எழிலரசி எதையும் உணரவில்லை.. அதிர்ச்சியுடன் இருந்தாள்.
பின்…” ஒரு நிமிடம்.. எப்படி என் பேர்?. தனு அப்படி சொல்லலையே?. நீங்க நாலுபேர் சேர்ந்து.. ஆரம்பித்த கம்பெனி மட்டும்தான் சொன்னார். “
” ஆமாம். ஆனா இதை ஆரம்பிக்க காரணமாக இருந்தது நீங்க. நீங்க பிடிக்கும் என்று சொன்ன ஸ்விட், பூக்களும் தான். ” எழிலரசி புரியாமல் முழிக்க..
” வேந்தன் நீ சொன்னா இன்னும் நல்லாயிருக்கும். ” சரி என தலையசைத்தவன்.
முகம் மகிழ்வுடன்.. ” அரசி நான் நீ வலியில் அழும்போது.. வலி தெரியாம இருக்க.. நான் பேச்சுக்கொடுக்கும் போது.. உனக்கு ஐஸ்கீரிம், சாக்லேட் பிடிக்காது.. வீட்டில் செய்யும், இல்ல கெமிக்கல் கலக்காத கையால் செய்யுற ஸ்விட் தான்.. ரொம்ப பிடிக்கும். மல்லிகை, ஜாதி பூ பிடிக்கும் சில பூக்களை சொன்ன.
அதை வைத்துதான் நாங்க பிஸ்னஸ் ஆரம்பிக்க யோசிக்கும்போது.. நான் தான் கெமிக்கல் கலக்காத.. இயற்கையா பயன்படுத்தும் பொருட்களையும், பூக்கள் பயன்படுத்தி..
சோப் முதல் நாம்ம ரெகுலரா பயன்படுத்துவது, முகம் அழகுபடுத்துவது, வாசனை திரவியம் போன்ற ப்ராடக்ட் தயாரிக்கலாம் சொன்னேன்.
அதன்பிறகு அவற்றை செய்ய தேவையான டீடைலஸ் நான் கொடுத்தேன். அவங்க தயாரித்து.. விற்பனை செய்தாங்க. நான் பணம் முதலீடு ரொம்ப கம்மிய தான் செய்தேன்.
நான் கொடுத்த ப்ராடக்டின் ரைட்ஸ், கொஞ்சம் ஷேர்.. நால்வரில் முதலானவன்.. மற்றும் பின்ன என்னைய தான் ப்ராடக்ட் பெயர் வைக்க சொன்னாங்க. அதான் உன் பெயரோட என் பெயரில் இருக்கும் முதல் எழுத்து சேர்த்து சொன்னேன்.
ஆனா இவங்களுக்கு இப்ப நான் வேலைவிட்டு இங்க வரும் போதுதான் உன்னைய பற்றியும்.. ப்ராடக்ட் பெயர் விளக்கம் தெரியும். அதுவரைக்கும் என் பெயரில் தான் இருந்தது. இப்ப தானே மாற்றியிருக்கு.. அதனாலதான் உன்னிடம் முதலில் சொல்லல. ” தன்னவளிடம் தன் விளக்கத்தை தெரிவித்தான்.
எதிரில் இருந்த மூவரும்.. வேந்தன் தன் காதலை கூறிவிட்டான்.. திருமணம் விரைவில் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவன் கூறும்போதே இதை எழிலரசியிடம் தெரிவிக்க வேண்டும் என நினைத்திருக்க..
அதற்கு அஸ்வின் வழிவகை செய்து.. தங்களின் கடமையை நிறைவேறிய திருப்தியுடன் அவர்கள் மூவரும் இருக்க.. மற்றவர்கள் வேந்தனின் காதலை வியப்புடன் பார்த்தனர்.
அதற்கு காரணமானவள் தன்னவனின் ஈடுஇணையற்ற காதலில் அனைவரையும் மறந்து.. அவனின் கன்னத்தை பிடித்திழுக்க செல்ல.. தன் அரசியை தெரிந்து.. அவன் யாரும் உணரும் முன்.. முயல்குட்டி.. என முறைத்து பின்னால் தலை கொண்டு போனான்.
ஆனால் இதை எதிரில் இருந்தவர்கள் கண்டுக்கொண்டு.. புன்னகையுடன்.. ” டேய். இதுக்காகதான் இப்பெல்லாம் தாடியே வைப்பது இல்லையா?. ” அதனை கேட்ட எழிலரசி நாணத்தில் சிவக்க..
