திலகனுடன் இருந்தவர்கள்.. ” அண்ணா இவன் என் பிரண்ட் சந்துரு. இப்ப ஸ்விட் கடைக்கு இன்டீரியர் பண்ணுவது பற்றி பேச வந்துயிருக்கான். ”
” ஹாய் சந்துரு. நீங்க இன்னும் எழில பார்க்கலையே?. ” ஏன் என பார்க்க..
” இல்ல பார்த்து பேசினீங்கனு வைக்க.. அந்த பச்ச குழந்தையாட்டும் முகத்தை வைத்துட்டு இருப்பாங்க. பின்ன அவங்க என்ன சொன்னாலும்.. இல்ல அவங்களுக்கு இதை பண்ணிடுங்களேனு.. உதராணத்திற்கு இதே அவங்க அண்ணா இன்பா.. ”
வேகமாக.. ” அண்ணா.. இவன் எழிலுக்கு அண்ணனாக மாறி ஐந்து வருடம் ஆச்சு.” அன்றுமுதல் காலை வரை கூறினான்.
” ம்.. எழிலரசிக்கு புது அன்பு அடிமை சிக்கிருச்சு. நான் தப்பிச்சேன். ” புன்னகையுடன் கூற..
” ஹாய் திலகா அண்ணா?. எப்படியிருக்கீங்க?. ” புன்னகையுடன் கேட்டபடி எழிலரசி அவனின் முன்னால் நின்றாள்.
மாடிக்கு சென்ற சத்யா.. அவளின் காதில் ” அண்ணா உனக்காக சாப்பிடாமா கீழ உட்கார்த்துயிருங்காங்க. ” பாதி விழித்து.. ” ஏன்டி?. ”
” இப்படி நீ சாப்பிடாமா 1 மணிநேரமா தூங்கிட்டுயிருந்தா?. அவங்க எப்படி சாப்பிடுவாங்க?. ”
என்ன 1 மணிநேரமா?. முழுவதும் விழித்து எழுந்து சுற்றிலும் பார்த்து.. பின் தன் அருகில் சத்யா பார்க்க.. ” ஹேய் நீ எப்படி இங்க?. ” தன்னவன் தான் இங்கு தூக்கி வந்துயிருப்பான். ஆனால் தோழி எப்படி?. அவள் புன்னகையுடன் மேலோட்டமா கூறிக் கொண்டே அவளை முகம் கழுவி வரச்சொன்னாள். பின் சேலையை சரிபடுத்திக் கொண்டு கீழே திலகனின் முன் நின்றாள்.
” ம்.. நல்லாயிருக்கேன் ம்மா. அப்புறம் உன்னால எனக்கு.. புது தம்பி இன்னைக்கு கிடைச்சுயிருங்காங்க போல. ரொம்ப சந்தோஷம். ”
” ம்.. நான் கீழ வரும்போது என்னமோ புது அடிமைனு காதில் விழுந்தது. அப்புறம் இன்பா அண்ணாவாவையும், தனுவையும் நக்கலா பேசியிருக்கீங்க. ” சத்யாவின் அருகில் நின்று.. அவளின் தோளில் கைவைத்தவாறு கேட்டு..
மெல்லிய குரலில்.. ” நான் யாரு?. என்னால இன்னும் என்னனென்ன நடக்கனும். எல்லாம் மறந்து பேச்சா?. இல்ல காக்கா தூக்கிட்டு போயிருச்சா?. ”
அடிப்பாவி தியா செல்லம்.. இப்படியா கோர்த்துவிடுவ.. ” எழில் உன்னிடம் யாரோ என்னைய பற்றி தப்பா சொல்லியிருக்காங்க. நீ யாரு?. உன்னால எனக்கு எவ்வளவு நல்ல விஷயம் நடக்க வேண்டியிருக்கு. உன்னையும்.. உன் அடிமை.. இல்ல அருமை தனுவை, இன்பாவை குறை சொல்வனா?. இவங்க இரண்டுபேரும் எள்ளு சொன்னா.. எண்ணெய்யா வந்து நிற்பேன்.
