” திலகா தாரா தோழிகள்.. உறுதி பற்றி இப்படி சொன்னதா லதா ஏற்கனவே சொல்லியிருக்கா. அப்பதான் வேந்தன் கல்யாணம் முடிந்தவுடன் அடுத்த இரண்டுமாதத்தில் திருமணம் என்று முடிவுஎடுத்து இருந்தேன்.
வேந்தன் அவளுக்கு அண்ணா செய்முறைக்கு எல்லா வாங்கி கொடுத்து இருக்கான். ஆனா அதை அவன் கையில் எதையும் கொடுக்கல.. இதில் இருந்தே அவனின் கடமை மட்டும் தான் தெரியுது.
எழிலரசி அன்னைக்கு நைட்டில் இருந்து தாராவை பார்ப்பதே இல்ல. அன்னைக்கு நடத்ததை மறந்து.. இரண்டுபேரை கொஞ்சமாவது கவனித்து.. எல்லோர் பற்றியும் யோசித்து பேசாமா.. தன்னைபற்றி நினைத்து பேசுவது தான் கவலையா இருக்கு.
பெருமுச்சு விடுத்து.. ” திலகா.. அப்பா, மாமா என்னிடம் முதலில் வேலைபற்றி தான் பேசினாங்க. அவ விருப்பட்டா நாங்க வேண்டானு சொல்ல மாட்டோம். பிறகு உங்க விருப்பம் என்று சொல்லிட்டாங்க. இப்போதைக்கு நான் வேலை பற்றி இன்னும் எதுவும் யோசிக்கல. ஏன் அவ காலேஜ் முடியும் வரை கல்யாண வாழ்க்கை பற்றியே யோசனை இல்ல.
அவ காலேஜ் முடிக்கிற இந்த இடைபட்ட காலத்தில் வேந்தன் சொன்னமாதிரி அவள பற்றி.. நல்லா புரிந்துகொண்டு பின்னதான் அடுத்த கட்டம் பற்றியே யோசிக்கனும். அப்ப அவ விருப்பம் எதுவென்றாலும் எனக்கு சம்மதம் தான். ”
அவ்வளவு நல்லவனா?. நீ என்ற பார்வை இன்பாவை தவிர மற்றவர்களிடம் இருந்து வர..
அதனை புரிந்து.. புன்னகையுடன்.. ” ஏன்டா.. வேந்தன் எழிலரசி எதிர்காலத்திற்கு என்று எழிலையும், வீட்டில் இருப்பவர்களை விட்டு இருந்தாலும்.. கட்டுபாடோட இருந்து எழிலரசிக்கு முற்கொண்டு எல்லோருக்குமான கடமையை சரியா செய்தான்.
நான் கூட இருந்து எல்லோருக்கும் செய்யபோறேன். ஆனா அவனா மாதிரி கல்யாணம் ஆகாமா என்னால உரிமையா செய்ய வரல. அந்த ஒருகாரணம் தான் இரண்டுமாதத்தில் கல்யாணம் என்று முடிவு எடுத்து. அது இப்ப உடனே நடக்கபோகுது.
கூடவே அவ வயசில் சாருலதா இருக்கா. அதனால நான் எப்படியும் இரண்டுபேர் படிப்பு முடியும் வரை தாராவிடம் மனைவிக்கான எந்த யோசனையும் எனக்கு வராது. “
” ம்..நீ சொன்னது சரியான காரணம் தான். ஆனாலும் நீ வேந்தனை மட்டும் முன்மாதிரியா எடுத்துக்காத தம்பி. அவன் சரியான.. ”
புன்னகையுடன் கூறிக் கொண்டுயிருந்தவன் முன் சத்யா வந்து நின்றாள். அவனின் வார்த்தை பாதியில் நின்றது. ‘ அய்யோ இவ எப்ப வந்தா தெரியலையே?. ‘ அவனின் பார்வை முன்.. தன் தியா முறைத்தபடி கைநீட்டி நிற்க.. ஒரு நொடி என்னவென்று முழித்து.. மற்றவர்களை பார்க்க.. சிரித்தபடி இருக்க..
