நிலவுமகள் விடைபெற இன்னும் இரண்டு மணிநேரம் இருக்க.. எழிலரசி தன் பிரச்சன முகத்தை.. தனுமாமா முன் காண்பித்து.. அவனின் கன்னம் தட்டி எழுப்பினாள்.
அவளவன் வழி பார்வைக்கு பாவாடை தாவணி, சற்று முன்னர் சுடுநீரில் குளித்துவிட்டு.. அவள் உடலில் இருந்த சூடு என.. காத்திருந்த தன் முயல்குட்டியை இடைபிடித்து தூக்கி.. தன்மேல் போட்டு முகம்முழுவதும் முத்தமிட்டு.. இறுதியில் இதழில் மென் முத்தம் பதித்து.. அவளை கீழே படுக்க வைத்து.. அவள் பக்கவாட்டில் கழுத்தில் கைவைத்து.. ஒருபக்கமாக படுத்து தன் முயல்குட்டியை கள்ளபுன்னகையுடன் பார்த்து கொண்டுயிருந்தான்.
தன்னவனை முறைத்து.. ” எப்படா தனுமாமா முழுச்ச?. ”
அவளின் கன்னம் கிள்ளி.. ” நீ என்னைய தனியா படுக்கவிட்டுட்டு போன அடுத்த இரண்டாவது நிமிடத்திலே எழுந்து.. இன்பா ரூம்போய் பிரஷ்ஷாகி வந்து நீ எழுப்பும் நேரம் வரை காத்திருந்தேன். ” அவள் காதில் ” முயல்குட்டி உன்பக்கத்தில் படுக்கும்போது என் கைக்கு எப்போதும் உன் இடை சூடு வேண்டும்டி. அதான் நீ எழுந்தவுடனே எழுந்துட்டேன். ”
‘ அடபாவி ‘ என்ற லுக்குடன் அவளும் ஒருபக்கமாக படுத்து.. ” இந்த கேடி வேல எத்தனை நாளா நடக்குது?. ”
” ம்.. உன்கூட படுக்க ஆரம்பித்த நாளில் இருந்தேதான். ” அவளை இழுத்து பக்கத்தில் படுக்க வைத்து கொண்டான். ” தனு நம்ம கல்யாண ரிசெப்ஷன் நடக்கும் இடத்திற்கு போகும் முன்ன கோயில் போயிட்டு போகனும். கிளம்பலாமா? ” அவனின் இழுத்த விதம் புதுவிதமாக இருக்க.. அவனிடமிருந்து தப்பிக்க கூற..
” இருடி ஐந்தே நிமிடம். ” அவனின் கைவளையில் எவ்வளவு வன்மையாக அவளை இறுக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாக அணைத்து அவளை தன்அணைப்பில் இருந்து விடுவிக்க மனமே இல்லாமல் இன்று அவளை அணைத்தான்.
அணைப்பில் இருந்தவள் அவனின் வன்மையில் இடைவலித்தாலும்.. அவன் தன்னை காதலியாக நினைத்த பல வருடத்திற்கும் சேர்த்தும்.. இன்று காதலனாக இருக்க போகும் கடைசிநாள் என எண்ணிதான் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பது அவனின் கண்களை பார்த்து புரிய.. அவளும் காதலனாக இருந்த தனுமாமா.. நாளை இந்நேரம் என எண்ணியதும்!. புன்னகைக்கும் கண்களாய் அவனின் முகத்தை அளந்தபடி..
நான் இனி காற்றில் நடக்க போகிறேன்
கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்
இந்த பிரபஞ்சம் தாண்டியே ஒரு பயணம் போகலாம்
அதில் மூச்சு கூட தேவை இல்லை
முத்தம் ஒன்றில் சேர்ந்து செல்லலாம்
மிதந்து மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்
அசந்து அசந்து நின்றேன்
ஐயோ அளந்து அளந்து கொன்றாய்
காதலும் இல்லாத காமமும் இல்லாத
ஓர் நொடி ஓர் நொடி
பார் சுற்றி பார்
நம்மை போல் இனி யாரடா காதலிப்பார்
நீ எந்தன் புத்தகம் மெல்லிசை போல
புல்நுனி தேய்பிறை
நீ யாவிலும் நீயே
கட்டிலும் நீ கோயிலும் நீ
தாய் மடி ஆகிடும்
தோழியும் நான்தானே
பாரதி போலானேன்
பைத்தியம் போலானேன்
உன்னால் தானே.
வேந்தனும்.. நாளை இந்நேரம் என எண்ணி இறுக்கி அணைத்திருந்தவன்.. தன்னவள் இனி, இதுநாள் வரை தன்னவனை பற்றி பாட.. அவனும் அவனவளுடன் இணைந்து பாடி.. பின் கணவனாக, மனைவியாக நம் வாழ்க்கை தொடங்கிய பின்..