அவளின் இயற்கையான வெக்கச்சிவப்பை பார்த்ததும்.. ” வேந்தன் நம்ம ப்ராடக்ட் நேச்சர் போட்டு இருக்கும் அழகவிட.. எழிலரசி முகம் ரொம்ப அழகாக இருக்குடா. அது எப்படி முகம் மாறுதுனு டீலைட்ஸ்அனுப்பிவைடா.. சும்மா சேலஸ் பிச்சுட்டு போகும். ” அவளை ஓட்டி.. என மேலும் சில நிமிடங்கள் பேசியபின்..
” சரி வேந்தன் இப்ப கல்யாண ஏற்பாடு பற்றி பேச வரேன். எழிலரசி சம்பந்தபட்டது தவிர எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. பத்திரிகை நாளைக்கு மதியம் வந்துவிடும். இரண்டுபேர் வீட்டிலும் டெக்கரேஷன் பண்ண வெள்ளிக்கிழமை காலையில் வருவாங்க.
கோயில், ரிசப்ஷன் தேவையானது எல்லாம் லிஸ்ட் பண்ணியாச்சு. உனக்கு மெயில் செய்துயிருக்கேன். நீங்க எல்லாம் சரி பார்த்துட்டு.. சேஞ்சஸ் இருந்தா சொல்லுங்க. நாளைக்கு எல்லாம் புக் செய்திடலாம். “
வேந்தனிடம் அருட்செல்வம் ஏதோ கேட்க.. கேட்டபின்.. ” சந்தோஷ் வரும் விருந்தாளிகளுக்கு ரூம்.. ” முடிக்கும் முன்..
” ம்.. ஹவ்வேவில் இருக்க ஸ்டார் ஹோட்டலில் , டூரிஸ்ட் வரவங்க தங்கும் பிளாட் இருக்கு.. அதிலும் முதல்நாள், அடுத்தநாள் சேர்ந்து மூனு நாளைக்கு பிளாக் பண்ணியாச்சு. ”
” எதுக்கு மூனுநாளைக்கு இரண்டு நாள் போதுமே. ”
” ரிசெப்ஷன் வரவங்க.. எப்படி கிளப்புவாங்கனு நாம்ம சொல்ல முடியாது. அதான். வேந்தன் சாருலதா.. ஏதோ கேட்க நினைக்கிறாங்க. ” வேந்தன் திரும்பி கேட்க..
” மாமா நாங்க யாரும் ரிசெப்ஷன் போடுவது போல எதுவும் எடுக்கல. கல்யாணத்திற்கு பிளவுஸ் டிசைன் யோகா அண்ணி முதல் யாரும் பண்ணல?. ” இது தேவைதானா என கூறுவாறோ என.. இரண்டாவதை யோசித்து கூற..
புன்னகையுடன் பெண்களை பார்த்துவிட்டு.. நண்பர்களை பார்த்தான்.
உடனே.. ” வேந்தன்.. நாளைக்கு யார்யெல்லாம் ப்ரீயா இருப்பீங்களோ?. சொல்லுங்க. நாளை காலையில் பிளைட்டில் புக் செய்து விடுகிறேன். நீங்க இங்க வாங்க.. உங்களுக்கு தேவையானது எடுத்துட்டு, நைட் கிளம்பிடலாம்.
நீங்க கல்யாணத்திற்கு வாங்கிய சேலை பிளவுஸ் கொடுத்தா.. எல்லாமே மூன்று நாளில் அனுப்பிவிடுவாங்க. ” ராகேஷ் கூற..
இதில் ரோஹித் எழிலரசி அவர்களிடம் ஏதோ கேட்கலாமா?? வேண்டாமா?. என பார்ப்பதை பார்த்தவன்..
புன்னகையுடன்.. ” மேடம் நீங்க மட்டும் எங்களை என்ன வேணாலும்?. எது வேண்டும் என்றாலும் கேட்கலாம். ”
” நிஜமா என்ன வேண்ணாலும் மா?. ” அவளின் முகத்தில் தோன்றிய பாவனையில்..
ராகேஷ்.. ” வேந்தன் ஏன் உங்களை மு.. ” அவள் முறைக்க..
” ம்.. ஏன் கூப்பிடுறானு உங்க முகத்தை பார்த்தபின் புரியுது. “
வேந்தனும் அதை பார்த்து மகிழ்ந்து.. ‘ என்ன ‘ என்று தன்னவளை பார்த்தான்.
மற்றவர்களையும்.. எதிரில் இருந்தவர்களை பார்த்துவிட்டு.. ” அது ரிசெப்ஷன் ஸ்டேஜ் டெக்கரேசன் பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?. ” மூவரும் அவள் கூறியது புரியாமல் வேந்தனை பார்க்க..
