வெண்ணிலா தன் பணியை நட்சத்திரங்களுடன் சேர்ந்து செய்துக் கொண்டுயிருந்த.. அதிகாலை வேளையில் ‘ ஓம் நமோ நாராயணா!. ‘ பாடல் முடிந்திருந்த.. தன்னவளின் வீட்டினுள் நுழைந்தான் வேந்தன்.. அவனுடன் சித்ரா, வசுந்தரா.
சித்ராவிற்கு.. வேந்தன் யாரையும் அழைக்காமல் நேரா உள்ளே வரவும்.. என்ன பண்ணுறான்?. அவர் வேந்தனை பார்த்தபடி நிற்க.. வசு எதையும் கண்டுக் கொள்ளவில்லை.. அவளின் திட்டம்.. இன்று நிறைவேறிய குஷியில் கிளம்பி வந்துள்ளாள்.
” அம்மா உட்காருங்க.. அத்தம்மாவ காபி எடுத்துட்டு வரச்சொல்லுறேன். ”
வேந்தன் உள்ளே சென்று கூற.. அங்குயிருந்த பாட்டி வெளியே வரவேற்க வந்தார்..
” வாம்மா சித்ரா, வாங்க வசுகுட்டி.. எப்படி இருக்கீங்க?. ” அவளின் அருகில் பாசமாக கேட்க..
சித்ரா நல்லாயிருக்கேன் என்பது போல புன்னகைக்க.. ” நான் நல்லாயிருக்கேன் பாட்டி, நீங்க எப்படியிருக்கீங்க?. எங்க தாத்தா இன்னும் தூங்குறாற?. வேற யாரையும் கூட காண்ணோம்?. ”
” தாத்தா காடு, தோட்டம் பார்த்து வர கிராமத்திற்கு அருணாச்சலம், அமுதனோட போய்யிருக்கார். இன்பா மில்லிற்கு போய்யிருக்கான். ”
” பாட்டி.. அரசி ரூம்மில் இல்ல.. எங்க போய்யிருக்கா?. ” பாட்டியின் அருகில் நின்றபடி கேட்க..
” என்ன அதிசயமா இருக்கு!. நானே அவ எங்கனு உன்னிடம் தான் தெரிந்துக் கொள்கிறேன். அவ எங்கனு?. நீ என்னை கேட்குற. அவ ரூம்மில் நல்லா பார்த்தியா?. ” சிரிப்புடன் கேட்க..
” பார்த்தேன் பார்த்தேன்.. உங்க பேத்தி எங்கேயும் இல்ல. நான் கிளம்பிடேனு சொன்னப்ப.. சரி வாங்கனு சொன்னா. எங்கேயும் வெளியில் இருப்பது போல சொல்லவே இல்ல. எங்க போனானு சொல்லுங்க. போய் அழைச்சுட்டு வரேன். ” பாட்டி ஏதோ கூறவர..
” டேய் உட்காருடா. காலையில் எங்க போய் இருக்க போறா?. கோயிலுக்கு தான் போய்யிருப்பா. ” அவருக்கு பாட்டியின் நடவடிக்கை.. வீட்டிற்கு வரப்போகும் மாப்பிள்ளையிடம் நடந்துக் கொள்வது போல இல்லை என்பதில் வருத்தம்.
கடந்த ஒரு வாரமாக அதிக நேரம் இங்கே இருந்தால்.. வீட்டில் உள்ளவர்கள் மாப்பிள்ளை அல்லாது.. இன்னொரு மகன், பேரன் என்னும் அளவிற்கு அனைவரிடமும் மிகமிக நெருங்கிவிட்டான். அவன் எழிலரசிக்கு காய்சல், உடல்நிலை சரியாகும் வரை பகல் பொழுதில் ஹாலில் படுக்க வைத்து.. அவன் ஆபிஸ் வேலையை செய்தான். அவளின் இனிப்பகத்தின் வேலையை.. அவனிற்காக இவ்வளவு நாள் பார்த்தவரின் மேற்பார்வையில் ஒருவரை நியமித்து கொடுத்திருந்தான்.
