” சாருலதா இத வைச்சு பார்க்கலாம். ”
” அக்கா எனக்கு முன்னாடி எடுத்தது வைத்தது.. அதே ஓகே தான். உங்களுக்கு பார்க்க ஆரம்பிக்கலாம். ”
” நான் ஏற்கனவே எடுத்துட்டேன். நீ சொல்லுற நெக்லஸ் நல்லா இருக்குதான். இதையும் பாரு. ” சாருலதாவின் கழுத்தில் வைத்து.. நிமிடங்கள் மேல் பார்த்தாள் எழிலரசி. பின் அவள் சரி என்று கூறியதையும் மீண்டும் வைத்து பார்த்தாள்.
” ம்.. சரி இரண்டுமே ஓகே. இதில் அண்ணாவிற்கு என்ன பிடிக்குதோ?. அதை பில் போட வேண்டியது தான். “
புன்னகையுடன்.. ” இரண்டுமே பிடித்தா?. ”
சிரிப்புடன்.. ” ம்.. உனக்கு லாட்டரி தான். சரி வேற ஏதாவது பார்க்கிறீயா?. ”
அவளை கையெடுத்து கும்பிட்டு.. ” போதும் அக்கா. மாமா, வசு, வினோ அண்ணிகூட முடிக்க போறாங்க. இந்த நெக்லஸ், தோடுற்கே.. கடையில் பாதி போட்டு பார்த்துயிருப்பேன். அப்பாவோட வந்தா கால்மணி நேரம் தான். நாம்ம இப்ப பார்க்க ஆரம்பித்து ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகப்போகுது. ”
” ஹூம்.. நேரம் ஆகுது என்பதற்காக இஷ்டத்திற்கு வாங்க முடியுமா. நமக்கு பிடிக்கனும்.. புதுமாடலா இருக்கனும். யூனிக்கா இருக்கும். அதுக்காக சில மணிநேரம் எப்பயாவது செலவு செய்யலாம். அண்ணா.. என்னைய உனக்கு அழகானதா!. பார்த்து எடுக்க சொல்லியிருக்காங்க. அதனாலதான். ரொம்ப படுத்திட்டனோ. ” பாவமாக கேட்க..
” ச்சே ச்சே.. அப்படி ஒன்னும் இல்ல அக்கா. நான் அப்பா, நந்தினி அக்காவோட வரப்ப.. என்னக்குனு வாங்கும் நகைய கூட அக்கா.. தனக்குனு போட்டுதான் பார்த்துதான் எனக்கு வாங்குவாங்க.. கொடுப்பாங்க. ஆனா நீங்க இன்னைக்கு பண்ணது ரொம்ப பிடித்தியிருந்தது. ஆனா என்ன நம்மள பார்த்து இவங்க அலும்பு தாங்களடானு பார்ப்பது போல இருக்கு. அதான். “ புன்னகைமுகமாக கூற..
” ம்.. இருக்கும் இருக்கும். சரி அண்ணாவ கூப்பிடு. இப்ப சொன்னாதான் வசுவிடம் இருந்து இன்னும் கால் மணி நேரத்திற்கு பிறகாவது வருவாரு. ” புன்னகையுடன் எழில் கூறியதை கேட்டிருந்த சாரு.. அவள் போனிலிருந்து கமலேஷை அழைக்க..
எழிலரசி கமலேஷ் பக்கத்தில் அமர்ந்து சித்ரா, சாந்தி, லட்சுமிக்கு அவரவர் விருப்பம் அறிந்து நகைகளை எடுத்துக் கொண்டுயிருக்கும்.. தன் தனுவை சைட் அடிக்க ஆரம்பித்தாள்.
