எழிலரசி சில நொடிகள் அதிர்ந்து.. வதனம் முழுவதும் சிவந்து.. சிலிர்த்து.. அவனை மீண்டும் காண.. இன்று ஏனோ வெக்கம் எழுந்து.. தன்னவன் வருவதற்குள் வெளியே செல்ல.. சிலஅடிகள் எடுத்து வைத்துயிருப்பாள்.. அடுத்த நொடி வேகமாக இழுக்கப்பட்டு.. தன்னவனின் மார்பில் சாய்ந்து நின்றாள். அப்போதும் அவளால் தலைநிமிர்ந்து அவனை காணமுடியாமல்.. அவனின் இதயத்துடிப்பை கேட்டுக் கொண்டு அவனின் மார்பில் சாய்ந்திருந்தாள்.
” முயல்குட்டி இங்க பாரேன். ”
‘ முடியாது ‘ என மார்பில் இதழ் வைக்க.. ‘ போடி ‘ என நினைத்து.. அவளின் இடைபிடித்து தன் உயரத்திற்கு தூக்கி.. அவளின் செந்தாமரை இதழில் தன் இதழ் பதித்து.. தன்னவளிடம் இருக்கும் புத்துணர்ச்சியை.. இரவு தூங்காமல் களைத்து இருக்கும் தனக்கு.. இன்னும் சில மணிநேரங்கள் தானும் அவளை போல் இருக்க.. தன் முயல்குட்டியிடமிருந்தே.. தனக்கு தேவையானது வரை ஏற்றிக்கொண்ட பின்தான் விட்டான்.
அவளை தன் முகத்திற்கு நேரகாக அப்படி வைத்திருந்திருந்தவன்.. அவள் மூச்சு வாங்கி அவனிடம்‘ இறக்கி விடுடா. ‘ என முறைக்க. ‘ முடியாது முயல்குட்டி ‘ என பதில் பார்வை பார்த்தான்.
தன்னவனிடமிருந்து இன்று புதிதான தொடுகையை உணர்கிறாள். அது முன்பை விட அவஸ்வதைக்கு உள்ளாக்கியது.
அவனிடத்தில் இனி சைகையில் எடுபடாது போல என நினைத்து வாய்விட்டே.. ” தனு ஒரு மாதிரி இருக்குடா.. இறக்கி விடே. ” கண்களாலும் கொஞ்ச..
ஆனால் அவனிற்கோ.. தன் அரசியின் கன்னம், இதழ்கள் காட்டும் சிவப்பு.. முயல்குட்டியை, தன் அரசியை காதலியாக வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவித்த பின்..
இருவரின் மனம் தெளிவாக இருக்கும் நிலையில் கிடைத்திருக்கும் முதல் தருணம். அதனை சிறப்பிக்க நினைத்தவன்.. தனக்கு பிடித்த கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு.. நெற்றி, கண்கள், சொல்ல கோபம் கொள்ளும் மூக்கு என இதழ்பதித்து.. அவனின் கழுத்து மச்சத்தில் முத்தமிட்டு.. பின் கண்கள் மூடி தன் முத்தத்தை உணர்ந்து அவனின் கைகளில் அடங்கியிருந்தவளை.. மெதுமெதுவாக தரையில் கால் பதிக்கவைத்து.. அவளை திருப்பி விரிந்துயிருந்த கூந்தலை ஓதுக்கி.. முதுகில் மறைந்துயிருந்த மச்சத்தில் பல பல முத்தங்கள் கொடுத்து.. இறுதியாக தன்னவளின் கழுத்தில் தலைவைத்து.. அவளை பின்புறமாக தனக்குள் இழுத்து கட்டிக்கொண்டான்.
அவளோ நீர்சுழற்சியில் சிக்கி வெளிவந்தவள் போல.. வேகமான இதயத்துடிப்புடன் நின்றுயிருந்தாள். தன்னவளை நெருங்கி இறுக்கி பிடித்திருந்ததால்.. அவளவனும் அந்த துடிப்பை கேட்டான். ” முயல்குட்டி கொஞ்சம் ஓவரா முத்தம் கொடுத்துட்டனோ. எனக்கு.. ” அவன்முடிக்கும் முன்..
