நகை கடையில் இருந்து வினோவின் அத்தை, மாமாவும் விட்டிற்கு சென்றுயிருக்க.. விஸ்வநாதன் சொல்லி வைத்திருந்த உணவகத்திற்கு சென்று அனைவரும் சாப்பிட்டு வெளியே வர..
அங்கு புன்னகையுடன்.. ” ஹாய் மாமா. ” அழைப்புடன் வேந்தன் அருகில் சென்றான் சந்துரு. அனைவரும் அவனின் மாமா என்ற விழிப்பில் புரியாமல் பார்த்தனர்.
வேந்தனிற்கு மட்டும் புரிந்தது.. “ ஏன்டா இப்படி தீடிர்னு வந்து கூப்பிட்டு பயப்பட வைக்கிற?. ”
அவனை ஏற இறங்க பார்த்து.. அருகில் சென்று.. ” யார் நீங்க பயந்துட்டீங்களா?. நாங்கயெல்லாம் பின்னாடி வரும்போதே.. நீங்க எழிலரசிய ரூம்.. ” அவனின் வாய்யை பொத்தி..
” டேய் நான் ரொம்ப நல்ல பையன் டா. என் பொண்டாட்டிய.. என்ன கொஞ்சம் முன்னாடியே அதுக்கான உரிமைய எடுத்துக்கிறேன். அவ்வளவுதான். உன் தங்கச்சியோட ரூம்மிற்குள் போய் தூங்க மட்டும்தான்டா செய்தேன். ” பரிதாமாக கூற..
‘ மனசாட்சியோ நீ தூங்க மட்டும்தான் செய்த.. சேர் போட்டு அமர்ந்து கேட்க. அதற்கு முத்தம் எல்லாம் இன்னும் பாக்கி 43000 இருக்கு. அந்த கணக்கு அதெல்லாம். மற்றதில் சேராது. வேற போய்வேலைய பாரு. ‘
புன்னகையுடன்.. ” நானும் ஒன்னுமே சொல்லயே. ஆனா நீங்க பண்ணியது கொஞ்சம் ஓவர்தான். ”
” டேய்.. நீ இன்னும் இவர முழுசா பார்க்கல. அங்க திலகன் அண்ணா கூடதானே ஒருவாரம் இருக்கப்போற. அங்க வந்து பார்த்துட்டு பேசு. இப்ப வா போகலாம். நேரம் ஆச்சு. ” சரியா என கதிரவன்.. அவனை காரின் அருகில் செல்ல.. அங்கு ஆர்த்தி, மேகா உள்ளே இருந்தார்கள்.
இதனை கேட்டபடி தன் காரிற்கு நடந்த வேந்தன்.. ‘ டேய் வேந்தா.. உன் முயல்குட்டிக்கு பண்ணுவதை பார்த்து இப்படி கண்ணு வைக்கிறாங்க. முதலில் அவளிற்கு சுற்றி போடனும் ‘ தன்னவளிடம் வர..
அங்கு.. விஸ்வநாதன் அவள் விரும்பிய நெல்லிக்காயின் மேல் மிளகாய்தூள், உப்புமட்டும் போட்டு பாக்ஸ் நிறைய கொடுத்ததில் இருந்து.. ஒன்றை ரசித்து எடுத்து சிறிதுசிறிதாக சுவைத்து சாப்பிட்டுக் கொண்டுயிருந்தாள். அதை அவன் அண்ணண் சிரித்தபடி பார்த்திருந்தான்.
” அரசிசி.. இப்ப சாப்பாடு கொடுக்கும் போது போதும் போதும் சொல்லிட்டு இப்ப இத சாப்பிட்டுயிருக்க. ” ரசித்து சாப்பிடும் அவளின் இதழை சுவைக்க வேண்டும் என்ற கிறக்கத்தை மனதில் அடக்கி.. வெளியில் முறைப்புடன் கூற..
” அதான் தனு ரொம்ப சாப்பிட்டலனு நீ வருத்தப்பட்ட இல்ல அதனால்தான் . ” பாவமாக கூற..
” நம்பிட்டேன். நம்பிட்டேன். ” முறைப்புடனே தன் பெற்றோர் செல்லபோகும் கமலேஷ் காரிற்கு சென்றான்.
