” இப்பதான் என் முயல்குட்டி.. முழுசா கல்யாண பொண்ணா மாறியிருக்கா. ” தனுவின் ஒவ்வொரு வார்த்தைக்கும்.. கண்கள் காதலும், தாபமும் போட்டிபோட்டு அவளை பார்க்க..
அவளும் தன்னவன் முதல்முறை வெளிபடையாகவே தன்னிடம் தெரிவிக்கும் ஏக்கத்தை கண்களில் நிரப்பி.. ” ம்.. இப்ப தான்.. என் தனு மாமா என்னைய கல்யாண பொண்ணா உணர வைக்கிறார். இத்தனை நாளா முயல்குட்டி நான் ரொம்ப நல்லபையனு.. நாலு அடி தள்ளி நின்னு.. ” முடிக்கும் முன்..
அவனின் இதழ்கள் இத்தனை நாள் தெரிவிக்காத உணர்வை தெரிவிக்க.. கைகள் அவள் முதுகிலும், இடை இறுக்கத்திலும் அதனை காண்பிக்க.. இருவருமே தங்களுக்கு என்று புதுஉலகத்தை படைத்து.. அதில் அவர்கள் மட்டுமே என தங்களை வெளிபடுத்தி கொண்டுயிருந்தனர்.
” சொல்லுடி நாலுஅடி தள்ளி நினைக்காம.. அப்பவே இப்படி சொல்லியிருந்தா?. ”
எழிலரசி தன் உணர்வில் இருந்து வெளிவந்து.. அவனின் தலையில் கொட்டி.. ” போடா மடையா. உன்னைய யாரு அப்படி இருக்க சொன்னா?. ”
அடிப்பாவி என அவன் கையை வாயில் வைக்க..
முறைப்பு மற்றும் புன்னகையுடன்.. ” ரொம்பதான் ஆசை. வீட்டல இரண்டு மாதத்திலே கொடுத்த தேதிய வேண்டானு சொல்லிட்டு.. ”
அவளை அதற்கு மேல் பேசவிடாமல்.. இதழில் இதழ் பதித்து ” சாரிடி சாரிடி” என முகம் முழுவதும் முத்தமிட்டு.. அவளை தனுக்குள் அழுத்தி புதைத்துக்கொண்டான்.
அய்யோ இவன.. ” தனு.. எனக்காக.. நம்ம குழந்தைகளுக்காக தானே பண்ணீங்க.?. ”
ஆம் என நெற்றியில் முத்தம் வைக்க.
” பின்ன எதுக்காக சாரி கேட்கிறீங்க.?. முன்பே சில வேண்டாத பிரச்சனைகள் வருனு தெரிந்தா.. நமக்கு மற்றவர்களால் பிரச்சனை வராம இருந்துயிருக்கலாம். ஆனா நம்ம இருவரை பற்றி அதிகமாக தெரிந்தே இருக்காது.
இப்ப நமக்கான.. காதல், அக்கறை, கோபம், பொறுமை.. இப்படி என் தனுமாமா பற்றி பாதி எனக்கு தெரியும்.. மீதி.. ”
சட்டென்று அவளின் காதில் மிக மெல்லிய குரலில்.. ” மீதிய இப்ப காட்ட கூட.. ”
அவனின் கன்னத்தை கிள்ளி.. ” காட்டுவீங்க.. காட்டுவீங்க. . ” அவனிடம் இருந்து விலகி படுக்க.. ” போடா.. போய் கிளம்பும் வழிய பாரு. ” அவளின் இதயம் வேகமாக துடிக்க..
புன்னகையுடன் ” போறேன்.. அதுக்கு முன்ன நீ பக்கத்தில் வா. ”
முடியாது என அவள் முறைக்க.. ‘ சரி நான் வரேன் ‘ என அரசி உணரும்முன் நெருங்கி.. அவள் நகர முடியாதபடி இடையை பிடித்துக்கொண்டான். அவளின் இதழில் கோலமிட்டவாறே.. ” முழுசா கேட்டாம.. அதுக்குள்ள என்னடி அவரசம்?. “
‘ அச்சோ நாம்ம தான் ஏதோ நினைச்சுட்டோமா?. ‘ என அசட்டு புன்னகையுடன் பார்க்க..
