விஸ்வநாதன் வீட்டில் நிறைய ஆட்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதால்.. பாதுகாப்பு கருதி தங்கள் அறையை முடி வைத்துயிருக்க.. இதை மறந்த வினோ விசாகனை அந்த அறைக்கு கூட்டிச் சொல்லுமாறு எழிலரசியிடம் கூற.. அது லாக் செய்துயிருப்பதால் அவரசம் காரணமாக பக்கத்தில் இருந்த சங்கவின் அறைக்கு சென்றார்கள்.
அனைத்தும் முடிய வெளியே வந்தவன்.. சின்ன அத்தையுடன் உட்காரும் ஊஞ்சலை பார்த்து.. ஆடவேண்டும் என சிறு அழுகை வரவழைத்து.. பிடிவாதம் பிடித்தான். அவனுடன் ஆட அவளுக்கும் ஆசைதான்!. அறையை பார்த்தாள் பெண்ணின் அறை தான். சங்கவியை பற்றி சிறிதுஅறிந்துயிருந்தால்.. எந்தவித தயக்கமும் இன்றி ஊஞ்சலில் அமர்ந்தார்கள்.
அந்த ஊஞ்சல் முட்டைவடிவில்லை.. ஆனால் அடிபாகம் நல்ல அகலமாகவே.. இரு சிறு தலையனை போட்டு.. குறுக்கி படுத்துக்கொள்ளும் படியாக ( தாயின் அடிமடியில் படுப்பதுபோன்று. ) பார்த்தவுடன் படுக்க தூண்டியது. ஆனால் இருவரும் உட்கார்ந்தபடி ஆடிக்கொண்டுயிருந்தனர். அரசிக்கு 3மணிகே எழுந்தது.. தலைகுளியல், கோயில், கார் ஓட்டியது என ஒய்வில்லாமல் இருந்ததால் கண்களில் சோர்வும்.. அறையில் வெப்பமில்லாத குளுமை, ஊஞ்சல் ஆட்டுவதினால் ஐந்தே நிமிடத்தில் அவளிற்கு உறக்கம் வந்தது.
அந்நேரத்தில் ரேவதியின் பொண்ணும், யாழினியும் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒழிந்துக்கொள்ள அங்கு வந்தவர்களை பார்த்ததும்.. அவன் அவர்களுடன் போக நினைக்க.. சரி எனக்கூறி.. அவர்களிடம் பொறுமையாக தான் இங்கு இருப்பதாக சித்தாப்பா, மாமாவிடம் கூறி விடவேண்டும் என சொல்லி அனுப்பினாள். இருந்தும் பத்து நிமிடம் மட்டும் படுத்துச் சென்றுவிடலாம் என எண்ணி படுக்க.. அது 45நிமிடம் ஆகியது.
‘ தன்னவளின் முன்னால் இருந்த வேந்தன்.. தன் குரலை ஆழ்ந்த உறக்கத்தில் கூட கேட்டு பதில் கூறினாளே என்று மகிழ்வதா!. இவ்வளவு நேரம் யாரிடமும் கூறாமல்.. படுத்து உறங்கிக் கொண்டுயிருக்கு இருப்பவளை.. கோபம் கொண்டு கண்ணாபின்னா என திட்டுவதா?. இல்லை.. தன் மடியில் படுத்துயிருப்பது போல உறங்கிக் கொண்டுயிருப்பவளை அள்ளிக் கொஞ்சுவதா!. என தெரியாமல்.. தலையில் கை வைத்தபடி நின்று தன்னை முதலில் நிதானம் படுத்திக் கொண்டான். ‘
தன் பின்னால் நின்றவர்களை பார்த்தான். அவர்கள் அப்பாடா என பார்த்துயிருந்தனர். விசாசன் எப்போது?. எப்படி கீழே வந்தான் என யாரும் யோசிக்கும் நிலையில் இல்லை.