‘ தன் உடையின் நிறத்தோடு ஒன்றாக.. லைட் ஆரஞ்சு வண்ணம் அதில் பீளுகலர் மெல்லியகோடு போட்ட சட்டை, கிரே கலர் ஜீன்ஸ், கேஷ்வல் சூ அணிந்து.. அளவான பேச்சுடன்.. தான் செய்யும் வேலையை விரைவாக, அதே சமயம் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக உடைகள், இப்போது நகைகள் எடுத்துக் கொண்டு.. காலையில் எப்படி இருந்தானோ!. இன்னும் அதேபொலிவுடன்.. கண்களில், இதழில் புன்னகையோடு அவளின் எதிரே சற்று தூரத்தில் இருந்தாலும்.. அங்குயிருந்தே மயக்குகிறான் அவளின் மன்னவன். ‘
அவளின் போனில் மெசேஜ் ஒலிக்க… புன்னகையுடன் படித்தாள்.. ” முயல்குட்டி முதலில் கையை கழுத்தில் இருந்து எடு. நீ பார்ப்பது.. உன் கையிருக்கும் இடம்.. மாமாவ வா வானு கூப்பிடுது. நான் நகை எடுக்கவா?. வேண்டாமா?. ஒழுங்கா திருப்பி உட்கார். ” படித்தவளின் முகம் அவன் எதை குறிப்பிடுகிறான் என்று புரிந்து சிவப்பை பூசியது. அவன் நேற்றிலிருந்து அவ்விடத்தில் முத்தம்கொடுத்தே அவளை புது உணர்வுக்குள் இழுத்துச்சென்று.. அவனின் அரசியை தன் கட்டுபாட்டிற்குள் அடக்கி ஆளப்பார்க்கிறான்.
” அக்கா ” தங்கள் உலகில் இருந்து நிமிர்ந்தவள்.. என்ன?. என பார்க்க.. ” நேரம் ஆகும்போல. அதனால அண்ணா நம்மள அங்க வரச் சொல்லுறாங்க. ”
” ம்.. சரி ” பணியாளர் நகையை அங்கு கொண்டு செல்ல.. இருவரும் கமலேஷ் , வேந்தன் அருகில் நின்றார்கள். தன்னவளை புன்னகையுடன் திருப்பி பார்த்து மென்மையாக கையை பிடித்து விடுவித்து.. அவளை தான் அமர்ந்திருந்த சேரில் உட்கார வைத்து.. அவன் நின்றுக்கொண்டு மீண்டும்.. தன் வேலையை பார்த்தான். இதனை சிலர் கவனிக்க தவறவில்லை.
எழில் அருகில் இருந்த ஒருசேரில் சாரு அமர்ந்து.. ” அண்ணா இதில் உனக்கு பிடித்ததை பில் போட கொடுங்க. ” கமலேஷ் நகைகளை பார்க்க.. உடன் வசு, காவ்யா, மேகா பார்த்தனர். பின் அவர்கள் இருவரையும் பார்க்க.. சிரித்தபடி பேசிக் கொண்டுயிருந்தனர்.
வசு கோபமாக இருந்தாள். உடைகள் எடுக்கும் போது பேசவில்லை என்று அவர்கள் நகைகடை வந்ததும்.. சேர்ந்தே பார்க்கலாம்.. என கூறிய அடுத்த நொடி கமலேஷ், சாரு இருவரும் ஒருசேர.. ” எழில் கூட இருக்கட்டும், எழில் அக்காவுடன் இருக்கேன். ” கூறிவிட்டு அவள் பதில்அளிக்கும் முன் எழிலரசி, யோகா, ஆர்த்தி, வேந்தன் இருக்கும் இடம் வந்தார்கள். பின்னர் தான் இருவரும் நகை எடுக்க சென்றது. வேண்டும் என்றே.. கமலேஷை அருகில் வைத்துக் கொண்டாள்.
” லதா இரண்டுமே நல்லாயிருக்கு டா. நீயும் நந்தினியும் வேண்டும் என்பதை போட்டுக்கோங்க. ”
” மாமா நந்தினி அண்ணி இரண்டுமே வேண்டும் என்று கேட்டா?.. ” நக்கலாக கேட்க..
அவளை முறைத்து.. அவள் கூறியதற்கு வருந்துவாளோ என சாருவை பார்க்க.. அவள் புன்னகைமுகத்துடன்.. ” ம்.. நந்தினி அக்கா இரண்டையும் கேட்டா.. ஒன்னும் பிரச்சனையில்ல வசு.. வேற நகை ஒன்றை.. இன்னும் சூப்பரா பார்த்து எடுத்துக்கொடுக்க எழில் அக்காவும், வாங்கி தர அண்ணாவும் இருக்கார். ” கூறி தன் இருவரையும் பார்க்க.. ஆம் என்பது போல கமலேஷ் தலையசைக்க.. எழிலரசி புன்னகையுடன் தோள் சாய்ந்துக் கொண்டாள்.