அவள் சட்டென்று திரும்பி.. அவனின் இதழ்களில் மென்முத்தம் கொடுத்து.. ” தனு மாமா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இந்த நாளா இன்னும் சிறப்பாக்கலாமா?. ” புன்னகையுடன் தன் எண்ணத்தை கூறிவிட்டு. அவள் மட்டும் அவர்களிடம் வந்தாள்.
மூன்று பேர் அவரவர் உலகத்தில் அமர்ந்திருக்க.. நான்கு ஜோடிகள் மும்மரமாக எதை தேர்த்தெடுக்க?. என இருக்க.. எங்குடா செல்ல என நினைத்தவளின் கண்களில் ஒன்று பட்டது.
‘ வாவ் ‘ கண்கள் மின்ன ஸ்விட்பாக்ஸை எடுத்து சாப்பிட்டு கொண்டே பெரியவர்களுக்கு ஏற்றார் போல இருந்த நகைகளை பார்த்துயிருக்க.. அப்போது அவளின் கண்முன்னே செடக்கிட்டு அழைக்கும் ஒலி கேட்டு இருப்பினாள்.
ராகேஷ், சந்தோஷ் நின்றுயிருக்க.. ராகேஷ்.. ” எழிலரசி இப்ப ஓகே ஆகியாச்சா?. ” அவள் பாதிகாலி செய்திருந்த.. ஸ்விடை ஒருபார்வை பார்த்தபடியே கேட்க..
மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. இங்க பெரியவங்க, குழந்தைங்களுக்கு என்று அதிகம் வாங்க வரமாட்டாங்களா?. ”
” ஏன் டிசைன்ஸ் கம்மியா இருக்கா?. ” பார்த்துக் கொண்டுயிருந்த நகைகளை பார்வையிட்டவாறே கேட்க..
எழிலரசி ‘ ஆம் ‘ என தலைசைக்க..
” எத்தனை பேருக்கு.. என்னென்ன வேண்டும் சொல்லு கொண்டு வரச்சொல்லுறேன். இல்ல நேரம் இருப்பதை பொறுத்து வேற கடை போகலாம். ”
யோசித்தவள்.. ” கொண்டுவர முடியும் என்றால் பெரியவங்க போடுவது போல.. ஒரே மாதிரி பத்து கிடைக்கும் மா?. ”
சந்தோஷ்.. ராகேஷை பார்க்க.. அவன் போன் செய்து கேட்க.. ” ம்.. கிடைக்கும் ஆனா இரண்டுநாள் ஆகுமா. நீங்க டிசைன் பார்த்து சொல்லுங்க. நான் வீட்டிற்கே கொண்டு வரச்சொல்லுறேன். ”
” ம்.. சரி. அண்ணியெல்லாம் சென்னையில் இல்லையா?. ” குழந்தைகளுக்கு என பார்த்தபடியேகேட்க..
அண்ணியா?. தர்ஷினி கூறியது ஞாபகம் வர.. ” இல்ல.. மூனுபேரும் பிரண்ட் மேரேஜ் பங்ஷனுக்காக லண்டன் போயிருக்காங்க. ஒருவாரம் ஆகும். ”
சரி என அவர்களிடம் தலையசைத்த படியே.. மீண்டும் நகை பார்த்து அதில் பிடித்ததை ராகேஷிடம் கேட்டு வாங்கி.. கையில் வைத்து பார்த்தாள்.
அதை பார்த்த இருவருக்கும்.. அன்று வேந்தனின் முகத்தில் இருந்தது போலான மகிழ்ச்சி, கனவு என கண்கள் புன்னகைக்க.. முகம் பிரகாஷமாக!. இருந்து.
” எழிலரசி இந்த நகைய யாருக்கு வாங்க பாக்குற?. ”
புன்னகை மாறாமல்.. ” தனுவோட மாமா, அக்காவிற்கு.. பெண் குழந்தை பிறந்துயிருக்கு. அதுக்கு வாங்கனும். அதற்கு முன்னால எங்க குழந்தைகளுக்கு வாங்க பார்க்குறேன். ” சாதாரணமாக கூற.. அவர்கள் அதிர்ந்து பார்க்க..
அவளோ.. ” ஏன் இப்படி பார்க்கிறீங்க?. உங்க பிரண்ட்டோட பிளான் எப்போதும் பல வருடத்திற்கும் சேர்த்துதான் இருக்கும். இப்ப அவர் கூட நானும் சேர்ந்துட்டுடேன். ” அவள் தங்கள் அடுத்த சில வருடத்தில் எப்படியிருக்க வேண்டும் என கூறியதை கூறினாள்.
