கணேஷ் தான் கூற வேண்டியதை கூறிவிட்டேன் என யாரையும் பார்க்க பிடிக்காமல் வசுந்தராவின் அருகில் இருந்த சேரில் அமர..
வசுந்தராவோ… கணேஷ் மாமா கூறியவுடனே தன் அப்பாவிடம் பேசும் எழிலரசியின் அப்பா.. இவர்கள் தானே முதலில் முடிவெடுக்க வேண்டும் என அவள் கையில் கத்தியுடனே.. இருவரின் மேல் தன் பார்வையை திருப்பினாள்.
வசுந்தராவை போலவே அனைவரும் அதே எண்ணத்தில் திரும்பி அவர்களின் பேச்சை கவனித்திருந்த நேரத்தில்.. வேந்தன், எழிலரசி அவ்விடத்தை விட்டு இமைக்கும் நொடியில் நகர்ந்தார்கள்.
அவ்வீட்டின் மாடிக்கு சொல்லும் படிகள் வெளியில் இருக்க.. யாரும் தெரியாத அதன் நடுப்பகுதியில்.. தன் முயல்குட்டியை மடியில் கட்டிஅணைத்து.. அழும் தன்னவளை முகமெங்கும் முத்தமிட்டு முத்தமிட்டு.. அவளோடு சேர்த்து தன்னையும் தேற்றிக் கொண்டுயிருந்தான்.
” அண்ணா எங்க வேந்தன், எழிலரசிய காணோம்?. ”
அப்போது தான் அனைவரும் திரும்பி பார்க்க.. கார் நின்றுயிருந்தது. ஸ்பிக்கரில் போட்டு இருவரின் போனிற்கு அழைக்க.. போன் அடிக்கிறது. ஆனால் எடுக்கவில்லை. சைலன்ட்டில் இருக்கிறது என்பதை இருவரின் பெற்றோர் முதற்கொண்டு அனைவருக்கும் புரிந்தது. அடுத்து எங்கு இருப்பார்கள்?. யோசிக்கையில்..
மாடியில் படியிலிருந்து இறங்கி.. எவர் முகத்தையும் காண பிடிக்காமல்.. தன்னவனின் கழுத்தை இறுக்ககட்டி இருக்கும் தன்னவளை.. கையில் ஏந்தியபடி முகத்தில் தெளிவுடன்.. அரசியின் வேந்தனாக நடந்து கூடத்திற்கு வந்தான்.
அனைவருமே இதனை அதிர்த்து பார்த்தனர். அரசி உறங்கவில்லை என நன்றாகவே அவளின் உடல்மொழியில் இருந்து தெரிந்தது.
இங்கு அனைவரும் மனம் கலங்கி இவர்களை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க.. இருவரும் தைரியமாக இப்படி வந்து நிற்கிறார்கள்.
“என்ன வேந்தா இது?. இரண்டுபேரும் எல்லோர் முன்னேயும் இப்படி வரிங்க. இங்க உன் தங்கச்சி.. என் அண்ணா கூறுவது எதுவாக இருந்தாலும் நாம்ம நிறைவேற்ற வேண்டும் என கேட்டுட்டு.. கையில் கத்தியும்.. ரத்தமுமாய் நிக்குறா. கொஞ்சம் கூட அவமேல அக்கறையே இல்லாம இப்படி வந்து நிக்குறா?.
முதலில் அவளை இறக்கி.. அவங்க அப்பாவிடம் விட்டுவிட்டு.. உன் தங்கையிடம் மாமா கூறியதற்கு.. சம்மதம் என்று சொல்லு போ. “
சித்ரா கூற கூற.. அரசியின் அழுகையும், இறுக்கமும் கூடியது. அது வேந்தனிற்கு வார்த்தைகளில் கூறமுடியாத வலியை கொடுத்தது.
தன் அம்மா.. மற்றும் மற்றவர்களை பார்த்துவிட்டு..
