தன்னவளின் கழுத்துவளைவில் ஆறுதல் தேடிய தன்னவனை.. தூங்கும்போதும் அதனை உணர்ந்து.. தலைமுடியை சுகமாக வருடிக்கொடுத்து.. அவனை சிலநிமிடத்திலேயே உறக்க வைத்துவிட்டாள்.
இருவரும் சேர்ந்து உறங்கி கிட்டதட்ட ஒருமணி நேரம் ஆகப்போகும் நேரம்.. எழிலரசி தன் உடல் எப்போதையும் விட இதமான இறுக்கத்திற்குள்ளும்.. தன் கழுத்திற்கும் மார்பிற்கும் இடைபட்ட பகுதியில் குறுக்குறுக்கும் ரோமும், இதழும், சுவாசுமும் தன்னை மிகநெருக்கமாக தீண்டி.. ஏதோ புதிய உணர்வை தருகிறதே எண்ணியபடி கண்களை திறக்க.. தன்னவனின் நெருக்கமான அணைப்பில் தான் இருப்பதில் அதிர்ந்தாள்.
தன்னை.. இதுபோல் அணைக்க வேண்டும் என அவனின் கண்களில் ஏக்கத்தையும்.. அதை கஷ்டப்பட்டு கட்டுபடுத்துவதையும் பலமுறை பார்த்துயிருக்கிறாள். ஆனால் தான் ஹாலில் உறங்கியிருக்க.. எப்படி அறையினுள்?. தான் கண்விழிக்காத நேரத்தில்.. இதனை செய்பவன் இல்லையே?.. அப்படியிருக்க ஏன்?. என யோசித்தாள்.
சில நொடிகளுக்கு பிறகு.. சரி தனு விழித்தால் பதில் கிடைக்கப் போகிறது.. என எண்ணியவள்.. தன் தனுவின் முகத்தையும்.. அது தன் கழுத்தில் செய்யும் ஜாலத்தில்.. உடல் சிலர்த்து!. அவனின் கழுத்தை தன்னுள் அழுத்தி நெற்றியில் முத்தமிட்டாள்.
அவளின் மன்னவனும் அதை உணர்ந்து மெல்லிய புன்னகை புரிந்தபடி.. அவன் தன் இறுக்கத்தை கூட்ட.. மின்னலென ஓர் உணர்வு அவளின் உடல்முழுவதும் பரவி அவளுள் பலமாற்றங்கள் செய்தது..சில நிமிடங்கள் அனுபவித்தவள்.
‘ ம்ஹூம்.. இதற்கு மேல் முடியாது தனுமாமா. ‘ தன் கால்விரல்களை மடக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அதன்பின் தூக்கம் கலையாமல் தான் எழ கையை எடுக்க பார்த்தாள்.. எங்கே அவளவன் இடையை இருகைகளினால் நன்றாக சுற்றி வளைத்து பிடித்திருப்பதால் முடியவில்லை.
கண்களை சுழற்றி கடிகாரத்தை தேடி.. மணி பார்க்க.. 5 என்று காட்ட.. நகைகடை சென்று.. பின் ஊருக்கு?.. அவனின் கன்னத்தை தட்ட போகும் நேரம்.. கதவு பலமாக, வேகமாக தட்டும் சத்தம்.. தன்னவனின் போனும் அடித்தது.
தலையணையின் அடியில் இருந்ததை எடுத்து போனை பார்க்க.. ” திலகா.. ”
வேந்தனின் பக்கத்தில் வைக்க.. அவன் மெதுவாக கண்களை திறந்தபடியே.. தன் உடலின்மேல் அவனின் இறுக்கம், அழுத்தம் குறைவதை உணர்ந்து.. ‘ அப்பாடா!.. ‘ என.. அவனை கன்னத்தை பிடித்துயிழுத்து.. வேகமாக இறங்கி தன்னை பிரஷ்ஷாக்க பாத்ரூம் ஓடிவிட்டாள்.
அரசியின் தனுவோ.. தன்னிடம் இருந்து உயிர்உள்ள பொம்மையின் மென்மை ஓடிவிட்டதே என்ற உணர்வில்.. புன்னகையுடன் தன் தலையை சரிசெய்தபடி கதவை திறந்தான்.