” அரசி.. என்னவென்று தெளிவா சொல்லி.. கேளு. அதை பொறுத்துதான் அவங்க சொல்லமுடியும். ”
அவள் தயங்க.. அவள் ஏதோ வீட்டில் உள்ளவர்களை பற்றி அவர்களிடம் கூறலாமா?. வேண்டாம்மா?. என தயங்குவது போல இருக்க..
” அரசி அவங்களுக்கு நம்ம வீட்டை பற்றி எல்லாம் தெரியும். நீ அவங்களிடமே.. இல்ல அவங்க முன்னாடி நீ சொல்லி.. அவங்க கேட்டு.. உனக்கு பதில் சொன்னாதான்.. உனக்கும் புரியும். ” சரி என தலையசைக்க..
” தனு நமக்கு கோயிலில் காலையில் நடக்கும் கல்யாணம்!. அதன்பின்னான சடங்குகள் செய்யனு.. எப்படியும் எட்டு மணிக்கு முடிந்துவிடும்.
அதன்பிறகு நல்லநேரத்தில் அஸ்வின் –நந்தினி அக்காக்கு காலையில் கல்யாண ஸ்டேஜ் டெக்கரேசன் செய்து.. எல்லோர் முன்ன தாலி செயினை போட்டுவிட்டு.. கல்யாண சடங்கை செய்யலான செய்யாலாம்.. இல்ல ரிசப்ஷனை அப்ப வைக்கலாமா?. “
பெரியவர்களுக்கு.. நடந்த திருமணத்தின் பிரச்சனையால் குறித்த நாள் முன்னதாக நடைபெற வேண்டும் என்று கூறியதயே.. இன்னும் மகிழவா?. வருந்தபடவா?. என தெரியா நிலையில் இருந்தவர்கள்..
இன்று முடிந்தவர்களை பற்றி யோசிக்கவோ இல்லை. அதனால் இதனை ஆனந்தம் மற்றும் அதிர்ந்தாலும்.. ஏன்?. என புரியாமலும் எழிலரசியை பார்க்க..
அதை புரிந்தவள்.. ” அது வந்து நாம்ம கல்யாணத்திற்கு அதிகாலை என்பதால் கோயிலுக்கு சொந்தகாரங்க மட்டும்தான் வருவாங்க. இங்க இருப்பவர்கள் ஈவினிங் ரிசெப்ஷன் என்பதால் வரமாட்டாங்க. நாம்ம கல்யாணம் முடிந்து வீட்டிற்குதான் போவோம்.
அதனால இவங்க கல்யாணத்தை நமக்கு முன்னாடியே.. இவங்க இரண்டுபேரையும் கல்யாணமான தம்பதிகளா.. இங்க இருப்பவர்களுக்கு தெரியபடுத்தினா.. கணேஷ் சித்தாப்பாக்கு நமக்கு முடிந்து பண்ணுவதை விட. அப்ப இன்னும் அதிகமா திருப்தியா இருக்கும்.
இவங்க கல்யாணம் இந்நேரம்வரை அதிகமா யாருக்கும் தெரியவாய்ப்பு இல்ல. அதனால சாருலதாவிற்கும்.. அவர் வருத்தப்படுவது போல எந்த பிரச்சனையும் வராது..
இப்போதில் இருந்தே என் தனுமாமா மேல யாருக்கும் எந்த மனகுறையும் இல்லமா.. எல்லா வேலைகளையும் செய்வாங்க.. ஈவினிங் நம்ம கல்யாண ரிசெப்ஷன் இன்னும் நிறைவா இருக்கும் இல்ல.
அதான் சித்தாப்பா, அத்தைங்க எப்படி விருப்பினாங்களோ அது மாதிரி கல்யாண டெக்கரேசன் முதல் எல்லாம் செய்து.. அதை மாற்றி.. நமக்கு ரிசப்ஷன் டெக்கரேசன் பண்ண எவ்வளவு நேரம் ஆகுனு?. கேட்டேன். ” அனைவருக்கும் யோசித்து கூற..
கல்யாணம் போல் சடங்கு முடியுமா என்று தெரியவில்லை.. ஆனால் யாருக்கும் தனுமாமா மீதும்.. தங்கள் கல்யாண ஏற்பாடு செய்யும் வேலைகள் மற்றும் தங்கள் திருமணத்தில் சிறு குறைகூட இருக்ககூடாது என தன் எண்ணத்தை கேட்டாள் எழிலரசி.
இதனை கேட்டவர்கள் அனைவரும் அவளின் இத்தகைய எண்ணத்தில் வாய்யடைத்து ஆனந்தத்தில் மகிழ.. அதில் முதலில் தன்னவளை சற்றும் யோசிக்கமால் அவளின் தோள் அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
ஆனால் இவளின் இத்தகைய எண்ணத்தால்.. பல மாற்றங்கள் அவ்விடத்தில் நிகழ்ந்தது.
