‘ ஹாலில் அமர்ந்தவன் ஸ்கைபில் வரவில்லை.. அதனால் அவர்கள் அனுப்பியதையும், கேட்கும் தகவல்கள் என்னவென்று ஆராய்ந்து கொண்டுயிருந்தான்.. ஆன்லைன் காண்பித்தவுடன் அழைப்பு விடுத்து அவர்களின் சந்தேகங்களை கேட்டு.. பின் தெளிவுபடுத்தி என அவர்களின் என அவர்களின் உரையாடல் அறைமணிநேரம் சென்றுயிருந்தது. ‘
புன்னகையுடன்.. ” அப்புறம் அண்ணா அங்க என்ன ஸ்பெசல் இன்னைக்கு?.. ” புரியாத பார்வை செலுத்த..
” இல்ல.. ஒரு டீ குடித்து வருவதற்கு உள்ளேயே ஒரு அதிர்ச்சிய கொடுக்கும் ஆள் நீங்க. இப்ப ஒருநாள் ஆகிடுச்சு.. அதான் ஏதாவது அதிரடியா பண்ணியிருப்பீங்களோனு கேட்டேன். ”
அரசிக்காக தான் செய்ததை அவள் கூறிப்பிடுகிறாள் என புரிந்து.. புன்னகையுடன்.. ” அதிரடியா ஒன்னும் பண்ணல நிஷா.. இரண்டு நாள் கழித்து பண்ணலாம் இருந்ததை.. இன்னைக்கே ஆரம்பிக்க வேண்டியதாகி விட்டது. ” அரசியை பற்றி கூறினான்.
” அப்ப ஒருகல்லில் பல வேலைய சத்தமில்லாம பண்ணியிருங்கிங்க. ”
” என்னடி சொல்லுற புரியும்படியா சொல்லு. ” அனுவிற்கும் , ராகினிக்கும் குழப்ப..
” இல்ல அனு.. அண்ணா இப்பவே அண்ணா.. தான் ஒரு பிஸ்னஸ் மேன் என்று காண்பிக்கிறார். அண்ணி வந்தா தினமும் பார்க்கலாம், அவங்களுங்கு அனுபவமும் கிடைக்கும், இவர் இந்த வேலையையும் பிரச்சனை இல்லாம பார்த்துக் கொள்ளலாம். அங்கு இருந்தும் இந்த வேலைசெய்வதால் ஹோட்டலில் இவர் பார்க்கும் வேலைய அண்ணி செய்தால்.. அப்பாக்கு கல்யாண வேலைய பார்க்க உதவியது போலவும் இருக்கும். ” அப்படிதானே என்பது போல பார்க்க..
புன்னகையுடன்.. ” ம். அரசி மாதிரி எல்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்க. நான் தான்.. இனி உங்களிடம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் போல. சரி சரி நேரம் ஆச்சு காலை 10 மணிக்கு பார்க்கலாம். “
” இருங்க அண்ணா.. மதியம் ஏன் நீங்க கால் எடுக்கல?. ”
அப்படியா என நினைத்தவன்.. அருகில் இருந்ததை போன் பார்த்தவன் ஓ.. மறந்தே போய்ட்டனா?. ” அரசி தூங்கும் போதும் சைலன்டில் போட்டேன்.. மறந்துட்டேன். சரி எதுக்கு நிறைய தடவை கால் பண்ணியிருக்கிங்க?.. ”
” அண்ணா.. அண்ணி எப்போதும் அனுப்புற ப்ளவர் பொக்கே இன்னைக்கும் வந்தது. அதான் என்ன பண்ணும்?. கேட்க கால் பண்ணினோம். நீங்க எடுக்கல. பின்ன நாங்களே.. நீங்க இதை தான் பண்ண சொல்லியிருப்பீங்கனு.. அப்பாவிடம் வீட்டு முகவரி வாங்கி.. அங்க அனுப்ப சொல்லிவிட்டோம். ”
தன்னை அம்மாவும், வசுவும் புரிந்துக் கொள்ளவில்லை என்ற வருத்தம் மறைந்தது. தன் அரசியால்.. தனக்கு கிடைத்துயிருக்கும் புது தங்கைகள்.. தான் இவ்வாறு தான் செய்வேன் என அவர்கள் யூகித்ததை நினைத்து மனம் பரவசம் அடைந்ததும்.
