சாப்பிட்டு முடித்தபின்.. வேந்தனை ஒரு வேலையும் இன்று முழுவதும் செய்யக்கூடாது என கூறியதால்.. கிளம்புவதற்கு ஏற்றவாறு அமர்ந்துயிருந்த இடத்தில்.. அனைத்து வேலைகளையும் மற்றவர்கள் முடித்து அவர்களுடன் வந்த ரவிந்திரன்.. அருணாச்சலம் வேந்தன், எழிலரசி அருகில் அமர்ந்தார்கள்.
” வேந்தா காலையில் கேட்டில அத பற்றி இப்ப பேசலாமா?. இல்ல நிச்சியம் முடிந்து பேசலாமா?.”
” இப்பவே பேசிடலாம் அப்பா. எங்களுக்கும் சிலது குழப்பமா இருக்கு. இதில் தெளிவு கிடைத்தா இன்னும் நல்லாயிருக்கும். நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க அப்பா. “
வேந்தன், எழிலரசி இருவரையும், மற்றவர்களையும் பார்த்து.. ” வேந்தா.. நானும் அருணாச்சலமும் என்ன நினைத்தோம்னா?. உன் விரும்பபடி ஸ்விட் கடையோடவே உணவுப்பொருட்கள் கடையும் ஆரம்பித்தா நல்லாயிருக்கும் நினைச்சோம். நீ நினைத்து போல உடனே ஸ்விட் கடைய சீக்கிரம் முடித்து தொடங்கிவிடலாம். உணவுப்பொருட்கள் கடைய ஆறுமாதத்தில் தொடங்களாம். ”
” அப்பா நான் என்ன சொல்ல வரேனா.. ”
சொல்லி முடித்து விடுகிறேன் என பார்த்தவர்.. ” ஒரு வருடம் கழித்து இங்கு வர வேண்டிய நீங்க.. எங்களுக்காக இங்க வந்துட்ட . அதான் வேந்தா.. நானும், சம்மந்தியும் சேர்ந்து சில முடிவுகளை எடுத்து.. நீ இப்ப ஆரம்பிக்க நினைத்தது கூடவே.. உணவுப்பொருட்கள் கடையும், ஃபேக்டரியும் ஆரம்பிக்க நீ தனியாவே இன்னும் கொஞ்சம் நாளைக்கு எல்லாவற்றையும் பண்ண வேண்டாம். ”
” புரியலப்பா.. “
” வேந்தா.. நீங்க இரண்டு பேரும் கல்யாணம் முடிந்து.. எங்க கூடவே இருக்கனும் தான் நாங்க உன்னைய ரிசைன் பண்ண சொன்னோம். நீயும் பண்ணிட்ட. நீ உனக்கும், மருமகளுக்கும் எதுவும் பண்ணக்கூடாதுனு சொல்லிட்ட.. அதனால நாங்க உன் பிஸ்னஸ் விஷயத்தில் ஏதோ ஒரு வகையில் உதவி பண்ணணும் நினைக்கிறோம்.
அதான் நான் கடைக்கு பக்கத்தில் இருக்க நீ வாங்கின இடத்தோட கூடவே அதே அளவு பக்கத்தில் இருக்க இடத்தை வாங்கி உன் பேரில் எழுதியிருக்கேன். அந்த இடம் இரண்டு கடையும் நல்லா வசதியா கட்ட உதவும். “
‘ ஏன் ப்பா இப்படி?.. என பார்வை பார்க்க.. ‘
புன்னகையுடன்.. ” நீ இப்ப மட்டும் யோசித்து இந்த வாங்கியிருந்த.. நான் இன்னும் உங்க வருங்காலத்திற்கும் சேர்த்து யோசித்து இப்ப வாங்கினேன். ”
‘ எனக்கு தெரியாது நினைத்தியா!.. நீ மட்டும் உன் மனைவி, குழந்தைகள் என யோசித்து ஸ்விட் கடை ஆரம்பிப்ப.. நான் என் மருமகள், பேரக் குழந்தைகளுக்கு யோசித்து பண்ணமாட்டனா?. ‘
” இப்ப இங்க ஆரம்பிக்கும் வேலைக்கு உனக்கு தேவையான பணத்தை எழிலரசி அப்பாவும், ராகவன் மாமாவும் உனக்கு தருவதா சொல்லியிருக்காங்க. உன்னால எப்ப முடியுமோ.. அப்ப ராகவன் மாமாவிற்கு கொடு. ஆனா எழில் அப்பா கொடுப்பதை உங்களுக்குனு நீங்க அப்படியோ வைச்சுக்கலாம்.. இல்ல அத. ” ( பேரக்குழந்தைக்காக இப்பவே கொடுக்கிறார். அதை திருப்பி தரவேண்டாம். )
அவர் என்ன கூற வருகிறார் என அவர் புன்னகையில் புரிந்து.. வெக்கப்புன்னகையுடன் வேந்தன்…” சரிங்க அப்பா.. நான் யோசித்து.. எல்லாம் செக் பண்ணிட்டு சொல்றேன். இன்னும் வேற ஏதாவது?.. “
” இன்னும் ஒன்று.. கடைக்கு நம்ம ஹோட்டல் பேர் வைத்துயிருக்கு.. பொதுவான கடை என்பதால்.. கடையோட பேருக்கு ஒரு குறிப்பட்ட பணம் மட்டும் குடுத்து.. ரைட்ஸ் வாங்கிக்கோ. இப்போதைக்கு பணம் பற்றி நீ எந்த கவலையும் இல்லாமா.. நீ இன்னும் 2வருடத்திற்காவது இனிப்பகமும், உணவு பொருட்கள் பிசினஸ் ஆரம்பித்து நடத்துவது பற்றி மட்டும் தான் யோசிக்கனும் அவ்வளவுதான். “
” ம்.. சரிப்பா. ” அவன் ஒவ்வொரு முறையும் தன்னவளை பார்த்து.. அவள் முகம் திருப்தியிருந்தால் மட்டுமே சம்மதம் கூறி அடுத்தவற்றையே கேட்டான்.
