” அண்ணி.. அண்ணி.. ” வீட்டின் அழைப்புமணியை அழுத்திவிட்டு.. வீட்டினுள் நுழைந்து அழைத்த வண்ணம் மாலதி உள்ளே வர..
” வாம்மா மாலதி. வாங்க ம்மா.. வாப்பா. உட்காருங்க. சாந்தி.. சாந்தி. ” மாணிக்கம் அறைக்கு சென்று.. பின் சில நொடிகளில் வந்தவர்.. ” வந்துவிடுவா. நான் ஹோட்டலிற்கு போகனும். வரேன். ” மாணிக்கம் செல்ல.. அவர் சொன்னதை போல சாந்தியும் வந்தார்.
” வாங்க அண்ணி.. நல்லாயிருக்கீங்களா?. நீங்க 10மணிக்கு மேலதான் வரதா காவ்யா சொன்னா. இப்ப தான் காவ்யா குளிக்கபோனா. ”
” ம்.. அப்ப தான் வரலானு நினைத்தோம். பின்னதான் ராஜேஷ்.. மாப்பிள்ளை காலை போகும்போதே போன நல்லாயிருக்கும் என்றும்.. நீங்க எங்களை காலையிலேயே பார்த்தா சந்தோஷபடுவிங்கனு.. காவ்யாவிற்கு மட்டும் சொல்லிட்டு கிளம்பிட்டோம். ”
” ம்.. ரொம்ப சந்தோஷம் அண்ணி. ” ராஜேஷிடம் திரும்பி.. ” நீ ஹோட்டலில் கத்தக்க போற.. வேலை எல்லாத்தையும் கவனமா பார்த்து கத்துக்கோ. ”
” சரிங்க அத்த. மாமா கடையில் இருந்து வந்துட்டாங்களா?. ”
” மாமா போனவுடன் தான் அவன் வருவான். ” சரி என தலையாட்டிய படியே.. எதிரில் வந்த வேந்தன், இன்பாவை விரும்பாதா பார்வை பார்த்து.. பின் அவர்கள் தன்னை பார்க்கும் முன் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி.. சாதாரணமாக பார்த்தான். அவனைபோல தான் மற்ற இருவரும் பார்த்தார்கள்.
ஆனால் எதிரில் வந்தவன் மெல்லிய புன்னகையுடன்.. ” வாங்க அத்த.. ” மற்ற இருவரையும் வரவேற்கும் புன்னகை மட்டும் உதித்து..
பெரியம்மாவிடம் திரும்பிய வேந்தன்.. ” சத்துமாவு இருக்கா பெரியம்மா?. ”
” இல்லடா. இங்க யாரும் குடிக்கமாட்டோம். ” ம்.. என தலையசைப்புடன் திருப்பி இன்பாவிடம் திரும்பி கூறவர..
அவன் அதற்குமுன்.. ” அதை தவிர வேற ஏதாவது வாங்கனுமா?. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” அதை வாங்க வேண்டாம்.. பக்கத்தில் தான் கடை.. நான் வாங்கிப்பேன். நீ கடை, இல்ல மில்லில் இருந்து ” ஹாலில் இருந்த ஷோபா, மர டீபாய் டேபிள்ளை காண்பித்து..
” இதை எடுத்துட்டு போற மாதிரி வண்டி, ஆட்களோட உடனே வரச்சொல்லு. ” ஏன் என புரிந்து.. அவன் கொண்டு சொல்லும் ஆட்களுக்கு கால் செய்ய போக..
” இதை எதுக்காக எடுத்து போக சொல்லுறீங்க?. ” சாதாரணமா?. இல்லை கோபமா என்ற புரியாத குரலில் காவ்யா கேட்டபடி வர..
” பதில் கண்டிப்பா தெரியம்மா?. ” கோபமும், அழுத்தமுமாக கேட்க..
‘ எம்மா!. அண்ணனும், தம்பியும் ஒரே மாதிரி இருக்காங்க. ‘ மனதில் கடுப்பாகி..
வெளியில் சாதாரணமாக.. ” இந்த வீட்டை சீரமைத்த பின் இந்த ஷோபா, டேபிளை ஈஸ்வர் மாமா வாங்கிட்டு வந்தது. அவர் எங்களை தானே முதலில் கேட்பார்.. அவர் கேட்டா கூற பதில் தெரியனும் இல்ல.. அதான் ” அத்தை சாந்திக்கும் சேர்த்து.. தானே கேட்பது போல கேட்க..