அதில் இன்பா.. ” மாமா.. மேடம் இப்பதான் முதன்முறையா மெஹந்தி வைக்கிறாங்க. அதனால காலை வரை காத்திருக்க முடியாம.. உங்களிடம் காட்ட வண்டியில் வந்துயிருக்கா. ” அவனின்அருகில் மெல்லிய குரலில்..
” நீங்க கமலேஷ் அண்ணாவிடம் பேசும் போது வந்த சத்யாவோடபோனை எடுக்கல.. அதான் முறைக்கிறா. மாமாவ பற்றி பேசியதை கேட்கல. “
அப்பாடி.. புன்னகையுடன் சத்யாவை அமர வைத்து பார்த்தான். பின் அவள் இன்பாவிடம் காண்பித்து மற்றவர்களிடம் காண்பித்துவிட்டு.. ” காலையில் பார்க்கலாம் ” உடனே பாய் கூறி கிளம்பிவிட்டாள்.
திலகன் வழியனுப்ப செல்ல.. அவள் வீடுவரை இருவரும் நடந்தே சென்று வீட்டில் விட்டுவிட்டு வரும்போது.. அவள் வண்டியில் வரவேண்டும் என்ற திட்டத்துடன் அவள் பின்னால் சென்றான். புன்னகையுடன் அவனை பார்த்திருந்து திருப்ப.. வேந்தன் வெளியே வந்தவன் இன்பா,கதிரவன் நடுவில் கால்நீட்டி அமர்ந்தான்.
” நீங்க யாரும் பேஷியல் பண்ணிக்கல போல. ஆள் வந்திருக்காங்க அனுப்பிவிட்டு இருக்கீங்க. ”
அவனை முறைத்து கமலேஷ்.. ” டேய்.. பொண்ணுங்க அளவிற்கு எங்களுக்கு பொறுமை இல்லப்பா. அதனாலதான் அனுப்பிடோம். கொஞ்ச நேரத்தில் முடியும் மாதிரி உன் ப்ராடெக்டில் நமக்கும் இருக்கா?. ”
” கமலேஷ் நீங்க இன்னும் EV வெப்சைட் பாக்கலையா. ” இல்லை என தலையாட்ட..
” அதுலபெண்கள் அளவிற்கு ஆண்களுக்கும் இருக்கு. நம்ம ஊரில் தான் ஆண்கள் முகம் பராமரிப்புக்கு ஷேவ் தவிர வேற ரொம்ப பயன்படுத்த மாட்டோம். ஆனா வெளிநாட்டில் பெண்கள் அளவிற்கு.. ஆண்களும் 30சதவீதத்திற்கு மேல் பயன்படுத்துவாங்க. அதனால EV வெளிநாட்டிலும் நல்லா விற்பனையாகும் ப்ராடெக்ட். “
அப்படியா என வேந்தனை பார்த்துவிட்டு.. ” அப்ப அதில் என் ஸ்கின் ஏற்றார்போல கொடு. ”
அவனின் தோளில் அடித்து.. ” ஏன்டா நான் இங்க கடையா வைத்துயிருக்கேன். காலையில் போய் வாங்கிக்கோ. ”
” டேய் நீ வைத்துயிருப்பதை கொடுடா. ”
நெற்றிதேய்த்து.. ” டேய்.. அதில் ஒன்னு கூட நான் பயன்படுத்தியது கிடையாது. ஆண்களுக்கு நான் ப்ராடெக்ட் தயாரித்ததும் இல்ல. என்கிட்ட அரசிக்கு மட்டும்தான் இருக்கும். ”
அஸ்வின் முதற்கொண்டு ஆச்சரியத்துடன்.. ” வேந்தன் இத்தனை வருடத்தில் ஒரு ப்ராடெக்ட் கூட உபயோகித்தும், உருவாக்கியதும் கிடையாதா?. “
‘ இல்லை ‘ என புன்னகையுடன் தலையாட்ட..