எழிலரசி தன்னவன்.. தன் மீது கொண்ட காதலால்.. தன் வீட்டின் நிகழ்வுகளை கவனிக்காமல் இருந்ததின் விளைவால்.. பலர் மறைமுகமாக மனதளவில் பாதிக்கப் பட்டுவிட்டனர்.
முடிந்தளவு அதை சரியும் வழியிருந்தால் மாற்ற முடியுமா?. என தன் திருமணத்தின் நடுவில் செய்ய வேண்டும் என்று தன் எண்ணத்தை கூற..
தன்னவளின் தன்மீது இருக்கும் கொள்ளை அழகு காதலை எண்ணி.. எவரையும் உணரமால்.. உன்னுடைய எண்ணத்திற்கு தான் என்றும் துணை நிற்பேன் என்ற சம்மதம்.. மற்றும் மகிழ்வை தெரிவிக்கும் விதமாக.. சிறிய கலங்களுடன் அவளுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து எடுத்தான்.
இதனை மற்றவர்களில் சிலர் மட்டுமே கவனித்து.. எதிரில் இருந்தவர்களும் பார்த்து இவர்களின் அன்பை எண்ணி வியப்பு, உவகை அடைந்தார்கள்.
தீடீர் என நாலு ஆண்மகன்கள் எழுந்து நின்று.. அதில் அஸ்வின் ” எழிலரசி கூறிய விஷயத்தை பற்றி நாங்க கொஞ்சம் பேசனும். “
வீடியோவில் இருந்த மூவரும்.. குடும்பம் விஷயம் என புரிந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.. உடனே சந்தோஷ் ” வேந்தன் நீங்க பேசுங்க. இருபது பிளைட் டிக்கெட் பிளாக் செய்து வைக்கச்சொல்லுறேன். எந்நேரம் ஆனாலும்.. எதுவாக இருந்தாலும் எங்களுக்கு கால் பண்ணு.
என்ன தேவை என்றாலும்.. அதை விரும்பும் விதமாக செய்திடலாம். ” கடைசியை எழிலரசியை பார்த்துக்கூறினான்.
மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. சரி. ” அனைத்திற்கும் ஒற்றை வார்த்தையில் பதில் கூறி வீடியோகால் கட் செய்து நால்வரையும் பார்த்தான்.
அஸ்வின் பெரியவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. ” வேந்தன் எனக்கு உங்க கல்யாணம் அன்று செய்வதில் விருப்பம் இல்ல. “
எழிலரசி கலங்கி.. ” ஏன் அண்ணா நடுவில் வைக்க பிடிக்கல.?. சித்தப்பா, அக்கா மீது இன்னும் கோபம் இருக்கா?. “
” ஹேய் எழில்குட்டி.. ” அருகில் வந்தவன்.. ” நீ நினைப்பது போல கோபம் இல்ல.. ஆனா வருத்தம் இருக்கு. அதெல்லாம் போக போக சரியாகிடும். நான் அவங்களுக்காக யோசிக்கும் உனக்காக தான்.. இப்ப நாங்க ஒரு முடிவு எடுத்துயிருக்கோம். “
மற்ற மூவரையும் பார்த்துவிட்டு.. ” நீ சொல்வது போல வைக்கலாம் தான். ஆனா அந்தநாள் உங்களுக்கு மட்டுமேயான நாளா இருக்காது. எங்களையும் சேர்த்து இருக்கும். அதில் விருப்பம் இல்ல. எங்களோட விருப்பம்.. அன்றைய நாள் உங்களுடைய நாள் மட்டுமா தான் இருக்கனும். அதேசமயம் உன் எண்ணமும், இருவர் பெற்றோர்களின் ஆசையும் நிறைவேற வேண்டும்.
அதான் வர வெள்ளிக்கிழமை காலையில் கோயிலில் கமலேஷ்–வசு, கதிரவன்– பிரியதர்ஷினி, மேகா– பார்த்திபன் கல்யாணம் முடித்துவிட்டு..
காலையிலேயே எங்களுக்கும், கமலேஷ்– வசுந்தராவிற்கு வரவேற்பு, மாலையில் கதிரவன்– பிரியதர்ஷினி, மேகா– பார்த்திபன் வைக்கலானு நினைக்கிறோம். “
பெரியவர்கள்.. இளையவர்களின் அடுக்கடுக்கான முடிவில் கோபமும், அதிர்வும் என இருக்க.. அதிலும் கூட சிலர் என்ன மேகா– பார்த்திபனா?. என குழம்பியும் பார்த்தார்கள்.
