அரசியோ.. கண்களில் காதலை தோக்கி.. ” எனக்கு!.. நான் உங்க கூடவே எப்போதும் இருக்கேனு.. நான் உணர.. சந்தோஷபடவும். உங்களுக்கு!.. நீங்க சொன்னீங்க இல்ல.. என் நினைப்பு வராம இருக்க.. வேலை செய்தேனு. அதான் இதை பார்த்தும், உபயோகப்படுத்தியும்.. நீங்க இதனை வருடமா என்னை நினைக்காம இருந்ததற்கு தண்டனையாவும் வைச்சுக்கலாம். ”
” இல்ல நீங்க அதிகம் உபயோகப்படுத்துவது எல்லாம் நான் வாங்கி கொடுத்தா இருந்தா!.. இல்ல நீங்க இதையெல்லாம் பார்த்து தனியா இருக்கிறோம் கவலப்படாம.. நான் எப்போதும் உங்ககூட தான் இருக்கேனு.. நீங்க இருக்கனும் வைச்சுக்கலாம். எப்படி உங்க முயல்குட்டி செயல். ம்.. ” கண்களை உயர்த்தி..
‘ அவள் தன் அறையில் ஊஞ்சலில் அவன் மடியில் அமர்ந்திருந்திருந்து.. தன் முன்னால் அவன் முகம் இருந்தால் எப்படியிருக்குமோ?.. அந்நிலையில் போனை வைத்து பேசிக் கொண்டுயிருந்தால் அவனின் அரசி. ‘
” இந்த தண்டனையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. நான் ஒன்னும் பண்ணல.. அதுக்கு காரணம் நீதான். நீதான் முயல்குட்டி மாதிரி வந்து என்னைய இப்படி செய்ய வச்ச. அதனால குற்றம் செய்தவர்களை விட.. குற்றம் செய்ய தூண்டியவர்களுக்கு தான் தண்டணை ஜாஸ்தியா கொடுக்கனும். அதனால நான் வீட்டுக்கு வரும் போது.. இத்தன வருடத்தையும் சேர்த்து உனக்கு தண்டனை கொடுக்கிறேன். ஓகேயா. ”
” ம்.. நீங்க கொடுக்க ரெடியா இருந்தா?.. தனுமாமா என்ன கொடுத்தாலும் நான் வாங்க தயார். ” கள்ளப் புன்னகையுடன் கூற.
கேடி.. பதில பாரு… ” முயல்குட்டி நான் இருக்கும் இடம் ஞாபகம் இருக்கட்டும். பாவம் உன் தனு. ” நான் விட்டா இவ கிட்ட பேசிட்டு இருப்பேன்.. சாதாரணமாகி.. ” சரி அரசிம்மா.. நேரம் ஆச்சு நான் வைக்கிறேன். சாய்ந்திரம் கால் பண்றேன். ” ம்.. என தலையசைத்து இருவரும் போனை வைத்தார்கள்.
வேந்தன் பொருட்களை எடுத்து வைத்து.. பின் மலர்களை ஆசையுடன் பார்த்தான். தன் முயல்குட்டியின் உடலிருந்து வரும் வாசனையை போல.. ஒரு சுகந்தமான மணம். அவள் தன் அருகில் இருப்பதைபோல உணர்த்தியது. பின் அதே துள்ளல் மனதுடன் அதனை எல்லாம் எடுத்துக்கொண்டு.. தன் அறைக்கு சென்றான்.
வரும் அவனையே பார்த்தார்கள்.. அவனின் குழுவில் இருப்பவர்கள். அந்த ஐவரும் தாமதமாக அவர்களின் இடத்திற்கு வரவும்.. அவர்களின் எதிர்பக்கத்தில் இருந்தவர்கள் தாமதத்திற்கு காரணம் கேட்க.. அவர்கள் தங்களின் அதிர்ச்சியில் சிலவற்றை வெளிப்படுத்த.. என்ன திருமணமா?. என்று அவர்களும் நினைக்க.. இவனை எதிர்பார்க்க.. அவன் மற்றதை மறந்து.. தன் இடத்திற்கு எப்போதும் போல.. ஆனால் முயல்குட்டி தன்னுடனே இருக்கிறாள் என்ற உணரவில்.. முகம் பொலிவுப்பெற்று.. இன்னும் அழகாக கம்பீரத்துடன் நடந்து வந்தவன் தன் அறையினுள் நுழைந்து விட்டான் அரசியின் மன்னவன்.
