அடுத்த நொடி அவளின் தோளில் தட்டி.. ” முன்னாடி டேபிள் இருப்பது கூட தெரியதா அளவிற்கு.. அண்ணா போட்டோவ எடுக்க உனக்கு என்னடி அவசரம்?. விழுந்து இப்படி உட்கார்ந்துயிருக்க.. இதனால எவ்வளவு வருத்தத்தோட நாங்க உன்னை பார்க்க வந்தா.. நீ ஸ்விட் செய்து கொண்டு வரச்சொல்லுற. ”
அவளை தோள்பிடித்து.. ” சத்யா செல்லம்.. எனக்கு முன்னாடி டேபிள் இருந்தது தெரியும் டி. வசுவும், மேகாவும் நகர்த்தியதை கவனித்தேன். ” அதிர்வாக எல்லோரும் பார்க்க..
” ஆனா அடியில் சேலை மாட்டியத தான்.. நான் கவனிக்கல. நடந்ததில் நல்ல விஷயம்.. நான் என் தனுவோட ரூம்மில் ஐந்துநாள் இருக்க போறேன் அந்த சந்தோஷத்தை கொண்டாடதான்.. தனு கையாலே ஸ்விட். சத்யா இங்க தான் தனு சின்னவயசில் என்னைய முதன்முதலில் பார்த்தபின்.. ”
சத்யா அவளை பேச்சை நிறுத்து என்பது போல கண்களால்.. கதிரவன், சந்துருவை காண்பிக்க.. அவர்கள் இருவரும் இடுப்பில் கைவைத்தவாறு கேள்விடன் நிற்க..
அதை பார்த்து எழிலரசிக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர்களை புன்னகையுடன்.. ” நீங்க இன்பா ரூம்மில் பேசியதை கேட்டு.. அண்ணா தனுக்கு மெசேஜ் செய்துயிருந்தார். தனு.. அண்ணாவை நைட் உங்களிடம் பேச சொல்லியிருந்தார். நீங்க இன்பாவிடம் கேட்டு.. “ நிறுத்து என்பது போல சைகைசெய்து..
” நீயே சொல்லு எழில்.. மாமா வரவரைக்கும் கேட்போம். ”
சத்யாவை அணைக்காமல் இருக்கும் அவளின் மறுகையை கொண்டு.. வலியில் அவ்வப்போது சத்யாவின் கையை இறுக்குவதை பார்த்தால்.. பேசினால் வலியை மறப்பாள் என்பதால் கூற..
அவன் நினைத்துபோல வலி மறந்து வேந்தன் அவளிடம் குட்டிம்மா!. என அழைத்தது முதல்.. அன்று நடந்தது.. பின் கோவில் சிலநிமிடங்கள் பார்த்தது.. அதன்பின் பெண்பார்க்க வந்ததை கூறினாள்.
” அண்ணா நீ யாருனு தெரிந்தும்.. இதே ஊரில் இருந்தும்.. ஓரே தடவைதான் இத்தனை வருடத்தில் பார்த்துயிருக்காறா?. ” ஆம் கண் கலங்க தலையாட்ட..
” உனக்கு.. ” என ஆரம்பிக்க..
அருகில் நின்ற திலகன்.. அவனின் தோள்தட்டி திருப்பி.. ” டேய் சந்தரு.. ஏதோ எழில் வலிய மறக்கதான் உன்னிடம் பேசியதால் நான் அமைதியா இருந்தேன். இவ்வளவு தெரிந்துக் கொண்டதே போதும். வேந்தன் இன்பாவை சொல்ல சொல்லியிருக்கானா.. நீங்க ஏதும் கண்டுபிடிக்கிறேனு.. ஏதாவது?. யாரையாவது ?. கேள்விக்கேட்டு.. அவன் இத்தனை வருடம் கஷ்டப்பட்டு எழிலை பார்க்காம இருந்ததை.. ”
திலகனின் கையை பிடித்த இருவரும் ” அண்ணா.. வேந்தன் மாமா இதை சொல்ல சொல்லாம இருந்தா கூட.. எங்களா எந்த பிரச்சனை வந்துயிருக்காது. ”
” வேந்தன் அண்ணா.. எழிலரசிக்காக இத்தனை வருடம் தன் காதலை மறைத்தும்.. இருவரின் பெற்றோருக்காக இப்போதும் மறைத்து.. அமைதியா இருப்பது எங்களால ஒருகாலத்திலும் கெடாது. எழிலிற்கு அண்ணா, மாமா இரண்டும் மா இருந்து.. அவள உயிர நினைப்பவருக்கு எப்போதும் நாங்க உறுதுணையா இருப்போம் அண்ணா. ” சந்துருவிற்கும் சேர்த்து கூற..