” கமலேஷ் திலகன் சொன்ன மாதிரி இவரை மட்டும் முன்மாதிரியா எடுத்துக்காதிங்க. எழிலரசி பற்றி அதிக நினைக்க மாட்டேனு சொன்னார். ஆனா ஆபிஸ், வீடு என்று 24மணிநேரமும் நினைத்துகொண்டே தான் இருந்துயிருக்காரு. ” வாவ்!. என எண்ணியபடியே வெளியில் ஓட்டினான்.
” ஆமாம். ஆனா தனியா தானே இருந்தான். அதனால என் மச்சனை தாராளமா பின்பற்றலாம். “அவனின் தோள் அணைத்து கூறினான்.
வேந்தனிற்கு அவர்களின் பேச்சு புரியவில்லை. ஆனால் தன்னவளின் நினைவில் இருந்ததை.. இப்போது நினைத்து மகிழ்வுடன் எண்ணினான். பின்னர் நள்ளிரவு வரை அவர்களின் அரட்டை தொடர்ந்தது. நடுவில் திலகன் இணைந்திருந்தான்.
வேந்தன் தன்னவளிடம் செல்ல.. இருவர் இன்பா அறையில்.. மற்றவர்கள் மற்றொரு அறையில் உறங்க சென்றனர்.
பகவலன் தன் பணியை சிறப்பாக ஆரம்பித்து ஒருமணி நேரம் ஆனாது. எழிலரசி வீட்டின் முன் நவதானியங்கள், நவமணிகள் இட்டு.. பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலைபாக்கு, பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி.. நுனியில் 5 மாவிலைகள், மஞ்சள் பூசியகயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட்ட பட்டு இருந்த முகூர்ந்தகால் அதை ஊன்றல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதை தன்னவனின் கைபிடித்து.. பட்டும்படாமல் சாய்ந்தபடி பார்த்திருந்தாள் வேந்தனின் அரசி. சிலர் இதனை பார்த்தும் பார்க்காமல் இருந்தனர்.
பூஜை அறைக்கு சென்று பாட்டி இருவருக்கும் பிரசாதம் மீண்டும் ஒருமுறை நெற்றியில் இட்டுவிட்டு.. ஹாலில் அமர கூறினார்.
பின் பெரியவர்கள் பூஜை அறை முன்.. ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றி.. பாலில் ஊறவைத்த நெல்,கோதுமை, பயறு, துவரை, மொச்சை,எள், கொள்ளு, உளுந்து, கடலை நவதானியத்தை..
பாட்டி ரெங்கநாயகி, பார்வதி, அம்பிகா, தேவகி, சுரபி அச்சட்டிகளில் தூவி பின் நீரும் பாலும் 3முறை தெளித்து.. பின் பூஜை அறையினுள் வைத்துனர். இதனை திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். வெளியே பந்தல் அமைக்க ஆரம்பித்தனர்.
வீட்டில் உள்ளவர்கள், இரவு இருந்தவர்கள், உறவினர் சிலர் காலையில் வர..
கூடவே வேந்தனின் சென்னையில் இருந்து வந்த 4 தங்கைகள், நண்பன் ஆகாஷ் மற்றும் அவர்களின் துணைகள், அவர்களுடனே வந்த சந்துரு என ஹாலில் பெரியவர்கள், சாப்பிடும் இடத்தில் இளையவர்கள் அமர்ந்தனர்.
வேந்தன், எழிலரசி முதன்முதலில் அமர்ந்த இடத்தில் இன்று தைரியமாக கைகோர்த்தபடி.. இளையவர்களின் நக்கல், கேளி பேச்சுகளை புன்னகையுடன் கேட்டு.. பதில் அளித்தபடியே மணப்பெண் அரசி.. தன்னவன் தனு மற்றும் மணமகன்களான மூன்று அண்ணாக்களுடன் சத்துமாவு கஞ்சி குடிக்க.. மற்றவர்வர்கள் காபி மற்றும் ராகி கார பணியாரம் சாப்பிட்டனர்.
