நாம் 22(2)
” என்ன அனு?.. “
புன்னகையுடன் ” சார் உங்க கல்யாணம் நிஜமா லவ் மேரேஜ் இல்லையா?.. ”
” எதுவாக இருந்தா என்னங்க?.. எனக்கு எழிலரசியோட கல்யாணம் அவ்வளவுதான். “
” நான் கல்யாணம் பற்றி எதுவும் நினைக்கல.. நீங்க எழிலரசியோட ரொம்பநாள் பழகியவங்க போல 15நாட்களில்லேயே.. அவங்க மன்த்திலி வலிபற்றி சாதாரணமா.. அதுவும் உங்க அப்பா, மாமாவுடன் பேசுனீங்க.. அவங்களுக்கு பிரச்சனை என்றவுடன் கொஞ்சம் நேரத்தில் ரிசைன் பண்ணப்போறேன்.. அதற்கு காரணம் எழிலரசிதானு யாருக்கும் தெரியக்கூடாதுனு சொன்னீங்களா. அதான். “
‘ தன்னவளின் முதல் சந்திப்பு நினைவுகள் வந்து சென்றது. ‘
புன்னகையுடன்.. ” அனு.. எனக்கு அம்மா நான் 10படிக்கும் போதே.. பீரியட்ஸ் டைமில் தங்கைய ஸ்கூலில் பார்த்துக்க.. எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்துயிருக்காங்க. நான் வீட்டில் இருந்த வரைக்கும் நான் என் இரு தங்கைகளுக்கு நானும் எல்லா உதவியும் பண்ணுவேன். ஏன் இன்ன வரைக்கும் அது தொடருது.
நான் ஒரு கணவனா, ஒரு ஆணா இருந்து.. என் மனைவி எழிலரசி.. ஒரு பெண்ணோட வலிய என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனா அவள நான் அந்த நேரத்தில் கஷ்டப்படுத்த படுத்தாம இருக்க முடியும். அவளோட வலிய இன்னும் அதிகமாக்காம இருக்க முடியும். அதான்!.. நான் எதை பற்றியும் யோசனையும் பண்ணல.. உடனே முடிவு எடுத்துட்டேன். ”
” நான் அடுத்த வருடம் ரிசைன் பண்ணுவதா இருந்தத.. இப்ப பண்றேன். ஒரு ஆணா.. வரப்போற மனைவிக்கு என்னால முடிந்தது. இத எந்த மேரேஜ் ஆக இருந்தாலும் பண்ணலாம். அனு. “
” ம்.. சூப்பர் சார். எங்க வீட்டல அண்ணா, தம்பி புருஞ்சுப்பாங்க. என்ன வேணும் சொன்னா வாங்கிட்டு வருவாங்க. ஆனா வேற எதுவும் கேட்கமாட்டாங்க. ஆனா நீங்க இன்னும் பார்த்துப்பேன் சொல்வது.. அதவிட எங்களிடம் பேசும் போதும் உங்களுக்கு கூச்சமே இல்லாம சாதாரணமா பேசுவதும் எனக்கு ஆச்சரியமா!.. இருக்கு. “
” இல்ல நிஷா.. இந்த விஷயத்தில் யாரும் கூச்சப்படக் கூடாது. ஒரு ஆண்.. ஒரு பெண்னோட இயற்கையான இந்த விஷயத்தை புரிந்து.. அவங்கள முக்கியமான நாட்களில் பார்த்துக்கொள்ளனும். அப்பதான் எந்த பெண்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத்தோனாது.. தவறும் நடக்காம.. நாம்ம அவங்கள பாதுகாக்கனும், மதிக்கனும் தோனும்.