அங்குயிருந்த நாட்களில் அவனின் முயல்குட்டியின் நடவடிக்கைகள், தேவைகள் என்னவென்று அவளை பார்த்தும்.. அரசியின் மருத்துவகுறிப்பையும் வாங்கி சென்னையில் உள்ள தன் நண்பர்களின் மூலம்.. தெரிந்த கைனகாலஜிஸ்ட் (மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்) அனுப்பி.. பிரச்சனை இல்லை என்பதை தெரிந்துக் கொண்டும்.. வேண்டிய ஆலோசனையும் பெற்றுக் கொண்டான். அவள் தூங்கும் நேரம் மற்றவர்களிடம் நேரடியாகவே கேட்டு தெரிந்துக் கொண்டும்.. பல வருடம் தன் முயல்குட்டியின் குடும்பத்தினருடன் பழகாமல் வீட்டதை ஈடு செய்து குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான்.
அதனால் இப்போது பாட்டிக்கு.. மிகமிக விரும்பும் பேரனாகவும், செல்ல பேத்தியின் மாப்பிள்ளையாக.. அதிக உரிமையுடன் கிண்டல் செய்து பேசுகிறார். அதுதான் சித்ராவிற்கு வருத்தம் கொடுக்கிறது. ஆனால் அவர் உறுதியன்று முதல் கலகலப்புடன் பழகியதால்.. சித்ரா பேசுவதை அவர் சரியாக கவனிக்கவில்லை.. பேச்சும் பெரிதாகவும் தெரியவில்லை.
” ம்.. அப்படி சொல்லுமா. எப்ப வந்தாலும் நாங்க இவன் கண்ணிற்கே தெரியமாட்டோம். எழில் இருந்தா தான்.. எங்க கூடவே உட்காருவான். இல்லையென்றால் அவளை அழைத்து வந்து தான் உட்காருவான். ”
கோபம் போல பாட்டி சொல்ல.. அவர் கூறுவதை வேந்தன் புன்னகையுடன் கேட்க.. ‘ இதுவேறயா.. ‘ என மற்ற இருவர் நினைத்துக் கொண்டனர்.
” பரவாயில்ல ம்மா. நான் போய் கூப்பிட்டுவரேன். ” அவன் திருப்பிய நேரம்.. பேச்சின் நாயகி..
‘ ஊதா வண்ணம் , பர்புல் பாடர் சேலை மற்றும் பர்புல் பிளவுஸ் அணித்து.. எவ்வித ஒப்பனையும் இன்றியே காலை பனிக்காற்றில் கன்னம், உதடு.. ரோஜா வண்ணத்தில் இருக்க.. ஒற்றை தங்கவளையல்.. லட்சுமி டாலர்செயின், தோடு மற்றும் அவனின் பிறந்தநாள் பரிசு செயினும் அணிந்து, தலையில் சிறிய அளவு முல்லைபூ சூடி.. நெற்றியில் சிறிய பழுப்புநிற பொட்டு, அதன்மேல் மஞ்சள், குங்குமம் என தன்னவனின் முன் பிரசாதத்தை நீட்டினாள். ‘
திரும்பியவன் தன்னவளை பார்த்து ஒருநொடி மையலுடன் பார்த்தவன்.. ” நான் மாடியில் இருக்கேன் வா. ” சிறு கோபம் போல மெல்லிய குரலில் கூறி..
லட்சுமி காபியும், பனியாரமும் கொண்டு வர.. அம்மாவிடம் திருப்பி.. ” ம்மா நீங்க சாப்பிட்டுயிருங்க. ” அவர் பதில் கூறும்முன் தன்னவளின் அறைக்கு சென்றான்.
போடா என நினைத்தவள்.. ” வாங்க அத்த.. வாங்க வசுந்தரா.. ” வரவேற்று.. பிரசாதத்தை நால்வரிடம் கொடுத்தாள்.
அவர்கள் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு ஏற்றவாறு சிறு மேஜையை அவர்கள் முன் எடுத்து வைக்க.. பின் லட்சுமி எடுத்து வைத்தார். அவர்கள் செய்துக் கொண்டுயிருந்த நேரம்.. இருவரும் எழிலரசியை பார்த்திருந்தனர். அவள் அணியிருந்த உடை, நகை இரண்டும்.. அன்று பார்த்தவைகளில் ஒன்று என கண்டுக்கொண்டனர். எப்போது வேந்தன் கொடுத்தான் எனவும் நினைத்தனர்.