” ம்.. தாங்க்ஸ். ”
அவனையும் அவன் முகத்தில் வந்து சென்ற உணர்வுகளை கவனித்தவர்கள்.. வீட்டில் அவர் வருந்தும் படி ஏதோ நடந்துயிருக்கிறது.
அவனை மாற்றும் விதமாக.. ” என்ன அண்ணா.. மேரேஜ் முடிவு செய்த பிறகு முததடவை அங்க இருக்கிங்க. அண்ணிய இன்னைக்கு எங்காவது கூட்டிட்டு போனிங்களா?.. ”
சிரிப்புடன்.. ” அதை ஏன் கேட்கிறீங்க ராகினி!. மதியம் அரசி தூங்கினப்பவே ஆபிஸ் வேல பார்த்ததினால.. இங்க கிளைமேட் நல்லா இருந்தது சரினு.. லாங் டிரைவ் போலனு தீடிர்னு முடிவு எடுத்து.. அரசி காரை ஓட்ட.. நாங்க போயிட்டு எங்கையும் இறங்காம, எதையும் பார்க்காம தூங்கிட்டு வந்தேன். ”
அவர்கள் சிரிப்பை உதித்து.. பின் ” பியான்ஸிய வெளிய கூப்பிட்டு போய்.. தூங்கிட்டு வந்த ஒருத்தரை .. இப்பதான் முதல்முறையா பார்க்குறோம். அண்ணி ஒன்னும் சொல்லலையா?. “
” ம்.. என்னைய பெருந்தன்மையா தூக்கவிட்டதே உங்க அண்ணிதான். ”
அரசிய பற்றி ஓரளவிற்கு கணித்துயிருப்பதால் ” ஓ.. அப்படியா நீங்க அவங்கள ஹோட்டல டையடா இருக்காங்கனு தூங்கவிட்டீங்கல. அதுபோல உங்களையும் தூங்கவிட்டு இருப்பாங்க. இனி இந்த மாதிரி தீடிர்னு முடிவு பண்ணாம.. நல்லா பிளான் பண்ணி வெளிய போய்யிட்டு வாங்க. ” சிரிப்புடன் சொல்ல.. அவளுடன் மற்ற இருவரும் சிரிக்க..
” சரிங்க மேடங்களா.. உங்க அட்வைஸ்க்கு ரொம்ப நன்றி. காலை பார்க்கலாம். ” தலையசைப்புடன் இருபக்கமும் ஸ்கைப்பில் இருந்து புன்னகையுடன் வெளிவந்தனர்.
இவர்களின் உரையாடலை கேட்ட சித்ராவிற்கு.. அவனின் சென்னை வேலையில் உள்ள பணிகளை.. தனக்கு கிடைக்கும் நேரங்களில் எப்படியேனும் அவன் முடித்துக் கொள்வான் போல என அதை பற்றிய கவலை ஒய்ந்தது. ஆனாலும் எழிலரசியிடம் அவன் காட்டும் அக்கறையில் சற்று அதிக படியோ என்று உணர்கிறார். எதற்காக போன் சைலன்டில் போட வேண்டும். என்னிடம் தனியாக மதியம் வரவில்லை கூற வேண்டும் என்ற அக்கறை இல்லையா.. நான் கால் செய்வேன் என்ற நம்பிக்கை இல்லையா. அப்பாவிடம் கூறி என்னிடம் தகவல் வந்ததுதான்.. ஆனால் சற்று தாமதமாக. இப்போது வந்தவுடனும் எதுவும் பேசவில்லை. சென்னையில் தனியாக செய்தை இங்கும் செய்கிறான்.. மகனின் மேல் அவரின் வருத்தம் கூடிக்கொண்டே சென்றது.
‘ இதற்கு அவன் என்ன செய்ய?.. பல வருடங்களாக சிலவற்றை செய்ய.. யார் உதவியும் இல்லாமல் தனியாகவே செய்து பழக்கம் ஆகிவிட்டது. அதிலும் கடந்த ஒருமாதம் அவனின் மனநிம்மதி என்பது.. தன் முயல்குட்டி தனக்காக அனுப்பிய பொருட்களை உபயோகப்படுத்தும் போது தான். ‘
வசுந்தராவிற்கு.. இவர்களும் அண்ணாவுடன் சேர்ந்து அரசியை தலையில் தூக்கி வைத்து ஆடுவது சற்றும் பிடிக்கவில்லை. அவளின் மீது பொறாமை கூட்டிக் கொண்டே என்றது.
