நாம் 33(2)
” அது.. உங்க அப்பா நாளைக்கு வாங்குவது பற்றி கூறியவுடன்.. நைட் இங்குதானு சொன்னவுடனே சந்துரு எல்லாம் இருக்கவும்.. இன்பா, தர்ஷினி கூடவே கமலேஷ் மூனுபேரும் அங்குயிருந்து கிளம்பி அறைமணி நேரம் ஆகுதா. அப்புறம் உங்க மூனுபேருக்கும் நைட், நாளை தேவையானத்தையும் எடுத்துட்டு வரானாம். கிளம்பிட்டோம் சொல்ல உனக்கு கால்பண்ணியிருக்கான். எடுக்கல என்றவுடன் எனக்கு செய்திருக்கான். ” கடைசி வரியை மெல்லிய புன்னகையுடன் கூறினான்.
” என்ன!. மூனுபேரும் அறைமணி நேரத்தில் வரங்களா?. அப்ப எப்படி நாம்ம போக?.. ” அரசி வேந்தனை பார்க்க.. ” ஏன் அவங்க வந்தா என்ன?. ”
அவளின் அருகில் உட்காரந்தபடியே கேட்க.. அவளின் பார்வை கதிரவனிடம் போய் திரும்ப.. எல்லோருடைய பார்வையும் இருவரிடம் இருக்க..
” சரி தர்ஷினி வரட்டும். எனக்கு தெரிஞ்சு வசுவும், மேகாவும் வருகிறோம் என்று சொல்லமாட்டாங்க. ” ஏன்?.. என பார்க்க..
” மேகாவிற்கு இன்பா நைட் வர வாய்ப்பு இருக்குனு தெரியும். அதனால சீக்கிரமே தூங்க போயிருவாங்க. இப்ப வசுவும் அவங்க கூடவே இன்னைக்கு இருந்ததால.. அவளும் போயிடுவா.. இல்ல வரலனு சொல்லிவிடுவா. ஆனா இப்ப அது பிரச்சனையில்ல.. ”
” வேற என்னடா?. ” சத்யாவுடன் செல்லும் ஆர்வத்தில் இருக்க.. இப்போது போய்.. அவனை கவலையும் புன்னகையும் கலந்து பார்க்க.
” டேய் அவங்க இன்னும் அரைமணி இல்ல முக்கால் மணிநேரத்தில் வந்துவிடுவாங்க. வந்தவுடன் கிளம்ப இன்னும் அரைமணி நேரம். நைட் ஆகிவிடும். இவங்கள விட மாட்டாங்களேடா. ” பெண்களை குறித்து கூற
” சரி இப்பவே டிரஸ் எடுக்க பேரோனு.. மூனு பைக்கில் கிளம்பலாம். அவங்கள அங்க நேர வரச்சொல்லாம். வரும்போது எப்படி வரனு தோனுதே அப்படி வரட்டும். ” கடைசி வரியை திலகன்.. கதிரவனை பார்த்துக் கொண்டே கூற.. சரி என தலையசைக்க..
” சந்துரு இன்னொரு பைக் கிடைக்குமா?. ” ஆம் என புன்னகையுடன் தலையசைக்க..
” அப்பசரி.. நான் அம்மாவிடம் சொல்லிட்டு வரேன். அதுக்குள்ள கிளம்பியிருங்க. அரசி நீயும், சத்யா, தர்ஷினியும் சங்கவி ரூம்மையும், நாங்க எல்லாம் வினோ ரூம்மையும் நாளைக்கு கிளம்பு வரை யூஸ் பண்ணிக்கலாம். படுக்க ஹாலில் இல்ல மாடியில் படுக்கலாம். சரி தானே” எல்லோரையும் பார்த்துக்கேட்க..
” ம்.. சரி. ” ஒருசேர கூற..