” ப்பா நான் நாளைக்கு ஆபிஸ் லீவ் போட்டுயிருக்கேன். அதனால நேரா அரசிய கூப்பிட்டு கடைக்குதான் வருவேன். ”
” ம்.. சரிப்பா. பொறுமையா வண்டிய ஓட்டிட்டு வாங்க. ” சரி என தலையசைக்க.. அம்மாவை பார்த்தான். அசதியில் சீட்டில் சாய்ந்து படுத்திருக்க.. மற்றவர்கள் புன்னகை புரிந்தனர். டிரைவர்ஒட்ட.. அருகில் கமலேஷ் அமர்ந்திருந்தான். இன்பா, வேந்தன், எழிலரசி தவிர அனைவரும் கிளம்பினர்.
இன்பா வண்டி ஓட்ட பின்னால் இருவரும் அமர்ந்து வந்தார்கள். “தனு கடையில் பூசும் வேலை எல்லாம் முடிந்தா. “
” ம்.. முடிந்தது. ராஜன் அண்ணா போட்டோஸ் அனுப்பியிருந்தாரு நான் இன்னும் அதைபார்க்கல. ” போன்னை எடுத்து இருவரும் பார்த்தார்கள்.
இரண்டு கடைக்கான கட்டித்தின் உள், வெளிப்பகுதி முழுவதும் முடிந்து இருந்தது. மாடியில் இனி ஆரம்பம்பிக்கலாம். அங்கு ஒருபக்கம் இனிப்புகள் எல்லாம் செய்யும் பகுதி. மறுபக்கம் இனிப்பக பொருட்கள், உணவுப்பொருட்கள் வைக்கும் பகுதி.
பின்னர் இருவரும் அவனின் சென்னை தற்போதை வேலைபற்றியும்.. அங்கு எப்போது போகலாம், யாரையெல்லாம் பார்க்க வேண்டும். போகும்போது என்ன வேலைகள் உள்ளன. எத்தனை நாட்கள்?. அன்றைக்கான முன்னேற்பாடுகள் என்ன செய்ய வேண்டும் என பட்டியல் இட்டனர். அவர்கள் முடிக்கவும் வீடுவரவும் சரியாக இருந்தது.
மூவரும் இறங்கும் நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. அனைவரும் உறங்கிக்கொண்டு இருப்பதால் வெளியிலேயே பேசி முடித்து.. பொருட்களை எடுத்துக்கொண்டு.. எழிலரசி முன்னே சென்றிருக்க.. பின்னால் இன்பா தன்னறைக்கும், வேந்தன் தன்னவள் அறையிலும் நுழைந்தார்கள்.
வேறு நினைத்துக் கொண்டே எழிலரசி உடை மாற்றவென.. அப்போது தான் ஷாலை கழட்டி.. டாப் கழட்ட கைவைத்த நேரத்தில்.. உள்நுழைந்த தனுவை பார்த்தவள்.. கையை வேகமாக சாதாரணமாகி.. ” தனு நீங்க இங்க?. அண்ணா.. ” அவளை முறைத்தவன்..
” பொண்ணாட்டி ரூம் இருக்க நான் ஏன் அங்க போய் படுக்கனும்?. நான் இன்பா ரூமில் டிரஸ் மாத்திட்டு பத்து நிமிடத்தில் வருவேன். நீ பாவாடை தாவணி மாத்தியிரு. ” அவள் எதுவும் கூறும் முன் இரவு உடையுடன் வெளியே சென்றான். சொன்ன நேரத்தில் கையில் பாலுடன் வந்தான்.
உடை மாற்றி.. இருவருக்குமான படுக்கையாக சரிசெய்து நிமிரவும்.. அவன் வரவும் சரியாக இருந்தது. வந்தவன் அவளிடம் பாலை கொடுத்து.. முறைத்து முறைத்து பாதி குடிக்க வைத்து.. மீதியை அவன் குடித்து.. அவளை அள்ளிக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தான். இருவரும் இறுக்கி அணைத்தபடி இருந்தனர்.. ஒன்றும் பேசவில்லை. நேரம் ஆகிவிட்டதால் சில நிமிடங்களில்.. அவளின் அருகில் படுத்துக் கொண்டான்.