வசுந்தாராவை போவே சிலர் அரசி கடை பொறுப்பை ஏற்றதை கேட்டதில் இருந்து பொறாமையை மனதில் வைத்துயிருக்க முடியாமல் வெளிப்படையாகவே புலம்பி கொண்டுயிருந்தனர்.
“ தேவகி அக்கா.. நம்ம கதிரவன் முதன்முதலா தனியா அந்த கடை, ஃபேக்டரி கட்டும் பொறுப்பை செய்யப்போறானு நேற்று சந்தோஷ பட்டோம். இப்ப அதை முழுவதும் இந்த எழில்குட்டிக்கு சொல்லுறபடி தான் இவன் நடந்துக் கொள்ள வேண்டும் போல. இந்த குட்டி கையில் நம்ம பிள்ளை காசும் வாங்கனுமா?. கல்யாணம் பண்ண வேண்டியவன பண்ணல.. ஆனா இப்ப அதிகாரம் பண்ணக்க போகுதா?.. அதவிட இந்த அண்ணாவும் இப்பவே அந்த கடையில் பொறுப்பு ஏற்றதை பற்றி சொல்லவே இல்லயே அக்கா. “
” ம்.. நானும் அண்ணா செய்ததைதான் நினைத்தேன் ராதா. இந்நேரம் வரை ஒன்னும் சொல்லவில்ல. கதிர் வந்து ஸ்விட்னு சொல்லி கொடுத்து.. அது ஏன்?. எதற்குனு?. சொல்லிதான் தெரியுது. கல்யாணத்திற்கு முன்பே இவர் இப்படி நடந்துகிறார். கல்யாணத்திற்கு பிறகு என்னவெல்லாம் நடக்குமோ?. “
” ஃபேக்டரி கட்ட அண்ணா காசு கொடுக்க போதா சொல்லுச்சு.. ஏற்கனவே இன்பா மாப்பிள்ளை சொந்தமா ஆரம்பித்த மில்லில் பாதி என் தங்கைக்கு தான் எல்லாம் சொல்லி இரண்டு பேர் பெயரில்தான் இருக்கு. இதுல நாம்ம என்ன சொன்னாலும் அருளும், இளமதியும் எதிலையும் தலையிடமாட்டாங்க.. இல்லையென்றால் நேற்று அங்குயிருந்து வந்தவங்க சொல்லியிருப்பாங்க. அதனால இனிமே நம்ம பையன், பொண்ணுக்கு வரவேண்டிய பணம், சொத்தில் ரொம்ப ஜாக்கிரத்தையா இருக்கனும். ”
” ஆமாம் அக்கா சொல்வதும் சரிதான். மேகாவ இனி அடிக்கடி வீட்டுக்கு போய்யிட்டு அண்ணியோட சேர்ந்து வீட்டு மருமகளா கல்யாண வேலைய பார்க்க போக சொல்லியும், தான் அந்த குட்டிக்கு அண்ணி.. என்ற மாதிரி கொஞ்சம் நடந்துக்க சொல்லனும். அப்படியே என்னவெல்லாம் பண்ணுறாங்கனு தெரிந்துக் கொள்ள சொல்லனும். ”
” ம்.. இப்படியே பண்ணலாம். நான் இப்ப கொஞ்ச நாளாத கவனித்தேன் இன்பா மாப்பிள்ளை.. மேகாவுடன் முன்னமாதிரி பேசி நான் பார்க்கல.. ஏன் மேகாவை கண்டுகொண்டதாவே தெரியல. எப்ப பார்த்தாலும் ஒன்னு அந்த குட்டி கூட.. இல்ல அந்த தம்பியும் அவங்க நண்பர்கள் கூடவே தான் இருக்காரு. சாதாரணமா பேசி கூட பார்க்கல.
நம்ம பசங்க யாரும் பேசமாட்டாங்க தான். ஆனா இந்த இரண்டும் பேரும் எப்போதும் ஏதாவது பேசி, சிரிச்சுக்கிட்டு தான் இருக்காங்க. அவங்கள பார்த்தும் கூட.. இவங்க பேசாம தான் இருக்காங்க. அவங்க பேசாட்டியும் பரவாயில்ல.. மேகாவை வேலைக்கு போகும் வரை அடிக்கடி போக சொல்லனும். அந்த குட்டி வெளிய போய் நம்ம பையனை அதிகாரம் பண்ணினா.. பொண்ணவிட்டு வீட்டுக்குள்ள நாம்ம பண்ண வைப்போம். ” இருவரும் மாறிமாறி பேசி.. அதுதான் சரி என தலையசைத்து மேகாவை பார்க்க சென்றனர்.
