” மாமா உங்க மகனும் முன்ன இருந்தவிட இப்ப இளச்சமாதிரி தானே இருக்காரு?.. ” சட்டென்று ரவிந்திரனிடம் கேட்க..
அவரோ அவள் எதற்காக கேட்கிறாள்?. என புரிந்துக் கொண்டு.. போலி வருத்ததுடன்.. ” ம்.. ஆமாம்மா. அப்படிதான் தெரியுறான். நீ என்ன சொல்ல வர அவனையும் சத்துமாவு கஞ்சி குடிக்கச் சொல்லுற. அப்படிதானே. ” தன் மகனிற்கும் பிடிக்காது என்று தெரியும்.. தன் மருமகளை அவன் மாட்டிவிட.. அதனால் அவள் இவ்வாறு கேட்பது புரிந்து.. அவரும் கூற..
” ம்.. சரியா சொன்னீங்க மாமா. ” அவள் வேந்தனை பார்க்க..
” நான் இளச்சுயிருக்கேன்.. நீ பார்த்த” ம் என தலையசைத்து.. ” ஆமா தனுமாமா போன மாதத்திற்கு இன்னைக்கு நான் கட்டிபிடித்தப்ப உங்க இடைகூட முன்னவிட சின்னதா இருந்துச்சு. ” கூறியவுடன் சிரித்து சிவந்தமுகம் அப்படியே அமைதியாக..
” என்ன குடிக்கிறிங்களா இல்லையா?.. ” அவள் அனைவரும் கேட்கும்படியாக கேட்க..
‘ அவளிற்காக.. தான் அவளிடம் குடிக்க கூறும் முன்பே தானும் அவளுடன் குடிக்க வேண்டும் என அவன் முடிவு எடுத்ததுயிருந்தான். அவள் இப்படி கேட்க.. பின் நான் கேட்க.. அவளின் பதிலில் ஒருநொடி ஆடிப்போனான். அவனிற்கு தன் முயல்குட்டியை உடனே அள்ளிக்கொண்டு அப்படியா?. காண்பி.. என்று அவளை ஒருவழியாக்க வேண்டும் என தோன்றியது. இல்ல இல்ல அவதான் நம்மள ஒரு வழியாக்குவா ‘ புன்னகையுடன் நினைத்தவன்..
” கண்டிப்பா குடிக்க வேண்டும்மா?. ” கேட்க
ஆம் என அவள் புன்னகையுடன் தலையசைக்க. அவனும் அதே புன்னகையுடன் ” ம் சரி.. ஆனா நீ 5.30 மணிக்கு நீயா எழுந்து குடித்தா.. எனக்கு ஓகே. ”
வேந்தன் கூறியதும் அவள் ஒருநிமிடம் யோசித்தாள். ம் தனு.. ஏதோ அந்த நேரத்தில் பிளான் பண்ணுறான் என நினைத்து.. ” ம்.. ஓகே . ” சற்று வருத்தம் போல சொல்ல.
தலையசைத்தவன்.. ” அத்தம்மா உங்களுக்கு அரசிய எழுப்புற பெரிய வேலைய குறைத்துயிருக்கேன். நீங்களும் கஞ்சி குடித்து உடம்பை பார்த்துக்கோங்க. ” அம்மாவின் உடல்நிலை போலே அவர்களிடம் தன் கவனிப்பை காண்பித்தான். இதை அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்க்க..
ஆனால் சித்ராவிற்கு.. அவன் அறிந்தோ அறியாமலோ மேலும் வருத்தத்தை உருவாக்கினான். அவரும் பலமுறை காலையில் தாங்கள் குடிக்கும் வேலையில், தனியாக இருக்கும் போது வாரத்தின் சிலநாட்கள் ஆவாவது கஞ்சி குடிக்கும்படி அறிவுரை கூறுவார். ஆனால் இதுநாள் வரை குடித்தது இல்லை. ஆனால் எழிலரசி கூறியதும் சரி என்று கூறியது ஒருபக்கம் மகிழ்ச்சி மற்றும் வருத்தம்.
