” என்னடா எவ்வளவு பெரிய விஷயத்தை.. சாதாரணமா சொல்லுற. அதுவரைக்கும் வரமாட்டியா?. நம்ம வீட்டில் உன் கல்யாணம் முன் நடக்கும் சடங்கு.. உன் தங்கைக்கு எல்லாம் யார் பண்ணுவா?. ”
” எனக்கு பண்ண வேண்டியதை பெரிய வீட்டிலே செய்துக்கலாம். உங்க மகளுக்கு நீங்க பெரிய வீட்டிலேயே பண்ண விரும்பினா செய்யுங்க. இல்ல இருக்கும் வீட்டில் வைக்க ஆசைப்பட்டா.. ஈஸ்வர் அண்ணா செய்வாங்க. “
” என்னடா நீ அங்க போய் பண்ணினா எல்லோரும் கேள்வி கேட்பாங்க… ” முடிக்கும் முன்..
” ம்மா. நீங்க உங்க மகளுக்காக நீங்க செய்த செயலிற்கு.. எனக்கு அரசி வீட்டிலே எல்லாம் செய்ய வேண்டும் நினைத்தேன். ஆனா நான் பெரிய வீட்டில் ஒத்துக்கொண்டதே.. எங்க திருமணத்தில் முடிந்தளவு என் விருப்பம், உங்க இரண்டுபேர் விருப்பமும் சேர்ந்து.. நிறைவேற எது சரியோ.. அதை செய்வேனு அரசியிடமும் .. எல்லோரிடமும் முன்னமே சொல்லியிருக்கேன்.
யார் என்ன கேள்வி கேட்டாலும்.. அதைபற்றி எனக்கு கவலையில்ல. கல்யாண முன் நடக்கும் சடங்கு மட்டும்தான் அங்க நடக்கல. வருங்காலத்தில் எவ்வளவோ இருக்கு. அதெல்லாம் அங்க தான் நடக்கும். மணியாச்சு இப்ப கிளம்புங்க. “
அவனின் கோபம் எதனால் என புரிந்தாலும்.. அந்த சூழ்நிலையில் தன் மகளா?. வருங்கால மருமகளா?. என்று வருகையில்.. மகளுக்கு செய்வதை தவிர சித்ராவிற்கு வேறு வழியும், யோசனையும் இல்லை.
” வேந்தா நீ வீட்டிற்குள் வரவேண்டாம். ஆனா வெளி தோட்டத்திலாவது ஏதாவது ஒரு சடங்கை செய்யலாம். இது எங்களுக்காக இல்ல.. உன்னகாக தான். மருமகளை நினைத்துதான் வீடு கட்டியதா சொன்ன. பிற்கால காலத்தில்.. அப்ப செய்திருக்கலாமோ என்று.. உனக்கு குறை வந்துவிட கூடாது. நீ நல்லா யோசித்து முடிவு பண்ணு.
வசுந்தராவிற்கான.. சடங்குகளை எல்லோருக்கும் ஒரே இடத்தில் பண்ணலாம் இருக்கோம். ஆனா யார் வீட்டில் செய்யலாம் என்றுதான் முடிவு செய்யனும். அதனால அதை பற்றிய கவலை இப்ப தேவையில்ல. ” ரவிந்திரன் அங்கு இருந்தவர்களை பார்த்து கூறிவிட்டு.. அனைவரும் சில நிமிடங்களில் கிளம்பினர்.
கூடத்தில் நல்ல காற்றோறமும்.. வசதியாக அமர கூடிய இடத்தில்.. எழிலரசி தலையணையில் தலைவைத்து.. தன்னவனை இடையை கட்டிக்கொண்டும்.. அவளவன் முதுகிற்கு மட்டும் தலையணை வைத்து.. தரையில் கால்நீட்டி அமர்ந்து.. ஒருகையால் தன் அரசியின் தலையை அவ்வப்போது கோதியபடியும்.. மறுகையால் மடியில் வைத்துயிருக்கும் லாப்டாப்பில்..
நண்பர்களிடம் முதலில் நடக்கும் கல்யாண முடிவு பற்றியும், அதன் தேவைகள் அனைத்தும் கூறி முடித்து..
