இவர்கள் வெளியே வந்து புன்னகையுடன் அவர்களின் இடத்தில் அமர்ந்தபின்.. பெண்கள் பட்டாளம் எழிலரசியிடம் வந்து அவள் கைகளை பார்த்தும்.. தங்கள் கையை காட்டிக் கொண்டுயிருந்தனர்.
அந்நேரத்தில் தன்னவளின் கையை பார்த்து செல்வதை பார்த்தபடியே.. வேந்தன் புன்னகையுடன் அவர்களின் பள்ளி தோழன், தோழிகளுடன் பேசிக் கொண்டுயிருக்க.. இதில் இலக்கியா ,செளமியா , ஆனந்த் தங்களுடன் இணைத்து நாங்கள் மருத்துவம் படித்து இருவர் அரசு மருத்துவமனை, சொந்த மருத்துவமனையில் டாக்டர் ஆகா இருக்கிறோம். ஆனால் நீ மெடிசின் படிக்க எங்களுடன் போட்டி போட்டு படித்து.. எங்களை விட அதிக மார்க் எடுத்தும் பயன் இல்லாது.. ரிசர்ச் கம்பெனியில் வேலை.. அதையும் விட்டு அப்பா ஹோட்டல், இனிப்பகம் என திறந்து என வேந்தன் பிஸ்னஸ் செய்வதை.. இளமதியிடம் குறை கூறுவது போல பேசினர். இளமதி அதற்கு ஏதோ பதில் அளித்தாள். அதன்பின் அதிகம் பேசாமல் இருந்தனர். இதனை அவனும் கவனித்தான்.
சில நிமிடங்களில் இன்பாவுடன் வந்தவர்களை பார்த்த இலக்கியா , செளமியாவும் கேள்வி பார்வையுடன்..
அவர்களின் அருகில் சென்றதும் இலக்கியா… ” அம்மா புசுசா கட்டபோற ஹாப்பிட்டல் விஷயமா முக்கியமானவங்கள பார்க்க போவதா சொன்னீங்க?. நீங்க இங்க எப்படி?. ” நண்பர்களிடம் ஹாப்பிட்டல் தொடங்கும் விஷயமாக அம்மா ரொம்ப பிஸி என்று கூறியிருக்க.. இவர் இங்கு வந்துயிருக்கிறார்.
புன்னகையுடன்.. ” ஹாப்பிட்டல் விஷயமாதாம்மா வந்தோம். ” கூறி இருவரையும் அழைத்துகொண்டு வேந்தன், எழிலரசியிடம் வர இருவரையும் இருவருமே கட்டியணைத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரசி அவனிடம் திரும்பி ஏதோ கேட்க வர.. அதற்கு முன் அது புரிந்து.. ” அரசி நீ வயிற்று வலிக்காக ரொகுலரா பார்க்கும் டாக்டர். மேகலா பொண்ணுதான் இலக்கியா.
உனக்கு காலில் அடிப்பட்டபோது பார்த்த டாக்டர். சந்திரகலா பொண்ணுதான் செளமியா. இவங்க இரண்டு பேரும் அக்கா, தங்கை. ” தெரியாதா மற்றொன்றிக்கும் பதில் அளித்தான்.
‘ சரி. ‘ என தலையசைத்து கேட்டவள்.. சந்திரகலாவிடம்.. ” நீங்க தனுக்கு தெரிந்தவர் என்பதால்தான்.. நாங்க ஹாப்பிட்டல் வந்தபோது.. இவர் கேட்ட அத்தனை கேள்விக்கும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாங்களா?. ”
மெல்லிய புன்னகையுடன்.. ” இல்லம்மா. நான் முகத்தில் கொஞ்சம் வருத்தம் தெரிவித்து இருந்தாகூட.. வீட்டில் வைத்து பார்க்க வேண்டியதை ஹாப்பிட்டல் தூக்கிட்டு வந்து.. வீட்டில் தூக்கிட்டே சுற்றியது போல ஹாப்பிட்டலையும் சுற்றி இருப்பான். அந்த பயத்தில் தான். ”
இருவர் புரிந்தும், புரியாமல் இருக்க.. மேகலா ஒருவரியில் கூற.. கேட்டபின் சிரித்தவர்களுடன்.. அவனின் நடவடிக்கையை பற்றி மாடியில் இருந்தபோது பேசியதால் அவர்களும் மெல்லிய புன்னகை புரிந்தனர்.