இவர்களை போலவே வேந்தனின் மாமா கணேஷம் இதை தெரிந்துக் கொண்டதில் இருந்தே ஒருநிலையில் இல்லை. வேறு குடும்பத்தில் இருந்து திருமணம் என்பதையே இன்னும் ஏற்றுக் கொள்ளாதவர்.. இப்போது புதிகாக ஒன்று. கார்த்திக் கடையில் பேசுவதை கேட்டதில் புரிந்தது.. வேந்தனின் ஹோட்டல் பொறுப்பில் கூட எழிலிக்கும் அனைவர் முன்பும் எதையும் கேட்க, அதிகாரம் செய்ய முடியும் என்று தெரிகிறது.
இவையெல்லாம் தன் மகள்களில் ஒருவருக்கு வர வேண்டியது. இப்படி செய்துவிட்டானே என.. வேந்தனின் மீது ஏக கோபத்திலும், எழிலரசி மீது இன்னும் கோபம், பிடித்தமின்மையில் உள்ளார். இவர் அந்த கோபத்தை வீட்டில் காண்பித்து.. இதை பற்றிய பேசு அவரின் மனைவி ராஜி மூலம்.. பெங்களூரில் இருக்கும் நந்தினி வரை சென்றது.
ஆனால் சிலரின் பிடித்தமின்மையின் இந்த பேச்சிற்கு உரியவர்கள் இன்று தன் இணைகளுடன் கழித்த நிமிடங்கள், பேச்சுகள், வருத்தங்கள், சமாதானம், முத்த பரிமாற்றங்களை எண்ணியவாறே தங்கள் வேலைகளை செய்து கொண்டுயிருந்தனர்.
இரவு உணவு முடித்து ரவிந்திரன், சித்ரா, வசு அவர்களுடன் கமலேஷ் வீட்டின் முன்பக்க திண்ணையில் அமர்ந்து இருந்தார்கள்.
” வசு நீ போய் அண்ணா வரச்சொல்லிட்டு வா. ” எதுக்கு?.. என்பது போல பார்க்க..
” அவனிடம் கல்யாண வேலைய பற்றி பேசனும்.. இன்னும் அவன் சாப்பிடல வேற இல்ல. நேரம் ஆகுதுல. ”
” அப்பா அண்ணா நீங்க வருவதற்கு முன்னே தேவையான சாப்பாட்டை எடுத்துட்டு மேல்மாடிக்கு போய்யிட்டாங்க. ”
அவள் சொல்லிய விதத்தில் ‘ நம்முடன் சேர்ந்து சாப்பிடவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை ‘ என வேந்தனை குறை சொல்வது போலவும் இருந்தது.
சரி என தலையசைத்து.. அவரே வேந்தனிற்கு கால் செய்து அவனை கீழ் அழைத்தார். சிறிதுநேரத்தில் கீழ்வந்தவன் கமலேஷ் வரவேற்று அவனின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
” வேந்தா மருமகளுக்கு வேலை, இடம் எப்படியிருக்கா?. அறையில் வேற ஏதாவது வேண்டுமா?. ”
” இன்னைக்கு நானும் கூட இருந்ததால.. ஒன்னும் தெரிந்துயிருக்காது ப்பா. அதனால இன்னைக்கு ஒன்னும் சொல்ல. நாளைக்கு தனியா இருக்கும்போது தான் தெரியும். ”
இவ்வளவு நேரமும் அண்ணா.. தன் மற்றும் அம்மாவிடம் தன்னுடைய தேவைக்காக மட்டும் பேசி.. அவர் வேலையை இவ்வளவு நேரம் பார்த்திருக்க.. கல்யாண வேலை என்று கூறி அழைத்து அப்பாவும் எழிலின் இன்றைய நாளை பற்றி கேட்கவும். வசுவிற்கு ஏனோ வீட்டில் திருப்ப திருப்ப அனைவரும்.. எழிலரசி எழிலரசி கேட்டதன் கடுப்பில்..