வேந்தனை தலைமுதல் கால்வரை பார்த்தபடியே.. அவனிடம் மிகநெருங்கி.. ” என் நண்பன் வேந்தனா வந்துயிருக்கியா?. இல்ல அரசியின் வேந்தனா மாறிட்டியா?. ” இவன் அவனை முறைக்க..
மெல்லிய புன்னகையுடன்.. ” டேய் உன்மேல பூ வாசம் தூக்குதுடா. அதான் இந்த கேள்வி. வெளிய வரும்போது சட்டைய மாற்றிட்டுவா. ”
அவனின் சட்டையை முகர்ந்து பார்க்க.. அதில் கலந்துயிருக்கும் தன்னவளின் வாசம் அவனின் நாசி வழியே சென்று உயிரில் கலந்தது. ம்.. கொஞ்சம் ஜாஸ்திதான் மனதில் புன்னகைக்க.
” ம்.. சரி டா. அரசி பாத்ரூம் போய்யிருக்கா. நான் வரேன். ”
” ம்.. வினோ மாமனார் வந்துட்டார். நீ தூங்குறனு சொல்லியிருக்கு. ஆனா எங்க?. யார்கூடனு சொல்ல. சீக்கிரம் வா. ” புன்னகையுடன் கூற..
‘ போடா ‘ என பார்த்து கதவை சாற்றி திரும்பவும்.. அவனின் முயல்குட்டி மெதுவாக பதுங்கியபடி வெளியே வர..
அவளின் அருகில் சென்றவன்.. பின்போடாமல் இருந்த ஷாலை ஊருவி தன்னோடு எடுத்துக்கொண்டு பாத்ரூம்மிற்குள் நுழைந்துவிட்டான். அவள் அதிர்ந்து சிலையாக நின்றவள்.. சிலநொடிகளில் உயிர்பெற்று தன்னை பார்த்தவள்.. கட்டியில் இருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு.. இக்கோலத்தில் இருக்கும் தன்னோடு.. தனுவை பார்த்தால் என்ற பதட்டத்துடன் உட்கார்ந்தாள்.
வெளியே வந்தவன் தன்னவள் அமர்ந்திருக்கும் நிலையை சிரிப்புடன் பார்த்தபடி வந்தவன்.. தலையணையை பிடிங்கி கட்டிலில் வீசிவிட்டு.. அவளை இடைபிடித்து இழுத்து இறுக்கி அவனின் மடியில் அமரவைத்து.. அவளை தன் கழுத்தில் சாய்ந்துக்கொண்டான்.
நிமிடங்கள் கடக்க.. ” தனு கடைக்கு கிளம்ப நேரம் ஆச்சுல. ” சில நொடிகள் கழித்தும் அதற்கு பதில் இல்லாமல் போக.. ” தனு.. ”
” அரசி நாம்ம இப்ப போகலடா. ” நடந்ததை மேலேட்டமாக கூறினான். கேட்டவள் அவனின் வருத்தம் போக்க தன்னிடம் ஆறுதல் தேடியபோது தன் கைகள் தூக்க கலக்கத்திலும் செய்ததை நினைத்து வெக்கமும், மகிழ்ச்சியும் கொண்டு..( நல்லதை நினைக்க நிறைய இருக்க.. மற்றதை யோசிக்க பிடிக்கவில்லை. )இப்போது அரசி தன்னவனை.. தன் கழுத்தில் சாய்த்துக் கொண்டாள்.
சில நொடிகள் கடக்க.. வேந்தனை ஒருநிலைக்கு வந்து.. தன் அரசியை பார்க்க.. ” தனு நீங்க வெளியில் போயிட்டு.. சத்யாவ வரச்சொல்லுங்க. “
திலகன் கூறியதை நினைத்தவன்.. அவளை ஷோபாவில் அமரவைத்து.. மீண்டும் குளியல்அறை சென்று சட்டை மாற்றிவிட்டு.. அங்குயிருந்த அவளின் ஷாலை அவனே போட்டுவிட்டு பின்செய்து.. கன்னம்தாங்கி நெற்றியில் அழுத்த முத்தமிட்டு வெளியில் சென்றான்.
