” சித்ரா அண்ணி நல்லாயிருக்கிங்களா?..”
மெல்லிய புன்னகையுடன்.. ” நல்லாயிருக்கேன் மாலதி அண்ணி. ராஜாத்தி அக்கா வீட்டுக்கு போய் இருப்பதா.. சாந்தி அக்கா சொன்னாங்க. ராஜாத்தி அக்காக்கு கர்ப்பபை ஆப்ரேஷன் செய்தது.. இப்ப நல்ல நடக்க ஆரம்பித்துவிட்டாங்க தானே?. ”
” ம். அவங்க வேலைய அவங்களா செய்யும் அளவிற்கு வந்துட்டாங்க. ” தலைசைப்புடன் சித்ரா வேலை செய்ய.. ” சரி அண்ணி நீங்க என்ன இங்க சமைத்துக் கொண்டுயிருக்கீங்க?. சாந்தி அண்ணி எங்க?. ”
” மாமாவும், அத்தையும் ஊரில் கொஞ்சம் நாள் இருக்கோம் என்று கிளம்பியதால்.. அவங்கல பார்க்க வந்தேன். வீட்டல போய் தனியா இருக்கனும் என்று வேந்தன் வர வரவைக்கும்.. அக்கா இங்கயே இருக்க சொன்னாங்க. அவரும், ஈஸ்வரும் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே சாப்பிட கிளம்பிட்டாங்க. அதான் நானும் சமைத்தேன். அக்கா மாடியில் வத்தல் காய வைத்துயிருந்தாகளா.. மழை வர மாதிரி இருக்குனு அதை எடுக்க போயிருக்காங்க. ” சித்ரா உணவை டேபிள் வைக்க ஆரம்பித்த நேரம் அங்கு வந்த காவ்யா, வித்யாவை புன்னகைத்தார். காவ்யா அவருடன் இணைந்துக்கொண்டாள்.
” ம் சரி அண்ணி. அப்புறம் அண்ணி வேந்தன் தம்பியும் , எழிலரசி பொண்ணும் நல்லா பேசி பழகிட்டாங்க போல.” புரியாமல் சித்ரா அவரை பார்க்க..
” அது வந்து அண்ணி நாங்க காலையில் பிரகதாம்பாள் கோயிலுக்கு போனோம். அங்க தம்பியையும், அந்த பொண்ணையும் பார்த்தோம். அவங்கள பார்த்தா இப்ப தான் பழக ஆரம்பித்தது போலவே இல்ல அண்ணி. ” அடுத்து ஏதோ கூற வருவதற்குள்..
“இதில் என்ன அண்ணி ஆச்சரியம்!. அவங்களுக்கு உறுதி செய்து ஒருமாதம் ஆச்சு போன், வீடியோ கால் இருக்கு. அதில் பழகியிருப்பாங்க. நீங்க கோயிலில் பார்த்தது இரண்டு பேருக்கும் பிடித்த கோயில். அதனால் ஏதாவது முதலில் ஆரம்பிக்கும் போது அங்கு வந்துவிட்டு தான் எதையும் செய்வாங்க. அந்த சந்தோஷத்தில் நல்லா பேசிட்டு வந்துயிருப்பாங்க. அத நீங்க பார்த்துயிருப்பீங்க. ” காவ்யாவிற்கு அவர்கள் முதன்முதலில் கோயில் பார்த்ததை பற்றி அவள் அம்மாவிற்கு கூட தெரியக்கூடாது என கூறியிருக்கிறார்கள்.
” அதான் நேற்றே எல்லாம் ஆரம்பித்தாச்சே. இன்னைக்கு என்ன அத்தை ஆரம்பிக்க போறாங்க?. ”
காவ்யா, அவளின் அம்மா, தங்கைதான் இருவரையும் கோயிலில் பார்த்தது. காவியாவிற்கு இருவரும் சேர்ந்து காலையிலேயே அர்ச்சனை செய்யும் அளவிற்கு என்ன வேலை?. எனகுழப்பமும், சந்தேகமாக பார்க்க.. மற்ற இருவரும் நல்ல வாழ்க்கை, வரன் போய்விட்டதே பொறாமையுடன் பார்த்தனர்.