புதிகாக சில நிகழ்வுகளை பற்றி எழிலரசி கூற அறிந்து கொண்டவன்.. ” ம்.. வேந்தன்.. வினோத், என்னிடம் கூட.. எழிலரசி பற்றி பகிராம இருந்துயிருக்கானா.. இரண்டுபேரோட எதிர்காலம் நல்லாயிருக்கனும் என்பதால்தான். நம்மளால் அவனுக்கு பலன் இல்லாவினும்.. பாதிப்பு வரக்கூடாது அதை ஞாபகம் வைத்து இனி பேசும்போது கவனமா இருங்க.
அதே சமயம் இன்னைக்கு மாதிரி.. காலில் வெந்நீர் ஊற்றியது போல ஓடி.. ஏதாவது செய்யுங்கனு சொன்னா அவனை மனதிலே திட்டிக்கொண்டு.. அவனுக்கு செய்து கொடுக்க எந்நேரமும் தயாரா இருங்க. இவங்க கல்யாணம் முடிந்த பிறகு உங்க கோபத்தை எல்லாம்.. அவங்க அவங்க கல்யாணத்தில் தீர்த்துக் கொள்ளாம். சரியா .” திலகன் கடைசி இருவரியை சாதாரணமாக கூற..
இவ்வளவு நேரமும் முகத்தை சிரீயஸ்ஸாக வைத்து.. மிகவும் கர்ம சிரத்தையாக கேட்டுக் கொண்டுயிருந்தவர்கள்.. கடைசி இருவரியில் முதலில் குழம்பி.. பின் அடங்கபட்ட சிரிப்புடன் அமைதியாக இருக்க..
இதை கவனித்த எழிலரசி.. ” திலகா அண்ணா.. ” அழைத்து.. பின் சத்யாவின் தோளை இறுக்க பிடித்து.. ” கடைசியா சொன்னீங்க?. கோபத்தை தீர்த்து.. ”
அவளின் அருகில் வேகமாக வந்தவன்.. ” உன் காதில் தப்பா விழுந்துயிருக்கு எழில். ஏதாவது ஆசை இருந்தால் அதை நிறைவேற்றிக் கொள்ளானு சொன்னேன். ”
திலகனை எழிலரசி புன்னகையுடன் பார்த்தாள். அவளுடன் அவனின் தியாவும்.
” பெரியம்மா.. என்ன இந்நேரத்தில் பாசிப்பருப்பு பொங்கலா வைக்கிறீங்க?. ” வசுந்தரா அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு.. கேட்டபடியே ஷோபாவில் அமர அவளுடன் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு காவ்யாவும் உட்கார்ந்தாள்.
” பொங்கல் இல்ல.. பாயசம். வேந்தன் எழிலிற்காக வைக்கிறான். ”
” அண்ணா ஸ்விட் செய்றாங்களா?. அதுவும் அவங்க விழுந்த நேரத்தில்.. எதுக்காம்?. ” மெல்லிய குரலில் கேட்க.
” சும்மாதான். எழில் ஒன்னும் சாப்பிடல.. அதான் இப்படி பருப்பும், தோங்காய்பாலும் ஸ்விட்டா கொடுத்தா அவளுக்கு தெம்பு இருக்கும் இல்ல. அதனால அவனே செய்யுறான். சரி நானும் அவங்க இங்கதான் தங்கபோறாங்களா.. ” அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே..