‘ இந்த முயல்குட்டியால் இவங்கதான் என்னை பார்த்து சிரிக்காத ஆள் பாக்கியா இருந்தாங்க. ‘ எண்ணியபடியே.. சிரிப்புடன் வெக்கமும், முறைப்பாக அவர்களை பார்த்திருந்தான்.
அங்கு வந்த அஸ்வின்…வேந்தன், எழிலரசி இருவரையும் அமர கூறியும்.. நின்றுயிருந்த விருந்தினர்களை இருக்கையில் இன்பா அமர வைத்தான். அதன்பின் இன்பா பேசிக்கொண்டுயிருந்த அக்கா இளமதி நண்பர்களையும்… அஸ்வின் உறவினர்களையும் அவர்களின் இடத்தில் அமர கூற.. அவர்களும் அமர்ந்த பின்னர் விளங்குகள் அணைப்பட்டது.
சில நொடிகளில் வண்ண மையமான வானவேடிக்கை வானில் ஆரம்பித்தது. முதலில் ஒன்றுஇரண்டு மூன்று என தொடர்ந்து இரண்டு நிமிடம் வர.. மூன்றாவது நிமிடம் தொடர்ந்து இருநிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து அடுத்தடுத்து வந்து அனைவரையும் ஆச்சிரியபட வைத்தது. இதனை தன்னவனின் தோள் அணைப்பில் பார்த்திருந்தாள் எழிலரசி.
அதன்பின் விளங்குகளில் பாதி விளங்குகள் போடபட்டு…சில நொடிகள் கழித்து அங்கு வைக்கபட்டுயிருந்த திரையில்.. முதலில் எழிலரசி அடுத்து வேந்தன் இருவரின் சிறு வயது முதலான புகைபடங்கள்..
பின் அவர்கள் அனைவருக்கும் தெரிந்த வேந்தன்– எழிலரசியாக இருவரும் கோயிலில் முதல், உறுதி, நிச்சியம், திறப்புவிழா, திருமண பர்சேஸ், நால்வரின் கல்யாணம், சென்னையில் எடுத்து.. இவர்களின் நலுங்கு வரை உள்ள புகைபடங்கள் வந்தது.
அதில் நான்கு ஜோடிகள் திருமணம் நிகழ்ச்சி முதல்.. கவிதையாக இருக்கும் தங்களின் புகைபடத்தை வேந்தன், எழிலரசி எதிர்பார்க்காததால்.. அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவளவன் அவளை சட்டென்று இடைபிடித்து இழுத்து தன் மிக அருகே அமரவைத்து புகைபடத்தை பார்த்திருந்தான். ‘ இவனை ‘ செல்லமாக ஒருபார்வை பார்த்து அவளும் பார்க்க ஆரம்பித்தாள்.
அடுத்து.. யாரும் அறியாத வேந்தன்– எழிலரசி காதலர்களாக இருந்த உறுதி அன்று பாவாடை தாவணியில் முதன்முதல் உறுதிக்கான இருவரின் உடையை.. எழிலரசியின் பாட்டி, அம்மாச்சியிடம் வாங்கியது.. பூமிபூஜை, அரசி பிறந்தநாள் கொண்டாட மலைகோட்டை, பெங்களூர் சென்றபோதும்..
அடுத்து அவர்களை பற்றி தெரிந்தவர்களுடன் வினோ வீட்டில் இருந்த போது காவேரி பாலம் சென்றது உட்பட சில புகைபடங்கள் வர..
