ராகவன், கணேஷ் மரவியாபாரம் தொழிலில் பெயர் பெற்றவர்கள். கணேஷ் வீடு மூன்று வருடம் முன் முழுவதும் மாடனாகவே கட்டப்பட்ட வீடு. வேந்தன் எழிலரசி அங்கு செல்லும் முன்னே சித்ரா, கமலேஷிற்கு கால் செய்தான் எடுக்கவில்லை. வேலையாக இருப்பார்கள் என வேந்தன் வாசலில் யாரையும் காணோம் என பார்த்தும்.. எழிலரசி அழகாக அமைந்திருந்த சிறிய தோட்டத்தை பார்த்தும் இருவரும் கைபிடித்தபடி அழைப்பு மணி அடித்துவிட்டு வந்தவர்கள்.. இருவரும் வீட்டினுள் சென்றார்கள்.
யாரும் இல்லாத பெரிய ஹாலில்.. பெரிய டிவி மட்டும் ஒடிக்கொண்டுயிருந்தது. வேந்தன் இந்த வீட்டிற்கு பால்காய்ச்சிய அன்று வந்தது.. அதன்பின் வரவில்லை. அறைகளை பற்றி தெரியாதலால்.. தன்னவளின் மாறாத முகப்பொலிவை ஒருநொடி பார்த்து.. பின் அத்தை சுமதிக்கு கால் செய்தான். அதுவோ அவர்களின் அருகில் இருந்த ஷோபா முன் இருந்த டேபிள் மேல் அடித்தது. அழைப்பு சத்தம்கேட்டு சுமதி அங்கு வந்தார்.
புன்னகையுடன்.. ” எழிலரசி வாவா.. வாடா வேந்தா. ” எழிலரசியை கைபிடித்து அமர வைக்க.. மெல்லிய புன்னகையுடன் தன்னவளின் அருகில் அமர்ந்தான். சுமதி அழைப்பில் சத்தம் கேட்டபின் சித்ரா, வினோவும் வந்தனர். இருவரும் எதிர் ஷோபாவில் அமர்ந்தனர்.
” அண்ணா.. சீக்கரமா வந்துட்டீங்க. ” மணி1.30. புரியாமல் வேந்தன் பார்க்க..
அவன் மணி பார்ப்பதை புரிந்து.. ” அண்ணா.. காலையில் கோயிலில் அவசரமா சாப்பிடதால்.. பந்தல்கால் வைத்தபின் எல்லா வீட்டிற்கும் நம்ம ஹோட்டலில் இருந்து டிபன் அனுப்பி.. அதை சாப்பிட்டோம். 2மணிக்கு மேலதான் எல்லோரையும் வரச்சொல்லி இருக்கு. அதான் கேட்டேன். ” சுமதி அவர்கள் புரியாமல் கேட்பதிலேயே எதுவும் சாப்பிடவில்லை புரிந்து.. சாப்பிட எடுக்கச்சென்றார்.
” அப்பா அதைபற்றி ஏதும் சொல்ல வினோ. ம்.. பரவாயில்ல. எங்க யாரையும் காணோம்?. ” அம்மா, தங்கை இருவரையும் பார்த்து கேட்க..
சிறிய முறைப்பை செலுத்திய சித்ரா.. ” ஏன்டா வெளியூர் இருப்பவங்க நேற்று சொல்லி இன்னைக்கு.. முறை செய்ய வரமுடியுமா?. டிரஸ் அவங்க வரும்போதும்.. சாப்பாடு பொருட்கள் வாங்க எல்லோரும் காசு அனுப்பியிருக்காங்க. ஐம்பது பேர் கிட்டதான் நாம்ம இருப்போம்.
காய், மற்றது நறுக்கி கொடுக்க ஹோட்டலில் இருந்து ஆள் வந்துயிருக்காங்க. நாங்களே செய்திட்டோம். வடை போட்டுக் கொண்டுயிருக்கு. அப்பளம் மட்டும்தான் போடனும். ” அவர் முடிக்க வாழைப்பூவடை, காரட்அல்வா வைக்கப்பட்டது.
சரி என அம்மாவிற்கு தலையாட்டி.. ” அத்த இதை கமலேஷ், வசு இல்ல நந்தினி சாப்பிட்டாங்களா?. ”
” ஏன்டா?. ”
” அவங்களுக்காக செய்வது தானே.. முதலில் சாப்பிட. ”
” டேய்.. உன்னாகவும் தானாடா செய்வது. ” அப்படியா என எழிலரசி சுமதியை பார்க்க..