பின் தங்கள் கல்யாணத்திற்கு என்று சந்தோஷ் முன்பு அனுப்பியதை.. மிகவும் மகிழ்வு மற்றும் தன் முயல்குட்டியுடனா காதலை சொல்லிய.. சூழ்நிலையை எண்ணி வருந்தவும் செய்தவன்.
அந்நேரத்தில் உணர்ந்த தன்னவளின் இடையிறுக்கத்தில்.. தன்காதலை பற்றி.. யாரிடமும் கத்தி தெரிவிக்க முடியவில்லை என தன்னவள் வருந்தினாள்.
ஆனால் இப்போது அந்த கவலை.. அவளிற்கு இல்லையே என்ற துள்ளலுடன் நேரம் என்னவென்று கூட தெரியாமல்.. திட்டமிட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடிந்திருந்தான்.
‘ அப்பாடா ‘ என கைநெட்டி எடுத்தபடியே நிமிர.. அங்கு முறைப்பு, சிரிப்பு, கவலை, அழகு என்று காண்பித்தபடி..
அஸ்வின், பார்த்திபன், இளமதி, ஆர்த்தி ஆகியோர் நின்றுயிருந்தனர். அப்போதுதான் அவன் 4.30மணி என்பதை பார்த்தான்.
வேந்தன் அழகான புன்னகையுடன்.. ” ஹாய் குட்மானிங். ”
முறைப்புடன்.. ” வேந்தன் நீங்க இங்கதான் இருந்திங்களா?. என்னைய கூப்பிட்டுயிருக்கலாம் இல்ல. ”
” பரவாயில்ல இளமதி.. அரசி நல்லா தூக்கிட்டுயிருந்தா. எழுப்பினா கேள்வி மேல கேள்வி கேட்டு.. திருப்ப தூங்கமாட்டா. அதான் அப்படியே இங்கே இருந்து வேலை முடிச்சுட்டேன். ”
உங்களை திருத்த முடியாது என்ற பாவனையில்.. ” சரி.. கொஞ்சம் நேரமாவது உள்ள போய் தூங்குங்க. ”
சாதாரணாமாக.. ” ம்.. சரி. நான் அரசியோட படுக்கனும். எங்களுக்கு தனிரூம் கிடைக்குமா?. ”
இருவர் அதிர.. அஸ்வின், பார்த்திபன் சிரிக்க..
சிரித்தவர்களை முறைத்துவிட்டு.. ஆர்த்தி.. ” என்ன விளையாடுறீங்களா?. ”
” இல்ல அண்ணி.. சீரியஸ்தான் சொல்லுறேன். அரசியோட நான் இருக்கப்ப தனியா படுத்தே இல்ல. அதான். ” சிரிக்கமால் கூற..
” அப்ப எங்க வீட்டில் இருந்தப்ப.. இன்பா கூட நீங்க படுக்கலையா?. ” இல்லை என புன்னகையுடன் தலையசைக்க..
” அவனுக்கு முன்னமே தெரியுமா?. ”
ஆம் என தலையசைக்க.
” அப்ப யார் யார்கெல்லாம் தெரியும்?. “
ஆரம்பமானது அவனின் இத்தனைநாள் கள்ளதனமாக செய்த வேலைகளின்.. கேள்வி பதில்கள்.
நால்வரும் அடபாவி!. என்ற லுக்கொடுத்து.. ” அப்ப எழில் உங்க வீட்டில் காலடி எடுத்து வைத்துவிட்டாளா?. “
” இல்ல இல்ல.. நான் வாசலில் இருந்து எல்லா இடத்திற்கு தூக்கிட்டுதான் போனேன். என் ரூம்மில் மட்டும்தான் அவ கால் பதித்தா. ” அசால்ட்டாகவும், பெருமையாகவும் கூற..
” வேந்தன் மாமா.. உங்களை முதன்முதலில் கடைவீதியில் தர்ஷினி பார்த்ததில் இருந்து சொல்லியிருக்கா. நான் அதிரடியா இருப்பீங்களோனு நினைத்தேன். ஆனா இப்பவே.. உங்க ரூம் கூப்பிட்டு போற அளவிற்கு இருப்பீங்கனு எதிர்பார்க்கல. ” புன்னகையுடன் கூற..