” ம்.. உன் அண்ணா உனக்கு இன்னும் கூட வாங்கிக்கொடுப்பார் தான். சரி என் பக்கத்தில் வா. நீயும் எனக்கு பார்த்து எடுத்துக்கொடு. ” அவளை கைபிடித்து இழுத்து..
கமலேஷை அடுத்த சேரில் உட்காரவைத்து.. எழிலரசியிடம் இருந்து தன் பக்கத்தில் புன்னகையுடன் அமர்த்திக் கொள்ள.. இதனை மூவரும் எதிர்பார்க்கவில்லை.
வேண்டும் என்றே செய்தது போல இருந்தது. ஒருநொடி அதிர்ந்து பின் எழிலரசி சாதாரணம் போல் ஆகிவிட.. கமலேஷ், சாருலதாவிற்கு தான் என்னவோ போல் ஆனாது. எழிலை சங்கடத்துடன் பார்க்க..
அவள் சாதாரணமாக தன்னவனின் இடையில் பட்டும்படாதவாறு சாய்ந்துக்கொண்டு ‘ நீங்க பாருங்க எனக்கு தனு இருக்கிறான். ‘ என்பது போல அவர்களை புன்னகையுடன் பார்த்தாள். அவர்களும் அதனை உணர்ந்து புன்னகைத்தனர்.
ஆனால் அவளவனிற்கு தெரியுமே.. இப்படி பட்டும்படாமல் சாய்ந்தாளே வருந்தத்தில் உள்ளாள் என.. நகைகளை பார்த்து எடுத்து முடிக்கும் தருவாயில் இருந்தவன்.. தன்னவள் எதன் காரணமாகவோ வருந்தி தன்னை எதிர்பார்க்கிறாள் என உணர்ந்து.. அவளை புன்னகையுடன் பார்த்து நன்றாகவே சாய்த்துக் கொண்டு.. அவளின் தோளில் கை வைத்துக் கொண்டான்.
இதை எதிர்பார்க்காதவள்.. உடன் இருப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என எண்ணி.. ” தனு.. ”
வேந்தன் அவள் அழைப்பில் திருப்பி பதில் திரும்பும் நேரம்.. அவனின் பின்னால்.. ” சார்.. இங்க எழிலரசி என்பவங்க கேட்டது வந்துருச்சு. வந்து பார்த்து வாங்கிக்கோங்க. ” புன்னகையுடன் மேனேஜர் ஒருவர் கூற..
தன்னிடம் சாய்ந்துயிருந்தவள்.. இப்போது நிமிர்த்துக் உட்கார்ந்து இருந்தவளை காண்பித்து.. ” இவங்க தான் எழிலரசி. நீங்க போங்க சார். நாங்க வருகிறோம். ”
” தப்பா எடுத்துக்காதீங்க. அவங்க உங்க கையில் கொடுத்துட்டு தான் கிளம்பனும். என்கூடவே வரிங்களா?. ”
அம்மாவிடம் திருப்பி.. ” ம்மா இதில் எது உங்களுக்கு பிடித்துயிருக்கிறதோ.. முடிவு பண்ணிவைங்க.. வந்து விடுகிறோம். ”
அவர்களிடம் வேறு ஒன்றும் கூறாமல் தன்னவளை அழைத்துக் கொண்டு மேனேஜர் உடன் சொல்ல.. அவர்களை ஏன் என்று புரியாமலும்.. கேள்வியாக, சிறு மனவருத்ததுடன் என பார்த்திருந்தனர்.
கடையின் ஒருபகுதியில் தன்னவனை இறுக்க கட்டியணைத்து.. பின் விலகி ” தனு அது யாருக்குனு?. உங்களுக்கு கேட்கவே தோனலையா?. பில் கட்டவேண்டும் என்று சொன்னவுடனே ஒன்னும் கேட்காம காசு கொடுத்திட்டீங்க. ”
அவளின் கன்னம் பிடித்து கிள்ளி.. ” தேவையில்லாம ரொம்ப பேசாத.. கடைனு கூட பார்க்கமாட்டேன். ” இதழை பார்த்து குறிப்பை உணர்த்த..