” என்னடா.. அவங்களுக்கு தூங்கி எழுந்த தலைவலி வருனு சொன்னாங்க. இப்ப ஏன்டா தூங்குறாங்க?. ”
” ம்.. படுக்கலதான் சொன்னா. கால் வலினு சுடுதண்ணில கொஞ்சம் நேரம்.. சங்கவி ரூம்மில்போய் வைக்க போனப்ப.. கதிரவனும், சந்துருவும் அவங்க வீட்டிற்கு டிரஸ் எடுத்துட்டு வரேனு போயிட்டாங்க. நாங்க மட்டும் தான் இருந்தோம். ரொம்ப டையடா இருந்தா. தலைய பிடிச்சுவிட்டு தான் படுக்க வைச்சேன். வலி வராது நினைக்கிறேன். பார்க்கலாம். ” மெல்லிய புன்னகையுடன்அவளை பார்த்துக் கொண்டே கூற.. சரி என தலையசைத்து அரசியை வெளியே அழைத்து வந்தான்.
” திலகா சத்யா எழுந்ததும் நாம்ம எங்கயாவது வெளிய போலாமா?. ” கேட்டவன் யோசித்தான்.
” இவங்கள விட்டுடா?. ”
” டேய் இவங்களோட தான்டா. அரசிக்கு டிரஸ் இருக்கு. உனக்கு வண்டில இருக்கும். எனக்கு எடுத்துட்டு வந்த ஷர்ட் போட்டேன். எனக்கு டீஷர்ட், ஷர்ட் வேண்டும். சத்யாவிற்கு இருக்காது இல்ல. அதான் பக்கத்தில் ஏதாவது கடையில் வாங்கிட்டு வரலாம். “
” தனு விஸ்வா , சந்துரு அண்ணாட்ட பைக் இருக்கா?. ”
இருவரும் ஏம்மா?.எதுக்கு?. ஒரு லுக்விட..
” நாம்ம மலைக்கோட்டையில் இருந்து ஒரு பாலம் பார்த்தோம் இல்ல.. அங்க போகலாமா?. ” ஆசையுடன் கேட்க.
திலகன் வேந்தனை பார்த்தான். அவனிற்கும் ஆசைதான்.. தன்னவளை ஊரில் இருக்கும்போது பைக்கில் அழைத்து செல்ல முடியாது. இங்கென்றால் பிரச்சனையில்.. தியாவுடன் செல்லாமே என அவனும் ஆர்வமுடன் வேந்தனை பார்த்தான்.
சும்மா சொன்னாலே அழைத்து செல்வான். ஆசையுடன் தன்னவள் கேட்க.. உடன் நண்பனின் பார்வையிலும் ஆர்வம் தெரிய.. வேண்டாம் என்றா கூறிவிடுவான்.
” ம்.. போலாம். மாமாட்ட இருக்கு. சந்துரு கிட்ட கால் பண்ணி கேட்போம். இருந்தா அவங்க வரப்ப எடுத்து வரட்டும். இல்லை என்றால் மாமாவிடம் சொன்னா ஏற்பாடு பண்ணி தருவார். நான் போய் டீ எடுத்துட்டு வரேன். ” அரசியும் எழ..
” இல்ல அரசி நீ இங்கேயே இரு. நான் கூப்பிட்டா மட்டும்தான் நீங்கயெல்லாம் கீழ வருனும். ” அவன் மூவரையும் கூற.. அதற்கு அவள் ஏதோ பதில் கூற வர..
“அரசிசி.. ” அவன் முறைக்க..
” சரி சரி தனு. அதுக்குனு காமெடியா பார்க்காதீங்க. ” சிரிப்புடன்கூற..
திலகன் இருப்பாதால் ” போடி முயல்குட்டி.. ” சத்தம்மில்லாமல் கூறி புன்னகையுடன் சென்றான்.
வழியில் சிலர் உறங்கி எழுந்தும், அங்கேயே இருந்தவர்களை கண்டுக் கொள்ளாமலும்.. கூடவே அங்குயிருந்த வினோவின் மாமனார், விஸ்வாவை பார்க்காமலும் நேராக சமையல்அறை சென்றான். இதை கவனித்த வினோ வேகமாக உள்ளே வந்தாள். உடன் சித்ராவும்.