” தனு தலைய கொஞ்சம் தள்ளி வைங்களே. ” அந்நிலையிலேயே ” ஏன்டி?. ” அவளிற்கு அய்யோ என்றானது. ” தனு மாமா.. என்ன என்னமோ பண்ணுறீங்க. அப்புறம் தனுமாமாவ வேண்ணும் கேட்டா.. என்ன பண்ணுவீங்க?. ” புன்னகையுடன் நகைகடையில் கேட்டதை போல கேட்க..
அவன் அப்படியே நிமிர்ந்து அவளை பார்க்க.. அந்த மெல்லிய விளக்கின் வெளிச்சத்திலும் குறும்புமின்ன புன்னகையுடன் இருப்பவளை பார்த்தவன்.. ” ம்.. என் முயல்குட்டிய.. மனைவியா நினைக்க ஆரம்பித்தப்ப என்ன தோனுச்சோ!. அதை பண்ணுவேன். ”
அவனின் நெற்றியில் அழுத்த முத்தமிட்டு.. ‘ என்ன தோன்றியது?. ‘ என்பது போல அமைதியாக பார்க்க..
பின் படுத்தவாறே.. ” பாவடைதாவணியில் பெரிய பெண்ணா கோயில் பார்த்த என் முயல்குட்டிய.. பெங்களூருக்கு போன கொஞ்ச நாளிலேயே.. என்னவளா ஆக்கிக்கனும்.. பக்கத்திலே வேண்டும் மனசுக்கு தோனுச்சு. அதன்பிறகு உன்பக்கம் யோசித்தா அதுக்கான வயது இல்லனும்.. நாம்ம சேரஒரு அற்புறமான நாள், இடம், நேரம் எல்லாம் இன்னும். இருக்கு. அது நாள் வரை காத்துயிருந்துதான் ஆகனும்.
அதுவரைக்கும் உன்னை பார்த்தயிருந்த உடை, உருவத்தின் கழுத்தில் புதைத்துபடுத்து.. கட்டிப்பிடித்து.. பார்த்த அந்த நிமிடங்களில் நடந்ததுனு.. அதை நினைத்தபடியே தூங்கிடுவேன். தினமும் நினைக்க மாட்டேன்டி எப்பவாவது தான். ” அவள் வருந்துவாள் என எண்ணி சரியாக கூற.. அதுதான் நடந்தது.
அவனின் கன்னத்தில் அவளின் கண்ணீர்.. அப்படியே மச்சத்தில் அழுத்த முத்தமிட்டு.. இறுக்கிஅணைத்து தன்னுள் அவளை கொண்டுவந்து.. ” முயல்குட்டி எனக்கு அதெல்லாம் எப்பவோ நொடியில் மறந்துபோச்சுடி. இப்ப என் முயல்குட்டி பக்கத்தில் இருக்கா.. எப்ப நினைத்தாலும் முத்தம்.. கொடுத்து.. வாங்கிக்க முடியும். இப்போதைக்கு இதுபோதும். நாம்ம நம்ம உணர்வுகளை இப்ப விட.. நிறைய சேமித்து வைத்து.. அதற்கான நேரத்தில் காண்பிக்கும் போது இன்னும்இன்னும் நம் காதல் கூடும் முயல்குட்டி. உனக்கு தனுமாமா வேண்ணும் தோனும்போது மாமாவ லிமிட்டா ஆசைபட்டு.. சில பல முத்ததோடு முடித்துக்கொள். அப்பதான் அன்லிமிட்டடா இன்னும் சிலநாட்களில் கிடைக்கும். ”
” அம்மாச்சி எப்படியிருக்கீங்க?. ” நலம் விசாரித்த படியே எழிலரசியின் வீட்டினுள் கதிரவனும், சந்துருவும் வந்தார்கள்.
” வாடா கதிரவா.. இன்னைக்கு தான் உனக்கு அம்மாச்சிய நலம் விசாரிக்க நேரம் கிடைத்ததோ?. ” அருகில் இருந்தவனை பார்த்து புன்னகையுடன்.. ” வா பா. ” வரவேற்றார்.
