” அது வந்து நீங்க திருச்சி போகவேண்டும் சொன்னீங்கள?. மாமாவிடம் கேட்டேன்.. அவரு சனிக்கிழமை கூட.. நீங்க செய்ய வேண்டிய வேலைய பண்ணலானு சொன்னாரு. அதான் அன்னைக்கு நானும், அம்மாவுடம் உங்க கூடவே வந்து.. உங்கள கல்யாணத்திற்கு எங்களுக்கு நகை வாங்கிக் கொடுக்க சொல்லானும் கேட்டேன். “
அவள் கூற கூற.. தன் மாமாவை நெற்றியை தடவியவாறே ஒருபார்வை பார்த்தான். திலகன் வாயில் கையை வைத்து சிரிப்பை கட்டுப்படுத்தி.. ” பார்த்திங்களா அவளுக்கு பதில் சொல்லாமலையே.. அவளிடம் விஷயம் வாங்கிட்டான். நீங்க.. ”
” டேய் நான் ஒன்னும் கிரிமனல் லாயர் இல்ல. சீவில் லாயர் டா. ” சரிசரி.. அங்க பாருங்க என கண்ணால் காண்பிக்க.
” ஏன் இங்க வாங்க முடியாதா ?. இல்ல உன்னிடம் நகைங்க நிறைய இருக்குமே. எதுக்கு இப்ப?. அப்படி வேண்டானாலும் அதிகமா புதுசு இப்ப தேவையில்லையே. ”
விஸ்வாவிடம்.. ” மாமா வினோ உங்களிடம்.. இதுபோல நான் நகை வாங்கிகொடுக்க வேண்டு என்று சொன்னுச்சா?. ”
” நீ வேற வேந்தா. இருக்கும் நகை முக்கால்வாசிய போடாம.. அவ பாங்க் லாக்கரில் அப்படியே வச்சுயிருக்கா. இதுல புதுசு எங்க வாங்க போறா. ”
வசுவை பார்த்தவன்.. ” சரி உனக்கு எவ்வளவு?. என்ன மாதிரினு சொல்லு. நாங்க போகும்போது வாங்கிட்டு வருகிறோம். ”
” அம்மா நான் கிளம்பு.. “
வசு சற்று அதிக குரலில்.. ” அண்ணா.. அந்த நகைய நான் போடபோறானா?. இல்ல நீங்க?. “
அவளை முறைத்தவன்.. ” அப்படி நீ தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால்.. உனக்கு வேண்டியதை நீயும், அம்மாவும் போய் வாங்கிட்டு வாங்க. பிறகு எதுக்கு என்னய இழுக்குற?. நான் பீரியானு கேட்டுக்குற?. நான் போறப்ப தான் வரனும் சொல்லுற?. ” கடுமையான குரலில் கேட்க.
அவள் சிறிது கலங்கி தன் அம்மாவை பார்க்க.. சித்ராவிற்கு புரிந்தது.. வசுவின் செயல். ” டேய் இதுகூட புரியல. அவளுக்கு என்ன பிடிக்குமோ!. அதை நீ பார்த்து வாங்கி கொடுக்கனு கேட்குறா. ”
கடவுளே இவளுக்கு இதை கேட்க நேரமே இல்லையா.. முச்சை இழுத்துவிட்டவன்.. ” சரி வசு எத்தனை பவுன் வாங்கனும்?. இல்ல என்ன வாங்கனும்?. ”
” பவுன் கணக்கு தெரியாது. புது மாடலில் ஆரம் வேணும். ” மனதிற்குள் இப்போதைக்கு இதுபோதும்.
வேந்தன் அம்மாவை.. ஏதாவது கூறுவாரா என்று பார்த்தான். ம்ஹூம்.. வாங்கி கொடுக்க வேண்டும் என்றுயிருந்தது.