சித்ராவிற்கு என்ன கூறுவது தெரியவில்லை?. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்றும் கவலை. கல்யாணத்திற்கு முன்பே கடையின் பொறுப்பை ஏற்பது.. இருவரும் தினமும் பார்ப்பது.. என பல இருக்கிறது. நாம் கூறியதை அப்பா, மகன் கேட்கவில்லை. இன்றே ஆரம்பித்துவிட்டது.. இன்னும் பல இருக்கிறது. ம்.. எழிலரசி வீட்டிலேயே கவலை கொள்ளாமல்.. அவர்களுக்காக சமாளிக்கலாம் என்று இருக்கும் போது.. நாமும் அவ்வாறே இருக்க வேண்டும்.
” காவ்யா.. எழிலரசி தான் இனி இரண்டு கடை, ஃபேக்டரி பொறுப்பை பார்க்க போகுது. வேந்தனுக்கு 2மாதம் சென்னை ஆபிஸ் வேலை இருப்பதால்.. வேந்தன் அரசிய இப்பவே அவற்றை பார்க்க சொல்லிட்டான். அவனும், மாமாவும் அப்ப அப்ப பார்த்துக் கொள்வாங்க. அதான் காலையில் கோயில் வந்துட்டு உணவகத்திற்கு போயிருக்காங்க. அங்க கீழ இருக்க ஆபிஸில் தான் இப்போதைக்கு எழிலரசி சம்பந்தானது ஆபிஸாவும்.. மேல உணகவத்திற்கான ஆபிஸ்சா இருக்க போகுது. ”
இருவர் அதிர்ச்சியாக கேட்க.. காவியாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருவருக்கும் ஒருபையன் தான். கல்யாணத்திற்கு முன்பே என்பது.. எவ்வளவு பெரிய முடிவு. மருமகளாக தனக்கு சொல்லப்படவில்லை என்ற கோபம் வந்துவிட..
” இந்த முடிவ.. எப்ப அத்த எடுத்ததது?. மாமாவிற்கு தெரியும்மா?.. “
” ம்மா.. ம்மா ” அழைத்தபடி ஈஸ்வர், சித்தப்பா ரவிந்திரனுடன் வந்தான்.
” இதோ வரேன் ஈஸ்வர் ” இவர்களின் பேச்சை கேட்டவாறு உள்ளிருந்த சாந்தி மகனின் அழைப்பிற்கு வெளியே வர ரவியை பார்த்தவர்.. ” வாங்க தம்பி ” புன்னகையுடன் வரவேற்று அழைத்த தன் மகனை பார்த்தார்.
அம்மாவின் கையில் ஒரு பாக்ஸ் கொடுத்தவன்.. ” ம்மா இது இனிப்பகத்தில் வைக்கப்போற ஸ்விட்டில் ஒரு ஸ்விட் டிரையல் செய்தாங்க. நாங்க சாப்பிட்டோம். இத நீங்க சாப்பிடும் போது.. சாப்பிட்டு எப்படி இருக்கு சொல்லுங்க?. ” மற்றவர்களை புன்னகைத்து தன் அறைக்கு சென்றான்.
அவனுடனே காவ்யா சற்று கோபமாக சென்றாள். இதை ரவியும் கவனித்தார். தேவையென்றால் தன்னிடம் வரும் என்பதால்.. ஏன் என்று யாரிடமும் கேட்கவில்லை. அவர் சாப்பிட்டு சிறிது ஓய்வு எடுக்க வேண்டி.. உள் நுழைந்தவுடனே நேராக சாப்பிட வந்துவிட்டார்.
” மாமா உங்களுக்கு ஏற்கனவே எழிலரசி இன்னைக்கு கடை பொறுப்பை ஏற்று பார்த்துக்கொள்வது பற்றி தெரியும்மா?.. ” ஈஸ்வர் அறையில் உடைமாற்றியவாறு காவ்யா கூறியதை கேட்டுக் கொண்டுயிருந்தான்.