” நான் பீரியாதான் இருக்கேன். நான் இங்கு வரும்போதெல்லாம் உங்களதான் நான் பார்க்க முடியல.. வீட்டிலே தங்குறது இல்ல. எந்நேரமும் ரவுண்டிங்தான். அத்த அத்த இங்க இரண்டுகாபி. ” அம்மாச்சியிடம் பேசிய படியே உள்வேலையாக இருக்கும் அத்தையிடம் நண்பனிற்கு உபசரிப்பு.
” டேய் எனக்கு காபிடா. ” அவரை முறைத்து..
” அதுக்கு உங்க செல்ல பேத்தி வருவா அவளிடம் கேளுங்க. இவன் பேர் சந்துரு அம்மாச்சி. என் பிரண்ட்.. இன்பாவையும் தெரியும். இப்ப வேந்தன்அண்ணா கடைக்கு ஒரு முக்கிய வேலையை இவர்தான் செய்யப்போறா. எழில் இங்க வீட்டிலும் கொஞ்சம் பார்க்க சொல்லியிருக்கா. எங்க இன்பாவும், எழிலும். அவன் வாங்கனு சொன்ன பிறகுதானே கிளம்பினோம். ” தன் நண்பனின் அறிமுகம், வந்தவேலை, பார்க்க வந்த ஆட்கள் என கூறியபடியே அத்தையிடம் காபி வாங்கி வந்து சந்துருவிடம் கொடுத்தான்.
” வந்துவிடுவான் டா. நீங்க காபிய குடிங்க. ” அனைத்தையும் கேட்டு தேவையான பதிலை மட்டும் கூறி..தன் காபியை எடுக்க.. சமையல்அறை சென்றார்.
சந்துரு இதனை புன்னகையுடன் பார்த்தபடியே கொடுத்த காபியை இருவாய் முடித்திருக்க.. எதிரில் வந்தவனை பார்த்து குடித்துக் கொண்டுயிருந்த காபியை முழுங்கி அதிர்ச்சியில் தன் நண்பனை ஒரு பார்வை பார்த்து இரும ஆரம்பித்தான்.
எதிரில் வந்தவன் முறைப்புடன் வந்து “ஏன்டா என்னைய பார்த்தா உனக்கு பேய், பூதம் மாதிரி இருக்கோ?. இப்படி பயந்து இருமுற?. ” அவன் தலையை இருதட்டு தட்டி அருகில் அமர்ந்தான். கதிரவன் ஏன் என அறிந்து சிரித்தான்.
இருமல் அடங்கி.. ” இது இது எழில், இன்பா வீடுதானே?. ” ஆம் என தலையசைக்க..
” பின்ன நீங்க இங்க தூங்கி எழுந்து.. இப்ப தான் குளித்து கிளம்பிவர மாதிரி மாடியில் இருந்து வரீங்க. உங்க வீடும் இதே ஊர்தானே?. ”
” ஆமாம்.. பக்கத்தில் தான் வீடு. அரசியோட வந்தேன். அவளோட நைட் இங்கே இருந்துட்டேன். கடைக்கு போக கிளம்பி வரேன். அதனால உனக்கு ஏதாவது?. ”
” இல்ல இல்ல. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. இவன் சொன்னான் அங்கு போய் பார்க்கதானே போறனு. ஆனா இப்படி!. உங்கள இங்கு பார்ப்பேனு எதிர்பார்க்கல. ”
“ம்.. இனி இங்க நீ.. என்னைய அடிக்கடி எதிர்பார்த்துக்கோ சரியா. காபிய குடி வரேன். அத்தம்மா.. ” அவனின் முதுகில் செல்லமாக தட்டி கூறி.. அத்தையை அழைத்தபடி எழபோனான்.
அதற்குள்.. ” இதோ நானே எடுத்து வந்துடேன் மாப்பிள்ளை. ” புன்னகையுடன் லட்சுமி 2கப்புடன்வர.. அவரின் பின்னால் பாட்டி ரெங்கநாயகியும் காபி அங்கேயே குடித்து முடித்து வந்தார். வேந்தனிடம் கஞ்சியை கொடுக்க.. அதை வாங்கி தன் முன்னால் இருந்த டேபிளில் வைத்தவாறே.. தன்னவள் வருகிறாளா என்றும் பார்த்துக் கொண்டான்.