” ஓகே.. நான் சங்கவி, வினோவிடம் இதையும் சொல்லிவிடுறேன். பத்துநிமிடத்தில் கிளம்பலாம். ”
அவர்கள் பேசிய வைத்த படியே கால்மணி நேரத்தில் வேந்தன்,எழில். கதிரவன், சத்யா. திலகன், சந்துரு.. சிலரின் சந்தேக கண்களுடன் கிளம்பிவிட்டனர். ( அடுத்த தெருவில் மாற்றிக் கொண்டனர். ) யாருக்கும் மூவரும் வருவது பற்றி கூறவில்லை. இதையும் அந்த மூவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவேரி பாலம் திருச்சியையும், ஸ்ரீரங்கம் தீவினையும் இணைக்கும் முக்கிய பாலமாகும். அங்குயிருந்த படியே மலைக்கோட்டை ரசித்தும், குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி.. தேங்காய் பர்பி, சோன்பப்டியை சத்யா, அரசி, தர்ஷினி சாப்பிட.. அவர்களை ஆசையாக மூவர் பார்க்க.. நொந்தபடி திலகனும், கதிரவனும் பார்த்தனர்.
” டேய் வேந்தா.. எழில் பண்ணுற அலும்ப தாங்வே முடியலடா. இதையே தான் ஊரில் இரண்டுநாள் முன்ன சாப்பிட்டாங்க. இப்ப என்னமோ பல நாட்கள் ஆன மாதிரி.. அதுவும் மற்ற இரண்டுபேரையும் கூட்டிபோயி சாப்பிடுறாங்க. ”
அவனை முறைத்து.. ” ஏன்னு கேட்க அரசிய இல்ல சத்யாவ கூப்பிட்டா?. ”
” இரண்டு பேரையும் கூப்பிடு.. எனக்கு என்ன பயமா?. ”
அவன் கூறும்போதே அவர்களை சற்று தள்ளியிருந்த பெஞ்சில் ஆற்றை பார்த்துக்கொண்டே.. கதை பேசியபடி இங்கு தங்களுக்கு ஆனா நேரத்தை அவற்றை சாப்பிடும் நிமிடங்களில் கழித்துக் கொண்டுயிருந்தவர்களை கை அசைத்து அழைக்க..
” டேய் எனக்கு சப்போட்டு.. கதிரவன் இருக்கான்டா. ” கூறியபடி திரும்ப.. அவன் மும்மரமாக இன்பாவிடம் பேசிக் கொண்டுயிருக்க..
அவர்கள் வந்ததும்..” என்ன தனு?. நாங்களா வரவரைக்கும் கூப்பிடக்கூடாதுனு சொல்லிட்டுதானே போனேன். பின்ன எதுக்கு கூப்பிட்டிங்க?. ”
” திலகன் தான் .. ” அடுத்து கூறும் முன்.. ” அது.. அது.. ” சுற்றிப்பார்த்தவன்..
” அதுவந்து எழில் அங்க புட்டு சுடா விற்கிறாங்க. அதான் அங்கேயே அதை சாப்பிட்டு டின்னர் முடித்துவிடலாம.. இல்ல வீட்டில் போய் சாப்பிடலாமா கேளு சொன்னேன். ” காலையில் இருந்து எல்லோரும் என்னைய கோர்த்து விடும் வேலைய நல்லா பார்க்குறாங்க டா.
அவன் ஏதோ சமாளிக்க கூறுவது போல இருக்க.. வேந்தனை பார்த்தவள் நண்பனிற்காக.. ” ஆமா அரசி.. என்ன பண்ணலாம்?. அம்மா கால் பண்ணிட்டாங்க. பேசினா சொல்லனும். ” பாதி உண்மை, பொய் கலந்துகூற..
