” வேந்தா எழில் சேலையெல்லாம் எங்க எடுத்தது?. ”
” ஏன் அக்கா.. அங்க எல்லாம் போய் எடுக்கப் போறிங்களா என்ன?. ” புன்னகையுடன் கேட்க..
” கொழுப்பா டா. சும்மா தெரிச்சுக்கலாம் தான் கேட்டேன். சரி இன்னைக்கு நீதான் எங்க எல்லோருக்கும்மான சேலை செலக்ட் பண்ணப் போற. மீதம் தேவையான சேலை.. நாங்க இன்னொருநாள் வேற எங்கயாவது வாங்கிப்போம். ” சரியா மற்ற பெண்களை பார்க்க.. வசு, மேகா,காவ்யா, ரேவதி அவர்களாக பார்க்க ஆரம்பித்துயிருக்க.. சங்கவிக்காக வினோ தனியாக வாங்க சென்றிருங்க.. மற்றவர்கள் சரி என சிரிப்புடன் தலையசைத்தனர்.
” எடுத்து தருவேன் அக்கா. ஆனா அரசி என் கூட இருக்கனும். ”
” ஓ.. இல்லையென்றால் எடுக்க தெரியாத உனக்கு?. ” இல்லை உடல் மொழியில் கூற..
” ம்.. போய் எடுங்க.. நாங்க அம்மா, சித்தி, அத்தை கூட போய் சீக்கிரம் எல்லாம் புடவையும் எடுக்க பார்க்கிறோம். ”
அரசி, வேந்தன் அங்குயிருக்க.. புன்னகையுடன் மற்ற பெண்கள் அங்கு செல்ல.. திலகன், கதிரவன் தங்கள் துணைகளுடன் வேறு சேலை பிரிவிற்கு செல்ல.. இன்பா, கமலேஷ் உடன் வினோத் தங்கள் குடும்பத்தினர்களுக்கு கோயில் விழா, கல்யாணத்திற்காக மற்ற குடும்ப உறுப்பினர் கொடுக்கும் முறையினர்களில்.. ஆண்களுக்கு பார்க்க ஆரம்பத்தினர்.
” அரசி நான் உனக்கு முதலில் ஒரு சேலை மட்டும் எடுக்குறேன்.. அப்புறம் எல்லோருக்கும் சேர்ந்து பார்க்கலாம். ”
” ம்.. ” கண்களை பார்த்துக் கூறி.. பின் அவனின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.
தன்னவளிடம் தான் செய்யப்போவதை கூறி.. பின் அடுக்கி வைத்திருந்த சேலைகளை பார்த்திருந்தவன்.. அழுத்தம் ஏதோ கூற நினைக்கிறாள் என்று உணர்த்த.. ” என்ன முயல்குட்டி?.. ” அவன் காதலாக திரும்பி கேட்க.
” தனு நீங்க இத்தனை வருடமா.. நான் பக்கத்தில் இருப்பதா நினைத்துதானே தனியா எனக்கு சேலை எடுத்துயிருப்பீங்க. ஆனா இப்ப உங்க பக்கத்தில் முழுசா இருக்கேன்ல. எனக்கு ரொம்பரொம்ப சந்தோஷமா இருக்கு தனு. ” முகம் முழுவதும் புன்னகை.. கண்ணில் ஆனந்தத்துடன் கூற..
புன்னகையுடன்.. அவளை தோள்வளையில் அழுத்தி…பின் கை எடுத்து.. ” ம்.. முயல்குட்டி!. என் பக்கத்திலே இருக்கா. அந்த சந்தோஷத்தை வார்த்தையில் சொல்ல முடியாது. செயலில் காட்டா?. ” கள்ளப்புன்னகையுடன் அவள் இதழை பார்த்தவாறு கேட்க..
கையை எடுத்துக் கொண்டாள்.. ” தனுனு.. ” .
உடனே அவளின் கையை இழுத்து தனக்குள் வைத்துக்கொண்டான். புன்னகையுடன்.. ” முயல்குட்டி உன்னைய பக்கத்தில் வைத்து.. நிறைய சேலை, சுடி இன்னும் உனக்கு தேவையானது அனைத்தும் வாங்கி கொடுத்து செயலில் காட்டானு கேட்டேன். ”
அவனை முறைத்து.. கைகளில் கிள்ளி ” பொய் சொல்லாதிங்க தனு. உங்க கண்ணு போன இடத்தை பார்த்தேன். ”
கண்டுபிடிச்சுட்டியா என்ற சிரிப்புடனே.. ” பின்ன.. சந்தோஷத்தில் சிரிக்கும் உன் இதழை பார்த்தா.. எனக்கு என்னனமோ தான் தோனுதே முயல்குட்டி. ”
” சரி சரி அதை அப்படியே மனசில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு போய் அப்ப செயலில் காண்பிங்க. இப்ப எனக்கு ஒன்னுல மூனு சேலை எடுத்து இப்ப செயலில் காண்பிங்க. ” செயலில்அழுத்தம் கூட்ட..