அப்போது லட்சுமி.. தன் அத்தையிடம் ஏதோ கூறும்படி கண்களால் கூறிக்கொண்டுயிருக்க..
இதை கவனித்தவன்.. ” அத்தம்மா ” லட்சுமி வேந்தனை திரும்பி பார்க்க..
” அரசி பற்றி ஏதாவது என்னிடம் கூற வேண்டும்மா?. ” அவர் தயங்க..
அது எதற்கு அவர் கண்போன திசையில் உணர்ந்து.. ” அத்தம்மா.. இவன் அரசிக்கு இன்பா மாதிரிதான். ” அவனை பார்க்க.. புன்னகையுடன் ஆம் என தலையசைக்க..
” இல்ல அவர் கூச்சம் படுவாறேனு நினைத்தேன். வேறு ஒன்னும் இல்ல. அது வந்து மாப்பிள்ள.. குட்டிம்மா இப்பவெல்லாம் சேர்ந்து போறா. நீங்களே பார்த்துயிருப்பீங்க இந்த இரண்டுநாளா அடிக்கடி நடுவிலே தூங்குறா. சீக்கிரம் எழுந்ததால கூட இருக்கும். ஆனா இடம் பார்க்காமா தூங்கமாட்டா. நேத்து கடையில் கூட உட்கார்ந்த வாக்கிலே தூங்கிட்டா. அதை பார்த்து என்ன இந்த. பொண்ணு நேத்தும் இப்படிதான் தூங்கினா. இன்னைக்குமானு. பத்மா அக்கா கூட அண்ணிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. ”
” தூங்கிட்டு தானே இருந்தா.. அதனால என்ன இப்போ? அரசிய பற்றி தேவையில்லாம குறை சொல்லுவாங்க.. அதை கேட்டு என்கிட்டேயே வந்து சொல்லுவீங்களா. நீங்க என்ன சொல்லவரீங்கனு நேரடியா சொல்லுங்க. ” தன்னவளிடம் யாரும் அவர் வீட்டில் பேசாத காரணத்தினால் தான் அவள் அங்கு தூங்கியது.. இப்படியிருக்க அவர் குறைகூறுவாறா.. இதை இவர் கேட்டு என்னிடமே சொல்வாறா. கோபமாக கேட்க..
” மாப்பிள்ள அவங்க பேசியதற்கு நானே பதில் சொல்லிட்டேன். அது இல்ல என் கவலை. அவளுக்கு மாதம்மாதம் வயிற்றுவலி வருதுல.. இத்தனை நாளா ஒன்னும் இல்ல. கல்யாணமாக போகுது. இன்னும் இரண்டு மாதத்தில் உங்க குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கனும். எதனால இப்படி இருக்கா?. வயிற்றுவலியினால?. இல்ல வேறு ஏதும்மானு அவள டாக்டரிடம் கூட்டிட்டு போய் செக் பண்ணிட்டு வரனும் சொல்ல வந்தேன்.
சாதாரணமான கல்யாணம் ஆகும்முன்ன செக் பண்ணுவது தான். அதான் நாங்களே கூட்டிபோகட்டும்மா?. ” அவரை முறைக்க..
“இல்ல இல்ல நீங்க நீங்களே உங்களுக்கு ஏற்றார்போல நேரம் ஒதுக்கி.. சீக்கிரமா பார்த்துட்டு வந்து சொல்லுங்க. ” வேகமாக கூறி முடிக்க..
வருங்கால மாப்பிள்ளையிடம் கல்யாணம்முன்பே அவர் வீட்டிலேயே.. தன் மகளை வெளியே கூட்டிச்சொல்ல அனுமதி கேட்டும் அம்மாவையும்.. இப்போதே தன்னை தவிர யாரும் எதுவும்.. அவளிற்கு செய்யக்கூடாது என இன்னும் பல உரிமையை எடுத்துக்கொள்ளும் வேந்தனை ஆச்சரியமாக சந்துரு பார்த்திருந்தான்.