பின்னர் அஸ்வின், கதிரவன் மற்றும் பெரியவர்களில் பெண்கள் அனைவரும் முறைசாப்பாடு செய்ய தேவகி, ராதா வீட்டிற்கும்.. ஆண்கள் கல்யாண வேலைகள் செய்யவும் கிளம்பிவிட்டனர்.
சந்துரு பெரிய வீட்டின் கடைசி கட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டி.. போகும்போது கமலேஷ் அழைத்து சென்றுவிட்டான். திலகனும் நலங்கு வைக்கும் நேரம் வருவதாக கிளம்பிவிட்டான்.
அரசி அடர்பிரவுன்நிற சேலை, அடர்சாம்பல்வண்ண பிளவுஸ் இக்கட் சேலை அணிந்து.. தங்கமும், வைரமும் கலந்த பூ வடிவில் நெக்லஸ், தோடு.. மூன்றுசரம் பூ. வேந்தன் அடர்பச்சை சட்டை, வேஷ்டி அணிந்திருந்தான்.
தங்கைகள், நண்பன் ஆகியோர் தன் துணைகளுடன் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு ஹாலிற்கு வரும் போது வேந்தனின் மடியில் படுத்திருந்த எழிலரசி எழுந்து அமர்ந்தாள்.
இனி நிறைய நிற்க வேண்டியிருப்பதால்.. கல்யாண திருவிழா அனைத்தும் முடியும் வரை கிடைக்கும் நேரம் படுத்துக்கொள்ள வேண்டும் என்பது தனுமாமாவின் வேண்டுகோள்.
” அண்ணா.. பெரிய சிட்டியில் இருப்பது போல வீடு சூப்பரா இருக்கு. ”
புன்னகையுடன்.. ” சீக்கிரம் முடியனும் என்று சந்துரு.. அவனோட மாமா கோவையில் இருந்து வந்து.. அங்க போலவே பண்ணி கொடுத்தாங்க அனு. “
சரி என தலையசைத்து.. ” அண்ணா. நாங்க இப்ப காரைக்குடி கிளம்பனா நலங்கு வைக்கும் சமயம் வரமுடியுமா?. ”
” ம்.. முக்கியமான இடங்கள் மட்டும் பார்த்துட்டு.. சீக்கிரம் சேலை எடுத்துட்டா வரலாம். இல்லையென்றாலும் ஒன்னும் இல்ல.. பொறாமையா வாங்க. 4மணிக்கு மண்டபம் போனா பிறகு எல்லாம் ஒன்னா தான் இருப்போம். “
” நிஷா.. மாமா.. அக்காவ டிரஸ் மாத்தவாவது தனியா விடுவரா.. இல்ல அவரே மாத்திவிட்டுவிடுவாறா?. ”
” ம்.. நாம்மா கண்ணு வைக்க கூடாதுனு கல்யாணம் முடியும்வரை அதமட்டும் விட்டு வைத்துயிருக்காரு. ” ஓ.. என புன்னகையுடன் பார்த்தான் நிர்மல்.
அனு சரி என தலையசைத்து.. அனைவரையும் கிளம்பலாம் என பார்த்து.. தேவையானதை எடுத்துக்கொண்டும்.. மாலைக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டுயிருந்தனர்.
வேந்தன் அருகில் அமர்ந்த ஆகாஷ்.. ” வேந்தன் அஸ்வின் நந்தினிக்கும் ஏன் எல்லாமே பண்ணுறீங்க?. ”
தன்னவளை பார்த்துவிட்டு.. பின் ஆகாஷிடம்.. ” ம்.. எல்லாம் ஒன்னா செய்யலாம் முடிவு செய்தாச்சு. அவங்க குலதெய்வம் கோயிலில் சாமி கும்மிட்டு.. தாலிமட்டும் கட்டியிருக்காங்க. வேற எதுவும் செய்யல. அதனால கல்யாணம் மாதிரி எல்லாம் செய்து.. அரசி சொன்ன மாதிரி தாலிசெயின் மட்டும் மாட்டிவிடுவது போல பார்த்துக்கலாம்..