மிதந்து மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்
அசந்து அசந்து நின்றேன்
ஐயோ அளந்து அளந்து கொன்றாய்
உன் கூந்தல் இருட்டிலே
உன் போர்வை இருட்டிலே
நான் தொலைபோகிறேன்
நான் தொலைபோகிறேன்
ஒரு ஜாடை செய்யடி
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் தூசி போல
படிகிறேன் மடிகிறேன்
அரசி பாட ஆரம்பித்ததும் அவளை அள்ளிக்கொண்டு அவனும் பாடியபடியே அவளை இறங்கும்போது மடித்துயிருந்த கூந்தலின் கிளிப் எடுத்துவிட்டு நடனம் ஆட.. தங்கள் இருவரின் கைவிரல்களும், கண்களும் புதுஉணர்வை வெளிபடுத்த அடுத்தநொடியே அவளை தூக்கிகொண்டான். இருவரின் கண்களும் கலங்கி ஒருவரை ஒருவர் மாறி மாறி முகத்தில் முத்தமிட்டு.. சுவரில் சாய்ந்து அரசியை கால்பிடித்து தலைமேல் தூக்கி கொண்டான்.
” முயல்குட்டி உன்னைய ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டி. சாரிடி. என்னால தான் நாம்ம காதலர்களாக இருக்க நாட்கள் இல்லாம போச்சுல?. “
தன்னவனின் மன்னிக்கும்படியான பேச்சு பிடிக்காமல்.. கவலையான முகத்தை பார்க்க விரும்பாமல்.. மெல்லிய புன்னகையுடன் ‘ இல்லை ‘ என தலையசைத்து.. ” உனக்கு இதைபற்றி நாளை இரவு விடிய விடிய சொல்லட்டா. இப்ப இறக்கிவிடுறீயா?. ” இதழை மடித்து புன்னகையை அடக்கி கூற..
முன்பே அவள் கிளம்ப வேண்டும் என்று கூறியதால்.. ஏதோ நினைவில் இருந்தவன்.. ‘ சரி ‘ என இறக்க போனவன்.. அவளின் முகம் தன்முன் வந்த நொடி அவளின் முகம் சிவந்து, இதழ் தக்காளிபழம் கலரில் இன்னும் சிவந்து இருக்க.. ‘ ஏன் இவ இப்படி இருக்கா?. ‘ என எண்ணியபடி இறக்கிவிட்டவன்.. மனதில் அப்போது தான் அவள் கூறி வார்த்தைகள் புரிய.. விழிவிரித்து தன்முயல்குட்டியை பார்க்க.. ‘ நல்லவேளை ‘ என அவனிடம் இருந்து திரும்பி மெல்ல அடியெடுத்து வைக்க அடுத்த அடி வைக்கும்போது அந்தரத்தில் இருந்தாள். அவளை அள்ளிக்கொண்டவன் ஊஞ்சலில் அமர்ந்து.. ‘ உன்னை பேசவே விடமாட்டேன்டி ‘ என அவளின் கழுத்தை இறுக்கபடி தன்னவள் இதழில் நிறுத்தி நிதானமாக கவி எழுதினான்.
இருவரும் இருவரிடம் இருந்து சிலநிமிடங்கள் கழித்து தப்பித்து.. எழிலரசி லவெண்டர் கலர்சேலை, கிளிபச்சை நிற பிளவுஸ் சாப்ட்சிலக் சேலைக்கு வெள்ளைமுத்துகள் அடங்கிய தங்கதோடு, கண்ணாடி வளையல் அணிந்து..
பச்சை நிறசட்டை மற்றும் வேஷ்டி கட்டியிருந்தவனின் கைகளில் மிதந்து படிகளில் இறங்கி வந்தவள்.. அவர்களின் வளைவில் நின்று சிலபல முறைப்புகளுடன் கூடிய போட்டோகளை எடுத்து கொண்டு.. புன்னகையுடன் பூஜை அறைமுன் தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.
அரசியின் பைக்கில் இருவரும் முதலில் பிரகாதாம்பாள் கோயில் சென்று அடிபிரதக்ஷனம் முடித்து.. தன்னவனின் இடையை மென்மையாக பிடித்து.. முதுகில் சாய்ந்துபடி ரிசெப்ஷன் ஏற்பாடு நடக்கும் இடத்திற்கு சென்றனர். இருவரின் பெற்றோர்கள், இன்பா, ராகவன், அருள்நிதி, இளமதி, விஸ்வநாதன் முன்னால் சென்று அங்கு இருக்க.. அவர்களுடன் இணைந்து.. இருவரும் கைபிடித்தபடியே பூஜையை சிறப்பாக முடிக்க.. ஏற்பாட்டாளர்கள் பணிகளை ஆரம்பித்தனர்.
நாலு ஜோடிகளின் மறுவீடு அழைப்பு மற்றும் உறவினர்களின் விருந்து கமலேஷ் வீட்டில் நடப்பதால்.. சாப்பிட அங்கு வரக்கூறி வீட்டில் இருந்து வந்த அனைவரும் கிளம்ப..