” ஓ.. உங்களுக்கு தெரியாத. சனிக்கிழமை தான் செய்யலாம் என்று நினைத்தோம். பின்ன இன்னைக்கு யாரும் வரல.. வெள்ளிகிழமை கல்யாணத்திற்கு வந்து.. நடுவில் இருக்க ஒருநாளில் ஒருவேலையா உனக்கு மட்டும் இல்லாம மற்றவர்களுக்கு நான்.வெஜ் செய்யலாம் சொல்லிட்டாங்க. ”
” ம்.. ” அரசியை பார்க்க..
ஏதோ யோசனையில் இருக்க.. ” அரசிசி.. ” மெல்லிய குரலில் தட்டிஅழைக்க.. திரும்பியவள்..
” தனு சாப்பாடு என்னயிருக்குனு பார்த்துட்டு நான் ஏதாவது செய்யட்டா?. ” அதிர்ந்து மற்றவர்களை பார்த்து பின்..
” ஏம்மா.. இந்த விஷபரிட்சை?. ” அவனை முறைக்க..
” முயல்குட்டி நிறைய பேருக்கு செய்யனும். நீ செய்து பழக்கம் கிடையாதுல்ல. ”
எதுவும் சாப்பாடாமல் இருக்கவும்.. ” டேய் இரண்டுபேரும் சாப்பிடமா.. என்ன பேசிட்டுயிருக்கீங்க?. ” புன்னகையுடன் தன்அரசி கூறியதை கூற.. சுமதி சித்ராவை பார்த்தார்.
செய்யும் முறை கிடையாது தான்.. ஆனால் வேந்தனிற்கு செய்கிறோம் என்றதும் எங்கு என்று கூட யோசிக்காமல் மகிழ்வுடன் கூறியதால் மறுக்க மனம் வரவில்லை. இங்கு எந்த கணக்கும் இல்லை என்பதாலும்.. மகனின் முகத்தை பார்த்தே.. அவளுக்கு அதிகம் உணவு செய்து பழக்கம் இல்லை என்று புரிந்து..
மெல்லிய புன்னகையுடன்.. ” எழில் எல்லோருக்கும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்ல.. உனக்கு எவ்வளவு செய்ய வருமோ.. அந்த அளவில் மட்டும் வை. ” புன்னகையுடன் தலையாட்டி.. தன்னவனை பார்க்க.. அவனின் பார்வை ஒருஇடத்தில் அழுத்த பார்த்து திரும்பியது.
பின் அரசி காரட் அல்வா மட்டும் சாப்பிட்டு.. தன்னவன் வினோவுடன் சமையல் அறை சென்றாள். அங்கு சாந்தி, யோகா, தீபா அம்மா கனகா இருந்தார்கள்.
” ஹேய் எழில் என்ன சமையல்அறை பக்கம். எல்லாம் முடிந்தபின் வா. அப்ப சுற்றி பார்க்கலாம். ” வேந்தனை முறைத்து வா அழைத்தார்.
” லூசாநீ.. இடமே சூடா இருக்கு. கல்யாண ஜோடி நீங்க பிஷ்ஷா இருக்கனும். கூட்டிட்டு போடா. ”
வடையை பார்த்து எடுக்கும் அக்காவை முறைத்துவிட்டு.. கரண்டியை வாங்கி வைத்து.. அவரை திருப்பி.. ‘ நானா வரவில்லை.. இவள் வேலை ‘ என செய்த உணவை பார்த்துவிட்டு.. தன்னிடம்வருபவளை காண்பிக்க..
வந்தவள்.. ” தனு அவல்கற்கண்டு பாயாசம் செய்யுறேன். இந்தா பணம் வேண்டியதை வாங்கிட்டு வா. ” தன் போன் கவரில் வைத்துயிருக்கும் பணத்தை கொடுக்க..
பணத்தை பார்த்து.. ” கொழுப்புடி உனக்கு?. ” புன்னகையுடன் கேட்க வர.. அவளை முறைத்து.. முயல்குட்டி அவளின் கன்னம் பார்த்தவிட்டு புன்னகையுடன் வாங்க சென்றான்.