சிலநிமிடங்கள் கடந்துயிருக்க.. அவளின் போன் அடிக்க.. யார் என்று?. அவள் எடுக்காமலையே அனைவருக்கும் தெரிந்தது. கட்செய்தவள் ” அம்மா டீ போட்டுயிருக்கா?. ” ஆம் என தலையசைக்க..
” இதோ வந்துவிடுறேன். ” பொதுவாக கூறி வேகமாகமாக டீயை பிளாஸ்கில் எடுத்துக்கொண்டு.. தன் அறைக்குள் நுழைந்து.. டிரஸிங்டேபிள் மேல் வைத்துவிட்டு திரும்பியவளை..
அவனவள் உணரும்முன் அவளை தன் காலின் மீது தூக்கிவைத்து.. அவள் கையை மாலையாக தன் கழுத்தில் சூடி.. தன் உயரத்திற்கு அவள் இடைபிடித்து நிமிர்த்தி.. அவளின் ரோஜா இதழிலை மென்மையாக சிறைசெய்தான் அவளவன். ஒருவாரத்திற்கு பிறகான இருவரின் முழுநினைவுடன்.. அவர்களின் உணர்வுகளை பகிரும் முத்தம். அவள் முச்சுவிட முடியாமல் துவளும் போதுதான்.. அவளின் இதழுக்கு விடுதலை கொடுத்து.. நெற்றி முட்டி அவளின் குங்குமம், மஞ்சளை தன் நெற்றியில் ஏற்றிக் கொண்டான்.
சில நொடிகள் கழித்து தன்நிலைக்கு வந்தவளை சற்று தள்ளி நிறுத்தி.. அவளை தலைமுதல் கால்வரை பார்த்துக்கொண்டே ” இப்படி நான் பண்ணாம இருந்தா.. என் முயல்குட்டியே இந்நேரம் கேட்டு வாங்கியிருப்பா. அதான் நானே கொடுத்துட்டேன். ” கள்ளச்சிரிப்புடன் கூற..
” ஆமா ஆமா நானே கேட்டு வாங்கிக்கும் அளவிற்கு.. உங்ககிட்ட வாங்காம இருக்கே பாருங்க. இந்த ஒருவாரமா நீங்க கொடுத்த முத்தம்.. உங்க ஐம்பதாயிரம் முத்தத்தை கூடிய சீக்கிரம் நெருங்கிடும் போல. ” வெக்கமும், காதலும் கலந்து கூற..
‘ தான் அவளிற்கு ஒருவாராமாக அளவிற்கு அதிகமான முத்தம் கொடுக்கிறோம் என.. அவனிற்கே தெரிந்தது. ஆனால் அதில் சிறிதும் தாபம் இல்லா முத்தம். அவள் படும் வலியை தாங்க முடியாமலும், இதனை வருடங்கள் இதேபோல் தானே இருந்துயிருப்பாள் என.. தன் மனவலியையும் போக்கவும்.. அவளிற்கு தன் இதழின் சூடுகூட ஒத்தடமாக இருக்கும்.. என இருவரின் இதமான இருவருக்குமான மருந்து இதைதவிர வேறுயில்லை என்பதால்.. முகத்திலும், அடிவயிற்றிலும் பல நூறு முத்தங்களை கொடுத்தான். ‘
” ஹேய் முயல்குட்டி.. நான் ஒருவாரமா கொடுத்தது வேற கணக்கு முத்தம்.. இது வேற கணக்கு. ”
அவனை இரு கன்னம் பிடித்திழுத்து கிள்ளி.. ” உங்க இஷ்டத்திற்கு கொடுத்துட்டு பொய் கணக்கு காண்பிக்காதிங்க. ”
” ம்.. என் முயல்குட்டிக்கு முத்தம் கொடுக்க.. எத்தனை பொய்கணக்கு கூட நான் காண்பிப்பேன். போடி. ” அவளின் கன்னத்தை அழுத்த முத்தமிட்டு கூறி..அவனின் விருப்ப முறைப்பை பார்த்துவிட்டு.. கீழே வந்து.. அடுத்த சில நிமிடங்களில் கிளம்பலாமா?. என பார்த்தாள் எழிலரசி.
அவள் கூறியதும் தன்னவளை பார்த்தவன்.. ” அரசி.. இப்ப சேலையோடவா வர?. ”
ஏற்கனவே அதிக நேரம் ஆனது போல இருந்ததால்.. ” இந்த சேலைக்கு என்ன அண்ணா.. நல்லாதானே இருக்கு?. ” அனைவரையும் பார்த்தபடியும் கேட்க..