” அத்த அவங்க இங்க யாழினி பிறந்தநாள் வரை இருக்க போறாங்களா?. ”
எழிலரசி இங்கு தங்க ஒத்துக்கொள்வாள் என நினைத்துகூட பார்க்கவில்லை. அவள் ஒன்று நினைத்து வைத்துயிருக்க.. வேறு நடந்துவிடுமோ?. என்று சாந்தி கூறுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.
” ஆமாம்.. அவங்க கூடவே இன்பாவும் இருக்க போறான். இன்னும் கொஞ்சம் நேரத்தில் லட்சுமியும், அருணாச்சலமும் அண்ணாவும் எழில பார்க்க வராங்க. இன்னும் ஈஸ்வர் அப்பாவும், ரவி தம்பியும் வரல. அப்பவே வேந்தன் சொல்லிட்டான் இன்னும் காணோம். ” வாசலை அவ்வப்போது பார்த்துக் கொண்டே கூறினார்.
” அம்மா.. ம்மா. ” அழைத்த வண்ணம் வந்த வேந்தன்.. சித்ராவின் முன் நின்றவன்.. ” நான் அரசிய கீழ கூட்டு வரேன். அவங்க பார்த்துபோகும் வரைக்கும் தாத்தா, பாட்டி ரூம்மில் இருக்கட்டும். அங்க தலையணை மட்டும் இன்னும் கூட இரண்டு எடுத்துவையிங்க. நான் திலகனை வரச்சொல்லுறேன். மேல இருந்தா எடுத்துக் கொடுப்பான். ” அவர் பதில் கூற வரும்முன் மாடிக்கு சொன்றுவிட..
” என்னக்கா இவன்.. எழில் நைட் டிரஸ் போட்டுயிருந்தா. மாத்த ஏதாவது இருந்தா மாத்தி கூட்டிட்டு வாடானு சொல்ல நினைத்தேன்.. நான் ஏதாவது பதில் சொல்லுவனானு கூட கேட்காமா போயிட்டான். ” போகும் வழியை பார்த்தவாறே கூற..
அவ்வழியாக நால்வரும் வந்தார்கள். மனவருத்தத்தை மறைத்து மெல்லிய புன்னகையுடன் திலனிடம் கூறி மேல வைக்கப்பட்டுயிருந்த தலையணையை எடுத்தும்.. எழிலரசிக்கு ஏற்றவாறு படுக்கையை வைத்தார்கள்.
பின் ஹாலிற்கு வர.. ” சத்யா.. எழில் இப்ப எப்படியிருக்கா?. மாத்திரை போட்டதால வலி குறைந்துயிருக்கா?. ”
” இல்ல ம்மா. வலிக்கும்தான் நினைக்கிறேன். அவ வாய திறந்து சொல்லல.. என் கைய பிடிப்பதில்தான் தெரிந்துக்கொண்டேன். ”
புரியாத முகத்துடன்.. பெருமுச்சை ஒன்றை வெளிப்படுத்தி.. ” சத்யா.. நீ சொல்வதை கேட்டும்.. அவ நடந்துக்கொள்ளும் விதம் எல்லாம் எங்களுக்கு பார்க்கவே புசுசா இருக்கு. இதை எங்கயிருந்து.. யாரிடம் இதை கத்துக்கிட்டாளோ. அவங்களை இப்படியா சொல்லிக் கொடுப்பீங்கனு கேட்டனும். ” அவர் கூற..
கூறியவரை பார்த்து சிரிப்பதா!. பரிதாபப்படுவதா என்ற நிலையில் திலகனை பார்க்க..
‘ உங்க பையன் தான் அந்த அதிசயபிறவினு ‘ சொல்ல முடியாமல்.. அவனோ கையை மறைத்து மெல்லிய சிரிப்பில் இருந்தான். அவனை முறைக்க போகும் நேரம்..
” ம்மா.. எல்லாம் ரெடியா இருக்குக்கா.. ” என்ற கேட்டவாறே..