” மாமா.. அண்ணி நீட்டி படுக்கட்டும்.. இங்க உங்க தங்கைகள் எல்லாம் வந்தாலும் வருவாங்க. அவங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால அறைய திறந்து வைங்க?. ”
சரி என தலையசைத்து நாதன் கதவை திறந்து.. அவனிடம் கூறிவிட்டு நாதன் மட்டும் கீழே சென்றுவிட.. சில நொடியில் அரசியை அள்ளிக் கொண்டு.. அவர்களின் அறையில் படுக்க வைத்தான்.
கட்டிலின் பக்கவாட்டில் இருந்த ஷோபாவில் அமர்ந்த இருவரும்.. தன் முன்னால் கவலையும், மிகவும் சோர்ந்து.. கலைப்புடன் இருந்த தங்கையின் தலையை தடவியபடி.. ” சாரி வினோ.. அரசி அங்கு இல்லனு என்ற பதட்டத்தில் அவங்க முன்னாடி கத்தி பேசிட்டேன். சாப்பிட்டியா? ஏன் இவ்வளவு கலைப்பா இருக்க?. ”
அவள் கண்கள் கலங்கி விட்டது. ” சாரி ண்ணா. நீ என் பக்கத்திலே வைத்துக் கொள்ள சொன்ன. நான் எல்லோரும் தோசை உற்றிக் கொண்டும்.. எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டு இருந்ததில் மறந்துட்டேன். ”
யோசனையுடன்.. ” இத்தனை பேர் இருக்காங்க. ஏன் நீ மட்டும் எல்லாம் பார்த்துட்டு இருந்த?. ” அவளின் சிறிய வேர்வையை அங்குயிருந்த துண்டில் துடைத்தபடி.. கடின குரலில் கேட்டான்.
” அண்ணிகள் வரும்போது அத்த வேலை செய்ய சொல்ல விரும்ப மாட்டாங்க. சாப்பாடு மட்டும்தான் நான் செய்வேன். மற்றவைக்கு ஆள்யிருக்கு. அத்தையும் கூட செய்வாங்க. இப்ப அம்மாகூட பேசிட்டுயிருந்தாள அவங்க பண்ணல. என்னைய எப்போதும் முதலில் சாப்பிட சொல்லிவிடுவாங்க. அதனால நீங்க வரும்முன்னே நான் கொஞ்சமா சாப்பிட்டேன். “
” எழில் அண்ணி.. விசாகன் கூட.. இல்ல அம்மாகூட இருப்பாங்கனு இருந்துட்டேன். ஆனா சாப்பிடும்போது யாரிடமானது கேட்டுயிருக்கனும். வீட்டுக்கு வந்து ஒன்னும் சாப்பிடாமலே தூங்குறாங்க. அது இன்னும் வருத்தமா இருக்கு. நீயும் கூட இன்னும் சாப்பிடல. அவங்களா எழுத்துக்கொள்ளும் வரை தூங்கட்டும்.. சட்னு எழுந்தா.. இல்ல நம்ம எழுப்பினா தலைவலிக்கும். நீ வா கீழ போகலாம். ” எனக்கு சாப்பாடு வேண்டாம் என்பது போல அரசியை பார்க்க..
” அண்ணா உன்னைய சாப்பிட சொல்லமாட்டேன். நீங்க அண்ணி வீட்டு ரூமில் இருப்பது என்றால் ஒன்னுல. இங்க ஒன்னா இருந்தா நல்லாயிருக்காது. என்னாலையும் இருக்க முடியாது.. மதியம் பார்க்க ஆரம்பிக்கனும். ”
அவளின் கலைப்பு, நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து.. ” ஹோட்டலில் சொல்லிக்கலாம் டா. அத்தை, மாமா, அம்மாவுக்கு மட்டும் பண்ணு. நீ போ நான் ஐந்து நிமிடத்தில் வரேன். ” சரி என தலைசைத்து அவள் கதவி சாற்றி சென்றாள்.