சரி அதவிடு.. நீ இன்னும் சாப்பிடல.. தங்கச்சி சாப்பிடாம.. இந்த மூன்னு அண்ணாவும், உயிர் தோழியும், உன் உயிரும் சாப்பிடாம்மா இருக்கோம். போமா.. போய்.. என்னயிருக்குனு.. உன் தோழியோட போயி எல்லாம் எடுத்து வைமா. உன் தனு வந்தவுடனே நாங்க.. அங்க வறோம். “
கேட்டவள் புன்னகையுடன்.. ” ம்.. இந்த பணிவு எப்பவும் இருக்கனும். ” சத்யாவை அழைத்துக் கொண்டு சமையல் அறை சென்றாள். இப்போது இவள் பெண்கள் யாரையும் பார்க்காதது போல சென்றாள்.
” திலகன் அண்ணா.. ஒரு நொடியில் அப்படியே எழில் காலில் விழுந்திட்டிங்க. இன்னும் நீங்க சத்யா கல்யாணம் முடிப்பதற்குள்ள.. எத்தனை தடவை விழனுமோ?. ”
” கதி.. அதுக்கு எந்த அவசியம் இல்லடா. எழிலும், வேந்தனும் இன்னும் கல்யாண நாள் குறிக்காதது தான் பாக்கி. மற்ற எல்லாம் வேலையும் முடிந்ததது. நான் தான் இவங்க கல்யாணம் முடிந்த பிறகு நாள் குறிக்கலாம் சொல்லிட்டேன். சும்மா கிண்டல் பண்ணிட்டு போறாங்க. எழில் எல்லாரிடமும் இப்படி பேசமாட்டாங்க. ஏன் கதிரவன் நீங்க தர்ஷினிக்காக என்ன பண்ணப்போறிங்கனு பார்க்கிறேன். தர்ஷினிக்கு கூட எழிலரசியை ரொம்ப பிடிக்கும் தானே. ”
தன்னவள் பிரியாவை நினைத்து முகம் மலர்ந்தான்.. ” ம்.. அவளுக்கு பிடிக்கும். ஆனா உங்க அளவிற்கு நான் விழ வேண்டிய அவசியம் இல்லம்மா.. எழிலரசிக்கு திருமணம் முடிவாகும் முன்னே.. சம்மதம் வாங்கிட்டேன். ”
” சரி வாங்க.. எழில் திரும்பி வந்து கூப்பிடும் முன்ன.. நாம்ம போலாம்.. வேந்தன் அண்ணா வரட்டும். “ அவர்கள் எழுந்து செல்ல..
” வசு உங்க அண்ணா இவ்வளவு நேரமா போன் பேசுறாங்களா?. ”
ஆமாம்ல.. அப்படி என்ன இன்னும் இரண்டு பேரும் பேசுறாங்க?. எண்ணியபடி.. வசு எழ..
” டேய் நீ எப்படா இங்க வந்த?. ”
” நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு.. உட்காருங்க ஆனியன் தோசை எடுத்துட்டு வரேன். ” தலையசைத்து.. நமட்டு சிரிப்புடன்.. இவர்களை பார்த்திருந்த எழிலரசியை ஒரு லுக்விட்டு மேஜையில் அமர்ந்தனர்.
‘ என்ன!. அண்ணா சமையல் அறையில் இருக்காங்களா?. ‘ வசு கடுப்புடன் சென்று பார்க்க..