நைட் டிரஸ் மாற்றி.. பாவாடை, டாப் போட்டு தன்னவளின் கால்கள் அதிகம் தொங்கமால்.. அவளின் உடல் நன்றாக மேலேயும்.. இடையை ஒருகையும்.. மறுகை கால்கள் சற்று நீட்டியவாறு பிடித்தும் அள்ளிஅணைத்து தூக்கி வந்தான்.
சாந்தி, சித்ராவிற்கு எழிலரசியின் முதலில் உடையை பார்த்து திருப்தியும்.. அவளின் கால்களை பார்த்து கவலையும் ஒருசேர வந்தது.
அவளை உட்கார வைத்தவன்.. ” அரசி.. இது தாத்தா, பாட்டி ரூம் தான்.. சகஜமா இரு. நான் உனக்கு ஸ்விட் எடுத்துட்டு. ” அவளின் தலையை தடவிவிட்டு சொல்ல..
சென்ற சில நிமிடங்களிலேயே வேந்தனுடன்.. அவளை பார்க்க வருகிறோம் என கூறியவர்களும்.. சித்ரா, சாந்தி என அனைவரும் வந்தார்கள். அவளின் காலின் அருகில் லட்சுமியும், அவளின் கையை பிடித்தவாறு அருணாச்சலம் அமர.. அவரின் அருகில் ரவியும், வேந்தனும் நின்றார்கள்.
அவளின் உடலின் நிலையை பற்றி கேள்வி கேட்டுக் கொண்டுயிருக்க.. சத்யாவும், சந்துரும் உள்ளே அவளை முறைப்பும் சிரிப்புமாக கையில் இரு தட்டுடன் வந்து.. அவளின் முன் நீட்டினார்கள். அதை பார்த்தவள்.. அனைவரையும் நிமிர்ந்து பார்க்கவே வெக்கம் வந்துவிட்டது.
செந்தாமரையாய் விகசித்திருந்த தன் அரசியின் முகத்தை ரசனையாய் ஒருநிமிடம் பார்த்திருந்தவன்.. பின் அவளின் தயக்கத்தை சிரிப்புடன் பார்த்து.. பின் பாவம் என் முயல்குட்டி.. ” சத்யா இதை எதுக்கு இப்ப கொண்டு வந்தீங்க?. ” அவள் அருகில் இருந்தவனை காண்பிக்க..
ஏன்டா என அவனை பார்க்க.. ” நான் உடம்பு அடிப்பட்டு இருப்பவங்களுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடினு வாங்கி வரவங்கள பார்த்துயிருக்கேன். ஆனா இங்கதான் முதல்முறையா.. இப்படி பாக்ஸ் பாக்ஸா ஸ்விட் வாங்கி வந்துயிருப்பதை பார்க்கிறேன். அதான் அனைத்து ஸ்விட்டில் இருந்தும் ஒன்னு ஒன்னு மட்டும் எடுத்து வந்தேன். ” புன்னகையுடன் கூற..
இப்போது அதனை வாங்கி வந்த அனைவரும் சிரிப்புடன் இருந்தார்கள். வேந்தன் அவனின் தோள்தட்டி.. ” டேய் அரசி எதை சாப்பிடா சீக்கிரம் குணமாகுமோ.. அதை சரியா தான் வாங்கி வந்துயிருக்காங்க. போ.. போய் சாப்பாடு வந்துயிருக்கும்.. அதை சரியா எடுத்துவை. ”
அதன்பின் சிலநிமிடங்கள் அவளிடம் கவனமுடன் இருக்க கூறி.. அவர்கள் அனைவரும் சாப்பிட்டு.. அதன்பின் சிறிது நேரம் பேசிவிட்டு.. எல்லோரும் அவரவர் வீட்டிற்கும், ரூம்மிற்கும் சென்றுவிட்டனர்.