இவன் எதுவும் கூறாமல் சென்றதால்.. பார்த்திருந்தவர்களுக்கு தான் ஏமாற்றம். பின் இங்கு தானே இருக்கப் போகிறார்.. என தங்கள் வேலையை கவனித்தார்கள்.
அவரவர் வேலையை கவனித்த வேலையில்.. வேந்தனிடம் இருந்து பொதுவான மெயில் வந்தது. தங்கள் குழுவில் இருக்கும் அனைவரையும் மாலை சந்திக்க வேண்டும் என்று சந்திக்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தான்.
புன்னகை முகங்களுடன் அவர்களும் அதற்கு பதில் அளித்துவிட்டு.. பின் வேலையை தொடர்ந்தார்கள். சரியாக வேந்தன் 6.15மணிபோல் தன் அறையில் இருந்து வெளிவந்தான். அவன் வரவும்.. அங்கு சில ஸ்விட் பாக்ஸ் அடங்கிய கவர் ஒன்று 15நபர்கள் அமர்ந்துயிருக்கும் கியூபிகின் நடுவில் உள்ள மேடையின் மீது வைக்கப்பட்டுயிருந்தது. அவர்களில் சிலருக்கு ஒன்றும் புரியவில்லை. சிலர் ஆவலுடன் இருந்தார்கள்.
அனைவரையும்.. ” ஹாய் பிரண்ட்ஸ்.. நான் மதியமே உங்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை ஷேர் பண்ணும் நினைத்தேன். ஆனா அதை ஸ்விட்டோட சொன்ன நல்லாயிருக்கும் தான்.. கொஞ்சும் தாமதம் ஆகிடுச்சு. ” கூறியவுடன் அவரவர் இடத்திற்கு சென்று ஸ்விட் பாக்ஸ் கொடுத்தான்.
ஆர்வம் மிகுதியில் அனு.. “ சார் உங்களுக்கு நிஜமா கல்யாணம் ஆகிடுச்சா?.. லவ் மேரேஜா சார். “
மெல்லிய விரிந்த புன்னகையுடன்.. ” இல்லங்க அனு.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. ஆகப்போகுது. அது பற்றி சொல்லத்தான் இப்ப வந்தேன். ” எல்லோரையும் பார்த்து.. பின்
புன்னகையுடன்.. “ நான் எழிலரசி என்ற என் அரசிக்கு.. இன்னும் மூன்றே மாதத்தில் கணவனா ஆகப்போறேன். நேற்று தான் எங்கள இரண்டு குடும்ப உறுப்பினர்களும் ஆசிர்வதித்து.. உறுதி செய்து.. நிச்சய, கல்யாண டேட் முடிவு பண்ணியிருக்காங்க. ” வெக்கம், நாணம், ஆனந்தம் அனைத்தும் முகத்தில் கலந்து புன்னகையுடன் கூறினான்.
அவன் கூறிய விஷயம்.. அதனை சொன்னவிதம் அவர்களுக்கு புதுவிதமாகவும், கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது.
முதலில் ” வாழ்த்துக்கள் சார். ” இருந்தவர்கள் அனைவரும் வாழ்த்த..
” சார் நீங்க சொன்னவிதம் சூப்பர். நாங்க உங்க அரசியோட போட்டோ பார்க்கலாமா?.. “
” ம்.. ” அவர்களுக்கு தன் போனிலிருத்து எடுத்துக் கொடுத்துவிட்டு.. அருகில் இருந்த வேறு நபரின் வாழ்த்ததையும், அவர்கள் கேட்ட தகவல்களை கூறிக் கொண்டுயிருக்க.. அவனின் போனை வாங்கி பார்க்கும் போது எதிர்பாராமல் போனின் மீது கைபட.. அப்போது வேந்தனுக்கு அரசியிடம் வந்த வீடியோகால் ஆன் செய்துவிட்டார்கள்.