” வேந்தா எல்லா வேலையும் முடித்து வர.. எப்ப சென்னைக்கு போகனும்?.. “
‘ புன்னகையுடன்.. தன்னவளை ஒரு பார்வை பார்த்தான்.. தன்னவனை மீண்டும் பிரியவேண்டுமா?. அவள் முகத்தில் வருந்தம் சூழந்துயிருந்தது. ‘
மெல்லிய புன்னகையுடன்.. ” நான் எல்லாம் முடித்துவிட்டு வந்துட்டேன் ப்பா. இனி சென்னைக்கு போய் தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லப்பா. இனிமேல் நம்ம வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். ” அவன் கூறியதும்..
‘ தீடிர் என்று ரிசைன் செய்துவிட்டான் என்பதையே இன்னும் நம்பாமால்.. மெதுவாக கேட்டுக்கொள்ளாம் என இருந்தவர்கள்.. இப்போது இனி இங்கு தான் இருக்க போகிறான் என்பதில்.. அனைவர் முகத்திலும் எல்லையில்லா சந்தோஷம். ‘
” நிஜமா வேந்தா.. நீ நீ இனிமேல் எங்க கூடவே இருக்கப்போறியா!. வெளியூர் எங்கையும் போகமாட்டில?.. ” வேந்தனின் அம்மா சித்ரா மகிழ்ச்சி, இத்தனைநாள் மனதில் இருந்த வருத்தம் என சிறு கண்ணீருடன் கேட்க..
‘ அம்மாவின் கண்ணீரை பார்த்தவன்.. அம்மா இத்தனை நாட்கள் தன் மனவருத்தில் இருந்துயிருக்கார் என்று எண்ணும்போது.. அதில் இவனுக்கும் வருத்தம் வந்தது.. பின் தன்முயல்குட்டிக்காக.. தங்களின் நல்வாழ்க்கைக்காக என்பதால்.. அதனை புறம்தள்ளினான். ‘
புன்னகையுடன்.. ” இல்ல.. எங்கேயும் போக தேவையில்லை.. ம்மா. ” தன் அம்மாவிடம் வாய் கூற.. கண்கள் தன்னவளின் பார்வையை எதிர்ப்பார்த்தது. ஆனால் அவள் பக்கத்தில் இருந்த சத்யாவிடம் பேசிக் கொண்டுயிருந்தாள்.
‘ அங்குயிருந்த பலர் சந்தோஷப்பட.. கணேஷ், தேவகி, ராதா என்றும் விட அதிக கோபத்தில் இருந்தார்கள். வேந்தனும், எழிலரசியும் உறவுமுறையில் திருமணம் வேண்டாம் என மறுத்து.. வெளியிடத்தில் சம்பந்தம் வந்து இருவருக்கும் நிச்சியம் வரை வந்துவிட்டது என அவர்கள் தங்களை தேற்றிக் கொண்டாலும்.. ‘
‘ வேந்தன் தன் வருங்கால மனைவிக்காக இப்போதே ஆரம்பித்துயிருக்கும் கடை, ஃபேக்டரி, அதற்காக இருவரின் அப்பாக்களும் கொடுத்த இடம், கொடுக்கப்போகும் பணம். வேந்தன் தன் வேலைவிட்டு இனி இங்கேயே இருக்கப்போவது.. என இவற்றை பார்க்க, பார்க்க.. இவையெல்லாம் தன் மகள், மகன் இவர்களுக்கு கிடைக்க வேண்டியதை இப்படி வெளியிடத்தில் இருந்து வருபவர்களுக்கு செல்கிறதே என்ற ஆற்றாமையில் இருந்தார்கள். ‘
‘ அதிலும் எழிலரசியை நினைத்து அங்கு இருந்த மூவருக்கு இன்னும் கோபம்.’