” ம்.. சேலை நல்லாதான் இருக்கு.. ஆனா நாள் முழுவதும் போட முடியாது. ” அவன் அரசியை பார்க்க.. அவள்.. அம்மா லட்சுமியை பார்த்தாள். ” மாப்பிள்ள நீங்க முததடவையா வினோதினி வீட்டிற்கு போறீங்க. நான் தான் பட்டுசேலை கட்டச் சொன்னேன். வெயிலும் இப்ப கம்மியா தானே இருக்கு. நாள் முழுவதும் ஒன்னும் தெரியாது. ”
” அத்தம்மா.. முக்கிய தேவையான பரவாயில்ல. இப்ப சும்மா தானே போறோம். அதனால நாள் முழுவதும் எதுக்கு?. அவளுக்கு வசதியா இருக்காது. ”
அம்மாவிடம் திரும்பியவன்.. ” அம்மா காரில் போய் உட்காருங்க ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன். ”
மாடிக்கு சென்று பின் பாட்டி,அத்தம்மாவிடம் கூறிவிட்டு.. வெளியே வர காரில் பின்பக்கம் அமர்ந்திருந்த சித்ரா.. எழிலரசியுடன் வேந்தன் ஜீன்ஸ் மாற்றி வேஷ்டியும், முன்பு அணிந்திருந்த மஞ்சள்நிற சட்டையே அணிந்து.. கையில் பேக் எடுத்து வந்தான்.
எழிலரசி காரின் கதவை திறந்து உட்கார.. அவளின் அருகில் அமர்ந்திருந்த வசுந்தரா அதிர்ந்து.. ” என்ன நீங்க இங்க?. ” ஏன்?. என்பது அவள் போல பார்க்க..
” இல்ல அண்ணா ஒட்டு வாங்கனு நினைத்தேன். ”
” நான் தான் எப்போதும் ஒட்டுவேன். ” அவள் அடுத்து கூற வரும்முன்..
” நான் அம்மா கூட போய் உட்காருகிறேன். ”
சட்டென்று இறங்கி பின்பக்கம் போய் எரிச்சலுடன் அமர்ந்தாள். தன் வீட்டுக்கார்.. தான் முன்னால் அமர்ந்து.. எழிலை பின்னால் உட்கார வைக்க நினைக்க.. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எழிலரசி எதையும் நினைக்கவில்லை.. முதன்முதலில் அவள் ஆசையாக ஓட்ட வேண்டும் என கூறியதில் இருந்து.. பகல் நேரம் என்றால் அவள்தான் ஒட்டவேண்டும் என்பது அவள் தனுவின் விருப்பம். பின் எழில் வினோவின் வீட்டு முகவரியை கூகுளில் கொடுத்து.. போனை முன்பக்கம் பார்ப்பதற்கு ஏற்றவாறு பொருத்திக் கொண்டுயிருக்க.. வேந்தன் வர.. அதனை வாங்கி பொருத்தினான்.
திரும்பி இருவரையும் பார்த்து கிளம்பலாமா?. என்பது போல பார்க்க.. அப்போது அவனின் போன்.. காரின் பிளூடுத்தில்.. ‘ ஈஸ்வர் அண்ணா ‘ என்று ஒலிக்க.. ” சொல்லுங்க அண்ணா. ”
” வேந்தா நீங்க எழில் வீட்டில் இருந்து கிளம்பிட்டீங்களா?. ”
” இல்ல.. இப்ப தான் கிளம்பி ரெடியா காரில் உட்கார்ந்தோம். ”
” கடைக்கு இப்ப வாங்களே. ” வேந்தன் கிளம்பலாம் என அரசியை பார்க்க.. பின் இருவரும் லட்சுமி, பாட்டியை புன்னகையுடன் பாய் என கையசைத்து.. அரசி உணவகம் நோக்கி கிளம்ப..
” சரிண்ணா. ஆனா எதுக்கு?. யாருக்கும்?. ” பிரச்சனையில்லேயே என முடிப்பதற்கு முன்..