” தனு.. ” என்ற அழைப்புடன் நிறுத்தி.. அரசி அவர்களையே பார்த்துயிருந்தாள். அவளுக்கு யாருடா?. என் தனு போனில் என்று மட்டும் நினைத்து பார்த்தாள். அதன்பிறகு அவளுக்கு அவர்களை பார்க்க நேரம் இல்லை. அவள் ஒருவரிடம் இருந்து தன்னை காப்பாற்றக் கூற வந்திருக்க.. இவர்களை ஆராயத் தோன்றவில்லை.
அவர்களும் அரசியை தான் பார்த்தியிருந்தார்கள். ஒப்பனையில்லா பூசுபூசு கன்ன முகத்தில் சிறுகருப்பு மட்டுமே. சிறிய தோடு, மெல்லிய செயின், பின்னல் கூந்தலில் மல்லிக்கை பூ, உடை என்னவென்று தெரியவில்லை.
” ஹாய் நான் எழிலரசி. நீங்க தனு கூட வேலை செய்பவர்களா?.. “
மதியம் இந்த பெயரை கேட்டதால்.. “ஆமா.. வேந்தன் சார் வந்து இப்பதான்.. உங்க திருமணம் பற்றி எங்களிடம் கூறி.. எங்களுக்கு ஸ்விட் கொடுத்தாங்க. நாங்க உங்கள பார்க்க போட்டோ பார்த்திட்டு இருந்தபோது.. தெரியாம கால் அட்டன் ஆகிடுச்சு. ” அவள் ஏதாவது நினைத்துக் கொள்வாளோ தன்னிலை விளக்கம் கொடுக்க..
” பரவாயில்ல.. நான் உங்களிடம் வேறொரு நாள் பேசுறேன். அவரிடம் கொடுக்கிறிங்களா?.. “
” ம்.. சரிங்க. ” கூறி வேந்தனின், ஆகாஷ் அருகில் இருக்க.. நிஷா கொடுக்க வரும் போதே அவன் முன்வந்து வாங்கி.. ” என்ன அரசிய பார்த்துட்டிங்களா?.. எப்படி இருக்கேன் நான்?.. அவங்களுக்கு பொருத்தமா இருக்கனா?.. “
அவனை சற்று கலாய்க்கும் எண்ணம் வந்து.. “ ம்.. நீங்க நல்லா இருக்கிங்க சார். நீங்க எவ்வளவு அமைதி.. அவங்கள பார்த்த வாயாடி மாதிரி தெரியறாங்க?. இல்ல உங்கள மாதிரி அமைதியா?. “
” இல்லங்க அவங்க அமைதி என்றால் என்ன விலைனு கேட்பாங்க?.. செம்ம வாயாடிங்க. ”
” ஓ.. அப்படியா தனு. நான் செம்மையா வாய்யடிப்பனா?.. ”
என்ன முயல்குட்டி வாய்ஸ் கேட்குது.. சுற்றிப்பார்க்க.. ” தனு நான் போன்ல இருக்கேன். இங்கபாருங்க. ”
அவன் மெதுவாக போன்னை பார்க்க.. எதிரில் இருந்தவள்.. அமைதியாக பார்த்து.. என்ன என்பது போல?.. கண்களை ஏற்றி இறக்கி மட்டுமே காண்பிக்க.. ” ஹேய் அரசிம்மா.. இப்படியெல்லாம் நான் பொய் சொன்ன மாதிரி பார்க்ககூடாது. சரியா. லைன்ல இரு.. “
அவர்களின் அருகில் விடைபெற வர.. அவர்கள் ” என்ன சார் அமைதியானங்கள.. வாயாடினு சொல்லி.. ஏதாவது விழுந்ததா?.. “
” இல்லங்க அரசி நல்லாவே என்னிடம் வாயடிப்பா. ஆனா அமைதி மாதிரி இருப்பா. “
” உங்கள மாதிரியா சார். ” காலையில் இருந்து உறுத்திய கேள்வியை சாதாரணமாக கேட்டுவிட.. சிலநொடிகள் அமைதியானது அந்த இடம்.
வேந்தனுக்கு ஒன்றும் தெரியவில்லை.. மதியம் இதே கேள்வியை கேட்டதால்.. ” நீங்க என் நண்பன் என்னிடம் பேசியதை வைத்து கேட்றிங்க. நீங்க என்னோட நடவடிக்கையில் பயந்திருப்பீங்க போல. எது என்னோட உண்மையான முகம், குணம்?.. என்று. ” கூறி அவர்களைபார்க்க.. அவர்கள் ‘ ஆம் ‘ என்பது தலையாட்ட..
