இருவரும் இன்னும் வரவில்லை என எதிர்பார்த்தயிருந்தவர்கள்.. ‘ எழிலரசி அதே சேலை, அதில் ஆரத்தை மட்டும் கலட்டி வைத்து, தலையலங்காரத்தை திருத்தி.. எப்போதும் போல சிறுபின்னலுடனும்.. ( மாடியில் சிறிய குளிர்சாதன பொட்டியில் பூ இருக்கும்) தன்னவன் வைத்துவிட்ட பூவுடன் முன்னால வர.. பின்னால் வேஷ்டி சட்டை மாற்றி சந்தனநிற பேன்ட் மற்றும் அரசியின் சேலைக்கு ஏற்றதாக பச்சை நிற சட்டையும் அணிந்து.. கையில் இரண்டு பாக்ஸ் உடன் வந்த வேந்தனையும் பார்த்தனர். ‘
வந்தவர்களை பார்த்த சித்ரா.. ” வேந்தா ஏன் வேஷ்ட் சட்டை மாத்தின?.. சரி அதை எடுத்தாவது வைத்துயிருக்கியா?.. ” சற்று கோபமா, வருத்தமா என்ற குரலில் கேட்க.
” இல்லை ம்மா. ஏன் வேண்டும்மா?.. ” என கேட்ட படி பாக்ஸை பாதுகாப்பான இடத்தில் வைத்தான்.
ஏனோ சித்ராவிற்கு வேந்தனின் உடை.. இப்போதே இங்கு இருப்பது பிடிக்கவில்லை. ” ஆமாம் ” சித்ரா கூற..
சரி என அம்மாவிற்கு தலையசைத்த வேந்தன்.. தன் அரசியிடன் பார்வையாலே ஒன்றை தெரிவித்தான். அவளும் தலையசைப்புடன் அறைக்கு சென்றாள். பின் வேந்தன் இன்பாவின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்.
சிலரின் பார்வை அந்த பாக்ஸ் என்னவென்று பார்வையிட்டு வர.. அதை பார்த்தவுடன் அவனின் தங்கைகள் பேசிக் கொள்ள.. அதை கேட்ட விஸ்வநாதனும் பார்க்க.. ” வேந்தா அந்த பாக்ஸ்சில் இருப்பது புது லாப்டாப் பா.”
கல்லூரில் இறுதியாண்டு படிக்கும் தங்கை கேட்டுயிருந்தாள். நேரம் இருப்பதால் அதை பற்றிய விவரம் கேட்டு.. பிறகு வாங்கலாம் என நினைத்து கேட்டான்.
” ஆமா மாமா. லாப்டாப், மானிடர். ” அனைவருமே இதை கேட்டார்கள்.. ஏன் இங்கு?. என்னவும் நினைக்காமல் இல்லை.
” இது ஏன் நம்ம வீட்டு முகவரிக்கு வராம.. இங்க வந்துயிருக்கு அண்ணா. ”
கணவன் எதற்காக கேட்கிறான் என்பது தெரியும் ஆகையால்.. நம் வீட்டில் முன்பே இருந்துயிருந்தால் பார்த்துயிருக்கலாம்.. இல்லை என்பதால் ஆவலில் கேட்க..
” அரசிக்கு லாப்டாப் வாங்கினேன் வினோ. எனக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய மானிடர் தேவையா இருந்து. அதான் இரண்டையும் இங்கே அனுப்ப சொல்லிட்டேன். ”
” அப்படியா அண்ணா. சங்கவி லாப்டாப் கேட்டுயிருந்தா. அதான் உன்னிடம் விவரம் கேட்கனும் நினைத்தேன். சரி இதே மாதிரி லாப்டாப் சங்கவி காலேஜ் யூஸ் பண்ண சரியா இருக்கும்மா?.. ண்ணா. “
” அது ” பதில் கூற ஆரம்பிக்கும்போது..
” வேந்தா.. முதலில் அதை எடுத்து மாப்பிள்ளையிடம் காண்பி.. ”
விஸ்வநாதன் பாக்ஸ் பார்த்து பார்த்து அதில் விவரத்தை வைத்து போனில் தங்கைக்கு உகந்ததா?.. இல்லை தகவல் சேகரித்து தங்கையிடம் இதுபோலா?.. என போனில் ஏதோ அவர் குறித்துக் கொண்டுயிருப்பதை சித்ரா கவனித்தார்.