அப்போதுதான் யோகாவை கவனித்தவள்.. ” ஹாய் அண்ணி.. யார் அல்வா செய்தா?. சூப்பரா இருந்துச்சு. ” அவளின் நடவடிக்கை புரிந்து.. பின்னால் இருந்த கனகா சித்தியை காண்பிக்க.. நன்றாக இருந்தது என்ற சைகையுடன் புன்னகைத்தாள்.
புன்னகையுடன்.. அம்மா போட்ட வடையை திருப்பியவாறு.. ” என்ன உன் தனுமாமாவிற்கு கல்யாண சாப்பாடு செய்யப்போறியா?. ”
வெக்கம் மறைத்து.. ” ம்.. எங்க தர்ஷினிய காணோம்?. ” அவளின் அருகில் சென்று மெல்லியகுரலில் கேட்க..
ஏதோ புரிந்து.. அவளும் மெல்லிய குரலில்.. ” மற்ற மூனுபேரும் பேசுவது இல்லையா?. ”
இல்லை என தலையசைத்து… ” அண்ணி போக போக பேசுவாங்க.. எனக்கு அதை பற்றி கவலை இல்ல. கேட்ட கேள்விக்கு பதில். ”
சரி என புரிந்து.. பெருமூச்சு விடுத்து.. ” மாடி ஹாலில் பெண்ணுங்க எல்லாம் பேஷியல் பண்ணிய பிறகு.. இப்பதான் பசங்க வந்தாங்க. அவங்கள சாப்பிடும் நேரம் வந்தா போதுனு சொல்லியிருக்கு. மாடியில் அவங்க பேசிட்டு..
அப்படியே நீங்க வாங்கிட்டு வந்த டிரஸை பார்த்து எந்த பங்ஷன் எந்த சேலை, நகை போடுவது என்று ஜோடியா கலந்து பேசி எடுத்து வைத்துக் கொண்டுயிருக்காங்க. ”
அப்படியா என அழகான பிரவுன் மற்றும் கிரேகலர் சமையல்அறையை பார்த்தபடி இருந்தவளின் அருகில் அவளவன் தான் வாங்கியதை கொடுத்தான்.
உணவுப்பொருட்களுடன் செய்யும் பாத்திரமும் புதிதாக இருந்தது. அவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச்சென்று.. பூக்களை எடுத்து.. கூந்தலை மொத்தமாக மடித்து கல்வைத்த பெரிய கிளிப்பில் அடக்கினான்.
ஹோட்டலில் இருந்து கொண்டு வரச்சொன்ன.. மாதுளை, புதினா, தேன் கலந்த ஜூஸ் அனைவருக்கும் கொடுத்து.. ” செய்யடி முயல்குட்டி ” மெல்லிய குரலில் கூறி அவளின் அருகில் சற்றுதள்ளி நின்றுக் கொண்டான்.
அவன் செய்த கூத்தை அனைவரும் பார்ப்பது ரசித்து புன்னகைத்ததினால்.. வெக்கத்துடன் அரசி செய்ய ஆரம்பிக்க..
” வேந்தா.. ஒரு ஸ்விட் செய்ய.. உன் அரசியை போர்களத்திற்கு அனுப்புற மாதிரி பக்காவா ரெடி பண்ணி அனுப்புற. ” புன்னகையுடன் கூற..
” ஒரு ஸ்விட் எனக்காக செய்யுறேன் சொன்னாதினால தான் சரினு விடுறேன். நீங்கதான் ஹீட்டா இருக்குனு சொன்னீங்க. அதான். ”
” அப்ப மற்ற சாப்பாடு.. ” முடிக்கும் முன்..
” அக்கா நான் எதுக்கு கத்து வைத்துயிருக்கேன். அவ சாப்பிடும் வேலைய ஒழுக்கா செய்தாலேயே போதும். நான் அந்த நேரத்தில் ஒருவேளைக்கு தேவையானதை செய்துவிடுவேன். ”
தன் வீட்டிற்கு சில வருடங்கள் கழித்து வந்துயிருக்கும் அண்ணன் மகன் வேந்தனின் செயலை பார்த்து ரசிக்க வேண்டி சுமதி, சித்ராவை அழைத்துக் கொண்டு அறை உள்ளே காய்கறி நறுக்க சிறிய டேபிள், சேர் இருக்க அதில் அமர்ந்துவிட..