அவளின் காதில் ” நிஜமா!.. இரண்டையும் செயலில் காண்பிக்கட்டா??.. ” சரி என தலையசைக்க..
” முயல்குட்டி மீண்டும் தோள்வளைவில் வைத்துக் இறுக்கி அணைத்து.. புன்னகையுடன் முதல்செயலை செய்ய ஆரம்பித்தான்.
இவர்களின் செயல்களை அவர்களின் உறவுகள் பார்த்துதான் இருந்தன. ம்.. அவர்களின் நெருக்கம்.. ஆச்சரியம், மகிழ்ச்சி, பொறாமையும் கலந்து இருந்தது.
” தம்பி வேந்தா.. சேலை எல்லாம் எடுத்தாச்சா?. ” அவனின் எதிரில் இருந்தவைகளை பார்த்தவாறு யோகா கேட்க அவளுடன் சித்ரா, வினோ, சாந்தி நின்றுயிருந்தனர்.
முழுவதும் திரும்பி தன் முன்னால் இருந்தவர்களிடம்.. ” இல்ல க்கா.. இன்னும் இரண்டு எடுக்கனும். நீங்க எல்லாம் எடுத்துட்டிங்களா?. ”
” உறவினர்களுக்கு எடுத்துடே இருக்கு.. அது முடிந்த பின்பு அம்மா, சித்தி, அத்தைக்கு எடுக்கனும். சரி எழில் எங்க?. ”
” தீக்ஷா அழுதுட்டு இருந்தா.. அதான் வேடிக்கை காண்பிக்க அங்க கண்ணாடி பக்கம் நீக்குறா. ” சற்று தள்ளி தனக்கு எதிரே நின்ற தன் அரசியை பார்த்தபடியே பதில் அளித்தான்.
அவர்களும் பார்த்தனர்.. “ வேந்தா.. ”
‘ சொல்லுங்க ‘ என்பது போல அவர் முகத்தை பார்த்தான்.
” இப்ப எங்களுக்கு பார்த்தபிறகு அப்படியே நீ.. உங்க கல்யாண புடவையை பார்க்கிறியா?. இங்கே.. ” முடிக்கும் முன்..
” அக்கா.. நம்ம கடை திறப்பு விழா முடிந்து.. முன்னாடி பிளான் பண்ணமாதிரி அன்னைக்கே பார்க்கலாம். ” நால்வரையும் பார்த்தவாறு கூற..
” இல்லப்பா. நீ இப்ப இந்த கடையில் பாரு. பிடிச்சுயிருந்தா எடு. இல்ல திறப்பு விழா!. அன்னைக்கே நீ எங்க விருப்பபடுறியோ அங்கே போலாம். இப்ப எல்லாம் இருக்கோம். குழந்தைகளை விட்டுவிட்டு திருப்பி எல்லாம் போய் பார்க்கனுமே அதான். ”
அரசியை பார்த்தான்.. பெருமூச்சை விடுத்து.. ம்.. நால்வரை பார்த்தவாறே.. ” எங்க கல்யாணபுடவைய எடுக்க.. யாரும் வெளியூரோ.. இல்ல எங்கும் வரவேண்டிய அவசியம் இல்ல. ”
” டேய். என்னடா தீடீர்னு குண்ட தூக்கி போடுற!.. ”
புன்னகையுடன்.. ” அக்கா என்னைய முழுசா சொல்லவிடுங்க. ”
‘ சொல்லுடா.. ‘ என அதிர்ந்த நிலையில் இருந்து சாதாரணநிலைக்கு மாறி தம்பியை பார்த்தார்.