இருவரையும் புரியாத பார்வை பார்த்து.. பின் அங்கேயே இன்னும் நிற்கும் இன்பாவிடம் திரும்பி ” நீ இன்னும் போகலையா டா. ”
ஒன்றும் கூறாமல் ‘ இதோ மாமா.. ‘ என்ற பார்வை பார்த்து போக..
காவ்யாவிடம் திரும்பி..” அண்ணா கேட்டா.. என்னைய சொல்லுங்க. அவர் என்னிடம் கேட்டா.. பதில் சொல்லிக்கிறேன். ” சாந்தியை பார்த்தும் கூறி..
அவரிடம் ” நான் கடைக்கு போய்யிட்டு வந்தர்ரேன் பெரியம்மா. ” சரி என அதற்கு மேல் அங்கு இருந்தால்.. காவ்யா தன்னிடம் ஏதாவது கேட்பாள் என சாந்தி சமையல்அறை செல்ல..
பேசிவிட்டு திருப்பியவனிடம்.. ” மாமா மில்லில் இருந்து வண்டியை வர சொல்லிடேன்.. அரைமணி நேரத்தில் வந்துடுவாங்க. ”
” ம்.. சரிடா. நீ அரசியோட இரு. உனக்கு காபி.. ” முடிக்கும் முன்..
” நான் உங்க கூடவே கஞ்சியே குடிச்சுக்கிறேன். ” அவனின் காதின் அருகில் சென்று.. ” மாமா எழில் பார்க்க தான் ஒல்லியாஇருக்க மாதிரி இருக்கா. ஆனா என்னால தூக்கிட்டு போக முடியல மாமா. ”
அவனை தோளில் அடித்து.. புன்னகையுடன் ” இரு அரசி எழுந்தவுடன் சொல்லுறேன். ”
கையெடுத்து கும்பிட்டு.. ” உங்க மச்சான் பாவம் இல்ல. அவ அடிச்சா கூட தாங்கலாம். கிள்ளியே.. ” அவனை முறைப்பும், சிரிப்புமாக பார்த்து..
” அவ முழித்தா.. யாரும் இல்லையேனு தேடுவதற்குள்ள போடா. ”
தேடுவா என கேட்டவுனே முகம் மாறி.. சரி என்ற பார்வை பார்த்து வேக நடையுடன் மாடிக்கு செல்ல.. அவள் எழுந்தவுடன் பசிக்குமே என்று வேந்தனும் வேகமாக வெளியேறிவிட்டான்.
அவர்களை கடுப்புடன் பார்த்தவர்கள்..” இங்க என்னக்கா நடக்குது?. அவர் பண்ணுவதை பார்த்தா.. உன் வீட்டிற்கு வந்தமாதிரி இல்ல. வேந்தன் வீட்டிற்குள்ள இருப்பதுபோல இருக்கு. ” யாரும் இல்லாததால் சற்று குரல் உயர்த்தி ராஜேஷ் பேச..
” டேய் சத்தமா பேசாத டா. இதுவும் அவர் வீடுதான்.. அவங்க இல்லாததால அது மாறிடாது. நாம்ம அவங்க இங்க இருக்கும்வரை இதையெல்லாம் பார்த்து பொறுத்துதான் போய்யாக வேண்டும். இல்ல.. ” நேற்று ஈஸ்வர் கூறியதை கூற..