வேந்தன் சிரிப்புடன்.. தன்னவள்.. தன் விருப்பமார்களுடன் கதை பேசிக் கொண்டுயிருந்தான். இவனின் இப்படியான மனம்விட்டு பேசும் வேந்தனை அந்நேரத்தில் இனி எப்போதும் தன் துணையுடன் இதுபோல் இருக்க வேண்டும் என்று மட்டும் தான் தோன்றியது.
மாடியில் இருந்தவர்கள் முதலில் பங்ஷனிற்கு தேவையானதை.. கவரின்மேல் எப்போது போடவேண்டும் குறிப்புடன் ஆண்கள், பெண்கள் தனித்தனி பெட்டியில் வைத்துக் கொண்டுயிருந்தனர்.
” பார்த்திபா.. தர்ஷினிக்கு எல்லாம் நாளுக்கும் எடுத்து வைச்சாச்சு. நாங்க கீழ போறோம்?”
” மாமா.. அதுக்குள்ள வைச்சுட்டீங்களா?. ”
” டேய்.. வாங்கும் போதே இந்த இந்த நாட்களுக்கு தான் பிரியா வாங்கினா. “
தன் தங்கையை ‘ அவ்வளவு விவரமா நீ!. ‘ என புன்னகையுடன் பார்க்க..
அவன் பார்வை புரிந்து.. ” டேய்.. உன் தங்கை அவ்வளவு விவரம் இல்ல.. எழிலரசி, வேந்தன் மாறிமாறி.. திருச்சியில் ஆரம்பித்து.. கடையில் எடுக்கும் முன் வரை ஐம்பது தடவை சொல்லியும் அவ கேட்காம இருப்பாளா. ”
அவனை முறைத்து.. ” என் தங்கை கேட்டா.. உங்க தங்கை கேட்கலையே.. ஒரே குழப்பாமா இருக்காமா. “
மேகா எடுக்கும்போது தெளிவாக எடுப்பாள்.. பின் மற்றவர்களின் தேர்வை பார்த்து நமக்கு சரியாக இருக்குமா என நேரம் எடுத்து பின் தான் அணிவாள் என தெரிந்ததால்..
” மச்சான்.. ஒன்னு அஸ்வின் அண்ணா மாதிரி போய் தூங்கிடு.. இல்ல நீயே களத்தில் இறங்கிடு. நான் அண்ணாவ எழுப்பி மூனுபேரும் கீழ போறோம்.
” சரி என அவன் பார்க்க ஆரம்பிக்க.. இருவரும் மேகா, தர்ஷினி பேஷியல் செய்த விருந்தினர் அறையில் வைத்துவிட்டு.. தர்ஷினி ரெஸ்ட்ரூம் செல்ல.. அஸ்வினை எழுப்ப.. அவனும் முகம்கழுவி வர..
மூவரும் கீழே போக வரும்போது.. ” மாமா கீழ போறீங்களா?. ”
” ஆமாம் கமல். ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வருனுமா?. ” பார்வை நந்தினியிடம் இருந்தது.
” இல்ல.. நீங்க நந்தினி எடுத்து வைத்ததை பார்க்கலையே.. ” முடிக்கும் முன்..
” சென்னையில் நாங்க வாங்கியது தவிர வேற இருக்கா?. ”
” புடவை எல்லாம் அதே தான். நகைகள் வேற.. ” முடிக்கும் முன்..
” நகைகள் அவளுக்கு பிடித்ததை தானே வாங்கினா. இல்ல வேற யாராவது வாங்கியதா?. ”
” நந்தினி வாங்கியது தான். ” ஓ.. அவனை முடியல என்ற பார்வை பார்த்து..
” கமல் நாங்க உடை வாங்கும் போதே.. எப்ப போட வேண்டும் என்று பார்த்துதான் வாங்கியது. அதற்கு ஏற்ற நகையும் அப்பவே வாங்கியாச்சு. வேற பார்த்தா.. அவளுக்கு பிடித்தை போட நினைக்கிறா. பின்ன இதில் நான் பார்க்க என்ன இருக்கு?. ”
” ம்.. நீங்க சொல்வது சரி தான். ” வசுவும் நந்தினியும் ஒருபோல தான் இருந்தார்கள்.
இருங்க நானும் வரேன் என்பது போல எழுந்துவிட்டான். ” தாரா நீங்க எடுத்து வைத்துட்டு கீழ வாங்க.. இல்ல போன் பண்ணுங்க சாப்பாடு மேலேயே கொண்டு வரேன். ” வசு அவனை பார்த்து சரி என தலையாட்டல் மட்டுமே.