” ரொம்ப நேரமா நீக்கிறோம். இதுக்கு மேல நின்னு சாப்பிட முடியாது. உங்களுக்கு இதெல்லாம் பத்தாது வேற.. அதனால கொஞ்சம் வாங்கிட்டு வீட்டில் போய் மாடியில் உட்கார்ந்து சாப்பிடலாம். ”
” சரிடா நீங்க கிளம்புங்க.. நாங்க வாங்கிட்டு வரோம். ” அவர்கள் சரி என புன்னகையுடன் நகர..
வேந்தனும், அரசியும் உணவை வாங்கிக் கொண்டு.. தன்னவனின் கைவளையத்திற்குள் இருந்தபடியே நடந்து வந்தவள்..
” தனு.. பாட்டி சொல்லிட்டு இருப்பாங்க. எனக்கு முன்னாடியெல்லாம் அரசிமாவு புட்டுனாலே பிடிக்காது.. ஆனா இப்ப மூனுநேரமும் புட்டு கொடுத்தாகூட நீ சாப்பிடுவ. அவங்க நான் சாப்பிடும் நேரத்தில் பார்த்தால்.. எப்படி நீ மாறினனு?.. அது ஏன்னு?. கேட்டுபாங்க.
நீங்க சொன்னபிறகு.. நான் விரும்பியே சாப்பிடுவேன் போல. என்னைய அப்பவே நல்லா வசியம் பண்ணி வைத்துயிருக்கிங்க. ” புன்னகையுடன்.. கேளியாக கூற..
” எப்படி?. சாய்ந்திரம் நான் டீ குடிக்கும் போது என்னைய வசியம் பண்ணி என் இதழ் பார்த்துட்டே.. உன் கண்ணாலே 2 கப் டீ குடுச்சியே?. அப்படியா முயல்குட்டி!. ” உணவை வைத்துவிட்டு.. பைக்கின் மீது அவன் அமர்ந்து.. அவள் அமர்ந்த பின் கேட்க..
தனுமாமாவின் முதுகில் சாய்ந்தபடி..
நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
உன்னால் தான் நான் அவ்வாறு நடந்துக் கொண்டேன் என என அரசி காதலோடு பாட.. அவள் உணர்வை மன்னவன் மகிழ்வுடன் ஏற்க.. அதன் மிதமான வேகத்தில்.. நிலவின் அழகோடு, மாநகரத்தின் வளர்ச்சியில் தன் பார்வையை செலுத்தி.. இருவரும் வீட்டை அடைந்தனர்.
” வசு எனக்கு துணைக்கு நீங்களும் எழுந்துட்டீங்களா? ”
ஹாலில் அனைவரும் உறங்கிக் கொண்டுயிருக்க.. மெத்தையில் அமர்ந்து எழலாமா?. வேண்டாமா?. என வசு சுற்றி பார்த்துக் கொண்டுயிருந்தபோது.. சற்றுமுன் எழுந்து தன்னை சுத்தம் செய்துவிட்டு அங்கு வந்த மேகா.
‘ அப்பாடா நமக்கு பேச ஆள்யிருக்கு ‘ என்று மேகா நினைத்து படியே அவளை வெளியில் அழைத்து.. அவளும் தன் தேவையை முடித்துவிட்டு நேராக சமையல்அறை வந்தனர்.
” நைட் சீக்கிரம் சாப்பிட்டு.. படுத்துச்சு இல்ல. அதான் பசினால தூக்கம் போச்சு மேகா. “
‘எனக்கும் அதேதான் ‘ என்பது போல அவளை பார்த்துவிட்டு.. உடனே சூடு செய்து சாப்பிடவதுபோல ஏதாவது இருக்கிறாதா?. என பிரிட்ஜ் உள்ளே தேடி பார்த்த வசுவின் கண்களில் மைக்ரோவேவ் உள்வைக்கும் கப்பில் உள்ளதை திறந்து பார்க்க..
” மேகா புட்டு இருக்கு?. நாம்ம பூரி மட்டும் தானே சாப்பிட்டோம். ” கூறி கேட்ட படியே மைக்ரோவேவில் வைத்து.. நிமிடம் கழித்து எடுத்தாள்.