” ம்.. பொறுப்பை பார்த்துக் கொள்வது பற்றி தெரியும்.. ஆனால் இப்போலிருந்தே என்பது நேற்று மாலை தான்.. வேந்தன் சித்தப்பாவிற்கு சொல்லியிருக்கான். எனக்கு இரவு கால் பண்ணி சொன்னான். ”
” இதை பற்றி நீங்க ஏன் என்னிடம் சொல்லல?.. “ கோபமாக கேட்க.
ஈஸ்வர் குரலில் மாற்றத்தை உணர்ந்து.. காவ்யாவிற்கு பதில் கூறமால் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு பின் வெளியே செல்ல தயார்நிலையில் இருக்க.. காவ்யாவிற்கு தான் கோபமாக கேட்டதுதான் பதில் வரவில்லை என்ற காரணம் என்று புரிந்து..
” நான் கோபமா கேட்கல மாமா. இவ்வளவு பெரிய விஷயம் நடந்துயிருக்கு.. எனக்கு தெரியலையே அதான் கொஞ்சம் சத்தமா கேட்டேன். ” சமாதானத்திற்கு செல்ல..
மாற்றி பேசுவது புரிந்து.. நீட்டிக்க விரும்பாமல்.. ” காவ்யா இதில் நான் உன்கிட்ட சொல்ல என்ன இருக்கு?. இது வேந்தனின் தனிபட்ட வேலை சம்பந்தப்பட்டது. அவன் என்கிட்ட கூட சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்ல.. அதை நானும் எதிர்பார்க்கவும் மாட்டேன். இப்ப அவன் சொன்னதுகூட ஹோட்டல் உள்ள ஆபிஸ்சில்.. பெண் எழிலரசி வருவதால் தான்.
நாங்க மட்டும் தான் இருந்தோம் சில சமயங்களில் நானும் வேந்தனும் அங்கயே படுத்துயிருக்கோம். எங்களுக்கு ஏற்றார்போல வைத்துயிருப்போம், முக்கியமான சில கணக்கு வழக்கு சம்பந்தபட்ட கோப்புகள் இருக்கும் அதையெல்லாம் என் பார்வையிலேயே மாடிக்கு மாற்றனும். அதையும் அவன் வரலேட்டாகும் என்பதால் தான் அவன் சொன்னது. ”
” இதில் நீ ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ.. அவனுக்கு உணவகத்தில் யாரிடமும் சொல்லாம.. கேட்காம பண்ணுவதற்கு முழுஉரிமையும் இருக்கு. அதுவும் இல்லாம இது முழுக்க வேந்தனின் தனிப்பட்ட விஷயமும் கூட.. அவன் ஒன்னும் ஒன்னும் யாருக்கும் சொல்லிட்டு செய்ய வேண்டிய அவசிய இல்ல. அப்படியே அவன் என்னிடம் சொல்லியிருந்தாலும்.. இப்ப கேட்ட மாதிரி சத்தமாவோ, கோபமாவோ இல்ல பாசமா கேட்டா கூட.. வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையென்றால் மட்டும்தான் சொல்வேன். ” அதற்கு மேல் பேசாமல் சாப்பிட வந்துவிட்டான்.
ரவிந்திரன் அம்மா, அப்பா அறையில் ஓய்வு எடுக்க சென்றுயிருக்க.. அங்கு காவ்யாவின் அம்மா, தங்கை, சித்தி சித்ராவும், அம்மா சாந்தி சாப்பிட்டுக் கொண்டுயிருந்தார்கள். காவ்யா யோசனையுடனும்.. ஈஸ்வர் வந்தவன் சாப்பிட ஆரம்பித்துவிட்டான்.