‘ இன்பாவின் முடிவின் பெயரில் தான்.. மேகா பார்த்திபனை திருமணம் செய்யப்போவது.
எழிலரசி விழுவதற்கு.. மேகாவும் ஒருகாரணம் என்றவுடன்..
கதிரவன், இன்பா அன்று நடந்தை விசாரிக்க.. அதில் மேகாவிற்கு இன்பாவின் வருத்தம் உள்ளது என அவள் கூறிய சில வருட விஷயங்களையும்.. தன் குறையாக அண்ணா கதிரவனிடம் பகிர..
இதற்கு பதில்.. இவரிடமும் வரவில்லை. அதற்கு மாற்றாக.. ” உனக்கு இன்பாவுடன் திருமணம் வேண்டுமா? வேண்டாம்மா ?. ” என்று மட்டும் வந்தது.
” பெரியவர்களின் விருப்பத்திற்கு.. நான் சரி சொன்னேன். மற்றபடி எனக்கு இதுநாள் வரை மாமா என்ற உறவு தவிர வேறு எண்ணம் வர.. இவரும் அதுக்கான சூழ்நிலைய கொடுக்கல. “
அந்நேரத்தில் பெரியவர்களை நினைத்து தான் மூவருக்கும் கோபம். தன் பிள்ளைகள் தங்கள் அருகிலேயே.. தன் சொந்தங்களுடன், சொத்துக்களுடன் இருக்க வேண்டும் என.. சில சமயங்களில் தங்கள் குழந்தைகளின் மனதை புரிந்துக் கொள்ளாமல்.. தங்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி.. பின் அதில் மனஸ்தாபம் ஏற்பட்டு.. பஞ்சாயத்தை வைக்க வேண்டியது. ‘
‘ மேகாவிற்கு இன்பாவுடனான திருமணத்திற்கு தான்.. ஜாதகம் பார்த்து.. வருடங்கள் தள்ளிப்போனது. இன்பாவை அவளுக்கு பிடிக்கவில்லை எனில் தங்கையின் திருமணம் பற்றி யோசிக்கும் போது.. மனதில் வந்தது.. இன்பாவின் வயதுடைய இன்னொரு மாமா.. தன்னவள் பிரியா என்ற பிரியதர்ஷினியின் அண்ணா பார்த்திபன்.
பார்த்திபன்.. ஹைராபாத்தில் அஸ்வின் வேலைபார்க்கும் கம்பெனியல் வேலை செய்கிறான்.
பின் அவனிடம் பேச.. பெரியவர்களிடம் பேச.. அவனின் ஒரே விருப்பம் தர்ஷினி- கதிரவன் திருமணம் ஒன்றாக நடக்கவேண்டும். ‘
‘ இன்பாவை பற்றி நன்கு தெரியும்.. திருமண எண்ணத்தை பற்றிய நினைக்கும் அளவிற்கு அவரின் நடவடிக்கை இருக்காது. ஏன் தன்வீட்டில் எல்லோரும் தன்னவர்களுடன் திருமணம் முடிந்தபின் தான்.. அவர்களிடம் அந்த எண்ணமே தோன்றும் என உறுதியாக தெரியுமாகையால்.. எதையும் யோசிக்காமல் சம்மதம் கூறிவிட்டான்.
மேகாவிடம் நேரடியாக அனைவர் முன்னிலையில் கேட்கப்பட்டு.. பார்த்திபனிடம் பேச வைத்து.. பின் பிடித்து அவள் சம்மதம் தெரிவித்து.. அனைவரும் எழிலரசி கல்யாணத்திற்கு அஸ்வின் வரும்போது.. எப்போது?. என பேசி முடிக்க வெடுக்க நினைக்க.. அவனாலே இவ்வாறு நடந்துவிட்டது. ‘
இதில் இன்பா வீட்டில் யாருக்கும் வருத்தம் இல்லை.. கல்யாணம் முடிந்து பிரச்சனை வருவதற்கு.. இப்போதே அறிந்து மாற்றிவிட்டதில் முழுதிருப்தியே. அவனிற்கு துணை வரும் வேலையில் வருவாள்!.. என மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். ‘
” உங்களுக்கு சரி. ஏன் மூன்று பேருக்கும் அவரசம். எங்க கல்யாணம் முடிந்து தானே கதிரவன் அண்ணா, பார்த்திபன் அண்ணாவிற்கு எப்போ?. என முடிவு எடுப்பதாக இருந்தது.
அதைவிட வசுந்தராவிற்கு உடனே?. ஏன் நான் வந்து ஏதாவது?. ” முடிக்கும் முன்..