இது எப்படி என்றால் ஆரம்பித்தில் மகனிற்கு மனைவி வரும்போது ஏற்படும் உணர்வுதான். ஆனால் இதில் அவர் ஒன்றை கவனிக்கவில்லையா.. விரும்பவில்லையா தெரியவில்லை. இதே தான் தன் மகன் கூறி மனைவி அவள் பிடிக்காதை ஏற்றுக்கொண்டு செய்வேன் என கூறியதும் வருத்தம் இன்றி மகிழ்ந்தவர்.. மகன் செய்தால் மட்டும் ஏன் வருத்தம் கொள்ள வேண்டும்.
வேந்தன் தன்னவளை பார்த்து.. ” அரசி நாளை காலையில் இருந்து ஆரம்பித்துவிடலாம் தானே. ” புன்னகையுடன் ‘ சரி ‘ என தலையாட்டா..
சற்று குரலை உயர்த்தி..” அரசி வாய் திறந்து எல்லோர்க்கும் கேட்கும்படியா பதில் சொல்லு. ” மெதுவாக அவளிற்கு மட்டும் கேட்கும் குரலில்.. ” முயல்குட்டி!.. உன் தனுமாமா உன் முடிவ வார்த்தையால் கேட்க விரும்புறேன். ”
தன்னவனின் அன்புக் கட்டளையை ஏற்று.. புன்னகையுடன் ” தனு சொன்ன பொறுப்ப.. நான் நாளையில் இருந்து ஏற்றுக்கொண்டு.. பார்க்க ஆரம்பிக்கிறேன். ” அனைவரையும் பார்த்துக் கூறினாள்.
அவளின் முடிவை கூறியபின்.. பெரியவர்களிடம் ஆசி வாங்கிக்கொண்டனர். வசு புன்னகை மட்டுமே செலுத்த.. மற்ற இளையவர்கள் இருவருரையும் அணைத்தும்.. கைக்கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வேந்தன் தன் அரசியை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று திருநீர், மஞ்சள் மட்டும் தன்னவளுக்கு வைத்து.. பின் குங்குமத்தை தனக்கு வைத்துக்கொண்டபின்.. தன் நெற்றியை அவளின் மீது வைத்து சில நொடிகள் கழித்து எடுத்தான்.
நெற்றியில் மென்முத்தம் கொடுத்து.. ” ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஐ லவ் யூ அரசி!..” கூறியும்.. தன்னவளிற்கு கரத்தை நீட்டி வாழ்த்தையும் தெரிவித்தான்.
‘ வேந்தனிற்கு.. முயல்குட்டியாக அறிமுகமானவள்.. அவனின் உயிர் என்றால்.. சில வருடங்கள் தன்னவளின் நினைவை ஒதுக்கி.. அவளால் அவன் செய்த செயல்கள் தான்.. அவனை தன் குடும்பத்தினரிடமும், மற்றவர்களிடம் மென்மேலும் நன்மதிப்பை பெற்றுத்தந்தது. இன்று தனியாக பிஸ்னஸ் ஆரம்பிக்கும் அளவிற்கு உருவாக்கியவள் அவனை முழுதாக ஆட்சி செய்யும் அவனின் அரசிதான். அப்படிப்பட்டவள் இனிமேல் தன்னுடன் தன் வளர்ச்சியிலும் கூடவே பயணிக்க போகிறாள் என்ற மட்டற்ற மகிழ்ச்சியில் இன்று முதல்முறையாக அரசிக்கு தனது காதலை கூறினான். ‘
அவளும் அதனை உணர்ந்து.. ” நானும் என் வேந்தனின் தொழிலை ஏற்று நடத்தப்போவதில்.. எனக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம். ” அவளும் கூற.. வேந்தன் என்று அவளின் முதல் அழைப்பை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவன் தோள்வளைவில் இறுக்க அணைத்து விடுவித்தான்.