நந்தினி அஸ்வினை பார்க்க.. அவன் போனில் ஏதோ பார்த்திருக்க.. ” அண்ணா.. சாப்பாடு ரெடியானதும் ஆயில் புவுட் இல்லாம சாப்பாடை மேல கொண்டு வந்துவிடு. ”
அஸ்வின் பேசியதை கேட்டாள். அவன் உன் விருப்பம்.. எது போட்டாலும் பிடிக்கும் என மையலுடனே கூறிவிட்டான். ஆனாலும் ஒரே வீட்டில் மூவர் இருப்பதால்..
தர்ஷினி, மேகாவை விடவும்.. அதுகூட வேந்தன் வசுந்தராவிற்கு எடுத்த சேலை, நகைகள் மிகவும் நன்றாக இருக்க.. வசுந்தராவே அவள் எடுத்த வைத்த சிலவற்றை எடுத்து வைத்துவிட்டு.. வேந்தன் வாங்கியதை பார்த்து எடுத்துக் கொண்டுயிருக்கிறாள்.
அதனால் மூவரை விடவும் நன்றாக இருக்கவேண்டும் என சாருலதாவிற்கு வாங்கியதையும் பார்த்து அதிக நேரம் ஆகிக் கொண்டுயிருக்கிறாள். அஸ்வினின் பொறுமை எல்லை கடக்கவே அவனின் பேச்சு.
நந்தினி கூறியதை கவனித்த அஸ்வின்.. ” நந்தினி வீட்டில் இருந்து எல்லாம் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க. ” வசு, நந்தினி இரவு உடையை பார்த்தான்.
” நந்தினி சேலை மாற்றிக்கோ.. வசுந்தரா சுடி போட்டுக்கோ. ”
” அஸ்வின் நானும் சுடி போறேனே. நான் வீட்டில் சேலையே போட்டது இல்ல. ”
” நந்தினி.. வசுக்கு சேலை கட்டி பழக்கமே இல்லனு வேந்தன் வசுக்கு சேலை பார்க்கும் போது சொன்னார். அதனால சொன்னேன். அவங்க இஷ்டம். நீ இப்போலிருந்து வீட்டில் போட்டு பழகிகோ. நாம்ம பெங்களூர் போகும் வரை சாப்ட்சில்க் சேலை மாதிரி சீக்கிரமா கட்டுவதுபோல..
உனக்குவசதியா இருக்க மாதிரி சேலை கட்டு. அதையும் பார்த்து வை. தேவையானது இல்லனா சொல்லு. சாய்ந்திரம் வாங்கிட்டு வரேன். “
மேகா, தர்ஷினியை பார்க்க.. அவர்கள் சுடி மாற்றியிருக்க.. ” மேகா, தர்ஷினி உங்களுக்கும் தான்.. பங்கஷன் போடும் சேலையை மட்டும் பார்க்காதீங்க. அதற்கு பிறகு, நடுவில் மாறிபோடும் சேலையும் நல்லா இருக்கனும். சாப்பிட்டு வீட்டிற்கு போய் பார்த்து சொல்லுங்க. ”
” அண்ணா.. நான் நைட் தான் வீட்டிற்கு வருவேன். “
” ஏன்?. இப்ப சாப்பிட்டு வீட்டிற்கு போயிட்டு பின் மாலை அருணாச்சலம் மாமா வீட்டிற்கு போவதானே பிளான். ” அவள் நந்தினியை பார்க்க.. அவனோடு சேர்த்து ஆண்கள் மூவரும் நந்தினியை பார்த்தார்கள்.
இதை மறத்தே போய்யிட்டனா. ” அஸ்வின் சாய்ந்திரம் என்னோட, வசுவோட ஸ்கூல் பிரண்டஸ் எல்லாம் வரேன் சொன்னாங்க. மேகாவோட பிரண்டசும் அங்க வரவங்க.. இங்க வர முடியும் சொன்னாங்க.
தர்ஷினிக்கு மெஹந்தி போட விருப்பம் இல்லனு சொல்லிட்டாங்க. அவங்களுக்கும் எழிலரசிக்கும் தானே நைட் சாப்பாடு செய்வது. சரி மெஹந்தி போடும் நாங்க பிரண்ட் எல்லோரோட இங்க இருக்கலாம் நினைத்தோம். ”
அவளின் பேச்சில் பாதி உண்மை, பாதி பொய் போல் இருக்க..