” ஏன் அப்பா அங்க கட்டில், மெத்தையெல்லாம் இருக்கல?. ”
ஏன்?. என்பது போல ரவிந்திரன் பார்க்க.. ” இல்லப்பா அண்ணா அவங்க கடையில் வேலை செய்யும் போது தூங்கியதா.. அவங்க சென்னை ஆபிஸ் இருப்பவர்களிடம் கூறும்போது எனக்கு கேட்டது.. அதான் இதெல்லாம் இருந்தா அவங்களுக்கு இன்னும் வசதியா இருக்கும் இல்ல அதான் கேட்டேன். ” நக்கல் கலந்த குரலில் கூற..
‘ அவர்களிடம் தூங்கினார்கள்.. அப்போது அவர்கள் நிம்மதியாக தூங்க போன் சைலன்ட்டில் வைத்திருந்ததை கேட்டும், அம்மா புலப்பியது எல்லாம் சேர்ந்து அவளை இவ்வாறு பேச வைத்தது. ‘
‘ ஆனால் அவள் எந்த செயலையும் மேலோட்டமாக பார்த்தும், பேசியதை கேட்டும் இவ்வாறு பேசி.. தன் அண்ணணின் வருத்தம், கோபத்தை தன் ஒவ்வொரு செயலிலும் அதிகபடித்திக் கொண்டுயிருக்கிறோம் என்று அறியவில்லை. ‘
” தாரா என்ன பேசுறனு?. யாரை?. யார் முன்னால் பேசுகிறோம்?. எல்லாம் புரிந்துதான் பேசுறியா?.. ” அவனிற்கு தன் வருங்கால மனைவியின் பேச்சு சுத்தமாக பிடிக்காமல் கோபமாக கேட்க..
அப்பா, அண்ணாவை பார்க்க வெளிப்படையான சிறு கோபம் தெரிந்தது. ஆனால் அதை ஏற்கும் மனநிலையில் அவள் இல்லை. எழிலரசிக்கு எல்லோரும் (அதில் தன் வருங்கால கணவரும் அடக்கம் ) இப்போதே அதிகம் முக்கியம் கொடுப்பதும்.. தன் அப்பா, அண்ணா முன்னிலையில் தன்னை கமலேஷ் கோபமாக கேட்க..
” நான் என்ன தப்பா கேட்டேன்?. எதுக்கு வந்தாங்களோ.. அதை பார்க்காம.. தூங்கிட்டு இருந்துயிருக்காங்க. அண்ணா வேற அவங்க தூக்கம் கெடக்கூடாதுனு.. போனை சைலன்ட்டில் வைத்து.. யார் கால் செய்தும் கால் எடுக்கல. அதான் இன்னும் வசதி பண்ணிகொடுத்தா வீட்டில் இருப்பது போலவே தூங்குவாங்கள. ”
‘ வசுந்தரா பேச பேச வேந்தனிற்கு கோபம் அதிகம் வரதான் செய்து.. ‘ பார்ப்போம் இன்னும் என்ன சொல்கிறாள்? ‘ என்று தன்னை கட்டுபடுத்திக் கொண்டு.. அவளையும்.. அவளின் பேச்சை ஏற்பதுபோல அமைதியாக இருந்த அம்மாவையும் பார்த்திருந்தான். ‘
” தாரா உன் வயசுக்கு மீறி ரொம்பவே யோசிக்கிற.. பேசுற. நேற்று காலையில் பூமிபூஜையிலிருந்து நிச்சியம் முடிந்து சாய்ந்திரம் வரைக்கும் பெரும்பாலும் நின்றுயிருந்த அசதி, காலையில்.. இதோ இவனால சீக்கிரம் எழுந்ததது.. எல்லாம் சேர்த்து டையடா இருந்து இருப்பாங்க. அதனால தூங்கியிருப்பாங்க.