” அக்கா.. நான் சென்னையில் டிசைனர் வைத்து அவளுக்கு என்று புசுசா டிசைன் செய்ததில் இருந்து.. உங்களுக்கும், எனக்கும் பிடித்ததை செலக்ட் பண்ணனும். அதை நெய்யற இடத்தில் அவங்களே கொடுத்து.. வாங்கி.. வீட்டிற்கு வந்து கொடுத்துடு வாங்க. ”
அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டுயிருந்தவர்களில்.. ” இதை எப்ப முடிவு பண்ண வேந்தா?.. !.. ” கோபமா?. வருத்தமா?. ஆற்றாமையா ஏதோ நிலையில் சித்ரா கேட்டக..
” ம்மா. உறுதி அன்னைக்கு அரசி.. இங்க நீங்க விரும்புவதில் இருந்துதான்.. நான் செலக்ட் பண்ணனும் சொன்னப்பவே.. இந்த ஐடியாவோட தான் உங்கிட்ட சரினு சொன்னேன். ”
” ஓ.. இதுபற்றி முன்னாடியே எழிலரசிக்கு தெரிந்ததால் தான்.. நீ முதலில் எழிலரசிக்கு எடுத்துட்டு!. அடுத்து இவங்களுக்கு எல்லாம் எடுத்துட்டு இருக்கியா?. ” கோபமாக கேட்க..
அய்யோ என்ற நிலையில்.. ” இல்லம்மா. அரசிக்கு நான் சஸ்பென்ஸா அன்னைக்கு பார்க்கபோகும் சமயம்தான் சொல்லனும் நினைச்சு இருந்தேன். அதனால அவளுக்கு எதுவும் தெரியாது. நான்தான் எல்லோருக்கும் எடுக்கும்போது உனக்கு எடுக்காம எப்படினு மூனுபுடவை மட்டும்தான் எடுத்தேன். ”
ஏதான் என்னைய இப்படி அவளிற்கு செய்யவதை இப்படி தீடிர் என்ற சூழ்நிலையில் சொல்ல வைக்கிறாங்களோ என்ற மனநிலையில் அம்மாவை பார்க்காமல் வருத்ததுடன் முடித்தான்.
” அப்படியா அண்ணா. அப்ப கல்யாணத்திற்கு போட வேண்டியதையாவது எல்லாமே ஒரே வேலையா எடுக்க வேண்டியது தானே. ஏன் மூனுமட்டும் எடுத்துயிருக்க?. ”
‘ இதை கேட்ட சித்ரா.. ம் உன் அண்ணா நிறைய சேலைய முன்னாடியே வாங்கி வைத்துயிருக்கேனா சொல்லுவான். ‘ மனதில் அவளை திட்டியவாறே.. ஒருபுறம் எழிலரசிக்கு தெரியாதா என்ற மகிழ்ச்சியில் இருந்தார். ‘
” வினோ.. அரசி.. நான் எங்க கல்யாணபுடவையை கடைக்கு போய்தான் எடுக்கபோறோனு நினைத்து.. இன்னைக்கு மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி எடுத்துக்கொடுங்கனு சொல்லியும்.. அவளுக்கு புடவை எடுக்கும் போதும் எடுத்துக்கலாம் சொல்லிட்டா. இப்ப நான் சொன்னதிற்காக மட்டுமே மூனுபுடவை. அதுக்கு மேல எடுக்கவிடல. சரி நானும் மீதிய காரைக்குடி இல்ல சென்னையில் பத்திரிக்கை வைக்க போகும்போது காஞ்சிபுரம் போய் எடுக்கலாம் விட்டுடேன். ”
“சரிடா.. அப்ப நகையாவது இன்னைக்கே எடுக்கபோறாயா?. இல்ல அதுக்கும் ஒருபக்கத்திற்கு பேச போறாயா?. அப்படி இருந்தா சொல்லுடா. சாப்பிட்டு நிதாமான கேட்டுகிறேன். ” ஆம் என்பதுபோல புன்னகைக்க..
” அப்ப ஒரு பக்கம் இருக்கா?. ” நெஞ்சில் கை வைத்தாறு கேட்க..
விரிந்த வெக்கபுன்னகையுடன்.. ” கல்யாணம், மற்ற புடவை எல்லாம் எடுத்த பின்னாடி தான் அக்கா.. நகை வாங்கனும். ” தான் முயல்குட்டிக்கு செய்வதை இதற்கு மேல் விளக்க வேண்டாம் என ஒருவரியில் முடித்தான்.