அவனோ நீ நினைத்ததை தாண்டி சொல்ல வந்தேன். சொல்லிருந்தா?. வேந்தா நீ முழுசா ஊர்போய் சேர்ந்துயிருக்க மாட்ட. நாள் முழுவதும் நினைத்த நேரம் எல்லாம் கிள்ளி இரத்தம் கட்டி போய் தான் சேருவ. இருந்தாலும் எப்போதும் போல தன்னவளிடம் கேட்போம்.. அவ என்ன சொன்னாலும் அதன்படி நடந்துக்கோ.
” முயல்குட்டி முழுசா சொல்லடா?. வேண்டாமா?. ”
அரசிக்கு அவனின் முழி.. சொல்லு என்கிறது. தைரியமாக கேட்கும்விதம்.. வேண்டாம் என்கிறது. எழிலரசி நமக்கு எது நல்லது!.. ” வேண்டாம்.. வேண்டாம்.. உன் முழியே சரியில்ல. நான் இந்த விளையாட்டு வரலப்பா. “
புன்னகையுடன்.. திரும்ப இங்கு எப்போ வருவோம் என்று தெரியாது?. என தன்னவனின் முகமெங்கும் முத்தமிட்டு.. அவளும் வாங்கிக்கொண்டு.. அடுத்த சில நிமிடங்களில் கிளம்பிவிட்டனர்.
இருவரும் அபாட்மெண்டின் கீழே வர.. வேந்தனின் போன் ஒலித்தது எடுக்க.. ” வேந்தன் உங்க வலதுபக்கம் இருக்கேன்.. வாங்க. ” வேந்தன் திருப்ப..
இவர்களுக்காக இங்கே இருக்கும் தனது அபாட்மெண்டில் இரவு தங்கியிருந்த ரோஹித்.. தன் லக்சஸ் செடன் கார்.. கண்ணாடியை இறக்கி கையசைத்தான்.
அரசியிடம் அவனை காண்பித்து.. பின் அழைத்துச் சென்றான். டிரைவர் கதவை திறந்துவிட.. புன்னகையுடன் அதை ஏற்று இருவரும் அமர்ந்தனர்.
அமர்ந்த அடுத்த நொடி.. ” ரோஹித் நாங்க இன்னும்.. ” முடிக்கும் முன்..
ரோஹித் ஹாட் பாக்ஸ் கொடுத்தான். ” நமக்கு சந்தோஷ் கொடுத்துவிட்டு இருக்கான். நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க. ”
வேந்தனின் கைகளில் பன்னீர் சப்பாத்தி இருந்தது.. ‘ சாப்பிட மாட்டளே ‘ என.. முன்னால் பார்க்க.. முயல்குட்டியை பார்க்க என ஒருநொடி இருந்தான். அரசி அவனின் செயலை பார்த்துவிட்டு.. கையை இழுத்து பார்த்தாள்.
‘ என்ன இது?. ‘ என்ற பார்வையில் கேட்க.. அவன் முகத்தின் அருகில் மெதுவாக கொண்டு சென்றான். அவளிற்கு மசாலா, பட்டர் என எல்லாம் இருக்க.. பன்னீர் வாசனை தெரியவில்லை. அவள் கையை நீட்டி வாங்கிக்கொண்டு.. ஒரு வாய் எடுத்து வைத்தாள். மெல்ல ஆரம்பிக்க.. அதன் அசைவு பாதியில் நின்றது.
” தனு இதில் பன்னீர் போட்டுயிருக்கா?. ” மெதுவாக கேட்க.. ஆம் என தலைசைத்து.. ” பிடித்துயிருக்கா?. ” வீட்டில் இருந்து கொடுத்துவிட்டது.. பிடிக்கவில்லை என கூறினால்.. மறுக்க வேண்டுமே என்ற யோசனையுடன் கேட்டான்.
அவனின் யோசனை புரிந்து.. ” தனு ரொம்ப தெரியல.. ஒன்னு மட்டும் சாப்பிடுறேன். ” ம் என தலையசைத்து..
அவள் முடிக்கும் வரை பார்த்திருந்து.. தானும் ஒன்று மட்டும் எடுத்துக்கொண்டு ஈரதுணியில் துடைத்துக் கொண்டு.. பின் சானிடைசர் போட்டுக் கொண்டனர்.