‘ வேந்தன், எழிலரசி மட்டும் நிலவொளியில் அவள் சுவற்றில் சாய்ந்து தன்னவனை பார்த்தும். அவனோ தன்னவளின் காலின் அருகில் படுத்தும் என இருவரும் தனித்தனியாக மௌன மொழிகள் பேசியபடி பால்கனியில் இருந்தனர். ‘
” மாமா.. ராஜேஷ் பற்றி மாமா இரண்டுபேரும் என்ன சொன்னாங்க?. ” யாழினியை தூங்க தட்டிக் கொண்டுயிருப்பவனிடம் கேட்க.
” அவங்களுக்கும் ஹய்வே பக்கத்தில் ஹோட்டல் ஆரம்பிக்க நினைப்பது நல்ல யோசனை தான் சொன்னாங்க. ஆனா அவன் எதுக்காக வரானோ.. அதை ஆறு மாதத்தில் இருந்து ஒருவருடம் கிட்ட சரியா கத்துக்கனும். அதை உன் தம்பியிடம் சொல்லிட்ட தானே. ”
” ம்ம்.. அதெல்லாம் பண்ணுவான். வேண்டும் என்றால்.. வேந்தன் தம்பி கடைக்கு ஏதாவது உதவி தேவையான கூட அவனிடம் சொல்லுங்க. எல்லாத்தையும் அவன் கற்றுக் கொள்ளட்டும். ” இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி.. அவர்களை பற்றி அறிய நினைக்க..
ஒரு பார்வை பார்த்து.. ” அங்கெல்லாம் அவன் உதவி தேவையில்ல. போனவாரமே வேந்தன் ராஜன் அண்ணா இல்லாம.. இன்னும் ஒருஆள் நியமித்து இருக்கான். அவங்க சந்துரு, கதிரவனுடன் சோர்ந்து பார்த்துப்பாங்க.
சந்தர்ப்பம் போச்சா!.. ஆனாலும் வேந்தன் எழிலரசிக்கு செய்வது தாங்கவே முடியாமல்.. ” ஏன் மாமா.. எழிலரசி இப்பதான் படிப்பு முடித்து.. ஒரு வருடத்திலேயே கடை பொறுப்ப.. உங்க தம்பி கொடுத்து இருக்காரு..
ஆனா நீங்க என் தம்பி படிப்பு முடித்து ஆறுவருடம் ஆகி அதில் கடைசி மூனுவருடம் தனியார் கம்பெனியில் நிர்வாகம் சம்பந்தபட்ட வேலை பார்த்தும் கூட.. நீங்க ஹோட்டல் ஆரம்பிக்க ஒருவருடமாவது அதில் அனுபவம் வேண்டுனு சொல்லுறீங்க. அவன் எதில்?. என்ன?. குறைசொல்லுங்க?. “
அவள் கூறுவதை அமைதியாக கேட்டவன்.. ” காவ்யா உன் தம்பி கம்பெனியில் நிர்வாகம் சம்பந்தபட்ட வேலை செய்துயிருக்கலாம்.. ஆனா அவன் செய்து அவனிற்கு என்று கொடுக்கப்பட்ட சில வேலைகளை மட்டும் தான் செய்துயிருப்பான். அதை ஒரு அனுபவமா எடுத்துக்கொண்டு முழுஹோட்டல் பொறுப்பை அவனால் எடுத்து நடத்த முடியாது. ”
” எழிலரசி சின்ன வயதில் இருந்தே அவங்க கடைபற்றிய எல்லா விவரமும் தெரிந்துக்கொண்டும்.. காலேஜ் படிக்கும் போதே இன்பா தனியா ஆரம்பிக்க உதவியிருக்கா. ஒருவருடம் இரண்டின் பொறுப்பையும் பார்த்துயிருக்கா. அப்படியிருந்தும் கூட ஹோட்டல், ஸ்விட் செய்யும் இடத்தில் இருப்பது வேறனு..