” இல்லங்க நான் எப்போதும் எல்லோரிடமும் அமைதிதான். நீங்க நான் நண்பனிடம் எழிலரசி பற்றிப் பேசி.. அதனால அவனிடம் திட்டு வாங்கினேனு.. நீங்க கவனித்துயிருக்க மாட்டிங்க. அரசியோட பேசும்போது, பார்க்கும்போது, இல்ல அவள பற்றி யாரிடமாது சொல்லும் போது மட்டுமே.. இதுநாள் வரைக்கும் இருந்த வேந்தனிற்கும் இப்போது, இனிமேல் இருக்கபோகும் வேந்தனிற்கும்.. என் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும். மற்ற நேரங்களில் நான் எப்போதும் முன்ன பார்த்த வேந்தன தான் பார்ப்பீங்க. “
அவர்களுக்கு வேந்தன் கூறிய பதில் ‘ அப்பாடா ‘ என்று இருந்தது. ஆனாலும் தங்களை புரியவைக்க எண்ணி.. ” ம்.. சரி சார். சாரியும் கூட. எங்கள நீங்க தப்பா எடுத்துக்காதிங்க. உங்கள நாங்க நல்லவிதமா நினைத்து வைத்து இருந்ததற்கும்.. காலையில் அவர் அப்படி பேசி கேட்டவுடன்.. கொஞ்சம் கவலையும், சந்தேகமும் வந்துருச்சு…. நாங்க பெரிய கம்பெனியில் வேலை செய்தும்.. ஜாலியா பேசினாலும்.. எங்களோட பாதுகாப்பு முக்கியம் இல்லயா?. யாரையும் எதிர்பார்க்காம நம்மாளே அந்த சந்தேகம் தீர்த்துக் கொள்ளனும் நினைத்தோம். அப்ப தான் நாங்க வேலை செய்யற இடம் எங்களுக்கு நிம்மதியா இருக்கனும். உங்களை பார்க்கும் போதும் தவறான எண்ணம் தோன்றாது இல்ல. அதனால்தான் கேட்க வேண்டியதா போச்சு. “
” பரவாயில்லைங்க நான் எதுவும் நினைக்கல. நீங்க எல்லாம் பல கனவுகளோட வேலைக்குவரீங்க. அங்கு பாதுகாப்பு, நிம்மதி ரொம்ப முக்கியம். அதோட தைரியமும், நிதானமும் சேர்த்துக்கோங்க. அதுதான்.. இங்க இல்லாட்டியும் வெளியில் பிரச்சனை வந்தாக்கூட.. பிரச்சனையை சமாளித்து.. அடுத்த கட்டத்திற்கு உங்கள கொண்டு போகும். ”
” ம்.. சரி சார். நாங்க பார்த்துக்கொள்கிறோம். எழிலரசி அவங்களோட இப்ப பேச முடியல.. அவங்க உங்களிடம் ஏதோ அவசரமா பேசனும் அப்படிங்கற மாதிரி இருந்தாங்க. நாங்க நடுவில் பேசி இவ்வளவு நேரம் ஆச்சு. ஆனா கண்டிப்பா ஒருநாள் அவங்களோட நாங்க பேசனும். “
” ம்.. பேசலாங்க. இதோ வரேன். ” தன் அறைக்குள் அவசரமாக வந்தான். ” முயல்குட்டி என்னச்சு?.. அவசரசமா பேசனும் மாதிரி இருந்தியாமே. ” அவன் இவ்வளவு நேரம்.. தன்னை அவர்கள் தவறாக நினைத்துவிட்டார்கள் என்பதை கூட நினைக்க தோன்றாமல்.. அவர்கள் அரசியை பற்றிக் கூறியதும் உடனே வந்து கேட்க.