” டேய் நீ இப்படி கன்னம் சிவக்க வெக்கம்படுவதற்கு!.. ஒருபக்கமே பேசியிருக்கலாம் டா. நான்கூட இப்படி வெக்கபட்ட மாதிரி ஞாபகம் இல்லடா. நாங்ளே கண்ணு வைத்துவிடுவேன் போல. இனி அடிக்கடி உன்னைய இப்படி பார்ப்போல.. அதனால நீ வேண்ணா கல்யாணம் முதல்நாள் வரை தாடி வைச்சுக்கிறாயா?.. ”
” முடியாதே.. ” அவளிடம் நெருங்கி.. ” அரசிக்கு நான் தாடி வைத்துயிருப்பது பிடிக்கலையா. வச்சா அவ்வளவுதான். ” பயம்போல கூற..
” ஓ.. அப்படி வச்சா எழில் கன்னத்தில் அடித்துவிடுவாளா?. ” மூவருக்கும் கேட்கும்படியாக புன்னகையுடன் கேட்க.. அதை அவன் கவனிக்கவில்லை..
அரசி ஒருபார்வை பார்த்தவாறே புன்னகையுடன்.. ” அடிக்கமாட்டா.. கையில் கிள்ளி விட்டு விடுவாக்கா. ” மிக பாவமாக கூற..
இருவர் நன்றாக சிரிக்க.. இருவர் மெல்லிய புன்னகை புரிய.. ” ஓ.. உயரம் எட்டாதுனு இப்படி பண்ணுவாளா?. அதான் நீ அடிக்கடி கத்துத்துறியா?. ” தன்னவளை பார்த்தவாறே ஆம் என தலையசைத்தான். அவர்களும் கூட இவ்வளவு பண்ணுவாளா?. என பார்த்தனர்.
சில நொடிகளில்.. ” சரி ம்மா. நீங்க எல்லோருக்கும் எடுத்ததுட்டே இருங்க.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்து உங்களுக்கு, பெரியம்மாக்கு, அத்தம்மாக்கு நானே எடுத்துத்தரேன். “
அதே புன்சிரிப்புடன்.. ” ம்.. சரி வேந்தா. ” நால்வரும் செல்ல..
கல்யாணபுடவை பார்க்கும் அன்றுதான்.. தன்னவள் உட்பட எல்லோருக்கும் தெரிய வேண்டும் என இதை ரகசியமாக.. பகிராமல் வைத்திருந்தவன்.. அவர்கள் சென்றதும் சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் சேலையை எடுத்து வைக்ககூறி.. அடுத்தநிமிடம் தன்னவளின் முன் நின்றான்.
உறங்கும் தீக்ஷாவை வாங்கி ஒருகையில் வைத்துக்கொண்டு.. மறுகையால் அவளை அணைத்து.. ” முயல்குட்டி உன்கிட்ட ஒன்னு சொல்லனும். ” அவர்களிடம் கூறியதை தன்னவளிடம் பகிர்ந்தான்.
கேட்டவள் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியிருந்து.. இருப்பினும்.. ” தனு.. ஆனாலும் இதுகொஞ்சம் ஓவரா இருக்கு. ” அவனின் கன்னத்தை பிடித்துயிழுத்து கூறினாள். இவ்வாறு அரசி செய்வாள் என தெரியுமாகையால்.. சற்றுதள்ளி தான் நின்றுயிருந்தான்.
அவள் கண்களை பார்த்து.. ” இருந்துட்டு போகுது. என் அரசிக்காக இன்னும் எதுனாலும் பண்ணுவேன். ” அவளை தோள்வளைவில் இறுக்கி கூற.. அவள் கையில் சாய்ந்து.. கண்ணாடி வழியில் வெளியே தெரிந்த இடத்தை பார்த்த வண்ணம் சில நொடிகள் அமைதியாக நின்றனர்.
” தனு.. அத்தை அவங்களுக்கும்.. மற்றவர்களுக்கும் எடுத்துட்டாங்களா?. ”
” எடுத்துட்டு இருக்காங்களா?. அதனால அம்மா, பெரியம்மா, அத்தம்மா கடைசியாதான் எடுக்கனும்மா. நாம்ம எடுக்க வேண்டிய சேலை எடுத்துட்டு.. அங்க போகலாம். ” பேசியபடியே இருவரும் சேலை எடுக்கும் இடம் முன்.. சேரில் அரசியும் , அவள் மடியில் தூங்கிய பாப்பாவும்.. அவன் அருகில் இருக்க.. வேந்தன் சேலை பார்க்க ஆரம்பித்தான்.