நேற்று சாய்ந்திரம் நடந்தத விஸ்வா அண்ணா சொன்னாங்க. வேந்தன் எழில் இரண்டுபேரும் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு.. எழில் பொறுப்பை பற்றி பொறுமையா எல்லோருக்கும் சொல்லி புரிய வைத்து பண்ண வேண்டியதை.. தேவையே இல்லாதத பேசி இப்படி அவசரமா சொல்ல வைத்து, உடனே அதை செய்யும் அளவிற்கு கொண்டு வந்துயிருக்கிங்க. “
” நீ ஒன்னு மறுந்தட்ட தாரா. ஹோட்டலுக்கு எழிலரசி ஒன்னும் வந்த வேலைய செய்ய.. காசு வாங்கிட்டு செய்யும் வேலைய பார்க்க வரல. இப்ப 50 பேருக்கும், இனிமேல் 500 பேருக்கு மேல காசு கொடுக்கற முதலாளியா வந்துயிருக்காங்க. முதலாளியோட உடம்பு நல்லா இருந்தா தான்.. எல்லாமே செய்ய முடியும்.. எல்லோருக்கும் வேலையும் கூட. உணவகத்திலேயே எழில் வீட்டில் படுப்பதுபோல.. படுத்து தூங்க வேண்டிய அவசியம் வந்தா.. யார் சொல்லி செய்ய வேண்டிய அவசியம் இல்ல.. சொல்லாமலே மாமாவும், வேந்தனும் பண்ணி கொடுப்பாங்க. “
” நானும் நேற்று நீ.. நந்தினியை பார்த்து பேசியதில் இருந்து கவனிச்சுட்டு தான் இருந்தேன். உன் நடவடிக்கையில் நிறைய மாற்றம் இருக்கு. உன்னால வேற ஒருவர் நடவடிக்கையில் கூட மாற்றம் வந்து விடும்போல. ” அத்தையை ஒரு பார்வை பார்த்தும் பார்க்காமல் கூற.. இதனை ஆண்கள் கவனித்தனர்.
” நீ கல்யாணமாகி எங்க வீட்டிற்கு வந்தா.. இல்ல இப்போதே வைத்துக்கொள்.. நீ எழில் இடத்திலும், நந்தினி உன் இடத்திலும் இருப்பா. உறுதி அன்றிலிருந்து இப்ப வரை.. நீ நடந்துக்கொள்வது போல நந்தினி பண்ணினா.. நீ எழில் மாதிரி அமைதியா நடந்துயிருப்ப. கண்டிப்பா இருக்கமாட்ட. நந்தினியும் நீயும் இந்நேரம் பெரிய பஞ்சாயத்தையே கூட்டியிருப்பீங்க. கூடவே எனக்கும் BP ஏற வைத்துயிருப்பீங்க. “
” ஆனா எழிலும், எழில் வேந்தனிடம் எதுவும் குறையா சொல்லாம அமைதியா இருப்பதால.. அதை நீ சாதகமாக பயன்படுத்தி அதிகம் பேசுற. உன்னைய சின்னுபொண்ணு சொன்னா மட்டும் கோபப்படுறேல.. அப்படினா இனிமேல நீ எழில பற்றி பேசும் போது ஒன்னுக்கு நாலுதடவை யோசித்து பேசி மெச்சூரிடி உள்ள பொண்ணா நடந்துக்க. சரியா. ” சற்று கோபமாகவே கூறியவன் மாமா, வேந்தனை பார்க்க அவர்கள் வருத்தம், கவலையான முகத்துடன் இருந்தார்கள். அத்தையை பார்க்கவில்லை.
” சாரி மாமா. ”
என்ன அவள் தவறாக பேசியிருந்தாலும்.. மகளை அவர் முன்னே கோபமாக பேசியாதால் வருத்தம் இருக்கதானே செய்யும்.
” நீ எதுக்கு சாரி சொல்லுறப்பா. வசு பேசியது, பேசும் முறை இரண்டும் தப்புதான். எதையும் ஆராயந்து பேசனும்.. இல்லையா அமைதியா இருக்கும். நமக்கு தோன்றுவத பேசக்கூடாது. நீ எழில் பற்றி சரியாதான் சொன்ன. அதே மாதிரி வேந்தன் சைலன்ட்டில் வைப்பதற்கு முன் என்கிட்ட சொல்லிட்டுதான் வைத்தான்.
அவன் இந்த ஊரில் இருக்கானு தெரியும்.. அவன் போன் எடுக்கவில்லை என்றால்.. அடுத்து எனக்கு தான் கால் பண்ணுவாங்க. ஏன் வசு?. அவங்க பேசுனதை கேட்டேனு சொல்லுறியே.. அவங்களும் ஒருவிஷயத்திற்காக வேந்தன் போன் எடுக்கலனு.. உடனே எனக்குதான் கால் செய்து.. வேண்டும் என்ற பதில வாங்கிக்கொண்டாங்க. “
” அதுமாதிரி நமக்கு என்ன தேவையோ அதை தெரிந்துக்கொண்டால் போதும். அவங்களே நம்மிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ” மனைவியை பார்த்துக் கூறினார். வேந்தனுக்கு கால் செய்தவர் எடுக்கவில்லை எனில்.. அவருக்கு கால் செய்து தெரிந்துயிருக்க வேண்டும். ஆனால் சித்ரா செய்யவில்லை.