அவர்களை வேந்தன் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்துவிட்டு.. அங்கு வைக்கபட்டு இருந்த ரிசெப்ஷன் டெக்கரேஷன் பிளானை பார்த்து இருந்தவளின் பின்னிருந்து மென்மையாக தோள்பிடிக்க.. அதிர்ந்து திருப்பவளின் முறைப்பு பார்வைக்கு.. பதில் கண்ணடித்து புன்னகையுடன் அணைப்பை விடுவித்தான்.
தோள்அணைப்பின் கை எடுக்கும்போது.. அவனின் நிச்சியமோதிரம் அணிந்த விரலால் அவள் மச்சத்தில் ஒருநொடி அழுத்தபதித்து.. கண்களை பார்த்து எடுத்தான். ஒருநொடி அவனின் புதுசெய்கையில் உடல் சிலர்த்து நடுங்கியது. தன்னை சரிபடுத்திவிட்டு.. ” தனுமாமா உன் நடவடிக்கையே சரியல்லையே ” இழுத்து கூறியபடியே சிறிது நகர்ந்து பிளான் பார்த்திருக்க..
அவளின் நடுக்கத்தை பார்த்து அவனும் தன் விரலை ஒருநொடி பார்த்து.. முகம் மலர்ச்சியுடன் சுண்டு விரல்பிடித்து இழுத்து தன்அருகில் நிறக்க வைத்து.. அவளின் விரலை தடவியபடி.. ” முயல்குட்டி.. இங்க நம்ம ரிசெப்ஷன் நடக்க போவதில் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி. ஃபேக்டரி கட்ட இந்த இடம் வாங்கியதே நான் எதிர்பார்க்காமா நடந்ததுதான். ”
‘ எதிர்பார்க்காமலா என என்னவென்று புரியாமல் பார்க்க.. ‘
” ம்.. ஃபேக்டரி இடம் வாங்கி கட்டுவதற்கு பதிலா.. இன்பனிற்காக பழைய தியேட்டர் வாங்கி மில்லா மாற்றலாம் என்று நீ ஐடியா கொடுத்தமாதிரி.. ஊருக்கு பக்கத்திலே பழைய மில், தியேட்டர் இல்ல பழையகட்டிடத்தில் முதலில் சின்னதா உணவுபொருட்கள் பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.
புன்னகையுடன்.. ” நீயும், இன்பாவும் இடம் பார்க்க வந்தபோது அட்வான்ஸ் கொடுத்துவிட்டாதா முதலில் சொல்லி, பின்ன வேண்டானு சொல்லிட்டாங்கனு சொன்ன பிறகு தானே.. நீங்க வாங்கிங்க?. ”
‘ மூன்றுபேர் தவிர யாருக்கும் தெரியாதே?. ‘ முகம்முழுவதும் ஆச்சரியம், குழப்பம் முதலில் வந்து.. பின் மலர்ந்த புன்னகையுடன்.. அவன் நெஞ்சில் விரல்வைத்து.. ” தனு நீங்களா?. ”
மெல்லிய புன்னகையுடன்.. ‘ ஆம் ‘ என தலையசைத்தபடி தன் நெஞ்சில் இருந்த அவள் விரலை பிடித்து மென்முத்தம் பதித்து.. ” நான் அட்வான்ஸ் கொடுத்த பின்ன.. மூனுபேர் கிட்ட பேசும்போது அவங்கதான் சொன்னாங்க.. நம்ம ஹோட்டல் பெயரிலே பிஸ்னஸ் ஆரம்பிக்க போவதால்.. ஹோட்டலிற்கு நல்ல பேர் இருப்பதால் கம்பெனி சீக்கிரமா வளர்ச்சி அடையும்.. அப்ப மாற்றுவதற்கு பதிலா இப்பவே இன்னும் கொஞ்சம் அதிகமா காசு போட்டு அவுட்டரில் வாங்க சொன்னாங்க. அதன்பிறகு தான் இங்க வாங்கினேன். ஆனா அந்த இடத்தை விட மனசே இல்ல. ”
பிளான் பார்த்தபிறகு.. இடத்தை சுற்றி பார்க்கலாம் என நடந்து பேசியபடியே வந்தவர்கள்.. ” வயலும் சேர்ந்து இருப்பதால் தானே?. எனக்கு அங்கு இருக்கும் கிணறு, பெரிய தொட்டியோட பம்புசெட் ரொம்ப பிடிக்கும். ” எழிலரசி அவன்முன் துள்ளி வந்து கேட்டு.. பின் அவள் விரும்பியதை கூற.