வேந்தன் கடை ஆரம்பிக்க சிலமாதங்கள் என்று அவன் கணக்கு வைத்து அனுபவம் கொடுக்க நினைத்து ஆரம்பித்தான். ஆனா எழில்.. அவனையே பிரம்மிக்க வைப்பது போல அவன் நினைத்த நேரம் முன்பாகவே எல்லாவற்றையும்.. சுற்றியிருப்பவர்களை வைத்தே முக்காவாசி வேலைய முடிச்சுட்டா. இனி செய்வது.. அதை பார்வையிடுவது மட்டும்தான் எழில் வேலை.
இதெல்லாம் எழிலிற்கு உடனே வரல. பல வருட அனுபவத்திலும், வேந்தனின் துணையோட தான் செய்ய முடித்தது. ஆனா நீ நினைப்பது உன் தம்பி தனியா எல்லாவற்றையும் பண்ண வேண்டும் என்று. நீ எழில் கூட உன் தம்பிய இணைத்து பார்த்து யோசிக்கிற. உன் ஆசை படியே ஹோட்டல் ஆரம்பிக்கலாம்.. எனக்கு ஒன்னும் இல்ல. ”
அவள் அப்படியா என புன்னகையுடன் பார்க்க.. ” ஆனா என்னிடம் எதைபற்றியும் கேட்க கூடாது. நான் எதிலும் தலையிடமாட்டேன். “
அய்யோ!. ” என்ன குறை?. என்று தானே கேட்டேன். எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க. அவன் எல்லாம் கத்துக்கொண்டே பண்ணட்டும். ”
வேறு எதுவும் கூற தோன்றாமல்.. ” ம்” அவன் படுக்க தயாராக.. ” ஏங்க நாளைக்கு ராஜேஷ் கூட அம்மா, வித்யா வருவது.. அதில் புதன்கிழமை ராஜேஷ் கல்யாணம் விஷயமா மூர்த்தி மாமா வீட்டில் இருந்து வராங்கனு வேந்தனுக்கும், எழிலரசிக்கும் தெரியுமா?. ”
‘ தெரியும் ‘ என தலையாட்டா?. . ” என்ன!.. அத்தை தான் எதையும் யோசிக்காம, யாரையும் கேட்காம இவங்கள இங்க இருக்க சொல்லிட்டாங்க. அதே மாதிரியே எல்லாம் தெரிந்தும்கூட இவங்களும் யாரை பற்றியும் கவலைபடமா இங்க இருக்க ஒத்துக்கிட்டாங்களா!. ” அவள் பாட்டிற்குகூற..
” ஏன்?. ” அதற்குமேல் கேட்கவிடாமல்.. ” ஏன்னா.. என்ன கேள்வியிது?. என் தம்பிக்கு கல்யாணம் விஷயமா குடும்பத்துடன் பேச வராங்க. அந்த சமயத்தில் கல்யாணம் பண்ண போறவங்க.. இப்படி கால் அடிப்பட்டு.. ஒன்னா ஒரேவீட்டில் இங்க இருப்பதை பார்த்தா என்ன நினைப்பாங்க?. ”
கோபத்தை அடக்கி.. ” என்ன நினைப்பாங்க?. ” அவனின் அழுத்தமான கேள்வி.. கோபம் கண்களில் தெரிய.. அதில் சுதாரித்த காவ்யா..
” நான் என்ன சொல்ல வந்தனா.. எல்லோரும் இருக்கும் நேரத்தில் எழில் வந்தா.. அவளை யாராவது அபசகுணமா நினைத்து.. யாராவது எழில் வருத்தப்படும்படி பேசிட்டா?. அது எல்லோருக்கும் அந்த நேரத்தில் மனவருத்தமும்.. சங்கடம் தானே. அதனால அதை யோசித்துயிருக்கலாம் தானே. அதைதான் சொல்ல வந்தேன். ” எழிலரசியை நினைத்து வருந்துவது போல கூற..
” ம்.. நீ சொல்லவதும் சரிதான். அப்படினா எழில் உன்னைய பற்றி யோசித்து சொன்னா மாதிரியே செய்திடலாம். ” என்ன என அவள் பார்க்க..