அதை பார்த்தவள்.. ” வசு இது எழிலரசிக்கு உங்க அண்ணா வாங்கி கொடுத்து சாப்பிட்டது போக.. மீதியா இருக்கும். சரி வாங்க நாம்ம வெளியில் இல்ல மாடிக்கு போய் பேசிட்டே சாப்பிடலாம். ” பெருமுச்சை ஒன்றை வெளிபடுத்தி தண்ணீர் எடுத்துக்கொண்டு அவளுடன் தோட்டத்திற்கு சென்றார்கள்.
” இது அவங்களுக்கு வாங்கியது தான் என்று. உங்களுக்கு எப்படி தெரியும்?. ”
புன்னகையுடன்.. ” ஏங்க உங்க அண்ணாக்கு எழில் பீரியட்ஸ் நாள்.. அப்ப அவள எப்படி பார்த்து கொள்ளனும் என்று.. எல்லாம் தெரியும் போது.. அவளுக்கு ரொம்ப பிடித்தது.. இது எப்படி தெரியாமல் இருக்கும்?. ”
” அண்ணாக்கு என்னைய, அக்காவ பற்றிக் கூடதான் தெரியும். எனக்கு ஒன்னும் பண்ணாது.. ஆனா அக்காக்கு வலிக்கும். ஆனாலும் போனில் என்னைப்பற்றி எல்லாம் மறக்கமா கேட்பார். ”
” ஓ.. இன்பா மாதிரிதானா உங்க அண்ணாவும். அவரும் எழில அந்த நேரத்தில் ரொம்ப நல்லா பார்த்துப்பாரு. அப்படி இருக்கப்ப.. அவர் நடந்துக் கொள்ளும் விதம் ஆரம்பத்தில பிடிக்கும். ஆனா எழில் கூடவே சத்யாவிற்கும் பார்ப்பார். அதனால ஏன்டா இப்படி இருக்காருனு?.. வயசு ஆக ஆக கோபம்தான் வந்தது. ”
” ஏன்?. உங்க வீட்டில் உங்க அண்ணா எதுவும் பண்ண மாட்டாங்கனா?. இல்ல வேறு ஏதாவது?. ” ஏதாவது எழிலரசியை பற்றி அண்ணாவிற்கு தெரியாத.. நமக்கு சாதகமான விஷயம் கிடைக்கும்மா?. எனக் கேட்க..
இவள் அண்ணா நடந்துக் கொண்ட முறை கூறி.. இனி அதிக அக்கறை எடுக்காமல் எழிலாக எல்லாம் செய்யவேண்டும் என நினைத்து.. ” ம்.. எங்க வீட்டில் கேட்டா பண்ணுவாங்க. ஆனா அதுக்கான சந்தர்ப்பம் இன்று வரை அமையல. வீட்டல நான் பூப்பெய்த நாளில் இருந்து பாட்டி, அம்மா, சித்தி அப்புறம் அண்ணிணு பெண்கள் வீட்டில் இல்லாத நாளே இருக்காது. அதிலும் அம்மா இன்னும் திட்டுவாங்க.
எழில் பூப்பெய்த நாள் அன்றே இன்பாவும் அவ கூடவே இருக்குனும் அடம்பிடித்தாளா. சரினு எல்லாம் சொன்னபிறகு தான் வயிற்றுவலியில் ரொம்ப அழுதவ.. அதற்கு எதிர்ப்பதமா சிரிச்சுட்டு இருந்தாளா. அப்ப எடுத்த ஒரு போட்டோ இருக்கு. அதில் அழகா சிரித்துக்கொண்டு இருப்பா. ” வசுவிற்கு வேந்தனின் உள்அறையில் மேகா கூறுவது போலனா புகைப்படம் பார்த்த ஞாபகம்.