அவள் துள்ளலில் அவன் ஒரு அடி பின்சென்று வந்தான். ” முயல்குட்டி.. ” அவள் நெற்றி முட்டி.. ” ம்.. எனக்கு முதலில் பார்த்தவுடன்.. உனக்கு இந்த இடம் பிடிக்கும் என்று தான் தோனுச்சு. பின்ன நம்ம கடைக்காக அங்க பொருட்களை வைக்கும்போது மில், வயலையும் பார்த்தப்ப.. ” அவளை பார்க்க..
அவனை முறைத்திருந்தாள். குனிந்து அவள் காதில் ” என்னடி அன்னைக்கு மில் ஆபிசில் கொடுத்த முத்தம் ஞாபகம் வருதா?. ”
அவனை கிள்ளவர.. ” வேண்டாடி.. அன்னைக்கு சந்தோஷத்தில் கொடுத்து போல.. இப்ப இருக்க சந்தோஷத்தில் இங்கயும் அதேபோல கொடுத்துவிடுவேன். ” மரத்தின் நிழலில் நின்றுயிருக்க.. ‘ போடா ‘ என நினைத்து இருஅடிகள் தள்ளி நின்றாள்.
புன்னகையுடன் அவளின் கையை பற்றிய படியே.. ” உனக்கு பிடிக்கும் என்று நான் நினைத்த இடம்.. நான் வாங்காவிட்டாலும் என் முயல்குட்டிக்கு வந்துடுச்சு. ” நெற்றி முத்தம் கொடுத்தான். இருந்தாலும் தான் வாங்கவில்லை என்ற வருத்தம் முகத்தில் தெரிய..
அரசி இடத்தை சுற்றி பார்த்துவிட்டு ” தனு நம்ம இடம் சுற்றி. விற்கும் இடம் இருந்தா.. அதை வாங்கி.. மில் பக்கத்தில் இருப்பதுபோல இல்லாவிட்டாலும் நம்ம இரண்டு கம்பெனி பொருட்களுக்கு ஏற்றார்போல ஏதாவது விளைவிக்கலாம் இல்ல. ”
இருஅடி தள்ளி நின்றவளை.. அவள் தோளில் தன் இருகைகளை மாலையாக போட்டு.. பக்கத்தில் இழுத்து.. ” முயல்குட்டி யோசனையெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா யார் அதை பார்க்க?. ”
தன்னவனை தலைமுதல் கால்வரை ‘ நீ தான்டா ‘ என்பது போல பார்த்தாள்.
அவனும் புரிந்து.. அவளை போல.. இல்ல இல்ல.. இன்னும் அதிகமாய் பார்த்து.. ” எனக்கு ஐந்து வருடத்திற்கு வேற பிளான் இருக்கு. அதன்பிறகு.. ” கள்வனாய் மாறி பார்த்ததில் மேனி எங்கும் மின்சாரம் பாய்ய.. வேகமாக அவன் வாய்யை கைவைத்து முடி.. தன்னை நிதானித்து.. ” நான் பாவம் தனுமாமா. இரண்டு முதலில் பின்ன உடனே ஒன்னா?. ”
” ஆமாம். ” கட்டளைபோல கூறி.. நிறைய தூரம் நடந்து வந்ததால்.. சாப்பிடாமல் இருக்க.. சோர்ந்து விடுவாள் என அவளை அள்ளி கொண்டவன்..
” எனக்கு முதல் இரண்டு மாதத்திற்கு முயல்குட்டியோட போக நினைத்த இடத்திற்கு எல்லாம் போகனும். அதன் பிறகு இரண்டுகுட்டி முயல்குட்டிக்கு வருவதற்கு பெரிய முயல்குட்டிய ஆராய்ச்சி செய்யும் வேலைய தீவிரபடுத்தனும்.. அவங்க மூன்று மாதத்தில் வந்துவிடுவாங்க. என் மூனு முயல்குட்டிய தேவையான நேரத்தில் இதுபோல தூக்கி பார்த்துபேன்.
அவங்க.. அவங்க அம்மா போல என்னைய பயப்படவைக்கமாக அழகாக நம்ம கையில் வந்த பிறகு.. முயல்குட்டி அவங்களையும் சேர்த்து என்னைய பார்ப்பா.. ” ஆமா தானே என கண்கலங்கி கேட்க.. அவன் நெற்றியில் அழுதுகொண்டே முத்தமிட்டு ‘ ஆமாம் ‘ என கூற..