” நீ எழிலை நினைத்து.. இதுபோல வருத்தப்படுவனு தெரிந்துதான்.. எழில்.. வேந்தன் இங்க இருப்பதால.. நம்மள.. உங்க அம்மா, தங்கை, தம்பிய.. சித்தப்பா, சித்தி கூட மூணுநாளைக்கு போய் இருக்க சொன்னா.
நாம்ம வேண்ணா காலையில் கிளம்பி அங்க போய் இருக்கலாம். உன் தம்பிய அவங்க எல்லாம் அங்க வரட்டும். ” காவ்யா பதில் கூற முழிக்க.. இப்போது கோபம் போய் சிரிப்பு வர..
‘ இதை கேட்ட காவ்யா.. இந்த வீட்டில் இருந்தால்தானே.. பார்க்கவரும் பெண்வீட்டார்கள் கல்யாணம் முடிவாகிவிட்டாள்.. என்னை அதிகம் மதிப்பார்கள்.
எழிலரசி இப்போதே அதிக உரிமை போல் கூறி.. வேந்தனின் வீட்டில் எல்லாம் முடிந்தால்.. இரண்டு வீட்டிலும் அல்லவா அவளின் மதிப்பு கூடும். முத்த மருமகள் என்ற என் மதிப்பு என்னாவது?. ம்ஹூம் நடக்ககூடாது. ‘
” மாமா.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எழில யாராவது ஏதாவது சொல்லி விடுவாங்களா?. அப்படியே சொன்னா.. நான் என் தம்பிக்கு அந்த சம்பந்தமே வேண்டானு சொல்லிவிடுவேன். சரி சரி நீங்க படுக்க. ரொம்ப நேரம் ஆச்சு. ” அவரசமாக பதில் கூற..
‘ வழிக்கு வந்தாயா ‘ என மனதில் புன்னகையுடன் அதற்கு மேல் பேசமால் உறங்க ஆரம்பித்தான்.
இதற்கு மேல் இவரிடம் பேச வேண்டாம். இவரையும், ஹோட்டலை நம்பி தான் தம்பியின் எதிர்காலமும்.. மற்றும் அவனின் மூலமாக தான் குடும்பம் முழுவதும் அதிவிரைவில் இவ்ஊரிற்கே நிரந்தரமாக வரவைத்து.. எழில் போல் இருக்கலாம் என பெற்றோர்கள், கணவனை சமாதானம் செய்து.. பல திட்டங்கள் போட்டது நடக்கப்போகிறது. கொஞ்சம் பொருத்து போகவில்லை எனில் எல்லாம் பாழாகிவிடும் என ஈஸ்வர் விருப்பம் மற்றும் கோபம் முழுவதும் போவது போலவும்.. யாரும் எழிலை பேச மாட்டார் என்ற நம்பிக்கையிலும் கூறினாள்.
ஈஸ்வர் உறங்க ஆரம்பிக்க.. அவளிற்கு உறக்கம் போய்விட.. அவள் சத்தமில்லாமல் கதவை திறந்து ரூம்மை விட்டு பால்கனியில் சிறிது நேரம் நிற்கலாம் என வெளிவர.. அங்கு வேந்தன் எழிலரசியின் காலில் படுத்துயிருப்பதை பார்த்தவள்.. எரிச்சல் உடன் மீண்டும் அறைக்குள் வந்துவிட்டாள்.
அரசியின் காலில் முத்தம் கொடுத்துவிட்டு.. அவளின் அருகில் வந்து.. காதில் உதடு உரச மெல்லியகுரலில்.. ” அரசிசி.. இவ்வளவு நேரம் போட்டோவில் இருக்கும்.. குட்டி தனுமாமாவோட பேசியது போதும்.. வளர்ந்து முழுசா இங்க இருக்க உன் தனுமாமா கூட பேசுடி. ”
அவள் பதில் கூற திருப்ப.. இவரின் இதழ்களும் அருகருகே இருந்தது. இருவரும் ஒரு நொடி அதிர்ந்து.. எவ்வித செயல்களும் இன்றி அப்படியே இருந்தார்கள். மெளனத்தை கலைத்து.. ” தனுமாமா எனக்கு இப்ப வேண்டும். நாம்ம ரூம்மிற்குள் போகலாமா?. ” சாதாரணமாக கூற..