” ம்மா.. இத நான் ஆபிஸ் யூஸ் பண்ணுவது போல வாங்கியது. சங்கவி காலேஜ் யூஸ் பண்ண வேற மாதிரிதான் வாங்கனும். இத பார்த்து உபயோகமில்ல. மாமா நீங்க சங்கவிய எனக்கு எந்த மாதிரி வேண்ணும் என்று மெசேஜ் பண்ண சொல்லுங்க. நான் பார்த்துச் சொல்கிறேன். ” இருந்தும் வேந்தன் தன் மாமாவை.. பார்க்க வேண்டும்மா?. என்பது போல பார்க்க.. அவரும் இல்லை என தலையசைக்க.
சித்ராவிற்கு மாப்பிள்ளைக்கு தேவையா, இல்லையா என்பதை விட.. மாப்பிள்ளைக்காக தான் கேட்டு.. மகன் காண்பிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றிவிட.. ” ஏன் வேந்தா காலேஜ் போற பொண்ணுக்கே இது தேவைபடாதுனா.. காலேஜ் போகாத எழிலரசிக்கு மட்டும் எப்படி உபயோகப்படும்??.. ”
சித்ராவின் கேள்வியில் வீடே அமைதியாகி விட்டது. எழில் வீட்டினருக்கு சித்ரா கூறியதில் சற்று வருத்தமும்.. பின் மகளால் பிரச்சனை வரக்கூடாது என ஐய்யத்துடன்.. வேந்தனை பார்க்க.. அவனோ கோபத்தில் இருந்தான். அவனிடமிருந்து என்ன பதில் வருமோ?.. என பயந்து பார்த்தார்கள்.
அம்மாவின் கேள்வியை கேட்டவனிற்கோ.. ‘ இவங்களுக்கு என்ன தான் பிரச்சனையோ?. அவளுக்கு மட்டும் தனியா வாங்கினேன் சொன்னா மட்டும்.. எல்லோரும் ரொம்ப அறிவா கேள்வி கேட்குறாங்க. இரண்டு பேருக்கும் பொதுவா வாங்கியது என சொல்லாம விட்டேன். இவர்களிடம் விளக்கி சொன்னால் இன்றி அமைதியாக இருக்கமாட்டார்கள்.. என்ற எண்ணமும், கோபம் ஒரு சேர வந்துவிட்டது. பின் யோசித்தவன் எப்படியும் இதை கூற வேண்டும்.. அதை இப்போதே கூறிவிடுவோம் என்று ஒரு முடிவு எடுத்து விட்டான்.
ஆனால் அதை செயல்படுத்துவதற்குள் அரசி வந்து விடக்கூடாதே.. வந்தா குடும்பத்தினரிடம் லாப்டாப் முன்னாடியே சொல்லாம விட்டதுக்கு முறைத்து.. அப்படியோ தூக்கிகொடுத்து விட்டு.. பின் ஏன்டா இப்படி செய்தேனு?. அழுவா. நான் வீட்டிற்கு நிம்மதியா போக முடியாது. அவள் தாங்கள் பேசுவதை கேட்கவே கூடாது. சட்டென்று மாடிபடியை நோக்கி சென்று அவள் வரும் அறிகுறியிருக்கிறதா?.. இல்லையா?.. என்பதை உறுதி செய்துவிட்டு.. அவர்களிடம் வந்து அனைவரையும் பார்க்க.. அவர்களில் பலர் தன் நடவடிக்கை சற்று கலக்கத்துடன் பார்ப்பது போல இருந்தது. தன்னை நிதானித்துக் கொண்டான்.
இரு குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருப்பதால் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் பார்த்தவன்.. ” அம்மா நான் அரசிக்கு தான் வாங்கினேன். ஆனா அவ மட்டும் யூஸ் பண்ண போறது இல்ல.. அதை நானும் யூஸ் பண்ணுவேன். இரண்டு மாதத்திற்கு எனக்கு ஆபிஸ் லாப்டாப் இருக்கு. அதன்பிறகு எனக்கும் வேற வேலை விஷயாமா யூஸ் பண்ணுற தேவையிருக்கு. ” பின் அப்பா, மாமனாரை பார்த்து..