அவன் பாதி சாப்பிட்ட நிலையில் அவனின் அம்மா புன்னகையுடன்.. ” ஈஸ்வர் ஸ்விட் நல்லா வந்துயிருக்கு ப்பா. எழிலரசி என்ன சொன்னா?. கடை கட்ட வேலையெல்லாம் ஆரம்பித்து விட்டாங்களா?. ”
” ம். அஸ்திவாரம் வேலை ஆரம்பித்து விட்டாங்கா ம்மா. எழில நான் காலையில் வந்தப்ப பார்த்ததுதான் அப்பவும், அதன்பிறகு பேச இரண்டுபேருக்கும் நேரம் இல்ல. வேந்தனிடமும் ஸ்விட் கொடுக்க வரும்போது தான் பேசினேன். வேந்தன் இருந்ததால இன்னைக்கு ரொம்ப வேலையிருந்துயிருக்காது. ஹோட்டலின் எல்லா பக்கத்தையும், ஆட்களை பற்றியும் வேந்தன்அழைந்து வந்து காண்பித்துயிருந்தான். “
” ஹோட்டலை பற்றி எதுக்கு இப்பவே அழைச்சுட்டு போய் விரிவா சொல்லிட்டுயிருக்கான். கல்யாணத்திற்கு பிறகு பார்க்கலாம் இல்ல. “
நகரத்தை போல் இங்கு இருப்பவர்கள் கல்யாணத்திற்கு முன்னால் இருவரும்மாக அதிகம் சந்திப்பது, பேசுவதை விரும்பமாட்டார்கள். யாரேனும் அவர்களை தவறாக பேசிவிட்டால் என்ற பயம் ஏற்கனவே சாந்தி, சித்ராவிற்கு வந்திருந்தது. இதை கூறவும் இன்னும் இனிப்பகம் இல்லாது இது வேறையா என்றிருந்தது. இருவரின் முகத்தையும் கவனித்தான்.
அவர்களின் கவலை புரிந்து.. ” ம்மா. வேந்தன் எதையும் யோசிக்காம பண்ணமாட்டான். முதலில் எழிலரசிக்கு இரண்டை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால்.. அது சம்பந்தப்பட்டதில் ஒரு அனுபவம் இருக்கனும் இல்ல.. மாமா கடை, மில் பார்த்தது வேற.. இது வேற இல்லையா. அதான் எழிலரசி தனியா எல்லாத்தையும் பார்க்க.. கத்துக் கொள்ள வேண்டும் என்று இப்பவே அவன் ஹோட்டலில் பண்ண வேண்டிய வேலையையும் சேர்த்து பார்த்துக் கொள்வதற்காக காண்பித்து இருப்பான்.
உங்க வருத்தமும் எனக்கு புரியுது. எழிலரசி இப்பவே மனைவியா எல்லா பொறுப்பை பார்க்க வேண்டியதனு முடிவு பண்ணிய பிறகு அதை எப்ப பண்ணினா என்ன?. ஹோட்டலில் அவங்க இரண்டு பேரையும் தப்பா யாரும் நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைத்து உங்க கிட்ட கேட்டா அவங்களுக்கு பதில் சொல்லாம வந்துட்டே இருங்க. ”
அம்மா, சித்தியை பார்ப்பது போலவே மற்றவர்களையும் ஒருதடவை பார்த்து விட்டு கூறினான். அவனுக்கும் தெரியும் அத்தையும் இதேபோல கேள்வியை கேட்பார் என்று.
ஆனால் சாந்தி, சித்ராவிற்கு ஈஸ்வர்.. எழிலின் வேலையை பற்றி கூறும்போது கேட்க ஒன்றும் தெரியவில்லை தான். இருந்தாலும் மனதில் முழுதான திருப்தி இல்லை. யோசனையுடனே இருவரும் தலையாட்டினார்கள்.
ஈஸ்வரும் அவர்களின் எண்ணம் புரிந்ததுதான்.. தாங்கள் அங்கு இருக்க.. யார் என்ன பேசிவிட முடியும். அதைவிட இருவருக்கும் அவர்களுக்கு என்று ஒருவரையறை தெரியும் என்று எண்ணியவாறே மனைவியை பார்க்க முகத்தில் பலமான யோசனையில் இருப்பது போல தெரிந்து.