” ம்.. எங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒன்னுகே பிளான் போடல. நீங்க மூனு.” ராகேஷ் புன்னகையுடன் கூற.. ஆனால் இருவருமே..
அன்று வேந்தன் ஒருவனின் காதலே.. அவனை தேடியே அவனவள் வந்தாள். இப்போது இருவரின் காதலும் சேர்ந்து.. அவர்களின் ஆசையும், எண்ணமும் கண்டிப்பாக நிறைவேறும் என ஆசிர்வாதம் வழங்கினர்.
தன்னவன் ஏன் இன்னும் வரவில்லை? என வரும் பாதையை மீதியிருக்கும் ஸ்விடை சாப்பிட்டுக்கொண்டே பார்க்க. அங்கு ‘ அப்பாடா ‘ என முகத்தை வைத்தும்.. காதை தேய்த்துவிட்டு வந்தான் அவளின் தனு.
வரும் அவனிடம் ‘ ஓகேயா ‘ என பார்க்க.. அவன் நேராக வரதராஜனை கண்காண்பிக்க.. அவள் திருப்பி பார்க்க.. அங்கு அவர் போனை காதலில் வைத்தபடி.. யாரிடமோ பேச முடியாமல் திணறி.. வேந்தனை ‘ ஏன்டா? ‘ என பார்த்திருக்க..
அவர் யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்? என புரிந்தும்.. அதைவிட அவர் பார்வை அவளுக்கு சிரிப்பை வரவழைத்து.. அருகில் வந்தவன்.. அவளை முறைத்து.. உட்கார வைத்தபடியே.. ” ஏன் நீன்னு பேசிட்டு இருக்கீங்க?. உட்கார வேண்டியது தானே. “
முன்பைவிட மிகதெளிவாக இருந்தது வேந்தனின் முகம். அதனை பார்த்து மகிழ்ந்து.. சந்தோஷ் சிரிப்புடனே.. ” டேய்.. எழிலரசி குழந்தைகளுக்காக டிசைன்ஸ் பார்த்துயிருந்தாங்க. அதான் கூட நின்னோம். ”
குழந்தைகளுக்காக என்றதில் அழுத்தி கூற.. எழிலரசி சிரிப்புடன் குனிந்து பார்க்க.. அவனிற்கு ‘ முயல்குட்டி சொல்லிட்டாளா ‘ என நினைத்து அவனிடமிருந்து புன்னகைமட்டும் வர..
இதற்குமேல் வேண்டாம் என.. ராகேஷ்.. ” எழிலரசிக்கு கால் சரியாகியிடுச்சு தானே?. ”
” ம்.. ஆகிடுச்சு தான். இரண்டுகாலும் அடிப்பட்டதால.. கொஞ்சம் கேர்புல்லா இருக்கலானு.. ரொம்ப நேரம் நீக்க விடுவதில்ல. ” அவர்கள் பேசிக் கொண்டுயிருக்கும் போதே..
வேந்தனை முறைத்தபடி கணேஷ் வந்தார். அவரின் பின்னால் உடை எடுக்க சென்றவர்கள் வந்துவிட்டனர்.
வேந்தன் அருகில் நின்று.. ” டேய்.. என்னடா நினைத்துக் கொண்டுயிருக்க. தீடிர் வந்து கல்யாணமாக போறவங்க. இன்பா, சாருலதா எல்லாம் இங்க இருக்கோம். அதுவும் ஹோட்டலில் இருக்கோம் என்று சொல்லுற. ” அவரின் அருகில் வந்தார் வரதராஜன்.
” அதான் சொன்னேனே.. சந்தோஷ் தான் இங்க இருந்து.. மணப்பெண்களுக்கு ஆன பேஷியல்.. ” முடிக்கும் முன்..