அரசி நாளை காலையே தன்னவனை பார்ப்பாள் என்பதாலோ.. இன்முகத்துடன் தன்னவனை குடும்பத்தினருடன் வழியனுப்பினாள். அவனும் அவ்வாறு எண்ணித்தான் தன் வீட்டிற்கு சென்றான். அவர்களுடனே அருள்நிதி, இளமதியும் கிளம்பிவிட்டனர். நிறைந்த மனதுடன் எழிலரசி குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து தங்கள் பணிகளை பார்க்க ஆரம்பிக்க.
‘ எழிலரசி மட்டும் தன்னவனுடனான இன்றைய நிகழ்வுகளை தங்களின் ஆஸ்தான மாடிபடியின் வளைவில் உள்ள படியில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டுயிருந்தாள். காலையில் இருந்து பலஅனுபவங்களை கடந்து வந்தது போல எண்ணினாள். அதித அன்பையும் பார்த்தாள்.. கணிக்க முடியாத விருப்பு, வெறுப்பு, கோபத்தையும் பார்த்தாள். அறைமணி நேரத்திற்கு மேல் தன்னவனை எண்ணிக் கொண்டுயிருந்தவள்.. பின் தன்னறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு.. ஏற்கனவே தன்னவன் கடையை பற்றி விவரங்களை எடுத்துக்கொண்டு கீழ் ஹாலிற்கு வந்தாள். அதன்பின் அவளின் நேரங்கள் அழகாய் கடந்தது. ‘
வேந்தன் குடும்பத்தினர் தங்களின் வீட்டின் முன் இறங்கியபோது திலகன் அங்கு நிற்க.. பொருட்கள் இறக்கப்பட்டு இருந்தனர். காரில் இருந்து நேராக வேந்தன் அங்கு செல்ல.. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவன் திலகனுடன் பேசிக் கொண்டுயிருக்க.. மற்றவர்கள் உள்ளே சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் சித்ராவும் வினோவும் வந்தனர்.
” அண்ணா இங்க வாங்க.. வீட்டிற்குள் வந்து கொஞ்சம் நேரம் உட்கார்ந்து விட்டு போவீங்களா. ” தலையசைப்புடன் வந்தவனுக்கு திருஷ்டி கழித்து உள் சென்றவன் பூஜைஅறையில் மாலை மற்றும் இருவரின் உடைகளை வைத்துவிட்டு ஷோபாவில் மாமாவின் அருகில் அமர்ந்தான்.
” மாமா நான் உங்க போனுக்கு நான் வைத்துயிருக்கும் லாப்டாப் தகவல் அனுப்புறேன். நீங்க சங்கவியிடம் இதை பற்றியும்.. இல்ல என்ன தேவை?. என்று கேட்டு சொல்லுங்க. நான் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லி உங்க வீட்டிற்கே அனுப்ப சொல்லுறேன். ”
” சரி மச்சான். நான் கவிக்கிட்ட கேட்டுச் சொல்லுறேன். மச்சான் நான் ஒன்னு சொல்லுறேன் கவனமா கேட்டுக்கோங்க. நீங்க ஏதாவது எழிலரசிக்கு செய்தா.. அந்த தகவலை முடிந்தளவு முன்னாடியே வீட்டில சொல்ல பாருங்களே. இன்னைக்கு மாதிரி திருப்ப நடக்கமா பார்த்துக்கோங்க. ”
” ம்.. கண்டிப்பா மாமா. இன்னைக்கு நடந்து நானே எதிர்பார்க்காதது. அப்புறம் மாமா.. எனக்கு லிகல சில வேலைகள் பண்ண வேண்டியிருக்கு. என்ன வேண்டும் என்று ஒருவாரத்தில் அனுப்புறேன். என்ன பண்ணலாம்?. எப்ப பண்ணினா சரியா இருக்கும் என்று எனக்கு பார்த்துச் சொல்லுங்க. ” தலையசைப்புடன் இருவரும் பேசிக் கொண்டுயிருந்த நேரம்..
” வேந்தா உன் ரூம்மில் என்ன இறக்கிக் கொண்டுயிருக்காங்க?.. ” சித்ரா தண்ணீர் மாப்பிள்ளைக்கும், வேந்தனிடமும் கொடுத்து விட்டு கேட்டார்.