அங்குயிருந்த.. ” இளமதி இங்க வாங்க. ”
அழுகை அடங்கிக்கொண்டு அருகில் ‘ சொல்லுங்க ‘ என்பது போல வந்தாள்.
பெருமுச்சு ஒன்றை வெளிப்படுத்தி விட்டு.. ” இளமதி வீட்டில் பால் இருந்தா பால் டீ.. இல்ல வரகாபி போட்டு எடுத்துட்டு வாங்க. ” சாதாரணமாக கூற..
என்ன கூறுகிறார்? என அவள் முழித்தாள்!.
தன்னவளை போலவே முழிக்க.. மெல்லிய புன்னகை அரும்பியது.
அனைவருக்கும் ‘ என்னடா ஆச்சு இவனுக்கு?. ‘ என பார்த்தனர்.
அவர்களில்.. தெளிவான முடிவு ஒன்றை எடுத்து.. அதை செயல்படுத்த போகும் மாமாவை பார்த்த இன்பா முதலில் தெளிந்து.. இளமதி அருகில் வந்து.. ” அக்கா வா.. நாம்ம போய் டீ போட்டு எடுத்துட்டு வரலாம். ” அவள் பதில் அளிக்கும் முன்..
இளமதியை இன்பா இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அவர்களுடனே ஆர்த்தி, சுரபி, தாமதமாக தெரிந்து வந்த யோகாவும் உடன் சென்று அவர்களை தண்ணீர் தெளித்து நாலு அடிகொடுத்து தெளிவு படுத்திவிட்டாள்.
” அம்மா.. கல்யாணத்திற்கு சம்மதம் என்ற முடிவு சொல்லும் முன்ன டீ, காபி குடிக்கிறோம். இப்ப வேற ஒருமுடிவு சொல்லும் முன்ன.. டீ குடித்துட்டு தெம்பா சொல்லாம் தான். போய் உட்காருங்க. ” அனைவரையும் பார்த்து கூற..
அவர்களும் புரியாத பார்வையுடன் போய் அமர.. தானும் தன்னவளை வைத்தபடி தரையில் அமர்ந்துவிட்டான். அவளை தன்பக்கம் இருந்தவாறே படுக்க வைத்து.. ” அருள் அண்ணா ஒரு போர்வை வேணும். “
அவருக்கும் அவனின் நிதாமான நடவடிக்கையில் பதட்டம், வருத்தம் போய் தெளிவு வந்தது. அவன் கேட்டதை கொடுக்க.. அவளின் மீது போர்த்தி விட்டபின்.. ” அரசி கால்நீட்டு. ” அவளும் மெதுவாக நீட்ட.. மெளனமாய் கண்ணீர் வடித்திருந்த லட்சுமி வந்து மகளின் காலடியில் உட்கார்ந்துவிட்டார்.
வேந்தன் சற்று தள்ளி இருந்த.. ” அஸ்வின் ” இடமே அதிரும் வண்ணமாக அழைக்க.. தூக்க கலக்கத்தில் இருந்த குழந்தைகள் கூட திரும்பி பார்த்து பின் படுத்தது.
அவன் அழைப்பில் திரும்பி சிறுபதட்டத்துடன்.. ” சொல்லுங்க அ.. “ தடுமாற..
மெல்லிய புன்னகையுடன்.. ” வேந்தனே கூப்பிடுங்க. இன்னும் டீ வர பத்துநிமிடமாவது ஆகும். சொல்லுங்க நீங்க எந்த மாதிரி ப்ராஜெக்ட் டிரைனிங் விஷயமா ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் போனிங்க?. ”
அஸ்வின் இருவரியில் கூற.