மெல்லிய புன்னகையுடன்.. ” அடுத்து மூனுவருடம் கழித்து.. என் முயல்குட்டியே கேட்க ஆரம்பிப்பா.. எப்படா தனுமாமா.. ” தூரத்தில் ஆட்கள் எல்லாம் ஒன்றாக நின்று ஏதோ செய்துக் கொண்டுயிருக்க.. அவனின் கழுத்தை இறுக்க பிடித்துக்கொண்டு.. கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு.. ” தனுமாமா நீ வேண்டும் அதிகமா தோனுது. இன்னைக்கு நைட் மீதி சொல்லுவியாம். “
” முயல்குட்டி அப்ப நான் சொல்லும் விதமே வேறயா இருக்கும்டி. “
” ம்.. இப்ப மட்டும் என்ன பண்ணல?. இறக்கிவிடு.. இடுப்பே வலிக்குது. ” இவ்வளவு நேரமும் அவன் கூற கூற அவனின் இறுக்கமும், பார்வையும் வேறுவிதமாக இருந்தது. ” ஓய்.. இதுவும் ஒருவகையில் டிரைனிங் தானேடி. ”
புன்னகையுடன்.. ” அப்ப வீட்டில் போய் சாப்பிட்டு.. பின் டிரைனிங் வைத்துக் கொள்ளளாமா?. பசிக்குது தனு. ” நேரம் ஆனதை உணர்ந்து.. நெற்றிய முத்தம் பதித்து..
அவளை அங்கேயே நிற்ககூறி.. வீட்டிற்கு சீக்கிரம் செல்ல ஏற்பாட்டாளரின் காரை எடுத்து வந்திருந்தான். எழிலரசி காரில் அமரும் முன் ஒருமுறை இடத்தை கண்களால் பார்த்துவிட்டு.. நேராக இனிப்பகம் வந்தனர்.
வேந்தன் வீட்டிற்கு சென்றவுடன் உடனே சாப்பிட முடியாது என முதலில் அரசியை பாதாம்பால் குடிக்க வைத்தான். பின் அங்கு பணியில் இருப்பவர்களுக்கு எழிலரசி தன்கையால் இனிப்பு வழங்கினாள்.
அவர்களில் பாதிபேர் மூன்றுமாதங்களாக.. தங்கள் முதலாளியை செல்வியாக பார்த்திருந்தவர்கள்.. இனி அடுத்துவரும் போது திருமதியாக வரப்போகிறார் என்ற மகிழ்வுடன்.. இனிப்பை வாங்கும் போது மறைமுகமாக வாழ்த்தி அவளை வெக்கப்பட வைத்தனர். இதனை இரண்டு கேமிராக்கள் அழகாக பிடித்துக் கொண்டது.
இருவரும் கணேஷ் வீட்டிற்கு அன்று வந்தபோது யாரும் வரவேற்க ஆள் இல்லாமல் இருந்தவீடு.. இப்போது தொலைதூரத்தில் இருக்கும் உறவினார்களால் வீடே நிறைந்து இருந்தது.
கமலேஷ், வசுந்தராவின் மறுவீடு வேந்தனின் தாத்தா, பாட்டிகள் இருக்கும் பெரியவீட்டிற்கு ஈஸ்வர், காவ்யா அழைத்து சென்று.. சிறிது நேரம் இருந்துவிட்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டனர்.
வேந்தன், எழிலரசி வந்த பின் அஸ்வின், நந்தினி வர சிலநிமிடங்கள் ஆகும் என கூறியதால் ஹாலில் அமர்ந்து அப்பா, மாமாவுடன் வேந்தன் பேசிக் கொண்டுயிருக்க.. அவன் அருகில் அமர்ந்து வினோ, யோகா, சாருலதாவுடன் பேசிக் கொண்டுயிருந்தால் எழிலரசி.
நடுவில் ஒருவரின் முகத்தை நிமிடங்களில் கவனித்து ஏதோ சரியில்லை என உணர்ந்து..” தனு வசுந்தரா முகமே சரியில்ல. அவளை ரெஸ்ட் ரூம் போகிறேன் என்று கூறி.. அவளை அண்ணா ரூம்மிற்கு வரச்சொல்லி என்னவென்று கேளுங்க. ” தன்னவனிற்கு மெசேஜ் அனுப்பினாள்.
அரசிக்கு என்று இருக்கும் தனி மெசேஜ் ஒலி கேட்க.. அருகில் இருக்க ஏன்?. என உடனே படித்து.. அவளின் கையைபிடித்து விடுவித்து.. அவள் கூறியது போல தங்கைக்கு மெசேஜ் செய்து.. தன் தங்கையை முகத்தை ஒருபார்வை பார்த்துவிட்டு அவனும் அதையே உணர்ந்தபடி கமலேஷ் அறையில் இருக்க..
அங்கு வந்த வசுந்தரா அவனை கட்டிக்கொண்டு அழ தொடங்கி விட்டாள். இரு நிமிடங்கள் ஒன்றும் கூறாமல் தலைதடவி ‘ ஒன்றும் இல்லை ‘ என தங்கைக்கு ஆறுதல் அளித்தவன்.. ‘ ஒன்றும் இருக்ககூடாது ‘ என தனக்கு சொல்லிக்கொண்டான்.