‘ தன்னவளை பின்பக்கமாக கட்டிக்கொண்டு படுத்தான். கூந்தல் பாழாகாமல் இருக்க.. அவள் தூக்கத்திலேயே முடியை முதுகில் இருந்து பக்கவாட்டில் வைத்துவிடுவாள். பின்பக்கமாக அவன் படுக்க.. அவளின் வெற்று முதுகுமுழுவதும் மல்லிகை மணம். தன்னை சில நிமிடங்கள் பதட்டம் அடைய செய்தவள் இவள்தானே.. சமநிலைபடுத்தும் வேலையும் இவள்தான் செய்ய வேண்டும் எனஅவனே முடிவு செய்து.. அவனின் மீசை ரோமத்தால் முதுகில் கோலமிட.. அவள் கூசி நெகிழ்ந்தாள். ‘
அவனின் மச்சத்தில் மிகமிக மென்மையாய் முத்தமிட்ட.. அதன் எதிரொலியாக.. ” தனு மாமா. சும்மா இருங்க. நான் தூங்கனும். இன்னும் ஐந்தே நிமிடம். ” உறக்கதிலேயே கனவா?. நினைவா?. அறியாது கூறினாள்.
‘ கேடி முயல்குட்டி ‘ செல்லம் கொஞ்சி எழுந்து.. போர்வை போர்த்தி.. பின் கீழே செல்ல.. அப்போது கதிரவனும், சந்துரு.. உடன் திலகன், சத்யாவும் உள்ளே வந்தனர்.
வேந்தனும், வினோதினியும் பேசிக் கொண்டுயிருந்த அதேநேரம்.. அங்குயிருந்த கீழ் அறையில்.. ” காவ்யா அக்கா.. அந்த பொண்ணுக்காக.. உன் கொழுந்தனார் கல்யாணம் முன்பே இப்படி கோபப்படுறாரு?. ஆனா நாங்க பார்த்த வரைக்கும் இருக்குற இடம் தெரியாம இருந்தாரு?. இப்ப இப்படி இருக்காரு?. மாமாக்கூட எப்படி இருப்பாரு?. ”
ஏற்கனவே சிலவற்றால் குழப்பமும், கோபமாக இருந்தவளை.. தங்கையை தன் முன்னாலே சத்தமாக வேந்தன் பேசியது, அதன்பின் விஸ்வநாதனும் பேசியது.. இன்னும் அவளை கோபம் கொள்ள வைத்தது..
இப்போதுதான் அமைதியாகி.. ” ம்.. ஒன்றமாதம் முன்னாடிவரை வேந்தன்.. அமைதியாதான் இருந்தாரு. இல்ல நடித்தாரானு தெரியல. ஆனா எழிலரசியை கல்யாணம் செய்ய முடிவு செய்ததில் இருந்தே.. ஆளே வேற மாதிரி தான் ரேவதி இருக்காரு. எனக்கு ஒரு உதவி பண்ணமுடியுமா?. ”
” என்ன அக்கா. உன் கொழுந்தநார்.. இல்ல அந்த பொண்ணு சம்பந்தபட்ட விஷயாமா?. “
தன்அண்ணா அவர்களை வைத்து தங்களை திட்டியதால் அவர்களை பற்றியே பேசிக்கொண்டுயிருப்பது.. அவர்களை பற்றி பேசும்போது காவ்யா முகத்தில் ஏதோ யோசனை செய்வது போல இருக்க.. அவர்கள் சம்பந்தபட்ட விஷயம் தான் யூகித்து கேட்க..
” ம்.. உங்களால விஸ்வா அண்ணா ஆபிஸ் ரூம்மிற்குள் போக முடியும்மா?.. ” அதிராமல் குண்டை போட்டாள். தனக்கு வேந்தன் சம்பந்தபட்ட டாக்குமெண்ட் வேண்டும் என்று.