இதனால மாமா, சித்தப்பா குடும்பத்திற்கு குறை இல்லாம சந்தோஷமா இருக்கும் என்று முடிவு எடுத்துட்டாங்க. சாருலதாவிற்கு பிரச்சனை வரக்கூடாதுனு முக்கிய சொந்தாரங்ளுக்கு மட்டும் இதுபற்றி கூறிதான் அழைத்துயிருக்கு. ”
‘ சரி ‘ என்ற பார்வை பார்த்துவிட்டு மேலும் தேவையான சில தகவல்கள் அறிந்து கொண்டுயிருக்க.. அனைவரும் ரெடியாகி வந்தனர். பின்னர் திலகனின் டிராவல்ஸ் வேனில் கிளம்பிவிட்டனர்.
யாரும் இல்லாத தனிமை கிடைக்க வேந்தன் தன்னவளை கட்டி கொண்டு படுத்து.. சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான். இவனை போலவே இரவு.. நேரம் சென்று தூங்கி சீக்கிரம் எழுந்த.. இன்பா தவிர மற்ற நால்வரும் அவர் அவர் வீடுகளில் உறங்கி கொண்டு அன்னைமார்களின் அர்ச்சனையை வாங்கிக்கொண்டுயிருந்தனர்.
வேந்தன் மட்டும் தன்னவளின்..
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
சுகமான கூந்தல் வருடல்.. பாடல் கேட்டபடி ஆழந்து உறங்கினான். அவனின் அரசி நேற்று இரவு எண்ணியபடி இருந்தாள்.
தனு மாலை எடுத்து வைத்திருந்ததை சேலையை பார்த்து அதற்கேற்ற தன்னிடம் இருந்த வளையல்களை பாக்ஸில் வைத்துவிட்டு.. வேண்டியதை போனில் குறித்து.. சேலையை போட்டோ எடுத்துவிட்டு..
பின் அனைத்தும் பெட்டியில் வைத்துவிட்டு.. ‘ முடித்தவுடன் போனில் அழை ‘ என கூறிச்சென்றவனை அழைக்காமல் படுத்துவிட்டேன் என்ற முறைப்புடன் வந்தவன்.. பால் குடிக்க வைத்து பின் கூந்தல், முகத்தில் மசாஜ் செய்தவன்..
கொழுசு இருக்கும் இடத்தில் மட்டும் முத்தமிட்டு.. ” முயல்குட்டி தாவணியில் இருக்க.. கை, காலுக்கு நீயே தடவிக்கோ. ”
” பின்ன ஏன் இதை எடுத்து கொடுத்த?. ”
” இன்னைக்கு இந்த ரூம்மில் தாவணியில் உன்பக்கத்தில் தூங்க தோனுச்சு. அடுத்து இரண்டுபேரும் இங்க படுக்கும்போது கல்யாணம் முடிந்துயிருக்கும்.”
அவன் கூறிய அடுத்த நொடி புன்னகையுடன் அவனவள் அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு.. ” இந்த கலர் பிறந்தநாள் பாவாடை தாவணியில் தானே.. என் தனுமாமாவின் பலநாட்கள் நினைவில் இருந்தேன். “
தன் அரசியின் நெற்றியில் முத்தமிட்டு ‘ ஆம் ‘ என தெரிவிக்க.. ” அப்ப நீங்கதான் தடவி விடனும். ” மயக்கம் பார்வையில் கூற. அதில் மயங்கியவன் விளக்கை அணைத்து கை, காலுக்கு தடவிவிட..