தன்னவளை முறைத்து.. “அரசி.. என்ன பேசுறனு யோசித்து பேசு. எல்லாவற்றிக்கும்.. யார் என்ன செய்தாலும்?. பழிய உனக்கே போட்டுக்காத. இங்க யாரும் புரியமா, தெரியாம எதையும் செய்யமாட்டாங்க. அஸ்வின் சொல்ல வருவதை முழுசா கேளு. ” அவன் அதட்ட..
அவளிற்கு அவனின் அக்கறையான அதட்டல் கூட அழுகைய வரவழைத்தது.. அதற்கும் முறைத்தபடியே கண்ணீரை துடைத்துவிட்டு.. ” அஸ்வின் இவ இப்ப அழகையும் நிப்பாட்ட மாட்டா.. கேள்வி கேட்பதையும் நிப்பாட்ட மாட்டா. உங்க எல்லோர் முடிவ பெரியவங்களிடம் சொல்லுங்க. “
அஸ்வின் சரி என திரும்பி சொல்ல ஆரம்பிக்க.. தன் முயல்குட்டியை தோளில் சாய்த்துக்கொண்டு கூறுவதை கவனி என பார்த்தான்.
” வசுந்தராவிற்கு அடுத்து ப்ராஜெக்ட் மட்டும் தான் இருப்பதால்.. கொஞ்சம் நாள் முன்னாடியே.. இந்த செமஸ்டர் முடிந்தவுடனே.. நந்தினி திருமணத்தை சேர்த்தோ.. இல்ல அடுத்து கல்யாணம் செய்ய நினைத்துயிருந்து இருக்கான். ஆனா இப்ப அவங்க இருக்க மனநிலையில்.. தன்கூட இருந்தாதான் அவங்களுக்கு நல்லது என்று கமலேஷ் நினைக்கிறான்.
அதான் எழிலரசி நினைப்பதும் நிறைவேறும்.. நாங்க நினைப்பதும் நிறைவேறும் என்று இந்த முடிவு.
” எழிலரசி– வேந்தன் கல்யாணம் பத்திரிக்கை ரெடி பண்ணுவது.. ஒரே மாதிரிதான் இருக்கும். வைக்க போகவும்.. ” அவன் கூறிக்கொண்டுயிருக்கும் போதே..
தேவகி எழுந்து.. ” ஏன்டா கல்யாணத்திற்கு பண்ண.. பத்திரிகை அடித்து.. வைப்பதும் மட்டும் தான் இருக்கா. வேந்தன்– எழிலரசி கல்யாணத்திற்காகவது ஒருவாரம் இருக்கு.
அதில் பந்த கால் வைத்து, எல்லா சடங்கும் செய்ய நேரம் இருக்கு.
ஆனா மூனு கல்யாணம் நாலு நாளில் வைக்கலாம் சொல்லுற. துணி எடுக்க, நகை வாங்க, சடங்கு செய்ய, கூடவே நாலு வீட்டிலும் பெயிண்ட் அடுத்து வீட்டை ரெடி பண்ணும். ” அவர் சொல்லும் போதே மூச்சுவாங்க.
” அம்மா.. அதை பற்றி கவலை இல்ல. அதான் வேந்தன் இருக்காரு இல்ல. அவர் முயல்.. ” ஆரம்பிக்கும் போது..
” ஆஆஆ.. ” அலறலுடன் திரும்ப..
அங்கு எழிலரசி ‘ என்ன ‘ முறைப்புடன் பார்க்க.. ‘ ஏன் இந்த கொலவெறி?. ‘ என அவன் பார்க்க.. அனைத்தும் மறந்து இதனை சிலர் சிரிப்புடன் பார்த்தனர்.
அஸ்வின் கூறியதும் யோசனையில் இருந்த வேந்தன்.. தன் தனுவை தவிர யாரும் முயல்குட்டி கூற அனுமதி இல்லை என வேந்தனோடு சாய்ந்தவாறு.. அஸ்வின் முதுகில் கிள்ள..
அரசியின் செயலை புன்னகையுடன் பார்த்துவிட்டு.. ” பெரியம்மா.. எல்லாம் ரெடி செய்திடலாம். நாளைக்கு காலையில் அரசி வீட்டலயும், பெரிய மாமா வீட்டில் இருந்துட்டு முதலில் சொந்தங்களுக்கு துணிகள் வாங்க வேண்டும் லிஸ்ட் கொடுக்க. அதன் பின்ன அழைப்பிதழ் வைக்கவும் பிளான் பண்ணுங்க. உங்களுக்கு தேவையானதை சொன்னா.. நாங்க நாளைக்கு சென்னைக்கு போனும்.. அங்க கல்யாணத்திற்கு, ரிசெப்ஷன் தேவையான உடை, நகை எடுத்துட்டு வந்துவிடுவோம்.