அதை முன்பே புரிந்து.. ” காவ்யா.. விஸ்வநாதன் வீட்டிற்கு தான் கிளம்பினா. அவரோட முத்த தங்கையும், சித்தி பொண்ணும்.. பசங்களோட வந்துயிருக்காங்க. அவங்க எல்லோரும் இங்க வரமுடியாது.. அதனால அவள அங்க வரச் சொன்னாங்கனு நைட் சொல்லி.. காலையிலேயே கிளம்பினா. சரி நீங்களும் அங்க போவதால் கடைக்கு வரச்சொன்னேன். ”
” ம்.. சரிண்ணா. வெளியில் வாங்க. கடைக்கு பக்கத்தில் வந்துட்டோம். ”
வேந்தன் இறங்க.. ஈஸ்வர், காவ்யா, யாழினி வந்தனர். புன்னகையுடன் பார்த்தவன்.. யாழினியை தூக்கி கொஞ்ச.. காவ்யா அவனிடம் புன்னகை மட்டும் புரிந்து.. பின்பக்கம் ஏறினாள். அவளும் ஓட்டுனர் இருக்கையில் எழிலரசியை பார்த்து அதிர்ந்தார். இவர்கள் வீட்டில் பெண்கள்.. ஆண்கள் இருக்க கார் ஓட்டியது கிடையாது. அதனால் வந்த அதிர்ச்சி. எழிலையும் பார்த்து புன்னகை மட்டுமே. சித்ரா நடுவில் அமர.. குழந்தை வேடிக்கை பார்த்துவர வசதியாக ஜன்னல் அருகில் உட்கார்ந்துக் கொண்டாள்.
ஈஸ்வர் எழிலரசியின் பக்கம் வந்து.. பத்திரம் கூறி புன்னகையுடன் தலைதடவி.. வேந்தனின் செல்ல முறைப்பை பெற்று.. பாய் கூறி வழியனுப்ப.. மிதமான வேகத்தில்.. இனிமையான பாடலை கேட்டபடி கால் மணிநேரம் கடந்துயிருக்க.. வேந்தன் ஆபிஸ் வேலையை பார்த்தபடி வந்தான்.
” வேந்தா நீ பண்ணுவது சரியே இல்ல. வீட்டில் தான் எப்போதும் வேலை, வேலைனு பார்த்துட்டு இருக்க. காரில் கூட பார்த்துட்டு வர.. எழில் கார் ஒட்டுவதால் நீ எங்ககூட பேசிட்டு வரலாம் இல்ல. ”
” அம்மா. முக்கியமானது ம்மா. ஒரு ஐந்து நிமிடம். ” வேலையை பார்த்தபடியே கூறினான்.
” என்ன தான் முக்கியமானதுனு தெரியல. சனிக்கிழமை கூட அப்படி என்னடா முக்கியமான வேலை. கேட்டா பதில் மட்டும் வராது. ஐந்து நிமிடத்தில் முடிக்கல.. நான் லாப்டாப்பை புடுங்கி வைச்சுக்குவேன். ” சித்ரா கூற..
அவனின் அரசி சிரிக்க.. ” சிரிக்காதடி ” கூடவே அவளை முறைத்துவிட்டு.. தன் வேலையை முடித்து.. பின்பக்கம் பேசுவதற்கு ஏற்றார்போல உட்கார.. அது அவனிற்கு இருவிதங்களில் வசதியாக அமைந்தது.
அம்மாவிடம் பேசியவன்.. இடை இடையே தன்னவளிற்கு தெரியாமாலையே அவளின் இடையை பார்த்தபடி வந்தான். அவள் கார் ஒட்ட வசதியாக முந்தியை.. எதிர் பக்கத்திலிருந்து முன்பக்கமாய் கொண்டு வந்து விட்டுயிருக்க.. சிறு இடைவெளியில் அவளின் சந்தனநிற இடை.. அடர்ஊதாநிறத்திற்கு பளிச்சென்று தெரிந்தது அவனிற்கு வசதியாகி போனது.
திருச்சியில் நுழைய.. சித்ராவிற்கு ஈஸ்வர் கூறிய தங்கைகள் வந்துயிருக்கிறார்கள் என்று கூறியதால்.. ” வேந்தா வினோ வீட்டிற்கு கொஞ்சம் பூ, ஸ்நாக்ஸ் வாங்கனும். எங்கனு பார்த்து சொல்லு. ” சரி என தலையசைத்து..