” இனிமேல் அரசி தான் ஸ்விட் கடை, உணவுப்பொருட்கள் பிஸ்னஸ் இரண்டோட நிர்வாகம், வரவு, செலவு, தேவையென்றால் ஹோட்டலில் என்னோட பொறுப்பையும் பார்ப்பா. நான் மற்ற சில வேலைகளை பார்ப்பேன். அரசிக்கு எல்லாவற்றை சரியாக, பாதுகாப்பா வைத்துக் கொள்ள தனியா லாப்டாப் இருந்தா தான் சரியா இருக்கும். “
‘ புதிதான ஒரு செய்தியை அறிவித்து.. அனைவரையும் அதிர!. வைத்தான். ‘
” என்ன வேந்தா புதுசா சொல்லுற.. இத எப்ப நீங்க முடிவு பண்ணிங்க?.. எங்களிடம் சொல்லவே இல்ல. அதுவும் இல்லாம எழிலரசி கல்யாணப் பொண்ணு வேற.. இதெல்லாம் எப்படி தனியா போய் பார்க்க முடியும். ” சித்ரா சற்று கோபத்துடனே கேட்க..
முடிவு செய்தீங்களா??. ” அம்மா என்னோட இந்த முடிவு பற்றி.. அரசிக்கு இன்னும் தெரியாது. உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே.. கல்யாணம் முடிந்தவுடன் அரசி கணவன் பண்ணுற வேலையோ, இல்ல பிஸ்னஸ் பொறுத்து.. அவளும் வேலைக்கு கண்டிப்பா போவேனு சொன்னது. இப்ப அரசி கல்யாணத்திற்கு பிறகு என்கூட வந்து பண்ணப்போறத.. என்னால இந்த இரண்டு மாதத்திற்கு பண்ண முடியாதால.. இப்ப இருந்தே பண்ண சொல்லப் போறேன் அவ்வளவுதான். “
” இந்த இரண்டு மாதத்தில் அரசி தனியா செய்யும் அளவிற்கு வேலை எதுவும் இல்ல. நான் கடை பற்றி ஏற்கனவே கதிரிடம் பேசியதை.. இப்பபோ கூடுதல் இடத்திற்கு ஏற்றார்போல அதில் சில மாற்றங்கள் செய்து.. எல்லாம் சரியா நடக்குதானு பார்த்தாலே போதும். கடைய திறந்து ஆரம்பித்துவிடலாம். ஃபேக்டரி கட்டுவதும் அதையும் பார்த்து கூறிவிடுவேன். அதை கொஞ்சம் பொறுமையா பார்த்தா போதும்.. இப்போதைக்கு அவசரமில்ல. நான் இல்ல இன்பா எங்களின் வேலைய பொறுத்து.. அரசிய காரில் கூட்டிட்டு வந்து.. திரும்பவிடும் வேலை பார்த்துக்கொள்வோம். ” அனைவரையும் பார்க்க.
அவர்களுடைய வேலை என்பதால் கருத்துகூற ஒன்றும் இல்லை என இளையவர்கள் அமைதியாக இருந்தனர்.
ஆனால் சித்ராவிற்கு இதில் சற்றும் பிடித்தமில்லை.. கல்யாணம் முடிந்தே ஆனாலும் சிலமாதங்களுக்கு பிறகு தான் கடை பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்க.. ஆனால் இவன் கூறுவது இப்போதில் இருந்தே எழிலரசி எல்லாம் செய்வது.. அதிலும் வரவு, செலவு பொறுப்பை என்றால்.. இது சரியாக இருக்கும்மா?.. வசுவின் திருமணம் உள்ளது. இவன் சொல்வதை பார்த்தாள் அவன் குடும்பத்திற்கு, வியாபாரத்திற்கு என்று தனியாகவும், மற்ற செலவுகளை ஹோட்டலில் இருந்து வருபவற்றை பயன்படுத்த போகிறான் என்று நினைக்கிறேன் ‘ அவர் எண்ணிக் கொண்டுயிருக்கும் போது..