” ஆனா நான் வந்தபோது இரண்டு அண்ணாக்கும் கல்யாண வயசு, இரண்டு பேரு பெரிய பசங்க. அதனால யாரையும் பக்கத்திலே விடல. எனக்கும் ஒன்னும் பண்ணல அதுவேற விஷயம். ” புன்னகையுடன் கூற.
” ஆனாலும் இன்பா, எழில் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும். அவ அழும்போது பார்த்தா.. அதுவும் சில நேரம் இருக்காது தான்.
ஸ்கூல் முடித்த சமயத்தில் தோனும்.. இப்ப பார்த்துக்க இன்பா இருக்காரு. கல்யாணம் ஒன்றுநடந்து.. வரப்போறவர் இப்படியா பார்த்துப்பாரு?. அதான் பெரிய பொண்ணா வளர்ந்துட்டாலே.. இப்பொழுது இருந்து அவ தனியா எல்லாம் பழகிட்டா என்னனு?. நின்னைப்பேன். ஆனா உங்க அண்ணா.. இன்பாவ விட 10மடங்கு இருப்பார் போல. போன வாரம் அவர் நடந்துக் கொண்டது.. பேசியது நினைத்தா.. தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு கோபம் தான் வருது. ” அன்று நடந்ததை கூறினாள். ” ம். இப்ப நீங்களே சொல்லுங்க?. ”
அவளும் அன்று தானே சில மறைக்கப்பட்ட பொருட்கள் பார்த்தது. தன்னிடம் கோபம் கொண்டது. அதன்பின்னா நாட்களில் எழிலரசியின் வீடே என்றுயிருந்து.. அவர்கள் அனுமதியுடன் தான் நேற்று வந்தது.. பின் நடந்ததை நினைத்தவள்..
” ம்.. அவங்களுக்குனு இன்னொரு அடிமை சிக்கியிருக்கு. அதிலும் பிரச்சனையே இல்லாம உள்ளூரிலேயே. ” மெல்லிய புன்னகையை வெளியிலும்.. சிறு பகைமையை மனதில் வைத்து இருவரும் பார்த்து பின் மாடிக்கு வர..
” தனு இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து கீழபோகலாம்.. போசாம படுங்க. இல்ல என்னைய தூங்கவையுங்க. ” மெட்டைமாடியில் நிலாவை பார்த்து படுத்துயிருந்த தன்னவனை.. இறுக்ககட்டிக்கொண்டு அவனின் போர்வையாக இருந்தாள்.
” சரி.. கொஞ்சம் தள்ளியாவது படு. ” ஏன்?. என அவனை கிள்ள..
” ஆஆ.. ஏன்னா?.. இப்படி படுத்துயிருக்க உன்ன இந்த வெட்ட வெளியில் ஒன்னும் பண்ணமுடியமா இருக்கேன். தனியா மாட்டின கழுத்தில் கடிச்சு வைச்சுவிடுவேன். அந்த அளவிற்கு என் முயல்குட்டிக்கு முத்தம் கொடுக்கனும் போல இருக்குடி. மாமா மேல கொஞ்சம் இரக்கம் காட்டு. ”
” என்ன?. நானே வந்து உங்க பக்கத்தில் படுத்துயிருக்க மாதிரி சொல்லுறீங்க?. தனியா படுத்து.. போர்வைய போர்த்தி நல்லா தூங்கிட்டு இருந்தவள கட்டிபிடிச்சு எழுப்பி.. மாமா இருக்க அதுஎதுக்கு?. போர்வைய எடுத்து அண்ணாவிற்கு போர்த்திவிட்டிங்க. கொஞ்சம் குளிர் அதிகமா இருக்கதால உங்க பக்கத்தில் நெருங்கி படுத்துயிருக்கேன். சரி நான் தள்ளி போய் அண்ணாவோட படுத்துக்கிறேன். போங்க ” அவள் தள்ளி படுக்க எழபோனவளை..