” அரசி இரயில்வே ஸ்டேஷன் ரோட்டிற்கு போ. ” அவனை பார்த்தாள்..
கடையின் பெயர் சத்தமில்லாமல் கூற.. மலர்ந்த புன்னகையுடன் வேகமாக தலையசைக்க.. அதனை ரசிப்புடன் பார்த்து முன்பக்கமாக திரும்பிக் கொண்டான். மூவரும் கவனித்தும், கவனிக்காது போல வந்தார்கள்.
சில நிமிடங்களில் கார் அவள் விரும்பும் கடைமுன் நின்றதும் பின்பக்கம் திரும்பியவன்.. ” நீங்க கீழ இறங்கி நீக்கிறீங்களா?. ” யாழினி உறங்கிக் கொண்டுயிருந்ததால்.. மூவரும் இல்லை என தலையசைக்க.. அரசி காரின் பின்பக்கம் வந்து நிற்க.. வேந்தன் கடையின் உள்சென்றான். சென்றவன் சில நிமிடங்களில் கையில் மூன்று பகுதியாக அசோகா அல்வா வாங்கி அருகில் அழைத்தான்.
‘ அங்கு அழகான குண்டுமல்லி பூக்கள் மலர்ந்தும் மலராமல் இருக்க.. ஸ்விட்டை கையில் வாங்கிக் கொண்டவள்.. மூன்றுசரங்கள் அடங்கிய மல்லியை வாங்கி தன்னவளிற்கு சூட்டினான். ‘
வேந்தனின் செயலை மூவருமே கவனித்தனர். சித்ராவிற்கு வேந்தனின் செயல் புதிது என்பதால் அதிர்ந்து அருகில் பார்க்க..
அதை புரிந்து.. ” ம்மா.. அண்ணா உறுதியன்றில் இருந்தே அவர் அவங்க கூட இருந்தா.. அண்ணாதான் பூ வைத்து விடுவாங்க. இது தவிர அவங்க வைக்கும் பூ எல்லாமே அண்ணா வாங்கி கொடுப்பது தான். தினமும் தவறாம இது நடக்குது. எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். ”
கேட்டவரோ மனைவியாக!. மகிழ்ச்சி பாதியும்.. அம்மாவாக!. இதுநாள் வரை தெரியவில்லை என்ற சிறு கவலை பாதியாக நினைத்தார்.
பின் அவர்களுக்கு கொஞ்சம் கவரில் வாங்கியும், வீட்டிற்கு கொண்டு செல்ல என அரசியிடம் கேட்டு அதனை வாங்கிக் கொண்டு காரில் இருந்தவர்களிடம் ஸ்விட், பூவை கொடுத்துவிட்டு.. வேந்தன் மீண்டும் கடையினுள் சென்றுயிருந்தான்.
எழிலரசி காரின் பக்கவாட்டில் நின்று.. அல்வாவை சிறிது சிறிதாக சாப்பிட்டுக் கொண்டுயிருக்க.. அவளின் முன் ஒருவன்.. ” ஹேய் குட்டிம்மா!.. நீ இன்னும் அல்வா சாப்பிடுவதை விடலையா?.. ”
நேராக வந்து பேசியவன் தன்னிடம்தான் பேசினா என்று?. பக்கத்தில் பார்த்து.. யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டவள்.. அவனின் அழைப்பு இப்போதுதான் ஞாபகம் வந்து.. அவனை யார் என்று தெரியாலால்?.. அவனை பார்க்காமல் சற்றுதள்ளி நின்றாள்.
அவளின் நிலையை புரிந்துக்கொண்ட புதியவன்.. ” ஹேய் குட்டிம்மா. நான் உன் அண்ணா இன்பனிற்கு தெரிந்த.. மாமா கதிரவன் பிரண்ட் சந்துரு. ”
அப்படியா என்பது போல பார்க்க.. அவனும் ஆம் என தலையசைக்க.. இவர்களை பார்த்த காவ்யா குழந்தையை சித்ராவிடம் கொடுத்து.. அவளும், வசுவும் இறங்கினார்கள்.
புதியவன் தான் யார் என்று கூறியதும்.. உடனே இன்பாவிற்கு வீடியோ கால் செய்தாள். அவன் எடுத்தவுடன்.. ” ஏன்டா அண்ணா.. உனக்கு கொஞ்சும் கூட அறிவே இல்லையா. ” கேட்ட மூவரும் அதிர்ந்தனர்.