” வசும்மா.. நீ அழுதா என்னால என்ன செய்ய முடியும்?. சொன்னா தானே சரி செய்ய.. இல்ல நிறைவேற்ற முடியும். ”
அவனில் இருந்து பிரிந்து.. ” நிஜமா என்ன வேண்டானும் பண்ணுவீங்களா?. ”
தன் முயல்குட்டி போலவே கேட்கும் தங்கையை.. மெல்லிய புன்னகையுடன்.. ‘ செய்வேன் ‘ என அவன் தலையசைக்க..
அவளும்.. ” அண்ணா எனக்கு பிடித்த நான்வெஜ் உணவு ஏதாவது செய்து தரீங்களா?. “
‘ ஏன் இன்றைக்கு விருந்திற்கு இவளுக்கு பிடித்தை கேட்டு செய்திருப்பார்களே?. என புரியாமல் பார்க்க..
‘ அவளும் அதை புரிந்து.. ” அண்ணா எனக்கு பிடித்த உணவு தான் செய்துயிருக்காங்க. எல்லோரும் கேட்கும் போது.. அத்தை சொல்லும் போது நந்தினி அண்ணிக்கு பிடித்த உணவு செய்ய சொன்னாங்க. அப்படி சொன்னது எனக்கு பிடிக்கல. நாங்க வீட்டில் இருந்து வந்த பின்ன.. நாம்ம சாப்பிடலாம் அத்தைகிட்ட சொன்னபோது.. நந்தினி வந்த பின்னாடி சாப்பிடலாம் சொல்லிட்டாங்க.
அஸ்வின் அண்ணா நாங்க நம்ம வீட்டிற்கு போகும்போதே மாமாகிட்ட கிளம்பி விட்டதா சொன்னாங்க. ஆனா இன்னும் காணும். இங்க மக, மருமகன் வருவதால் தானே அத்தை முதற்கொண்டு மற்றவங்க அவங்களுக்காக காத்திருக்காங்க.
எங்களுக்கு நம்ம வீட்டிலே வைத்துயிருக்கலாம் இல்ல?. எங்களையும் புது தம்பதியருக்கு உரிய மதிப்பு கொடுத்துயிருப்பாங்க. இங்க யாரும் எங்களை கண்டுகொள்ளவே இல்ல. ” மீண்டும் கட்டிக்கொண்டாள்.
” வசும்மா அங்கயேயும் மேகா வந்துயிருக்கலாம் அதனால லேட் ஆகியிருக்கலாம். நம்ம வீட்டில்.. நான் வெஜ் செய்ய முடியாது என்று தானே செய்யல.
ஆனா உங்களை முறைய அழைத்து போய்.. பின்ன இங்க எல்லாம் வந்துயிருக்கோம். நாங்க சாப்பிட கூடாது என்றாலும் உங்களுக்கு மதிப்பு கொடுத்து தானே இதை செய்யுறோம். ” தங்கையை நிமிர்த்தி கூறிக்கொண்டே கண்ணீர் துடைத்துவிட்டு.. தலையை ஒதுக்கியவன்..
” அத்தைக்கு பழக்கத்தில் நந்தினிக்கு பிடித்ததை.. சொல்லி இருப்பாங்க. உனக்கு பிடித்ததை கூற கொஞ்சநாள் ஆகும்டா. அதன்பிறகு உன்னோடது தான் முதலில் வரும்.. பின்னதான் நந்தினிய சொல்லுவாங்க. சரியா. “
அவளை அப்படியே வெளியே அழைத்துவந்து படிகளில் இறங்கியபடியே.. ” உனக்கு பிடித்ததை நான் உனக்கு செய்து கொடுக்குகிறேன். நீ அரசிய மட்டும் சமையல்அறைக்கு வரசொல்லு. “
” அண்ணா.. அண்ணி செய்ய போறாங்களா?. அப்ப எனக்கு மதியம்தான் சாப்பாடு போடுவீங்க போல. ” புன்னகையுடன் கூற..
அவனும் புன்னகைத்து.. ” இன்னைக்கு அவளுடைய செய்முறைபயிற்சி எல்லாம் இல்ல. உனக்கு பிடித்த மாதிரி நான் செய்வதை பார்த்தா.. தேவையான போது உனக்கு செய்து கொடுப்பா அதுக்காதான். “
வேந்தன் இருபொருட்பட கூற அவள் புரிந்தும் புரியாமல்.. தனக்காக அண்ணா செய்து கொடுக்கப்போகிறார் என அனைத்தும் மறந்து வினோ, யோகா முன்னால் நின்றவள்.. ” எழில்அண்ணி உங்களை அண்ணா கிட்சன் வரசொன்னாங்க. ” புன்னகையுடன் கூற..
எழிலரசி நீண்ட நாட்களுக்கு பின் நாத்தனார் வசுந்தராவின் அண்ணி என்ற அழைப்பில் ஒருநொடி ஆனந்தமாக அதிர்ந்து.. பின் புன்னகையுடன் எழுந்து.. ” சரிங்க வசு அண்ணி. ” வசுந்தரா மற்றும் உடன் இருந்தவர்களையும் திகைக்க வைத்து மெல்லிய புன்னகையுடன் தன்னவனிடம் வந்தாள்.