சிலரின் பார்வை புகைபடத்தில் இருந்தவர்களை ஒருபார்வை பார்க்க தவறவில்லை. அவர்கள் அனைவரும் வேந்தனின் மீது அருகில் இருந்த பூ, பலுனை தூக்கிபோட்டு தங்களின் கண்டனத்தை தெரிவிக்க..
அதனை புன்னகையுடன் ஏற்றுகொண்டான். அந்நேரத்திலும் தன் கையை தன்னவளின் மேல் எடுக்கவே இல்லை.
தெரிந்த பின் சென்னை ரிசாட் கடற்கரையில் , கோயில் கும்பாபிஷேகம் அன்று வயல்வெளியில் எடுத்தது.. அதன்பின் வேந்தன் வீட்டிற்கு சென்றது என பிரிவெடிங் ஷூட் புகைபடங்கள் என இருவர் மட்டுமான புகைபடம்.
அடுத்து வேந்தன் தன் அரசியை சற்று முன் மருதாணி போட மாடிக்கு தூக்கி சென்றது முதல்.. பின்னோக்கி அவன் தூக்கி சென்ற.. அவர்களின் பல புகைபடம் வந்து கொண்டுயிருந்ததை புன்னகையுடன் பார்த்தவர்கள்..
கடைசி மூன்று புகைபடத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி, ஆச்சரிய பட.. வேந்தன் அதில் எழுந்துவிட்டான். அவனுடன் சிலரும் தான். எழிலரசி தன்னவனை இடை கட்டிக்கொண்டு மெளமாக கண்ணீர் வடிக்க..
அப்போதுதான் வேந்தன் சுயத்திற்கு வந்து அவளை நெற்றி முத்தம் கொடுத்து தோள்அணைத்து கொண்டான். அனைவரும் அதில் இருந்து வர இருநிமிடங்கள் ஆனாது. வேந்தன் அரசியை மீண்டும் நெற்றி முத்தம் கொடுத்து நிமிர்த்தினான்.
அனைத்தையும் பார்த்த மகிழ்ச்சியில் வெளிவந்த விருந்தினர்களுக்கு.. மருதாணி வைக்கும் விழாவிற்கு வருகை தந்ததற்கு நன்றி மற்றும் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில்..
‘ EV ப்ராடெக்ட்பொருட்கள் அதிலும் பிரத்தேகமாக.. அடுத்துநாள் காலை புதிதாக உலகிற்கு அறிமுகபடுத்த போகும் சோப், ஷாம்ப், காஸ்மெடிக்ஸ், வாசனை திரவியம் அனைத்தும் அடங்கிய பாக்ஸ். ‘
வேந்தன், எழிலரசியின் அம்மா லட்சுமி, சித்ராவின் மூலம் சிலருக்கும்.. மற்றவர்களுக்கு இருகுடும்பத்தின் மகள், மருமகள்களில்.. யோகலட்சுமி, காவ்யா, வினோதினி, ஆர்த்தி, இளமதி, சுரபி மூலம் கொடுக்கபட்டது.
விருந்தினர்கள் இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. மருதாணி போடும் போதே..
‘ நூல்வளையல்கள், தோடு போன்ற அணிகலன்கள் அடங்கிய பொருட்கள் மற்றும் பெரிய வெள்ளி குங்குமசிமிழ் ‘ தர்ஷினி, மேகா, நந்தினி, வசுந்தரா கொடுத்தார்கள்.
இது எதற்கு?. என உறவினர்கள்பார்க்க.. பெரியவர்கள் அருகில் இருந்தவர்களிடம்.. ‘ முன்பு கொடுத்தது அவர்கள் நால்வரின் கல்யாண மருதாணி விழாவிற்கு யாரையும் அழைக்க முடியாமல் போனதால் இன்றும்..
EV ப்ராடெக்ட் பொருட்கள் தான் வேந்தன், எழிலரசிக்காக என்று விளக்கபட்டது.