‘ வேந்தன்.. வேஷ்டியை மடித்துகட்டி மெல்லிய புன்னகையுடன் பேசிய படியே தோசை ஊற்றிக்கொண்டும்.. அவனின் பக்கத்தில் எழிலரசி நின்றிருக்க.. அவளின் பக்கத்தில் சத்யா, வினோ மூவரும் அவன் ஊற்ற ஊற்ற சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். ‘
பேச சென்றவன் வீட்டின் தோட்டத்தை பார்த்தபடியே.. சமையல் அறையில் இருந்த வீட்டின் பின்பக்கத்திற்கு வர.. பேசி முடித்ததும் தன்னவள் சில நிமிடங்களில் வந்துவிடுவாள் என்பதால்.. அவளிற்கு, தங்கைக்கும் பிடித்த மாதிரி தோசை ஊற்றலாம் என எண்ணி ஆரம்பித்தான். முதலில் வினோ சாப்பிட்டுக் கொண்டுயிருக்கும் போதே அரசியின் குரல் கேட்க.. அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் மறந்துபோய்.. அவள் வருகையை எதிர்பார்த்தான். எதிர்பாராமல் அங்கு அவளவனை பார்த்தவுடனே.. அவனை ஊடுறுவும் பார்வை செலுத்தி.. கண்ணடித்து!. அவனை வெக்கம் கொள்ள வைத்து.. அவன் அருகில் அமர்ந்து அவன் ஊற்றிக் கொடுத்தததை சாப்பிட ஆரம்பித்தாள்.
” அண்ணா இங்க என்ன பண்ணுற? எப்ப அண்ணா நாம்ம ஷாப்பிங் போறோம். ” அங்கு காவ்யா, மேகாவும் வந்தனர். மூவரும் ஹாலில் இருந்தே கவனித்தனர்.
” எந்த ஷாப்பிங் வசு. டிரஸா, நகையா?. ”
” இரண்டும்தான். ” கடுப்புடன் கூற.. ” பக்கத்தில் வா வசு. ” அவள் வாசலில் எல்லோருக்கும் கேட்கும் படியாக நின்று பேசவே.. இப்படி இன்னொருவர் வீட்டில் சத்தமாக பேசினால் நன்றாக இருக்காது என அவளை அருகில் அழைத்தான்.
” பரவாயில்ல.. நான் இங்கேயே நிற்கிறேன். நீங்க சொல்லுங்க. ” அவளிற்கு எழிலரசி முன்னால் நின்று பேச பிடிக்கவில்லை. சற்று நேரம் முன் இவர்களால் தானே அம்மா உட்பட அண்ணாவின் கண்களுக்கு யாரும் தெரியாமல் போயிருந்தோம்.
பெருமுச்சை ஒன்றை வெளிபடுத்தி.. சாப்பிட காத்துயிருந்தவர்களுக்கு உணவை அவனும், வினோவும் எடுத்து வந்து வைக்க.. வினோ பரிமாற.. அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர்.
அவளின்அருகில் நின்றவன்.. பொறுமையாக.. ” வசு நீ நகை வாங்க மட்டும் தான் வந்த.. அதனால என்னோட பிளான் நான் எதுக்கு வந்தனோ?. அதை முடித்துவிட்டு போகலாம் என்று நினைத்திருந்தேன். மேகா டிரஸ் எடுக்க போறேன் சொல்லவும்தான்.. சரி நீயும் வீட்டில் இருப்பதற்கு அவங்க கூட போனா உனக்கு நல்லாயிருக்கும் என்று சொன்னேன். அதனால டிரஸ் எடுக்க.. நீயும்.. அண்ணியும் வராங்கனா ?. அவங்க, மாமா தங்கைங்க எல்லாம் போய்யிட்டு வாங்க. பின்ன நீ வருவதை பொறுத்து நகை வாங்க போலாம்.. அப்படியே வாங்கிட்டு ஊருக்கு போகலாம். ”
அவள் ஏதோ ஒன்றை தீர்மானித்து.. ” சரிண்ணா. காவ்யா அண்ணி, அவங்க தங்கைகளும் தான் வராங்க. ”
மேகாவை திரும்பி பார்த்து போகலாம் அறிவிக்க.. அவள் சென்று கதிரவனிடம் தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டுயிருக்க..