‘ கணேஷ்.. கல்யாணம் முன்பே எழிலரசி பெயர் போட்டு ஆரம்பித்துயிருக்கும் கடை.. தன் மகளுக்கு கிடைக்க வேண்டியது என இறுக்கத்துடன் இருந்தவர்.. எழிலரசி தன் மகளை மறைமுகமாக யாரோ?. என்று கூறியதை நந்தினி அவரிடம் கூறியதாலும்.. மற்றும் இப்போது கேட்ட செய்தியால் அங்குயிருக்க முடியாமல் கிளம்பிவிட்டார். ‘
மற்ற இருவர் தன் குடும்பத்தில் இருந்து தங்கள் மகன், மகள் தன் அண்ணா வீட்டில் இருக்க.. எழிலரசி.. தங்கள் மகன் அஸ்வினை திருமணம் செய்ய சரியென்று கூறியிருந்தால்.. இந்நேரம் அண்ணாவின் அனைத்தும் இவர்களின் கையில் இருந்துயிருக்கும். நடுவில் வேந்தன் வந்து அவர்களின் கனவை உடைத்துவிட்டான் என்ற கோபம் முழுவதும் எழிலரசியின் மீது திரும்பியது. ‘
‘ இப்போது இந்த இடத்தில் ஆரம்பித்துயிருக்கும் கட்டிடத்தின் பெரும்பான்மையான கட்டப்பொருட்கள் அனைத்தும்.. இவர்களிடம் வாங்குவதாகவும்.. கதிரவன் புதிகாக ஆரம்பிக்க நினைக்கும் கட்டுமான கம்பெனியின் தொடங்கமாக.. கட்டுமான பொறுப்பையும் கதிரவனிற்கு வேந்தன் கொடுத்துயிருக்கிறான். அதனால் தான் அவர்கள் இங்கு பூமிபூஜைக்கு வந்ததே. வந்தவுடன்தான் தெரிந்தது.. இவ்வளவு பெரிய இடம் என்று. இதுகூட எழிலின் மீது கோபம். ‘
‘ அருணாச்சலம் நல்ல நிலையில் இருந்தவர்.. அவள் பிறந்த பின் தான்.. இன்னும் இன்னும் நல்ல நிலைக்கு சென்றார்கள். அவளை யாரும் பேர் அழைத்து கூப்பிடாமல் எல்லோரும்மே குட்டிம்மா.. என்று அழைத்தனர். அவள் அவ்வாறு கூப்பிட கோபம் கொள்ள ஆரம்பித்த பின்தான்.. எழில் என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்பவே வேந்தனை அண்ணா தாங்குகிறார்.. இன்னும் எழிலரசியை கல்யாணம் செய்தபின்.. வேந்தன் இன்னும் நல்ல நிலைக்கு வந்துவிட்டால்.. தன் மகனை, மகளை மதிக்காமல் போய் விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. ‘
‘ இவர்கள் இவ்வாறு தன்னைப்பற்றி நினைக்கிறார்கள் என்று தெரியாமல்.. தன்னவனை பார்க்காமல் தன் தோழியிடம் பேசிக் கொண்டுயிருந்தாள். ‘
‘ இதனை பார்த்திருந்த வேந்தனிற்கு.. ஏன் முயல்குட்டி இவ்வாறு இருக்கிறாள்?. என்று நன்றாக புரிந்தது. புன்னகையுடன் பார்த்திருந்தவன். தன் அப்பா, பெரியப்பா, மாமா , எழிலரசியின் அப்பா, இன்பா என ஒன்றாக சற்று தள்ளி நின்று இருந்தவர்களிடம் சென்றான். ‘
‘ இன்பாவின் தோளில் கைபோட்டு நின்றுக் கொண்டான். நால்வர் முன்னிருக்க.. இன்பா.. தன் இடதுபக்க தோளில் சட்டென்று ஒருகை விழவும் பயந்துபோய் பார்த்தான். ‘
வேந்தன் என்றதும்.. ” ஏன் மாமா இப்படி?. நான் பயந்துட்டேன். ”
” போடா.. நான் எவ்வளவு சந்தோஷமா வந்து பிடித்தா!.. இவர் பயப்படுறானா?.. ” புன்னகையுடன்கூறி..
பின் மற்ற நால்வரை பார்த்து.. ” எல்லோருக்கும் ரொம்ப தேங்க்ஸ்!. எனக்கு இப்ப என்ன சொல்றது?.. என்ன பேசுவது?. என்று கூட தெரியல. ” அதற்கு மேல் பேச முடியாமல்.. அவன் கண்கள் சற்று கலங்கியிருந்தது.
” என்ன மாமா தேங்க்ஸ்னு.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க. நாங்க என்ன பண்ணினோம். நீங்க சொன்னத தான் நாங்க எல்லாம் செய்தோம். “ இன்பா வேந்தனின் கலங்கிய கண்களை எதிர்பார்க்கவில்லை.
” இல்ல.. நான் சொன்னத விட… நானே எதிர்பார்க்காதது!.. நீங்க பண்ணியிருக்கிங்க. அதுவும் அதிகமாவே. ”
” என்னடா நீ உன் வருங்கால மனைவிக்காக பண்ண சொன்ன.. நாங்க எங்க மருமகள், மகள், அண்ணா முறையில்.. எல்லாம் பண்ணினோம். அங்க எழிலரசிய பாரு.. இந்த 15 நாளா எப்படியிருந்தா?.. இப்ப எப்படியிருக்கா!.. நீயும் தான் இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்க. உங்கள சந்தோஷபடுத்த தானடா நாங்க இருக்கோம். உங்களுக்காக தான் நாங்க சொத்து, பணம் சேர்த்து வைக்கிறோம். அதான் இப்ப உன் தேவைக்கு கொடுக்கிறோம். “
” நீ தனியா ஒரு தொழில் ஆரம்பிக்க போவதில் நாங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோம். அதுக்கெல்லாம் நீ நன்றி சொல்லிட்டு இருக்க. இது எங்க கடமைடா. ” எனக் கூறி ராகவன் மற்றவர்களை பார்க்க.. அவர்கள் சரி என தலையசைத்தாலும்.. வேந்தனின் கலங்கிய கண்களை பார்க்க முடியவில்லை.. அவர்கள் திரும்பி நின்று துடைத்துக் கொண்டனர்.
வேந்தனும் எழிலரசியும் பூமிபூஜை முடித்துக் கொண்டு எழிலரசியின் வீட்டினுள் தங்கள் புதுவண்டியில் நுழைய.. வண்டி நின்றதும் எழிலரசி தன்னவனின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல்.. வேகமாக ஹாலிற்கு வந்தவளை.. வேந்தனின் வலியகரம் அவள் இடைபிடித்து முன்புறமாக இழுத்து.. அப்படியே தன் தோள் உயரத்திற்கு மேல் தூக்கிக் கொண்டது. தூக்கிய படி காலால் கதவை சாற்றி.. அப்படியே வீட்டின் வாயில் கதவிலேயே சாய்ந்து நின்றவன்..
