்றான்.
வேந்தன் வீட்டை ஐந்தே நிமிடத்தில் கடந்து.. வீட்டினுள் தான் மட்டும் நுழையும்போது ஒருபுன்னகை தோன்றியது. பின் ஹாலை பார்க்க.. மணி 4 யாரேனும் எழுந்திருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் யாரும் எழவில்லை..’ ஹப்பா!.. ‘ என சமையல் அறையில் அரசிக்கு தயாரிப்பதற்கு பயன்படுத்தவற்றையும், இடம் அனைத்தும் சுத்தம் செய்த பின் அறிகுறி ஏதும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்திவிட்டு வெளியே வர..
ஹாலில் வெளிச்சம் பரவியது. அங்கு வந்த சித்ரா, ரவிந்திரன் இருவரும்.. இந்நேரத்தில் வேந்தனை.. அதுவும் இந்த கோலத்தில் எதிர்பார்க்கவில்லை.