இதை வீட்டல இருக்க அம்மா, அப்பா தான் புரிஞ்சு.. ஆண் குழந்தைக்களுக்கு நீ பார்த்துக்கனும் சொல்லிக் கொடுத்தாலே போதும். பெரும்பாலான குற்றம் நடக்காது. எனக்கு நீங்க சொன்ன சூப்பர்.. ஆச்சரியப்பட வேண்டியது.. எல்லாம் எங்க அம்மா, அப்பாவுக்கு உரியது. அவங்க பார்க்கும் போது சொல்லுங்க. “
” ம்.. கண்டிப்பா சொல்றோம் சார். ஆனா நீங்க இப்படி எங்களிடம் சாதாரணமா பேசறத முன்னாடியே பேசியிருக்கலாம். கிளம்பபோறேனு சொல்லிட்டு.. இப்ப இவ்வளவு பேசுறிங்க. “
புன்னகையுடன்.. ” ஏங்க நான் கிளம்பபோறேனு சொல்லிட்டு பேசலங்க.. நீங்க எழிலரசி பற்றி பேசியதால் இதை பற்றி பேசினேன். மற்றபடி நான் உங்களிடம் இவ்வளவு பேசுவனா?.. என்பது சந்தேகம் தான். “
” இதெல்லாம் ரொம்ப அநியாயம் சார். ”
மெல்லிய சிறிய விரிந்த புன்னகை மட்டும் கொடுத்து அமைதியாகிவிட.. ” வேந்தா.. எழிலரசிக்கு கால் பண்ணி பேசு. உனக்கு ரிலாக்ஸா இருக்கும். “
” இல்ல ஆகாஷ்.. என்னால இப்ப முடியாது. அரசி வாய்ஸ்ச கேட்காத வரைக்கும் தான்.. நான் ரிலாக்ஸா இருப்பேன் நினைக்கிறேன். ” அனைவரையும் பார்த்தவன்.. ” இந்த வேலைய இன்னும் 15 நாட்களில் முடித்து விட முடியுமா?.. ஆகாஷ். “
” ம்.. முடிக்கலாம். ஆனா தினமும் இன்னும் 2மணிநேரம் அதிகமா வேலை செய்யனும். “
” ஓ.. ” சிறிது யோசனைக்கு பின்.. ” சாரி கைஸ்.. காலை, மாலை 1மணிநேரம் முன்னாடி, பின்னாடி வேலை செய்ய முடியுமா?.. இன்னைக்கு நான் ரிசைன் பண்ணினாலும்.. நான் நிச்சியத்திற்கு போனா.. அப்புறம் முக்கிய தேவையென்றால் மட்டும்தான் வர வேண்டும் நினைக்கிறேன். அதான் நீங்க எனக்கு உதவி பண்ணா எப்படியாதுவது 15 நாட்களில் இந்த வேலைய முடித்தால்.. இப்போதைக்கு என் பொறுப்பில் கொடுத்து இருப்பது சின்ன சின்ன வேலை தான். அதை ஆகாஷ், மற்றும் ஒருவர் பார்த்து மாற்றிவிடுவேன். யாருக்கும் பிரச்சனை இருக்காது. எனக்கு உதவி பண்ணமுடியும்மா?.. “
‘ அவனுக்கு தன் முயல்குட்டியை உடனே பார்க்க வேண்டும். ஆனால் அவளை சென்று பார்த்தால் உடனே திரும்பி வருவது.. மிக மிக கடினம். மனதை கஷ்டப்பட்டு அடக்கி.. இந்த பிராஜெக்டின் முக்கிய வேலையை முடித்துவிட்டால்.. நிச்சியத்திற்கு வீட்டிற்கு சென்று.. வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம். ‘
‘ அவனின் மனநிலை நால்வருக்கும் நன்றாக புரிந்தது. இத்தனை நாட்களில் தங்களிடம் மேல் பொறுப்பில் உள்ளவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதவர். இருந்தும் தவறாக புரிந்துக் கொண்ட சமயத்திலும்.. எங்களை புரிந்துக்கொண்டு பின் தெளிய வைத்தவர். எங்களின் மீது நம்பிக்கை வைத்துயிருப்பவர். அப்படியிருக்க போய்தான்.. இவ்வளவு நேரமும் எந்த தயக்கமும் இல்லாமல் அவரும் பேச.. நாங்களும் பேசினோம். அவர் கட்டளையாக கூற வேண்டிதை.. உதவியாக கேட்பரை எண்ணி.. நாங்கள் ஒரு சில நாட்களில் அவருடன் பணி செய்ய முடியாதே என்ற கவலை வந்துவிட்டது. ‘ நால்வரும் ஒருவரை ஒருவர் பார்க்க.. தலையசைப்புடன்..