” வேந்தா நீ சொல்வதில் எங்களுக்கு ஒன்னும் இல்ல.. ஆனா எழிலரசியிடம் நீ இன்னும் சொல்லவே இல்லனு சொல்லுற.. முதலில் மருமகளிடம் உன் முடிவு பற்றி சொல்லு. அரசியால் இப்போதுயிருந்து எல்லாம் பார்த்துக் கொள்ள முடியுமா?.. கேட்டு தெரிந்துக் கொண்டு.. பின்ன நீ எல்லாம் பண்ண ஆரம்பி. ”
சரி என அவன் தலையசைத்தாலும்.. ‘ அவ பண்ணுவா.. நான் பண்ணவைப்பேன். ‘
அப்போது லட்சுமி அவனிடம் ஏதோ கூற நினைப்பதை பார்த்தவன்.. ” ஏதாவது கேட்க வேண்டுமா அத்தம்மா?.. ”
லட்சுமிக்கு வேந்தன்.. இருவருக்குமான முதல் தனிப்பட்ட உரையாடல் மற்றும் முதல்அழைப்பு!. மற்றும் அழைத்த விதத்தில் மனதில் ஒரு நொடி மகிழ்ந்தார்!.. ஆனால் அவர் முகத்தில் தெரிவிக்கவில்லை. சித்ரா இதை எவ்வாறு எடுத்துக் கொள்வாறோ.. யார் வேண்டுமானாலும் அம்மா அழைக்கலாம். ஆனால் மருமகன் அழைப்பை எவரும் சற்று வித்தியாசமாகவும், அவருடைய அம்மாவிற்கு பிடிக்காமல் கூட போக வாய்ப்பு உள்ளது. அதனால் அவர் அதனை உணர்ந்து மகிழ்ந்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம் என நினைத்தார்.
” மாப்பிள்ள.. ஏற்கனவே எழில் முன்னயிருந்த எடை வரவே மாட்டேங்குதுனு புலம்பிட்டுயிருப்பா. இப்ப இன்னும் கொஞ்சம் இளச்சா மாதிரியிருக்கா. மில்லுக்கும், கடைக்கு கூட இனிமேல் வரச்சொல்லாதிங்கனு இன்பாவிடம் இன்னைக்கு சொல்ல வேண்டும் என நினைத்தேன். இப்போதிலிருந்து ரெஸ்ட் எடுத்தாதான் கல்யாணத்தின் போது நல்லா இருப்பா. எதுக்கும் நீங்க குட்டிம்மாவிடம் இதையும் ஒருதடவை கேட்டுவிட்டு முடிவு எடுத்துக்கோங்களே..” வேந்தன் வேலையை பற்றி கூறும்போது.. இதை கூறியதால் அவன் ஏதாவது நினைத்துக் கொள்வான் என சங்கடத்துடன் கூற..
தான் அவளிடம் எடை குறைந்தது பற்றி கூறியதும்.. குட்டிம்மா என்று அவள் கேட்டால் எப்படி ரியாக்ட்( react) செய்வாள் நினைவில் வர.. புன்னகைமுகமாக.. ” ம்.. சரி அத்தம்மா நான் அரசியிடம் இதை பற்றிக் கேட்டுக்கிறேன். பிறகு அரிசி கடை, மில்லிற்கு.. அவளா எப்ப வேண்டாம் என்று சொல்லுறாளோ.. அதுவரைக்கும் போகட்டும். மூன்றிக்கும் அதிகமாக காலையில் போய் மதியம் வர மாதிரி நானும், இன்பாவும் பார்த்துக் கொள்கிறோம். ” அவன் கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
அவனின் காதுகளில் இனிமையான தன்னவளின் புது கொலுசொலிக் கேட்டு திருப்ப.. அவனின்அரசி டாப், பேன்ட் இரண்டும் சிவப்புவண்ணம் சுடியில் இருக்க.. அதில் பச்சைசிவப்பு கலந்த கலாம்கரி ஷாலை ஒருபக்கமாக அணிந்து வந்தவளின் உடையில்.. அவளின் வரிவடிவம் அழகாக தெரிய ஒரு நொடி உரிமை பார்வையுடன் அவளை முழுவதும் ரசித்தவனை..