விளக்கு போடும் முன்.. அவளின் காதில்.. ” முயல்குட்டி நான் தான் உனக்கு மெஹந்தி போடுவேன். இங்க பார்த்துட்டு அப்ப பார்த்தா.. நமக்கு மெஹந்தி போடும் எண்ணம் போய் வேற ஞாபகம் வரும். அப்ப இருவரின் முகம் காட்டும் உணர்வை எல்லோரும் பார்க்க விருப்பல அதனாலதான். ” அவனின் உணர்வை கழுத்து முத்தத்தில் காட்டிவிட்டு.. லைட்போட்டு விட்டு சிவந்து இருப்பவளை பார்த்து அப்படியே வரமுடியாது என திருப்பி பார்க்காமல் வெளிவந்து விட்டான்.
தன்னவன் சென்ற சில நிமிடங்கள் கழித்தும் அவளால் வெளிவர முடியவில்லை. அவனின் உணர்ச்சியை இன்னும் கூடுதால் அழுத்தத்தில் காண்பித்தும்… அவர்களுக்கு மட்டுமான தங்களின் உணர்வை யாரும் அறியகூடாது என்ற உரிமையை கூறி.. அனைத்தையும் ஒரு முத்தம் மூலம் தெரிவித்து சென்ற கள்வனின் எண்ணத்தில் இருந்தவள்.. அதில் இருந்து வெளிவர பிடிக்காமல் அப்படியே குறுக்கிபடுத்து உறங்கிவிட்டாள். படுக்க வந்தவன் அவளின் படுத்துயிருக்கும் நிலையை புன்னகையுடன் பார்த்து.. பல முத்தங்கள் வழங்கி அவளின் கழுத்தில் புதைந்து.. அரசியை இறுக்க அணைத்து படுத்துவிட்டான்.
காலையில் அவன்தான் அவளை எழுப்பி.. நெற்றிமுத்தம் கொடுத்து குளிக்க அனுப்பிவிட்டு.. யாரேனும் வர வாய்ப்பு உள்ளது என உடனே இன்பா அறைக்கு சென்று குளித்து..
பின் மூகூர்த்த கால் நிகழ்ச்சிக்கு தேவையானதை சரிபார்த்து.. மாவிலைகளை தானே கேர்த்து முடிக்க ஒவ்வொருவராக குளிந்து ரெடியாகவே வந்தனர். மனதில் செல்லமாக தங்கள் மாப்பிள்ளையை அர்ச்சனை செய்து.. அவனுடன் தங்களை இணைத்து சடங்கு நிகழ்ச்சியை முடித்தனர்.
இப்போது சோர்வுடன் தூங்கும் தன்னைவனை கொஞ்சியும், பாராட்டியும், அதிசயத்தும், அர்ச்சித்தும் தன் கூந்தல் குழந்தையினுள் மச்சத்தை கண்டுபிடித்து.. முத்தம் கொடுத்தாள். அடுத்த நொடி அவளவனின் இதழ் கட்டுபாட்டிற்குள் சில நொடிகள் இருந்தாள்.
கண்களை மூடியபடியே இடையை இறுக்கி.. ” முயல்குட்டி மாமாவ பேசாம இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கவிடு.. சரியான இடத்தில் தலை வைச்சுயிருக்கேன். பின்ன உன்பாடுதான் திண்டாட்டம் ஆகிடும். புரிந்து அமைதியா இருடி. “
‘ போடா ‘ என திட்டி அவனின் போனில் நேற்று மாலை எடுத்த வீடியோவை பார்த்திருந்தவளின் சில நிமிடங்கள் கடக்க.. ” தனுமாமா. நீ தூங்கியது போதும் எழு. எனக்கு பசிக்குது. ” அவனின் கன்னத்தை தட்டி எழுப்பினாள்.
” ம்.. ” இடைஇறுக்கி.. புடவையின் மேல் வயிற்றில் அழுத்த சில நொடிகள் புதைந்துவிட்டு எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.
ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்தவளை மடியில் அமர்த்தி பணியாரம் ஊட்டிவிட்டுக் கொண்டே.. ” முயல்குட்டி.. வளையலை பெரிய வீட்டிற்கு போகும் முன் வாங்கிட்டு போயிடலாம். ”
சரி என தலையசைத்து.. ” தனு நாம்ம.. வசந்தராவை அத்தை வீட்டிற்கு போகும் முன்.. நம்ம வீட்டிற்கும் ஒருதடவை உள்ள போய் கொஞ்சம் நேரம் இருந்துட்டு பின்ன அழைத்து போகலாமே. மாமாகிட்ட.. ” அவளின் இதழில் விரல் வைத்து..
” அரசி.. வசுந்தரா சொல்லி அதன்பின் தான் அப்பா பெரியவீட்டில் எல்லாம் ஆரம்பித்து இருக்கார் என்பதை நாம்ம கோயில் போனவுடனே சொல்லிட்டாரு. ” புரியாமல் அவள் பார்க்க..
” அந்த வீடு நமக்காகதானே யோசித்து கட்ட ஆரம்பித்தது. நானும் நீ வரும்வரை அங்க வரமாட்டேன் சொன்னதால.. வசு முடிந்தா பெரியவீட்டில் எல்லாம் ஏற்பாடு பண்ணி செய்யுங்க.. இல்லையென்றால் ஒன்றும் இல்ல.. ஆனா நம்ம வீட்டில் எனக்கு எதுவும் பண்ணவேண்டாம் சொல்லிட்டாளா. ”
அந்த வீட்டை கட்டியதின் நோக்கம்.. புரியும் நிலையில் இப்போது அவள் இல்லை என இருவருக்கும் புரிந்தது.
” பின்ன ஏன் நீங்க என்னை நம்ம வீட்டிற்கு அழைத்தபோன பிறகு.. நாலுபேருக்கும் ஒன்னா நலங்கு வைக்க வேண்டாம்.. தனித்தனியா அவங்க அவங்க வீட்டில் வைத்துக் கொள்ளனு சொன்னாங்க. பெரிய வீடு வசுந்தராவிற்கு ரொம்ப பிடிக்கும்மா?. “
யோசித்தவன்.. ” எந்த வீடு பற்றியும் அதிகம் பேசியது கிடையாது. அதனால தெரியல. பின்ன நலங்கு விஷயம்.. வசு எண்ணமா இருக்காது. நந்தினி தான் சொல்லியிருப்பா. ” ஏன்?. என அவன் கொடுத்ததை மென்றபடி பார்க்க..
” ஏன்னா.. இங்க வசுந்தரா ரெனவேட் செய்தபிறகு வரல தானே. பழையது போல நினைத்து நம்ம இரண்டு பேருக்கும் இங்க பண்ணுவோம் என்று இருந்து இருப்பாங்க. சித்தி வீடும் இந்த வீடுமாதிரி தானே இருக்கும். அதனால சாதாரணமா இருந்துயிருப்பாங்க.
உன்னைய அங்க அழைத்த பிறகு.. கொஞ்ச வருடம் முன் கட்டிய வீட்டில் நமக்கு எல்லாம் நடக்கும்.. நாம்ம ஏன் பழைய வீட்டில்.. அதுவும் நாலுஜோடிக்கும் ஒன்னா செய்யனும் என்று நந்தினி தான் அவளுக்கு அவங்க வீட்டில் செய்ய வேண்டும் என்று.. வசுவை குழப்பி பேச வைத்து இருப்பா. “
புன்னகையுடன்.. ” இதுக்கே அத்தை வீட்டை பற்றி யோசித்தா.. அங்க தானே இருக்கனும். அப்ப என்ன பண்ணுவாங்க? “
” முயல்குட்டி.. அதுக்கும் வேற ஏதாவது பிளான் வைத்துயிருப்பா. ஆனா அஸ்வின்கிட்ட ஒன்னும் நடக்காதுனு போக போக புரிந்து அமைதியாகிடுவா. ”
” ம்.. ஆனா எப்படி?. ” கேட்க வந்தவள் அமைதியாகிவிட..