” வேற ஏதாவது இன்னும் பாக்கி இருக்கா?. ” அவனின் பார்வையை கவனிக்காமல்.. ” ம்.. நாளைக்கு நலங்கு வைப்பதை எல்லோருக்கும் ஒரே வீட்டில் தான் வைக்கனும்மா?. அவங்க அவங்க வீட்டில் வைத்துக்கொண்டா என்ன?. ”
” ஏன்? ”
” எல்லோரோட வீடும் ரெடி ஆகிடுச்சு. அவங்க அவங்க வீட்டில் இருந்து மண்டபத்திற்கு வந்ததா அப்பா, அம்மா முதற்கொண்டு எல்லோருக்கும் நல்லாயிருக்கும். அதான். ”
” ஓ.. இப்படி அம்மா, அப்பாவிற்கு நல்லாயிருக்கும் என்ற எண்ணம் வேந்தன் வீட்டிற்கு போய்வந்த பின்னாடி வந்ததா?. இல்ல அதற்கு முன்னாடி நாம்ம எல்லாம் பஸ்சில் வரும்போது வந்ததா?. ”
கண்டுபிடிச்சுட்டானா!. ” அஸ்வின் இரண்டிற்கும் நடுவில் இங்க, பாட்டி வீடு பார்த்த பின்னாடி வந்தது. வசுக்கு வேந்தன் பாட்டிற்கு வீட்டிற்கு வந்து பண்ணுவாரு. எல்லோர் வீட்டிலும் முடியும்போது எதுக்கு ஒன்னா வைத்துக்கொண்டு. ”
” பிளான் எல்லாம் பயங்கரமா இருக்கு?. ஆனா ” அதிக குரலில் கோபமாக கேட்க முன்னே சொல்ல பார்க்க..
“அண்ணா, மாமா ” கமலேஷ்,கதிரவன், பார்த்திபன் ஒரு சேர அழைத்து.. அஸ்வினை தடுத்து..
இருவரும் உங்கள் தங்கை, வருங்கால மனைவிக்காக நீங்களே பேசுங்கள் என கமலேஷை பார்த்தனர்.. ” மாமா.. இப்ப நந்தினியிடம் பேசியோ.. விளக்கம் கேட்டு ஒருபயனும் இல்ல. மெஹந்தி கூட இங்க பண்ணலாம். நாளைக்கு எதையும் மாற்றமுடியாது.
யாருக்காக நீ வருத்தப்படுறியோ.. அவங்க எல்லாம் நல்லா யோசித்து முடிவு பண்ணதுதான். அந்த கவலை உனக்கு வேண்டாம். ” நந்தினியை நேரடியாக, வசுவை மறைமுகமாக பதில் அளித்து..
நால்வரையும் பார்த்து.. ” உங்கிட்ட சென்னை போகும்போது யார்யார் வீட்டில் என்ன வைக்கலாம்?. என்று கலந்து பேசி.. வேந்தனிடம் கூறி அதன்பின்னாடி தான் எல்லாம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தது.
அவரசத்தில் முடிவு பண்ண கல்யாணம்.. உங்களுக்கு எது தேவை, விருப்பம் என்றாலும் எங்கிட்ட முதலில் சொல்லி.. அதன்பிறகு உங்களுக்கு உள்ள கலந்து பேசிக்கோங்க. இல்ல எங்க முன்னாடியே வெளிபடையாவே பேசுங்க.
எங்ககூட இப்ப தேவையில்லாத கருத்து வேறுபாடு வந்தது என்றால் அதன்வெளிபாடு மேடையில் தெரியும். அதை ஒருபோதும் நாங்க அனுமதிக்க மாட்டோம். ” மூவரை பார்க்க..
ஆம் என பார்த்தனர்.. கமலேஷ் நந்தினியிடம் பேச ஆரம்பிக்கும் போது.. தர்ஷினி ஏதோ கதிரவனிடம் பேசுவதை பார்த்து அமைதியாக..