அவர்கள் பார்க்க.. அவன் டீ போட தேவையானது அனைத்தும் எடுத்துக்வைத்திருக்க.. ” அண்ணா நான் போட்டுட்டு கொண்டு வரேன். நீங்க ஹாலில் போய் உட்காருங்க. மாமா அங்கதான் இருக்காரு அவர்கூட பேசிட்டுயிருங்க. ”
” பரவாயில்ல வினோ நானே போட்டுக்கிறேன். ”
” அண்ணா.. ” அவளை ஒரு நொடி பார்த்தவன்.. ” வினோ நீ என்னைய போடவிடலனா.. நான் வெளிய வாங்கி வந்து குடிப்போம். அது சரினா. ” அவள் கண்கள் கலங்கி விட்டது.
இதை கேட்டபடி உள்ளே வந்த விஸ்வநாதன்.. அவனின் தோள் அணைத்து.. ” வேந்தா.. உன் கோபம் புரியது. இதுல வினோ மேல தப்பு இல்ல. எழில் தங்கையா இங்கு தங்கலாம் தான். ஆனா நாங்க தனியா இருந்தா பரவாயில்ல. அப்பா, அம்மா.. வினோ சொல்லி அதை எப்படி எடுத்துப்பாங்கனு தெரியாது.
அவங்க எதுவும் நினைக்கலையான கூட.. ரேவதி, தாமரை ஏதாவது சொல்லிவிடுவாங்க. அதனாலதான் இவங்கயெல்லாம் சொன்னப்ப வினோ அமைதியா இருந்துயிருப்பா. அவமேல நீ கோபப்பட்டு இப்படி பண்ணாத. “
” சரி அப்படியே கோபம் இருந்ததாலும்.. கோபம் குறையும் வரைக்கும் இப்படி நினைச்சுக்கோ.. இன்னைக்கு எதுக்கு எழிலை இங்கு அழைத்து வந்த?. முக்கியமான லிகல் டாக்குமெண்ட் சைன் பண்ண.. என்னோட கிளைட்டா வந்திங்க. அவங்கள கவனிப்பதா நினைத்துக்கோ. ”
விஸ்வநாதனிற்கு.. காலையில் வேந்தன் எழிலரசியை நினைத்து பதறியதை பார்த்தும் கூடவா.. இவர்களுக்கு இவனிடம் ஒருவார்த்தை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என தோன்றவில்லை. அரசியை தான் இருக்க.. அவனே சொன்னால் இன்றி.. யார்கூடவும் அனுப்பமாட்டான் என அத்தைக்கு கூடவா தெரியாதா?.. அனைவர் மீதும் சிறு கோபம் இருந்தது. அது இப்போது எங்கு வந்து முடித்திருக்கிறது.. தன் ஒரே மச்சானை.. கிளைட்டா இருங்க என கூற வைத்துள்ளது என கண்களில் கவலையை காண்பித்தது.
மாமாவை பார்த்தவன் பெருமூச்சை வெளிப்படுத்தி.. ” சரி மாமா. நீங்க சொன்னா மாதிரியே நினைச்சுக்கிறேன். ஆனா வினோ மட்டும்தான் எதுவானாலும் பண்ணணும். அதுவும் மாடிக்கு வந்துவிடனும். என்ன தவிர யாரும் கீழ எங்கேயும் வரமாட்டாங்க. வாசலிற்கு போக மட்டும்தான் வருவாங்க. ”
நாதனின் முகம் இன்னும் வாடிவிட்டது. இருந்தாலும் நீண்ட நேரம் இது நீடிக்காது என மனத்தை சமாதானம் படுத்திக்கொண்டு.. சரி என தலையசைத்து அதற்குமேல் நிற்க முடியாமல் வெளியே சென்றுவிட.. வினோ சரி என்றவுடனே கண்களை துடைத்துவிட்டு.. அனைவருக்கும் சேர்த்து போட ஆரம்பித்துவிட்டாள்.