” அதில் அனுபவம் கொஞ்சம் அதிகமாக தானே கேட்பாங்க?. “
” ம்.. ஏழுவருட அனுபவ இருப்பவங்க முழுபிராஜெக்ட் வேலை செய்வாங்க. ஐந்து முதல்தான் டிரைனிங் கொடுக்கவே ஆரம்பிப்பாங்க. நான் இரண்டுவருடமா சின்ன சின்ன ப்ராஜெக்ட் செய்திருக்கேன். அதனால் எனக்கு கொடுத்தாங்க. இதில் இப்போதில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்தா நல்ல சம்பளமும், சிலவருடங்கள் தொடந்து வேலை செய்ற ப்ராஜெக்ட் கிடைக்கும். “
” எங்க நிச்சியத்தின் போதே நீங்க நந்தினிய பார்த்திங்களா?. ” சாதாரணம் போல கேட்க.
” இல்ல வேந்தன். நிச்சியம் முடிந்து பின்.. நான் நந்தினிய முதலில் ஆபிஸ் காபிட்டேரியாவில் தான் பார்த்தேன். என் பிரண்ட்.. நந்தினியோட வேலை செய்றாங்க. அவங்கள பார்க்க போகும் போதுதான் முதன்முதலில் பார்த்தேன். அவங்க தான்.. என்னைய எழிலரசி மாமா தானே?. கேட்டாங்க.
எழில் அண்ணானு கூப்பிட்டுவதால.. எனக்கு முதலில் புரியல. அப்புறம் தான் எனக்கு ஞாபகமே வந்தது. நாம்ம அவ மாமாதானே என்று. ” புன்னகையுடன் கூறி..
” உங்களையாவது மாமானு கூப்பிடுவாளா?. ” நண்பர்கள் பேசுவதை போல கேட்க.
” என்னை மட்டும்தான் கூப்பிடுவா. ” முகம்முழுவதும் காதலும், கர்வமுமாய் கூறி.. ” அப்புறம் எப்ப நீங்க இரண்டுபேரும் இப்ப.. இப்படி கல்யாணம் செய்து கொண்டா நல்லாயிருக்கும் என்று முடிவு எடுத்தீங்க. “
நந்தினி, மேகா வீட்டினுள் பாத்ரூம் சென்றுயிருக்க.. அவனின் கேள்விக்கு நண்பனுக்கு பதில் அளிப்பது போல கூறி.. பின் விசாரணையாக மாற.. அவனும் புரிந்து கூற ஆரம்பித்தான்.
” ம்.. நாங்க பேசி பழக ஆரம்பித்து ஒருமாதத்திற்கு பிறகு.. இப்ப பத்துநாள் முன்னதான் திருமணம் செய்துகொள்ளனு முடிவு செய்தோம். “
“ஓ.. நந்தினி தான் கோயில் ஐடியா கொடுத்ததா?. ”
” நந்தினி ரிஜிஸ்டர் ஆபிஸ்சில் போய் பண்ணலானு தான் சொன்னாங்க. எனக்கு அதில் விருப்பம் இல்ல. மாமா எங்கள ஏத்துப்பாங்களா?. இல்லையானு தெரியாது?. நாம்ம குலதெய்வ கோயிலில் பண்ணினா.. 1000 பேர் மண்டபத்தில் கூப்பிட்டு செய்த திருப்தி இருக்கும். எப்ப நாங்க நினைத்தாலும்.. இப்படி பண்ணலை என்ற வருத்தமோ.. வீட்டில் இருப்பவர்களுக்கும் மனதிற்கு குறையிருக்காது. அதான் அவங்களை கொஞ்சம் சமாதானம் செய்து ஏற்பாடு பண்ணினேன். ”
” அப்ப.. நந்தினி என்னைய பற்றி எல்லாம் விஷயமும், மாமா.. மாப்பிள்ளை எதிர்பார்ப்பு விஷயம் பற்றி சொல்லி இருக்காங்களா?. ”
” இல்லங்க. எனக்கே இப்ப நீங்க பேசும்போது தான் தெரிந்தது. எனக்கு அவங்க உடனே கல்யாணம் பண்ணலாம் சொன்ன காரணம்.. மாமா ஒத்துக்கமாட்டாங்க என்று மட்டுதான்.