கேட்டவனிற்கு புது சந்தேகம் வர.. ” அப்ப அவர் இருக்கும்.. அந்த வீட்டிலும் மாமாவிற்கு உரிமை இருக்கா. நாம்ம வேண்ணாம் அங்கயே போய்விடலாமா?. தாங்க முடியல அக்கா. ”
அவனின் தோள்தட்டி.. ” டேய் அந்த வீடு இருக்க இடம் சித்ரா அத்தைக்கு.. அவங்க கல்யாணத்தின் போது அவங்க அம்மா, அப்பா வீட்டில் கொடுத்து. அதை வேந்தன் இடத்திற்கான முழுகாசையும் அவங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு.. அத்த, மாமா இரண்டுபேரில் மாற்றி.. முழுக்க முழுக்க அவர் சொந்தகாசு போட்டு கட்டிய வீடு. இங்க இருக்க யாருக்கும் ஒரு கல்லுகூட சொந்தம் கிடையாது. “
” அப்ப நாலுநாளைக்கு இந்த கொடுமைய தாங்கித்தான் ஆகனும்மா. ”
ஆம் என தலையாட்டி.. மூவரையும் பார்த்து.. ” சரி நீங்க மூனுபேரும் கீழ இருக்க ரூம்மில் போய் பிரஷ்ஷாகி வாங்க. ”
” ஏன் அக்கா எனக்கு மாடியில் இருக்க ரூம்.. ” அவனின் கையை பிடித்து..
” டேய் நீ இருக்கலாம் என்று சொன்ன ரூம்மில் அத்த.. இன்பாவை இருக்க சொல்லிட்டாங்க. இன்னொரு ரூம் யோகா ரூம். அவ விரும்பமாட்டா. நீ அவங்க இருக்க வரைக்கும் பாட்டி ரூம்மில் இருந்துக்க. ”
” என்ன அக்கா நீ.. இதை நேற்றே சொல்லியிருந்தா.. நாளைக்கு மட்டும் வந்துட்டு வீட்டிற்கு போயிட்டு.. நான் அடுத்த வாரமே ஹோட்டல் போக ஆரம்பித்து இருப்பேன். ” அவர்களை ரூம்மிற்குஅழைத்துச் சென்றுவிட்டாள்.
” லூசாடா நீ. உனக்கு வந்துயிருக்கும் வரனே.. நீ மச்சான் கடை மாதிரியே ஹோட்டல் ஆரம்பிக்க போற.. இப்ப அனுபவத்திற்கு தான் இங்க கடைக்கு போயிட்டு இருக்கேனும். மாமா கடை நல்ல வருமானம் வருது.. அதே மாதிரியே நீ ஆரம்பிப்பதும் வரும் என்பதை எல்லாம் பார்த்துதான். இன்னைக்கு அவங்க கடைக்கு வந்தாகூட வருவாங்க. அதனாலதான் உங்களை இன்னைக்கே வரச்சொன்னேன். நாளைக்கு பிறகு இரண்டுநாள் தானே.
சரி நீங்க வாங்க. நான் அத்தகூட காலைக்கு சாப்பாடு ரெடி செய்யனும். அவர் வந்து நேரா அங்கதான் வருவாரு.. நான் இல்ல அவ்வளவு தான். ” வேகமாக சமையல் அறை செல்ல.. அங்கு வேந்தன் கஞ்சி அடுப்பில் இருக்க.. கூடவே சிறுசிறு உதவியும் பெரியம்மாவிற்கு செய்தான்.
” பெரியம்மா.. யாராவது வந்துட்டு போயிட்டு இருப்பாங்கள.. அதனால சாப்பாடு செய்வதை தவிர மற்ற வேலை செய்ய.. ஹோட்டலில் இருந்து இரண்டுபேர் வரச் சொல்லியிருக்கேன். நீங்க அதிகம் வேலைய இழுத்துப்போட்டு செய்யாம.. அவங்களை வேலை வாங்குக. ” கூறிக் கொண்டுயிருக்கும் இருக்கும்போது..
” வேந்தா.. அதெல்லாம் அவங்களுக்கு இதெல்லாம் தெரியாது டா. நானும் நிறைய தடவை சொல்லிடேன். இப்ப கூட நீ பண்ணிக்கொடுப்பது போல கூடமாட வேலை செய்ய காவ்யாவும்.. பாத்திரம் கழுவனு ஆள் வந்துயிருக்கனும்.. ஒரு ஆள் இப்பதான் வராங்க. இன்னொரு ஆள் எப்ப வருவாங்கனுனே தெரியாது. அதுக்குள்ள இவங்க அந்த வேலைய முடித்து.. அந்த அம்மாவிற்கு நாலுபாத்திரம் மட்டும் இருக்கும் அதை முடித்துவிட்டு செய்தேனு சம்பளம் வாங்கிட்டு போயி விடுவாங்க. ” சிறிய முறைப்புடன் மனைவியை பார்த்துகூற.. உள்ளே வந்தவள்.. வேந்தன் செய்ததை வாங்கி செய்ய ஆரம்பித்தாள்.