” சென்னையில் நான் இருந்த வீட்டு பொருட்களோட.. மேலும் கொஞ்சம் ரூம் பானிச்சர் பொருட்கள் வாங்கியதும் ம்மா. நாம்ம மண்டபத்தில் இருக்கும் போதுதான் நாளைக்கு வர வேண்டியது வேற வேலையோட சேர்த்து இன்னைக்கு இங்க வந்துட்டோம் என்று கால் பண்ணினாங்க. ” அப்படியா என்பது போல தலையசைப்புடன் அவர் செல்ல..
பின் சிறிது நேரத்தில் வினோ குடும்பத்தார் திருச்சிக்கும், திலகன் வீட்டிற்கும் என கிளம்பிவிட்டனர். தாத்தா, பாட்டி பெரியப்பா வீட்டில் இருக்க.. வசு, வேந்தனும் அவரவர் அறைக்கு சென்றுவிட வேந்தனின் நிச்சிய விழா வீடும் இயல்புநிலைக்கு மீண்டும் திரும்பியது.
கலைப்புடன் வந்த மனிதர்களுக்கு மெல்லிய தென்றல் காற்றும் வீசியும்.. நிலவுமகள் ஆதவனை வழியனுப்பி வைத்து.. அவள் நட்சத்திரங்கள் மற்றும் வெண்மேக கூட்டத்தினருடனும் விளையாடியபடி அனைவருக்கும் இரவு பொழுதை தொடங்கி வைத்தது.
மலர்களின் வாசனை நுகர்ந்த வண்ணம் இன்றைய தங்கள் மகனின் வாழ்வின் முக்கிய நிகழ்வான இருவிழாக்களை முடித்துவிட்டு அமைதியாக தங்கள் தோட்டத்தில் அமர்ந்துயிருந்தனர் சித்ராவும், ரவிந்திரனும்.
” சித்ரா நிச்சியத்திற்கு வந்துட்டு வெளியூர் போனவங்க வீட்டிற்கு போனவுடன் கால் செய்தாங்களா?.. இல்ல போகும் வழியில் கால் செய்தாங்களா?.. “
” ம்.. கால் செய்தாங்க. ”
சரி என்று தலையசைப்புடனே அவர் சித்ராவை பார்த்திருக்க.. அவருக்கு எப்போதும் விட இன்று மிகவும் யோசனையுடன் இருப்பது போல தெரிந்தாள்.
” என்ன ரொம்ப யோசனையெல்லாம் பலமா இருக்கும் போல. யாரை பற்றிய யோசனை?.. “
” வேந்தனை பற்றிதான். அவன் என்ன நினைக்கிறான்?. பண்ணுறானே ?. ஒன்னும் புரியல. நாம்ம ஒன்னு நினைத்தா.. அவன் வேற ஒன்னு பண்ணுறான். இப்ப கூட பாருங்க காலையில் தான் வந்தான். இனி சென்னைக்கு போகமாட்டேனு சொன்னான். வீட்டிற்கு வந்த உடன் அவன்ட்ட அதை பற்றி பேசலாம் நினைத்தேன். ஆனா மாடிக்கு போயிட்டான். சரி ரெஸ்ட் எடுப்பான் போல நினைத்தேன். ஆனா பாருங்க சாய்ந்திரம் உள்ள போய் ஏதோ செய்ய ஆரம்பித்தான். இன்னும் ஏதோ அவன் வேலை செய்யும் சத்தம் கேட்குது. அதான் இப்படியெல்லாம் வேலை பார்க்கனு ஆள் தனியா இருக்காங்க தானே. ஏன் இவனே பண்ணுறான்?. நம்ம கூட பேசிட்டு இருக்க வேண்டியது தானே. ”
” ஏன்மா.. அவன் நம்ம கூட இருந்தா மட்டும் பேசிட்டுதான் மறுவேலை பார்ப்பானா. அவன் வந்தா அமைதியா உட்கார்ந்துதான் இருப்பான். நாம்ம தான் ஒன்னும் பேச முடியாது. “