இப்ப பண்ணா.. உங்க கல்யாணத்திற்கு முன் செய்தா.. மாமா.. உங்க அப்பா, உங்களுக்காக இல்ல.. சமாதானம் செய்து.. ரிசெப்ஷன் வைத்து.. நம்ம திருமணத்தை ஏற்று கொள்வாங்கனு சொன்னாங்க.
அப்ப நான் நினைத்தது.. நார்மலா எல்லா வீட்டிலும் உடனே சரி சொல்லமாட்டாங்க தானே. சரி நானும் இந்த ஒரு காரணத்திற்காக தான் கொஞ்சம் பதட்டத்தோட தான் ஒத்துக்கிட்டேன்
மற்றபடி நந்தினி சொல்லும் விஷயம் எல்லாம் புசுசா இருக்கு. என்னிடம் அவங்க யாரும் இப்படி உங்களை கம்பேர் செய்து பேசியாதாகவோ.. இல்ல மாப்பிள்ளை மாமா இப்படி பார்க்கிறார் அதனால ஒத்துக்க மாட்டார்னு சொன்னதே இல்ல. அப்படி சொல்லியிருந்த நான் கண்டிப்பா.. பிரச்சனை வரும்.. எங்க எழில் குட்டிக்காக நான் உங்க கல்யாணம் முடிந்துதான்.. எதுவானாலும் முடிவு செய்துயிருப்பேன். “
அஸ்வின் கூறுவதில் பொய் இருப்பதாக தெரியவில்லை. அவர்களின் வீட்டிலும் ஏன் செய்தான்?. என வேந்தனிடம் கூறிய காரணம் மட்டுமே இருவரும் கூறியிருப்பதால்..
நந்தினி இப்போது கூறிய காரணம், அதுபற்றி தெரியாது என அஸ்வின் கூற அனைவருமே இதனை அதிர்ச்சியுடன் கேட்டனர். வேந்தன் ஓரளவிற்கு அஸ்வினிடம் இருந்து இந்த பதில் தான் வரும் என எதிர்பார்த்தான்.
” ஓ.. அப்ப நந்தினிக்கு இங்க நடந்த விஷயமும்.. ஒரு காரணம் என்று சொன்னாங்களா?. எப்படி தெரியும்? உங்களிடம் இங்கு யாராவது சொன்னாதா சொல்லியிருக்காங்களா?. ”
யோசித்தவன்.. ” இன்டர்வியூ,வேலை பற்றி பேசினேனு மேகா, உங்க தங்கை வசுந்தராவிடம் பேசியதா சொல்லுவாங்க. சாருலதா MBA எக்ஸாம் இப்பவே படிப்பதால அவங்க பேசவே மாட்டாங்கனு சொல்லியிருக்காங்க. அப்புறம் அம்மா, அப்பா தவிர மற்றவர்களை பற்றி பேசியது இல்ல.
நான் சனி, ஞாயிறு மதியம் வரை அங்க வேலை செய்யும் நண்பர்களோட ப்ராஜெக்டில் டிரைனியா இருக்கேன். அதனால கல்யாணத்திற்கு அதிக நாள் லீவ் வேண்டும் என்று.. நீங்க கடை திறக்கும் விஷயம் கூட பத்துநாள் முன்னாடி தான் அப்பா சொல்லி எனக்கு தெரியும். ”
அவன் கூறிக்கொண்டுயிருக்கும் போதே.. டீ, பால் மற்றும் பிஸ்கட்டுடன் வந்தவர்களில் இன்பா.. ” மாமா.. மேகாவுக்கு உங்களையும் நந்தினியையும் சேர்ந்து தெரியுமா?.