அவ்வப்போது இவர்களை புன்னகையுடன் ரோஹித் பார்த்திருந்தான். இதுவரை தானும், தன்னவளும் பிடிக்காத உணவை.. பிறர் வருந்துவார்கள் என சாப்பிட்டது இல்லை. அதுகூட அவள் ஒழுங்க மென்று சாப்பிடுகிறாளா என்றும்.. அவள் சாப்பிட்ட அதே அளவு உணவையும் சாப்பிட்டது இல்லை. எதற்கும் நேரமும் கிடைத்தது இல்லை என இப்போதும் வேலையை வேகமாக பார்த்துக்கொண்டே இவர்களை பார்த்து.. ஒரு மூளையில் நினைத்துக் கொண்டுயிருந்தான்.
தரமணியை நோக்கி சென்ற கார்.. வேந்தன் வேலை செய்த RR ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் அலுவலகம் முன் நின்றது.
வேந்தனிற்கு புரியவில்லை. நண்பர்கள் காலையில் பார்க்கலாம் என்றார்கள். வீடு முன் நின்றதையே ஆச்சரியமாக எண்ணி வந்தவன்.. தன்னுடைய பொறுப்பு, வேலை என அனைத்தும் முடித்து கொடுத்து.. தேவையானதை போஸ்ட் செய்து.. இப்போது தனக்கும் இக்கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கல்யாண கார்ட் கொடுக்க நேரம் இல்லை என.. மாலை தான் போனில் அழைக்க வேண்டும் என நினைத்திருந்தான்.
இங்கு எதற்காக எழிலரசியுடன் என ரோஹித்தை பார்க்க.. ” ப்ராடெக்ட் கிளைட் விசிட். எழிலரசி, நீயும் எங்க கூட வந்துயிருக்கீங்க. “
” அதுயில்ல ரோஹித்.. நான் என்ன சொல்ல வரேனா.. ” அவனை முறைத்து..
” நேத்து இரண்டுபேரும் சொல்லியிருக்கீங்க. அதுவும் இல்லாம இன்னொரு காரணமும் இருக்கு. அது என்னனு உனக்கே தெரியும். பேசாம வா. ”
எழிலரசியிடம் திரும்பி.. ” நீ கம்பெனி உள்ளயெல்லாம் வீடியோவில் பார்த்துயிருக்க தானே?. ”
” ஒருதடவை.. வெளியில் மட்டும்தான். ”
வேந்தனை முறைத்து.. ” பரவாயில்ல.. நீ என்கூட வா. ” வேந்தனை பார்க்க.. ” கம்பெனிக்கு உள்ள நுழையும் போது நீ.. வேந்தனோட வா. பின்ன அவனுக்கு வேலை இருக்கு. கொஞ்ச நேரம் கழித்து அவன் வந்துவிடுவான்.
ராகேஷ், சந்தோஷ் பக்கத்தில் வந்துட்டாங்க. நாம்ம அவங்க கார் உள்ள போனதும் போகனும். அங்க போட்டோ, வீடியோ யாரும் எடுக்க மாட்டாங்க. அதனால எழிலரசி நார்மலா இரு. ” ஒவ்வொரு வரிக்கும் தன்னவனை பார்க்க.. புன்னகை மட்டும் புரிந்து.. ரோஹித்வுடன் இரு என தெரிவித்து கைபிடித்தான்.
” ரோஹித் நீ நடக்கும் போது மெதுவா நட. மறந்து வேகமா போயிடாத. அவங்கிட்டயும் சொல்லிரு. “
‘ டேய் அவங்கவிட்டா ஒட்ட பந்தையத்திலே ஓடுவாங்க. இதுல மெதுவா. ‘
” டேய் உன் மைண்ட் வாய்ஸ் நல்லாவே கேட்குது. ஒழுங்க மெதுவா நடந்து கூப்பிட்டு போ. ” அவனையும் தன்னை பார்த்து சிரிப்பவளையும்.. முறைப்புடன் திருப்ப.. கம்பெனியின் வாசல் வந்தது.
சந்தோஷ், ராகேஷ் முன் சென்ற காரில் இருந்து இறங்க.. பின்னால் வந்த இவர்களில் வேந்தனும், ரோஹித் வேகமாக இறங்க. அந்த வேகத்துடன் எழிலரசி ஈடுகொடுக்க முடியாமல் மெதுவாக கதவை திறக்க.. அவளின் தனு கதவை பிடித்து நிற்க.. மெல்லிய புன்னகையுடன் இறங்கினாள்.