” வேந்தன் யாராவது அந்நேரம் பார்த்துயிருந்தா?. “
துள்ளலாக ” ம்.. அப்பவும்.. இது போல ஒரு வாரத்திலே கல்யாணம் என்ற முடிவு எடுத்து.. முடிந்துயிருப்பேன். “
‘ மனதில் கல்யாணத்தின் இரு ஜோடிகள் மாறியிருப்பர். எந்த கல்யாணமும் இப்ப நடந்துயிருக்காது. சில மன பிரச்சனையின் தீர்வு இல்லாமலே போயிருக்கும். ‘
புன்னகையுடன்.. ” போராசைதான். இந்நேரம் ஒருரணகளமே ஆகியிருக்கும். சரி சரி நேரம்ஆகுது. நீங்க அஸ்வின் ரூம்மில் போய் கொஞ்ச நேரமாவது படுங்க. ” வேந்தன் புரியாமல் பார்க்க..
” வேந்தன்.. நந்தினி இந்த வீட்டில் இருக்கா. எங்க கல்யாணத்தினால் இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகு.. ரிசெப்ஷன் முடிந்தது.. அவங்க அப்பாவுடன் அம்மாவுடன் இந்த வீட்டிற்கு முறையா வரட்டும் என்று சொல்லிட்டேன். “
எப்போது ரிசெப்ஷன் வைத்துயிருந்தாலும் இதே முடிவில் தான் இருந்தான். நந்தினி மீது இருக்கும் வருத்தம் குறைந்து.. வேந்தன், எழிலரசி திருமணம் பின்தான் தங்கள் குடும்பவாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும்.. இந்த இடைபட்ட நாட்களில்.. அவளை பற்றி மேலும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துயிருந்தான்.
வேந்தன் அஸ்வின் கூறிக்கொண்டுயிருக்கும் போதே லாப்டாப் எடுத்து வைத்துவிட்டு பேக்மாட்டிக்கொண்டு.. தன்னவளை கையில் ஏந்திக்கொண்டான்.
சிறிய முறைப்புடன் பேக்கை அஸ்வின் வாங்கி.. நடந்தபடியே.. ” ம்.. ஆனாலும் இப்பவே உங்க இரண்டுபேரும் ஒரே ரூம்மில் தூங்கும் அதிஷ்டம் இருக்குங்க. ” அவன் ரூம்மில் பேக் வைத்துவிட்டு நக்கலுடன் கூறிச்சொல்ல..
‘ எப்படா ‘ என காத்திருந்தவன் அரசியை நன்றாக படுக்க வைத்துவிட்டு.. தன்னவளின் கழுத்தில் புதைந்து.. தன்னை கிறங்க வைக்கும் மச்சத்தில் இதழ்களை மென்மையாக பதித்தான். அவனவளோ தன்னவனின் ஸ்பரிசத்தை அந்நொடியில் உணர்ந்து ” லவ் யூ தனுமாமா. “முத்தமிட்டவாறே.. ” லவ் யூ முயல்குட்டி.. ” மச்சத்தில் பல முத்த தாக்குதல் நடந்த.. தூக்கத்தில்.. அவளும் விரும்பியே அதில் வீழ்ந்து.. அவனில் சரணடைய..
அவனின் காதல், கள்ளத்தனம் என தன் உறவினர்களிடம் பகிர்ந்த மகிழ்ச்சியில் வேந்தனை அவனின் உணர்வுகள்.. கைகளை சற்று எல்லைமீற தூண்டியது. ‘ அய்யோ ‘ என பதறி.. இன்னும் ஒருமாதத்திற்கு மேல் இருந்தபோதே.. பொறுமைகாத்தவன்.. இப்போது முழுசா என்னவளா மாற.. இன்னும் ஒரேவாரம் தான் இருக்கு. அதற்குமுன் எப்போதும் போல லிமிட்டான முயல்குட்டியே போதும்.
எழில்வேந்தன் இனிப்பகத்தை ஏற்கனவே திறப்புவிழா முடிந்து தங்கள் இருவருக்கும்.. மூன்றுநாட்கள் கண்டிப்பாக ஓய்வு தேவை என அனைத்துவித முன் ஏற்பாட்டுடன் ராஜன் மற்றும் இன்னும் மூவர் பொறுப்பில் கொடுத்திருந்தான்.