எடுத்தவுடனே மரியாதை பலமாக இருக்கவுமே புரிந்தது.. ” ஏன்மா?. உன்னைய யார் குட்டிம்மானு கூப்பிட்டா?. ” அவனை முறைத்து.. புதியவனை காண்பிக்க.. சந்துரு என்பவனோ அவளின் மரியாதையில் சிரிப்பும், அதிர்ச்சியாகவும் தன் எதிர் இருந்தவனை பார்க்க..
” ஹாய் சந்துரு அண்ணா.. எப்படியீருக்கிங்க?. ”
” ம்.. இதுவரைக்கும் நல்லாதான் இருந்தேன். இனி நான் வீட்டுக்கு முழுசா போய் சேருவனானு தெரியல. உன் குட்டி.. இல்ல அவங்க பெயர் என்னடா?. ”
” எழிலரசி.. ”
” ம் பெயர் நல்லாதானே இருக்கு. அப்ப எதுக்குடா?. ” அவனிடம் இருந்து திருப்பியவள்.. ” அண்ணா உன்னைய அப்புறம் கூப்பிடுகிறேன். ”
அவனிடம் திருப்பி.. இப்ப என்ன?. என்பது போல பார்த்தாள்.
” ம்.. எழிலரசி பேர் நல்லாயிருக்கு. உன்னை பார்த்தும் இன்பன் தங்கைனு பேச வந்தேன். ”
” எதுக்கு?. நீங்க என்னிடம் பேசனும்?. ” அவனை பார்த்து… ‘ நீ ஏன்டா என்னிடம் பேசனும்?. ‘ என்று தான் கேட்க தோன்றியது.
‘ அவன் அப்போதுதான் தூங்கி எழுந்து.. இரவு உடை கிரே பேன்ட், சிவப்பு அரைகை விநெக்டீஷர்ட் அணிந்தவன்.. பட்டுபுடவையில் இருக்கும் பெண்ணிடம்.. சட்டென்று குட்டிம்மா என்று அழைக்க.. அருகில் செல்பவர்களின் காதில் பாதி குட்டி.. என்று மட்டும் கேட்ட ஒருவர்.. அவளை பார்த்த விதமே கடுப்பின் உச்சத்திற்கு சென்றால் தான்.. தன் கோபத்தை அண்ணாவிடமும், அவனிடம் சற்று கடுமையாக நடக்க, நினைக்க காரணம். ‘
அவளிற்கு அவன் பதில் கூறவரும் நேரம்.. அவனிற்கு கால்வர சற்று தள்ளிச்சென்று பேசினான். இவளின் அருகில் முன் நின்ற வசு இன்பாவிற்கு தெரிந்தவர் என்றவுடன் காவ்யா இருப்பதால் காருக்குள் வந்துவிட..
காவ்யா அவன் நகர்ந்ததுடன்.. ” உனக்கு தெரிந்தவரா எழில்?. ”
அண்ணாவுடன் பேசியது கேட்டவில்லையா?. என்ற பார்வையையும்.. ” எனக்கு தெரியாது அக்கா. அண்ணா மூலமா என்னை தெரியும் போல. ” கடுப்பை அடக்கிக் கொண்டு பதில் கூறினாள்.
” ஓ.!.?. அவருக்கு என்னவாமா?. ”
தூங்கி எழுந்து வந்துயிருந்தாலும்.. பார்க்க நன்றாகவும், வசதியுடையவன் என்பது அவனின் போன், கார்சாவி , முக அமைப்பில் தெரிந்தது. கல்லூரில் அண்ணாவிற்கு தெரிந்தவர். தேவையில்லாமல் யாரேனும் பேசுவார்களா?. ஏதேனும் சுவாரசியமான விஷயம் இருக்குமோ?. என்ற ஆவலுடன் கேட்க..
காவ்யாவின் எண்ணம் அனைத்தும்.. அவர் அவனை ஆராயும் பார்வையில் புரிய.. கேட்டதற்கு பதில் கூற பிடிக்கமாலும்.. அவரை கண்டுக் கொள்ளாமல்.. ” அக்கா வரேன் இருங்க. ” நடக்க ஒருஅடி எடுத்துவைக்க..