இருவரின் முகங்களில் இருந்த கவலையை பார்த்து.. இதுவரை அமைதியாக இருந்த சித்ரா.. ” டேய்.. நீ ரொம்ப பண்ணாதடா. என்ன சொல்லிட்டோனு?. வினோக்கிட்ட நடந்துக்கிற.. மாப்பிள்ளைகிட்ட இப்படி சொல்லுற. ஆள்யிருக்காங்க.. ” அவர் கூறிமுடிக்கும் முன்..
” தயவுசெய்து.. என்னைய இன்னும் இதுக்கும்மேல.. இங்க பேச வைக்காதிங்க அம்மா. நான் இனி எதை பற்றியும் பேசவும், நினைக்கவும் விருப்பல. நீங்களும்.. இதை பற்றி வேறு யாராவது பேசினா.. அவர்களையும் மறந்துவிட சொல்லுங்க. நாளைக்கு எங்க கல்யாணத்திற்கும், கும்பாபிஷேகத்திற்கும் யார்யார்க்கு?. என்ன மாதிரி சேலை எடுக்கனும்?. மட்டும் யோசிங்க. ”
வினோவிடம் திருப்பி ” வினோ லைட்டா சாப்பிட ஏதாவது இருக்கா?. “
டீ கூடவே தன்னவள் சாப்பிட ஏதாவது கேட்பாளே. மற்றவர்களிடம் கோபமாக பேசும்போதும் கூட தன் அரசியை நினைத்தான். ம்.. பல வருடங்கள் நினைக்க கூடாது என நினைத்தவன்..இப்போது ஒவ்வொரு நொடியும் அவள் பற்றிய நினைவுடன் தான் அவனின் அனைத்து செயல்களும் இருந்தன.
” நீங்க போங்க ண்ணா. நான் வரும்போது எடுத்துட்டு வரேன். ” சரி என தலையசைத்து விட்டு வெளியே வர..
விஸ்வநாதனின் அப்பா இருக்க.. அவர் தள்ளி இடம் விட்டு உட்கார்ந்தார். அதில் ‘ எனக்காக சிலவார்த்தை மட்டும் பேசிட்டு போயேன் ‘ என்று இருக்க. ‘ சரி டீ கொண்டு வரும்வரை இருக்கலாம் ‘ என சென்று அமர்ந்தான்.
” மாப்பிள்ள காலையில் இருந்து பேசவே முடியல. நல்லா தூங்கி எழுந்தாச்சா?.. “
அதிகம் இவரிடம் அவன் பேசியது இல்லை என்பதால்.. அமைதியின் திருவுருவமாக ‘ ஆம் ‘ என வெறும் தலையசைப்பு மட்டுமே. இதனை பார்த்த பெண்கள்.. அய்யோ!. என வாயில் வைக்காத குறைதான்.
” அப்புறம் உங்க ஆபிஸ் வேலையோட.. கடை, ஃபேக்டரி வேலையெல்லாம் எப்படி போகுது?. “
சுவாமிநாதனின் சித்தாப்பா பையன் தான் காவ்யாவின் அப்பா.. அதாவது வேந்தனின் பெரியம்மா சாந்தி இவருக்கு தங்கை முறை. சுவாமிநாதன் முன் தனியார் கம்பெனியில் வேலை செய்து.. இப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
இருவர் அக்குடும்பத்தில் இருக்க.. மகேஷ்வரன் BBA உள்ளூரிலே படித்து முடித்து.. அப்பா, சித்தாப்பாவுடன் இருந்து அனுபவ அறிவில் பலகற்று.. அக்கடை மட்டுமே அவனின் தொழில்.
ஆனால் வேந்தன் அப்படியே நேர்எதிர் என்பதாலும்.. அனைத்தும் பிரிக்காமல் இருக்கிறது என்பதால்.. அவர் எப்போதும் அவர்களின் ஹோட்டல், இவனின் தனிப்பட்ட வேலையில் வரும் வருமானம் மற்றும் அவனின் செயல்களை ஏதோ வகையில் மறைமுகமாக தெரிந்தும், அறிந்தும் வைத்துக் கொள்ளவார்.