‘ வேந்தன் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. ஏன் தன்னவளிற்காக தான் செய்த சிறு சிறு விஷயத்தையும் பெரிதுபடுத்தி பேசுகிறார்கள் என்றுயிருந்தது.
ம்.. வேந்தா இதுக்கே இப்படி?. மற்றவைகள் தெரிந்தா?.. தெரிய வரும்போது பார்த்துக்கொள்ளாம் ‘ மனதில் நினைக்க.. கண்கள்அங்கு நடப்பதை பார்த்தது.. வசுந்தரா கமலேஷ் பேச்சில் கோபம் கொண்டு உள்ளே சொல்ல.. அவளின் பின்னால் அம்மாவும் சென்றுவிட்டார்.
‘ மகனிற்கு மனைவி என்பவள் வரும்போது சிலவற்றை ஏற்க சிலகாலம் பிடிக்கும். நல்ல மனநிலையில் இருந்தவரை.. வேந்தனின் அதிகபடியான அக்கறை, செயல்.. அதுபோலவே அரசியின் செயல் என்று எல்லாம் புதுவிதமாக இருப்பதாலும், மகள் சற்று குழப்பி வைத்து அவரை இருமனநிலையில் யோசிக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளாள். அதனால் மகள் சொல்வதில் உண்மை இருக்கும்மோ?. இருக்கிறது.. என்று அவளை ஆதரிக்கும் அளவிற்கு சென்று அவளுடனே ஒன்றும் கூறவதற்கு இல்லை என சென்றுவிட்டார். ‘
சென்றவர்களை பார்த்து மூவரும் பெருமூச்சுடன் மற்றவர்களை பார்க்க.. பார்த்தவுடன் சிரித்துவிட்டனர்.
” என்ன பசங்களா இப்பவே இப்படி பெருமுச்சுவிடுறீங்க. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. இதுபோல நீங்க சமாளிக்க வேண்டியது நிறைய இருக்கு. கமல் நீ வசுக்கிட்ட கொஞ்சம் அமைதியா பேச கத்துக்கோ. வேண்ணா வேந்தனிடம் டிரைனிங் எடுத்துக்கோ. ”
அவனோ எதுக்கு?. ஏன்?. என்பது போல புரியாமல் பார்க்க..
” வசு உன் பேச்சு கேட்க வேண்டும் என்றால்.. இப்படி சத்தமா பேசினால் வேலைக்கு ஆகாது. வேந்தன் மாதிரி அமைதியா பேசி.. காரியம் சாதிக்கனும். ” புன்னகையுடன் கூற..
” மாமா உங்க பொண்ணும் ஒன்னும் எழிலரசி கிடையாது. வேந்தன் அமைதியா இல்ல கோபமாவே ஆனா புரியும்படியா சொன்னா போதும் சரினு ஏற்றுக் கொள்வாங்க. ஆனா உங்க பொண்ணு எவ்வளவு அமைதியா.. சிரித்துக் கொண்டே சொன்னாகூட.. அவ என்ன சொல்றாளோ?. அதான் சரினு நிப்பா. அதனால எந்த டிரைனிங் வேண்ணா.
நீங்க எப்படி யார் என்ன சொன்னாலும்.. எல்லோருக்கும் சரினு தலையாட்டிவிட்டு.. உங்களுக்கு எது சரினுபடுதோ அதை சொல்றிங்க, செய்றிங்க அதுபோல இருந்துட்டு போறேன். ”
‘ தன் அப்பாவை நன்றாக புரிந்து வைத்து அதை தகுந்த நேரத்தில் கூறியவனிற்கு புன்னகையுடன் வேந்தன் ஹைபை!. கொடுக்க.
ரவிந்திரன் ம்.. பையன் நம்ம ராஐதந்திரத்தை கண்டுபிடிச்சுவிட்டானே!.. ஆனா அதை செய்ய பல சோதனைகளை கடந்து வரவேண்டுமே நீ!. ‘ நினைப்புடன் புன்னகையுடன் பார்த்தார் தன் தங்கை மகனை.