இப்போது அவர்களுடன் இன்னும் மூவர் என பொறுப்பை கொடுத்து.. மூன்றுவாரத்திற்கு என தங்களின் ஓய்வு நாளை மாற்றி விட்டு..
வேந்தன் தன் அரசியுடன் இன்பா, சாருலதா, இளமதி, ஆர்த்தி, யோகா, நான்கு ஜோடிகள் மற்றும் கல்யாண புடவைகள் எடுப்பதால் ஜோடிகளின் தந்தை, தாய்மாமா முறையில் கணேஷ், வரதராஜன் என அனைவரும் சென்னை வந்து இறங்கினர்.
இதற்கு நடுவில் அவர்கள் வீட்டிற்கு சில எண்ணிக்கையிலான அழைப்பிதழ்கள் கொண்டு செல்லப்பட்டு.. லட்சுமி, சித்ரா, சுமதி, ராகவன், மாணிக்கம் , சுந்தர்ராஜன், சக்கரவர்த்தி, குமரேசன், அமுதன் என குலதெய்வ கோயில் சென்று தெய்வத்திற்கு படைப்பும், முதல் அழைப்பிதழ் கொடுத்து.. திருமண ஏற்பாட்டு மற்றும் சடங்கை இனிதே தொடக்கி வைத்தனர்.
சென்னை வந்தவர்களுக்காக காத்திருந்த கார்களில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும்.. நண்பர்களில் ஒருவருக்கு சொத்தமான.. பட்டுபுடவைகள், லெஹங்கா, பிளவுஸ் டிசைன் செய்யபட்ட பட்டுபுடவைகள் என ஆண், பெண், குழந்தைகளுக்கு என திருமணம், பிற நிகழ்ச்சிக்கு மட்டும் உபயோகப்படுத்தும் பிரத்தேகமான உடைகள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.
” வேந்தா ஆளே இல்லாத கடைக்கு கூட்டிட்டு வந்துயிருக்க?. ”
கேள்வியா?. நக்கலா?. என்ற குரலில் கணேஷ் கேட்க.. மற்றவர்கள் இதை கேட்டு சிரித்தார்கள்.
இவர் தெரிந்து கேட்கிறாறா?. தெரியமா கேட்கிறாறா?. என பார்க்க..
அவர் கடையை பார்க்கும் பார்வையில் இருக்கும் கேள்விக்குறியை புரிந்து.. ” மாமா.. சிலருக்கு கடைக்குள்ள அதிகம் பேர்இருப்பது பிடிக்காது.. கூடவே தன்னை கொஞ்சம் அதிக மரியாதையா நடந்தனும் எதிர்பார்ப்பாங்க. சிலருக்கு பிரைவசி தேவைப்படும். அதனால இங்க வரவங்க முன்னாடியே போன் செய்து சொல்லிட்டுதான் வருவாங்க. நாம்ம போகும்வரை யாரும் வரமாட்டாங்க. இன்னைக்கு நமக்கு மட்டும்தான். ”
” தினமும் ஒரு இருபது முப்பது பேர் வாங்கினா எப்படிடா கடைக்கு வருவானம் வரும்?. ” அவரிடம் அங்கு இருக்கும் ஒருபுடவையை எடுத்து காண்பிக்க..
அய்யோ என அதிர்ந்து.. ” என்னடா விலை இவ்வளவு அதிகமா இருக்கு!. இப்படி இருந்தா பத்துபுடவை வாங்கினா போதும் போல. ”
புன்னகையுடன்.. ” மாமா பத்து புடவை வாங்கினா. கடையை எப்படி நடத்த?. ஒருநாளை முப்பது வித்தாபோதும். இந்த புடவையெல்லாம் கலப்படமில்லாத அசல்பட்டு சரிகை சேர்ந்து.. மிஷசின் இல்லாம கையினால் நெய்யற சேலை.