” ம்.. எனக்கு இப்ப வேணும். கடை கூட பார்க்காம.. கொடுங்க பார்க்கலாம். ” புன்னகையை கட்டுப்படுத்தி கூற..
ஆனால் அவளவன் கண்களுக்கு.. அவளின் கண்கள் சிறிது கலக்கத்தில் இருப்பதுபோல இருக்க.. அடுத்த நொடியே சற்று தொலைவில் இருந்த அவர்களின் காரின் பின் பக்கத்தில் அவளை உட்காரவைத்து.. அவள் கேட்டதை மூச்சிற்கு ஏங்கும் வரை கொடுத்தான்.
மடியில் அமர்ந்துயிருக்கும் தன்னவளின் கண்ணீரை துடைத்துக் விட்டு.. நெற்றி, கண்கள், கன்னம் மென்மையாக முத்தமிட்டவாறே.. ” முயல்குட்டி இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா?. நீ எதுவும் தேவையில்லாம பண்ணமாட்டேனு எனக்கு தெரியும். அதான். அப்புறம் வேற யாருக்காவும்.. என் அரசி வருந்தக்கூடாது. சரியா. ” அவனின் கன்னத்தில் முத்தமிட்டு சரி என்பதை தெரிவிக்க.
” சரிவா போகலாம். இந்நேரம் கமலேஷ் இல்ல வசு தேடிட்டு கீழ வந்து இருப்பாங்க. ” புன்னகையுடன் மென்மையாக இதழ்பதித்து பின் கதவை திறந்து.. அவளை மடியிலிருந்து அப்படியேஇறக்கி.. அவனும் இறங்கினான்.
நடந்தபடியே..” முயல்குட்டி கேட்டது கிடைத்தது. அப்ப வீட்டில் போய் நான் கேட்பது தடையில்லாம கிடைக்கும் போல. ” அவனை முறைத்து முகம் சிவக்க திரும்ப..
” ஹேய் முயல்குட்டி உன் கண் ஒன்னு சொல்லுது.. முகம் வேற ஒன்னு சொல்லுது. ” அவர்கள் லிப்டின் முன் நிற்க..
வெக்கத்தை மறைத்து.. ” தனு பேசமா அமைதியா வரப்போறீங்களா இல்லையா?. ” புன்னகையுடன் லிப்டின் ஓரத்தில்போய் நிற்க..
” அடியேய்.. அமைதியா இருந்த பையன சும்மாயில்லாம.. கொடுங்க பார்க்கலானு நல்லா.. ” எக்கி அவனின் வாய்யை கைகளால் முடி.. ” தனு யாராவது.. ” அவள் கூறவும் முட போன கதவு.. உடனே திறக்க.. லிப்டில் நுழைந்தவர்களை பார்த்து இருவரும் அதிர்ந்து அப்படியே நிற்க..
” சரி சரி பயந்தது போதும். எழில் கொஞ்சம் அண்ணா வாயிலிருந்து கைய எடு. ரவி சித்தப்பாவும், விஸ்வா மாமாவும், அவர் அப்பாவும் வராங்க. ” புன்னகையுடன் கதிரவன் கூற..
அப்பாவா!.. மாமாவா!.. இருவரும் தங்களை சாதாரண நிலையில் நின்று.. எதிரில் இருந்த கதிரவன், இன்பாவை அசட்டு புன்னகையுடன் பார்த்து நின்றனர். அவர்களும் பதில் புன்னகை மட்டுமே. இவர்களை இந்த இடத்தில்.. இந்நிலையில் எதிர்பார்க்கவில்லை.