அவளை கீழே படுக்கவைத்து.. அவளின்மேல் அவனின் பாதி உடல் படும்படியாக இறுக்க தன் கைகளுக்குள் அவளை அடக்கி.. ” இப்ப போ முயல்குட்டி. ”
அவனின் பாதிஉடலே அவளின் உடலின் ஒவ்வொரு செல்லும் எதையோ எதிர்பார்த்து காத்துயிருக்க.. அதுகிடைக்கும்மா?. கிடைக்காதா என ஏக்கம் கொண்டு இதயத்தை படுவேகமாக துடிக்கச் செய்தது. ” தனு.. தனு மாமா. ” அவளிற்கே கேட்காத குரலில் அழைக்க..
” ம்.. எங்க முத்தம் வேண்டும் என் அரசிக்கு?. ” காதுமடலில் ரோமம் உரசி.. இதழிலை காதில் தீண்டி கேட்க.. அந்த தீண்டலே அவளை மயக்கி.. தானாக கண்கள் மூட.. அதனை புன்னகையுடன் கவனித்தவன்.. மென்மையாக கண்களின் மேல் சத்தமில்லாமல் நீண்ட முத்தம் வைத்தான்.
இதற்கு மேல் இருவராலும் முடியாது. நெற்றியில் மென் முத்தம் கொடுத்தவன்.. சுவரின் பக்கம் தலைவைத்து படுத்துயிருந்ததால்.. அவன் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து.. பின் அவளின் தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.
சில நிமிடங்களில்.. அவனின் இடைபிடித்த படி திருப்பி படுத்தவள்.. ” தனு.. அண்ணா நல்லா தூங்குறாங்க. நீங்களும் அவர்கூட தானே படுத்திங்க. தூக்கம் வரலையா?. “
அவளின் கலைந்த கூந்தலை ஒருவிரலால் மெதுவாக படியவைத்துவாறே.. ” நான் எப்போதும் நைட்.. அந்நேரம் தூங்கி.. எழும் நேரம் இதுதானே. நீ கூட இருக்க.. எப்படிடி எனக்கு தூக்கம் வரும்?. அதான் நானும் எழுந்து .. முயல்குட்டிய எழுப்பிடேன். “
காதலும், குறும்பும் கலந்து கூறும்.. தனு கண்களையே பார்த்திருப்பதை தவிர.. பதில் ஒன்றும் தோன்றவில்லை. அவன் கண்களை பார்த்திருக்க..
” அரசி இன்னைக்கு.. உனக்கும் கொஞ்சம் நகை, புடவை எடுக்கலாம் இருக்கேன்.”
அதிர்ந்து.. ” இன்னமும்மா தனு?. “
வசுவும், மேகாவும் மாடிக்கு வந்தவர்கள் காதில்.. அரசி என்ற அழைப்பில் வேந்தனின் கேள்வி விழ.. ‘ இன்னுமும் இவங்களுக்கு எடுக்கனும் மா?. ‘ மாடிபடி சுற்றி நான்கு பக்க சுவர் இருக்க.. இவர்களின் எதிர்பக்கத்தில் வசு மனதில் நினைத்தாள்.
” ஓய்.. நான் இன்னும் கல்யாணத்திற்கு என்று எதுவும் எடுக்கல. உன்னைய உட்கார வைத்து நகைய போட்டும்.. உன்மேல சேலைய வைத்து பார்த்தும்.. ” பார்த்து என்ற போது கண்ணடித்து கூறினான். ” இனி தான் வாங்கனும். நான் இனிப்பகம் திறந்த பிறகு தான் ஆரம்பிக்கனும் நினைத்தேன். சரி இன்னைக்கு எல்லோருக்கும் வாங்கும் போது உனக்கு கொஞ்சம் வாங்களாம்தான். ”
” என்னால முடியாது தனு. எல்லாரும் பார்ப்பாங்க. நம்ம தனியா வந்து வாங்கிகளாம். ”
” அப்ப மட்டும் யாரும் பார்க்கமாட்டாங்களா?. ”
” தனுனு.. ”
அவளை முறைத்தவன்.. ” உன்னிடம் சொன்னது தப்பா பேச்சு. நான் அங்க போய் உன்னைய இழுத்து வச்சு உட்கார வைச்சுக்கிறேன். அப்ப என்ன பண்ணுவனு பார்க்குறேன். ” கன்னத்தை மென்மையாக கிள்ளி கூற..