கல்யாணம் பொண்ணுங்க மாற்று சேலை மாற்றி கட்டி.. மாலை, நகைனு போட்டு ஹோமம், சடங்கு, வந்தவர்களிடம் ஆசிர்வாதம் என்று ரொம்ப நிக்கும்போதும்.. கட்டவதற்கு, நீண்டநேரமாக கட்டியிருந்தாலும்.. உடலுக்கு தெரியா அளவிற்கு சாப்ட்டா (soft), பாதிப்பும் வராத அளவிற்கு இருக்கும். அதனால விலை ஜாஸ்தியா இருக்கு. “
மாமாவிடம் விளக்கம் போல.. அக்கா, அண்ணிகள் ஒருவருக்கே நிறைய புடவைகள் வேண்டுமே.. ஒருபுடவை விலையே அதிகமோ என நினைத்தவர்களுக்கும் சேர்த்து கூறினான். இப்போது தங்கள் திருமணத்தில் நடந்தவற்றை நினைத்துவிட்டு.. பரவாயில்லை என எண்ணினார்கள்.
அப்படா நம் புரிய வைக்கும் வேலை முடிந்து.. ஜோடிகள் அனைவரும் தங்களுக்கு தனித்தனியாக பார்க்க.. இன்பா, அண்ணி, அக்காவெல்லாம் தங்களுக்கு, வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்கு இருநாட்கள் திருமண தினத்திற்கும்.. ஒருவருக்கு மூன்று என அவர்களுக்கு ஏற்றவாறு என பார்க்க ஆரம்பித்தனர். ஆண்களுக்கும் பட்டு வேட்டி, சட்டை, பல நிற சட்டைகள்இருக்க.. இளையவர்கள், ஆண்குழந்தைகள், தன் வயதை ஒத்தவர்கள் என எடுக்க கணேஷ் , வரதராஜன் சென்றார்கள்.
ஆனால் வேந்தன் மட்டுமாக.. தன் அரசிக்கு தனியாக பார்க்க ஆரம்பித்தான். காரணம் அவளோ சாருலதாவிற்கு பார்த்துக் கொண்டுயிருந்தாள்.
” அக்கா எல்லாம் ஒன்னா.. ஜோடி ஜோடியா பார்க்குறாங்க. மாமா மட்டும் தனியா பார்க்குறார். வாங்க எனக்கு அப்புறம் பார்க்கலாம். ” பாவமாக கேட்க..
அவளை முறைத்து.. ” சாலா.. நான் தனு கூட நின்னாலும் ஒரு பிரோஜனமும் இல்ல. அவருக்கு பிடித்ததை.. எத்தனை எடுக்கனும் கணக்கு இல்லாம எடுப்பாரு. நான் டையடாகி தூங்கிடுவேன். அப்புறம் அக்கா, அண்ணியெல்லாம் ஏன்டா உன்கூட இருந்தா மட்டும் எப்ப பார்த்தாலும் தூங்கிக்கிடே இருக்கானு?. தனுவ தான் ஒட்டுவாங்க. “
தன்னவனின் எடுக்கும் அழகை தனுமாமா என கொஞ்சல் பார்வை பார்த்துவிட்டு.. சாருவிடம் கூற.. அவளும் இதனை கேட்டு சிரித்து.. உண்மைதான் என நேற்று நைட் யோகா ஒட்டியதை கூறி.. என அவளுக்கு சில உடைகளை தேர்ந்தெடுத்து.. போட்டு பார்த்து என..
‘ லவெண்டர் நிற சேலை, லைட்ஆரஞ்சு பிளவுஸ். கத்தரிப்பூ நிற சேலை, கிளிப்பச்சை நிற பாடர் மற்றும் பிளவுஸ். முன்றாவதாக.. அடர்பச்சை நிற பிளவுஸ், லைட் ஆரஞ்சு தாவணி, பிங்நிற பாவாடை அதன் அடியில் மூன்றுநிறமும் கலந்து பெரியபாடர் இருப்பது போலனா லெஹங்காவை ‘ எடுத்துயிருந்தாள்.
அதை ஒருமுறை தனுவை அழைத்து ஓகேயா என கேட்டு.. அவளின் கன்னத்தை பார்த்து ‘ ஓகே சூப்பர் ‘ என்ற பாராட்டு முத்தத்தை கண்களாலே பெற்றாள்.
திருமண ஜோடிகள் முதலில் ஜோடியாக பார்க்க ஆரம்பித்து.. இப்போது ஆண்கள், பெண்கள் என பிரிந்து நின்று எடுத்துக் கொண்டுயிருந்தார்கள். அப்போதும் தனி ஒருவனாய் நின்றுயிருந்தான் வேந்தன்.