” ம்.. எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு மாமா. கடைதிறப்பு விழாவிற்கு அப்பா அழைக்க வருவார். ”
” ம்.. நீங்க ஆபிஸ் வேலையும், ஹோட்டல், இப்போது இதையும் எப்படி நீங்க பார்த்துகிறீங்க. எப்படி டைம் மேனேஜ் பண்ணுறிங்க?. ”
அரசியை பற்றி கூறவில்லையா என கேட்க.. விஸ்வநாதனிடம் திருப்ப.. ஆள் அங்கு இல்லை. கடவுளே. சரி எப்படியும் தெரியமலா போகும்.
” இப்போதைக்கு நான் சென்னை வேலை மட்டும் தான் பார்க்கிறேன் மாமா. எழிலரசி தான் எல்லாம் செய்துவதும், பார்த்துக் கொள்வதும். நான் அரசிக்கு தேவையான அட்வைஸ் மட்டும் கொடுப்பேன். அப்பப்ப அண்ணா, அப்பா, பெரியப்பா பார்த்துப்பாங்க. ”
அவருக்கு பொறுப்பை ஏற்றுயிருப்பது.. ஹோட்டலில் அறை அமைத்து கொடுத்து எல்லாம்.. வேந்தனின் மாமா கணேஷ் மூலம் சிறிது தெரியும். கல்யாணம் முன் எப்போதாவது தான் சொல்வாளோ என நினைத்துயிருக்க.. எல்லாம்மா??.!!.
” ம்.. அப்ப உங்களுக்கு பிரச்சனையில்ல. முன்னாடியே அவங்க அப்பா, அண்ணாவோட எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தா.. அப்பா சொன்னாரு. ம்.. அதனால உங்ககூட பண்ண கொஞ்சம் சுலபமாக இருக்கும். ”
” அப்படியெல்லாம் இல்ல மாமா. அரசி படிச்சு முடிச்சு ஒருவருடம் தான் ஆகுது. அங்கேயும் இங்கயும் வேற.. அதனால கொஞ்சம் கஷ்டம் இருக்கு. ஆனா கூடவே .. ” அவன் கூறவரும் போது கதிரவனும், சந்துருவும் அங்குவர..
” மாமா.. இவரு கதிரவன் எங்க கடை கட்டிடம் கட்டும் பொறுப்ப ஏற்றுயிருக்காரு. அரசியோட அத்த பையன். இவர் சந்துரு.. கடையோட இன்டீரியர் டிசைன் பண்ணபோறது. இங்க 5வதுகிராஸில் தான் இருக்காரு. கதிரவன், அரசி அண்ணா இன்பாவோட பிரண்ட்.
இவங்கயெல்லாம் கூடவே இருப்பதால் தெளிவா எல்லோரிடம் கேட்டு.. ஒவ்வொன்னையும் கற்றுக் கொண்டு தான் செய்வது. ” சரி என புன்னகையுடன் கேட்டுக்கொண்டே.. மனதில் சிலவற்றை கேட்க வேண்டும் எனவும் குறித்துக் கொண்டார்.