” ம்.சரி ண்ணா. உன் கார்டை கொடுங்க. ”
” உனக்கு எதுக்கு என்னோட கார்டு. உனக்கு இப்ப தேவையானதை உன் அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்வர் பண்ணுறேன். அதுக்குள்ள இப்போதைக்கு எடு போதும். இப்ப கல்யாணத்திற்காகனு ஒன்னும் அதிகம் பார்க்க வேண்டாம். அதுக்குனு ஒருநாள் போவோம். அப்ப பார்த்து வாங்கிக்கலாம். நீ வாங்கும் போது வினோவிற்கும் பார்த்து வாங்கு. அத மறுந்துவிடாத. ”
” என்ன அண்ணா.. மேகா, அண்ணியெல்லாம் கல்யாணத்திற்குனு நல்லா பார்க்கும்போது.. நான் மட்டும் போய் கம்மிய பார்க்க முடியுமா?. ” தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்க..
” அப்படினா நீ எதுவும் அங்க போய் வாங்கத. இப்ப அவங்க வாங்கும் போது.. என்ன டிசைன்ஸ் புதுசா வந்துயிருக்கு?. எவ்வளவு விலைனு?. மட்டும் பார்த்து வைத்துக்கோ. நாம்ம திரும்ப இங்க வந்துதான் வாங்குவோம். அப்ப உனக்கு என்ன தேவையே வாங்கிகோ. இப்ப ஜஸ்ட் எல்லோரோடையும் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டுவா. ” தங்கையை சமாளிக்கும் விதத்தை பார்த்து.. ஆண்களுக்கு சிரிப்பை அடக்க கஷ்டமாக இருந்தது.
ஆனால் வசுவின் கோபம் எல்லை தாண்ட பார்த்தது. ” கல்யாணத்திற்கு சொன்னா அதுக்கும், அதுக்கு வாங்கும் நாள் மட்டும் தான் வாங்குனும்மா என்ன?. வேறநாள், வேற பங்கஷனுக்கு வாங்கி தர மாட்டிங்களா?. பின்ன எனக்கு டிரஸ் வாங்க மட்டும்தான் கணக்கு பார்ப்பீங்க. ஆனா மத்தவங்களுக்கு கணக்கே இல்லாம நிறைய வாங்குவீங்க. ” அவளின் பேச்சு தசை மாறுவது போல இருந்ததால்.. என்னடா என்ன பார்த்தனர்!.
” வசு நான் எதையும் யோசிக்காம.. தேவையில்லாம வாங்கவும், சொல்லவும், செய்யவும் மாட்டேன். நீ மறைமுக சொல்லுறது.. என் தனிப்பட்ட விருப்பம். உனக்கு இப்போதைக்கு நான் என்ன?. எப்ப?. எவ்வளவு செய்யனும் ஒரு அளவு இருக்கு. நான் உனக்கு என்ன செய்தாலும்.. ஒருதுளி குறையாம உடனே வினோவிற்கும் செய்யனும். சின்னபொண்ணா நீ யோசிக்கிற மாதிரி.. எடுத்தோம்.. கவிழ்த்தோம் என்று என்னால எதுவும் பண்ண முடியாது. இதுக்குமேல என்னால விளக்கம் கொடுக்கமுடியாது.
நான் சொல்லி மேகா இங்க வந்தாங்க. அதனால அவங்க கண்டிப்பா போகனும். அவங்களோட போறவங்களுக்கு.. மாமாவோட காரில் போய்யிட்டு வாங்க. நான் மணிய உன் அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்வர் பண்ணுறேன். இனி.. நீ போறது, போகாதது உன் விருப்பம். ஈவினிங் நகை கடைக்கு சேர்ந்து போகலாம். ”
மேகாவிடம் திரும்பி.. ” மேகா நீங்க டிரஸ் மட்டும் எடுத்துட்டு வாங்க. ஈவினிங் கதிரவன் வரப்ப நகை எடுத்துக்களாம். ” சரிதானே என கதிரவனை பார்த்து கேட்க. சரி என அவன் தலையசைக்க.. சாப்பிட்டவர்கள் கைகழுவச் சொல்ல.. அங்கே அமர்ந்து ஹாய்யாக இனிப்பு சாப்பிடுபவளை அதிர்ந்து பார்த்தனர்.