ஒருநொடிக் கூட தாமதமின்றி.. தன்னவளின் தாமரை முகத்தின் நடுவே இருக்கும் இதழ்களின் தேன்சுவையை!.. மென்மையாக பருக்கிக் கொண்டுயிருந்தான். அதை எவ்வளவு குடித்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என அவனின் செவ்விதழ்கள் கேட்க.. அவனும் அதனை ஏற்று அந்தபணியை சில நிமிடங்களுக்கு தொடந்தான். பின் தனக்கும், முயல்குட்டிக்கும் மூச்சுவாங்க.. அவளின் இதழ்களுக்கு சற்று இடைவேளை விட்டு..
அவளை வசதியாக தூக்கிக் கொண்டவன்.. தலைகுனிந்த நிலையில் இருக்கும் தன்னவளிடம்.. ” உன் கண்ண நான் பார்க்கனும். பாருடி முயல்குட்டி.. ” அவனவளோ!.. தன்னவனின் இதழ்கள் செய்யத மாயம் அவளின் உயிர்வரை சென்று தாக்கி.. ஆழந்த மயக்கத்தை உண்டாகியதால் கண்களை முடிந்தவளின் கண்களையே பார்த்திருந்தவன்..
கண்களிலிருந்து.. அவன் சற்றும் எதிர்பார்த்திராத!.. கண்ணீர் அருவியாய் வந்துக்கொண்டுயிருக்க.. அவள் தன்னவனை அந்நிலையிலேயே அவன் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்.. ” லவ் யூ தனுமாமா!. ” இறுதியாக தன்னவனின் இதழிலில் இளைப்பாறினாள். அரசியின் தனுவிற்கு தெரிந்துவிட்டது.. அவள் ஏன்?.. இவ்வாறு என்னை பதறச்செய்யும் செயலை செய்தாள் என..
வேந்தன் அவளை கால்பிடித்து தூக்கிக் கொண்டே சமையல் மேடையில் உட்கார வைத்தான். தண்ணீர் கொடுத்து.. பின் தான் வைத்துயிருந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்துவிட்டு.. நெற்றியில் அழுத்தமான முத்தம் ஒன்றை வழங்கியபின்.. அவளை அள்ளிக்கொண்டு தங்கள் ஊஞ்சலில் தன் மடியில் தன்னவளுடன் அவள் அறையில் உட்கார்ந்தான்.
பின் அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு.. வேந்தன் இங்கு எதற்கு அழைத்து வந்தானே?.. அன்று என் அரசிக்காக!.. தான் ஏன்?.. எதற்காக?. வேலையை ரிசைன் செய்யும் முடிவிற்கு வந்தேன்?.. அதன் பின் நடந்தவைகளை தன் முயல்குட்டியிடம் கூறஆரம்பித்தான். இதையே தான் மண்டபத்தில் இருந்த இருவரின் நண்பர்களும் உடன் பணிபுரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டுயிருந்தனர்.
15 நாட்கள் முன்..
‘ தன் முயல்குட்டி பிரியட்ஸ் வயிற்றுவலியால் தனியாக துடித்துக்கொண்டு இருப்பதை கேட்டு.. துடித்துடித்தவன்.. ஏன் அரசி தனியாக இருந்தாள்?. என அவள் தோழி சத்யா கூறிய காரணம். ‘
‘ தன் முயல்குட்டியின் இதுநாள் வரை இருந்த நிலை.. தற்போது தன்னை எதிர்பார்த்து ஏங்கி இருக்கும்நிலை.. வருங்காலத்தில் இப்படியானால்?.. என்ற புரியாதநிலை என்று அனைத்தையும் நினைத்து!.. தவித்து!.. பின்..இதற்கு மாற்றுவழி என்ன?.யோசிக்க ஆரம்பித்தான்..
‘ இப்போ என்ன பிரச்சனை?.. தனியாக?.
ஏன் தனியாக?.
சென்னை வேலை?..
ஏன் இங்கு?.. எவ்வளவு நாள்?..
1வருடம். ‘
வேந்தன் அமைதியாக இருக்கவும்.. ” மாமா சத்யா சொன்னதில்.. நீங்க ஏதும் நினைக்காதிங்க. எழில் எல்லாத்தையும் சமாளிப்பா. ” வேந்தன் இன்பா கூறியதை அமைதியாக கேட்டான்.
மீண்டும் தொடந்தது அவனின் யோசனை. ‘ இன்பா சொன்னது.. சமாளிப்பா அரசி. எதற்கு அவள் அவ்வாறு செய்ய வேண்டும். என் முயல்குட்டிக்கு ஏன் அந்த அவசியம்?. எனக்காக?.