” அதையும் பார்க்கலாம். நான் கார்த்தி அண்ணாகிட்ட போய் நின்னுக்குவேன்.”
புன்னகையுடன் ” உன் அண்ணாங்க யாரும் இன்னைக்கு வரமாட்டாங்க. ”
” அதான் இங்க.. ”
” இங்க இருப்பவர்களும்.. என் தங்கச்சி முதற்கொண்டு யாரும் உனக்கு சப்போட் பண்ணமாட்டாங்க.”
” ஆமாம் பெரிய தங்கச்சி. நேத்து உங்கிட்ட என்னைய அடி வாங்க வைச்சுட்டாளா.. ஊருக்குபோய் அவளக்கு இருக்கு. ”
” நீ கேட்டதற்கு பின்ன என்ன பண்ணுவாங்க?. ஏற்கனவே உன்னைய கார் ஓட்டச்சொல்லி தினமும் அத்தம்மாவிடம் திட்டாத குறையா.. பலதடவை பார்த்து மெதுவா ஒட்டி போக சொல்லுறாங்க. பின்ன எதுக்குனு கேட்காத?. நீயும் ஓட்டனும் சொன்ன.. பிறகு நீ இப்ப போக தேவையில்லை என்றாலும்.. கொஞ்ச நாளில் தனியா ஃபேக்டரி போய் பார்க்கனும். அதான் ஹய்வேய்யில் தினமும் ஒட்டினா பழகிவிடும்.. எனக்கும் பயம் இருக்காது. இங்க போவதற்கு.. பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு.. நீ இந்த வேகத்திற்கு மேல போக தேவையில்ல. ”
” ஆமாம் ஆமாம்.. உங்களுக்கு போதும். எல்லாருக்கும் போதும்மா?. நேற்று காலையில் நாம்ம வரும்போது.. கொஞ்சம் வேகமா போனா நீங்க முறைக்கிறீங்க. வசுந்தரா.. நான் மெதுவா வந்தப்ப ஒரு குட்டியானை வண்டி காரஸ் பண்ணி போச்சு. அப்ப அவங்க முகத்த பார்க்கனுமே.. என்ன ரியாக்சன்னே கண்டுபிடிக்க முடியல தனு. அதான் அண்ணாகிட்ட வேகமா!. பாதுகாப்பா எப்படி போகனும்?. கத்துக்க போலானு நினைத்தேன். ”
புன்னகையுடன் கேட்டுக் கொண்டுயிருந்தவன்.. கடைசியில் முறைத்து.. ” அதெல்லாம் ஒன்னும் அவசியம் இல்ல. இனி வசுவோட போற மாதிரி இருந்தா.. பெரிய கார் எடுத்துட்டு டிரைவர் போட்டுக்கலாம்.
சரி அதைவிடு இன்னைக்கு வினோ, வசுவிற்கு எடுக்கும் போது உனக்கு ஒன்னும் எடுக்காம.. என்னால இருக்க முடியாது. அதனால நான் நினைத்தவிட இன்னும் கொஞ்சம் கம்மிய எடுப்பேன். ”
” சரி சரி. ஆனா கல்யாணத்திற்கு போடுவது என்று கனமா மட்டும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தா. ” அவளை கிள்ளி.. ” நீ இப்ப போடுவதெல்லாம் கனமாவா இருக்கு?. ” ஆம் எனதலையசைக்க..