வேந்தன் தன்னவள் உடலின் நிறத்திற்கும், அவளுக்கு பிடித்த நிறம், புதிய வரவாக, அவளிடம் இருக்கும் கலராக இருந்தால்.. புதிய டிசைன், புதுவிதமான கலர் பொருத்தம், துணியின் மென்மை, விலை என பார்த்து பார்த்து எடுத்தான்.
அதனை பார்த்த ஆண்களில் அஸ்வின்.. ” அப்பாடி!. இவங்களுக்கு ஒருசேலை எடுப்பதற்கு உள்ளேயே.. காலையில் சாப்பிட்ட சாப்பாடு செரித்துவிடும் போல.. ஆனா வேந்தன் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக ஒவ்வென்றையும் பார்த்து எடுக்குறாறு?. ”
” மாமா உங்களுக்கு தெரியாது இல்ல.. இவங்களோட உறுதி பிறகு எழிலரசி போடும் சுடி, சேலையெல்லாம் வேந்தன் மாமா.. தானே தேர்ந்தெடுத்து வாங்கியதுதான். அதுமட்டுமில்ல அவர் பல வருடமா எழிலரசிக்காக நிறைய சேலை, நகை வாங்கியிருக்காறா… தர்ஷனி வாரம் ஒரு தகவலா எனக்கு சொல்லுவா. ” ஓ.. என புன்னகையுடன் கேட்டுக்கொண்டே மீண்டும் பார்க்க ஆரம்பித்து..
நந்தினி- அஸ்வின் சிவப்பு சேலை, கடல்நீலம் பாடர் மற்றும் பிளவுஸூம், சிவப்பு முள்ளங்கி நிறம் மற்றும் தங்கநிறத்தினால் ஆனா லெஹங்காவும்.
கமலேஷ்- வசுந்தரா ஆரஞ்சு மற்றும் பிங் கலந்த தங்க நிற பாடர் பச்சைநிற பிளவுஸூம், கடல் நிற பச்சை, நீலம் கலந்த லெஹங்காவும்.
கதிரவன்-பிரியதர்ஷினி அடர்பச்சை சேலை, சிவப்புநிற பாடர் மற்றும் பிளவுஸூம், மஞ்சள் நிற சேலை தங்கநிற பாடர். பிங்நிற பிளவுஸ்.
மேகா- பார்த்திபன் சிவப்புநிற சேலை, கத்தரிப்பூ நிற பாடர் மற்றும் பிளவுஸூம், அடர்நீலம் மற்றும் லைட்பிங் லெஹங்காவும்.
அவர்களின் நாளிற்கு, மற்ற தேவைக்கும் என அனைவருமே அடுத்த சிலமணிநேரத்தில்.. தேவையான புடவைகளை தேர்ந்தெடுத்து முடித்திருந்தார்கள். ஆனால் பில்லை பார்த்துதான் அதிர்ந்து நின்றார்கள்.
” வேந்தன் என்ன விலையெல்லாம் பாதியா இருக்கு?. தள்ளுபடி கூட எதுவும் இல்லயே? ” சுற்றி பார்த்துவிட்டு கணேஷ் கேட்க.. அவனும் புரியாமல் பார்த்து..
சற்று தள்ளி நின்று போன் செய்ய போகும் வேலையில்.. அவர்களின் முன்னால் வந்த மேனேஜர்.. ” வேந்தன் சார்.. சந்தோஷ் சார் தான் விலைய பாதியா போட சொன்னார். அவர் முக்கியமான வேலையா மீட்டிங்கில் இருக்காறா. உங்களை நகை கடையில் வந்து பார்ப்பதா சொன்னார்.. உங்களிடம் தெரிவித்து இருப்பாத சொன்னார். “
என்ன?. போன்னை பார்க்கசேஜ் வந்துயிருந்தது. வேந்தன் தன்னவளின் நினைவில்.. சேலையின் உலகத்தில் இருந்த வேலையில் போன்னை பார்க்கவில்லை என எண்ணியபடி.. அனுப்பிய செய்தியை பார்த்தான். அதில் கூடவே இன்னொரு செய்தியும்.. புரியாமல் பார்த்து பின் வேந்தன் மாமாவிடம் வந்தான்.