‘ அவர்களின் உரையாடல் கேட்டவள்.. தன்னவனின் நண்பர் கூறிய ஒருசில வார்த்தைகளில்.. இவ்வளவு நாள் அவனை பற்றி நேர்மறையாக எண்ணியவர்கள்.. அவனை பற்றிய கருத்தை உடனே அவர்கள் மாற்றி.. அவனை சந்தேகித்து நேரடியாக கேட்டு விட்டார்கள். தன்னை மட்டுமே இத்தனை வருடங்களாக மனதில் சுமந்தவனை தவறாக எண்ணி சந்தேகம் கொண்டார்களே என்ற வருத்தம் இருந்தாலும்.. ‘
‘அந்த பெண்களை எண்ணி பெருமை கொள்ளத்தான் முடிந்தது. இவர்களை போல எல்லா பெண்களும் தனக்கு பிடித்தமானவர்கள், பிடிக்காதவர்கள் ஆகினும் தங்களை தாங்களாக முதலில் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தற்காப்பு கலை தேவையில்லை. ‘
‘ ஏனெனில், இப்போது தங்களுக்கு பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளின் சில மூலகாரணம் தங்களை தவறான நோக்கத்தில் பார்ப்பவர்களின், நினைப்பவர்களை முதலில் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து.. எளிதில் அறிந்துக் கொள்ள வேண்டும். தங்களிடமும், பிறரிடமும் பேச்சுமுறை, நடந்துக்கொள்ளும் முறையில் மாற்றம் எனில் அதனை தானும் உணர்ந்து.. மற்ற பெண்களிடமும் பகிர்ந்து.. உடனே அவர்களை மற்றவர்களிடம் நேர்மையான வழியில் சுட்டிக்காட்டவே.. தண்டிக்கவோ வேண்டும். அப்போது தான் அவர்களால் எந்த பெண்ணிற்க்கும் பாதிப்பு வராது. வெளியிடங்களில் வேலை செய்யவர்கள், வீட்டை பேணி காக்கும் பெண்கள் முதல்.. இது எல்லா நிலையில் உள்ள பெண்கள், குழந்தைகள் வரை இது பொருந்தும். ‘
‘ தன் தனு.. அவர்கள் கூற வருவதை சரியாக புரிந்து.. அவர்களுக்கு தன் நடவடிக்கையின் மாற்றத்திற்கு காரணம் தன் அரசி. அவள் அந்த பெண் மட்டுமே.. எனக்கு மிகவும் நெருக்கம். மற்ற பெண்களிடம் இதுநாள் வரை எப்படி இருந்தனோ?.. அதன்படி தள்ளி நின்று தான் பழகுவேன்.. இதுநாள் வரை இருந்தது போல் என்னை நம்புங்கள் என அழகாக கூறிய தன்னவனை உடனே கொஞ்ச தோன்றியது.. ஆனால் அவன் பக்கத்தில் இல்லையே என்ற வருத்தமும் சில நொடி வந்தது. தன்னை பார்த்தால் அவனிற்கு தெரிந்துவிடும். அதனை மறந்து.. தான் சேமித்த நினைவுகளை கண்முன் கொண்டு.. புன்னகை முகத்துடன் தனுவை எதிர்கொண்டாள். ‘
” தனு.. அம்மா என்னைய தாவணி போடக்கூடாது சொல்லுறாங்க. நீங்கதானே போட்டுக்க சொல்லி சொன்னீங்க. இப்ப என்னைய போடவிட சொல்லி.. அம்மாட்ட சொல்லுங்க. ” என்னவோ?.. ஏதோ?. என பதட்டத்துடன் வந்தவன்.. முயல்குட்டி அவளின் அம்மா மீதான குற்றப்பத்திரிகையை கேட்டு சிரிப்புவர.. அதனை கட்டுப்படுத்திக் கொண்டு..
” வெளிய போட்டு போறியா?.. ” ஆம்இல்லை என்பது போல ஆட்ட.. புன்னகையுடன்.. ” நான் உனக்கு வீட்டுக்குள்ள மட்டும்தான் அனுமதினு சொல்லியிருக்கேன் முயல்குட்டி. நான் அத்தைக்குதான் சப்போட்.. ” என கூறியதும் அவள் முகத்தில் வருத்தம் தென்பட.. அதை காணமுடியாமல்.. ” இப்ப போட்டுயிருப்பதை காம்மி.. “
‘ வானம்நீலநிற தாவணி, அதற்கு மெரூன வண்ண பிளெளஸ், பாவாடை.. ‘ ஊஞ்சலில் அமர்ந்துயிருந்தவள் எழுந்து காண்பிக்க..