வேந்தன் அவளின் இடபுறத்திலும்.. வலது புறத்தில் ரோஹித், சந்தோஷ், ராகேஷ் வந்தார்கள். எழிலரசி அடர் பச்சை, செர்ரி பழ சிவப்பு நிற சுடி.. சந்தனநிற ஷால். போட் நெக் வடிவ டாப்.. கழுத்து மற்றும் முட்டிவரை உள்ள கைகளில் பெரியது சிறியதுமான மங்களான தங்கநிற கற்கள் மின்ன.. முடியை மொத்தமாக இருக்கும் படி.. சிறு முடி எடுத்து பலவண்ணகற்கள் உள்ள கிளிப்.. காதில் வெள்ளை, சிவப்பு கற்கள் பதித்த.. பார்த்தும் பதியகூடிய அளவில் வைரதோடு மட்டுமே.. அளவான ஒப்பனையுடன் அரசியாக நால்வரின் நடுவில் வந்தாள்.
அவள் கல்லூரில் படித்தது.. நடந்த நிகழ்ச்சிகளில் அறிந்து கொண்டதை வைத்து.. சாதாரணமாகதான் வர நினைத்தாள்.. ஆனால் முன்னால் இருந்தவர்களின் வயது, பல மாநிலமுகங்கள், தோரணையை பார்த்தும்.. உள்ளே செல்லவேண்டுமா?. என தனுவை பார்க்க..
” அரசி ஒன்னும் இல்ல.. சும்மா சுற்றி பார்ப்பது போல வா. நடப்பதை கவனி. ” சரி என தலையசைக்க.. அவளின் ஒருவிரல் பிடித்து விடுவித்தான்.
முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் வாசலில் நின்று பூங்கொத்துடன் இவர்களை வரவேற்க.. முதலில் சந்தோஷிற்கு கொடுக்க போக.. மரியாதைக்காக வாங்கிக்கொண்டு.. வேந்தனை முன்னால் வா என பார்த்தான்.
புன்னகையுடன் தன்னவளை முன்நிறுத்தி நிற்க.. ” இவங்க எங்க விருந்தினர்.. எழிலரிசி, வேந்தன். ”
முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடம் அறிமுகம் செய்ய.. பூச்சென்டு கொடுக்கலாமா.. வேண்டாமா என்ற நிலையில் இருந்தார்கள்.
அடுத்தவாரம் தான் இவர்களின் வீசிட் என்று கூறியிருக்க.. நேற்று மாலைதான் இன்று என மாற்றி தெரிவிக்க.. ஒருவர்தான் வந்தால் வருவார் என இருந்தவர்கள்.. எதற்கும் இருக்கட்டும் என மூன்று மட்டும் வைத்திருக்க.. மூவரையும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் கூட இருவர். வேகமாக இன்னும் இரண்டு பூங்கொத்து கொண்டு வரப்பட்டு.. முதலில் அரசி, வேந்தனுக்கு கொடுத்த பின்.. மற்ற இருவருக்கு கொடுக்க கூறப்பட்டது.
ஆபிஸ் பெறுப்பில் இருப்பவருக்கு வேந்தனை பற்றி கூறப்பட.. ஏப்படி இவர்களுக்குடன்? என பார்வையை செலுத்திவிட்டு.. மூவரையும் முன்னால் போககூற.. அவர்கள் இருவரையும் பார்த்தார்கள். பின்அனைவரின் பார்வையும் இருவரிடம் திரும்ப.. அரசி வேந்தனை கைபிடித்து இருவரும் முதலில் சொல்ல.. மூவரும் பின்னால்.. அவர்களுடன் மற்றவர்கள் என உள்ளே சென்றார்கள்.
உள்ளே நுழைந்தவுடன் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டும் மூன்று பிரிவுகளாக இருந்தனர். சந்தோஷ் உயர்அதிகாரியிடம் ஏதோ கூற.. அவர் மற்றொருவரிடம் அதை கூற.. அவர் சென்று ஒருவரை அழைத்து வந்தார். வந்தவர் மூவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ள நினைத்து.. அவர்களின் முன்நின்று பேசுவது போல நிற்க..
வேந்தனை காண்பித்து.. ” வாசன் இவரை தெரியும்தானே?. ”
” தெரியும் சார். நாங்க எல்லாம் ஒரே பிராஜெக்ட்டில் தான் இருந்தோம். ஒருமாதம் முன்னாடிதான் நம்ம கம்பெனிய விட்டு போனார். ” நம்ம என்றதில் அழுத்தி கூறினான்.