இதுபோல் வாரத்தில் ஒருநாள் திட்டுவது தான் என்று.. மெல்லிய புன்னகையுடன்.. ” போடா நான் யாருக்கோ பண்ணுவது போல பேசுற. அதவிடு நீ இன்னைக்கு உன் தம்பி போட்ட சத்துமாவு கஞ்சிய குடிக்கீறியா?. ”
அதை கேட்டவுடன் அவன் முகம் மாற..
புன்னகையுடன்.. ” நீ ஏன்டா மாதேஷ் மாதிரி முகத்தை வைக்கிற?. ”
” ம்மா.. நான் அவன மாதிரி வைக்கல.. என்ன மாதிரி தான் அவன் வைக்கிறான். என்னால எல்லாம் இவன்.. ” பேச்சை பாதியில் நிறுத்தி.. தன் அம்மாவை தோள்தட்டி வேந்தனை காண்பிக்க..
அவன் முகப்பொலிவும், புன்னகையுமாய்.. மூன்று கப்பில் கஞ்சியை ஊற்றிக்கொண்டுயிருக்க.. அதை பார்த்து.. ” என்னடா.. முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பு எரியுது. “
புன்னகையுடன்.. ” நேற்று அரசி கிருஷ்ணர் வேடம் போட்ட சின்னவயசில் எடுத்த என் போட்டோவில் இருந்த கன்னத்தை பார்த்து.. ”
தன்னவள் தங்களுக்கு பிறக்க போகும் மகன் பற்றி சொன்ன நினைப்பில்.. இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்ததால் கேட்வுடன் கூற ஆரம்பித்தவன்.. தான்.. யார் யாரிடம் கூறிக் கொண்டுயிருக்கிறோம் என தாமதமாக உணர்ந்து.. அவன் முழிப்புடன் முடிக்காமல் நிறுத்த..
அதை உணர்ந்த ஈஸ்வர் புன்னகையுடன்.. ” பார்த்து.. ”
” பார்த்து.. பார்த்து ஏதோ சொன்னா.. நான் மறுந்துட்டேன். ” வெக்கத்தில் முகம் சிவக்க.. பேச தடுமாற.. அதை பார்ப்பவர்களுக்கு கொள்ளை அழகாக தெரிந்தான் வேந்தன்.
” சரி சரி நீ சொன்னதை நம்பிட்டேன். எழிலுக்கு போய் கொடு. ”
அவர்கள் பேசிய படியே ஹாலிற்கு வர.. அவர்களின் பின்னால் காபி மற்றும் ரவைகார பனியாரத்துடன் சாந்தி, காவ்யா வந்தனர்.
அப்போது வாசலில் அழைப்பு மணியோசை கேட்க.. யார் என பார்க்க ஈஸ்வர் செல்ல.. ” அண்ணா.. இன்பா அண்ணா எங்களை இங்க இப்ப வரச்சொன்னார். ”
இன்பா என்றவுடன் வேந்தன் தட்டை ஓரமாக வைத்துவிட்டு.. அங்கு சென்றவன். ” நீங்க வண்டியில் இருங்க. இன்பா இன்னும் கொஞ்சம் நேரத்தில் வருவாரு. ” சரி என தலையசைத்து அவர்கள் செல்ல.
வேந்தன் ஈஸ்வரை வெளியே இருக்கும் திண்ணையில் அமர கூறி.. ” அண்ணா ஹாலில் இருக்கும் ஷோபா, டேபிள் எடுத்துபோக.. நான் சொல்லி இன்பா இவங்ககளை வரச்சொல்லியிருந்தான். ”
அவனிற்கு ஏதோ புரிய.. ” ம்.. ” என தலையாட்டா..