செவ்வாய் காலையில் ஆள்வருவங்க. நாலுவீட்டிலும் ஒருநாளில் பெயிண்ட் முடித்து. புதன் கிழமை காலை ரெடியா இருக்கும். நாம்ம கோயில் போயிட்டு வந்து முகூர்ந்தகால் வைத்து எல்லா சடங்கையும் செய்ய ஆரம்பித்துவிடலாம். ஹோட்டல் புக் செய்வதை வியாழன், வெள்ளிக்கும்.. அங்கேயே இல்ல வேற இடத்தில் செய்திடலாம். ” எல்லோரையும் பார்த்த வண்ணம் கூறி முடிக்க.
” வேந்தா.. நீ சொல்லும் பிளான் ஓகேயா தான் இருக்கு. ஆனா நீ சொன்ன நேரத்தில் எல்லாம் முடியனும். நாம்ம நாலு ஜோடிக்கு சேர்ந்துனு அழைத்துட்டு.. எல்லாம் பாதி பாதியா இருந்தா நல்லாயிருக்காது.
மூன்று வீட்டில் அடுத்த கல்யாணம் எதுவும் இல்ல.. இதில் தவறவிட்டதை அதில் செய்யாலானு இருக்க. “
” மாமா.. இதை பண்ணப்போறவங்க எல்லாம் ஐந்தாயிரம், பத்தாயிரம் பேர் மேல வரவங்க விழாவை.. ஒரே நேரத்தில் எல்லாமே ஏற்பாடு செய்து செய்யறவங்க. அதனால உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். ”
ஈவெண்ட் ஆர்கனைஸ் கம்பெனி பெயரை கார்த்திக் மாமாவிடம் கூறி ராகவன் மாமாவிடம் காண்பிக்கும் படி கூறினான். சரி என தலையசைத்து கணேஷ், மாணிக்கம் , வரதராஜன் என சிலர் சேர்ந்து பார்த்தனர்.
” அந்த பசங்க எல்லோரிடமும் நல்லா பேசுறாங்க. நீ அவங்க வீட்டிற்கு போய்யிருக்கியா பா. ”
மெல்லிய புன்னகையுடம்.. ” இல்ல ப்பா. ”
” இல்லையா.. இத்தனை வருடத்தில் ஒருதடவை கூடவா அவங்க வீட்டுக்கு போகல?. ”
” இல்ல பெரியம்மா. அங்கயெல்லாம் ஒருதடவை போனா.. பின்ன நமக்கு சம்பந்தமே இல்லாத எல்லாத்துக்கும் கூப்பிடுவாங்க. அதனால எனக்கு அனுப்பும் வேலைகளை செய்திட்டு.. அதைபற்றி வீடியோகால் பார்த்து பேசுவதில் மட்டும்தான் அவங்களோட தொடர்பே இருக்கும். ”
கதிரவன் புன்னகையுடன்.. ” அண்ணா அது என்ன சம்பந்தமே இல்லாதது?. “சிலர் கேட்க நினைத்ததை அவன் கேட்க.. பதிலை எதிர்பார்த்து பெரியவர்கள் ஒரு முறைப்பு பார்வை செலுத்த..
புன்னகையுடன்.. ” டேய்.. நீ நினைப்பது இல்ல.. எனக்கு சம்பந்தம் இல்லாததுனா.. அவங்களோட அப்பா, அண்ணா இப்படி சுற்றியிருப்பங்க எல்லாம்.. நம்மள மாதிரி ஒரு ஆள்.. ஒன்று இல்ல இரண்டு பிஸ்னஸ் பண்ணுற ஆளுங்க கிடையாது. வெளிய தெரிந்து குறைந்து பத்து பண்ணுவாங்க. தெரியாம சைலட்பாட்னரா நிறைய இடத்தில் இருப்பாங்க.
எப்போதும் எதிலும் பிஸ்னஸ் மீட்டிங்.. இல்ல அந்த சம்பந்தபட்ட விழாவில் அதை பற்றி பேசிட்டுனு.. எப்போதும் அதே பிஸ்னஸ் மைன்செட்டில் தான் இருப்பாங்க. அவங்க கூப்பிட்டா.. மரியாதைக்காக போகனும். அந்த பிஸ்னஸ் பற்றி கொஞ்சமாவது அவங்களிடம் பேசனும்.. அப்பதான் நமக்கும் மரியாதை.
எனக்கு என் வேலை, கடைனு இதை கவனிக்கவே சரியா இருக்கும். இதில் எங்க மற்றதை பற்றி தெரிந்துக்கொள்ள. ” பெரியம்மா கவலையுடன் ஏதோ கேட்கவர..