” சரி வசு.. நான் அரசிக்கிட்ட கேட்டு சொல்லுறேன். ”
” எதுக்கு அவங்களிடம் கேட்க வேண்டும்?. ”
அவனோ முறைத்து.. “உனக்கு என்ன பிரச்சினை?. நான் பண்ணுவதை ஒன்னென்னும் உன்கிட்ட சொல்லிட்டு செய்யனுமா?. ” கோபமாக கேட்க..
இல்லை என்பது போல தலையாட்ட..
“ம்.. இனி உனக்கு தேவையானதை என்னிடம் கேட்டா.. அதற்கான பதில் உடனே.. இல்ல அப்பா, அம்மா, அரசியிடம் கேட்ட பின்தான் வரும். “
‘ சரி ‘ என கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தலையாட்டினாள்.
” ம்மா.. நான் அரசிக்கு காய்ச்சல் முழுவதும் சரியான பிறகுதான் வருவேன். மாமா நீங்க வீட்டிற்கு சென்றதும் மெசேஜ் பண்ணுங்க. வா திலகா. ”
உணவை எடுத்துக்கொண்டு வேந்தன் மிக அவசரமாக சென்றான். தன்னவள் தன்னை தேடுகிறாள் என்று தகவல் வந்த வண்ணம் இருந்தது.
தன்னவளின் அறைக்கு சென்றவன்.. அங்கு ஓய்வில் இருந்த அவனவளின் இதழில் தன் இதழிலால்.. தான் வந்துவிட்டதை அழுத்தி தெரியப்படுத்த.. அவளோ அவளவனை எவ்வளவு தேடினால்!. என்று அவன் இதழில் ஆழமாக தெரியபடுத்த.. என அங்கு இருவருக்குமான இதழ் முத்தம் சிலநிமிடங்கள் நீடித்தது. இருவரும் மேலும் சில நிமிடங்கள் இறுக்கி அணைத்தும்.. அவளின் வயிற்றில் சிறிது எண்ணெய் தேய்த்து விட்டும்.. அவள் தேவைகளை முடித்து வந்தபின்.. அவளை கீழே அழைத்து வந்தான்.
இருவரும் மெத்தையில் அமர்ந்தனர்.. அப்போதுதான் பார்த்தான்.. ” ஹாய் கதிரவன்.. இப்பதான் வந்தீங்களா?. ”
அவனை சிறு முறைப்பு பார்வை பார்த்தவன்.. ” நான் வந்து அறைமணி நேரம் மேல ஆகபோகுது. நீங்க உள்ள வரும்.. உங்களுக்கு நேரா தான் உட்கார்ந்துயிருந்தேன். ஆனா உங்க கண்ணுக்குதான்.. நாங்க யாருமே தெரியலையே.. நேரா மாடிக்கு போய்யிட்டிங்க. ”
புன்னகையை மட்டும் வெளிப்படுத்திவிட்டு.. ” சரி விடுங்க கதிரவன். சாப்பிடலாமா?.. ” அனைவரையும் பார்த்து கேட்க.. ம்.. என அங்குயிருந்தவர்களில் மேகா அவளுக்கு துணையாக சாப்பிட்ட தர்ஷினி தவிர மற்றவர்கள் சரி என தலையசைக்க..
அரசி சிறிது மட்டுமே சாதம், நீர்காய்கறிகள் போட்டு செய்த கூட்டும், ரசமும், டிரையல் ஸ்விட்டும் சாப்பிட்ட.. மற்றவர்களுக்காக வேந்தன் உட்பட மற்றவர்கள் ஹோட்டல் உணவை சாப்பிட்டனர்.
அனைவரும் ஹாலில் அவரவருக்கு ஏற்ற இடங்களில் உட்கார்ந்தும், படுத்தும் இருக்க.. அரசி.. வேந்தன், இன்பாவின் நடுவில் அமர்ந்திருக்க.. அவர்களின் அருகில் கதிரவன் வந்து உட்கார்ந்தான்.
” அண்ணா உங்க இரண்டுபோர் பார்த்து ஒருவிஷயம் கேட்டலாம் என்று தான் வந்தேன். ” என்னவென்று இருவரும் பார்க்க..