” அண்ணா நீங்க அண்ணி, குழந்தைகள.. ஸ்கூலில் விட்டுட்டு.. வீட்டிற்கு வரமுடியுமா?. ”
” என்னனு சொல்லுடா. அதற்கு ஏற்றார்போல நான் பார்த்துக்கொள்கிறேன். ”
” இன்பா இங்க, அந்த வீட்டில் இருக்கும் ஷோபா, டேபிள் எடுத்துட்டு போகும் வேலை பார்க்கனும். பத்துமணிபோல புது ஷோபா சேட் இரண்டு வீட்டிற்கும், இன்னும் கொஞ்சம் திங்ஸ் இங்க மட்டும் வரும். அதை இறக்கும்போது நீங்க கூட இருக்கனும். எனக்கு அந்த நேரத்தில் சென்னை ஆபிஸ் இருந்து வீடியோகால் மிட்டிங் இருக்கு. உங்களால் முடியுமா. இல்லை… ”
அவனை முறைப்பு பார்வையுடன்.. ” நீ ஆடர் பண்ணிய டீடைல் மட்டும் மெசேஜ் பண்ணு. ”
” ம்.. சரி அண்ணா. ” மெசேஜ் அனுப்ப போன்னை எடுக்க.. ” டேய் கஞ்சி சூடா இருக்கும்போதே கொண்டு போடா. குடித்தபிறகு அனுப்பு. ”
” பரவாயில்ல அண்ணா. இன்பா அரசி எழுந்துயிருந்தா.. தேவையானதை செய்ய வைத்து உட்கார வைத்துயிருப்பான். இல்லையென்றால் நான் செய்து.. பின் குடித்தவுடன்.. ஒத்தடம் கொடுக்கனும். நேரம் ஆகிடும். நான் அனுப்பிட்டு போயிட்டா. நீங்க பிளான் பண்ண வசதியா இருக்கும். ” கூறியவாறே அனுப்பி வைத்தான்.
அவனும் அதை மேலேட்டமாக பார்த்தவன்.. ” வேந்தா இறக்கி வைக்கும் போது இருந்தா மட்டும் போதும்மா?. இதை எல்லாம் பிக்ஸ் பண்ண கூடவே ஆள் வருவாங்களா?. இல்ல ஏற்பாடு பண்ண வேண்டும்மா?. ”
” இருந்தா போதும் அண்ணா. மதியம் அரசிய பார்க்க அமுதன் மாமாவும், சுரபியும் வராங்க. அவங்க கூட பிக்ஸ் பண்ணுற ஆள் வருவாங்க. ”
இதனை கேட்டபடியே அவன் முகத்தை பார்த்திருந்த ஈஸ்வர்.. ” வேந்தா நீ நைட் தூங்கினாயா?. இல்லையா?. ”
அரசிக்கு என்றும் நிறைய பொருட்கள், தேவையில்லாதை நீக்கி.. புதிதாக என்று.. ஆடர் செய்து, உடனே வாங்கி.. அதை வர வைக்க அவர்களிடம் பேசி என்று இதற்கு எப்படியும் சிலமணிநேரம் ஆகும்.
இதை எதிர்பார்க்காதவன்.. ” அது.. அரசி நைட் வலியினால் ரொம்ப அழுக. வலிக்கு மாத்திரைபோட்டு.. நேரம்கழித்து தான் தூங்கினா. அவள பார்த்து எனக்கு தூக்கமே போயிடுச்சு. சென்னையில் எனக்கு தெரிந்தவங்க ஷோரூம் தான். அவங்களிடம் தேவையானதை சொன்னேன். வந்துவிடும் சொன்னாங்க. அதன்பிறகு தூங்கினேன். பெரம்பலூர் தாண்டி விட்டதுனு.. கொஞ்சநேரம் முன்ன மெசேஜ் முன்ன வந்தது. ”
எழிலரசியின் மீது வைத்துயிருக்கும் அன்பை பார்த்தும், நினைத்தும் எதுவும் கூறமுடியவில்லை. ” சரிடா. நீபோ.. நான் பார்த்துக்கிறேன். ” உன் அரசியை நினைத்து கவலை கொள்ளாதே என்பதுபோல.. அவனின் தோள் அணைத்து விடுவித்தான்.
வேந்தனும் அண்ணாவிடம் இருந்து பலம் பெற்று.. ” சரி அண்ணா. ” மெல்லிய புன்னகையுடன் கூறி.. தன்னவளிடம் விரைந்தான்.