ஒருநொடி வாவ்!.. என துள்ளல் ஆனான். பின் நிகழ்காலம் உணர்த்து.. அடியேய்.. ” என்ன முயல்குட்டி கேட்குற?.. தெளிவா சொல்லுடி. ”
புன்னகையுடன்.. ” என்ன கற்பனையெல்லாம் பலமோ!.. ”
வேந்தன் அவளின் கன்னத்தை மென்மையாக கிள்ளி.. ” பின்ன என் முயல்குட்டி இப்படி கேட்டா?. முதலில் என்ன என்னவோ தான் தோனும். சரி அதைவிடு. நீ என்ன இப்ப லிமிட்டா ஆசைப்பட்ட. அதை சொல்லு. ” புன்னகையுடன் கேட்க.
” எனக்கு காய்ச்சல் வந்து.. நாம்ம காரில் இருக்கும் போது.. இருக்கும் போது.. ” அவளிற்கு வெக்கம் வர..
அவளவனிற்கு கூறவருவது புரிந்து.. புன்னகையுடன் நெற்றிமுட்டி ” வா உள்ள போகலாம். ” என கவனமாக தூக்கிக்கொண்டு.. அவர்களின் அறையில் தலையணையை எடுத்து வந்து காலில் வைத்துவிட்டு.. அவளை படுக்க வைத்தான். அறை முழுவதும் அரசி.. தன்னவனிற்காக வாங்கிய பூங்கொத்தின் நறுமணம்.
அரசிக்காக அவனின் டீசேட் கழற்றி பனியன் அணித்தவனாக.. அவளை அன்று எந்தவித உணர்வும் இல்லாமல்.. அவளின் குளிர்போக்க மட்டுமே செய்தவன்.. இன்று ஒவ்வொரு நொடியும் உணர்ந்து அனுபவித்து அவளை தனக்குள் ஒன்றாக்கிட இறுக்க அணைத்து தன்னுள் புதைத்துக் கொண்டான்.
அவளோ அவனின் புகைபடத்தின் மேல் செய்ததை போல.. அவனின் நெற்றி, கண்கள், மூக்கு, மீசை என கைவைத்தபடி வந்தவள்.. ” தனு இன்னும் இங்க மச்சம் இருக்கும் தானே.?. ”
” ம்.. ” அவனின் கன்னத்தை தடவியவாறே.. ” எந்த வயசுல உன் கன்னம் குறைந்தது தனு?. நம்ம பையனுக்கு உன்ன மாதிரியா?. இல்ல என்ன மாதிரி இருக்கும்மா?. ”
சோதிக்கிறாளே.. ” தெரியலையே. அவன் வந்தவுடன் பார்த்து தெரிஞ்சுக்கலாம். ”
” ம்.. தனு.. ” ஏதோ கூற ஆரம்பிக்கும் போது.. அவனை இறுக்க கட்டிக்கொண்டு கண்ணீர் வடிய.. அது அவனின் மார்பை நனைக்க.. ” முயல்குட்டி ரொம்ப வலிக்குதா. ” மார்பில் இதழ் பதித்து பதில்கூற..
முயல்குட்டி இவ்விடத்தில் நீ இதழ்பதியும் சூழ்நிலை இப்படியா நமக்கு வரனும். சில நொடிகள் அவள் அழுகை நீடிக்க.. அதற்கு மேல் மன அழுத்தம் தாங்க முடியாமல் இருவருக்கும் போதும் என நினைத்து.. அவளை தள்ளிவைத்து.. டீசேட் அணிந்துக்கொண்டு.. மாத்திரை கொடுத்து.. பின் தலைதடவியும், மசாஜ் செய்துவிட்டும் அவளை உறங்க வைத்தான். அவளும் தன்னவன் மற்றும் வலிநிவராண மாத்திரையின் செயலால் உறங்கிவிட்டாள்.