” ம்.. இப்ப இவர்தான் உங்க பிராஜெக்ட் ப்ராடெக்ட் பற்றி விளக்கம் கொடுக்க போறாரு. நீங்க ரெடி செய்து வைத்துயிருக்கும் டீடைல்ஸ் கொடுங்க. நாங்க லேப் பார்வையிட்டு.. அரைமணிநேரத்தில் வந்துவிடுவோம். ” அவனை கேள்வியே கேட்க முடியாமல்.. அடுத்து கட்டளை பிறப்பித்து.. வேந்தனை அவருடன் அனுப்பிவைத்து.. அவர்களை அழைத்து சென்றார்.
வாசன் வேந்தனை விட இருவருடம் அனுபவம் அதிகம். வேந்தன் பெங்களூரில் இருந்து வரும்முன்.. அவனின் பொறுப்பு வாசனுக்கு கிடைப்பது போல இருந்தது. ஆனால் அவர் பார்த்துக்கொண்டுயிருந்த பணிக்கும்.. பார்க்க போகும் பணிக்கும் தகுதி வேறுபாடு இருந்ததால் சிலவருடங்கள் காத்துயிருக்க வேண்டிய நிலை. வேந்தன் சென்றவுடன் இப்போதுதான் கிடைத்தது.
வேந்தன், வாசன் தங்களின் குழுக்கள் இருக்கும் இடம் சென்றார்கள். வேந்தனை பார்த்தும் அனைவரும் சிரிப்பாத?. வேண்டாமா?. என பதட்டத்துடன் இருந்தார்கள். ஆகாஷ் மட்டும் அருகில் வந்து நின்றான்.
வாசன் தன்னுடைய உயர்அழுத்ததை குறைக்கவேண்டி.. ” ஆகாஷ் நீங்க டீடைல்ஸ் கொடுங்க.. நான் பத்து நிமிடத்தில் வரேன். “
பதில் எதிர்பார்க்காமல் சென்று விட்டான். அவன் சென்ற அடுத்தநொடி அந்த இடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பெருமூச்சை வெளிப்படுத்தி.. வேந்தனை புன்னகைக்க வைத்தனர்.
சிரிப்புடனே.. ” ஹாய்.. எல்லோரும் எப்படியிருக்கீங்க?. ” அவனை முறைப்பதை தவிர வேறுவழியில்லை. ஏன்டா என ஆகாஷை பார்க்க..
” நீ ரிலீவ் ஆன ஒருமாதமா வாசன் கொஞ்சம் அதிகமா வேலை வாங்குறார். அதுகூடவே அடுத்தவாரம் விசிட் வரவேண்டியவங்க.. இன்னைக்கு வந்ததால் கொஞ்சம் டென்ஷன். அதான். “
யோசனையுடன்.. சோர்ந்து இருந்த குழு நண்பர்களை பார்த்தவன்.. ” நான் எல்லாமே முடித்து கொடுத்துட்டேனே.. பைனல் மட்டும் தானே நீங்க செய்யனும். பின்ன ஏன் வேலை வாங்குறான்?. ” மரியாதை பறந்தது.
தன் குழுவிற்கு தனக்கு அடுத்து வருபவர் ஏதாவது குழப்பி.. பிரச்சனை வரக்கூடாது என கிட்டதட்ட பத்துநாட்களுக்கு மேல்.. ஊண், உறக்கம் மறந்து அனைத்தும் முடித்துகொடுத்து சென்றான். இப்போது என்ன?. என பார்த்தான்.
ஆகாஷ் மற்றும் மற்றவர்கள்.. அவன் வருகிறானா என பார்த்தார்கள். அவர்களை பொறுத்தவரையில் வேந்தன் கம்பெனியை விட்டுச் சென்றுவிட்டான். அதனால நடப்பதை கூறலாமா என நினைத்தவன்.