இதை கேட்டுக்கொண்டுயிருந்த ரேவதி தன் அக்காவிடம்.. ” அக்கா.. இவ்வளவு எல்லாம் செய்வதால் தான் இவரு ரொம்ப தாங்குறாறோ?. ”
அவளை முறைத்துவிட்டு.. ” லூசு.. அவரு ஆரம்பித்தில் இருந்தே எழிலரசியை தாங்குவதினால் தான்.. இவ்வளவு பெரிய பொறுப்ப.. சாதாரணமா தூக்கி கொடுத்துயிருக்கார்.( இப்போது பணம் முதற்கொண்டு). காலையில் நீ.. அவர்மேல்.. அரசி காலை வைத்து.. கொலுசை சரி செய்து கொடுத்ததை பார்த்தியே.. அதை அவரு நிச்சியம் அன்று கல்யாண மண்டபத்தில்.. யாரையும் பார்க்கல. அவருதான் அந்த கொலுசையே போட்டேவிட்டார். அப்பபாரு. எப்படி?. ”
” இதை எல்லாம் தெரிந்தும்.. அவரு வசு சொல்வதற்கு கோப படுவாரனு தெரிந்தும்.. ஏன் அக்கா நீ ஒன்னும் சொல்லமா அமைதியா இருந்த?. அப்ப பார்த்தில எவ்வளவு கோபம். ஆனா ஒன்னு அக்கா.. வசு மாதிரி நான் அண்ணாவிடம் பேசியிருந்தேன்.. ஒரு வரி சொல்லி.. அடுத்த வரியில் அறை விழுந்துயிருக்கும். ”
” ம்.. அதான் நானும் சில நாட்களா கவனித்த விஷயம். எனக்கு இப்ப அது சாதகமான விஷயம். அவரு எவ்வளவு கோபமா பேசினாலும்.. அது வெறும் வார்த்தை மட்டும்தான். கோபத்திலும் பார்த்தியா.. காலையில் கார்டை கொடுக்க மாட்டேனே சொன்னாரு. இப்ப அதையும் கொடுத்து.. நான் இல்லாட்டியும் அவர் அங்க போகும்முன்ன.. அவங்க அப்பா கிளம்பியிருப்பாரு. அவ்வளவு பாசமும் இருக்கு.
அவ கேட்பது கண்டிப்பா கிடைக்கும். அதனால தான் உன்னால விஸ்வா அண்ணா ரூம் போய் எடுக்க முடியாதை.. அறித்துக் கொள்ளமுடியதா தகவலை வசு மூலமா.. சீக்கிரமே தெரிந்துக்கொள்ளாம். ஆனா அது நடக்கவேண்டும் எனில்.. வசுவை சில விஷயத்தில் கோபமாவே வைத்துயிருக்க வேண்டும். அப்பதான் நடக்கும். ”
” ம்.. பார்த்து எச்சரிக்கையா பண்ணுக்கா. அப்புறம் அண்ணாவும், தங்கையும் ஒன்னு கூடிவிடுவாங்க. உனக்கு பிரச்சனை ஆகிவிடப்போகிறது. ”
” ம்.. கவனமா இருக்கேன். “
வினோ டீயும், ஆனியன் போண்டா( நாதன் சென்று வாங்கி வந்தது).. குழந்தைகளுக்கு பால், கோதுமைரஸ்க் எடுத்துவர.. அனைவருக்கும் கொடுத்துக் கொண்டு.. பின் நால்வரும் மாடிக்கு சென்றனர்.
சத்யா எழுந்துயிருக்க.. இல்லை எழுப்பியிருக்க.. திலகனின் செயலால் தாங்கும் அளவில் மட்டுமே தலைவலி இருந்தது. ஆனால் சுகமான தூக்கத்தில் தன்னவனின் அருகில் படுத்துயிருந்தவளை எழுப்பியிருந்ததால்.. தலையை பிடித்த படி எழிலை முறைத்துக் கொண்டுயிருந்த சத்யாவை..
எழிலரசி கொஞ்சி.. ஷோபாவில் அவள் கால்மடிக்கி அமர.. கீழே உட்கார்ந்த இருந்த சத்யாவின் பின்னியிருந்த கூத்தலை விரித்துவிட்டு இருபக்கமும் சிறிது முடிஎடுத்து கிளிப் போட்டுவிட்டு.. பின் கூந்தலில் கைநுழைத்து சிறிது எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தபடி.. திலகனிடம் கார்களை பற்றி கேட்டுக் கொண்டுயிருந்தாள். ‘
” அண்ணா.. நாங்க கார் இன்னும் நல்லா ஒட்ட கத்துக்க ஞாயிறுக்கிழமை வரோம். ”
” போடி.. என்னால முடியாது. இப்ப ஓட்டுற வேகமும், அழகும் போதும். ” அவளின் காதில் குனிந்து.. ” நீ ஒன்னும் பழக வேண்டாம். நீ வந்தாதான் தனு விடுவார். பிளிஸ்டி. செல்லம் தானே.. ”
அவளின் தலையில் கொட்டுவிழ.. ” தனுனு.. ” அவனின்றி யார் என்னை தொட.. அவனை கோபத்துடன் அழைத்து.. தோய்த்து விட்டவாறு நிமிர..