” ஆமா ஆமா நீங்களும் தான்.. அப்படியே பேசிட்டுதான் மறுவேலை பார்ப்பிங்க. அவன் கூட இங்க இல்ல.. அதனால எதுவும் சொல்ல. ஆனா நீங்க எங்க கூட இருக்கும்போதே.. வேந்தன் பெயரில் இடம் வாங்கியது, அவனுக்கு அண்ணாவும், எழில் அப்பா பணம் கொடுக்க முடிவு எடுத்து, எழிலுக்கு வண்டி வாங்க கூட போனது இதுல ஒரு விஷயத்தையும் என்கிட்ட சொல்லல.?. ”
” ஏம்மா யாருக்கும் சொல்லாம செஞ்சாதாம்மா.. அது சஸ்பென்ஸ். உனக்கு மட்டும் இல்ல எழில் அம்மாவுக்கும் தான் எதுவும் தெரியாது. நீ இதுக்கெல்லாம் கவலப்படாதா. அது சரி வண்டி வாங்க நானும் அருணாச்சலமும் தான் போனோம். இது யாருக்கும் தெரியாதே.. உனக்கு எப்படி தெரியும்?. ”
” பூமி பூஜையில் ஏதோ பேசிட்டு இருக்கும் வேந்தன் எல்லோரிடம் சொன்னதா வசு தான் சொன்னா. உங்கிட்ட ஒன்னு சொல்லனும் நினைத்தேன்.. இப்ப தான் ஞாபகம் வருது. ஏங்க நம்ம வேந்தன் கல்யாணத்திற்கு வயசு வித்தியாசம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என கண்டிஷசன் போட்டான் இல்ல.. ”
” நிறுத்து நிறுத்து.. என்னம்மா சொல்லுற!.. எப்ப அவன் இந்த மாதிரியெல்லாம் கண்டிஷசன் போட்டான்?.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே. ”
” என்ன.. வேந்தன் இப்படி சொன்னதே இல்லை என்று. உங்களுக்கு முன்னாடி தெரியும்மா?. ”
” பொதுவா சொல்லி இருப்பான். ஆனா அவன் கல்யாணத்திற்கு என்று சொன்னது இல்ல. ஏன் சித்ரா நாம்ம அவன்கிட்ட நந்தினி, சாருலதா மற்ற உறவு முறை பெண்கள் பற்றி கேட்டப்ப.. அவங்க யார் மேலையும் விருப்பம் இல்ல.. இனியும் வராது. வெளிய இருந்து தான் பெண்வரும் மட்டும் தான் சொன்னான். வயசு பற்றி அவன் பேசியதே இல்லையே. சரி அதவிடு.. ஆனா இப்ப இந்த மாதிரி தான் எழிலரசிய பார்த்தோம் என்று.. வேந்தனுக்கோ இல்ல எழிலரசிகிட்ட யாரும் சொல்லுவதற்கு முன்ன எல்லோரிடமும் சொல்லனும். நான் முதலில் யோகாவிற்கு கால் பண்ணி.. ” வேகமாக தன் போனை எடுக்க..
” இருங்க இருங்க நீங்க இப்ப நினைப்பது ஃபேக்டரி இடம் பூஜை போட்ட இடத்தில் அதுவும் பேச்சுவாக்கில் வேந்தன், எழிலரசி முன்னாடி வசு சொல்லி.. வேந்தன் கோபப்பட்டு.. எழில் எனக்கு அதை பற்றி கவலையில்ல.. இனிமேல் இந்த வயசு பற்றி பேச்சு வரக்கூடாதுனு சொல்லி எல்லாம் முடிந்துவிட்டது. “ வசு இன்றும், உறுதியன்று நடந்தது பற்றி கூறியதையும் ரவிந்திரனிடம் கூறினார்.