” சார் எங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்ல.. நாங்க வார இறுதியில் கூட வந்து.. 15நாள் முன்னதாவே முடித்து விடலாம். நீங்க இதை செய்யனும் சொன்னாலே செய்திருப்போம். உதவியா கேட்டு எங்கள சங்கடபடுத்தாதிங்க. நாங்க என்ன பண்ணணும்?. இந்த நாளில் முடிக்க வேண்டும் மட்டும் சொல்லுங்க. முடித்துவிடலாம். “
வேந்தன் ஆகாஷை பார்க்க.. ‘ ம் ‘ என்பது போல தலையாட்ட.. ” சரி.. நான் நாளை காலையில் எல்லாம் உங்க மெயில் அனுப்பிவிடுவேன். தேங்க்ஸ் ” அனைவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு.. ” ஆகாஷ் நான் கொஞ்சம் நேரத்தில் வரேன். ” என்றுக் கூறி சென்றுவிட்டான்.
” ஆகாஷ் சார்.. அவர் எழிலரசி வலிய பார்த்து ரொம்ப பயந்து.. அவங்க கூட இல்லனு வருத்தமும்.. ரொம்பவும் மிஸ் பண்ணுவார்போல.. அதான் இப்படி இருக்கார். “
” ஆமாம் ஆர்த்தி.. சரி நம்ம வேலைய பார்ப்போம். “
‘ அன்று பேசி முடித்த பின்னான நாட்கள் அனைத்தும் மிகமிக வேகமாக நடந்தது. வேந்தன் அன்றே தன் வேலையை ரிசைன் செய்துவிட்டான். அன்று ஆகாஷ் தன் வீட்டில் இருக்க வைத்து.. அடுத்த 15நாட்களுக்கு அனைத்தையும் நாள் வாரியாக திட்டமிட்டு.. அவர்களுக்கு முடிக்கும் நாளும் நிர்ணையக்கப்பட்டு 95சதவீதம் முடித்துவிட்டார்கள். மீதி குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து பொறுமையாக செய்ய வேண்டியது.. அதனால் அதை மட்டும் ஆகாஷ், இவர்களின் மேல்அதிகாரியும் பார்த்துக் கொள்வதாக முடிவு எடுத்து.. வேந்தனை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. ‘
‘ வேந்தனும் அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு.. சென்னைக்கு விடைக்கொடுத்து.. இனி தன்னவள் கூட ஒரேவீட்டில் இல்லையென்றாலும்.. ஒரே ஊரில்.. நினைத்தவுடன் சென்று பார்க்கும் தூரத்தில் இருக்கப் போகிறோம் என்ற துள்ளலுடன்… தன் அரசியை காண திலகனின் காரில்.. அவனின் அசத்தலான!. கார் ஓட்டும் ஜாலத்தால் அதிவிரைவுவாக, பாதுகாப்பாக புதுக்கோட்டைக்கு வந்துவிட்டான். ‘
‘ தன்னவன் கூறியதை கேட்டுயிருந்தவளோ.. தன் தனு தனக்காக ஒரு முடிவு எடுத்து அதனை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் துணையுடன் செய்து முடித்து.. இனி நான் நினைத்த உடன் இருவரில் எவரேனும் ஒருவர் உடனே வந்து பார்த்துக் கொள்ளும் தூரத்தில் இருக்கப்போகிறோம் என்ற நிம்மதியோ.. இல்லை 15 நாட்களாக தான் ஏங்கிய அணைப்பு கிடைத்தாலே என்னவோ.. அவன் கூறி முடிக்கும் போது உறங்கியிருந்தாள். ‘
‘ தன் முயல்குட்டியை மடியில் உறங்குவதை புன்னகையுடன் பார்த்தவன்.. சிலநாட்கள் முன் தன்னவள் என்ன எதிர்பார்த்தாளோ!… அதை செயல்படுத்திக் கொண்டுயிருந்தான். தன்னவளை தனக்குள் அடக்கி.. சேலையின் மீது கையை வைத்து.. அவளின் வயிற்றுப்பகுதியை மென்மையாக தடவிக் கொடுத்தான். அரசி அந்த சுகத்தில் தன்னவனை இன்னும் இறுக்கி அணைத்து தூக்கத்தை தொடத்தவளை.. இருவரின் ஏக்கம் தீர்த்த நிம்மதியில் அவனும் சிறிதுநேரம் கண்முடி அமர்ந்திருந்தான். ‘
சில நிமிடங்களில் அவனின் போன் அழைப்பு கேட்க எடுத்தவன்.. ” சொல்லுடா ”
” டேய் எழிலரசி கிளம்பிட்டாங்களா?.. நாங்க வரட்டா.. இங்க வளைக்காப்பிற்கு சொந்தகாரங்க வர ஆரம்மிச்சுட்டாங்க. “
” என்ன வர ஆரம்பித்து விட்டாங்களா!.. அரசி தூங்குறா டா. நீங்க ஏதாவது வீட்டல சொல்லி சமாளித்து இன்னும் கொஞ்சும் நேரம் கழித்து வாங்க. அதுக்குள்ள அரசி ரெடியாகி விடுவா. “
” டேய் உங்களுக்கு கொஞ்சும் கூட பயமே இல்லையாடா?. நிச்சியதார்த்தம் உங்களுக்கு.. நீங்க இரண்டு பேரும் வீட்டல இன்னும் இருக்கீங்க.. நாங்க எல்லாம் கிளம்பி இங்க இருக்கோம். ”
” சரிரி விடு டா. நான் பியூட்டிஷியன் விவரம் அனுப்புறேன்.. நீங்க வரும் போது அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க.. நான் வைக்கிறேன். ” போனை வைத்தபின்..