மருமகள் வேர்த்து வியர்க்க பேசுவதை பார்த்த பாட்டி.. ” வேந்தா.. அவ மகளை பற்றிய கவலையவிட.. உன்னிடம் மகளை பற்றி எப்படி சொல்லபோறேனு பயந்துக்கிட்டே வந்தாடா. அநியாயத்திற்கு நீ பண்ணுவது ஓவரா இருக்குடா. அவங்கள இல்ல யாரையும் எழிலுக்கு ஒன்னு செய்ய விடமாட்டங்கிற. ” மனதில் மகிழ்ச்சியும், வெளியில் குற்றம்சாட்ட..
அவரையே முறைத்து.. ” அதான் இத்தன வருஷம்மா செய்தாங்க இல்ல. அதுபோதும் பாட்டி. இனி நான் பார்த்துப்பேன். ”
இதுபோல் தான் இருப்பேன் என்பதாலும்.. இவர்கள் மகளுக்கு, பேத்தி, அண்ணா முறையினர் மற்றும் எல்லோரும் எல்லாம் செய்யவேண்டும்.. தன்னவள் எல்லோர் அன்பில் வாழவேண்டும் என்றுதானே தன் காதலை சொல்லாமல் இருந்தேன் என எண்ணிய படி கூறினான்.
அத்தம்மாவிடம் திருப்பி.. ” அத்தம்மா நீங்க சொன்ன எல்லாம் முன்பே யோசித்து நான் அவ பீரியட்ஸ் முதல்நாளேஅன்னைக்கே இன்பாவிடம் எல்லாம் தகவலையும் வாங்கி.. சென்னையில் என் பிரண்டுக்கு நல்லா தெரிந்த.. இதற்கு என்று பார்க்கும் டாக்டரிடம் எல்லாவற்றை அனுப்பி, அரசிய போனில் பார்த்து.. பேச வைத்து.. அவங்க எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க. அங்க பத்திரிக்கை வைக்க போகும்போது நேரில் சென்றும் பார்க்க போறோம்.
அரசி சோர்ந்துயிருக்க காரணம்.. தனக்காக ஆரம்பத்துயிருக்கும் கடை.. குறித்த நாளில் கடைவேலை எல்லாம் முடிந்து.. அதுவும் எல்லாம் பெஸ்ட்டா இருக்கனும்மா.. தொடங்கும் நாளில் இனிப்புகள் விற்பனைக்கு வைக்கனுமா. அதனால அவ யோசனை எல்லாம் அதிலே இருக்கு. ”
கடையை பற்றி கூறும்போது கதிரவன், சந்துருவை பார்த்தும் கூறினான். அவர்களும் இதனை அறிந்தால்தான் அவளுக்கு முழுஒத்துழைப்பும், உறுதுணையாகவும் இருப்பார்கள் என்று.
” இன்னும் ஒருமாதம் தான். அதன்பிறகு நார்மலா இருப்பா. எனக்கும் இந்த ஒருவாரத்தோட ஆபிஸ் வேலை அதிகம் இருக்காது. அதனால நானும் இனி அவகூட கொஞ்சம் அதிக நேரம் இருப்பேன். நான் பார்த்துக்கிறேன் அத்தம்மா.” தன்னவளின் மேல் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என எண்ணிக்கொண்டான்.
” எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு மாப்பிள்ள. ஏற்கனவே சொல்லியிருக்காங்க தான். இருந்தாலும் குட்டிம்மா இப்படியிருக்கவும் பயந்துடேன். உங்க இரண்டுபேருக்கும் நாங்க உங்க விருப்பத்தை புரிந்துக்கொண்டு உறவுகளோட சில எதிர்ப்புகளையும் மீறிதான் இந்த கல்யாணம் முடிவாகியிருக்கு. அதனால ஏதாவது ஒருவிஷயம் கிடைக்காதா.. குறைசொல்லானு பார்ப்பாங்க.