தங்களை சகஜ நிலைக்கு மாற்ற வேண்டி.. ” போன வேலை எல்லாம்.. நினைத்தமாதிரி முடிந்ததா இன்பா?. ”
” ம் ஆச்சு மாமா. விஸ்வா அண்ணாவீடு, அங்கயிருந்தே அவங்க தங்கைகள் வீட்டிற்கு போனில், அப்புறம் காவ்யா அக்கா.. அப்பா, சித்தி, சித்தப்பா வீடு.. எல்லோருக்கும் கடைதிறப்பு விழா, கோயில் கும்பாபிஷேகம் வர கூறி அழைச்சாசு. ” சரி என தலையசைக்கவும்.. மூவரும் உள்வர.. வந்தவர்கள் கேள்வியாக பார்க்க..
” அப்பா அரசி ஏதாவது சாப்பிட கேட்டா.. அதான் காரில் இருக்கானு பார்க்க வந்தேன். ”
‘ அப்படியா ‘ என்று அரசியை பார்க்க.. ஆம் என தலையாட்ட..
கண்கள் முழித்தப்படி வேகமாக தலையாட்டலை பார்த்து புன்னகையுடன்.. ” எடுத்தாச்சா?. ”
” எதை மாமா கேட்குறீங்க?. ” அவள் கூறியவுடன்..
” சாப்பிட ஏதாவதை?. ” இன்பா, வேந்தன் ஒருசேர கூற.. கதிரவன் சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டு நின்றான். விஸ்வா ஏதோ இரண்டும் பண்ண வந்துயிருக்காங்க?. என்ற பார்வையில் பார்க்க..
” சாப்பிட எதுவும் இல்ல. நான் நீங்க நகையா?. இல்ல சாப்பாட ஏதாவதில்?. எதை கேட்கிறீங்களோ நினைத்து கேட்டேன். ”
அவரச குடுக்கைங்களா!.. என்ற பார்வையில் இருவரையும் அவள் முறைக்க..
” சரி விடு அரசி.. சரி விடு எழில்.. ” இப்போதும் இருவரும் ஒருசேர கூற..
கதிரவன் இப்போது வெளிப்படையாகவே சிரிக்க.. மூவரும் அவனை முறைக்க.. அவர்கள் லிப்ட்டில் இருந்து இறங்கவேண்டிய பகுதி வர.. வெளிவந்தவர்கள் முன்.. வசு, மேகா நின்றார்கள்.
” அப்பா நீங்க அண்ணாவ கீழ பார்த்தீங்களா?. ” அவள் கூறி முடிக்கவும்..அரசியும், வேந்தனும் வெளிவந்தார்கள்.
அவர்களை பார்த்தவள்.. ” நீங்க வர ஏன் இவ்வளவு நேரம் அண்ணா?. ” பதில்கூறாமல்.. ‘ போ ‘ என்று சைகையில் கூற..
நகை எடுத்து முடித்து பத்து நிமிடங்கள் கடந்துயிருப்பதாலும்.. யாரிடமும் ஒன்றும் கூறாமல் சென்றதில் சித்ரா வருத்தமாக அமர்ந்திருப்பதை பார்த்து கோபத்துடன் அழைக்க வந்தவள்.. வேந்தன் வாய் திறக்காமல் சையில் கூறியதால்.. கடுப்புடன் நடக்க ஆரம்பித்தாள்.
அவர்கள் சென்று வேந்தன், எழிலரசியும் அனைத்தையும் ஒருபார்வை பார்த்து.. எடை, பில் போடகொடுக்க..
சில நொடிகளில் ” வேந்தன் சார்.. இந்தாங்க. ” முன்பு வந்த அதே மேனேஜர் கொடுக்க..
” சார் அதை இவங்களிடம் கொடுங்க. ” எழிலரசியை கை காண்பிக்க.. அவர் அரசியிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அனைவரின் பார்வையும் எழிலரசியின் கையில் கிப்ட்ராப் சுற்றியிருக்கும் பொருளின் மீது திரும்பியது.
வேந்தன் அவளை மெல்லிய புன்னகையுடன் பார்க்க.. அவளும் புன்னகைத்து பின் யோகலட்சுமியிடம் எழிலரசி நீட்ட.. ” அண்ணி இது உங்களுக்கு எங்களோட பரிசு.” தன்னவளின் பின்னால் இதனை வேந்தன் புன்னகையுடன் பார்த்து நிற்க.. யோகாவிற்கும், யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
” ஹேய் எழில்.. எனக்கு எதுக்கு.. ?. ” அவள் முடிக்கும் முன்..