பின் வேறு ஒன்றை நினைத்து.. ” வேந்தன் நீ எல்லாம் முடித்து கொடுத்துதான் போன. வாசன் அதன்பிறகு இவங்களை மேலும் கொஞ்சம் ப்ராடெக்ட் ரெடி பண்ணலானு.. புதுசா நிறைய டெஸ்ட் பண்ணி பார்க்க வைத்து.. பைனல் அப்ரூவல் நேற்று வாங்க நினைத்தார். அப்பதான் இன்னைக்கு வராங்கனு நீயூஸ். அதான் செம்ம டென்ஷன், கோபத்தில் இருக்காரு. “
ஓ.. என நினைத்தவன்.. மற்றவர்களை பார்த்து.. ” சரி.. நான் ரிசைன் பண்ணும் முன்ன நாம்ம வேலைகள் செய்தபோது.. நீங்க ஐந்து மணிநேரம் தான் தூங்கியே இருப்பீங்க. இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே. ”
சுற்றி பார்த்துவிட்டு நிஷா.. ” அண்ணா.. எங்களை அந்த டென்ஷன் தெரியாத அளவிற்கு நடுவில்.. நீங்க கொஞ்சமாவது வேற விஷயம் பேசி.. எங்களை வேலை பார்க்க சொல்லுவீங்க. ஆனா வாசன் சார் முழுநேரமும் வேலை பற்றிதான் பேசுவாறு. முன்ன கேட்ட கோயில் விழாவிற்கு கூட லீவ் கொடுக்கல. அதிக டென்ஷன் படுத்துறாரு. “
அப்போதுதான் ஒரு கேள்வி தோன்றி.. அனு.. ” ஆமாம் அண்ணிய விட்டுவிட்டு.. இப்ப நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?. ”
அப்பாடி இப்பதான் நான் ஏன் இங்கு என தோன்றியதா?. எனபுன்னகையுடன் கூறப்போகையில்.. வாசன் வந்துவிட.. அனைவரும் அமைதியாகினர்.
” வேந்தன் பார்த்தாச்சா?. ப்ரசன்ட் பண்ணுவதில் பிரச்சனை இல்லையே?. ”
” பிரச்சனையில்ல.. கடைசி ஒருமாதமா செய்த ப்ராடெக்ட் டீடைலஸ் கொடுத்தா.. அதையும் பார்த்துட்டு.. ” முடிக்கும் முன்..
மற்றவர்களை முறைத்துவிட்டு.. ” வேந்தன் அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். நீங்க இந்த வேலைய விட்டு போய்டீங்க. அப்படியிருந்தும் நீங்க இப்பப்ரசன்ட் பண்ணபோவதை.. நான் எந்த கேள்வியும் கேட்காம சரி சொல்லியிருக்கேன். மேனேஜர் உங்களிடம் இதை மட்டும்தான் கொடுக்க சொன்னார். அதைமட்டும் பாருங்க. ”
” நான் அதை மட்டும் தான் பார்த்துயிருப்பேன். ஆனா இதில் ஒன்ன மறந்துடீங்க. நீங்க எல்லாம் இப்ப வேலை செய்வது.. நான் அப்ரூவல் வாங்கி வைத்த ப்ராடெக்ட். அதுக்கு மட்டும் அலக்கேட் செய்த நேரம், பணத்திலிருந்து தான்.. நீங்க எந்த அனுமதியும் இல்லாம.. இவங்களை அதிகம் வேலை வாங்கி இருக்கீங்க. “
” ஏன் நீங்க கிளம்பும் முன்.. இவங்க செய்த வேலைக்கு யாரிடம் அனுமதி வாங்கினீங்க?. ”
” கண்டிப்பா தெரியனுமா? ” ஆம் என வாசன் பார்க்க..
” சொல்லுறேன். ஆனா இப்ப இல்ல ” ஆகாஷிடம் திரும்பி.. ” ஆகாஷ் உங்கிட்ட இருக்குமே.. அதை கொடு. ”
வாசன்.. ஆகாஷை ‘ நீ கொடுத்துவிடுவாயா?. ‘ என்பது போல பார்த்தான்.
நடுவில் ‘ அய்யோ ‘ என இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
” வாசன் இதில் இன்னும் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்க. இப்ப ப்ரசன்ட் செய்ய போகும் ப்ராடெக்ட் உண்டான எல்லா கிரடிட்டும், ப்ராஜெக்ட் வழிநடத்தியதற்காக.. எங்க இரண்டுபேரோட பேர் மட்டும்தான் வரும். அவர் கொடுக்கல அப்படினா அவருக்கு பிரச்சனையே இல்ல. ”
‘ டேய் டேய் ஏன்டா ஏன்டா?.!.’ என ஒருவன் முறைக்க.. மற்றவர்கள் அதனை பார்த்து சிரிப்பை அடக்க முற்பட்டனர்.