” முயல்குட்டி.. எழுந்துக்கோ.. ” மூன்று முறை அழைத்த பின்னும் அவள் எழாமல் இருக்க..
‘ இப்படி தூங்குறாளே.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் திலகன் வந்துவிடுவான்.. என்ன பண்ணலாம்?. என யோசித்தவன்.. பின் அவளை படுக்கையில் படுக்க வைத்து.. அவளது பூ, நகைகளை கழட்டி வைத்தவன்.. நல்லவேளையாக அவளின் உடைகளில் தான் அனுப்பிய உடைகள் சற்று மேலாகவே அனைத்தும் இருக்க.. அத்தனை எடுத்து வைத்தவன். அவளை பார்த்தான்.. புன்னகையுடன் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளிக்க.. மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். ‘
பாதி நித்திரையிலேயே திறந்தவளின் முன் புன்னகையுடன் நின்ற தன்னவனை பார்த்தவள்.. ” லவ் யூ தனு. ” என எழுந்தவள்..
‘ சட்டென்று கழுத்தை கட்டிக் கொண்டு.. அவனை அப்படியே அவளின் மேல் இழுத்து போட்டுக் கொண்டாள். ‘
‘ அவன் சுதாரிக்கும் முன்.. ஒரு நொடியில் நடந்து முடிந்துயிருந்தது. அவளின் கழுத்து வளைவில் அவன் முகம் பதிய.. கைகள் இடையிலும் என அவன் கண்களை திறந்தான். அவளின் வெற்று கழுத்தில் அப்போதும் தான் எடுத்த மல்லிகை, ரோஜா நறுமணம் அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. அவளின் சந்தன நிறத்தில் இத்தனை நாட்களாக போடும் நகையினுள் ஒளிந்திருந்த ஒரு மச்சம் அவனை பித்தனாக்கியது. அதற்கு முத்தம் வைக்க சென்ற நொடி.. தூக்கத்தில் தனு என்ற அழைப்பு தன் காதின் அருகே கேட்ட பின் தான் சுயநினைவிற்கு வந்தான். ‘
‘ தன்னவளின் மென்மையில் அந்த நொடி வரை உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவன்.. தன்னை கட்டுபடுத்திக் கொண்டு.. தன்னவளின் வாசனையை மட்டும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டபின்.. அவளின் கைகளை தன் கழுத்தில் இருந்து எடுத்துவிட்டு.. மெதுவாக தன்னவளின் மேலிருந்து எழுந்தான். அவள் படுத்திருக்கும் அழகை ரகசியமாக ரசித்து பார்த்தான். கொஞ்சம் விட்டுயிருந்தா.. வேந்தா உன் நிலைமை!.. ‘
புன்னகையுடன் ‘ கேடி தூக்கத்திலே என்னைய இழுத்து போடுற.. என்னைய அலறவிட்டில இருடி இரு. ‘ தன்னவளை அள்ளிக்கொண்டு குளியல் அறையில் இருந்த வாஸ்பேஷன் முன் நிறக்க வைத்து.. குளிர்ந்த நீரை எடுத்து வேகமாக தன்னவளின் முகத்தை இருமுறை கழுவ.. ” அம்மா ” அலறிக்கொண்டு கண்விழித்தவள்..