அவளின் எண்ணத்தின் நாயகன் வந்துக் கொண்டுயிருந்தான். அவள் தன்னை தேடியது.. அவள் கண்ணில் தெரிய.. ” என்ன முயல்குட்டி?. ” வாய்யசைவில் கேட்க..
அப்போதுதான் அவளின் அருகில் வந்தவனை கவனித்தான். யோசனையுடன் அருகில் வந்தான். காவ்யா அமைதியாகி நடக்கபோதை கவனிக்க தயாரானாள்.
” நீங்க?.. ” ” டேய் சந்துரு ” என இரு குரல்..
யாரை பார்க்க?. என சந்துரு முழித்தபடி.. பின்னால் வந்த குரல்.. யார்?. என்று அறிந்ததால்..
முன்னால் இருந்தவனை கண்டுக்கொண்டு புன்னகையுடன்.. ” நீங்க வேந்தன் தானே?. நீங்களும் எழிலரசிக்கு தெரிந்தவரா?. ” என்று எழிலரசியின் அருகில் நின்றாதால்.. தன்னை போல எழிலை ஏதோ வகையில் தெரிந்தவரா?. என இருவரையும் பார்க்க..
சந்துரு அருகில் அப்போதுதான் வந்து.. இதனை கேட்டவன்.. ” டேய் அவங்க இரண்டுபேரும் தெரிந்தவர்கள் என்பதால்தான்.. அவருக்கு உன்னையே தெரியும். ” ரகசியமாக கூற..
” கதிர் அண்ணா இவருக்கு ஒருத்தவங்கள பார்த்தவுடன் எப்படி கூப்பிடனும் என்று.. இவருக்கு தெரியாதா?. ”
தனக்கு இவனை யார்? என்று தெரியதபோது.. அவனாக பேசினான்.. தனுவிடம் பெயர் கூறி.. தெரிந்த பொண்ணா என்று கேட்கவும் கோபம் வர.. இதனை காவ்யா இன்னும் சுவாரசியத்துடன் பார்த்தாள்.
சந்துருவோ கதிர் அண்ணாவா?. மாமா இல்ல. அதை அவன் கண்கள்காண்பிக்க.. பொருட்களை வண்டியில் வைத்துவிட்டு.. தன்னவளின் கேள்வியை கேட்டபடி வந்த.. வேந்தனின் கண்கள் அவனின் எண்ணத்தை அறிய..
புன்னகையுடன்.. ” சந்துரு.. அரசிக்கு கதிரவன் மாமாதான். ஆனா அண்ணாவும் கூட. ” என்ன என்று?. அவன் முழிக்க..
அரசி வெளிப்படையாகவே வேந்தனின் கையில் கிள்ள.. “ஆஆ..” கையை தேய்த்தவாறு அவளை பார்க்க.. ‘ என்ன?. ‘ என்று கண்களால் அவள் மிரட்ட.. புன்னகையுடன் ‘ ஒன்றும் இல்லை ‘ என வேந்தன் முன் இருந்தவர்களை பார்க்க..
” ரோட்டில் வைத்து இதெல்லாம் உங்களுக்கு தேவையான அண்ணா?. ” கதிரவன் நக்கலாக கேட்க..
” கொஞ்சம் அவரப்பட்டுடேன். சரி அரசி இப்படி கோபம்படும் அளவிற்கு.. இவர் என்ன பண்ணினார்?. ” நடந்ததை அவன் கூற.. அவள் எண்ணியதை மெதுவாக கூற.. தன்னவளின் அருகில் நின்றிருந்தவன்.. அவளின் பதட்டத்தை தணிக்க.. கையை பிடித்துக்கொண்டான்.
” சந்துரு.. நீங்க கொஞ்சம் பொறுமையா அரசி கூட யார் இருக்காங்கனு?. பார்த்துட்டு.. அவங்களோட இருக்கும் போது கேட்டுயிருக்கனும். இல்ல கதிரவன தெரியும் இல்ல.. அவரிடம் கேட்டாவது பேசியிருக்கலாம். அவ உங்களை பார்த்ததே இல்ல. தீடீர் வந்து நல்ல தெரிந்தவர் மாதிரி பேசினா. அது அவளுக்கு நல்லாதவும் இருக்கும், இல்ல கெட்டதிலும் கொண்டுபோய் விட்டுவிடும். ”