அய்யோ என அதிர்ந்தாள். ” அக்கா அசால்டா கேட்குறீங்க. அண்ணா நாங்க வரும்போது எப்போதும் ரூம்மை சாற்றிதான் வைப்பாங்க. இது அவர் கல்யாணம் முன்பே நடப்பது. அதனால இதெல்லாம் முடியாது க்கா. ஆனா என்ன தேவைனு சொல்லுங்க?. இல்ல எதுக்குனு சொல்லுங்க?. அதை பற்றி ஏதாவது அவரிடம் மறைமுகமா தெரிந்துக் கொள்ளாம். ”
” ம்.. அது.. “
” என்ன நீங்களும் அவங்க இரண்டுபேர் பற்றி தான் பேசிட்டுயிருக்கீங்களா?. ” அம்மா, அண்ணனின் மீது வருத்தமும், கோபமுமாக இருந்தவரை.. ஏதோ பதட்டத்தில் அவ்வாறு நடந்துக்கொண்டார் என வசுவும் உடன் அத்தை, மேகாவும் சமாதானம் செய்து.. காலையில் சீக்கரமே எழுந்தது.. கடைக்கு செல்ல வேண்டும்.. அதனால் ஓய்வு எடுக்கட்டும் என வினோவின் மாமானார் வெளியில் சென்றுயிருக்க அம்மா, அத்தை இருவரையும் படுக்க வைத்துவிட்டு இங்கு வந்தார்கள்.
இங்கேயும் இருவரின் பற்றிய பேச்சுதான் என்று. அவர்கள் முகத்தை வைத்தே தெரிந்தது. சட்டென்று உள்ளே வந்து கேட்கவும்.. அதுவும் இருவருமே அவர்களின் மிக நெருங்கிய உறவுகள்.. ‘ என்ன கூற?. ‘ அவர்களை பார்த்த படி இருக்க..
“ம்.. இப்படி பார்ப்பதிலேயே தெரியுது அண்ணி.. அவங்களை பற்றினு. விடுங்க அண்ணா இப்பெல்லாம் அப்படிதான். ஆனா யாரால இப்படி மாறினாரோ.. அவங்கள ஒருவழி பண்ணலாம். ” அவள் கூறியதில் ஆச்சிரியம், அதிர்ச்சி.. பக்கத்தில் அவளின் உறவுமுறை பெண்ணை வைத்தே கூறியது..
அவர்களின் அதிர்ச்சி பார்த்து.. ” அக்கா.. நான் வசு கூறியதை கேட்டு.. ஒன்னும் நினைக்கமாட்டேன். வசுக்கு இப்ப கொஞ்ச நாளா.. இவங்க அண்ணாவ இப்படி பார்த்தே தாங்க முடியல.. ஆனா எனக்கு பல வருடமா பார்த்து தாங்க முடியல. ”
” என்ன பலவருடமா பார்த்தா. புரியும் படியா சொல்லும்மா. ”
” அதுவந்து தாமரை க்கா. எழிலரசிக்கு இன்பானு ஒரு அண்ணா இருக்காரு. அவளுக்கு ஏதாவது கஷ்டமோ.. இல்ல மனசு வருந்தும் படியா ஒன்னு நடக்க விடமாட்டாரு. அவர் தங்கச்சிய அப்படி தாங்குவாரு. இப்ப கூடவே.. இவங்க அண்ணா. எழிலரசிக்கு ஒன்னு என்றவுடன் என்னிடமும்.. இன்னைக்கு வித்யாவை கேட்ட கேள்வி போல.. உன் பெயர் என்னனு?. கேட்டாரு. இந்த விஷயம் இன்பாக்கு தெரியாது. தெரிந்தது அவ்வளவு தான். ”
” சரி அதவிடுங்க மேகா. நமக்குனு ஒருநேரம் வரும் அப்ப பார்த்துக்கலாம். அவங்களை பற்றி இப்ப பேசி.. நாம்ம ஷாப்பிங் போற சந்தோஷமான மனநிலைய மாத்திக்க வேண்டாம். ”
” ம்.. ஆமாம்.. நாம்ம முதலில் வெளியில் போலாம். இன்னும் கொஞ்சம் நேரத்தில் கிளம்பலாம். ” தன் தங்கைகளிடம் திருப்பி.. ” நாம்ம பின்ன பேசலாம். ” முன்னால் பேசியதை குறித்துக் கூறினாள்.