‘ நான்கு கல்யாணமும் அவசரத்தில் நடந்ததால் உறவினர்கள் புரிந்து கொண்டனர். அதன்பின் வந்த உறவினர்களில் பாதி பேர், நண்பர்கள் என அனைவரும் ஹோட்டல், வீடுகளுக்கும்.. இங்கே இருப்பவர்களில் வயதானர்கள், குழந்தைகளை அழைத்து வீட்டின் உள்ளே சென்றுவிட்டனர்.
வேந்தன், எழிலரசி குடும்பத்தினர் மற்றும் ஒருசிலர் மட்டும் அங்கு இருக்க மீண்டும் திரையில்.. பலூன் வெடி சத்தத்துடன் மூவர் தோன்றி.. எழிலரசியின் கலங்கிய கண்ணீர் முகத்தை ஏன்?. தெரிந்ததால்.. அதனை அழகான ஆனந்த புன்னகையுடன் பார்த்திருந்தனர்.
அவளோ அவர்களை முறைத்து.. ” ஏன் நீங்க அந்த போட்டோவை முன்னாடியே எனக்கு காண்பிக்கல?. “
புன்னகையுடன்.. ” தெய்வமே.. எங்களுக்குகே கொஞ்ச நேரம் முன்தான் கிடைத்தது. நாங்களும்.. நீங்க எல்லாம் பார்க்கும் போது தான் பார்த்தோம். “
அவர்களுடன் திரையில்.. சென்னையில் இருக்கும் வேந்தனின் கல்லூரி, பள்ளி, நண்பர்கள். எழிலரசியின் சென்னையில் வேலை பார்க்கும் தோழிகள் தெரிந்தார்கள்.
இங்கு இவர்கள் இருக்கும் தோட்டத்தில் இருப்பது போலான அலங்காரம் அப்படியே.. அங்கு சென்னையிலும் இருந்தது. அது அவர்கள் அனைவரும்.. தங்களின் முன்னால் இருப்பது போலவே இருந்தது.
அவர்கள் அனைவரின் வாழ்த்து, நல விசாரிப்பு.. இடையே சத்யா, திலகன், வினோத், இளமதி, இலக்கியா , செளமியாவுடன் என பேச்சு சிலநிமிடங்கள் நீடித்தது.
அதன்பின் ரோஹித், ராகேஷ், சந்தோஷ் மூவர் மட்டும் அலங்காரம் செய்யபட்ட வீட்டினுள் உள்ள ஆபிஸ் ரூம்மிற்கு வந்தனர்.
” எழிலரசி அங்க EV ப்ராடெக்ட் கம்பெனி கட்ட ஆரம்பிக்க போதே.. EV கம்பெனி.. டாக்டர் மேகலா அவருடன் இணைந்து.. அவரின் தலைமையில்..
EVA என்ற பெயரில்.. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை.. ஆரம்பிக்க போறோம். இரண்டிற்கும் தனித்தனியான பில்டிங் டிசைன் இப்போது பார்க்கலாம். ” மெல்லிய புன்னகையுடன் சந்தோஷ் கூறினான்.
எழிலரசி வேந்தனை பார்க்க.. அவனோ ‘ ஏன்டா இதை கூற உங்களுக்கு வேற நேரமே கிடைக்கலையா?. ‘ என்ற முறைப்பு பார்வையை பார்த்தான்.
மற்றவர்களில் சிலருக்கு முன்பே தெரிந்ததால் அவனின் பார்வையை சிரிப்புடனும்.. அவர்களின் பொறுப்புகள் அதிகமாவதில் சிறு கவலையில் சிலர்..
எழிலரசியால் பொறுப்போடு.. செல்வமும் சேர்கிறதே என்ற எண்ணத்தில் சிலர் இருந்தனர். ஆனால் இனி அதை நினைத்து ஒருபயனும் இல்லை என எண்ணி பார்வையார்களாய் மட்டுமே பார்த்தனர்.