” கடைக்கு இன்டீரியர் டிசைன் செய்யுற வேற யாரையாவது.. தெரிந்தா எழில் சொல்ல சொல்லுச்சு.. என்னோட பிரண்ட் திருச்சியில் மூன்றுவருடமா நிறைய இடங்களில் செய்து கொடுத்துயிருக்கான். இதில் அவன் செய்ததும், இப்ப கடைக்கு இதுபோல செய்யாலாம் என்று சில டிசைன்ஸ், இதை எவ்வளவு செலவில் செய்யலாம் என்பது குறித்தும் கொடுத்துயிருக்கான்.
இதை பார்த்துட்டு சொல்லுங்க. இல்லையென்றால் வேறு யாரையாவது பார்க்கனும். நாளைக்கு மோல்டு போட்டு விடுவாங்க. இன்னும் பத்துநாளில் ஆரம்பித்தாதான் சரியா இருக்கும். காலையில் தான் அனுப்பினான். கடைக்கு போனப்ப நீங்களும் இங்க இருப்பாதா சித்தப்பா சொன்னாரு. அதான் உடனே வந்துட்டேன். ”
அவன் கூறிக்கொண்டுயிருக்கும் போதே வேந்தன் அவனையும், தன் அரசி பார்த்துக் கொண்டுயிருந்ததையும் கவனித்தான். அவள் முகம் திருப்தியும், பிடித்தமும் காண்பிக்க..
” அவர் ஒகே தான். ஆனா உடனே முடிவு சொல்ல முடியாது. அவர நேரடியா பார்த்து பேசின பிறகுதான் சொல்ல முடியும்.. அதான் சரியாவும் இருக்கும். நான் இன்னும் இரண்டு நாளில் எப்ப பார்க்கலானு சொல்லுறேன். ”
” ம்.. சரிண்ணா. ” அவன் எழிலை பார்க்க.
வேந்தன் அவனை தட்டி அழைத்து.. ” டேய்.. அவ சொல்ல நினைத்தை தான்டா நான் சொன்னேன். நான் ஒரு வரியில் சொன்னதை.. அவ உன்னையும், அவரையும் நாற்பது கேள்வி கேட்டு பின்ன சரினு சொல்லுவா. நீ அவ பேசறத கேட்க வேண்டும் என்றால் இரண்டுநாள் கழித்து.. ”
வேகமாக.. ” வேண்டா அண்ணா.. வேண்டவே வேண்டாம். முன்னெல்லாம் எழில் இரண்டு வார்த்தையாவது பேசுவாங்களானு நினைப்பேன். ஆனா இப்ப இரண்டு வார்த்தையில் முடிக்கவே மாட்டாங்களானு நினைக்கும் அளவிற்கு அத்தனை கேள்வி. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. அவளிற்கு கொஞ்சம் பயம். அவளிற்காக தான் ஆரம்பித்தேனு எல்லோர்க்கும் தெரியும். அதனால இனிப்பகம் எல்லாவிதத்திலும் பெஸ்டா.. சரியா இருக்க வேண்டும் என்று.. அவளிற்கு தோனும் அதனை கேள்வியை கேட்டு பின்ன முடிவு பண்ணுறா.ஆனா அதையும் என்னிடம் ஓகேதானே என்று ஐந்து தடவை கேட்பா. ”
புன்னகையுடன் தன் அண்ணாவின் தோளில் சாய்ந்து பார்த்தும், கருத்து கேட்டுயிருக்கும்.. அவனின் முயல்குட்டியை பார்த்தவாறு கூறிக்கொண்டுயிருந்தான். கேட்டுக் கொண்டுயிருந்தவனும் ஆம் என தலையசைத்தான்.
அடுத்த மணிநேரங்களில் மூவர் தவிர அனைவரும் சென்றுயிருக்க.. ஹாலில் எழிலிரசி.. வேந்தனின் மடியில் தலை வைத்து.. இடுப்பை கட்டிக்கொண்டும்.. அவளின் வயிற்றை குறுக்க வைக்கக் கூடாது என்ற கட்டளையால்.. இன்பா மடியில் கால்நீட்டி படுத்துயிருந்தாள்.