” இப்ப டிரைனிங் போன இடத்தில் நந்தனிய ஆபிஸ்சில் பார்த்து எனக்கு பழக்கம் .. இன்டர்வியூ பற்றி கேட்டு தெரிந்துக்கோனு சொல்லியிருந்தேன். கல்யாணம் விஷயம் அவளுக்கு நான் சொன்னது இல்ல. ”
வேந்தனிடம் திரும்பி ” நாங்க செய்த கல்யாணத்தினால.. இப்ப இரண்டு கல்யாணம் கேள்விக்குறியாகி இருக்கு. எனக்கும் சில விஷயங்கள் தெரியனும். அதனால நானே அவங்களிடம் கேட்குறேன். “
” ம்.. கேளுங்க அஸ்வின். “
எழிலரசி தவிர அனைவரும் டீ, பால் அமைதியாக அருந்திக் கொண்டுயிருக்க அப்போது மெல்லிய சிரிப்புடன் பேசியபடி நீண்டநேரம் கழித்து வெளியில் வந்த மேகா, நந்தினி.. அனைவரையும் அமைதியாக ஏதோ அருந்திக் கொண்டுயிருப்பவர்களை எதிர்ப்பார்க்கவில்லை.
எல்லோர் உடைய பார்வையும் அவர்கள் மேல் இருக்க.. மேகா சற்று அரண்டுவிட்டாள்.
நந்தினி ஏதோ சரியில்லையே என வரும்போது.. எழிலரசி அனைவர் முன்னும் படித்துயிருப்பதை மனதின் எரிச்சலை சற்று பார்வையில் காண்பித்தபடி அஸ்வினிடம் வந்தாள். இதை அவன் கவனித்தான்.
இப்போது பார்வை இருவர் மீது இருக்க.. அஸ்வின் வேந்தனை அழைத்து.. ” நீங்க பெங்களூருக்கு எழிலரசி பிறந்தநாள் அன்று தானே வந்தீங்க?. ” ஆம் என தலையசைக்க..
நந்தினியிடம் திரும்பியவன்.. ” அப்ப உங்ககூட தானே இருந்தேன். அப்ப நீங்க ஏன் அவங்கள பார்த்ததாக என்னிடம் சொல்ல?. ”
சாதாணமாக.. ” அத ஏன் உங்ககிட்ட சொல்லனும்?. ”
அவர்கள் இருந்த அழகு என பொறாமையுடனும்.. பின் நம் இருவரை பற்றி நானே தெரியப்படுத்துவேனா?.
அவளை முறைத்தவன்.. ” ம்.. நீ முதலில் என்னிடம் அறிமுகமானதே எழிலரசிய வைத்துதான். நான் உங்ககூட இருக்கும்போது சொல்லியிருக்கனும். அப்ப சொல்லக்கூடாது நினைத்து இருந்தா.. இப்ப நீ உங்க அப்பாவிடமும் சொல்லியிருக்க கூடாது.
சரி நீ என்னிடம் சொன்ன விஷயத்திற்கும்.. வேந்தனும் உங்க அப்பாவும் பேசியதற்கும் அப்படியே தலைகீழா இருக்கு. எதை மனதில் வைத்து.. எல்லாம் செய்த?. ”
வேந்தன் தெளிவு படுத்திவிட்டானா!.
” நான் உண்மைய சொன்ன நீங்க கல்யாணம் உடனே செய்ய ஒத்தக்க மாட்டீங்க. அதனால தான். ஆனா இதில் எங்க அண்ணா, வசு கல்யாணத்தில் பிரச்சனை வரும் என்று நினைக்கல. ”
“அப்ப எங்க எழில் கல்யாணத்தில் பிரச்சனை வரும் என்று நினைத்த?. ” அடங்கபட்ட கோபத்துடன் கேட்க..
அதை புரிந்தாலும்.. தைரியமாகவே.. ” ம்.. கல்யாணம் பிரச்சனை வரும் என்று தெரியும்.. ஆனா இப்படி மாறும்படியா பேச்சு போகும் என்று நினைக்கல.