அனைவரும் புன்னகையுடன் வெளியில் வர.. வேந்தன் கீழே வர.. நால்வரும் உள்ளே நுழைந்தார்கள். அனைவருமே ஒருநொடி ‘ என்னடா இப்படி ஒரே நேரத்தில் வருகிறோம்!. ‘ என எண்ணினார்கள். வேந்தன் தான் முதலில் அதிலிருந்து வெளிவந்தான்.
புன்னகையுடன்.. ” வாங்க சந்துரு. வாம்மா சத்யா.. உட்காருங்க. ” திலகனை ‘ என்ன தீடிர் இங்கு?. ‘ என பார்த்தவன்.. ” வினோ ” தங்கையை அழைத்தான்.
அவரவர் தேவையான இடங்களில் அமர.. ” எதுக்கு சத்யா வந்துயிருக்கு?. அதுவும் உங்க அண்ணா பிரண்டோட. ” தெரியல என்பதை சைகையில் மேகாவிற்கு.. வசு கூறி.. நடப்பதை பார்த்தார்கள்.
அம்மா, மாமியார் இருந்த அறையில் இருந்து வந்த வினோ.. ” வாங்க சந்துரு வாங்க சத்யா, திலகா அண்ணா. நீங்க இரண்டு பேரு வருவதை அண்ணா சொல்லவே இல்ல. ”
வினோவிற்கு பதில் கூறாமல்.. ” எழில்.. எழிலரசி எங்க?. “ இருவரும் ஒருசேர கேட்க..
என்ன முதலில் இருந்தா.!. ” ஏன் அண்ணா இங்க இவ்வளவு பேர் இருக்கோம்.. அண்ணிய கேட்குறீங்க?. ”
” எல்லாம் காரணமாதான் வினோ. அங்க ஒருத்தவன் எழிலரசி கூடவே இருக்கதான் சத்யாவை அனுப்பியிருக்கான். ”
வேந்தன் திலகனை முறைக்க.. ” டேய் என்னைய ஏன்டா முறைக்கிற?. நீயும் அவனும் எங்கள பண்ணுற டாச்சர் தாங்கமா.. உனக்கும், எழிலரசிக்கும் பிரண்டா இருந்துட்டு.. நாங்க தான்டா உன்னைய முறைக்கனும். முதலில் எங்க இரண்டுபேரோட போன் நபர் மாத்தனும். பின்ன நீங்க இரண்டுபேரும் தனித்தனியா எழிலரசி ஏதாவது உடனடியா பண்ண வேண்டியது.. செய்வதற்கு ஒருத்தர் காசு கொடுத்து வைச்சுக்கோங்க. ஆவுனா கால் பண்ணி.. பத்துநிமிடத்தில் ரெடியாகி அங்க போங்க.. இங்க போங்கனு ஆடர் பண்ணுறீங்க. ” அவனின் முன்னால் சிரிப்புடன் தண்ணீர் நீட்ட.. வினோ கொடுத்ததை வாங்கி குடித்தவன்.
சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.. ” ம்.. அப்புறம்?.. “ கூறிய வேந்தனை முறைத்து.. ” இப்போதைக்கு இந்த இரண்டு தான். நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல. ”
” அரசி தூங்குறா டா. ”
தன்னுடன் வந்த இரு ஆண்கள் தவிர.. அனைத்து முகத்தையும் பார்த்தான். ஏதோ முகத்தில் தெரிய.. ” ம்.. எழிலரசி வைத்து.. நீ இங்க பிரச்சனை பண்ணியிருக்க. சரியா. “
” உனக்கு எப்படிடா தெரியும்?. ”
” ம்.. நீ ஏதும் பண்ணி விடுவியோனு தான் இன்பா.. எங்களை அனுப்பினான். ”
” டேய்.. தெளிவா சொல்லுடா. ” தன் அருகில் இருந்த சத்யாவிடம் திரும்பிய திலகன்.. ” சத்யா வந்ததில் இருந்து நானே பேசுறேன்.. உங்க அருமை பிரண்ட் பற்றிய பெருமைய கொஞ்சம் நீங்களே சொல்லுங்க. ”
இவர்களின் பேச்சை சந்துரு, கதிரவன், வினோ புன்னகையுடன் ரசிக்க.. சிலர் கடுப்பாக.. சிலர் சுவாரசியமாக கேட்டபடி பார்த்திருந்தனர்.