‘ என்ன என்று?.. ‘ அவள் புருவத்தை மேலும் கீழும் உயர்த்தி காண்பிக்க.. ‘ ஒன்றும் இல்லை ‘ என அவள் கண்களை பார்த்தவாறு மெல்லிய தலையசைப்பு காண்பித்தவனிடம் அருகில் வந்து நின்றவள்.. தன் கையில் வைத்துயிருந்த இருவரின் நிச்சிய உடைகள் வைத்திருந்த கவரை கொடுத்தாள். அரசி உடை மாற்றி வந்து இருப்பதிலேயே.. பையில் என்ன உள்ளது?. என்று அனைவருக்கும் புரிந்தது.
வந்தவள் அனைவரையும் முகத்தையும், தன்னவன் நிற்பதை பார்த்து அவளிற்கு புரிந்துபோனது. மெல்லிய குரலில்.. ” தனு இப்ப எதுக்காக விளக்கம் கொடுக்கறீங்க?.. ”
புன்னகையுடன் அவன் லாப்டாபை காண்பிக்க.. பார்வையின் திசையில் இருப்பதை பார்த்தவள்.. ” ஓ.. சரி இப்ப என்ன?.. ” அவள் மற்றவர்களை பார்க்க.. எல்லோர் முகத்திலும் சிந்தனை ஒடிக்கொண்டுயிருந்தது. அரசி தங்களை பார்ப்பதை பார்த்து..
” சரி வேந்தா நீ உன்னோட முடிவ போனில் சொல்லு.. நாம்ம கிளம்பலாமா. ”
” 15 நிமிடம் ப்பா. அரசியிடம் எல்லோரும் முன்னாடியே என் முடிவ சொல்லி.. அவளோட பதில் முடிவையும் உங்க முன்னாடியே சொல்லட்டும்.. அதான் எங்களுக்கு நல்லது. அதான் நீங்கயெல்லாம் எதிர்பார்க்குறீங்க. ” சித்ராவை பார்த்துக் கூறியவன்..
பின் திரும்பி.. ” மாமா , அண்ணா உங்களுக்கு இப்ப நீங்க இங்கு இருப்பதிலோ, இல்ல நான் பேச போவதிலோ ஒன்னும் பிரச்சனை இல்லையே?. ” மாமா திருச்சிக்கு செல்லவேண்டும் மற்றும் எழிலின் மாமா இருவருக்கும் விருப்பம் இல்லாமல் இருந்தால் பிறகு பேசிக் கொள்ளலாம் என நினைத்துக் கேட்க..
இருவரும் ஒருசேர.. ” ஒன்னும் இல்ல வேந்தன், மச்சான்.. ”
” மச்சான் எழிலிடம் அனைவர் முன்பு சொல்ல. நீ நல்லா யோசித்து விட்டாயா?.. ” வக்கீல் என்ற முறையில் அவர் வேந்தன் இப்போது எல்லோர் முன்பும் கூறப்போவது மிக முக்கிய முடிவு.. பின்னால் அவன் மாற்றி பேசினால் அவனாலும்.. மற்றவர்களாலும்.. எழிலரசிக்கு மனவருத்தம் வரலாம் என நினைத்துக் கேட்டான்.
” ம்.. நல்லா யோசித்துவிட்டேன் மாமா. ” கூறியவன் பின் தன் அரசியிடம் தான் முடிவை கூற..
தெளிவாக கேட்டுக் கொண்டவள்.. ” தனு யோசித்து சொல்லட்டா?.. ”
‘ சரி ‘ என தலையசைத்து.. ” ம்.. 5நிமிடம் எடுத்துக்கோ அரசி. ” மெல்லிய புன்னகையுடன் கூற..
தன்னவன் பெருந்தன்மையாக கொடுத்த நேரத்தை கேட்டவளோ என்ன!.. என விழிவிரித்து அவனை பார்க்க.. அவனோ அதை கண்டுக்கொள்ளாமல் அடக்கபட்ட புன்னகையுடன் போனை பார்க்க ஆரம்பித்தான்.