அவளின் அருகில் சென்ற சந்துரு.. ” அங்க உன்னைய வைத்து என்ன நடக்குது?. நீ ஜாலியா ஸ்விட் சாப்பிடுற. ”
அவள் ஒன்றும் புரியாமல்.. இனிப்பை அவனிடம் நீட்ட.. அவன் குழம்பினான். அப்போது அங்கு வந்த திலகன் புன்னகையுடன்.. அவளின் கூத்தலில் மறைந்துயிருந்த ஒயர்லஸ் ஹெட்போன்னை எடுக்க..
” திலகா அண்ணா. அதான் அவரு ஸ்விட்னு கேட்டதற்கு.. நானே எவ்வளவு பெரிய மனசோட முதல் தடவையா ஸ்விட் கேட்குறானு.. தனு வாங்கி கொடுத்த ஸ்விடை கொடுக்குறேன். நீங்க அதை பார்க்காம.. நான் பாட்டு கேட்பதை கெடுக்கிறீங்க. ” அதனை அவள் அவனிடமிருந்து வாங்க பார்க்க..
” அரசி என்ன பண்ணுற நீ. உன்னைய ஸ்விட் சாப்பிட்டது போதுனு.. வாங்கி வைச்சுட்டு போனா அதை சாப்பிட்டு இருக்க. மாமா இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்துவிடுவாங்க. அவர்கிட்ட நம்ம வேலையை முடிச்சுட்டு.. உடனே சந்துருவோட போகனும். சத்யாவோட வினோ ரூம்மிற்கு போ. மாமா வருவதற்கு உள்ள டிரஸ் மாற்றிவிட்டு.. ரெடியா இரு. ” மெல்லிய புன்னகையுடன் அவளை பிடித்து நிறுத்தி கூறினான். தங்கையின் மீதுயிருந்த கோபத்தில் வந்தவன்.. தன்னவளின் செயலின் மூலம் அதை தணித்தாள்.
இன்னும் புரியாமல் சந்துரு விழித்தான். அங்கு அவ்வளவு கோபத்தை அடக்கிக்கொண்டு பேசியவர்.. இங்கு இவளை பார்த்தும் வேறு ஒருவனாக இருக்கிறார் என நினைத்து.. தன் நண்பனை பார்க்க.. ” இரண்டு பேரும் அவர்தான்டா. சிரிப்பு காரணமும், எழில் நடவடிக்கை காரணமும்.. அப்புறம் சொல்லுறேன். நான் போய் மேகாவும், மற்றவர்களும் என்ன பண்ணுறாங்க பார்த்துட்டு.. அவர்களை அனுப்பிட்டு வரேன். நீ திலகா அண்ணாவோட இரு. ” அவன் வெளியில் சொன்னதை செய்துக் கொண்டுயிருந்தான்.
ஷாப்பிங் பிளான் செய்த தங்கைகள் அனைவரும் சென்றுயிருக்க.. குழந்தைகளில் விசாகன், யாழினி இருவர் மட்டும் குழந்தைகளின் சேனல் பார்த்துக் கொண்டுயிருக்க.. மற்றவர்கள்அவர்களுடன் சென்று உள்ளனர். சத்யாவும் வினோவும் பேசிய படி பெரியவர்களுக்கு மட்டும் உணவை சமைத்துக் கொண்டுயிருக்க.. திலகன், சந்துரு, கதிரவன் வெளியில் நின்று பேசிக் கொண்டுயிருந்தனர்.