‘ இப்ப என்ன சொன்ன?. ‘ மிரட்டும் ஒருலுக்குடன் தனு நிற்க.. மாட்டினியே எழிலரசி..
” தனு டீயும் சாப்பிட ஏதாவது எடுத்துவருவீங்க இருந்தா.. வெறும் கையோட நிக்குகிறீங்க?. ” அவனின் பார்வை திருப்பி வினோவை பார்க்க..
அவள் எழில் அருகில் வந்தாள்.. சத்யா நகர்ந்துயிருக்க.. அதனை வாங்கி தனுவை பார்க்காமலே குடித்தவள்.. ஒரு வாய் குடித்துவிட்டு.. அவன் கொட்டியதற்காக அவனை வெறுப்பேற்ற.. முறைத்துவிட்டு
” அண்ணி உங்க டீ.. தனு வைக்கும் டீ விட சூப்பரா இருக்கு. ” கூறி.. அடுத்த வாய் குடித்தாள்.
புன்னகையை கட்டுப்படுத்தி அவளிற்கும் மட்டும் கேட்கும் குரலில்.. ” அண்ணி நீங்க குடிப்பது.. அண்ணா போட்ட டீ தான். ” ( ஹாலிற்கு வரும்முன்னே இவர்களுக்கு மட்டும் டீ போட ஆரம்பித்துயிருந்தான் )
என்ன!.. அதிர்வுடன் இன்னும் ஒரு வாய்குடித்து பார்க்க வாய் அருகே சொல்லும்போது.. அவளின் டீ பறிக்கபட.. ” தனு என் டீ. ”
” உனக்கு கிடையாது போடி.. ” சத்தமில்லாமல் கூறி.. அவளின் எதிர்பக்கத்தில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தான். அவள் மற்றவர்களை பார்த்தாள்.. தன்னை மாட்டிவிட்ட சத்யா போனை பார்த்தபடி குனிந்து குடித்துக் கொண்டுயிருக்க.. வினோ புன்னகையுடன் சென்றுயிருக்க.. மற்ற மூவரும் ஏதோ முக்கிய விஷயம் போல பேசிக் கொண்டுயிருக்க..
யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதால்.. செல்ல கோபத்துடன் அவனின் குடிக்கும் இதழ்களை பார்க்க ஆரம்பித்தவள்.. பின் இருவர் இதழ்களும் ஒன்றாகியாகி போனது எப்போதோ?. சிலநொடிகள்.. தன்னவளின் பார்வையில் கட்டுண்டுயிருந்தவன்.. திலகனின் போன் ஒசையில் திடுக்கிட்டு திருப்பினான். அவளும் அவ்வாறே பார்த்தாள். நல்லவேளை யாரும் இவர்களை பார்க்கவில்லை. அவளின் முகம் வெக்கத்தில் சிவக்க.. திரும்பி அவனை பார்க்க முடியாமல் குனிந்துக் கொண்டாள்.
” சொல்லு இன்பா. அவன் போன் ரூம்மில் இருக்கும் நினைக்கிறேன்.. ம்.. சரி. எவ்வளவு நேரம் ஆச்சு?. ம்.. சரி. ம்.. வைக்கிறேன். ” போன்னை வைத்தவன்..
” உன் போன் எங்கடா?. ” வேந்தன் தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க..
அதை வாங்கி பார்த்தவன்.. 3முறை இன்பாவின் அழைப்பு.. போன் வைப்ரேஷனில் இருக்க.. ‘ கேட்டுயிருக்கனுமே?.. ‘ யோசித்தபடியே.. வேந்தனின் முன்னால் இருந்த இரண்டு காலி டீ கப்பை பார்த்தான். அவன் முகத்தை பார்க்க.. அதில் கன்னத்தில் ஏதோ மாற்றம்.. உடனே எழிலரசியை பார்த்தான். அவள் குனிந்தபடி ஆன் செய்யாத போனையே பார்த்திருக்க.. ஏதோ புரிந்து.. மனதில் புன்னகையித்து இருந்தவனின் தோள்தட்டிய வேந்தன்..
” டேய் எதுக்கு இன்பா கால் செய்தான்?. ”