” வசுகுட்டிக்கு என்னாச்சு?. வேந்தன் தான் தெளிவா உறுதி முத நாள் சொன்னால.. இந்த மாதிரி யார் முதலில் என்று பேசக்கூடாதுனு. திருப்ப இன்னைக்கு வேற.. பேச்சுவாக்கில் என்றாலும் இதெல்லாம்மா சொல்லுவாங்க. இந்த விஷயத்தினால இரண்டுபேருக்கும் இனி இதனால பிரச்சனை தான் வரப்போகுது. ”
” என்ன பிரச்சனை வந்துவிடும் வசுக்கும் எழிலரசிக்கும்?. ”
” சித்ரா அவங்க இரண்டுபேருக்கும் ஏன் வரப்போகுது?. அப்படி வந்தாலும் எழில் அதைபற்றி யோசிக்க கூடமாட்டா. எனக்கு வேந்தனையும் வசுவை பற்றிதான் கவல. “
‘ ஏன் ‘ என்பதுபோல சித்ராபார்க்க..
” ஏன்னா?.. இனிமேல் வசு.. வேந்தன் எழிலுக்கு என்ன பண்ணினாலும்.. தனக்கும் பண்ண வேண்டும் என்று நினைப்பா. தங்கச்சி என்ன பண்ண வேண்டுமோ.. அதைதான் அவன் பண்ணுவான். மனைவிக்குனு பண்ணுவதை அவன் பண்ணமுடியுமா சொல்லு. ”
” ஆமாம் அத நானும் நினைத்தேன். அதனால தான் இந்த கடை பொறுப்ப வேந்தன் எழில்கிட்ட இப்பவே கொடுத்தில் அவன்மேல கொஞ்சம் வருத்தமும், கோபமும் இருக்கு. அவனா ஒருமுடிவு எடுத்து இருக்கான். இன்னும் இரண்டு வருடம் கழித்து வசு கல்யாணம் பண்ணி போன பிறகு.. அவன் இந்த முடிவ எடுத்துயிருக்கலாம். ” சித்ரா அவரை பார்க்க.. அவர் முறைத்துக் கொண்டுயிருந்தார்.
” வசு கல்யாணத்திற்கும்.. எழில் பொறுப்பு ஏற்றுக் கொண்டதற்கும் என்ன சம்மந்தம்?.. “
” என்ன சம்பந்தம் னா!. வேந்தனுக்கு இன்னும் வசு கல்யாணத்திற்கு முன்னாடியும்.. கல்யாணத்திற்கும் பண்ண வேண்டியதுனு எவ்வளவு இருக்கு!..அவன் என்னடானா காசு சம்பந்தபட்டது எல்லாம் எழில் பொறுப்பில் விட்டுயிருக்கான். அப்ப வசு தேவையானது எல்லாம் வாங்க பணம் வேண்ணும்போது.. இப்ப இன்னைக்கு தேதிக்கு.. எழில் நான் தலையிடமாட்டேனு சொல்லி இருக்கா.. இதுவே இரண்டு வருஷத்திற்கு பிறகும் இதேமாதிரி இருப்பானு சொல்ல முடியுமா சொல்லுங்க?. “
ரவி அமைதியாக சித்ராவை பார்த்தார். ” எல்லாம் சொல்லி முடிச்சிட்டியா இன்னும் ஏதாவது இருக்கா?. ” இல்லை என்று தலையசைக்க..