‘ ம் கேட்டால் பார்த்துக் கொள்ளலாம் ‘ என சாப்பாட்டை முடித்து சிறிது நேரம் செய்திகள் பார்க்க ஷோபாவில் அமர்ந்துவிட்டான். ‘
” மாமா அம்மாவும், வித்யாவும் கிளம்புறாங்களா.. உங்ககூட காரில் வரட்டும் நீங்க பஸ்ஸ்டாண்டில் விட்டுவிடுங்க. நான் வண்டியில் வந்துவிட்டு பின் வரும்போது பாப்பாவை அழைச்சுட்டு வந்துவிடுவேன். ”
யோசனையுடன் அவளை பார்த்தவன்.. ‘ஏதோ பிளான் பண்ணுறா. ‘ எதுவும் கூறாமல் ‘ சரி ‘ என தலையசைத்தான்.
ஈஸ்வர் நினைத்தது போலவே அம்மா, தங்கையை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு.. தன் மகளுடன் காவ்யா ஹோட்டலினுள் வந்து.. நேராக ஆபிஸ் அறையை திறந்தவள்.. அங்கு பார்த்த காட்சியில் அப்படியே நின்றாள்.
” பிளஸ் தனு.. இதுக்கு மேல என்னால முடியாது. தயவு செய்து விட்டுவிடுங்களே. ”
” முடியாது டி. இன்னும் மூன்றுதடவை.. அதுக்குமேல நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ”
” நம்பி வாயா திறக்கலாமா?. ”
அவளை முறைத்து.. ” நம்பு டி. கைய முதலில் எடு. ஏதோ நான் தப்பு பண்ண.. உன்னைய கூப்பிட்ட மாதிரி இப்படி வைத்துயிருக்க. யாராவது இரண்டு பேரையும் பார்த்தா.. அவங்க என்ன நினைப்பாங்க. இப்பவே இப்படி பண்ணுற.. குழந்தையில் அத்தம்மா எப்படி தான் உனக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாங்களோ?. நான் வீட்டுக்கு வரும்போது அதன் எனக்கு முதவேலை. இல்ல உனக்கு ஒரு வேல சாப்பாடு ஊட்ட.. நான் தனியா இரண்டு வேலை சாப்பிட வேண்டும்போல. ” அப்போது மழலையின் சிரிப்பு சத்தம் கேட்க.. இருவரும் ஒருசேர திரும்ப.. அதில் எழிலரசியை பார்த்து இன்னும் சிரித்தது.
” வாங்க மகிழா குட்டி.. வாங்க. வாங்க அண்ணி. ” இருவரையும் அழைத்துவிட்டு கையை சுத்தம் செய்ய சென்றான்.
உள்ளே வரும்போதே காவ்யா அறையை பார்வையிட்டவாறே சேரில் அமர்ந்தாள். அவள் இங்கு வந்து ஒரு ஆறுமாதம் இருக்கும். முன்பு பழைய சேர், மேஜையுடன் அறையின் ஓரத்தில் ஒருவர் படுக்கும் அளவிற்கு கட்டில்.. அது திரைபோட்டு மூடியிருந்ததால் சிறிய அறை போல இருக்கும். இப்போது எல்லாம் நீக்கபட்டு பெரிய அறையாக காட்சி தந்தது. அதனுடன் தனியாக எழிலரசிக்காகவே அனைத்தும் புதிகாகவும், இருபக்கமும் அளவான சேர், டேபிள், இரண்டுமேசையின் மீதும் லாப்டாப் இருந்தது. அதன்பிறகு தான் எழிலரசியை கவனித்தார்.. பார்த்து புன்னகை மட்டுமே.
அவளும் பதில் புன்னகைத்தால் அவ்வளவே. தனு அண்ணா.. கூறியோ இல்லை.. எப்படியோ இப்போது தான்.. தான் இங்கு வந்துயிருப்பது தெரிந்து.. பார்வையிட வந்துயிருக்கிறார்கள் என்று.. அவர்களை அறையில் நுழைந்ததில் இருந்து கவனித்தால்.. அவர்களின் வருகை நன்றாகவே புரிந்தது.