” இதை ஊரிலே பண்ணலாமே.. அந்த பையனிடம் சொல்லி புரிய வைக்க வேண்டியது தானே. ”
வரதராஜன் அவரின் முதுகில் தட்டி அழைத்து.. ” அந்த பையன் உங்க முன்னாடிதான் இருக்காரு. நீங்களே சொல்லிடுங்க. ”
என்ன ஒரு நொடி அதிர்ந்து.. அவர் முன்னால் இருந்தவரை அப்போதுதான் பார்த்து.. ஞாபகம் வந்து.. ” நான் வேந்தனின் மாமா கணேஷ். நீங்க இங்க இருக்கலானு சொன்னீங்க இல்ல.. அது சரிப்பட்டு வராது தம்பி. ”
சந்தோஷிற்கு வேந்தன் என்ன கூறினான்?. என்று தெரியாது.. ஆனால் எழிலரசியின் முடியாதா!. என்ற சோகமான பார்வை.. அவன் எதையும் யோசிக்கவில்லை.
” உங்களுக்கு ஹோட்டலில் தங்குவது தானே பிரச்சனை.. எங்க வீட்டில்.. ” அவன் கூறிக்கொண்டுயிருக்கும் போதே..
வேந்தனின் காதில் கமலேஷ் ஏதோ கூற.. ‘ அய்யோ இதை யோசிக்கவே இல்ல.. ‘ வேந்தனை முகத்தை கவனித்த சந்தோஷ் பேசுவதை நிறுத்திவிட்டான்.
அவனின் அருகில் சென்றவன்.. ” சாரிடா. யாரிடமும் கேட்காம அரசிக்காக ஒரு முடிவெடுத்தேன். அவங்க அம்மா, அப்பாவோட வீட்டில் இருக்கனும் நினைக்கிறாங்களா.. போகனும் சொல்லுறாங்க. ”
” சரி டா அவங்க எல்லாம் போகட்டும். நீங்க இரண்டுபேரும் இருங்க. ” சரி என தலையசைத்து..
” அங்கிள்.. நான் வேந்தனிடம் இருக்க முடியுமானு கேட்கதான் சொன்னேன். நீங்களும், தங்க போறவங்களும் வேண்டானு சொல்லிட்டீங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்க வீட்டிற்கே வந்து பேஷியல் வேற வேற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடுபவர்கள் நாளை காலைவருவாங்க. வேந்தன் எழிலரசி இங்க இருக்கட்டும். ” அதன் பின் ஏதோ கூறி சமாளித்து.. அவர்கள்இருப்பதற்கான சம்மதத்தை வாங்கினான்.
வேந்தன் எழிலரசிக்கு சில நகைகள் எடுக்க.. நண்பர்கள் மூவரும் மற்ற பெண்களுக்கும் சிறிய அளவிளான நகைகள்.. கல்யாண பரிசு நகைகளை கொடுத்து பின்.. உடை, நகைகளை சில பெட்டிகளில் அடுக்கி வைத்து எல்லாம் சரி பார்த்த பின்.. பாதுகாப்பிற்கு எல்லாம் ஏற்பாடு செய்த பின்.. நண்பர்கள் கிளம்பிவிட்டார்கள். பின் முன்பதிவு செய்யபட்ட ஹோட்டலில் சாப்பிட்டு.. எக்ஸ்பிரஸ்அவன்யூவில் தங்கள் பொழுதை கொண்டாட சொல்ல..
கணேஷ், வரதராஜன்.. கணவன் குழந்தைகளுடன் வரலாம் என அக்கா, அண்ணிகள் நகைகடையில் இருந்தபடியே தக்க பாதுகாப்புடன் விமானநிலையம் கிளம்பி இருக்க..
‘ இன்பன் சிலநாட்களாக தான் நிம்மதியாக உணர்த்தான். மேகாவிடம் அவன் எவ்வித எண்ணம், நடவடிக்கை இல்லையென்றாலும்.. அவள் நினைத்த, நடந்து கொண்ட விதத்திற்கு.. அவளின் மேல்சில சமயங்களில் முழுமையாக கோபமும் கொள்ளமுடியாமல், அன்பையும் காட்டா முடியாமல் திணறிக் கொண்டுயிருந்தான்.
தங்களின் திருமணம் முடிந்து எவ்வளவு தான்.. நாம் அவள் மேல் அன்பை செலுத்தினாலும்.. எங்கே எழிலரிசியை பற்றி பேசினால், செயல் செய்தால் பழையதை பற்றி பேசி.. செய்யும் நேரம் எல்லாம் சண்டைபிடிப்பாளோ?!. என்று அவளுடனான திருமணத்தை பற்றிய பயம் கூட வந்துயிருந்தது. இப்போது இருவருக்கும் மனதிருப்தி. ‘
‘ தனக்கென்று பிறந்தவளை பற்றி நினைக்கவே இருவருடங்கள் என முடிவு எடுத்துயிருக்கிறான். அவள் வந்தவுடன்.. தன் மாமா, தங்கையை போல் தங்களின் நிறை, குறைகளை ஏற்றும், காதல், ஊடல் சண்டைகளுமாக முழுமகிழ்வுடன் வாழ்வோம்.