” சித்ரா நான் சொல்வதை நல்லா புரிந்து.. ஞாபகம் வைத்துக்கொள். வேந்தன் இந்த வீடுகட்ட, ஹோட்டல் விரிவுபடுத்தனு நிறைய பணம், உழைப்பு என்று.. இவ்வளவு நாள் அவன் பண்ண வரைக்கும் போதும். வசு கல்யாணத்திற்கு நாம்மதான் எல்லாம் பண்ணவேண்டும். வேந்தனும், எழிலரசியும் அண்ணா, அண்ணியா கல்யாண வேலைய மட்டும் பார்த்த போதும். ஏதாவது பண்ணுவேனு சொன்னாக்கூட நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். அப்படி அவன் பண்ணும்போது.. நீ நினைப்பதுபோல எழில் தடுக்கமாட்டா.. ஏன் தலையிடமாட்டானு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு. நீ தேவையில்லாமா கவலபடவேண்டிய அவசியம் இல்ல. ”
” ம்.. நாம்ம பண்ணுவோம் தான். ஆனாலும் அவனுக்கு சபையில் மரியாதை ஒன்னு இருக்கு. அதனால அண்ணனா அவன் பண்ண வேண்டியதை நீங்க தடுக்காதிங்க. அதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன். ”
” ஏன் சித்ரா வரப்போற மனைவிக்கே எல்லாம் நான் பண்ணவேண்டுனு.. எழிலரசி அப்பா, அம்மாவையே எதுவும் பண்ண விடாதவன்.. அண்ணா என்ற அவன் உரிமையையும், கடமையும் அவன் எந்த குறையும் இல்லாம செய்வான். அதுபோல தான் எழிலும் நடந்த பிரச்சனை வைத்தே தெரியுது.. வேந்தன யாரும் ஒன்னு தப்பா பேச விடமாட்டேன் இருக்கா. அப்படிபட்ட எழிலா வேந்தனை எல்லோர் முன்பும் சபையில் மரியாதை குறையும்படியா நடந்துக்கொள்வா?. ”
” ம்.. கொஞ்சம் விட்ட இப்பவே உங்களோட ஹோட்டல் பொறுப்பையும் கூட எழிலரசிக்கு கொடுத்து விடுவிங்க போல. அந்தளவிற்கு மருமகளுக்கு இங்க வருவதற்கு முன்பே மகன், மாமனார் சப்போர்ட் ஜாஸ்தியா இருக்கு. ” சற்று மனதாங்களுடன் கூற..
புன்னகையுடன்.. ” அதனால என்ன இப்ப. இந்நேரம் வேந்தன் இந்த பொறுப்பு கொடுக்கவில்லை என்றால்.. நான் ஹோட்டலை பார்த்துக சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கு. அப்பதானே பேத்திகள் வந்தபிறகு கடை பொறுப்ப மருமகளிடம் கொடுத்துவிட்டு உன்னோட சேர்ந்து நானும் வீட்டல இருந்து பார்த்துக்க முடியும். ”
சித்ரா பேத்திகளா!.. புரியாமல் விழிக்க..
அதனை கண்டுகொண்டவர்.. மெல்லிய புன்னகையுடன்.. ” ஏன் சித்ரா.. இவ்வளவு பிரச்சனையெல்லாம் சொன்ன வசு.. இதை சொல்லலையா?.. ” சித்ரா அவரை முறைக்க..
சற்று அதிக புன்னகையுடன்.. ” நம்ம மகனுக்கு எழிலரசி மாதிரியே பெண் குழந்தை வேண்டும்மா.. அதுவும் டிவின்ஸ் தான் வேண்டுமாம். நீ எழில் வீட்டல அவளோட குழந்தை படத்தை பார்த்துயிருப்பியே.. எவ்வளவு அழகாக கொழுகொழுனு இருந்தா இல்ல. நம்ம பேத்திகள் எப்படியிருக்கும். நான் முழுநேரமும் வீட்டல தான் இருப்பேன். அதான் இப்பவே பழகிக்கொள்ள சொல்லுவேன். ” அவரின் பேத்திகள் மீதான கற்பனை.. வேந்தனைவிட அதிகமாக இருந்தது.
சித்ராவிற்கும் அதுபோலனா கற்பனை நன்றாகதான் இருந்தது.. ” ம்.. நல்லாதா இருக்கும்.. ஆனாலும் உங்க கற்பனையும் ஜாஸ்திதான். டிவின்ஸ் இல்லையென்றால் என்ன பண்ணுவிங்க?. ” புன்னகையுடன் கேட்க.