அவர் முகத்தின் உணர்வை புரிந்து.. ” பெரியம்மா.. அப்ப ஒழுக்கா உடம்பை பார்த்துப்பியா?. இல்லையாடானு ?. தானே கேட்க வரீங்க?. ” ம் என தலையசைக்க..
தன்னவள் இதை கேட்கும்போது தான் கூறியது நினைவில் வந்து.. புன்னகையுடன்.. ” ம்.. அதெல்லாம் நல்லாவே பார்த்துப்பேன். பின்ன டாக்டர் கூட ஏற்பாடு பண்ண சொல்லுறேன். செக் பண்ணிங்கோங்க.
அழைப்பிதழ் கொடுக்க போக அண்ணா, மாமா யாரும் கார் ஒட்டவேண்டாம். டிரைவர் ஏற்பாடு பண்ணிக்கலாம். அப்புறம் பெயிண்ட் அடிக்கும் போது யாரும் இங்க இருக்கனும், எடுத்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல. நம்பிக்கையானவங்கள , எல்லாவற்றையும் அவங்களே எடுத்து வைத்து வைப்பதற்கும் சேர்த்து தான் ஆள் அனுப்புவாங்க.
ஒருவாரத்திற்கு மட்டும் கடைய உங்க பொறுப்பில் இருந்து வேலை செய்ய.. ஆள் வேண்டும் என்றாலும் அனுப்பு வாங்க. அக்கா, அண்ணி நாளைக்கு சென்னைக்கு வருவதாக இருந்தா.. குழந்தைகளை யார் பார்த்துக்கனு கவல வேண்டாம். அவங்களையும் கூட்டிடே போகலாம். பத்திரமாநாள் முழுவதும் பார்த்துக்கொள்ள இடமும், ஆளும் இருக்காங்க. ” சுற்று அனைவரிமும் ஒருகட்டளை, கருத்து என கூறிக்கொண்டுயிருக்க.. இதனை பார்த்து சிலர் சிரிக்க..
” என்ன சிரிப்பு உங்களுக்கு?. ”
” இல்ல ஏன் எழிலரசி.. உன்கூட இருக்கும்போது உடனே தூங்கிவிடுறானு.. இப்பதான் புரியிது. “
ஏன்?. என பார்க்க..
” இப்படி அவள பேசவிடமாம நீயே ஏதாவது பேசிட்டு இருப்பியோ?. ” அப்போது தான் ஒன்றை கவனித்து.. அனைவருமே மென் புன்னகை புரிய.
” அப்படியெல்லாம் இல்லையே. ” ரோசமாக கூற..
அப்படியா என எழிலரசியை காண்பிக்க.. அவள் தன்னவனின் தோள் சாய்ந்த அடுத்தசில நிமிடத்திலேயே உறங்கியிருந்தாள்.
முயல்குட்டி என செல்லமாக திட்டி புன்னகையுடன்.. ” அவளுக்கு பேச எதுவும் இல்லையென்றால் தூங்கிடுவா. சரி நீங்க யார் யார் சென்னைக்கு வரீங்கனு சொல்லிட்டு எல்லாம் கிளம்புங்க. காலையில் ஏழுமணிக்கு ரெடியா இருங்க. நாங்க சென்னைக்கு போவதற்கு உள்ள எனக்கு மெசேஜ் செய்துடுங்க. ” அடுத்து ஏதாவது தன்னை ஓட்டுவதற்குள் என.. அனைவரையும் கிளம்பும் வழியை பாருங்கள் என விரட்ட..
அஸ்வின் கூறியதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு.. அஸ்வினும் நந்தினியும் எதிர்எதிர் வீடுகளுக்கு செல்ல..
வேந்தனின் எழிலரசி.. பெற்றோர்கள் தவிர மற்றவர்கள்.. வேனில் வந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
” அப்பா இன்பா வந்து உங்களை விட்டுவிடுவான். ” அடுத்து கூறும்முன்..
வேந்தனின் காதல், செயல்கள், நடுவில் நடந்தவைகளை.. ஏற்காத.. பதியாத.. ஆனால் அவனால் மகளின் வருத்தம் மட்டும் ஆழப்பதிந்த சித்ரா..
” ஏன்டா நீ வீட்டிற்கு வந்து விடமாட்டியா?. ”
” எங்க கல்யாணம் முடிந்து.. நேரே அங்க தான் வருவோம். ”
‘ அதுவரை அந்த வீட்டிற்கு வரமாட்டேன். தன் அரசியுடன் திருமணம் முடிந்துதான் வருவேன். ‘ என்ற செய்தியும் அதில் அடங்கியிருந்தது.