அதுவரை தன் மனம்.. எந்தவித நெருக்கடியும் இல்லாமல்.. தனக்கு, தன் அக்கா, தங்கை, குடும்பத்தினருக்கு.. அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற மனநிறைவுடன்..
சாருலதா சிறு பெண்ணாக இருந்து.. யாரும் அந்நேரத்தில் யோசிக்காத நினைக்காத வேந்தன், எழிலரசியின் அன்பிற்காக.. நேற்று சிலநொடிகள் தாமத்திருந்தாலும்.. வசுந்தரா ஒரு துளி ரத்தம்தான் வரவழைத்தாள்..
ஆனால் இவள் சட்டென்று கையை அறுத்துயிருப்பாள் என்று அவள் யோகா அண்ணியிடம் கூறியதை கேட்ட கணப்பொழுதில் இருந்து.. தனக்கு மற்றொரு தங்கை கிடைத்துவிட்டாள் என மகிழ்ச்சியடனும்.. அவளிற்காக இன்பா இருந்தான். ‘
ஜோடிகள் சிறிது நேரம் தன் துணைகளுடனும், சிறிது நேரம் பிரிந்து.. தங்களுக்கு வேண்டிய உடைகள், பிற பொருட்களை வாங்க சொல்ல..
எழிலரசி வேந்தன், இன்பாவை டிரையல் ரூம்மிற்கும்.. உடைகள் இருக்கும் இடத்திற்கும் வாக்கிங் போகவிட்டு கொண்டுயிருக்க.. சாருலதா அவர்களை பரிதாபமாக பார்ப்பதும் சிரிப்பதுமாவே.. தனக்கும் அக்காவை எடுக்க வைத்துயிருந்தாள்.
முடிவில் தன் உயிர் செல்லங்களுக்கு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போடும் வகையில் ஆளுக்கு சில எண்ணிக்கையிலான.. ஷர்ட், டீஷர்ட்.
கூடவே.. மூன்று தம்பிகளுக்கு கேஷ்வல் ஷர்ட்.. அண்ணிகளுக்கு அவர்களின் தற்போதை போட்டோவை பார்த்து.. தம்பிகளின் ஷர்டிற்கு ஏற்றார்போல ஜீன்ஸ்டாப் எடுத்து வைத்துயிருந்தாள்.
பின் நன்றாக படுத்து உறங்கிக்கொண்டு சொல்லும் படியான வேனில் அனைவரையும் பாதுகாவலருடன் வழியனுப்பி வைத்துவிட்டு..
கிண்டியில் தான் தங்கியிருந்த பிளாட்டினுள் வேந்தன் தன்னவளை அள்ளிக்கொண்டு நுழைந்தான்.
இருஅறைகள் கொண்ட வீட்டில் இப்போது இங்கு வருவதாக முடிவு எடுத்தவுடன்.. இங்குயிருந்த போது அவரச உதவிகள், ஊருக்கு சென்றபின் வீட்டை சுத்தம் செய்ய இருவர் உள்ளனர். அவர்களுக்கு கால் செய்ய.. அவர்கள் தேவையான பொருட்களை வாங்கி வைத்தும், சுத்தம் செய்து வைத்து சென்று இருந்தார்கள்.
ஹாலில் ஒருவர் தராளமாக அமரக்கூடிய ஷோபா அதன் அருகில் சிறிய டேபிள். கிட்சனில் சிறிது பாத்திரம், ஒரு அறையில் இங்கு வந்தால் தேவைபடும் என வேண்டிய பொருட்கள், இருவரின் உடைகள் இருக்க.. பால்கனியுடன் கூடிய மற்றொரு அறை காலியாக இருந்தது. வீடுமுழுவதும் காண்பித்துவிட்டு.. தன்னவளுடன் ஷோபாவில் அமர்ந்தான்.