” உங்களுக்கு இது நல்லாவே தெரியும். அதனால தான் நீங்க எல்லாம் முடிந்துவிட்டது.. ஆனா நேரம் இருக்குனு இந்த நாட்களை பயன்படுத்திக் கொண்டீங்க. ஆனா இது உங்க வேலைய மட்டும் சார்ந்ததா இருந்தா.. நான் பெரிதா எடுத்துயிருக்க மாட்டேன். ஆனா இதில் இவங்க வேலையும் அடங்கியிருக்கு. ப்ராடெக்ட் ஒத்துக்கொள்ளுறாங்க.. இல்லையா என்பது வேறு விஷயம். அதற்கு உண்டான பயன் இருக்கனும். ”
அவன் கூறுவதில் உண்மையிருந்தாலும்.. என யோசிக்க ஆரம்பிக்க.. அதை தடுத்து.. வேந்தன்.. ” விஷ்வா நீங்க நினைப்பது போல.. ஏதாவது ஒரு ப்ராட்க்ட் அப்ரூவானா கூட அது உங்க தலைமையின் கீழ்நடந்தது போலதான் இருக்கும். அதை எந்த பிரச்சனையும் இல்லாமா வாங்கி தரவேண்டியது என் பொறுப்பு. இதுக்கு மேல நீங்க கொடுக்கலனா.. எப்படி.. ” முடிக்கும்முன்..
வாசன், ஆகாஷ் இருவருமே கொடுத்தனர்.
புன்னகையுடன் இரண்டையும் வாங்கி சற்று தள்ளி அமர்ந்து பார்வையிட ஆரம்பித்து.. தான் அனுமதி வாங்கியிருந்த நேரத்திலே.. இந்த புது ப்ராடெக்ட் பரிசோதனை செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தான்.
வேந்தனின் அரசியோ.. சந்தோஷ், ராகேஷ் மற்றவர்களுடன் பார்வையிட.. எழிலரசி ரோஹித்துடன் தனியாக பார்வையிட்டும்.. அவள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டுயிருந்தான்.
” தம்பி ரோஹித் ” என மெதுவாக அழைத்து.. ” இந்த கம்பெனி EV யோட சேர்ந்தா? “
” இல்ல.. இங்க ப்ராடெக்ட் டெஸ்டு, டெவலப் மட்டும் தான். மற்றது எல்லாம் கிண்டியில் இருக்க ஃபேக்டரியில் தான். ”
” ஏன் இதையும் நீங்களே பண்ணல?. ராகேஷ் கெமிக்கல் இன்ஜினியரிங் தானே பண்ணினாங்க?. ”
” ம்.. ராகேஷ் வீட்டல என்ன பிஸ்னஸ் பண்ணுறாங்கனு தெரியுமா?. ”
இல்லை என கண்சிமிட்டி.. ப்ச் என்று தோள்குலுக்கி அவள் பாவனையில் கூற.. இடம் உணர்ந்து.. ‘ அய்யோ ‘ என சுற்றிபார்த்தாள்.. தன்னவன் வெளியில் செய்யகூடாது என கட்டளை.
புன்னகையுடன்.. ” என்ன வேந்தன் பண்ணக்கூடாது சொல்லியிருக்கானா?. ” ஆம் என அவள் தலையசைக்க.. பின்ன இப்படி அழகான பண்ணா.. அவன் எல்லாத்திலும் முன்னெச்சரிகைதான்.
” நேத்து நீங்க மதியம் சாப்பிட்டீங்கல கிராண்ட் ராஜாராணி ஹோட்டல். அது ராகேஷ் அப்பா ஆரம்பித்தது. அதோட EV மாதிரிதான் அவங்களோடதும். இதில் கெமிக்கலே சேர்க்காது. அவங்களோடதில் கொஞ்சம் இருக்கும்.. அதன்கூட ஹாஸ்பிட்டாலிட்டி இன்டஸ்ட்ரி பண்ணுறாங்க.
நாங்க முதல் இரண்டு வருடம் அவங்க கம்பெனி ஃபேக்டரியில் தான் செய்தோம். பின்ன இரண்டு பிராண்டிற்கு.. குடும்பத்தில் பிரச்சனை வருவதுபோல இருந்தது. அதனால ராகேஷ் இரண்டையும் சம்பந்தபடுத்த வேண்டானு.. தனியா எல்லாம் சேர்த்து கிண்டியில் ஆரம்பிக்க முடிவு செய்தபோது..