” மாமா சந்தோஷ் தான் இப்படி சொல்லியிருக்கான். நம்ம இப்ப பே பண்ணிட்டு போகலாம். என்னவென்று பின்ன பார்த்துக்கலாம்.” சரி என தலையசைத்து.. அவனே அனைத்திற்கும் பில்பே செய்தான்.
‘ என்னடா நீ?. ‘ என இவரும் பார்க்க..
” அவசரத்தில் வந்ததால உங்க அக்கவுண்டில் கம்மியாதானே இருக்கும். அடுத்து அவங்க ஆசைபட்ட நகை எடுக்க.. பணம் எவ்வளவு வருனு சொல்லமுடியாது. கணக்கு பிறகு பார்த்துக்கலாம். நகை எடுக்க அதிக நேரம் வேண்டும். கிளம்பலாம். ” இருவரையும் பார்த்து கூறிவிட்டு.. அவன் தன்னவளிடம் வந்தான்.
அவன் சொல்வது உண்மைதான். பேங்க் சென்று போட்டு விடச்சொல்லாம் என நினைத்தார்கள். குமரேசன் நாளையில் இருந்து தான் லிவ் போடமுடியும் என ஸ்கூல் சென்றுயிருக்க.. இருவரின் கடையில் ஆள் இல்லை, வேந்தனிடம் கூற.. கேட்க சற்று தயக்கம் வேற.. என்பதால்.. பார்த்து தான் எடுக்க வேண்டும் என நினைத்துயிருந்தார்கள்.
பெண்களுக்கு என்று நகை வாங்க பணத்திற்கும் ஒன்றும் குறை இல்லை தான். ஆனால் பணத்தை எப்போதும் கை மற்றும் வங்கியில் இல்லாமல் பிஸ்னஸ் ரொடேஷனில் இருக்கும். அதனை புரிந்து கூறி சென்றதில் நிம்மதியாக உணர்ந்தார்கள்.
அதன்பின் சேலைகளின் பிளவுஸ் டிசைன் பெண்கள் பார்த்துக் கொண்டுயிருக்க.. ஆண்கள் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள்.. அவர்களுடன் எழிலரசியும் இருந்தாள்.
” எழில் ஒழுங்கா நீ அங்க போயிட்டு.. வேந்தனை இங்க வந்து அவங்களிடம் டீடைல்ஸ் கொடுக்க சொல்லு. தாரா திட்டி திட்டியே என் காதே வலிக்குது. நான் லதாவிற்கு மட்டும் எப்பயாவது ஏதாவது எடுத்துயிருக்கேன். தனியாவே உனக்கு சேலை எடுத்தான் சரி. பிளவுஸ் டிசைன் கூட அவனே. முடியல. ” கமலேஷ் வசுந்தராவை பார்க்காமல் தலைகுனிந்துக் கொள்ள.. அவனின் நிலையில்தான் மற்றவர்கள் கூட இருந்தார்கள்.
சிரிப்புடன்.. ” நான் போனா அவ்வளவு தான். தனு அடிக்காத குறையா என்னைய பார்ப்பாரு. ” எங்கே என அவளுக்கு மட்டுமே தெரியும். ” சரி வாங்க.. பக்கத்தில் ஜீஸ் கடை இருந்தது. நாம்ம அங்க போகலாம். “
” ஹேய் நீ எங்களை வேந்தனிடம் அடிவாங்க வைத்துவிடுவ போல. யாரும் வெளியில் இருப்பதை கல்யாணம் முடியும் வரை சாப்பிடக்கூடாதுனு. அவர் கட்டளையே போட்டுயிருக்கார். அதிலும் நீ ஒழுங்கா சாப்பிட மாட்டனு.. நீ எங்களை அடித்து கேட்டா கூட ஜூஸ், ஸ்விட் வாங்கி கொடுக்ககூடாது.. சொல்லியிருக்கார். அடுத்து சாப்பாடுதான். முடிந்து விட்டதுனு நினைக்கிறேன். ” அஸ்வின், பார்த்திபன் பெண்களிடம் சொல்ல.. எழிலரசி இன்பாவை பாவமாக பார்த்தாள்.
” நீ உங்க அண்ணாவை என்ன பாவமா பார்த்தாலும்.. யாரும் உனக்கு வாங்கி தரமாட்டாங்க. ” தன்னவளின் இதழை அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு கூற..