அதான் உங்களிடம் அவங்க சொன்னதை கூறி இனி இதுபோல நடக்க விடாதிங்கனு சொல்லதான் சொன்னேன். உங்களை எந்த விஷயத்திலும்.. எப்பவும் யாரும் சின்ன குறைக்கூட சொல்லக்கூடாது.. அது தான் எங்களோட விருப்பம். ” சிறிது கண்கலங்கியவாறு கூறினார்.
அவரை சென்று கையை பிடித்துக்கொண்டான்.. ” அத்தம்மா நீங்க எதையும், யாரையும் நினைத்து கவலபடாதீங்க. அப்படியே சொன்னாலும்.. அப்படியானு கேட்டுவிட்டுங்க. எங்க இரண்டுபேருக்கு தான் கல்யாணம் நடக்க போகுது.
நாங்கதான் உங்களிடம் எந்த குறையும்.. எப்பவும் சொல்லக்கூடாது. எல்லாருக்கும் எல்லாம், எல்லாயிடத்திலும் பிடிக்கும்படியா நடந்துக்க முடியாது.. இருக்கமுடியாது. எங்கள எங்களுக்கு மட்டும் பிடித்தா போதும். இதை மட்டும் நீங்க புரிச்சுகோங்க. ” வார்த்தைகள் இன்றி சரி என தலையசைத்து நிற்க..
அருகில் நின்ற பாட்டியிடம் .. ” பாட்டி நான் சொன்னதில் தப்பு ஏதும் இல்லையே. “
” இல்லப்பா. ஆனா கல்யாணம் என்பது உங்களோட முடிவது இல்ல.. உங்களோட அடுத்ததலைமுறைய உருவாக்க போவது. அதுக்கு உங்க கல்யாணத்திற்கு வரவங்க, உங்களை சுற்றியிருப்பவங்க.. விருப்பத்தோடு நல்லயிருக்கனும் ஆசிர்வாதம் செய்யாமல் இருந்தா கூட பரவாயில்ல.. நல்லாயிருக்ககூடாது யாரும் நினைக்ககூடாது. அதுதான் முக்கியம். லட்சுமி கவலைபடுவது.. ஒரு சின்ன குறைதான் போக போக பெரிய விஷயமா மாறிவிடும். குழப்பம் வரும்.. இல்ல பிடிக்காம போய்யிடும்.
பிடிக்காதவங்க ஆசிர்வாதம் செய்தா எப்படியிருக்கும்?. ஒருத்தவங்க செய்தா ஒன்னும் ஆகிவிடாதுதான். ஆனா அவங்க ஒருத்தர் கூட இருக்கக்கூடாது நினைக்கிறா. அதான் ஆரம்பத்திலே அதை சரி செய்துட்டா எந்த பெரிய பிரச்சனையும் வராது இல்ல. நீங்க சந்தோஷமா இருப்பீங்க. அதை பார்த்து நாங்க சந்தோஷபடுவோம். ”
மற்ற இருவரையும் பார்த்து.. ” உங்களுக்கும் தான் சேர்த்து சொல்றேன். நீங்க கல்யாணம் பண்ண நினைக்கும் போது இந்த பாட்டி சொன்னத்த ஞாபகம் வைச்சுக்கோங்க. ”
வேந்தன் அவரை தோள்வளைவில் பிடித்து.. அவரிடம் மெல்லிய குரலில்.. ” பாட்டி எத்தனை பேர் எப்படி வாழ்த்தினாலும், வாழ்த்தாவிட்டாலும்.. நான், என்அரசி, அவள மாதிரி இரண்டு, என்னய மாதிரி ஒன்னு. நாங்க ஐந்து பேரும் எப்பவும் சந்தோஷமா இருப்போம். அதை நீங்க பார்ப்பீங்க.
இதை உங்க மருமகளிடம் இப்ப சொல்லிருங்க. நான் மாடிக்கு இவங்கள கூட்டிபோறேன். அத்தம்மாவும், நீங்களும் அரசிக்கு பிடித்த ஸ்விட்டை இப்ப செய்திடுங்க. ”
மெல்லிய புன்னகையுடன் கூறி அவர்களை மாடிக்கு அழைத்துச்சென்றான். அவன் சொன்னதை கூறி இருவரும் மனம் நிறைவான சந்தோஷத்துடன் அவன் அரசிக்காக சொன்னதை நிறைவேற்ற சென்றார்கள்.