” அக்கா வாங்கிக்கோங்க. ” வேந்தன் வாங்குங்க.. வாங்கியாக வேண்டும் என அழுத்தமாக கூற..
அவள் பின் எழிலரசியின் முகம் பார்க்க.. அதில் ஏதோ உணர்வுபூர்வமான வேண்டுதல் முகத்தில் இருக்க.. பின் மறுக்க தோன்றாமல் புன்னகையுடன் அவளை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு வாங்கிக் கொண்டாள். அரசியும் கண்களை சிமிட்டி அழகையை கட்டுப்படுத்தி.. அதனை புன்னகைமுகத்துடனும் ஏற்றாள்.
இன்பாவை தவிர யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் சிலருக்கு நல்ல விஷயத்திற்குதான்.. ஏன்?. வெளிப்படுத்த விருப்பவில்லை என்றும்.. மூவரின் மகிழ்ச்சியான முகம்காட்டிக்கொடுக்க.. சிலர் அப்படியென்ன?. என்று ஆராயும் பார்வை பார்த்தனர்.
” அண்ணி ஏன் அக்காவிற்கு கொடுத்திங்கனு கேட்டல.. கேட்டாலும் சொல்லமாட்டாங்க அதுவேற விஷயம். ஆனா இதில் என்ன இருக்கு என்றாவது நாங்க பார்க்கலாமா?. ”
ஆம் என எழிலரசி புன்னகையுடன் தலையசைத்து.. ” ஆனா வினோ அண்ணி.. அதை எப்ப பார்க்கலானு யோகா அண்ணிதான் முடிவு செய்யனும். ” அவள் யோகாவை பார்க்க..
” ம்.. இப்பவே பார்க்கலாம். எனக்கு சஸ்பென்ஸ் என்றால் பிடிக்காத்துப்பா. ” என்று கூறியபடியே பிரிக்க..
அதில் மார்பு வரை மட்டும் இருக்கும்.. ‘ மயில், பூக்கள் வடிவம் போல்கி டிசைனில் தங்கம்,டைமண்ட் கலந்த ஆரமும், தோடும் ‘ இருந்தது.
பார்த்தவுடன் ரீச் லுக்குடன் மிக அழகாக இருந்தது. யோகா நகையிருக்கும் என்று நினைத்தாள். ஆனால் இப்படியான ஒற்றை எதிர்பார்க்கவில்லை. அதனை சித்தி, அத்தை என அனைவரும் வியப்புடன் தான் பார்த்தனர். இங்கு பார்த்த நகைகளும் நன்றாக இருந்தது. ஆனால் இது இன்னும் சற்று மாறுப்பட்டு.. இதை ஒன்று போட்டாலே போதும் நிறைவாக இருக்கும் படியாக அழகாக இருந்தது.
” அண்ணா இந்த டிசைன் இங்க இருந்த மாதிரி இல்லையே.. பின்ன எப்படி? ”
” அரசி இந்த கடையோட ஆன்லைன் சைட்டில் பார்த்து கேட்டு.. இங்கு இப்ப இல்ல.. தஞ்சாவூரில் கடையில் இருக்குனு சொல்லியிருக்காங்க. கல்யாணத்திற்கு எடுக்கிறோம்.. அதிக நேரம் இங்குதான் இருப்போன் என்றவுடன்.. பில்பே பண்ணியவுடன்.. இங்கேயே வந்து கொடுத்துட்டு போனாங்க வசு. ” மற்றவர்களின் கேள்வியான பார்வையை பார்த்து.. அவர்களையும் பார்த்துக்கொண்டே கூறினான்.
” அப்படியா!.. இது எங்களுக்கு வாங்கி கொடுத்த மாதிரியா அக்காவிற்கும் வாங்கியது?. ” பில் இன்னும் வராதால் அனைவரும் ஒன்றாகதான் நின்றார்கள். இதை கேட்டவுடன் அவள் சந்தோஷமா?. கோபமா?. எந்த மனநிலையில் கேட்டாள் என புரியவில்லை.