தூக்க கலக்கத்தில் இருக்கும் தன்னவளின் தலை, கன்னம் தொட்டு பார்த்து.. ” முயல்குட்டி ரொம்ப ஹீட்டா இருக்க.. டிரஸ் மாத்திட்டு வா.. ஆயில் மசாஜ் பண்ணிவிடுறேன். பின்ன தூங்கு. ”
” ம்.. எனக்கு எடுத்து வைச்சுட்டு.. நீ மாத்திட்டு கூப்பிடு. அதுவரைக்கும் இங்கயே படுத்துயிருக்கேன். அவனை ஒருநொடி இறுக்க அணைத்து.. முத்தமிட்டு பின் மடியில் இருந்து இறங்கினாள். ”
அவள் எப்போதும் செயல்தான். ஆனால் இன்று வேறு ஒன்றை நினைத்து அவளை பார்த்தான். பின் இருவரும் இரவு உடை மாற்றி மீண்டும் அதே ஷோபாவில் வேந்தன் ஒருபக்கமாக ஒருகாலை மடக்கி அமர.. அரசி தனு கூந்தலில் மசாஜ் செய்வதற்கு ஏற்றவாறு.. இருகால் மடக்கி அமர்ந்தாள்.
தன்னவளிற்கு மென்மையாக தன் கைகளின் மென்மையை உணரும்படி.. முகத்திற்கு மாதுளம்பழம், லாவண்டர் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயில்.. கூந்தலிற்கு, ஷியா பட்டர் மற்றும் தேங்காய், செம்பருத்தி இவற்றை பயன்படுத்தி தயாரித்த ஆயில் கொண்டும்.. தன்னவளிற்கு மசாஜ் செய்தான்.
கால் அடிப்பட்டது முதல் தினமும் எண்ணெய் தேய்க்கும் வேலையில் முக்கால் பேன்ட் அணிவாள். அவளை திருப்பி.. அவளின் பாதத்தை தன் தொடையில் வைத்துக்கொண்டு.. அவளின் கால்தசை, அடிப்பட்ட இடம், கால் பாதம் முழுவதும்.. ஷயா பட்டர் கொண்டு.. மிகமிக மென்மையாக சொருகும்.. அவள் கண்களை பார்த்துக்கொண்டே தடவிவிட்டான்.
பகலவனின் ஒளி தன்னவளின் முகத்தில் பட்டு சிவந்து மின்னிய முகம் மேலும் ஜொலித்து.. அவளவனை இழுக்க.. வேந்தன் தன் அரசியின் பின்னால் இருந்து அவளை கட்டிக்கொண்டான்.
” முயல்குட்டி காபி?. ” அவளின் காதில் மிக அருகில் குனிந்து கேட்க.
” ம்.. ” அடுத்து பேசவார்த்தைகள் யோசித்தாள். நேற்றில் இருந்து அவனின் அணைக்கும் விதம், தொடுகை புதுவிதமாக தாக்கி அவளை தன்நிலை இழக்க வைக்கிறான் அவளின் கள்ளன்.
அணைப்பில் இருந்தபடியே காபி போட்டு முடித்து.. தனுவை திரும்பி பார்க்க.. அவளின் நெற்றியில் முத்தமிட்டு.. மேடையில் அமர வைத்து.. அவளை பார்த்தபடியே ஒருவாய் குடித்துவிட்டு.. அவளிடம் கொடுக்க.. ‘ அய்யோ இவன் தொலை தாங்க முடியல.. ‘ என அவனை பார்க்காமல் திரும்பி வெளிஅழகை பார்த்து குடிக்க ஆரம்பித்தாள். அவன் தன்னவளை ரசிக்க ஆரம்பித்தான்.
சந்தனம், கத்தரிப்பூவண்ண பாவாடைதாவணி, எப்போதும் போடும் சிறிய செயின் மட்டும் போட்டு.. தலைகுளித்து கூந்தலை துண்டில் சுற்றி.. சிறிய செந்நிற பொட்டிட்டு அதன் இருபுறமும் காதலும், கள்ளமும் கலந்து தன்னை பார்க்கும் கண்கள்.. இன்று ஏனோ?. தன்னை காண வெக்கம் கொண்டு காட்சி தரும் தன்னவளை காண காண.. அவனின் உள்ளே இருக்கும் கள்ளன்.. அவளை இன்னும் வெக்கம் கொள்ளவையே என்கிறது.