வேந்தன் ஊரில் பிஸ்னஸ் ஆரம்பிக்கனும்.. நான் ப்ராடெக்ட் எல்லாம் டெஸ்ட் செய்து கொடுக்குறேன். கம்பெனியா தொடர்ந்து என்னால பார்க்க முடியாது சொல்லிட்டான்.
பின்னதான் எல்லாவிதத்திலும் பயன்படுவது போல இங்க, ஹைராபாத், பெங்களூரில் என்று வேறு இரண்டு கம்பெனியில் கொடுத்து பண்ணுறோம். வேந்தன் பயன்படுத்த.. குவாலிடி செக் பண்ணவென்று சின்னதா ஃபேக்டரில் இருக்கு. “
” ஓ.. அப்ப தனு இங்க EV கம்பெனி மூலமாதான் வந்தாரா?. ”
” இல்ல.. வேந்தன்MBA முடித்தவுடன்.. அவனா அப்ளை பண்ணி வந்ததுதான். இங்க மருத்துவதற்கு பயன்படுத்தபடும் எல்லாம்.. டெஸ்ட் பண்ணுவாங்க. எங்களுக்கு வேந்தன் இங்க வந்த பின்னாடி.. அதுவும் EV ப்ராடக்ட் பண்ணப்போவதால் தான் சொன்னான். “
தன்னவன் இருவருடமாக பணி செய்த இடங்களை மெதுவாக நடந்து பார்வையும்.. பேச்சுமாக இருவர் மட்டுமே சென்றனர்.
” ம்.. சரி நீங்க அவங்களோட போங்க. நான் தனு கூட வேலை பார்த்த.. சில பேரை தெரியும். அவங்களிடம் பேசிட்டு.. கல்யாணத்திற்கு இன்வைட் பண்ண அங்க போறேன். ”
அவளை முறைத்து.. ” நீ எங்ககூட வந்துட்டு.. இப்ப நேரடியா அவங்களிடம் பேசினா சரியா இருக்காது. அதனால நீ வேந்தனிடம் போ.. அவன் சொல்வது போல பண்ணு. ” அவன் கண்ணசைவில் அவர்கள் காரில் வந்த பாதுகாவலர் வர..
” மெதுவா நடந்து.. வேந்தனிடம் கூட்டிட்டு போங்க. “
” தனு தான் இப்படி.. நீங்களும்மா. நான் கொஞ்சநாளில் வேகமாக நடப்பதையே மறந்துவிடுவேன் போல. ” பாவமாக கூற..
புன்னகையுடன்.. ” வேந்தன் இப்பவே உனக்கு மெதுவாக நடக்க டிரைனிங் கொடுக்குறான். ”
எழிலரசி புரியாமல் முழிக்க..
கைவைத்து சிரிப்பை அடக்கிய படி.. ” வேந்தனின் அரசி அவர்களே.. நீங்க விருப்பும் இரட்டை குழந்தைக்கு.. மூனுபேரும் ஹெல்தியா இருக்கவேண்டும் என்றால்.. அதில் ஒன்று நீங்க ரொம்ப நடக்கும்.. ஆனா மெதுவா நடக்கும். இப்பதான் இரண்டு கால் அடிபட்டு இருக்கு. அப்ப நீ உடனே பண்ணா சீக்கிரமா டையடு ஆகிவிடுவ. அதான் எதுவும் செய்யாம இருக்க.. இப்போதில் இருந்தே உங்கள் தனுவின் டிரைனிங். ” அவளுக்கு அவன் கூற கூற.. ஆனந்தமும் , வெக்கமும் வந்து முகம் மின்ன..
” இப்படியெல்லாம் முகம் சிவக்காதா தெய்வமே.. வேந்தன் ரொம்ப பாவம். ” மெதுவாக கூறி போ என விரட்டினான்.
நான் ரிமா லைட்டா வெக்கபட்டாலே.. அவ்வளவு தான். இப்படி சிவக்குறா.. வேந்தா உனக்கு ரொம்பவே பொறுமைதான். ம்.. அதனாலதான் இப்ப எங்களுக்கு வியக்க வைக்கும் காதலனான தெரிந்த.. இனி கணவனாகவும், தந்தையாகவும் எப்போதும் இருப்ப.