காவ்யாவிற்கு அதைவிட. ஏற்கனவே இவ்வளவு நகை வாங்கி இதற்கு ரவியா?. வேந்தனா?. காசு கொடுக்கிறார்கள் என்று தெரியாது?.. மற்றொன்று ஈஸ்வர் தனக்கு வாங்கியும்.. வசு, வினோவிற்கு வேந்தன் வாங்கி தருகிறான் என்றவுடனே யோகாவிற்கும் கொஞ்சம் நகை வாங்கியிருக்க.. இப்போது இதுவும் வேந்தன் வாங்கி.. இதையும் யார் காசு?. யோகாவிற்கு நகைகளின் அளவு கூடுகிறதே.. என மனதில் புலம்பியபடி திக்திக் என அவர்கள் பேச்சை கேட்டாள்.
” இல்ல. ” என்ன?. என அனைவர் பார்க்க..
எழிலரசிக்கு அவள் எதுவும் கூறவில்லையே என்பதால் ஆவலுடன் தனுவை பார்க்க..
” இதில் வாங்கிக்கொடுக்கும் முறை.. திருப்பி கொடுக்கும் முறை என்று இல்ல. இது நாங்க அக்காவிற்கு கொடுக்கும் எங்க கல்யாணத்திற்கான பரிசுதான். ” தன்னவளை அறிந்தவானாக அவளின் விருப்பத்தை அவளை பார்த்து மெல்லிய புன்னகையுடன் கூறினான்.
” கல்யாணபரிசா?. அவங்கதானே உங்களுக்கு கொடுக்கனும். சரி அப்படியே கொடுத்தாலும் இவ்வளவு அதிகமான விலையில் கொடுக்க காரணம் என்ன?. ”
ஏனோ இது யோகா உட்பட அனைவரின் கேள்வியாக இருக்க.. அதில் சிலர் எழில் அவளாக முடிவு எடுத்துகூறி.. அதற்கு அவன் காசு கொடுக்கும் அளவிற்கு வேந்தன் இப்போதே இடம் கொடுத்துயிருக்கிறானா?. என்றும் பார்த்தனர்.
அவன் அவள் கூறியதை கேட்டு சுற்றிலும் பார்த்தான். இவர்களை தவிர வெளியாட்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்க.. பணியாட்கள் நகைகளை பத்திரபடுத்தும் வேலையை செய்ய.. வசு அமைதியாக கேட்டாலும்.. அந்த இடத்தில் சிறிது சத்தமாக கேட்டது. யாரும் பார்க்கவில்லை.. இல்லை இதுபோலான கேள்வியை பலநூறு தடவைகள் பல மக்களிடம் கேட்டுயிருக்கலாம் போல.. இவர்களை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.
” வசு நான் ஏற்கனவே உங்க எல்லோரிடமும் சொல்லியிருக்கேன். எங்களுக்கு சில கல்யாண விருப்பம் இருக்கு. யாரிடமும் காரணம் சொல்லி எதையும் செய்யமாட்டேனு. அதுபோல ஒன்னுதான் இது. நான் அக்காவிற்கு பரிசு கொடுப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்ல. அதனால காரணம் சொல்லவேண்டிய அவசியம் எங்க இரண்டுபேருக்கும் இல்ல.
அரசி இதை , இப்படி , இப்பவே கொடுக்கனும் நினைத்தா!. கொடுத்தோம். அவ்வளவுதான்.
இப்ப நான் உங்க எல்லோருக்கும் வாங்கி கொடுத்து எல்லாமே எதையும் எதிர்பார்க்காம வாங்கிகொடுத்த என்னோட பரிசுதான். நீ கேட்டதால் வாங்கி கொடுத்த பரிசுனு நினைக்காத. நீ கேட்காமலையே.. என்ன இன்னும் கொஞ்சம் கம்மி விலையில் வாங்கியிருப்பேன். ஆனா இப்ப நீஆசைபட்டு கேட்டு.. அதை வாங்கிக்கொடுத்த சந்தோஷம் எனக்கு இருக்கு. ” கூறி சாதாரணமாக பார்க்க..