” அரசி அதையே கனமா இருக்குனு சொல்லுற.. வசு, வினோ அதைவிட ஜாஸ்தியா போடுவாங்க. “
” அவங்களுக்கு அது பிடித்துயிருக்கு போடுறாங்க. அதுக்குனு நானும் அதே மாதிரி போடமுடியாது. நான் பழகின வரை வினோ அண்ணிக்கு அப்படி போடவே பிடிக்காது. ஒன்னு அண்ணாக்கு பிடிக்கனும்.. இல்ல இப்படி போட்டாதான் நமக்கு மதிப்புனு யாராவது சொல்லி.. கட்டாயத்தின் பேரில் போடனும். நான் வைத்துயிருக்கும் நகையெல்லாம் பார்க்க பெரியதா இருக்கும்.. ஆனா கனமாயிருக்காது. அண்ணா எனக்காக பெரிய நகை கடையென்றாலும்.. அங்கேயே சில மாறுதல் மட்டும் செய்து.. தனியா செய்ய சொல்லிதான் வாங்குவாங்க.
அதான் எனக்கு இன்னைக்கு கம்மிய வாங்குங்க. வினோ அண்ணி, வசுந்தராவிடமும் கேட்டு அவங்களுக்கு பிடித்த மாதிரி வாங்கி கொடுங்க. ” அவளின் கன்னத்தில் சத்தமில்லாமல் முத்தம் வைத்தவன்.
” ம்.. உனக்கு நான் பார்த்துக்குகிறேன். நீ நினைப்பது சரினா.. அவங்க இரண்டுபேரிடமும் கேட்டா.. வினோ கம்மிய சொல்லுவா.. வசு ஜாஸ்தியா சொல்லுவா. அது இப்ப சரி வராது. ” என்ன செய்வது?. என யோசனை முகத்துடன் அவன் கூற..
” அப்ப மாமாவிடம் எவ்வளவு வாங்கி கொடுக்கனும் கேட்டு.. அதற்கு ஏற்றார் போல வாங்கிகொடுங்க. ஏன்னா?. வாங்கும்போது பத்மா அம்மா இருப்பாங்க. அதனால பார்த்துக்கோங்க. ”
” ம்.. சரி. நான் அப்பாவிடம் கேட்குறேன். புடவை?. ”
“தனு.. முதலில் இருந்து ஆரம்பிக்காதிங்க. இன்னைக்கு எல்லாருக்கும் தான் வாங்க போறோம். எனக்குனு வாங்க ஒருநாள் இருக்கு.. அப்ப பார்க்கலாம்.. வாங்கலாம். ” கோபமாக கூற..
” ரொம்ப மிரட்டுற டி. ” அவளின் முக்கை பிடித்து கூற.. ” ஆமாம் ஆமாம் நான் சொல்லி நீங்க அப்படியே கேட்டு.. பயந்து பம்முற ஆள்தான். போங்க.. போய் எனக்கு டீ கொண்டுவாங்க. “
புன்னகையுடன் அவனிற்கு ஒன்று ஞாபகம் வந்து அவளின் இதழை பார்க்க.. அவள் ‘ என்னவென்று‘ கண்களால் கேட்க.. ‘ ஓன்றும் இல்லை ‘ என அவளின் இதழ்களை விரலால் வருடி எடுத்தான். அப்போது அவளிற்கு ஒன்று ஞாபகம்வர..
” தனு எனக்கு டீ வேண்டாம். ஒருவாரம் ஆச்சுல்ல.. சத்துமாவு இருந்தா கஞ்சி போட்டு கொண்டு வாங்க. இன்னைக்கு இரண்டுபேரும் சேர்ந்து.. சூரியஉதயத்தை பார்த்தபடியே குடிக்கலாம். “