” கதிரவா வேந்தன் மாமா.. எழிலரசிக்காகவேவா ஸ்விட் கடை ஆரம்பிக்க போறாரு?. அந்த கடைக்காகவா நான் வந்துயிருக்கேன்?. ” ஆம் என்பது போல அவன் தலையசைக்க..
” டேய் நிஜமா இவங்க கல்யாணம் பெரியவங்க பார்த்து வைக்கும் திருமணமா என்று நம்பவே முடியலடா!. ” அவனை கதிரவன் முறைக்க..
” பின்ன என்னடா.. மனைவியா வரப்போற பொண்ணுக்கு தைரியமா கல்யாணம்முன்பே அவங்களுக்கு பிடிக்கும் என்று எல்லோருட அனுமதியோட இப்படி ஆரம்பிப்பது பார்த்தா இவர் எழிலரசிய லவ் பண்ணி அவளுக்கு பரிசா.. திருமணத்திற்கு முன்பே கொடுப்பது போல இருக்குடா. ஏன்டா ஒரே ஊர் என்பதால் இவங்க இரண்டு பேருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கமாதிரி இடம், படித்தது இருக்கு?. ”
” இல்லடா. உனக்கு இருக்க அதே சந்தேகம் இவர பார்த்த அன்னையில் இருந்தே எனக்கும் இருக்கு. நானும் பலவாறு யோசித்துவிட்டேன்.. இரண்டுபேருக்கும் சம்பந்தமே இல்ல. இவர் எழில்அக்கா.. இளமதி அண்ணியோட ஒன்னா படித்தவர்.. அவ்வளவுதான்.
குளோஸ் பிரண்ட் மாதிரி இருந்தா கூட.. எழில பார்க்க வாய்ப்பு இருக்கு. ஆனா வெறும் கிளாஸ்மெட் மட்டும்தான். ஒரே ஸ்கூல்தான் ஆனா இரண்டுபேருக்கும் 6வருஷம் வித்தியாசம். இவங்க ஸ்கூல் முடிக்கும்போது எழில் ரொம்ப சின்னபெண்ணு. ஒருநிமிடம் இரு. ” இருவரும் இன்பா ரூம்மில் இருக்க.. அங்குயிருந்த ஆல்பம் ஒன்றை எடுத்து.. இதை பாரு.
புன்னகையுடன் பார்த்தான்… ” டேய் எழிலா இது. முகம் மட்டும் லைட்டா ஒன்னா இருக்கு. மற்றபடி அடையாளமே தெரியல. அப்படினா இரண்டுபேருக்கும் சம்பந்தம் இல்லயோ?. ” யோசித்தான்.. வெளியூரில் கல்வி, வேலை. எங்கேயோ மிஸ்ஆகுது.
சில நொடிகளில்.. ” சரிவிடு எப்படியோ மாமா விரும்பி செய்யுறாரு.. அவருக்கு சற்றும் குறையாம.. எழிலரசியும் அதிக விருப்பத்தோட.. ஆர்வமாம எல்லாம் பண்ணுறாங்க. நம்ம பார்க்கும் வேலைய இரண்டுபேரும் எதிர்பார்ப்பதைவிட பெஸ்ட்டா பண்ணிக் கொடுத்துவிடனும். இதுதான் அவங்களுக்கு நாம் கொடுக்கும் கல்யாணபரிசு. ”
” நானும் இதை தான்டா நினைத்தேன். சரிவா.. இன்பா குளித்து வரவும், அவங்க இரண்டுபேரு வரவும் நேரம் ஆகும்போல. எப்படியும் அண்ணா எழில் ரூம்ம மாற்ற விடமாட்டாரு. அதனால நானேஉனக்கு எல்லாம் இடமும் காண்பிக்கிறேன். இங்கு இருந்தே ஆரம்பி. ” அவர்கள் வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
இன்பா ரூம்மில் இருங்க வருகிறேன் என்று கூறிச்சென்றவன்.. தன் அரசியை ஒருவழியாக்கிக் கொண்டுயிருந்தான்.