எங்களையெல்லாம் கஷ்டப்படுத்திட்டு.. அவர் மட்டும் யாரோ பொண்ணோட கல்யாணம் செய்துக்க போறாரு. அதனால எனக்கு அவங்க கல்யாணம் எல்லோரும் ஓன்னா சேர்ந்து.. சந்தோஷமா நடத்தக்கூடாது. ” கூறிய அடுத்த நொடி
‘ பளார் ‘ என்ற சத்தத்தில் அவள் பின்னால் சாய்ந்தாள்.
வசுவும், கணேஷ், சுமதி மட்டும் அருகில் வந்துவிட்டனர். அஸ்வினின் ஐந்து விரலும் அவள் கன்னத்தில் பதிந்து இருந்தது.
நந்தினியின் தலைகீழான பேச்சியில்.. இவளிடம் எந்த அளவிற்கு ஏமாற்றபட்டு இருக்கிறோம்..
அதைவிட தங்கள் வீட்டு குட்டிம்மா.. எவரையும் பார்க்க பிடிக்காமல் இப்படி நடுகூடத்தில் அழுது கொண்டுயிருக்கிறாள். தன்னவளை சமாதானம் செய்ய அவளின் தலை தடவி கொண்டுயிருக்கும் வேந்தன்..
இவர்களின் திருமணம் தங்களால்.. அதிலும் தன்னால் கேள்விக்குறியாகி விட்டதே என.. தன் கோபம் முழுவதையும் ஒரு அடியில் அவளிற்கு தெரிவித்து.. அவளுடன் அமர வெறுப்பு கொண்டு எழுந்துவிட்டான்.
” என்ன?. என்ன சொன்ன எழிலரசி, வேந்தன் கல்யாணம் சந்தோஷமா நடக்க கூடாதா?. இரண்டு பேரும் உனக்கு அப்படி என்ன பண்ணாங்க.?.
ஐந்து வருடம் முன்ன பெரியவங்களா பேசி ஒரு முடிவு எடுத்து.. அவங்களா ஊர் முழுக்க சொல்லிட்டு.. கடைசியில் வந்து வேந்தனிடம் கேட்டா. அவர் விருப்பம் இல்லாம.. நீங்க எல்லாம் கேட்டிங்க என்பதற்காக கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்மா?.
வேந்தன் வேண்டானு சொன்னதற்காக.. அவர விட உயர்ந்த வரா இவரு மாப்பிள்ளை தேடுவாறு.. அப்பாவும் பொண்ணும் வேந்தனை நடுவில் வைத்து.. உன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை எல்லாத்தையும் கேனையன் ஆகி.. வேண்டானு சொல்லிட்டு..
இத்தனை நாளா.. நீங்க தான் வேந்தனை மறைமுகமாக அவமானம் செய்தும்.. அவங்க வீட்டில் இருப்பவர்களை கஷ்டபடுத்தியும் இருக்கீங்க.
அதுக்கு குடும்பமே கூட இருந்துயிருந்து இருக்கீங்க. அதனால்தான் அவர் மூலமாவே.. நீங்களே உங்களுக்கு அவமானம் தேடிக்கொண்டிங்க. இதில அவரினால் நீங்க அவமானம் அடைந்தீங்கனு இப்ப சொல்லிட்டு இருக்கீங்க. ”
கணேஷிடம் திரும்பி.. ” தெரியாம கேட்டுறேன்.. இதே வேந்தன் கெட்டவரா இருந்தா.. அதை விடகொட்டவரா, பொறுக்கிய.. உங்க பொண்ணுக்கு பார்த்து கல்யாணம் செய்து இருப்பீங்களோ?. “
எப்படி செய்வார்கள்?. அவர் என்ன கூற என விழித்தார்.
அதை நக்கலுடன் பார்த்துவிட்டு.. நந்தினியிடம் திரும்பியவன்.. ” சரி உனக்கு இங்க நடந்த விஷயத்தில்.. உனக்கு என்ன பிரச்சனை?. யார் உனக்கு எல்லாம் சொன்னா?. ”
அவள் சொன்ன காரணம் அனைத்திற்கும் முதலில் தனக்கு விளக்கம் வேண்டும்.. என அடுத்து உடனே கேட்க..