கதிரவனிடம் தர்ஷனி மெல்லிய குரலில் புன்னகையை கட்டுப்படுத்தி.. ” மாமா.. அண்ணாவ பேசியது போதுனு.. சொல்லி அப்படியே கூட்டிட்டு போயிடலாம். இல்ல இவர் கல்யாணம் முடிந்தும்.. எல்லோரையும் தனித்தனியா படுக்க வைத்துவிடுவார் போல. ”
இதை கதிரவன்.. புன்னகையுடன் கமலேஷிடம் கூற.. தர்ஷினியிடம் சிரிப்பும் முறைப்புமாக.. ” நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். “
“போதும் அண்ணா.. வீட்டில் இருப்பவங்க இதையே பல தடவை சொல்லிட்டாங்க. பசிக்குது. சாப்பிட்டு வாசனை வேற வகைவகையா வருது. சாப்பிட போகலாமே. ”
புன்னகையுடன்.. ” எழிலரசி கிட்ட பக்கா டிரைனிங் போல. அவள மாதிரி பண்ணுற. ” புன்னகையுடன் நந்தினி, வசுவிடம் திரும்பி..
“சரி நீங்க டிரஸ் மாற்றி வாங்க. நாங்க கீழபோறோம். “
அப்படியே சாந்த முகம் மாறி பேசி.. மற்றவர்களை போகலாம் என பார்த்தான். நந்தினி இல்லை வசுந்தரா சேலை கட்ட உதவ வேண்டி மேகாவை பார்த்திபன் போக கூற.. அவர்களுடன் அவளும் சென்றாள்.
எழிலரசி வீட்டிற்கு போகமாட்டோம் என்ற துள்ளலுடன் உடை மாற்ற உள்ளே வந்த மற்ற இருவர் நாளை மாற்றுவது சந்தேகம் தான்!. என்று தெரியும்.. இருந்தாலும் கேட்கலாம் என்று நந்தினி கேட்டாள்.
கீழே தர்ஷினி,கதிரவன் முன்னால் செல்ல பின்னால் தர்ஷினி, கதிரவனின் அடங்கபட்ட புன்னகையுடன் கூறுவதை பார்த்ததில் என்னவென்று புரிந்து.. மூவருமே சிரித்து பேசியபடி சென்றார்கள்.
” தனு எல்லாம் சரியா இருக்கானு பாருங்க. ” புன்னகையுடன் சிறிய டம்ளரில் கொடுத்ததை ருசித்த பார்க்க கொடுக்க.. அவன் அவளை முறைத்து கொண்டுயிருந்தான்.
” நல்லாயிருக்கா?. இல்லையா? தெரிய நாலாவது தடவை தானே கொடுக்கிறேன். ”
‘போடா ‘ என பார்தது அவளே தெரிந்துக் கொள்ள அதனை பருக..
அவளின் சிவந்தஇதழ் மேல் இருந்த ஒருதுளி பால் அவனை கிறங்க வைக்க.. உள்ளே இருந்தவர்கள் சமையல் முடித்து.. எல்லோரும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் என்பதால் உடைமாற சென்றுயிருக்க.. தன்னவளின் அருகில் அவள் உணரும் முன் மென்முத்தம் பதித்து அதை சுவைத்து.. டம்ளரை தன் கையில் கொண்டுவந்து.. தான் ஒன்றும் செய்யவில்லை என்ற பாவனையில்.. அவனின் இடத்தில் அதில் இருந்தை பருகிவிட்டு கள்ளப் புன்னகையுடன்.. ” ம்.. எல்லாம் சரியா.. சூப்பரா இருக்கு முயல்குட்டி. “
ஒரு நொடி அவளும் கிறங்கி.. பின் இடம் உணர்ந்து வெளியே பார்த்துவிட்டு.. அவள் கூறவருகையில்..
” எழில் அக்கா நீங்க இங்க ?.. ” தர்ஷினி ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க சமையல்அறை வர.. தன் அக்காவை இங்கு எதிர்பார்க்காததால் சத்தமாகவே கேட்க..
தன்னவனிடம் பேச வந்த வேகத்தில்.. ” ஏன்னடி இப்படி கத்துற?. ”
அவளின் முகச்சிவப்பு.. புன்னகையுடன் நின்றுயிருந்த மாமா.. அவளின் அருகில் சென்று.. மெதுவாக ” ம்.. அக்கா நான் தப்பான நேரத்தில் வந்துட்டேன் போல. ” இவள.. எழிலரசியால் முறைக்க மட்டுமே முடிந்தது.