சில நிமிடங்கள் பிறகு உள்ளே வந்தவனிடம்.. ” மாமா நான் எத்தனை மணிக்கு ரெடியாக இருக்க?. ”
புரியாமல் பார்த்து.. ” எதுக்கு ராஜேஷ்?. ” கேட்டபிறகு.. போனில் அமுதனின் எண்ணை பார்த்திருக்க..
” என்ன எதுக்குனு கேட்கிறீங்க?. அவன் இன்னைக்கு ஹோட்டலிற்கு நீ போகும்போது உங்க கூட வர தான்.. மறந்துட்டீங்களா?. இல்ல அதை மறக்க அளவிற்கு உங்க தம்பி உங்க மனசு வருந்தும்படியா ஏதாவது செய்துட்டாறா?. ”
” ஆமாம். அவன் பண்ண வேலையை கேட்டவுடன் எல்லாம் மறந்து போச்சு. ”
ஈஸ்வர் வேந்தன் சரியாக தூங்கமால் செய்த செயலை நினைத்து கவலை கூற..
” நினைத்தேன்.. அவர் பாட்டிற்கு நீங்க வாங்கிய ஷோபா செட், டேபிளை எடுத்துட்டு போக ஆள் வந்தவுடனே.. நீங்க அவர் செய்ததை நினைத்து வருத்தப்படுவீங்க.. ” கூறிக் கொண்டுயிருக்கும்போதே..
இடுப்பில் கைவைத்து அவளை அய்யோ.. என பார்வை பார்த்து.. ” காவ்யா உன்னைய என்ன சொல்வதுனே தெரியல. இந்த ஷோபா செட் வாங்கும்போது.. யாழினி பிறந்த நேரம் நீ அத்தகூட இருந்த.. அதனால யார் வாங்கியது?. என்று கூட உனக்கு தெரியாது. இஷ்டத்திற்கு நினைத்து பேசாத. வேந்தன் தான் இரண்டு வீட்டிற்கும் ஒரே மாதிரி வேற கலரில் வாங்கியது. ”
என்ன!. என அதிர்வுடன் அனைவரும் பார்க்க..
” இப்ப எழில் அடிப்பட்டு விழுந்ததால்.. இது இங்க இருப்பது பிடிக்காமல் இதை மாற்றி.. வேறு ஷோபா செட் ஆடர் பண்ணியிருக்கான். பின்ன ராஜேஷ் கூட நீ போய் கடையில் விட்டுவிட்டு ஸ்கூல் போ. நான் குழந்தைகள ஸ்கூல் விட்டபிறகு.. எனக்கு வீட்டிலே வேலை இருக்கு.
கடையில் ராஜேஷ்ற்கு அப்பா, சித்தாப்பா.. எதில் இருந்து ஆரம்பிக்க வேண்டுனு சொல்லுவாங்க. என் கூட வந்தா கூட.. நான் நேர அவங்களிடம் விட்டுவிட்டு என் வேலைய பார்க்க போய்யிருப்பேன். அதனால எதை பற்றியும் தேவையில்லாம யோசிக்கமா.. குழந்தைகளை எழுப்பி.. எல்லாம் கிளம்பும் வேலைய மட்டும் பாருங்க. ”
அத்தையிடம் திருப்பி.. ” அத்தை சீக்கிரம் எழுந்து கிளம்பியதால் ரூம் போய் ரெஸ்ட் எடுங்க. இல்லயா அம்மாக்கு உதவி செய்யுங்க. ” வித்யாவை பார்த்தும் கூறி.. போனில் பேசிய படியே மாடிக்கு சென்றான்.
இவ்வளவு வேகமாக பேசி, கட்டளையிட்டு கூறி சொல்லும் ஈஸ்வரை இதுவரை நால்வரும் பார்த்து இல்லை. அதனால் போகும் அவனை அதிர்வுடன் பார்த்து நின்றனர்.
இதை பார்த்தும், கேட்டும் இருந்த சாந்தி எப்போதும் போல தன் வேலையை பார்த்திருக்க.. அவர்களும் தங்கள் வேலையை பார்க்கச் சென்றனர். இன்பாவும் சில நிமிடங்களில் ஆட்களை உள்ளே அழைத்து வந்து வேலைகளை ஆரம்பித்துயிருந்தான்.
வேந்தனும் அரசியும் கஞ்சியை குடித்து.. அவளிற்கு ஒத்தடம் கொடுத்த பின்.. அவள் அமர்ந்து இருக்க..