அப்போது வெளிவந்த வேந்தனை.. உன்னிடம் இருந்து தப்பித்துவிட்டேன் என்று சிரிப்புடன்.. குழந்தையிடம் பார்வையை திருப்ப.. அவன் அவளை முறைக்க முயன்று முடியாமல்.. அவனும் குழந்தையிடம் பார்வையை மாற்றிக்கொண்டான். ‘
” என்ன தம்பி நாங்க வரும்போதே பெரிய டீலிங் நடந்துக் கொண்டுயிருந்தது. என்ன விஷயம்?. ”
அவன் கூற வருகையில்.. ” வேந்தா ” அழைப்புடன் ஈஸ்வர் உள்நுழைய.. ” அப்பாஆஆஆ.. ” அழைத்தபடி ஈஸ்வரிடம் தாவினாள். அவனும் அவளை தூக்கிக் கொண்டு.. சொல்லாமல் வந்த மனைவியை பார்த்தும்.. ஒன்றும் கேட்காமல் எழிலரசியை பார்த்தான்.
” எழில் சாப்பிட்டியா?. இங்கு எல்லாம் ஓகே தானே. ” காலையில் இருந்து பேசவில்லை.. சற்று நேரத்தில் கிளம்பிவிடுவாள் அதற்கு முன் பேச அங்கு வந்தான்.
” எல்லாம் ஓகே தனுஅண்ணா. ” வேந்தனை ஓர் பார்வை பார்த்துவிட்டு.. மெல்லிய புன்னகையுடன்.. ” சாப்பிட்டேன். ”
வேந்தனையும் எழிலரசியை பார்த்திருந்த குழந்தை சிரிப்புடன்.. ” அப்பா என்னை மாதிரி இவங்களையும் குட்டிம்மானு கூப்பிடுவாங்களா?.. ”
குழந்தை கேட்டவுடன் அண்ணன், தம்பி.. இருவரும் ஒரே ” உனக்கு எப்படி தெரியும் குட்டிம்மா?.. ”
குழந்தை அழகாக எழிலரசியை பார்த்து சிரிப்புடன்.. ” அவங்க சித்தப்பாவிடம்.. என்னை மாதிரி சாப்பிட மாட்டேனு வாயில கைய வைத்து மாட்டேனு சொல்லிட்டு இருந்தாங்களா அதான். ”
யாழினி கூறியவுடன் ஈஸ்வர் ‘ ஓ.. ‘ இருவரையும் பார்க்க.. அசட்டு புன்னகையும் எழில் முறைப்பும் , வெக்கமும் வேந்தனை பார்த்திருக்க..
‘ ஈஸ்வருக்கு வேந்தனின் செயல் புரிந்தது.. அவனுக்கே தெரிந்தது எழிலரசி முன்பை விட சற்று இளைத்து இருப்பது. அதனால் தான் கடை என்று பாராமல் வேந்தன் அவளுக்கு பிடிக்காத.. அதேசமயம் சத்தான உணவை வற்புறுத்தி வழங்கியுள்ளான் அதை பார்த்து தன்னை போலவே இவர்களும் அடம்பிடிப்பாதால் தான் பார்த்தபின் குழந்தை கேட்கிறாள். ‘
‘ ஈஸ்வர் நினைத்தது போல பிடிக்காத உணவு என்று இல்லை.. எழிலரசி சாப்பிடு உணவு அளவு மிகமிக குறைவாக இருந்தது. அதனால் சற்று அதிகமாக உணவை உண்ண வைத்துக் கொண்டுயிருந்தான். ‘
வேந்தன் குழந்தையை வாங்கிக் கொண்டு.. ” மகிழா குட்டி அவங்க பேர் எழிலரசி. நீங்க எழில்சித்தினு கூப்பிடுங்க. ” அவளும் தலையசைத்து சரி கூறி..