தன்முன் இருந்தவனின் கோலத்தை பார்த்து.. ” தனு என்ன!.. என்ன இப்படி நிக்கிறீங்க?. ” தாங்கள் இருவரும் இருக்கும் இடம், தன்முன் இருந்த கண்ணாடியில் தன்னையும், பின் தன்னவனையும் பார்த்தாள்..
‘ தன்னவன் வேஷ்டி மடித்துகட்டி.. பனியன்மட்டும் அணிந்து.. அதன்மேல் ஒரு துட்டு போட்டுயிருக்க.. அவன் கன்னத்தில் என்ன சிவப்பா?.. அவனை சற்று அருகில் சென்று பார்த்தாள்.. ஒரு விரிந்த வழி பார்வையுடன் தன்னை பார்க்க.. தான் சேலை மட்டும் அணிந்துயிருக்க.. அவளிற்கு நினைவில் அவனை கழுத்தை கட்டி இழுத்தது நியாபகம் வர.. ‘
பயந்து கண்களை சிமிட்டி.. ” ஹேய் தனு செல்லம்.. நான்.. இல்ல இல்ல நீ ஒன்னும் பண்ணலேயே?.. எதுவும் நடக்கல தானே?. என்னைய தண்ணி தெளித்து எழுப்ப தானே இங்க தூக்கிட்டு வந்த?.. ”
‘ ம்.. நீ ரொம்ப நல்லபையனா இருக்கடா வேந்தா.. பாரு இந்த கேடி அப்படியே சொல்லுறா.. ஆனா உண்மைய சொல்லிடாதடா.. ஒரு நொடி மிஸ்ஸாகி இருந்தாலும்.. முயல்குட்டி இந்நேரம் என் மிஸஸ்தான்.’
” ம்.. நீ சொல்லவதில் பாதி உண்மை முயல்குட்டி. ”
” பாதினா?. அது எது தனு?.. சொல்லுங்க. ”
” அத சொல்ல நேரம் இல்ல முயல்குட்டி.. இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு காரில் திலகன், இன்பா, வினோத் வந்துவாங்க.. நீ லைட்டா வாஸ் பண்ணிக்கோ. நான் உன் டிரஸ், நகையெல்லாம் எடுத்து வைச்சுட்டேன். நான் அவங்க வந்தவுடன் நானும் கிளம்பி வினோத்துடன் போய்விடுவேன். அவங்க கூட பியூடிஷியன் வருவாங்க.. சிக்கிரமே இங்க இருந்தே கிளம்பிவிடு. ”
‘ அவள் இன்னும் பாதியிலேயே நின்றிருக்க!.. என்ன சொல்லுறான்?.. என நினைத்துக் கொண்டு இருந்தவளின் அருகில்..
சட்டென்று அவள் காதின் அருகே குனிந்து.. மெல்லிய குரலில் ” உன்னோட கழுத்து மச்சம் செம்ம ஸ்விட்!.. உன் இதழ்போல. ஐ லவ் யூ முயல்குட்டி. நாம்ம மண்டபத்தில் பார்க்கலாம். ” அவளின் நெற்றி முட்டி.. புன்னகையுடன் சென்று அவனின் உடைகளை எடுத்துக் கொண்டு.. படுக்கை அறையை ஒரு முறை பார்த்து.. இன்பாவின் அறைக்கு ஓடிவிட்டான்.
அவனின் அரசியோ கண்ணாடியில் தெரிந்த தன் கழுத்தில் உள்ள மச்சத்தை பார்த்து பின் கண்களை மூடிப்பார்த்தாள்.. தன்னவனின் நெருங்கிய வாசனையை உணர்ந்தாள்.. ஆனால் முத்தம்!.. ம்ம்.. ம்ஹூம்.. யோசிக்கும் போது..
” கண்ணாடிய பார்த்தது போதும் முயல்குட்டி.. திலகன் கிளம்பிவிட்டானா. சீக்கிரம் வா. ” புன்னகையுடன் ஒருவன் பக்கத்து குளியல் அறையில் கத்திக் கூறினான்.
அதனை கேட்டவளுக்கோ வெக்கம் வெக்கம் உடல்முழுவதும் அவளை ஆக்கரமிக்க.. புன்னகையுடன் தன்னவனுடன் இன்று நடக்கப்போகும் நிச்சியத்திற்கு விரைவாக கிளம்ப ஆரம்பித்தாள்.