சித்ரா சிறிய ஓய்வுக்கு பின் வெளியே வர.. வீடே அமைதியாக இருந்ததில் எல்லோரும் ஷாப்பிங் சொல்லமால் சென்றுவிட்டனரா?. எண்ணிய படியே சமையலறை வந்து பார்க்க..
சத்யாவை பார்த்தவர்.. ” வாம்மா சத்யா. எப்ப வந்த?. ” அவர் கண்களில் எப்படி?. எதுக்காக?. என்று கேள்வியும் இருக்க..
சத்யா கூறும் முன்.. ” ம்மா சத்யா அவங்க பிளவுஸ் டிசைன் பொருட்கள் வாங்க கிளம்பினாங்களா.. இன்பா தான் அண்ணியும் இங்கு வந்துயிருப்பதால் சேர்ந்தே வாங்கி வர சொல்லியும், திலகன் அண்ணாவும் வேலை விஷயமா இங்கு வரவேண்டி இருக்குனு இரண்டுபேரும் ஒன்னா இப்ப தான் வந்தாங்க. ”
ஏதோ சமாளித்தாள். எதற்காக வந்தார்கள் என தெரிந்தால்.. கோபப்பட வாய்ப்பு இருக்கிறது. வினோ கூறியதை திலகனும் கேட்டான். நல்ல வேளை தான் வேறு ஏதும் கூறி உளறியிருப்போம். தண்ணீர் எடுக்க வந்தவன் அப்படியே சென்றுவிட.. வினோ கூறியபின்.. அவர் இனி யாரிடமும் கேட்க வாய்ப்பில்லை என்பது வேறு.
ஏதோ புரிந்தும் புரியாமல்.. ” ம்.. சரி வினோ. வசுவும் மற்றவர்களும் ஷாப்பிங் கிளம்பிட்டாங்களா?. ” ஆம் என தலையசைக்க.. ” என்ன சாப்பாடு மதியத்திற்கு?. என்ன எல்லாம் ரொம்ப கம்மியா இருக்கு?. ”
” ம்மா.. அண்ணாதான் உங்களுக்கு, அத்த, மாமாவிற்கும் வீட்டில் செய்துட்டு.. மீதம் பேருக்கு ஹோட்டலில் வாங்கிகளானு சொன்னாரு. ”
அவருக்கும் அதுசரி என்றுதான் தோன்றியது. காலையில் அவள் செய்த உணவு அளவையும், செய்தவள் வாடியிருந்ததையும் பார்த்தாறே.. ஏன் நீயே செய்கிறாய் என்று கேட்க நினைத்தேன்.. எழிலால் அதை மறந்துட்டு விட்டேன். நல்ல வேளை மகன் கவனித்து மாற்று ஏற்பாடு செய்திருக்கிறான்.
” வினோ எழில் ஏன் சொல்லாமா போய் தூங்கினாளா?. அவ பண்ணிய வேலையால் எல்லோருக்கும் எவ்வளவு மனவருத்தம். ” கோபமா? அறிந்திடவா என புரியாத குரலில் கேட்க..