அவனின் பார்வையை உணர்ந்து.. ‘ போடா ‘ என அமைதியாக இருந்தாள்.
அவனும் ‘ முடியாது போடி ‘ மெல்லிய புன்னகையுடன் தன்னவளின் அருகில் அமர்ந்தான்.
பின் சில நிமிடங்களில் அனைவரும் வர.. அடுத்து புடவை கடையின் பக்கத்தில் இருக்கும் தங்கும்விடுதியின் ஹோட்டலில்.. இவர்களுக்கு என்று தனியாக உணவுகளுடன் முன்பதிவு செய்யப்பட்டு.. உணவும் பார்த்து பார்த்து பறிமாறபட்டு சாப்பிட்ட உடன் அண்ணாசாலையில் உள்ள நகை கடைக்கு சிலரும்..
நகை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத பெண்கள் மற்றும் இன்பா, கணேஷ் ஆகியோர்.. தீடீர் கல்யாணத்திற்காக என்று குழந்தைகள், தங்களுக்கு, பெரியவர்களுக்கு என நலுங்கு, அழைப்பு என அந்நேரத்திற்கு ஏற்றார் போலான உடைகளை எடுக்க உஸ்மான் ரோடு செல்ல.. இவர்களுடன் பாதுகாப்பிற்காக இன்னும் இருவர் உடன் சென்றுயிருந்தார்கள்.
” முயல்குட்டி இங்க தான் உனக்கு முதன்முதலில் நகை வாங்கினேன். ” அப்படியா என அக்கடையை பார்க்க.. அதுவும் பிரதேகமான டிசைன்கள் மட்டுமே கிடைக்க கூடிய கடையாக இருந்தது.
தர்ஷினி வீட்டில்.. மற்றவர்களை போல சிறிது நகைகளாக, பணமாக இல்லாமல் காயின்னாக தான் சேமித்து வைத்திருக்க.. ” தனு தர்ஷினிக்கு நிறைய நகை வாங்கனுமே.. இங்க தங்க விலைய விட நகை செய்ய, சேதாரம் அதிகமா இருக்கும் போல. “
” ஆமாம். இங்க இருக்க நகைகள் எல்லாம் ஒருத்தர் போடுவது போல மற்றவர் போடக்கூடாது என்று.. ஒருதடவை டிசைன் செய்து விற்பதுதான். அதே மாதிரி கிடைக்காது. வேண்டும் என்றால் அதில் சிறிய மாற்றங்கள் செய்து தான் கொடுப்பாங்க. அதனால இங்க செய்கூலி, சேதாரம் ஜாஸ்தியா தான் இருக்கும்.
சிம்பிபுளா போடுவது போல.. எல்லாம் கம்மியா இருக்க நகைங்க வேற கடையில் இருந்து.. எடுத்துட்டு வரச் சொல்லியிருக்கேன். அதில் பார்த்து எடுக்கலாம். “
வேந்தன் அரசிக்கு எடுக்கும் அதே நேரத்தில் மற்ற ஆண்கள் தன் துணைகளுக்கு தங்களின் விருப்பாமான நகைகளை எடுத்துவிட்டு தனித்தனியாக பில் போட செல்ல.. அதை மகிழ்வுடன் வரதராஜன் பார்த்த படியே.. மகன், மருமகனிற்கு ஏற்றார்போல் நகைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்.
” அப்படியேல்லாம் இங்க எடுத்துட்டு வருவாங்களா?. “ தன்னவளிற்கு நகை பார்த்துக்கொண்டே.. ” இங்க வரமாட்டாங்க தான். ஆனா நகை பார்க்க வேண்டும் என்றால் வீட்டிற்கு போய் காண்பிப்பாங்க. நமக்கு நேரம் கம்மியா இருப்பதால் இங்க வந்து காண்பிப்பது போல ஏற்பாடு செய்துயிருக்காங்க.” சரி என தலையசைத்து..
தன்னவனின் தோள் சாயப்போக.. அந்த இடமே ஏற்கனவே அமைதி.. இப்போது ஆட்களே இல்லாதது போல முற்றிலும் அமைதியாக மாறிவிட்டது. ஏனெனில் வந்தவர்கள் அப்படி.