” இன்பா.. அரசிய வயிற்று வலிக்காக ஹாஸ்பிட்டல் கூட்டுட்டு போய் இருக்கிங்களா?. ”
” ம்.. வருஷம் ஒருதடவை போவோம். பாட்டி, அம்மாச்சி யெல்லாம்.. இதுபோல வயிற்று வலி.. சிலருக்கு இருக்குமாம். கவலைபட வேண்டானு சொல்லிட்டாங்க. திருமணம், குழந்தை என்று வந்தா.. அதன் சிலருக்கு இருக்காது.. இல்ல குறைத்து விடுனு சொன்னாங்க.
இருந்தாலும் ஹாஸ்பிட்டல் போய் யூட்ரஸ் ஸ்கேன் செய்து.. எண்டோமெற்றியோசிஸ் பிரச்சனை.. ஏதும் இருக்கானும் கூட பார்த்துவிட்டோம். பயப்படும் படியா எந்த பிரச்சனை இல்லைனு சொல்லிட்டாங்க. அதன்பிறகு பாட்டி சொன்னதும் கூட சொன்னாங்க.
அதன்பிறகு பயம் இல்ல. இருந்தாலும் வருஷம் ஒருதடவை யூட்ரஸ் ஸ்கேன் பண்ணிப் பார்த்துப்போம். அதையும் இரண்டுமாதம் முன்தான் கடைசியா பார்த்தோம். “
கவனமாக கேட்டுக் கொண்டுயிருந்தவனின் சிறு நிம்மதி ஏற்பட்டது. இருந்தாலும்.. ” ம்.. போனமாதமும் இப்படிதான் இருந்தா. எப்போதும் இப்படி இருந்தா.. படிக்கும் நாட்களில் என்ன பண்ணினா?. ”
” ஸ்கூல், காலேஜ் போறப்ப.. கொஞ்சம் நேரம் அழுதாலும்.. ஏதாவது மனசை டைவேட் பண்ணிப்பா.. இல்ல சத்யா பண்ண வைத்துவிடுவா. ஆனா வீட்டில் இருக்கும் போது மட்டும் குறுக்கி படுத்தபடியே தான் இருப்பா. என்ன சொன்னாலும் கேட்கமாட்டா. இன்னைக்குதான் முதல்தடவையா நேரா நீட்டி படுக்கறா. ” இன்பா பாதங்களுக்கு மசாஜ் செய்தபடியும், வேந்தன்தலையை தடவிய படியிருக்க..
” ம்.. ரொம்ப அழகுதான். இப்படியா நடு ஹாலில் படுக்க வைத்துயிருப்பீங்க?.. ” யாரும் இல்லாத வீட்டில்.. ஓங்கி குரல் ஒலிக்க.. அதிர்ந்து யார் என பார்த்தனர்!.?..
அருணாச்சலம்.. மீனாட்சி அம்மன் கோயில் சென்றுவிட்டு பிரசாதம் அண்ணாவின் வீட்டில் கொடுத்து விட்டு அம்மா, அப்பாவை அழைந்து வீட்டை திறந்து பார்த்தவர்கள்.. ஒருநொடி அதிர்வு, மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
தங்கள் வீட்டின் இளவரசியை தங்களுக்கு அடுத்து மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொள்ளும் அண்ணாவையும்.. அதைவிட தன் உயிராக நினைத்து பார்த்துக்கொள்ளும்.. கணவன் அமைய விருக்கிறான் என்று பார்த்து நின்றவர்கள்.. இப்படி ஹாலில் அமர்ந்துயிருந்தால் தாங்களே கண் வைத்துவிடுமோம்.. போல என எண்ணினார்கள்.