கன்னம் சிவந்து.. கண்ணீர் சிறிது வந்தாலும்.. கோபமாகவே.. ” இவங்களாள.. எனக்கு மட்டும்மா பிரச்சனை. எங்க சைடில் இருக்கும் எல்லோருக்கும் ஏதாவது ஒருவிதத்தில் பிரச்சனையா தான் இருந்தாங்க. முன்னாடியெல்லாம் இருந்த வேந்தன் வேற. இப்ப இருப்பவர் வேற.
யாரிடம் பேசினாலும் வேந்தன் அந்த பொண்ணாக கடை வைக்க போறாரு, பொறுப்பு கொடுத்து இருக்காரு. அந்த பொண்ண கல்யாணத்திற்கு என்று எல்லா நகை, உடை எல்லாம் பண்ணுறாரு, அந்த பொண்ணு தேவையென்றால் ஒரே நாளில் லட்சங்களில் செலவு செய்யுறார். அந்த பொண்ணு பெயரில் சொத்தை மாற்றபோறாரு.. வெளியில் இருக்க கார் அந்த பொண்ணுக்காக இரண்டுநாளைக்கு முன்னாடி வாங்கியது. ” எழிலரசியை பார்த்துக்கூற..
அவளோ கண்களில் கண்ணீருடன் தன்னவனின் இடை கட்டிக்கொண்டு கேட்டுயிருந்தாள். இவற்றை எல்லாம் உணர்ந்தும்.. எதுவும் செய்யமுடியாமல் தங்களுக்கும் சில விஷயங்கள் தெரிய.. மாற்ற வேண்டி.. அமைதியாக தன்னவளின் தலைதடவி ஆறுதல் மட்டும் அளித்துக் கொண்டுயிருந்தான்.
நந்தினி கோபம் குறையாமலே.. ” மூனுமாதமே தெரிந்த பொண்ணிற்காக எப்படி இவரு ஆளே மாறியிருக்காரு. அப்ப இத்தனை வருடம் அவர் கூட இருந்த எங்களையெல்லாம் பார்த்தா மனுஷங்களா தெரியலையா?. அதோட என்னிடம் இல்லாதது.. ” அவள் கூறிக்கொண்டுயிருக்கும்போதே..
இன்னொரு அறை கொடுத்து விடப்போகிறேன்.. என மீண்டும் அருகில் கை கொண்டுவந்து விட்டு.. ” கல்யாணமுறை இருக்க நீங்க வேந்தனை மாமானு கூப்பிடு இருக்கீங்க. உங்க வீட்டில் கல்யாணம் பற்றி பேசவாது செய்ய வாய்ப்பு இருந்தது.
ஆனா எழிலரசி எங்களையெல்லாம் மாமா என்று கூப்பிட்டதே இல்ல.. எல்லோர் முன்னேயும் அண்ணாணு கூப்பிட்டு எங்கள ஒட வைப்பா. இப்ப மாமானு வேந்தனை மட்டும்தான் கூப்பிடுவாளா.
அதுக்காக நாங்க என்ன குறைச்சா போயிட்டோம். அதனால வேந்தன் மீது எங்களுக்கு பொறாமையாவா இருக்கு?.
சரி.. நான் முன்னாடி வீட்டில், மற்றவர்களிடம் எப்படியிருந்தேனு உனக்கு தெரியுமா?. தீரவிசாரிக்காம எதையும் பண்ணமாட்டேன். ஆனா நான் உன்னிடம் பழகி ஒருமாதம் தான் ஆகுது. நீ சொன்னதை நம்பி.. லூசு மாதிரி எதையும் விசாரிக்கமா.. வீட்டில் யாருக்கும் சொல்லாம நான் உன்னை கல்யாணம் பண்ணல?. இப்ப உனக்காக நான் ஆளே மாறல. அப்ப என் கூட பழகுபவர்கள் மனுஷங்க கிடையாதா?. ” கோபமாக கூறியவன்..