” அதை பற்றியும் கவல இல்ல. ஆனா எப்படியும் நம்ம பையனுக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும். எழிலும் வேந்தன் மாதிரி வேண்டும் என்று ஒரு பையன். ஆகா மொத்தம் நம்ம குடும்பத்திற்கு மூன்று வாரிசுகள் உறுதி. “
” ம்.. ரொம்ப கனவு கோட்டை கட்டாதிங்க. எந்த பிரச்சனையும் வராம.. முதலில் இவங்க கல்யாணம் முடியட்டும்.. அதன்பிறகு இதை பற்றி எல்லாம் யோசிக்கலாம். ”
சித்ரா எந்த நேரத்தில் எந்த எண்ணத்தில் சொன்னாரோ.. அதற்கான முதற்படி தொடங்கிவிட்டது என்பதை அவர் அறியவில்லை.
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது
தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?
தவறுகள் செய்வது எப்பொழுது
ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?
இதழ்களை துவைப்பது எப்பொழுது
அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை
ஆடுதான் மேய்வது எப்பொழுது
திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?
எனக்குள் தொலைவது எப்பொழுது
ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..
ஆசை?ஆசை?.ஆசை..
பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?
பனித்துளி ஆவது எப்பொழுது
ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?
குடிநீராவது எப்பொழுது
கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?
கிழக்கில் உதிப்பது எப்பொழுது
புடவை கருவில் இப்பொழுது நீ?
புதிதாய் பிறப்பது எப்பொழுது
வேந்தன் தன்னுடைய வேலைகளை முடித்த பின் தன்னவளுக்கு போன்கால் செய்ய பாடலை புன்னகையுடன் கேட்டுயிருந்தவன் இறுதியில் பெருமுச்சு ஒன்றை வெளிப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. தான் கேட்பதற்காகவே அமைதியாக இருப்பவளை கேடி முயல்குட்டி என கொஞ்சியும் இருந்தான்.
அழைப்பு ஏற்றவுடன் அவனவள் பக்கம் சில நொடிகள் அமைதி நிலவியது.. ” ஓய் முயல்குட்டி.. ”
” தனு மாமா.. உறுதி முடிந்து நாம்ம ஒன்னா இருந்த மாதிரி.. இப்பவும் நான் முன்னாடியே நான் கேட்டுயிருந்தா.. இப்ப ஒன்னா பேசிட்டு இருந்து இருப்போமில்ல. ” அவளின் குரலில் அன்றைய நாளின் தாக்கம் நன்றாகவே தெரிந்தது.
அவனிற்கு இன்றைய நாளின் தாக்கமும், மேலும் பாடலின் மூலம் அவனவளின் மீது ஏக்கத்தை ஏற்படுத்த.. ” இப்பவும் ஒன்னும் இல்ல.. உன் தனுமாமா வீட்டிற்கு கிளம்பி வரட்டா?. ”
” ம்ஹூம் வேண்ட வேண்டாம். வந்தா உடனே போகனும். நாளை காலை சீக்கிரம் வாங்க. நாம்ம கோயில் போயிட்டு அதன் பின்தான் கடைக்கு போகனும். ம். ”
அவளிற்கு அவன் ‘ ம் ‘ என்றால் போதும் அடுத்த 10வது நிமிடத்தில் இங்கு இருப்பான் என்று தெரியும். ஆனால் வேண்டாம்.. தனு அதிகாலை 3 மணியில் இருந்து சிறு ஒய்வுயின்றி இன்றைய நிகழ்ச்சியை முடித்துயிருக்கிறான். இனி எப்போது வேண்டுமாலும் வரலாம். என்ன நாளும் அது நமக்கு சிறப்பு நாள் தான் என நினைத்து.. அவன் ஓய்வு எடுக்க வேண்டும் என மாற்றி கூறிவிட்டாள்.
அவனிற்கு ஓய்வு தேவையிருந்ததா?.. இல்லை உடனே வீட்டிற்கு வர வேண்டுமே என்று வார்த்தையில் இருந்த வருத்தத்தை அவளிற்கு தரவேண்டாம் நினைத்ததாலே.. ” ம்.. சரி. நீ நல்லா தூங்கு. ஐ மிஸ் யூ முயல்குட்டி. நான் வைக்கிறேன். காலையில் பார்க்கலாம். ”
” ம்.. ”