” கடைதிறப்பு விழா அன்று வேலை செய்தவர்களுக்கு எப்ப எடுக்க?. ”
புன்னகையுடன்.. ” அதை திலகன், வினோத், கதிரவன் பண்ணுறாங்க.”
” ஏன் சத்யா, தர்ஷினி கூட அவங்க இல்லையா?. ”
” இரண்டுபேரும் சீக்கிரமாவே எடுத்துட்டு உங்க அத்தை, அம்மா, அப்பா ஏதாவது நினைப்பாங்கனு பயந்துட்டு.. இளமதிகிட்ட போரோனு வந்துட்டாங்களா. கால் பண்ணி என்னய என்ன பண்ணுறேனு கேட்டு புலம்பினான். சரி கடைதிறப்பு விழாவிற்கு உடை ஜென்ஸ் மெட்டிரியல்ஸ். சேலை எடுங்கனு சொல்லிட்டேன். “
சரி என தலையசைத்து.. அந்த பெரிய ஹாலில் தன் உறவுகள் ஆங்காங்கே சேலை எடுத்துக்கொண்டுயிருந்ததை பார்த்து பின்.. அமர்ந்துயிருந்த நிலையில் தன்னவனின் இடையில் இதமாக சாய்ந்துக் கொண்டு.. அவன் பார்த்து எடுக்கும் அழகை ரசித்துக் கொண்டுயிருக்க..
அவளவன் அவள் சாய்வதற்கு ஏதுவாக நெருங்கி நின்று.. அவளிற்கு தன்னை ரசிக்க இன்னும் வசதிபடுத்திக் கொடுக்க.. இதை அவர்களின் எதிரே இருந்த கடையின் ஊழியர்கள் புன்னகையுடன் பார்த்தபடியே.. சற்றுமுன் இவன் எழிலரசியை பற்றிக் கூறியதை ஆர்வமுடன் அவர்களுக்குள் ரகசியாமாக பேசிபடியே.. வேந்தன் கேட்கும் புடவை எடுத்துக் கொடுத்தார்கள்.
அதன்பின் 15நிமிடங்களில் எழிலரசி திக்ஷவை வைத்தபடியே ஒரு குட்டி தூக்கும் தூங்கியிருந்தாள். வேந்தன் அவள் தூங்க ஆரம்பித்தவுடனே சத்யாவை அழைத்து அருகில் அமரக்கூறிவிட்டான். எங்கே குழந்தையை நலுவி விடுவாளோ என.. ஆனால் அரசிக்கு தூக்கம் கலைந்துவிடும் என வாங்கவும் இல்லை. சத்யாவிடம் அவளிற்கு வாங்கியதை பிடித்துயிருக்கிறாதா?. என கேட்டு திருப்தி படுத்திக்கொண்டு.. அதன்பின் எல்லாம் பில் போடும் நிலையில் அரசியை எழுப்பினான். சத்யா குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.
தண்ணீர் பருக வைத்தான். ” அரசி அம்மாவிடம் போலமா?. இல்ல காரில் போய் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குகிறாயா?. ”
” இல்ல தனு. ரெஸ்ட் ரூம் போய்யிட்டு.. அத்தக்கிட்ட போலாம். ” அவளின் முகம் தெளிவாக இருக்க.. ” சரி ” என அவளிடம் எல்லாவற்றையும் காண்பித்து.. பின் பில் போட அனுப்பியபின்.. அவர்கள் ரெஸ்ட்ரூம் சென்றுவர.. பீல்லை வாங்கிக்கொண்டு.. தங்கள் அன்னைமார்களிடம் சென்றனர். பெண்கள் நிறைய இருக்க.. அங்கே இரண்டு விழாவிற்கும் என்று கொடுக்கும் சேலைகள் அனைவருக்கும் வாங்கி முடிக்கும் நிலையில் இருந்தார்கள்.
” அம்மா முடிந்ததா?. இல்ல நீங்க பாருங்க. நான் போய் உங்களுக்கு எடுக்க ஆரம்பிக்கட்டா. ” அவர்கள் எடுத்து வைத்திருந்த சேலையை பார்த்தான். நிறைய இருக்கு. ஓ.. இரண்டுவீட்டு பக்கமும் சேர்ந்து எடுத்ததா.