யாரும் ஒன்றும் கூறவில்லை. ஏனெனில் கேட்க வேண்டியவர்கள் இவனே எல்லாம் கொடுக்கப் போகிறானா!. என்ற ஆச்சரியத்தில் இருந்தார்கள்.
ஏனெனில் பெரியவர்களுக்கு ஏற்றார்போல வைரம் வாங்கியிருந்தான். அதனால் அருகில் வந்த ரவியும், இன்பா ” வேந்தா.. பெரியவங்களுக்கு வாங்கியதை நான் பே பண்ணிக்கிறேன். ” இன்பாவும் ஆமோதிப்பதாக தலையசைக்க.
கமலேஷ், கதிரவன் வாங்கியது தங்கம்.. இவர்களுடன் கலக்கக்கூடாது என்பதற்காக வாங்கிய உடனே அவர்களே பில்பே செய்து வாங்கிவிட்டார்கள். ( மேகா வசுவுடன் இருப்பதால் கமலேஷிடம் கார்டு கொடுத்து சென்றுயிருந்தான்)
” இல்லப்பா நானே எல்லாவற்றிக்கும் காசு கொடுக்குறேன். சரிப்பா பில்பே பண்ணிட்டு வரேன். ” அவர்கள் பதில் கூறும்முன்.. அரசியை அழைத்துக்கொண்டு.. இல்லை இல்லை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
” இன்பா.. இப்ப எதுக்குடா எழிலரசிய இப்படி இழுத்துபோறான். ”
” கமல் அண்ணா.. வேண்டும் என்றால் மாமாவிடம் கேட்டு வரட்டா. ”
ஏன் ஏன் இந்த கொலவெறி என்ற பார்வையுடன்.. ” ஏன்டா.. அவன் வந்து நாலுஅடி போட்டு.. ஒன்னும் ஒன்னும் உங்களுக்கு விளக்கம் கொடுத்தாதான் விடுவிங்களோ?. கேள்வி கேட்க வேண்டுமானு கேட்பான். ”
” தெரியுதுல..” அடுத்து என அவர்கள் பேச..
குழப்பத்துடன் இருந்த ரவிந்தரனிடம் வந்த விஸ்வநாதன் ” மாமா நீங்க பணம் பற்றி கவலபட வேண்டாம். அவன் எல்லாம் முன்னாடியே பிளான் செய்து தேவையான அளவு பணம் வைத்துக்கொண்டுதான்.. எல்லாம் விரும்பி செய்யுறான். உங்களிடம் அதற்கான நேரத்தில் எல்லாம் சொல்லுவான். நீங்க எல்லா விழாவும் சிறப்பா நடப்பது பற்றி மட்டும் யோசிங்க. வேறு எதுவும் இப்போதைக்கு வேண்டாம். ”
நிம்மதி புன்னகையுடன்.. ” அவனிடம் காசு எல்லாம் இருக்குனு தெரியும். ஆனா கஷ்டப்பட்டு சேர்த்த பணம் அவன் தேவையில்லாம செய்யக்கூடாது என்பது தான் என்னோட கவலை. ஆனாலும் உங்ககிட்ட காசு விஷயாம பேசியிருக்கான்ல. அதுபோதும். நான் இனி எதை நினைத்தும் குழம்பமாட்டேன். ” கேட்டவன்..
‘ அய்யோ அவன் பாதிதானே சொல்லியிருக்கான்.. மீதி எனக்கே குழப்பம்தான்!. ‘ என எண்ணியபடியே மாமாவை பார்த்தான். சிலர் இவர்களை எல்லாம் கேள்வியுடன் பார்க்கவும் செய்தார்கள்.
இவற்றிற்கு காரணமானவன்.. மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அனைத்து நகைகளையும் தன்அரசியுடன் வாங்கி வந்து.. வசு, வினோவிற்கானதை அப்பா ரவியிடம் கொடுக்க.. அவர் சித்ராவிடம் கொடுத்து மகளுக்கு கொடுக்க கூறிவிட்டார். அம்மா, பெரியம்மா உடையதை அம்மாவிடமே கொடுத்தான். அத்தம்மா லட்சுமியோடதை அவனே வைத்திருந்தான். பார்க்கும் போது கொடுப்பான் என நினைத்தார்கள்.