‘ முயல்குட்டி ஏன்டி.. இப்படி அழகாக இருந்து கொல்லுற!.. ம்.. இவள இப்படி பாவாடைதாவணியில் பார்ப்பதற்காகவே முன்னாடியே பார்த்துயிருக்கலாம் போல. இப்ப யோசித்து என்ன பண்ண?.. ம்.. அவ விருப்பததை நிறைவேற்றனும்.. ஆனா கொஞ்சம் சுயநலமாவும் தோனுதே. ‘
” எங்க போக கிளம்பின அரசி?.. “
” அது அது தனு.. சும்மா.. ”
அவள் முகத்தில் ஒரு நொடியில் வந்த சென்ற வருத்தத்தை கவனித்தான்.. கோயிலுக்கு போவாலோ?.. ” சரி முயல்குட்டி.. அத்தம்மாவிடம் நான் சொன்னேன் திரும்ப சொல்லு.. ஒன்னும் சொல்லமாட்டாங்க. பார்த்து போயிட்டு வா. சத்யா கூடவராங்களா?.. ” அவள் ஆம் என தலையாட்ட. ” சரிடா. நீ வீட்டுக்கு வந்தவுடன் கால் பண்ணு. நானும் வீட்டுக்கு கிளம்பனும். வைக்கிறேன். ” என அவன் வைத்தவுடன்.. அவளோ கண்டுபிடித்துவிட்டான் எண்ணியபடியே அழைப்பை தூண்டித்தாள்.
வேந்தன் வந்து பார்க்க அங்கு ஆகாஷ் தவிர யாரும் இல்லை. அனைவரும் பொதுவாகவே 6.30 மணிக்கு கிளம்பிவிடுவர். இவன் மட்டும் தான் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை11மணிக்குமேல் வந்து 8மணிக்கு மேல் கிளம்புவான். இன்று அவனுக்கு வீட்டிற்கு உடனே செல்லத்தோன்றியதால்..
” ஆகாஷ் வீட்டுக்கு கிளம்பலாமா?.. ” வேந்தனை மேலும் கீழும் பார்க்க.. ” டேய் டையா இருக்குடா. அதனாலதான். நாளையில் இருந்து முன்னவிட வேலை ஜாஸ்தியா இருக்கு. இன்னைக்கு மட்டும் தான் ரெஸ்ட். சரி வாவா. நீ கேட்க நினைக்கும் கேள்விய நடந்துக் கொண்டே கேளு. ” இருவரும் பைக் நோக்கி சென்றார்கள்.
‘ கிண்டியில் இருக்கும் தன் வீட்டினுள் தன் கையில் இருக்கும் பார்சலை பிடித்துயிருப்பது.. தன் முயல்குட்டியுடன் சேர்ந்து உள்நுழைவது போன்ற உணர்வை தந்தது. ஆம்.. ஆபிஸ் அனுப்பியது போன்றே வீட்டிற்கும் அனுப்பியிருந்தாள். முயல்குட்டியிடம் ஆபிஸ், தான் இருக்கும் வீடு கூடவே ஆகாஷ் வீடு முகவரி கொடுத்துயிருக்க.. தான் இங்கு இருக்கமாட்டேன்.. பொருட்களின் பாதுகாப்பு கருதி.. அவள் ஆகாஷ் வீட்டிற்கு அனுபியுள்ளாள். ‘
‘ தான் அங்கு ஸ்விட் கொடுத்து திருமண செய்தியை கூறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கச் சென்றால்.. அவர்கள் எனக்கு உன்னவள் அனுப்பிய பரிசு என கூறி எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். பின் தன் சந்தோஷத்தை பகிர்ந்து.. அங்குயிருந்தே அப்பா, அம்மா, வசு, பாட்டி, தாத்தாவுடன் அனைவரும் பேசி, அங்கே உணவையும் முடித்து வீட்டிற்குள் தன்னவள் அனுப்பிய பரிசுடன் அடியெடுத்து வைக்கும் போது 9மணி என்று மணிக்கூட்டில் இருக்கும் குருவி கூவிச்சென்றது. ‘