ஏன்?.. அது தேவையேயில்லை. அவளுக்காகதான்.. நான் இதுநாள் வரை தன் ஊரை விட்டு வெளியூரில் கல்லூரி, வேலை என பல வருடங்களை அவள் நினைவில் கழித்தேன். ஏன்?.. ‘
‘ என்னால் அவள் படிக்கும் வயதில் எவ்வித பிரச்சனையோ, கஷ்டமோ முயல்குட்டிக்கு வரக்கூடாது.. எல்லோருடனும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தானே.. நான் தனியாக இருந்தேன். அப்போதே இவற்றை யோசித்தவன்.. இப்போ என் உரிமையானவள் ஆகிய பின் என்னால் அவளுக்கு கஷ்டம் கொடுக்க முடியுமா?.. முடியவே முடியாது. ‘
‘ தனியாக.. அதற்காக காரணங்களை அழித்துவிட்டால்.. தனியாக இருக்க வேண்டிய அவசியம்இல்லை. தன்னவள் தன்னுடனும், வீட்டில் உள்ளவர்களுடனும் இருப்பாள். என்னால் எந்நிலையிலும் யாரையும் சாராமல்.. அவளின் கூடவேயிருந்து பார்த்துக் கொள்ளவும் முடியும். ஓகே. இதுதான் சரியான முடிவு. ‘
‘ உடனே நான் இந்த வேலை ரிசைன் செய்துவிடலாம். ஒருவருடத்திற்கு பின் விடும் வேலையை இப்போதே விடப்போகிறேன். அதுவும் தன் முயல்குட்டிக்காக. அவளால் தானே எல்லாம். அவளிற்கு கஷ்டம் தரும் ஒன்று எனக்கு தேவையில்லை. முடிவு எடுத்துவிட்டான். ‘
” இன்பா மாமா, அத்தை எப்ப வருவாங்க?.. “
” பக்கத்தில் வந்துட்டுதாங்க மாமா ”
” சரி இன்பா. நான் இப்ப மெசேஜ் பண்ணுறேன். அவங்களுக்கு கால் பண்ணி இப்ப எங்க இருக்காங்கனு கேட்டு வைக்க முடியுமா?.. ”
” நீங்க அனுப்புங்க. நான் கேட்டு வைக்கிறேன். அவங்க ஏன்னு கேட்டா என்ன சொல்ல?.. “
” நான் பேசனும் சொன்னேன் மட்டும் சொல்லுங்க. இதை நீங்க அத்தை, மாமா வந்தவுடன் பண்ணுக்க.. அத்தைக்கு தெரிய வேண்டாம். அரசிய பார்த்துக்கோ.. சத்யா ரொம்ப தேங்க்ஸ்!. சிறிதுநேரம் கழித்து பேசுறேன். இப்ப வைக்கிறேன். ”
தன் வேலை பார்க்கலானான். அவன் முடிவு செய்தை.. செயல்படுத்த ஆரம்பித்து இருந்தான்.
” டேய் வேந்தா சாப்பிட போலாம் வா. நீயும் நிமிருவனு அறைமணி நேரமா பார்க்கிறேன். ம்ஹூம்.. சரி வா போலாம். ” மற்றவர்களும் பார்க்க..
” எனக்கு பசிக்கல. நீங்க சாப்பிட்டு.. எனக்கு ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வா ஆகாஷ். ” சரி என்று தலையாட்டி.. அவர்கள் சென்றுவிட..
அவன் தன் பக்கத்து அறையில் தெரிந்த.. அவனவள் இருவாரங்களாக அனுப்பும் பலவகையாக மலர்களை கொண்ட மலர்செண்டையும், தாங்கள் கோயிலில் சம்மதம் சொன்ன பின்.. படிக்கட்டில் நின்று எடுத்த புகைபடத்தை போனில் பார்த்திருந்தான்.
‘ மலர்ந்த முகத்துடன் எப்போதும் புன்னகைக்கும்.. தன்னை அவளின்பால் காந்தம் போல் ஈர்க்கும் கண்களும், கடிக்க தோன்றும் கன்னத்தை கொண்டுயிருக்கும் தன் முயல்குட்டி.. இன்று வாடிய முகத்துடன், உடலை குறுக்கி அவள் படுத்திருந்ததை பார்த்தவுடன்.. தன் மடியில் உடனே அவள் வேண்டும். வலிக்கும் அவள் வயிறு, அழும் கண்கள், நீ வேண்டும்!. என கூறும் இதழ்களில் மென்மையாக முத்ததால் ஒத்தடம் இட வேண்டும் என மனம் ஏங்கி அழுது துடித்தது. ‘
‘ அப்போது.. ‘ எல்லோரும் உடனே பேச தயார் ‘ என்ற இன்பாவின் மெசேஜ். சரி என்றுக்கூறி.. அனைவருடனும் கான்பிரன்ஸ் காலில் இணைந்தான். அரசியின் அப்பா, இன்பா., வேந்தனின் அப்பா, பெரியப்பா, அண்ணா., மாமா, கார்த்திக் மாமா., நண்பன் திலகன் என தனியாகவும், சிலர் ஒன்றாக அமர்ந்து ஸ்பிக்கர் போட்டு அவனின் போன்காலில் இணைந்தார்கள். ‘
” வேந்தா நல்லாயிருக்கியா?. எதும் பிரச்சனை இல்லையே?.. ஏன் இப்ப எல்லோரோடவும் உடனே பேசனும் சொன்ன?.. “
வேந்தன் தன்னை நிலைப்படுத்தி.. ” நான் இங்க பார்க்கும் வேலைய.. இன்னைக்கே ரிசைன் பண்ணலாம் இருக்கேன் ப்பா. ”
‘ அவன் கூறியதும் போனில் இருந்தவர்கள் ஒரு நொடி அமைதியில் இருந்தார்கள் என்றால்.. அப்போதுதான் உள்நுழைந்த அந்த ஐவருக்கு வேந்தன் கூறியது பேரதிர்ச்சியாக இருந்தது.’