” முயல்குட்டி ” அழைத்து.. தன் சொர்க்கமாக கருதும் தன் அரசியின் இடையை கட்டிக்கொண்டு மடியில் படுத்துவிட்டான்.
அரசி தன்னவனின் தலைகோதி.. கையை அணைத்தபடி அவனை பார்த்துயிருக்க.. சில நிமிடங்களிலேயே அவளவனின் சீரான மூச்சுகாற்றை அவளின் மடி உணர்ந்தது.
தொடர்ந்து மெசேஜ் வண்ணம் இருக்க.. எழிலரசி போன் செய்தால்.. ” ஆகாஷ் அண்ணா.. இன்னும் ஒருமணி நேரம் கழித்து மீட்டிங் நேரம் மாற்ற முடியுமா?. ”
” சீனியர் மேனேஜர் இரண்டு பேருடன் பேசும் கால் எழில். அதனால மாற்ற முடியாது. ஆனா வீடியோ இல்லாம.. பேச மட்டும் செய்யலாம். ஏன் அவனுக்கு உடம்பு முடியலையா?. ”
” தனுக்கு ஒன்னும் இல்ல அண்ணா. எனக்கு தான் காலில் அடி.. அதனால தனு நைட் சரியா தூங்கல.. இப்ப தூங்குறாரு.. அதான் கேட்டேன். சரி அண்ணா அவர எழுப்பி சரியான நேரத்தில் பேச சொல்லுறேன். வைக்கிறேன். ”
நிம்மதியும் அசதியுமாக தூங்கும் தனுமாமாவை எழுப்பவே மனம் இல்லை. ஆனால் எழுப்பவேண்டுமே.
அவனின் கன்னம் தட்டி.. ” தனு.. தனு எழுந்துக்கோங்க. ” பல தடவை அழைத்து.. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மெல்ல வெளிவந்தவன்..
எழ விருப்பமில்லாமல்.. ” ஐந்து நிமிடம் டி. ” அவளின் மடியில் இடைவெளி விட்டு படுத்துயிருந்தவன்.. இப்போது கூறியபடியே அவளின் வயிற்றில் புதைய..
அவளுக்கு சொற்களால் கூறமுடியாத.. தெரியாத புதுஉணர்வு தோன்றி அவளை குளிர்வெப்பம் இரண்டையும் உணரவைத்து.. தன் பெண்மையை நெகிழச்செய்ய.. அடுத்த நொடி அவனின் உடல் அழுத்தம் கணுக்கால் வரை பரவி.. அங்கேயும் வார்த்தைகள் தெரியாத வலியை தோற்றுவித்து.. கண்ணீர் வர வைத்து.. அவனின் கன்னத்தில் பட்டு தெறித்தது.
அவரசமாக துடைத்துக் கொண்டு.. ” தனு… ” அவளின் மெல்லிய குரலிலே அடித்து பிடித்து எழுந்தான்.
தன்னவளை பார்க்க.. அவளோ அவன் கலங்கிவிடுவான் என வலியை அடக்கி.. மெல்லிய புன்னகை புரிந்தாள். ஆனால் அவள் முகம் காட்டிக்கொடுக்க..
” முயல்குட்டி நான் நான் அழுத்திபடுத்துட்டனா?. ”
‘ ஆம் ‘ என ஆட்ட போக.. அவன் இனி படுக்க மாட்டானே.. என்ற அச்சம் கொண்டு ‘ இல்லை ‘ என தலையசைத்தாள்.
நம்பியும் நம்பாமலும் பார்த்துவிட்டு.. ” அரசி எனக்கு.. ” அவன் ஆபிஸ் வேலைபற்றி கூறவர..
இவள் பேசியதை கூறி.. அப்பாடா என அவனை நிம்மதியில் ஆழத்தினாள். ஏனெனில் அவனின் கண்கள் சிவந்து இன்னும் சிறிது நேர தூக்கத்திற்கு ஏங்கியது.
எப்படி?. என்று நினைத்திருந்தவன்.. இப்போது சுலபமாக தன் வேலையை விரைவில் முடித்துவிட்டு.. மீண்டும் படுத்து படுத்தியெடுத்தான் அவனவளை.