‘ பரிசுடன் ஷோபாவில் அமர்ந்தான். தன் முன் இருந்த டீபாய்மீது வைத்து உடைக்கூட மாற்றத்தோன்றாமல் பார்சலை பிரிக்க.. இதமான நறுமணம் பரவியது.. ஓவனில் வைக்கும் படியான, நார்மலாக உபயோகப்படுத்தும் என இருவகையான முக்கிய பொருட்களாக கப், தட்டு, ஸ்பூன், மடியில் வைக்கும் சிறிய பில்லோ, விரிப்பான், பில்லோ கவர், டவல், வாசணை திரவியம் அடங்கிய ஒரு பாக்ஸ், இரு போட்டோ பிரேம் போன்றவைகள் இருந்தன. அதனை எல்லாம் பலமுறை தொட்டு பார்த்தான். பின் அப்படியே ஷோபாவில் சாய்ந்து அமர்ந்தான். ‘
‘ முயல்குட்டி இதெல்லாம் எப்ப வாங்க வேண்டுனு முடிவு பண்ண?.. நீ என்னுடவே இருக்கனு நான் நினைப்பதற்க்கு!.. இது போதும்மா எனக்கு?. ம்ஹூம்.. எனக்கு முயல்குட்டியோட ஸ்பரிசம், முச்சுக்காத்து இதுதான் வேணும். போ முயல்குட்டி. சும்மா இருந்தாலாவது உன் ஞாபகத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்வேன். இனிமே ரொம்ப ரொம்ப கஷ்டம்போல. இதை அனுப்பி வைச்சுட்ட.. இதற்கான பலன் உன்ன பார்க்கும்போது.. நீ என்னிடம் படாத பாடுப்படபோற பாரு.. ( யார் என்று பார்க்கலாம்?.) ‘
சிறிது நேரத்திற்கு தன்னவளை கொஞ்சிக் கொண்டுயிருந்தான். ‘ இனி உட்கார்ந்தால் வேறு வேலை ஒன்றும் ஆகாது ‘ எண்ணியபடி.. முதலில் குளித்து லைட்பிரவுன் நைட் போன்ட், கிரே கலர்டீஷர்ட் அணிந்து.. மீண்டும் ஹாலிற்கு வந்தான். போனில் தன் முயல்குட்டியின் மெசேஜ் மற்றும் அழைப்பு பார்த்து.. பதில் அளித்துவிட்டு, அம்மா அனுப்பியிருந்த சேலை வாங்கும் நாட்களை பார்த்தான். பின் தீவிரமாக சில பக்கங்களை ஆராய்ந்து.. ஒரு முடிவுடன் தான்.. இனி வரும் நாட்களில் என்ன செய்ய வேண்டும்?.. எப்போது செய்ய வேண்டும் என்பதனை வரிசைபடுத்தி வைத்தான். கூடவே எவ்வளவு பணம் தேவை என்பதை குறித்து வைத்துக்கொண்டான்.
‘ நாளை முதல் தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான பணிகள் ஆரம்பமாகிறது. இதுநாள் வரை.. நான் மட்டும் செய்வேன்.. மறைமுகமாக என்னை ஆட்சி செய்வாள். ஆனால் இப்போது நேரடியாக.. என் உடனும், துணையாகவும் இருந்து செய்யப்போகிறாள் அரசி என மனநிம்மதியுடன்.. எண்ணியபடியே அவள் அனுப்பிய பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு.. தன்னவள் அறையில் தான் அவள் கையை பற்றியிருக்கிறோம் என்ற உணர்வுடனே தினமும் தூங்கி எழுந்து ஒவ்வொரு நாளையும் ஆரம்பித்தான். ‘
‘ முயல்குட்டியின் நினைவுடன் ஆரம்பித்து 15நாட்கள் அழகாக கடந்துயிருந்தது. ‘
‘ வேந்தனின் அரசியான எழிலரசி.. அவனின் மனதை ஆட்சி செய்ய!.. என்று காலடி எடுத்து வைத்தாலோ அன்றில் இருந்து.. இன்று வரை.. அவனை பல முடிவுகளை நிமிட நேரத்தில் எடுக்க வைத்திருந்தாள். அதுபோலான நாள்.. இந்நாள் என்று!.. எதுவும் தெரியாமல்.. தன் வேலையை பார்த்துக் கொண்டுயிருந்தான் வேந்தன். அப்போது வந்த ஒரு மெசேஜ்.. அவனின் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றியது. ‘