‘ அதனுடனே அவர்களும் உட்கார்ந்து அவனை பார்த்தார்கள். அவர்களை ஒருபார்வை பார்த்தான். ஆகாஷ் வாங்கி வந்த ஜூஸ்சை வாங்கி ஒருவாய் பருகி வைத்தான். அவனின் கைகள் சிறுநடுக்கத்தில் இருக்க.. பின் ஸ்பிக்கரில் போட்டு மேசையின் மீது வைத்தான். ஆகாஷ் கேட்பதில் ஒன்றும் இல்லை. மற்றவர்களை பற்றி கவலையில்லை. ‘
போன் எதிரில் இருந்தவர்களில் சிலர்.. சில நாட்களாக அவனில் தெரியும் மாற்றத்தால்.. ” வேந்தா எழிலரசிக்கு என்ன பிரச்சனை?.. எழிலரசிக்காக தான் வேலைய ரிசைன் பண்ணுறியா?.. ”
அவர்கள் தன்னை பற்றி நன்கு தெரிந்து வைத்துயிருப்பதில் மெல்லிய புன்னகை அரும்பியது.
” ம்.. அரசிக்காக தான். அவளுக்கு இப்ப மன்த்லி பிரியட்ஸ் நேரம். அரசிக்கு எப்போதும் வயிற்றுவலி இருக்குமாம். உறுதி அன்னைக்கே.. இன்பா அவளுக்கு இந்த மாதிரி இருக்கும். நான் இத்தனைநாளா பார்த்திருந்தேன்.. இனிமே நீங்க தான் பார்த்துக்க வேண்டும் சொன்னாங்க. நானும் நல்லா பார்ப்பேன் சொன்னேன். “
” சரி இங்க இருக்க வரைக்கும்.. நல்லா பார்த்துக்கோங்கனு இன்பா, சத்யாவிடம் சொல்லிட்டுவந்தா.. அவங்க பிரண்ட் வந்து இன்னைக்கு.. அரசி கல்யாணத்திற்கு பிறகு தனியா இருந்து சமாளிக்கனும். அவளுக்கு நல்லதுனு நினைத்து.. என்னிடம் ஒன்னும் சொல்லாமா.. இன்பாவ கன்வைஸ் பண்ணி.. இரண்டு போரும் அவள தனியா வீட்டல வீட்டுயிருக்காங்க.. அரசி வலியோடசேர்ந்து.. யாரும் வீட்டலனு சொல்லி அழுதா. ஏன் இப்படி பண்ணிங்கனு?.. கேட்டதற்கு சத்யா சொன்னாங்க. அவளுக்கு ஐந்துநாளும் டையடா தான் இருப்பா.. வீட்டல இருப்பவர்கள்அது அவளுக்கு தெரியாத மாதிரி பார்த்துபாங்க அதனாலதான் பின்னாடி எல்லாமே சமாளிக்க வேண்டும் என்று இப்படி பண்ணினாங்களாம். “
” நான் இன்பா சொன்னவுடன் நினைத்தது.. ஒருவருடம் தான் சென்னையில் இருப்பதா பிளான் இருந்தேன்ல.. அதான் ஒருநாள் தானே.. நாள் வைத்து.. என் வேலை வீட்டல இருந்து பார்த்து சமாளிச்சுக்கலாம் இருந்தேன். இப்ப சத்யா இப்படி சொல்றாங்க. அதான் எல்லோரும் அங்க இருக்கப்ப.. அரசி தனியா இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. இப்ப என் வேலை ஒன்னு தான் பிரச்சனை. அதான் அடுத்த வருடம் ரிசைன் பண்ணப்போறத.. உடனே பண்ணப்போறேன். “
அதனையும் ம்..ம்.. சரி.. என கேட்டவர்கள்.. ” ரிசைன் பண்ணு வேந்தா. நீ எப்ப வருவேனுதான் இருக்கோம். இப்ப எதுக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்குற?.. எழிலரசிக்காக பண்ணுவதில் எங்களுக்கு பிரச்சனை இல்ல. நீ வேற என்ன நாங்க செய்யனும் எதிர்பார்க்கிற!.. அதசொல்லு. நாங்க உன் விருப்பபடி எல்லாம் செய்துக் கொடுப்போம். ”
இதே சாதாரண நிலையில் இருந்தால்.. சந்தோஷம் கொண்டு கட்டியணைப்பான்.. அதை புரிந்தும் பதில் அளிக்க முடியாத நிலையில் தளர்ந்து போய் இருந்தான். ” சரிங்க ப்பா. நான் என்ன கேட்க வந்தனா.. முதலில்.. அரசிக்காக நானா வேலைய ரிசைன் பண்ணுவது.. இப்ப அம்மா, அத்தம்மா முதற்கொண்டு வேற யாருக்கும் தெரியகூடாது. நீங்க மற்றவர்களிடம்.. ஏதாவது காரணம் சொல்லுங்க. நான் அதை கேட்டு தான் ரிசைன் பண்ணமாதிரி இருக்கட்டும். ”
” ஏன் வேந்தா?.. மருமகளுக்காகனு தெரிந்தா என்ன இப்ப?..
” இல்லப்பா.. அது சரிவராது. அரசிய ஏதாவது சொல்லிடுவாங்க. நான் அரசிக்காக ரொம்ப பண்ணுறேன், இல்ல உடல்நிலை பற்றி தெரிந்தா!.. அதுவும் பிரச்சனை. தீடிர் நானா ரிசைன் பண்ணினேன் சொன்னா.. சரியா புரிந்துக் கொள்ளாம.. என்னைய வேலையில் இருந்து அனுப்பிட்டாங்க.. அரசி வந்த நேரம் சரியலைனு சொல்லவும் வாய்ப்பு இருக்கு. அதனால இந்த விஷயத்தில் அரசினு பேர் வரக்கூடாது. அதான் ப்பா.”