” அண்ணா.. இன்பா அண்ணாக்கு.. உங்க அப்பா மூலமா.. விஸ்வா அண்ணாவோட தங்கைகள் இங்கு இருப்பது தெரிந்துயிருக்கு.. அவ யார்கூடவும்.. அவங்க பேசம இருந்தா.. அவளா பேசமாட்டா. நீங்களும், உங்க வீட்டில் இருப்பவர்கள் அவ கூடவே இருக்கவும், பேசிட்டு இருக்க முடியாது இல்ல.. அப்படி யாரும் பேசலைனா.. அவ யார்க்கூடயும் சொல்லமா.. ரூம்மில் போய் தூங்கிடுவா. இருக்காலா இல்லையானு கூட தெரியாது. அவள ரூம்ல போய் பார்த்தாதான் தெரியும். அதுமாதிரி இங்க நடந்தா.. நீங்க அவள தேடி.. பிரச்சனை பண்ணா?. எல்லோருக்கும் கஷ்டம் என்று.. நீங்க கிளம்பின அரைமணி நேரத்திலேயே எங்களுக்கு கால் செய்து கிளம்ப சொன்னாங்க. ”
” இதை இன்பா கால் பண்ணி சொல்ல வேண்டியது தானே. எதுக்கு நீங்க இங்க?.. ”
வேந்தனின் அருகில் வந்த திலகன் மெல்லியகுரலில்.. ” டேய் நீங்களும், மேகா.. கதிரவன் கூட உங்க கல்யாண ஷாப்பிங் பண்ண வந்துயிருக்கானு தெரிந்து.. சத்யாவையும் அப்படியே வாங்கிட்டு வர அனுப்பியிருக்கான். “
புன்னகையுடன் தலையசைத்தவன்.. ” சரி சத்யா.. அரசி மாடியில் தான் முதல் ரூமில் இருக்கா. அங்கயிருங்க. நான் சாப்பிட அங்கயே கொண்டு வரேன். ” சரி என தலையசைக்க..
” டேய்.. வந்த வேலைய பாருங்கனு சொல்லுற. சத்யா அவங்கள என்ன பண்ணுவிங்களோ தெரியாது. இன்னும் பத்துநிமிடத்தில் கீழ அழைச்சுட்டு வரீங்க. ” கட்டளையிட.. அவள் வேந்தனைபார்க்க..
” அவன் கிட்ட என்ன பார்வை?. முழிச்சுட்டு இருங்கவங்க கூட இருக்க சொல்லிதானே.. அவங்க அண்ணன் தூங்கிட்டு இருந்த நம்மள கிளம்ப சொன்னான். இங்க அவரு தங்கச்சி தூக்குவாங்க. நீங்க கூட இருக்குமா?. போங்க. ” வேந்தனை நீ வாய்திறடா மகனே உனக்கு இருக்கு.. என்பது போல பார்த்துக் கொண்டே கூற..
அதனை புரிந்து.. ” சத்யா ”
” டேய்.. ” திலகன் எழுந்து அவன் அருகில் வேகமாக முன்னோக்கி செல்ல..
” இல்லடா.. அரசிய எழுப்ப நான் ஐடியா சொல்லட்டானு தான் கேட்க கூப்பிட்டேன் டா. ” பின்னோக்கி தலையை சாய்த்து பயந்தவன் போல கூற..
” அவங்க பிரண்ட எப்படி எழுப்பனும் அவங்களுக்கு தெரியும். போ.. போயி.. எங்களுக்கு என்ன சாப்பாடு இருக்கனு பாரு. ஒரு காபி கூட குடிக்க விடமா. உன் மச்சான்.. எங்கள துரத்தி இருக்கான். அவன் மட்டும் கையல மாட்டட்டும். ” அவனின் போன்கால் ஒலிக்க.. எடுத்து பார்த்தான்.