” எழில் சித்தி ” அழைப்புடன் அவளிடம் தாவ.. சட்டென்று தாவியதால் தடுமாற.. வேந்தனும் குழந்தையின் செயலை எதிர்பாரக்கவில்லை.. உடனே அவளை பின்னிருந்து மென்மையாக அணைக்க.. அதன்பின் தான் குழந்தையை நன்றாக பிடித்தாள்.. வேந்தன் கையை எடுத்தான்.
ஆண்கள் இருவரும் இப்போதுதான் வந்த காரணம் என்ன?. என்பது போல காவ்யாவை பார்க்க..
” எழிலரசி பற்றி தெரிந்த பிறகு எழிலரசியை பார்த்து வாழ்த்து சொல்லாம இருந்தா நல்லாயிருக்காது இல்ல.. அதான் எழிலிடம் வாழ்த்தும்!.. அப்படியே ஹோட்டலிற்கு வந்து ரொம்ப நாளாச்சுல அதான் வந்தேன். ”
” வாழ்த்து சொல்லிட்டியா காவ்யா?. ” எழிலை பார்த்த வண்ணம் கேட்க.. காவியாவும் அவளை பார்க்க.. எழில் குழந்தையுடன் மும்மரமாக பேசிக் கொண்டுயிருந்ததாள்.. அவள் கவனிக்க மாட்டாள் என்று.. ” ம் ” என தலையசைத்தாள். கணவனும் பதிலிற்கு சரி என்பது போல தலையாசைக்க..
ஆனால் ஆண்கள் இருவரும்.. அவரை நம்பவில்லை ஆனாலும் கேட்க தோன்றவில்லை. என்றேனும் காவியாவின் நோக்கம் கண்டிப்பாக தெரிய வரும்.
அதன்பின் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தவர்கள்.. ஈஸ்வரிடம் கூறிக் கொண்டு வேந்தனும் எழிலரசியும் கிளம்பி விட்டனர்.
வானம் மேகமூட்டத்துடன் எப்போது வேண்டுமானாலும் நான் மாரிபொழிவேன் என குளிர்த்த காற்றை வீசிக் கொண்டுயிருக்க.. ஜன்னலை திறந்து அந்த காற்றை சுவாசித்தும்.. தன்னவன் தூங்கும் அழகை ரசித்த வண்ணம் காரை மிதமாக ஓட்டிக் கொண்டு வந்தாள் எழிலரசி.
‘ வேந்தன் இன்று மழை வரும் அறிகுறியிருப்பதால் லாங் டிரைவ் மட்டும் செல்லலாம் என கூறி.. அவன் வண்டி எடுக்கும் நேரம் தன்னவனிடம் கெஞ்சி கொஞ்சி.. அவள் காரை ஓட்ட சம்மதம் வாங்கி.. பின் பாடலை கேட்ட வண்ணம் பயணித்தவர்கள்.. 10வது நிமிடத்திலேயே அவளவன் உறங்கிவிட்டான். காரை ஓரமாக மெதுவாக நிறுத்தி.. அவன் நன்றாக உறங்குவதற்காக சீட்டை அவனிற்கு ஏற்றவாறு சாய்த்து.. பின் சில நிமிடங்கள் வண்டியை செலுத்தி.. அவள் மட்டும் இறங்கி மழைகாற்றுக்கு இதமாக.. அவனுக்கும் சேர்த்து இருகப் சூடான பாதாம்பால் குடித்து மீண்டும் குளிர்ந்த காற்றை சுவாசித்து அறைமணி நேர பயணத்தை 45நிமிடங்களாக செலுத்தி தன் வீட்டின்முன் நிறுத்தினாள். ‘
” தனு தனு ” கன்னத்தை மென்மையாக தட்ட அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. சுற்றிலும் பார்க்க.. யாரும் இல்லை.. பின் புன்னகையுடன் அவளின் கைகள் துருதுருத்த செயலான அவனின் மீசை மென்மையாக வருட.. பின் பிடித்து இழுக்க சென்ற நொடி.. அவனில் அசைவு தெரிந்து பின் கண்களை திறக்க முயன்றதை பார்த்தும்.. ” தனு மாமா ” அழைப்புடன் அவன் கன்னத்தை நன்றாக பிடித்திழுத்து எழுப்பினாள்.