‘ என்ன எழிலரசி உனக்கு வந்த சோதனை.. இப்போதுதில் இருந்தே எப்படி தனியா பண்ண?. ஏதாவது என்றால்.. தனுவையும் தொல்லை பண்ண முடியாது. இவன் என்னடானா ஒன்னுக்கு இரண்டு வேலை பண்ணுறான். ‘ ம்.. அவள் சற்று பின்னால் நகர்ந்து.. தன் அப்பா, மாமாவை பாவமாக பார்க்க..
5நிமிட கட்டளையை கேட்டு அவர்களும் தான் அதிர்ந்தனர். தன் மகன் முடிவு எடுத்துவிட்டான்.. 5 நிமிடமோ?. 5நாளோ? அவன் மாறப்போவது இல்லை. நாம் தலையிட்டாமல் இருக்கக்கூடாது என நினைத்தவர்.. எழிலரசியின் பார்வைக்கு.. புன்னகையுடன் ரவிந்திரன் வா என சைகையில் அழைக்க..
‘ அப்பாடா ‘ என எழிலரசி உடனே ஓடிச்சென்று அவர்கள் நடுவில் இருந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டாள். அவளின் செயலை அவளவன் உட்பட யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. பின் ரவிந்திரனிற்கு மருமகள் உரிமையுடன் தந்தை போல நினைத்து நடுவில் உட்கார்ந்ததில் புன்னகை அரும்பியது.
அவளவன் அவளை கண்டுக்கொள்ளாமல் இருப்பதற்காக போனை பார்த்திருந்தவன்.. இப்போது பாக்கெட்டில் போனை வைத்துவிட்டு.. மெல்லிய முறைப்புடன் பேன்ட் பாக்கெட்டில் கைவைத்தபடி.. முகத்தில் ‘ எவ்வளவு தைரியம் அங்க போயிருப்பாய்?. ‘ என்பது போல சிறு கோபத்தை முகத்தில் வெளிப்படுத்தினான். ஆனால் உள்ளுக்குள் சிறு குழந்தைபோல இருவரின் நடுவில் அமர்ந்திருக்கும் தன்னவளை அனைவர் முன்னே ரசித்து பார்க்க ஆரம்பித்தான். அவனவளும் அதனை கண்டுக்கொண்டு.. தனுவை பார்க்கவே இல்லை.
இருவரையும் பார்த்தவள்.. ” என்னால பண்ணமுடியும்.. ஆனா இப்பவே முக்கியமான முழுப்பொறுப்பும் எடுத்துக்க கொஞ்சம் பயமா இருக்கு. இது தனுவோட கனவு.. விருப்பம். நான் ஏதாவது தப்பு பண்ணிட்டா?.. ”
மேலும் பேசவிடாமல் எழிலரசியின் பதட்டத்தை போக்க அவளின் தனுவை போல அவனின் அப்பாவும்.. தன்னை குழந்தையாக பாவித்து அவளின் பதட்டத்தை போக்க கைபிடித்து..
” எழில் இப்பவே ரொம்ப யோசிக்காத மா. முயற்சி பண்ணிப்பாரு. போக போகதான் தெரியும். நானும், அப்பாவும்.. எப்பவும் கூடவே இருப்போம். வேந்தனும் உன்னை பார்த்துக் கொண்டுதான் இருப்பான். அவனிடம் நீ சரினு சொல்லி ஆரம்பி. ” ரவிந்திரன் கூறியபின்.. தன் அப்பா அருணாச்சலத்தை பார்க்க.. அவரும் நான் கூட இருப்பேன் என்பது போல தலையை தடவிக் கொடுத்தார்.
அவர்களின் தன்னம்பிக்கையூட்டும் பேச்சில் மேலும் தெளிந்தும்.. தன்னவனின் தன் மீதான எதிர்பார்ப்பு, விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.. என முடிவு எடுத்த பின் தன்னவனை பார்க்க.. அவன் இப்பொது வெளிப்படையாக அரசியை முறைத்துக் கொண்டுயிருந்தான்.
‘ இவன் எதுக்கு இப்ப இப்படி முறைக்கிறான்?. ‘ என தன்னை பார்த்தவள்.. அருகில் இருந்தவர்களின் கைபிடி மற்றும் தலை தடவல் ஞாபகம் வர.. ‘ ஓ.. தனு மாமாவுக்கு.. அப்பா, மாமனார் மேல பொறாமையா!.. ‘ புன்னகையுடன் வேந்தனின் அருகில் வந்து நின்றாள்.