அவளவன் அப்போதுதான் போனில் யாரிடமோ கட்டளையிடுவது போல.. ” சீக்கிரம் கொண்டு வாங்க. ” கூறி அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தபடி போனை பாக்கெட்டில் வைத்தான்.
” என் முயல்குட்டி வசுந்தராவை இப்பதான் வசுனு கூப்பிடுறா. அண்ணியும், நாத்தனாரும் சீக்கிரமே பிரண்டஸ் ஆகிவிடுவீங்க போல? “
அவன் இவ்வளவு நேரமும் ஹோட்டல் ஆட்களிடம் சிலபொருட்களை கொண்டு வரக்கூறிய படியே.. வசு என்ன செய்ய போகிறாள்?. என ஆவலுடன் பார்த்திருந்தபோது.. புன்னகையுடன் வசு என்று அழைக்கும் தன்னவளின் இதழை பார்த்து படித்திருந்தான். அதில் இருந்தே தங்கை என்ன கூறியிருப்பாள்?. எனவும் புரிந்து கொண்டான்.
சமைக்க தேவையான பொருட்களை எடுத்து கொண்டுயிருந்தவனை கிள்ளி.. ” என்ன மறைந்துயிருந்து நோட்டம்மா?. ”
அவளை மேடையில் அமர வைத்து.. தேவையானதை நறுக்கியபடியே.. ” ம்.. ” அவள் வருத்தத்துடன் கூறியதை மெல்லிய குரலில் சுருக்கமாக கூற.. அவளும் பொட்டுக்கடலை ஒன்றுஒன்றாக சாப்பிட்ட படியே கேட்டவள்..
” ம்.. வசு கேட்பது சரி தானே. எல்லோரும் மறுவீடு அவங்க அவங்க வீட்டிற்கு போயிருக்காங்க. அவளுக்கும் ஸ்பெஷல் கவனிப்பை அனுபவிக்க ஆசையிருக்கும் தானே. ஏன் இங்க கூப்பிட்டு வந்தீங்க?. “
அவளின் தலையில் கொட்டி.. பின் அவனே தேய்த்துவிட்டு.. ” நீயும் அவள போல பேசாதடி. அவங்கயெல்லாம் அப்பா, அம்மாவிற்கு அக்கா, தங்கைங்க நம்ம கல்யாணம் இருந்தாலும்.. நான்வெஜ் விருந்து!. அவங்களை ஸ்பெஷலா நினைப்பதால் தானே வைக்கிறாங்க?. ஆனா என்ன சாப்பிடு செய்தவுடன் இருவரையும் சாப்பிட வைத்துயிருக்கலாம். ” வசுவின் குறை தான் அவனிற்கும்.
” ம்.. நீங்க சின்னவயதில் இருந்தே கொஞ்சம் அதிகமா ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்துயிருக்கீங்க. அதனால அவ தன்னை எல்லோரும் உயர்வா இடத்தில் வைத்து பார்த்து பழகிட்டா. இப்ப கொஞ்சம் குறைந்தா கூட ஏற்றுகொள்ள முடியல.. ஆனா இன்னைக்கு அவ உங்ககிட்ட சொன்னவுடன்.. நீங்க அவளுக்கு என்று செய்யுறேன் சொன்னதால சந்தோஷமா வந்து என்னை கூப்பிட்டா. “
” ம்.. இல்லையென்றால் அவ தனக்கு மதிப்பு கொடுக்கலனு எப்படி நடந்துயிருப்பானு தெரியாது. ” வருத்தமும், சிறிது கோபமும் கலந்து கூற..
அவனை தோளில் அடித்து.. “தனு அப்படியே வளர்ந்துடா. தீடிர் அது குறைந்தா அப்படிதான் இருப்பா. அதுவும் நீங்க எனக்கு பண்ணுவதை பார்த்து.. அவ கமலேஷ் அண்ணா எதிர்பார்த்து இருப்பா.
அவர் அவருடைய கருத்தை அவவிருப்பதாத ஏதோ சொல்லியிருக்கலாம். வேலைக்கு போய்.. இந்த வயசிலும் நீங்க பிடிவாதம் பிடித்து.. எவ்வளவு பண்ணுனீங்க?. இதையெல்லாம் எல்லாம் சேர்ந்து, பார்த்து..