கடுப்புடன்.. இன்பாவின் போன்காலை.. ஸ்பிக்கரில் போட்டு அமர.. ” இப்ப தான் வீட்டிற்குள்ள நுழைந்து உன் மாமா கேட்கும் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிட்டு சத்யா இப்ப தான் உன் தங்கச்சியை பார்க்க போறாங்க. ”
” ஓ.. தூங்கிட்டாளா. சரி மாமா போன் ஏன் எடுக்கல?. ”
” அவன் போன்தானே.. உடைச்சு நொறிங்கிடிடுச்சு. ”
” எழில்குட்டி.. போன்?. ”
” ம்.. அத பச்ச குழந்த உன் தங்கச்சி விளையாடும் போது காக்கா தூக்கிட்டு போய்யிருச்சா. ”
” சரி.. உங்க போன்னையாவது பத்திரமா கொண்டு போயி மாமா கிட்ட கொடுக்க.. ” புன்னகையை அடக்கிக் கொண்டு கூற..
” உனக்கு ரொம்பதான் டா நக்கல். மச்சானாச்சேனு உன்னைய விடுறேன். “
” இல்லைனா.. என்ன பண்ணுவிங்க?. ”
” என்ன பண்ணுவேன்?. ஒன்னும் பண்ணமாட்டேன். உங்க இரண்டு பேர்கிட்டயும் மாறடைக்கனும் என் நெத்தில் எழுதியிருக்கு. சரி.. நீ ஒழுங்க போய் வினோத்தை மதியம் காலேஜ் போய் கூட்டிட்டு வந்து டிராவஸ்சில் விட்டுட்டு. சத்யா பேங்க் எக்ஸாக்கு அப்ளை பண்ணிடு. ”
” பேங்க் தான் போய்யிட்டு இருக்கேன். ”
” சரி.. அவனிடம் கொடுக்கிறேன். ”
” ம்.. ஸ்பிக்கரில் எடுத்துட்டு கொடுங்க. ஒரு நிமிசம்.. மாமா எழில் போனை தூக்கிட்டு போனது.. வெள்ளை காக்காவா?. இல்ல கறுப்பு காக்காவா?. இதமட்டும் சொல்லிட்டு மாமாட்ட கொடுங்க. ”
” ம்.. அதை நேரில் பார்க்கும் ரொம்ப விளக்காம சொல்லுறேன். ”
இவற்றையெல்லாம் புன்னகையுடன் கேட்டுக் கொண்டுயிருந்த நால்வர்.. ” என்ன அண்ணிகளா.. அவர் இவ்வளவு நேரம் பேசுவதை கேட்டு.. அப்படியே உங்க மனசில் இருப்பதை சொல்வது போல இருக்கா?. ” சிரிப்புடனே ஆம் என வசுவிடம் தலையசைக்க..
” ரொம்ப தப்பா புருஞ்சுகிட்டீங்க அக்கா. அவங்க எப்ப?. எப்படி? எவ்வளவு நேரத்தில் வந்துயிருக்காங்கனு பாருங்க. அவங்களிடம் ஒரு வரி சொன்னா போதும்.. அவங்க வருவாங்க.. இல்ல அவங்க இடத்தில் வேறு ஒருத்தர் இந்நேரம் வந்துயிருப்பாங்க. அவங்களுக்கு தேவை வேந்தன் அண்ணா, எழிலரசிக்கு எந்தவித மனவருத்தம் அவங்களுக்கும் சரி.. அவங்களால் மற்றவர்களுக்கும் வரக்கூடாது. ”
” ஆனா நமக்கு அவங்க இப்படி பார்த்து பார்த்து பண்ணுவதே எரிச்சலா இருக்கும். ”
” ம்.. நானும் கவனித்துயிருக்கேன்.. எப்பவும் எல்லாம் கூடவே இருப்பாங்க. அவங்கள விடு வசு.. எப்ப கிளம்பலானு போன் பேச போயிருக்க உங்க அண்ணாவிடம் அவங்க வந்த உடனே கேளு. ” சரி என தலையசைக்க..