அவள் கேட்க வந்தது புரிந்து.. அவளின் கன்னத்தை மெல்ல கிள்ளி.. ” அஸ்வினுக்கு நந்தினியின் காதலில் உண்மையும்., முழுமையான நம்பிக்கையும் அவனுக்கு இருந்ததால தான் நந்தினி சொன்னதை தீர விசாரிக்கல.. அதைவிட அவனுக்கும் நேரமும் கொடுக்கல. அதனால கொஞ்சம் அவரசபட்டுடான். ஆனா அதில் நமக்கு நன்மைதான். ” இதற்கு மேல் வேண்டாம் போதும் என அவனின் மேல் சாய்ந்துக்கொண்டாள்.
அவளை நிமிர்த்தி.. ” முயல்குட்டி ஒரு சிலருக்காக.. நமக்கு அன்னைக்கு நடந்த நல்லதை.. எப்போதும் நினைக்கவே மாட்டியா.
நான் முயல்குட்டி மீது வைத்திருந்த காதல், அவள் மூலமா உருவான நான்.. கம்பெனி, பல பேருக்கு வேலை.. ஏன் நந்தினி, அஸ்வின், பார்த்திபன் கூட அங்கு இருந்துதான் சம்பளம் வாங்குறாங்க.
என் முயல்குட்டி மூலமா இன்னும் நிறைய நல்ல விஷயம் நடந்துயிருப்பதை எல்லாம் தெரிந்து கொண்டாங்க. இதுதெல்லாம் கண்டிப்பா தெரியாமலே போயிருக்கும். அதனால ஒன்னும்இல்ல தான்.
ஆனா எல்லாவற்றையும் விட நாம்ம காதலர்களா கல்யாணம் செய்ய இருக்கோம். எனக்கு எவ்வளவு சந்தோஷம் என்று வார்த்தையில் சொல்ல முடியாது. இத்தனை வருடம் என் முயல்குட்டிய பார்க்காம இருந்ததற்கு அர்த்தம் இல்லாம போயிடுச்சுனு இரண்டுபேருக்கும் சொல்லமுடியாத ஒரு கவலை இருந்துயிருக்கும். இப்ப இல்ல. இனிமே இருக்காது தானே?. ”
இருவரும் கண்ணீர் வடிய அவன் பேச.. அவள் கேட்க இருந்தவர்கள்.. ” இல்ல.. பிரச்சனை பற்றியும் ஞாபகம் இருக்காது தனுமாமா. அன்றைய தினத்தை.. நாம்ம என் தனுமாமா காதல் தெரிந்தநாள் மற்றும் நம்ம கடை திறந்த நாளா நினைத்து வருடா வருடம் சூப்பரா கொண்டாடலாம். ”
அவனின் முகமெங்கும் முத்தமிட்டு.. அவனின் செவ்விதழ்களில் முத்தமிட ஆரம்பிக்க.. அவன் தொடர சில நிமிடங்கள் நீடித்து அடுத்த கட்டத்திற்கு போகும்படியான எண்ணம் அரசிக்கு முதன்முறையாக தோன்ற.. முதலில் மகிழ்ந்தாலும்.. அவள் மீண்டும் ஏதோ தவறு என நினைப்பால் என வேந்தன் அவளே அறியாவண்ணம் மெல்ல விடுவித்து.. நெற்றி முத்தம் கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்.
பின் சில நிமிடங்களில் சிவந்து பொலிவுடன் மணப்பொண்ணுக்கான அத்தனை இலட்சனங்களுடன் வீட்டில் இருந்து தேவகி, ராதா வீட்டிற்கு சென்று.. முறை சாப்பாடு சாப்பிட்டு பின் தேவையானதை வாங்கி, இனிப்பகத்திற்கு சென்று..
பின் வசுந்தராவை தேவகி, ராதா வீட்டிற்கு.. அழைத்து செல்ல பெரிய வீட்டிற்கு சென்றார்கள்.