” இன்னும் இரண்டுதான். உட்காருங்க.. சேர்ந்தே போகலாம். ” அரசியை பார்த்த படியே நிற்க.. ” ஏன்டா எழில பார்க்குற?. ”
” இல்ல இங்க எடுத்தபின் அங்க எல்லாம் எடுத்து சாப்பிட லேட் ஆகிடும் இல்ல. அதான். நீங்க நடுவில் ஜூஸ் குடிச்சிங்களா?. இல்ல எதுவும் குடிக்காம பார்க்கீறிங்களா?. ”
” ம்.. குடித்தோம். நீங்க?. ”
” இல்ல.. நேரா சாப்பாடுதான். அப்பதான் இவ ஒழுங்கா சாப்பிடுவா. ” அவனை முறைத்து.. கைகளில் கிள்ள.. சத்தமில்லாமல் கைகளில் தேய்த்து அவளை பார்த்து பின் அனைவரையும் பார்க்க.. அங்கே ஒரு சிரிப்பொலி ஒன்றாக கேட்க..
எழிலரசி முழித்தாள். மெதுவாக.. ” தனு.. ” அவனை சுரண்ட.. அவளை ‘ என்னடி ‘ என்ற லுக்விட.. ” ஏன் இப்ப உங்கள பார்த்து சிரிச்சாங்க?. ”
ஏன் என தெரிந்ததால்.. மனதில் புன்னகைத்து.. வெளியில் கடுப்புடன்.. ” ம்.. வேண்டுதல். ”
அவனின் கண்கள் புன்னகைத்ததை பார்த்தவள்.. “ஓ.. அப்படியா!. ” புன்னகையுடன் திரும்பிக்கொண்டாள். பின்னர் அங்கு வேலை முடித்து பெரியவர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் பட்டு பக்கம் சென்றார்கள்.
நடந்து சொல்லும்போது.. ” அரசி நீ எடுக்கிறியா?. ”
யோசித்தவள்.. ” இல்ல தனு. இப்ப நீங்களே எடுங்க. நாம்ம தனியா போகும்போது அப்ப நான் செலக்ட் பண்ணுறேன். அதுமில்லாம அத்த எப்படி போடுவாங்கனு தெரியாது. இப்ப நீங்க எடுக்கும்போது பார்க்கிறேன்.. இல்ல அவங்க உங்களிடம் என்ன மாதிரி பிடிக்கும் சொல்லுவாங்க. அதை கேட்டு பிறகு நான் எடுக்குறேன். ”
” நீ கேட்டா சொல்ல மாட்டாங்களா?. ” யோசனையாக கேட்க..
” சொல்லமாட்டாங்க. எந்த சேலையாக இருந்தாலும் சரினு சொல்லிடுவாங்க. நீங்க அம்மாக்கிட்ட கேட்பீங்க தானே.. அப்ப உங்களுக்கு புரியும். “
அவளை முறைத்தவாறு.. வேந்தன் அம்மாவின் விருப்பம் கேட்க. அவர் வெள்ளம் என பதில் அளிக்க.. பெரியம்மா அதில்பாதி பதில் கூற.. அத்தம்மா ” உங்க விருப்பம் மாப்பிள்ளை ” பதில்கூற.. என அனைத்தும் கேட்டபின்..
தன் அரசியின் நக்கல் சிரிப்பை பார்த்து.. ‘ போதும்டி.. ‘ என்ற பார்வை செலுத்தி பின் சேலைகளை அடுத்த அரைமணி நேரத்தில் தேர்வு செய்து பில் போட அனுப்பியிருந்தான்.
வேந்தன் பெரியப்பா, பெரியம்மா, குழந்தை யாழினி, அருணாச்சலம், லட்சுமி, வாங்கிய துணிகள்பாதி என வினோத்துடனும். இளமதி, குழந்தை தீக்ஷா, அம்பிகா, தர்ஷினி, சத்யா, திலகனுடனும் ரேவதி, சங்கவி, விஸ்வநாதன் என இவர்கள் சாப்பிட்டு கிளம்பிவிட.. பின்னர் இருப்பவர்கள் சாப்பிட்டு நகைகடை செல்வதாக திட்டம்.
” என்ன வசு ரொம்ப அமைதியா இருக்க. எடுத்த டிரஸ் எல்லாம் ஓகே தானே?. “
” ம் எல்லாம் ஓகே தான் அண்ணி. கமலேஷ் மாமாவும், சாருவும் என் கூட கோபமா இருக்காங்கனு நினைக்கிறேன். ”
” நீயும், சாருலதாவும் பிரண்ட்ஸ் மாதிரிதானே இருப்பீங்க. ஏன் அவளுக்கு என்ன ஆச்சு ?.. ” அருகில் இருந்த மேகாவை பார்த்து பின்..