” ம்மா அண்ணி விசாகனை மேலயிருந்து யாழினியும், அகல்யாவும் கூட்டிவரும் போது அண்ணா இல்ல விஸ்வா மாமாவிடம் சொல்ல சொன்னாங்களா. அவங்க வந்தப்ப ஷோபாவில் உட்கார்ந்துயிருந்த வசுக்கிட்டயும், மேகாகிட்டயும் சொல்லிட்டுதான் போனாங்களா. ஷாப்பிங் போவது பற்றி பேசியபடி இருந்ததால் கவனிக்காமல் இருந்துயிருப்பாங்க.. இல்ல அவங்க பேசியது புரியாம அதையே மறந்துயிருப்பாங்க. ”
” ஓ.. இது எப்போ தெரிந்தது?. ”
” மாமா தான்.. விசாகனிடம் எப்படி?. யாரோ வந்தனு பசங்களோட ஐஸ்கீரிம், சாக்லெட்.. வாங்க போனப்ப அவர்களிடம் கேட்டாறா. அவர்தான் சொன்னார். ”
சரி என தலையசைக்க.. ” இப்ப எழில் எங்க?. நானும் சாப்பிடும்போது கவனிக்கல. விசாகன் வெளியில் விளையாடிட்டு இருந்தான். வேந்தனும் அங்க இருந்ததால.. எழில் அவன்கூட இருப்பா.. அவன் சாப்பிடும் போது சாப்பிடுவானு நினைச்சேன். அப்புறம் கேட்டவும் மறந்துடேன். ”
” அதை நினைத்து நீங்க கவலபட வேண்டாம். அண்ணி நீங்க கேட்காதது பற்றி பெரிசா எடுத்துக்க மாட்டாங்க விடுங்க. இப்ப அண்ணி.. அண்ணா, மாமாவோட மாடியில் ஏதோ ஃபேக்டரி விஷயமா பேசிட்டு இருக்காங்க. யாரும் ரூம்மிற்கு வரவேண்டாம், கூப்பிடக்கூடாதுனு.. மாமா சொல்லிட்டு போய்யிருக்காரு. அவங்க கீழ வந்தவுடன் பேசிக்கலாம். ”
” யாரும் தொந்தரவு கொடுக்கக்கூடாதுனு சொல்லிட்டு போற அளவுக்கு.. அப்படி என்ன மூனுபேரும் மட்டும் தனியா பேசுவதற்கு என்ன இருக்கு?. ”
” தெரியலமா. அவர் பார்த்து எல்லாமே சொத்து, பணம் சம்பந்தப்பட்ட கேஸ் என்பதால்.. அதைபற்றிய தகவலை ரொம்ப பாதுகாப்பா வைத்துயிருக்கனும். அதனால நான் அவரிடம் இதை பற்றியெல்லாம் கேட்கமாட்டேன். கேட்டாலும் சொல்லமாட்டார் என்பது தான் உண்மை. “
” ம்.. நீ சொல்வதும் சரிதான்.. ஆனா வேந்தன் நம்மகிட்ட சொல்ல வேண்டும் தானே. இங்க வரும்போது மாப்பிள்ளை கிட்ட ஃபேக்டரி விஷயமா பேசனும்.. அப்புறம் இனிப்பகம் விஷயமா கடையில் சென்று பார்க்கனும் மட்டும்தான் சொன்னான். இப்படி ரகசியம் காப்பது போலனா விஷயம் பற்றி என்று.. என்னிடமும், அப்பாவிடமும் சொல்ல. அதான். ”
” ம்மா.. நான் பணம் பற்றிய வேலை பார்ப்பதால சொல்லுறேன். அண்ணா பண்ணுவது ஒன்னு ஒன்னையும் சொல்லிட்டு செய்ய முடியாது. அவர் எடுத்துக் கொண்ட விஷயம் எல்லாம் நல்லபடியா முடியும் நிலையில் தான் மற்றவர்களிடம் சொல்லமுடியும். அதான் நல்லதும் கூட. அதனால அண்ணா வேலை சம்பந்த விஷயத்தில் நீங்க ஒரு அளவிற்கு மேல தலையிடாம இருந்தாதான் குடும்பத்திற்கு ரொம்ப நல்லது. ”
” ம்.. அதுவும் சரிதான். நான் பார்த்துக்கிறேன். நீ வேலைய சீக்கிரம் முடித்துவிட்டு வாங்க. ” யோசனையுடன் ஷோபாவில் அமரும் வேலையில்.. விஸ்வநாதன் மட்டும் கீழ்யிறங்கி வந்து.. வெளியே சென்றுவிட்டான். எங்கே இருவர் என எண்ணியபடி.. விசாகனின் பக்கத்தில் அமர்ந்தார்.