தர்ஷினி அவளை புன்னகைத்து… ” அக்கா.. மாமாவிற்கு நீ ஏதாவது செய்தீங்களா?. ”
‘ ஆம் ‘ எனஆசையுடன் தலையாட்ட.
” சோ கீயூட் அக்கா. ” அவளின் கன்னத்தை பிடிக்க போக.. ” தர்ஷினி.. ” அழைப்பில்.. ” மாமா.. நீங்க இங்க தான் இருக்கீங்களா?. “
” நான் இருந்தது உனக்கு தெரியாது?. ”
” இல்லையே.. ” தெரியவே தெரியதா பாவனை காண்பித்தாள்.
முயல்குட்டியோட சேர்ந்தது எல்லாம் கேடியாதான் இருக்கும்போல என்று நினைத்தபடி தன் அரசியை பார்க்க.. அவள் தன்னவனிற்கு.. தங்கள் கல்யாணத்திற்கே முறை சாப்பாடு செய்த மகிழ்வில் சிரிப்புடன் தங்கையிடம் உடல்மின்ன இருப்பளை ரகசியமாக ரசிக்க ஆரம்பித்தான்.
” எழிலரசி முடித்தாச்சா? ” யோகா அவசரமா கேட்டபடி உள்ளே வர.. அவளோடு சேர்த்து அவளின் பின்னால்.. சென்றவர்கள் அனைவரும் மெல்லிய கறைவைத்த புடவை அணிந்து அழகுடன் வந்துவிட்டனர்.
” ம்.. முடுச்சுட்டா அக்கா. ” பிரிட்ஜில் வைத்திருந்த இரு கவரில் இருந்த பூவில் ஒன்றை கொடுத்து..
” நீங்க இதை வைத்துகொண்டபின்.. உணவை எடுத்து வைங்க நாங்க வந்தர்றோம். ”
இப்போது தான் கார்த்தியிடம் வாங்கிவர கூறிவிட்டு வந்தாள். ஆனால் தம்பி கூறாமலே வாங்கி வந்திருப்பதால் அவனின் கைபிடித்து இழுத்து..
” டேய் இப்படி ஓவர் ஸ்மாட்டா எல்லோர் முன்னாடியும் இருக்காதடா. பார்ப்பவர்கள் எல்லாம் உன் அரசி மேல தான் பொறாமைபடுவாங்க. ”
” பரவாயில்லை. அரசி யாருக்கும் தெரியாம.. எனக்கு பண்ணுவதில் சமமாகி விடும். ” மெல்லிய புன்னகையான குரலில் கூறி..
விருந்தினர் அறையில் அவளின் கூந்தலை அலங்கரித்து.. அவன் கூறியது போல தன்னவளிடம் பல முத்தங்கள் பெற்று சமமாகி கொண்டு வெளிவந்தார்கள்.
எழிலரசியின் பெரியப்பா, அப்பா என குடும்பத்தினர் அனைவரும் முதலில் வர.. பின் அத்தை வீட்டனர் என மற்ற அனைவரும் வரத்தொடங்கினர்.
நீண்ட தூரம் உள்ளவர்களுக்கு பத்திரிக்கை, உடையுடன் விரைவு கொரியரில் அனுப்பபட.. அருகில் உள்ளவர்களுக்கு பத்திரிக்கை வைக்க சென்ற சுந்தர்ராஜன், ரவிந்திரன், கணேஷ் வரவிற்காய்.. பெரியவர்கள் ஷோபாவிலும், இளையவர்கள்கீழே விரித்து இருந்த மெத்தையில் அமர்ந்து காத்துயிருந்த படியே புதியவர்கள் வீட்டை பார்த்தவாறே பேசிக்கொண்டுயிருந்தனர்.
அப்போது கமலேஷ்.. நந்தினி கூறிய மாலை மெஹந்தி போடும் நிகழ்வை பற்றி அனைவரிடமும் கூற.. சிலர் முதலில் தேவகி, ராதாவை தான் பார்த்தார்கள்.. அவர்கள் தான் இரண்டிற்கும் முக்கியமார்கள். இதுபோலான பழக்கம் இல்லை.. ஒரே இடத்தில் என்றால் எல்லாம் ஒருவேலையாக போகும். யாருக்கும் ஒன்றும் தெரியாது என சிறியவர்களின் விருப்பத்திற்காக சரி எனக் கூறியிருந்தார்கள்.