அவன் முறைப்புடனே.. ” என்ன உங்க ஆலோசனை எல்லாம் முடிந்தா?.. ”
‘ ம் ‘ தலையசைக்க.
அவன் மேலும் முறைத்து.. ” முயல்குட்டி நீ மட்டும் இப்ப தனியா மாட்டின?.. நொடி நேரத்தில் ஒரு இடத்தில் பார்வையை பதித்து பின் கண்களை பார்த்து.. ” அவ்வளவுதான். ” தன்னவன் கூறியதின் அர்த்தம் புரிந்து..
” அதற்காக காத்திருக்கிறேன் தனுமாமா. ” மெல்லிய புன்னகையுடன் கூற..
அவனிற்கோ முறைப்பு மாறி.. ‘ அப்ப அப்ப இந்த கேடி முயல்குட்டிய மறந்து விட்டுறேன் பாரு. ‘
அவர்களிடம் போய் என்னைய வெறுப்பேற்றின தானே அதுக்காக ஏதாவது உன்னைய பண்ண வேண்டுமே.. ம்.. யோசித்தவன்.. ” அத்தம்மா உங்க குட்டிம்மாவிற்கு இனிமே காலையில் காபிக்கு பதிலா சத்துமாவு கஞ்சி கொடுங்க. ”
இவ்வளவு நேரம் புன்னகையுடன் இருந்தவள்.. அவனின் குட்டிம்மா என்ற அழைப்பு, அதைவிட அவளிற்கு பிடிக்காத சத்துமாவு கஞ்சி பேரை கேட்டவுடன் சுற்றும்புறம் மறந்து..
” ஏன் ஏன் நான் அந்த கஞ்சிய குடிகனும்?.. என்னாலயெல்லாம் முடியாது. ” அவனிடம் பாய்ந்தாள். அவளின் செய்கை சிலர் சிரிக்க, முடியல, சடங்கட பட என அவளை பார்த்தார்கள்.
புன்னகையுடன்.. ” குட்டிம்மா கொஞ்சம் இளைச்சமாதிரி இருக்கானு அத்தம்மா தான் சொன்னாங்க. அதான் காலையில் இதை குடித்தா நல்லாயிருக்கும் உனக்கு. “
எழிலரசியின் அம்மா, பாட்டியிடம் திரும்பி..” அத்தம்மா நீங்க தினமும் கொடுங்க. பாட்டி அரசி சரியா குடிக்கிறாளானு பார்ப்பது உங்க வேலை. அரசி ஒன்னுக்கு இரண்டு காபி தரேனு.. உங்க கூட டீல்போட்டு குடிக்கமா இருந்தா.. இத்தனை நாளா நீங்க இரண்டுபேரும் பண்ணியதை மாமாவிடம் சொல்லி விடுவேன். தினமும் எனக்கு போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும். ”
‘ மூவரையும்.. மூவரிடமும்.. தன் மகனிடமும் மாட்டிவிட.. மூவர் முகபாவனையை பார்த்து சிரிப்பை அடக்க பெரும்பாடு பட.. அவனின் சிரிப்பை பார்த்து.. மூவரும் அவனை ஒருசேர ஏன்?. ஏன் இப்படி?.. லுக்குவிட.. இப்போது அவன் வெளிப்படையாகவே சிரித்துவிட்டான். ‘
‘ இதனை பார்த்த மற்றவர்களில் இளமதிக்கு அவர்களின் வகுப்பில் நண்பர்களுடன் அவன் சிரிக்கும் நிகழ்வுகளும்.. வீட்டில் உள்ளவர்களுக்கு பல வருடங்கள் கழித்தான சிரிப்பை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. விஸ்வநாதன் இவ்வாறான மனம்விட்டு சிரிக்கும் வேந்தனை பார்த்ததே இல்லை. இன்பா, அருள் இருவரும் ஆசையுடன் பார்த்தனர். ஆனால் அவனின் அரசியோ அதனை மிகவும் ரசித்தாள் தான்.. ஆனால் கஞ்சி நினைக்கும் போது.. ‘ இவனை என்ன பண்ணலாம்.?. ‘