தாங்கள் பார்த்து சரி வேறு யாராவது பார்த்தாள்.. கல்யாணம் முன்பே இப்படி ஹாலில் படுத்துயிருக்கிறாள் என.. தன் பேத்தியை பற்றி தவறாக கூறிவிடுவர்கள். பாட்டிதான் அவர்களைசிறிது கண்டிக்க வேண்டும் என.. ” ம்.. ரொம்ப அழகுதான். இப்படியா நடுஹாலில் படுக்க வைத்துயிருப்பீங்க?.. “
யாரும் இல்லாத வீட்டில் ஒலித்த குரலை கேட்டவர்கள் அதிர்ந்து நிமிர.. யார் என்று தெரிந்தவுடன்..
” பாட்டி அரசி எழுத்துக்க போறா.. எழில் எழுத்துக் கொள்வாள்.. ” ஒருசேர வேந்தனும், இன்பாவும் கூற..
இருவரையும் முறைத்துக் கொண்டே உள்ளே வந்த.. ரொங்கநாயகி பாட்டி வேந்தனின் கன்னத்தை பிடித்துயிழுத்து விட்டு..
” ம்.. இத்தனைநாளா அவன் பண்ணினா.. இப்ப நீயும்மா. அதுவும் ஹாலில் இப்படி படுக்க வைத்துயிருக்கீங்க. ”
அவன் கன்னத்தை தேய்த்துக் கொண்டே எப்படி பேத்தியும், பாட்டியும் ஒரே மாதிரி கிள்ளுறாங்க..
” ஏன் பாட்டி நீங்க அரசி மாதிரியா?. இல்ல அவ உங்கள மாதிரியா?. ”
அவர் மீண்டும் கிள்ளவர.. அவன் தலையை பின்னோக்கி தப்பிக்க..
புன்னகையுடன்.. ” இது என்ன கேள்வி பேரா?. என்ன மாதிரி தான் உன் அரசி. என்ன அவளும் உன்னைய.. இப்படி தான் கிள்ளுவாளா?. ” மெதுவாக கேட்க..
அவன் மற்றவர்களை மறந்து.. ஆம்.. என தலையாட்டா.. இன்பாவின் சிரிப்பு சத்தம் கேட்க.. அவனை முறைத்தவன்.. மற்றவர்களை பார்க்க.. அவர்கள் சிரிப்புடன் உள்ளே சென்றுவிட்டார்கள்.
” சரி சரி அவள முதலில் எழுப்புங்க. அவ ரூம்ல போய் தூங்கட்டும். ”
சரி என தலையசைத்தவன்.. தன்னவளின் தூக்கம் கலையாமல் அழகாக தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்றுவிட.. அதனை பாட்டி வாய்பிளந்து பார்த்திருந்தார்.
” டேய் இன்பா என்னடா நடக்குது?. நான் இங்க பாட்டினு ஒருத்தி நீக்குறேனு.. கொஞ்சமாவது பயம் இருக்கா. அவன் பாட்டு என்முன்னாடியே பேத்திய தூக்கிட்டு போறான்.”
அவரை செல்லமாக முறைத்தவன்.. ” ம்.. கொஞ்சம் நேரம் முன்ன.. பாட்டி மாதிரி கேட்டுயிருந்தா.. உங்க மேலே பயம் வந்துயிருக்கும். பிரண்ட் மாதிரி கேட்டிங்கள.. அதான் உங்களை கண்டுக்கொள்ளல.
அப்புறம் மாமா.. எழிலுக்கு சரியாகும் வரை இரண்டுநாள் இங்க தான் இருப்பாரு நினைக்றேன்.. அவங்க வீட்டிலையும் சொல்லிட்டு தான் வந்துயிருப்பாரு. அப்பாவிற்கு ரவிமாமா கால் பண்ணியிருப்பாரு. நீங்க அம்மாவிடம் சொல்லிவிடுங்க. ” சரியென்ன தலையசைத்தார்.