சின்ன பொண்ணா இருப்பதால் தான்.. தன்ன யாரும் கண்டு கொள்ளவதில்லைனு அவளுக்கு கோபம் வந்து.. அதை வார்த்தையில் வெளிபடுத்துறா. உங்க வயசு வரும்போது இப்படியெல்லாம் பண்ணமாட்டா. எல்லோரையும் அழகாக சமாளிப்பா. “
உன்னை மாதிரியே நினைத்தவன்.. ” ம்.. வசு சமாளிப்பா. ” அவளின் முன்நின்று கன்னம் கிள்ளி.. ” நான் என் முயல்குட்டிக்கு பண்ணுறேன் சொல்லிட்டு தானே பண்ணுறேன். இதில் எங்கடி பிடிவாதம் வருது?. “
புன்னகையுடன்.. ” நீங்க ம்.. என்று சொல்லுங்க. நான் போய் வெளியில் இருப்பவங்க கிட்ட எங்க வருதுனு? கேட்டு.. அவங்க பக்கம் பக்கமா எழுதி தருவதை வாங்கிட்டு வறேன். ஆனா இப்ப வேண்டாம்.. பாவம் என் தனுமாமா.. அதனால இந்த வேலைய கல்யாணம் முடிந்து பண்ணுறேன். ” அவனின் கன்னம் பிடித்துயிழுத்து கூற..
அவளின் நெற்றி முட்டி.. ” ம்.. கல்யாணம் முடிந்து யார் பாவம் என்று பார்க்கலாம். ” அவனின் பார்வை அவளை துளைக்க.. அதனால் அவளவனின் வதனம் சிவக்க.. ‘ ஓ.. பேச்சும், முயல்குட்டி மீதான பார்வையும் எங்கோ போகுதே.. ‘
அவளிற்கு தண்ணீர் எடுத்து கொடுத்து.. ” முயல்குட்டி இப்படி சிவப்பா உன்னைய பார்த்து என்னால சமைக்க முடியாதுடி. மாமாவிற்காக நல்ல பிள்ளை மாறி பாட்டு பாடுவியா.. நான் அதை கேட்டுகொண்டே சமைப்பானா. நீ வசுவிற்காக அப்படியே நான் சமைப்பதையும் பார்த்துப்பியாம். ”
அவளின் கைபிடித்து விடுத்து.. சமைக்கும் வேலையை தொடர.. அவனவளும் புன்னகையுடன் ‘ சரி ‘ என தலையசைத்து தண்ணீர் குடித்தபடியே.. ‘ என்ன மாமாவிற்காக பாடலாம்?. ‘ என தன் போனில் பார்த்திருந்தாள்.
” வேந்தா.. நீ என்னடா இப்ப சமைக்கிற?. ” அமைதியான இடத்தில் சட்டென்று சித்ரா குரல் கேட்க.. இருவரும் அதிர்ந்து திரும்ப.. அங்கு வேந்தனின் ராஜி, சுமதி அத்தையும், சாந்தி, காவ்யா, யோகா சமையல் அறையினுள் வர.. அரசியை பக்கவாட்டில் நின்று அவர்களுக்கு தெரியதாபடி ஒருகையால் இடையை பிடித்து இறக்கிவிட்டான்.
” நீங்க வீட்டை சுற்றி பார்க்க போயிருக்கிங்கனு நினைத்தேன். சரிவிடு.. வேந்தா நந்தினி , அஸ்வின் வந்துட்டாங்கடா. ” கூறிய படியே சுமதி வர..
” அதனால என்ன அத்த?. ”
” என்னனா?. பால், பழம் கொடுத்த பிறகு உடனே சாப்பாடு போடதான். ” நீ இப்ப ஏதோ சமைக்கிற. “
” ம்.. நீங்க மறுவீடு வந்தவங்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்க. ” அடுத்து கூற வர..
ஈஸ்வர் ஒரு கேரியரை உள்ளே வந்து வைத்து.. ‘ இது என்ன?. ‘ என்பது போல வேந்தனை பார்க்க.. அவன்கூற.. சரி என தலையசைத்து சென்றுவிட்டார்.
நேரம் ஆகுமே என்ற கவலையான முகத்துடன்.. ” இதை செய்யவே அரைமணி நேரம் கிட்ட ஆகும்மே. ” முடிக்கும் முன்..
” அத்தை சாப்பாடு செய்த பின்னும் அவங்களுக்காக வசு, கமலேஷ் காத்திருக்கலையா. அவங்களை குறை சொல்ல.. அங்க மேகா வந்திருக்கலாம்.. இல்ல வேற ரீசன் இருக்கலாம். அவங்களை நான் செய்யுறேன் என்று வெயிட் பண்ண சொல்லுங்க. இல்ல உடனே சாப்பாடு வேண்டும் நினைத்தா.. அவங்களுக்கும், பெரியவங்களுக்கு சாப்பாடு வைங்க.. “
” வேந்தா நாலு பேரும் ஒன்னா சாப்பிடதான் இவ்வளவு நேரம் காத்திருக்கு. “
” அம்மா.. இங்க இப்ப எல்லோரும் வந்திருப்பது. பெரியம்மா, சித்தி, அத்தைங்க விருந்து கொடுப்பதை சாப்பிடதான். நாலு பேரும் ஒன்னா சாப்பிட இல்ல.” சித்ரா, சுமதி இருவரும் ஏதோ கூறவர..