” முயல்குட்டி ” கன்னத்தை தடவியவாறு உட்கார்ந்தவன் சுற்றுப்புறத்தை கவனித்து.. பின் நேரத்தை பார்த்தவன்..
” என்னைய எழுப்பியிருக்கலாம் தானே டி.. ”
அவனை முறைத்தவள். ” நான் ஹோட்டலில் தூங்கும்போது நீங்க ஏன் எழுப்பலையோ?.. அதுமாதிரி தான் நானும் எழுப்பல. ”
” போடி.. அதுவும் இதுவும் ஒன்னா?. ”
புன்னகையுடன்.. ” தூக்கம் ஒன்னு தானே.. அது எங்க பண்ணினா என்ன?.. சரி சரி ரொம்ப நேரமா கார் நிக்குது. அம்மா அப்பவே பார்த்துயிருப்பாங்க. வாங்க போகலாம். பேஷ்வாஸ் பண்ணிட்டு போங்க. “
தலையசைப்புடன் தலையை சரி செய்து இறங்கி.. அவள் அறையிலேயே கூறியதை செய்துவிட்டு.. தூங்கவிட்டதற்கு தண்டனையாக அவளை ஒருவழிபடுத்தி.. அவனும் ஒருவழியாகி.. மறக்காமல் அத்தம்மாவிடம் தான் கேட்க நினைத்தையும் கேட்டுவிட்டு தான் வீட்டிற்கு புறப்பட்டான்.
” மணி 6 ஆச்சு. இன்னும் அண்ணா வீட்டுக்கு வரலையா?. ” ஆமாம் என தலையசைத்தார்..
” போன் பண்ணி பார்த்திங்களா?.. இல்ல அவங்களாவது கால் செய்தாங்களா?. ” இல்லை என தலையசைக்க..
” ம்மா வாய் திறந்து பேசுங்க. ” டீ ஸ்நாக்ஸ் ஸ்விட் சாப்பிட்டவாறு சித்ரா, வசு.. ஹாலில் பேசிக் கொண்டுயிருந்தனர்.
” என்ன பேச வசு. காலையில் சீக்கிரமா போனான். அப்பா காலையில் பேசும் போது கூடவே இரண்டு வார்த்தை.. அவனும் எழிலரசியும் பேசினாங்க. ஆபிஸ் வேல செய்ய மதியம் வந்திருவேன்னா.. வரல. கால் பண்ணியும் எடுக்கல. சரி வீட்டுக்கு வரும் போது ஆள் இருக்குமேனு வந்தா.. இன்னும் வரல. முதல் நாளே இப்படி பண்ணுறான். அவன் பண்ணுவது ஒன்னும் புரியல. “
” என்ன ஒன்னும் புரியல உங்களுக்கு?. எவ்வளவு தெளிவா சொல்லியிருக்கேன். ” சற்று அதிக குரலில் நுழைத்தவனை.. ஒரு நொடி அதிர்ந்து பார்த்தனர் சித்ராவும் வசுவும்..
” அனு இன்னும் 15நிமிடத்தில் வீடியோகால் பண்ணுங்க. ஓகே.. ம்.. வைக்கிறேன். ”
அமர்ந்து இருந்தவர்களிடம் ஒரு பார்வை பார்த்து புன்னகை மட்டுமே உதிர்த்து.. தன் அறைக்கு வேகமாக சென்று கேஷ்வல் உடை அணிந்து வந்தவன்.. அம்மாவிடம் எதுவும் கேட்காமல் சமையல்அறை.. சென்று சுடுநீர் வைத்து கீரின் டீ எடுத்து வந்து.. ஹாலில் பார்க்க இருவரும் இல்லை. அம்மாவின் அறையில் சத்தம் கேட்டது.
சித்ராவிற்கு எதுவும் பேசாமல் மாடிக்கு சென்றதும்.. பின் சமையல்அறை சென்ற வேந்தனின் நடவடிக்கையில் ஆதங்கம் கொண்டு இருவரும் அறைக்கு சென்றுவிட்டனர்.