அதன்பின்ன அனைவரும் சீக்கிரமே உண்டு உறங்கிவிட.. எழிலரசியுடன் வேந்தனும் அவளிற்கு மசாஜ் செய்தபடி உறங்கிவிட்டான். இவர்கள் இருவரும் இங்கு நிம்மதியாக மென்மையாக கட்டிக்கொண்டு உறங்க..
அதேநேரத்தில் இருவரை பற்றி போனில் பேசிக் கொண்டுயிருந்தார்கள்.
” நல்லா பார்த்தியாடா. எழிலரசி பேரில் வேந்தன் அவ்வளவு பணம் மாற்றுகிறாறா?. ”
” ஆமா அக்கா.. விஸ்வா அண்ணா எல்லாம் மாற்றுவதற்கு உண்டான டாக்குமெண்டையும் வாங்கிட்டு.. இப்பதான் உங்க சின்ன மாமனார் வீட்டில் இருந்து வந்தார். அக்கா இவ்வளவு பணம் வைத்துயிருக்கும் அளவிற்கு. அவர் என்ன வேலை பண்ணினார்?. ”
” ம்.. எனக்கு தெரிந்து சாப்ட்வேர் கம்பெனியில் வேலையோட.. இங்கு அவர் தனியா அவர் காசுகொடுத்து.. அவர் சார்பா இங்க வேலைய பார்க்க.. மேனேஜர் ஒருத்தர போட்டு.. அவர் அனுப்புறதை வைத்தும், மாமா அனுப்புவதையும் வைத்தும்.. ஹோட்டல், கிராமத்தில் இருக்கும் நிலம் எல்லா வரவு, செலவுவை அங்கயிருந்தே பார்த்துக்கிறார். அதனால தானே அவர் அங்க இருந்தாலும்.. யார் ஒன்னும் கேட்க முடியாத அளவிற்கு.. எல்லா லாபம், நஷ்டம் காசு எல்லாம்.. எல்லோர்க்கும் சரிசமமான போகுது.
அவர் தான் எல்லாம் காசு சம்பந்தமா பார்ப்பதால்.. ஏதாவது எங்களுக்குனு வரவேண்டியதை வேறு எதற்காவது உபயோகப்படுத்தி இலாபம் பார்த்துவிட்டு.. குறிப்பிட்ட காசை மட்டும்.. பின்ன எங்களுக்கு அனுப்பி விடுகிறாறோ?. “
” அக்கா நீங்க செல்வதுபடி பார்த்தாலும்.. பேங்க் அக்கவுண்ட் உங்க மாமானார் இரண்டுபேர் பேரில்தானே இருக்கு. தனியா பண்ண முடியாது ?. ”
” ஆமாம்ல.. என் வீட்டுகாரரும் வேந்தன் அனுப்பியதை வாரம் ஒருதடவை பார்ப்பார் வேற.. இதில் பணம் எடுக்க வாய்ப்பே இல்ல. இங்க வீட்டில் யாருக்கும் தெரியாம வேற ஏதாவது பண்ணுவார் போல. ஆனா எனக்கு இந்த காசு பற்றி தெரிய வேண்டுமே டா.. ”
” ம்.. நீங்க சொல்லவது போல வீட்டில் தெரியமாதான் இருக்கும். அதனால் தான் ஏதோ விஸ்வா அண்ணாவிடம் மட்டும் சொல்லி.. அவர் அந்த டாக்குமெண்டை ரொம்ப ரகசியமா.. அதை பாதுகாப்பதற்காக தான்.. அவர் வீட்டிற்கு எடுத்துட்டு கிளம்பிட்டார் போல. இனி அது சம்பந்தமா.. இங்கு எதுவும் எடுத்துட்டு வரமாட்டார் அக்கா. என்னைய வீட்டு ஹாலிற்கு மட்டும் தான் அனுமதி. வேற எதுவும் தெரிந்துக் கொள்ள முடியாது. ”
” ம் சரிடா.. நீ இது சொன்னதே போதும். நான் பாத்துக்கிறேன்.. வைக்கிறேன். ”
” ம்.. சரிக்கா. ”