கணேஷ் திரும்பி.. ” இங்க பாருங்க உங்க பொண்ணு என்னை ஏமாத்திதான் இன்னைக்கு கல்யாணம் செய்ய வைத்தா.. அதனால நீங்க எங்க கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளுவரை உங்க பொண்ணை நீங்களே வீட்டிற்கு கூட்டிட்டு போய் வைத்துக்கோங்க. “அஸ்வின் கூறியவுடன் இருவர் தவிர அனைவருக்கும் மீண்டும் ஒரு அதிர்வு.
நந்தினியின் தன்மீதான பிடித்தம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தான் அறியாத உள்நோக்கத்துடன் கூடிய தன்மேல் பிடித்தம் வந்துயிருக்மோ.. என சந்தேகம் வந்து. அதைவிட அவளின் வேந்தன், எழிலரசி மீதான பார்வையில் யோசிக்க வைத்தது.
அப்பாவை வைத்து என.. தன்னை ஏமாற்றி உடனே திருமணம் செய்த அவளிற்கும்.. அந்த அப்பாவினால் இத்திருமணத்தை வைத்தே.. இரு திருமணத்தை கேள்விக் குறியாக்கி.. கேளிகூத்தடிக்கும் அவருக்கும்.. இனி அவர் சொன்னதை செய்ய.. நந்தினி இனி எதையும் செய்யவும் சற்று யோசிக்க வேண்டும்.. அவனை இவ்வாறு கூற வைத்தது.
அஸ்வின் நினைத்தது போலதான். நந்தினிக்கு அஸ்வினை பார்த்தும் பிடித்தது. பின் ஆபிஸ்சில் பார்த்து பேசியதில் சற்று பிடித்தம் அதிகம் ஆகி.. அவனிடம் வேந்தனிடம் இருக்கும் சொத்துடன் சிறிது குறைவே தவிர மற்ற எதிலும் குறைந்தவன் இல்ல. ஓரே ஊரில் இருப்போம், ஆசைப்பட்டது போல இங்கேயே கூட தொடந்து வேலை செய்யலாம்.
அப்பாவும் சில மாதங்களில் இல்லை.. தான் அவரிடம் பொறுமையாக வேந்தனை அதுனுள் இழுத்தாலே.. அன்றே ஏற்றுக்கொள்ளவார். அஸ்வின் வீட்டிலும் தன்னை மிக நன்றாகவே பார்த்து கொள்வார்கள்.. தன் வீட்டை போலவே இருக்கலாம். வசுவை வேந்தன் வீட்டில், மேகாவை வைத்து எழிலரசி வீட்டில் என தான் சிறப்பாகவே தன் எண்ணம் போல இருக்கலாம் என்றும்..
வேந்தன், எழிலரசி திருமண விஷயத்தில் வேந்தனின் வீட்டுடன் அவனின் கல்யாணம் முடியும் வரை.. அப்பாவிற்கு பினக்கம் இருக்கும்.. அதனால் எழிலரசி வீட்டில்.. அதனால அஸ்வின் வீட்டில் என கல்யாணம் பெரிதாக நடக்கலாம்.. ஆனால் மகிழ்வு இருக்காது என நினைத்து சில கணக்குகளை போட்டாள்.
அஸ்வின் யாரை எண்ணி அவன் ஒரு கணக்கு போட்டானோ அவரே.. கணேஷ் தான் முதலில் எழுந்து வந்தது.. ” என்னடா உனக்கு கல்யாணம் செய்துவது விளையாட்ட இருக்கா?. “
” அப்ப உங்களுக்கு எங்க கல்யாணம்?. ” அவரின் பின்னால் இருந்து வேகமாக, கோபமாக ஒருகுரல் வந்தது.