” ம்.. ஆனா நீ மருமகளிடம் கண்டிப்பா இப்ப போனிலோ.. இல்ல நேரில் பார்க்கும்போது.. இந்த விஷயத்த சொல்லிடு. ”
” ம்.. சரிங்க பெரியப்பா. இன்னோரு விஷயம்.. பின்னாடி எனக்கு பிஸ்னஸ்சிற்கு பணம் தேவையென்றால் உங்களோட உதவி வேண்டும். “
” நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னதுதான் வேந்தா. அது ஒன்னும் பிரச்சனையில்ல.. எப்ப தேவைனு மட்டும் சொல்லு போதும். “
அனைவருக்கும் அவனின் குரலில் வருத்தம் இருப்பது தெரிய.. அவனை மாற்றும் விதமாக..
ராகவன்.. ” நீ சொன்னதெல்லாம் சரி வேந்தா. இப்ப நீ சொன்னதில் பாதி.. ஏற்கனவே எங்களிடம் சொன்னது. அரசிய பற்றிய விஷயத்தை இவ்வளவு விளக்கமா சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.. பின்ன எதுக்காக எங்களிடம் உடனே சொல்லனும் நினைச்ச?. “
” அது ஒன்னும் இல்ல மாமா.. பையன் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் எழிலரசிக்கிட்ட உளறிவிடுனா.. இல்ல இல்ல சொல்லி விடுவானா. அப்ப எழில் கேட்பாங்கள.. வீட்டல சொல்லிட்டிங்களானு?.. அதான் பையன் உங்கிட்ட சொல்லியிருக்கான். அப்படிதானே வேந்தா. ” திலகன்
” அப்படியெல்லாம் இல்ல மாமா. நான் அரசிக்கனு தனியா பண்ணற விஷயத்த தவிர.. மீதி எல்லா விஷயத்தையும் உங்க எல்லாரிடமும் சொல்லிட்டுதான் செய்வேனு உங்கிட்டயும், அரசியிடமும் சொல்லியிருக்கேன். அதுக்காகதான். “
புன்னகையுடன்.. ” அங்க இங்க சுத்தி.. அரசிகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கக்கூடாதுனு தான். எல்லாம் பண்ணுற. ” கார்த்திக்
‘ நம்மள பற்றி நல்லாவே தெரிந்து வைத்துயிருங்காங்கப்பா. ‘
புன்னகையுடன்.. ” அப்படியும் வைச்சுக்கலாம். சரிசரி எல்லாம் சொல்லுங்க.. நான் ஏதும் அவசரப்பட்டு முடிவு எடுப்பது போல இல்லையே.?. ” வேந்தனின் புன்னகையான பேச்சு அவர்களுக்கு திருப்தியளித்தது.
” அதெல்லாம் ஒன்னும் இல்ல வேந்தா. சரியான முடிவதான் எடுத்துயிருக்க. எதுக்கு எழிலரசி தனியா கஷ்டப்படனும்.. அதுக்கு எந்த அவசியமும் இல்ல. நீதான் நாங்க சொன்னத கேட்காம அங்கயிருக்க. ”
” நீ சொல்வது சரி தான் ஈஸ்வர். நானும், அம்மாவும் கல்யாணம் முடிந்து இரண்டுபோரையும் சென்னைக்கு தனியா அனுப்புவது நினைத்து இப்பவே கவலையா இருந்துச்சு.. சரி ஒருவருடம் தானே.. மனச சமாதானம் படுத்திக்கிட்டோம். இப்ப அப்பாடானு.. இருக்கு வேந்தா. அம்மாவிடம்.. நீ இங்க வந்த பிறகு ரிசைன் பண்ணப்போறேன் சொன்னா சந்தோஷப்படுவாங்க!.. “
அனைவரும் ஏதோ தங்களின் கருத்தை கூறிவிட்டனர். ஆனால்.. ” மாமா, இன்பா நீங்க ஒன்னுமே சொல்லாம இருக்கீங்க?.. “
” என்ன மாப்பிள் சொல்ல?. நானும் இந்த மாதாந்திர வயிற்றுவலிய பற்றி நினைத்துயிருக்கேன். இதுயெல்லாம் ஆரம்பத்தில் எல்லா பெண்களும் சந்திக்கும் பிரச்சனை. எப்படி அரசிம்மா? அங்க தனியா இருக்கும் போது சமாளிப்பானு?. நினைத்த நான்.. நீங்க அரசிக்காக.. எல்லாவற்றையும் கவனித்து பண்ணுற உங்க நடவடிக்கைய நான் பார்த்து.. உணர்ந்த பிறகு.. நீங்க ரொம்ப நல்லாவே அரசிய பார்த்திப்பீங்க.. இல்ல அரசி பழகிவிடுவானு.. மனசை தேற்றிக் கொண்டேன். “
” நீங்க இப்படி முடிவு எடுத்ததில்.. எனக்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ள!.. கல்யாணத்திற்கு என்று எதுவும் பண்ணக்கூடாதுனு சொல்லிட்டீங்க. உங்களுக்கு பணம் உதவி வேண்டும் என்றால் தயங்காம என்னிடமும் கேளுங்க. இது மட்டும் தான் இப்ப என்னால சொல்ல முடியும். நீங்க பணம் பற்றி எதையும் யோசிக்காம.. நீங்க பார்த்துக் கொண்டுயிருக்கும் வேலைய நல்லபடியா முடித்து வாங்க. எழிலரசிய நாங்க எல்லோரும் பார்த்துப்போம் மாப்பிள்ள. “
” அப்புறம் மாப்பிள்ள.. இன்பா, சத்யா எழிலுக்கு நல்லதுனு நினைத்து.. உங்கிட்ட சொன்னா விடமாட்டிங்க.. எழில் பழகமாட்டானு உங்ககிட்ட சொல்லாம பண்ணிட்டாங்க. நீங்க ரொம்ப கோபமா பேசிட்டீங்க போல.. அதுவும் நம்மளாள தான்.. வேலைய ரிசைன் பண்ணப்போறிங்கனு.. இரண்டுபோரும் தப்பு பண்ணிவிட்டோனு.. கவலையா பக்கத்தில் இருக்காங்க. “
அவர் கூறிய மற்றதைவிட்டு. ” இவங்க இங்க இருந்தா.. அரசியோட இப்ப யார் இருக்கா?.. “
‘ அவன் கேட்ட விதத்திலேயே எழிலரசியுடன் தான் தான் அருகில் இல்லை.. வேறுயாரும் இல்லையா என்ற கவலை அதிகம் தெரிந்தது. ‘
” எழில் தூங்குறா அண்ணா. அம்மாவும், பாட்டியும் கூட இருக்காங்க. ” அவசரமாக சத்யாவிடம் இருந்து பதில்வர..