அவனின் முன் சொடக்கிட்டு.. ” தனு ” ஒருநொடி ஆடி.. தடுமாறி..
” என்ன முயல்குட்டி?. ” அவனை முறைத்துக்கொண்டே.. தன்னுடைய மீதி காபியை கொடுத்தாள். அவன் புன்னகையுடன் வாங்கி குடித்தான்.
” முயல்குட்டி மாமா நைட் நல்லா மசாஜ் பண்ணிவிட்டனா?. ”
அவள் வார்த்தை அடக்கி பார்க்க…
” என்னடி பார்வ.. நீ சரி சொன்ன பிறகுதானே பண்னேன். ” புருவத்தை உயர்த்தி கேட்க..
கண்ணைமுடி தன்னை கட்டுப்படுத்தி.. ” தனு நான் எப்போதும் செய்துவிடுவது மாதிரி தானே பண்ணச்சொன்னேன். நீ என்ன டா பண்ண?. ” அவனின் டீஷர்ட் இழுத்து கேட்க..
இருவரின் முகமும் நெருங்கியிருக்க… இருவரின் மீதும் வரும் வாசனை இருவரையும் மயக்க.. ” போடா ” அவனை பின் தள்ளினாள். “தனு நீ சும்மா தொட்டாலே.. ஒருமாதிரி இருக்குடா. ” அவனை மீண்டும் இழுத்து.. அவனின் தோள் சாய்ந்து கூற..
புன்னகையுடன்.. தன்அரசியை நிமிர்த்தி.. காதல், நாணம், கலக்கம், தடுமாற்றம் மாறி மாறி காண்பிக்கும் அவள் கண்களை பார்த்து.. ” முயல்குட்டி.. நான் இத்தனை நாளா உன்னை கணவனா ஒரு எல்லைக்குள்ள சாதாரணமா தொடுவேன்.
ஆனா இப்ப அந்த எல்லையதாண்டி ஒருபடி முன்னாடி வந்து என் முயல்குட்டிக்கு என்னையும்.. எனக்கு உன்னையும் தெரிந்து கொள்ள வழிவகை செய்யுறேன். ” அவளின் நெற்றியில் முத்தமிட்டு பின்.. அள்ளிக்கொண்டு அறைக்கு சென்றான்.
தரையில் இருந்த மெத்தையில் உட்காரவைத்து.. தூண்டை பிரித்து பாதி காய்ந்திருந்த முடியை.. டிரையர் கொண்டு உலரவைத்தான். பின் அவளை மடியில் அமர்த்தி.. தனக்குள் புதைத்துக்கொண்டு..
” எனக்கு இப்ப ஒன்னே ஒன்னுதான் தாண்டி முக்கியம். என் முயல்குட்டிக்கு நடந்த எந்த பிரச்சனையும்.. யார் பண்ணினா?. எதுக்கு?. யாருக்காக செய்தாங்கனு ஒரு நொடி கூட உனக்கு ஞாபகம் வரக்கூடாதுடி.
நேத்து நீ எல்லாவற்றையும் நினைத்து அழுத அழுகை. இந்த இரண்டு சேர்ந்து.. இரண்டு பேருக்கும் தேவையான.. இந்த முடிவதான் என்னைய எடுக்க வைத்தது. உனக்கு ஞாபகம் வரலதானே?. “
இல்லை என அவள் தலையசைக்க.. அவனிற்கு நிம்மதியில் கண்கள் கலங்க.. அவனின் முயல்குட்டி கலங்கிய கண்கள், கன்னத்தில் மென்மையாக சத்தமின்றி தன்னவனை உணர்ந்து முத்தமிட்டாள். இருவருக்கும் உடல் சிலிர்க்க.. வேந்தன் கண்கள் முடி அனுபவித்து.. இடையில் தன் இறுக்கத்தைகூட்ட.. அவளும் கழுத்தின் இறுக்கத்தை கூட்டினாள்.
சில நொடிகள் கழித்து..” தனு உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா?.”
‘ என்னடி ‘ என முறைக்க..
புன்னகையுடன்.. ” தனு நான் முன்னாடி கடைக்கு வந்தேன்ல.. ”
‘ ஆமா.. ‘ என அவன் பார்க்க.. ” அப்ப தனுஅண்ணா மட்டும்.. அன்னைக்கு என்னைய டென்ஷன் ஆக்காம இருந்துயிருந்த?. அப்பமூனாவது.. ” முடிக்க முடியாமல் சிரிப்பை அடக்க..