” அது நான் வேறு ஒருவிஷயமா யோசித்துயிருந்து.. அதைபற்றி மேகாவிடம் பேசிட்டு.. சாருவிடம் அவ காலையில் வந்ததில் இருந்து சரியா பேசல.. இல்லஇல்ல பேசிவே இல்ல. அதை மாமாவிடம் சொல்லியிருப்பா. இங்க வந்தும் அக்கா, இவங்க அண்ணியெல்லாம் ஒன்னா இருந்ததால.. நான் மேகாவிற்கு துணையா இவங்க கூட இருந்ததால சரியா பேசல. அதனால கூட இருக்கும். ”
புன்னகையுடன்.. ” இதுக்கு எதுக்கு வசு கவலபடுறீங்க. இன்பா கூட என்னைய வந்ததில் பார்க்ககூட இல்ல. ஏன்னு எனக்கு தெரியும். தெரிந்தும் நான் கவலையாபடுறேன். நான் சொல்வதை நீங்க இப்ப.. உங்க மூளையில் ஏற்றிக்கோங்க. கல்யாணம் முடியும் வரை தங்கச்சிக்காக இதுபோல பண்ணிணா நீங்க கொஞ்சம் கண்டுக்காம வீட்டுங்க. அதுதான் உங்களுக்கு நல்லது. ”
” அத எப்படி விட முடியும் மேகா. இன்பா மாமா ஆரம்பத்தில் இருந்தே இப்படி தான். அதனால நீங்க இருப்பதில் காரணம் இருக்கு. ஆனா மாமா அப்படியில்லையே. என்னைய பிடிக்கும். படிப்பு முடியனும் காரணத்திற்காக விலகியிருக்காங்க. அண்ணா இருந்தா என்னைய பார்க்கவே பயப்படுவாங்க. அப்படி மிரட்டி வைச்சுயிருக்காங்க. ” மெல்லிய புன்னகையுடன் கூற..
” ஓ.. உங்க அண்ணா.. கமலேஷ் அண்ணாவை மட்டும் மிரட்டி வைச்சுட்டு.. அவர் மட்டும் யார் என்று தெரியாத பெண்ணிற்கு.. நகை, புடவை எல்லாம் எடுத்து வைத்துயிருக்காறா?. ஆனா பாருங்க.. அவர பார்த்தும் நம்ம கல்யாண பண்ணபோறவங்க.. நமக்கு ஒரு டாப் கூட வாங்கிக் கொடுக்கல. ”
” அட போங்க மேகா. இதையே நான் மாமாகிட்ட கேட்டுயிருக்கேன். ஏன் நீங்க அண்ணாவ பார்த்தாவது எனக்கு வாங்கி தர தோனலையானு?. அதுக்கு என்னய முறைத்து பார்த்துட்டு.. அதெல்லாம் எனக்கு முன்னாடியே தானா தோனியிருக்கனும். உங்க அண்ணா பார்த்து வரக்கூடாது.. பண்ணக்கூடாதுனு சொல்லிட்டுறாரு. அதனால நானும்.. சரி பண்ணாதீங்க போங்கனு விட்டேன். ஆனா அண்ணா இப்படி இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ”
” என்ன ஆச்சரியம் வசு. எனக்கு புரியல?.. ” இருவரும் கேட்க..
” எழில் அண்ணி போடும் சுடி, சேலை, நகைனு இப்ப போடுவது எல்லாமே அண்ணா.. முன்னாடியே வாங்கி வைத்தது.. இப்ப வாங்கியதும் தான். இருக்க நகை, புடவை பத்தானு.. இன்னும் கூட வாங்கனும் அப்பாவிடம் சொல்லியிருக்காரு. நான் இத்தனை வருடம் பார்த்த அண்ணா யாரோ மாதிரியும்.. இப்ப இருக்க அண்ணா யாரோ மாதிரியும் இருக்கு. ”
” ம்.. ஆனா அவரு எப்படியிருந்தாலும்.. நீ கேட்ட நகை இன்னைக்கு கிடைக்க போகுது தானே. பின்ன எதுக்கு கவலைபடுற விடு. “
” ப்ச்.. கிடைக்கபோகுது தான் மேகா. ஆனா அதுக்கு எத்தனை கேள்வி?. அண்ணியோட அனுமதி, ஐடியா. ம்.. இப்பவே இப்படி அவங்களிடம் இவ்வளவு கேட்க வேண்டியது இருக்கு. இன்னும் கடை, ஃபேக்டரினு முழு பணம் சம்பந்தபட்டது எல்லாம் அவங்க கைக்கு போன பிறகு என்னெல்லாம் கேட்க வேண்டி வருனு தெரியல. ”
” ஓ.. லீகலா ஏதாவது மாற்றுவது விஷயமாதான் உங்க அண்ணாவும், எழிலரசியும்.. விஸ்வா அண்ணாவ பார்க்க வந்தாங்களா?.”