பதட்டத்துடன் பதில் அளித்த சத்யாவின் மேல் ஒருவன் சற்று கவலையும், வேந்தனிடம் கூறியிருக்கலாம்.. அவன் எழிலரசி அதனை ஏற்கும் விதமாக வேறு ஏதேனும் செய்திருப்பான். எனநினைத்தாலும்.. ” டேய்.. நீ இரண்டுபேரையும் ரொம்ப திட்டிட்டியோ?.. இப்படி அலறி அடிச்சுட்டு பதில் சொல்லுறாங்க. ”
ஓ.. சத்யாவின் மேல் கோபப்பட்டதற்காக.. மறைமுகமாக வேள்வி கேட்குறான்.. ” அவங்க மேல நான் கோபப்பட்டு எதுவும் பேசலடா. அரசி வலியில் பேசிய விதமும்.. அப்ப வீட்டில் வேற யாரும் இல்லைனு சொன்னவுடன் பயந்துட்டேன்.
இரண்டுபோரும் நான் ஒத்துக்க மாட்டோனு.. என்கிட்ட வேண்ணா சொல்லாம இருந்துயிருக்கலாம்.. ஆனா அரசிக்கிட்ட இன்னையில் இருந்து கூட நிதானமா புரியவைத்து.. அடுத்த மாதத்திற்கு.. நீயே நாங்க யாரும் இல்லாம டிரை பண்ணிப்பாருனு அரசினு. சொல்லியிருந்தா.. மனச அதற்கு ஏற்றார்போல தயார்படுத்திக்கிட்டு.. பண்ணி இருப்பா. ஆனா இப்ப அரசிக்கு.. வலி, யாரும் இல்லனு கவலை.. அதவிட எனக்கு தெரியும் அவள இப்ப சாப்பிட வைப்பது ரொம்ப கஷ்டம்.. அதனால சாப்பிடாமதான் இருந்துயிருப்பா. “
நான் இல்லை அவளருகில்.. ” எல்லாம் சேர்ந்து வேறு ஏதாவது அவளுக்கு ஆகியிருந்தால் என்ற கவலையில் கொஞ்சம் சத்தமா பேசிட்டேன். ஆனா சத்யா இப்படி பண்ணியாதால் தான்.. எனக்கு நிறைய நல்லதும் நடக்கப் போகுது. அதனால நான் தேங்க்ஸ்!. கூட அவங்களிடம் சொல்லி.. இன்பா, சத்யாவும் பண்ண விஷயத்தையே மறந்தே போய்டேன். அதனால இரண்டும் பேரும் நான் சொன்னதை மறந்துட்டு.. நான் அங்கு வரவரைக்கும் நீங்க அரசிய எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என மட்டும் யோசிங்க. சரியா. “
மாமா, சத்யா, திலகன், இன்பா நால்வருக்கும் பதில் அளித்தான்.
பின் அனைவரிடமும் ” சரி.. நான் அடுத்த என்ன பண்ண வேண்டுமோ?.. அதை ஆரம்பிக்கிறேன். இன்பா அரசியிடம் ஏதாவது பேசி நல்லா சாப்பிட வைத்துவிடுங்க. நைட் பேசுறேன். இப்ப வைக்கிறேன். “
வேந்தன் பேசி முடித்ததும் தன் முன்னால் இருந்தவர்களை பார்க்க.. அவர்களும் அவனை தான் பார்த்தார்கள்.. ” சாரி.. உங்கள வைத்து பேசியதற்கு. உடனே பேச வேண்டியது. இத வெளியில் இருந்து பேசமுடியாது. அதனால்தான். ”
” நாங்க ஒன்னும் நினைக்கல சார். ஆனா நீங்க ரிசைன் பண்ண போறதா எடுத்த முடிவு.. உறுதியான முடிவா?.. ”
” உறுதியான முடிவுதான் ஆர்த்தி. எனக்கு உங்க எல்லாரோடையும் உதவியும் கூட எனக்கு தேவை. இந்த பிராஜெக்ட் மேக்ஸ்சிமம் முடியும் நிலையில் இருக்கு. நான் இந்த பிராஜெக்டில் எவ்வளவு நாள் இருப்பேன் தெரியாது?.. சீக்கிரமே என் பொறுப்பில் யார் வேண்டுமானலும் வரலாம். நீங்க அவங்களுக்கு உங்க முழு ஒத்துழைப்பையும் கொடுக்கனும். “
“ஷ்யர் சார். ” என அனைவரும் கூற.. “ எனக்கு உங்க தனிப்பட்ட விஷயம் ஒன்னு கேட்டனும்?. ”