” கேட்க என்னைய தேடி வந்துயிருப்பாயா?. ” ஆனந்தம், கேள்வியாக பார்த்துகேட்க..
” ம்.. அப்ப பார்த்து பிடித்துயிருந்து.. உன் பின்னாடி நான் சுத்தியிருக்கலாம். ”
புன்னகையுடன் ” எதுக்காகடி?. ”
அவனின் மீசைபிடித்திழுத்து.. ” க்யூட்டா இருக்க.. ஸ்விட்டா சூப்பரா!. பருத்திபால் செய்யத தனுமாமாவ.. காதல் செய்து கல்யாணம் பண்ணதான். “
‘ அப்படியா!. ‘ என தான் அறிந்த புதுசெய்தியில் இருக்கும்.. தன்னவள் தன்னை பார்த்து.. பின் தன்னை காதலிக்க வைந்துயிருந்தாள் எப்படியிருக்கும்!. என்று நினைத்து.. அவளிடம் தான் விருப்பும் இடமெல்லாம் முத்தமிட்டு.. இருவருமே நேற்று இரவு தங்களின் நேற்றிய தினத்தை இன்னும் சிறப்பாக்கிய இடங்கள், நடந்ததை நினைத்தபடி.. தன்னவளின் கழுத்துவளைவில் புதைந்திருக்க.. அவளும் அவனின் மென்மையான இறுக்கத்தில்.. இருவரும் கண்மூடி படுத்துயிருந்தார்கள்.
அவளின் பசியின் சத்தம் அவன் காதில் விழ.. ” முயல்குட்டி பசிக்குதா?. ” எழுந்து உட்கார்ந்தபடி கேட்க..
” லைட்டா.. ” சிறியாக விரல் காண்பித்து கூற.. அவளை முறைத்து.. ” எழுந்து கிளம்பு.. ”
” மணி எட்டுதானே.. சாப்பிடனு இப்ப வெளிய கிளம்பினா.. நாளைக்கு கோயில் போயிட்டு மதியம் வீட்டில் போய் தான் படுக்கனும். அதனால இன்னும் கொஞ்சம் நேரம் படுக்கலாம். ” அவனை இழுத்து படுக்கவைத்து.. அவன் தோளில் படுத்துக்கொண்டாள்.
புன்னகையுடன் அவளின் நெற்றிமுட்டி தன்னுக்குள் இறுக்கிகொண்டு.. ” முயல்குட்டி நைட்டு முகத்திற்கு தடவிய ஆயில் வாசனை பிடித்துயிருந்ததா?. ”
அவனின் டீஷர்ட் பட்டனை திருகிக்கொண்டு அமைதியாக இருந்தாள். அவளின் மெளனம் ஏதோ உணர்த்த.. அவளை தலையணையில் படுக்கவைத்து முகத்தை பார்த்தான். முகம் நாணமும், பெண்மைக்கான உணர்வையும் காட்டியது.
புன்னகையுடன்.. அவளின் காதில்.. ” அப்ப நீ மாமாவா மட்டும்தான் இந்நேரம் வரை நினைத்திருக்க?? ”
அரசி முகம் மற்றும் கூந்தலுக்கு அவன் கொடுக்கும் ஆயில் பிடித்திருந்தால் அப்படியே வைத்துயிருப்பாள். இல்லையெனில் தன் எண்ணத்தை கூறி.. பிடிக்கவில்லை என்றால் உடனே தேங்காய்எண்ணெய் தேய்த்துக் கொண்டு தலைக்கு குளித்துவிடுவாள். இன்று கேட்ட பின்னும் அவள் கூறவில்லை என்பதால் பார்க்க..
அவளின் முகம் முதன்முதலில் காட்டும்ஜாலத்தை பார்த்து..அவனுக்கு இப்பொழுதே இருவரும் நாமாக மாறும் நாளாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தோன்றியது. ஆசையுடன் கண்களில் நிரப்பிக்கொண்டவன்..
சத்தமில்லாமல் போனில் அவள் முகத்தை மட்டும் சூம் செய்து போட்டோ எடுத்து வைத்துக்கொண்டான்.