” ம்.. அப்படிதான் நினைக்கிறேன் அண்ணி. அண்ணா அதை வீட்டில் யாருக்கும் ஒன்னும் சொல்ல. ஆனா அண்ணியோட சம்பந்தப்பட்டது மட்டும் தெரியுது. ”
” ஏன்?. அத்தை கூட கேட்டலையா?. ”
” ம்.. எங்க ?. அண்ணா வீட்டில் இருந்தாதானே கேட்க. அண்ணிக்கு உடம்பு முடியலைனு.. அண்ணா ஒருவாரமா வீட்டிற்கு எப்ப வாரு?. போறாரு?. இல்ல வந்தரானு கூட எனக்கும், அம்மாவுக்கும் தெரியாது. அப்பாவிடம் தான் எல்லாம் சொல்லுவாரு. ”
” அப்ப மாமாவுக்கு.. அண்ணாவ பார்க்க வந்த விஷயமும் தெரியுமா?. ” ஆவலுடன் கேட்க.
” அது தெரியல அண்ணி. ”
” ம்.. வீட்டில் இருப்பவர்களுக்கே தெரியுமா?. தெரியாதானு நினைக்கும் அளவிற்கு.. அதுவும் இப்பவே என்ன பண்ணுவாரு?. ”
” அது எனக்கு எதுக்கு அண்ணி?. எனக்கு தேவையானது கேட்டா.. கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். இப்போதைக்கு எனக்கு அதுபோதும். ”
” ம்.. இப்போதைக்கு நீ கேட்டது உனக்கு கிடைக்கும். ஆனா இது எத்தனை நாளைக்குனு தெரியாது. ” இருவரையும் பார்த்தவாறு..
” வீட்டில் எப்போதும் படிப்புபோடு சேர்த்து வீட்டு வரவு, செலவு பணம் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்திருக்கனும். உங்களுக்கு இரண்டு நாத்தனார் இருக்காங்க. நீங்க கல்யாணம் செய்த பிறகு.. அவங்களுக்குனு நிறைய செய்ய வேண்டிவரும். அந்தநேரத்தில் தேவையானதை மட்டும் செய்து சமாளிக்க முடியும். எப்படி எழிலரசி?. இப்பவே சமாளிக்கிறாங்க அதுபோல. ”
” அவங்க என்ன சமாளிச்சாங்க அண்ணி?.. ” புரியாமலும், கோபமாகவும் கேட்க..
மெல்லிய புன்னகை செய்து.. ” அதான் நீ சொன்னதிலிருந்து…உங்களுக்கு நகை வாங்க சரி சொன்னதில்.. என்ன விஷயம் இருக்கானா?. உங்க அண்ணாக்கு அதிகம் செலவும் இல்ல.. அதேசமயம் உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். இதை எழிலரசி அழகாக செய்யப்போறாங்க. நாங்க அதை பார்க்க போறோம்.
இது எப்படி முடிந்தது அவங்களா?. அவங்க வீட்டில் இன்பா மூலமும், உங்க வீட்டில் உன்அண்ணா மூலம் வீட்டோட அனைத்து வரவு,செலவு பொறுப்பு அவங்களுக்கு இப்பவே கையில் இருப்பதால் தெரிந்துயிருக்கு. அதனாலதான். இப்ப உங்களுக்கு பொறுப்பு தேவையில்ல.. ஆனா தெரிந்துயிருக்கனும். அப்பதான் நீங்க விருப்பதை கேட்கும் போது தைரியமா கேட்கமுடியும். எதைகூறியும் உங்கள சமாளிக்க முடியாது. ” ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டே தனக்கு தேவையான தகவலை அறிந்துக்கொள்ள வசுவிடம் மட்டும் கூற வேண்டியதை மேகாவையும் சேர்த்து பொதுவாக சொல்லி முடித்தாள் காவ்யா.