” டேய் ஏதாவது சொல்லுடா. அப்ப தான் மேடம் பார்க்கலாமா? வேண்டாமா?. பதிலிற்கு கூட வாய்திறப்பாங்க போல. ”
அரசியை ஒருபார்வை பார்த்து.. ” ரோஹித்.. இன்னைக்கு தான் அரசிக்கு.. ” முடிக்கும் முன்..
எழிலரசி வேந்தனை கைபிடித்து.. ‘ லூசா டா நீ?. ‘ கிள்ளி.. ஒரு பார்வை செலுத்தி.. அவர்களிடம்திரும்பி.. ” நாம்ம பார்க்கலாம். “
அவள் கிள்ளியது அந்த மெல்லிய வெளிச்சத்தில் யாருக்கும் தெரியாது. ஆனால் எதிரில் அவர்கள் முன்னால் இருந்த மூவருக்கும் அவள் கிள்ளியது.. அதனால் கை தேய்த்து விட்டவாரே தன்னவள் கூறியதற்கு ‘ தனியா மாட்டுவில அப்ப கிள்ளியதற்கு பதில் தருகிறேன் ‘ என்ற பார்வையில் ‘ சரி ‘ எனஅவனும் மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தை.. அவர்களும் புன்னகையுடன் சரி என தலையசைத்து வரைபடம் காண்பிட்டது.
முதலில் EV ப்ராடெக்ட் ரிசர்ச், டெஸ்ட் மற்றும் தயாரிப்பு அனைத்தும் உள்ள அடக்கிய கம்பெனி..
அடுத்து EVA பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் கிராபிக்ஸ் டிசைன் பில்டிங் பிளான் காண்பிக்கபட்டது.
பார்த்தவர்களில் நண்பர்கள், அஸ்வின், பார்த்திபன், இன்பா ஆகியோர் வேந்தன், எழிலரசி மற்றும் கதிரவன், சந்துருவிற்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
எழிலரசி.. தன்னவன் மற்றும் அவன் நண்பர்களின் உழைப்பு.. தனுமாமா விருப்பிய பெண்களுக்கான மருத்துவ படிப்பு.. தற்போது மருத்துவமனையாக வரப்போகிறது.. அதன் வடிவமைப்பை பார்த்து..
மிகமிக மகிழ்வுடன் சிறிது கண்கலங்கி.. ” தேங்கஸ் ” சத்தம் வராமல் அவர்கள் மூவரையும் பார்த்து கூற.. ‘ ஏற்றுக்கொள்கிறோம் ‘ கண்கள் முடி திறந்தனர்.
பின் மேகலாவிடம் அனைத்தும் விரைவில் ஆரம்பிக்கபடும் என தெரிவிக்க.. அவரும் அவருடன் இருந்த இருவர் சிறு அதிர்ச்சியுடன்!. வேந்தனை வேலையை பற்றி திலகனிடம் முதலில் இருந்து தெரிந்து கொண்டு.. கேட்க பின் சிறிது அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற தோதரனையில்.. மீண்டும் திருமண வாழ்த்து கூறி மாலை பார்க்கலாம் என சென்றுவிட..
அவர்களுடன் வேந்தன், எழிலரசி அத்தை குடும்பத்தினரும் கிளம்பிவிட்டனர். இருவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அனைத்தையும் எண்ணி தூக்கம் வரவில்லைதான். இருந்தாலும் உடல்நலத்திற்காக படுக்க உள்ளேயும்.. எழிலரசி வீட்டிற்கும் சொல்லிகொண்டு கிளம்பும் வேலையை பார்க்க..
அதன் இடையே ” எழிலரசி கைய காண்பி. ”
அவள் புன்னகையுடன் காண்பிக்க.. ” ம்.. வேந்தன் ரொம்ப அழகா போட்டுயிருக்க. ” பாராட்டியும்.. ஆனால் அதை வைத்து கேளி செய்து குட்டிஅக்காவின் முறைப்பை வாங்கி.. அதன்பின் என சில நிமிடங்கள் பேசியிருந்தனர்.
பின் இருவரின் நண்பர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்ப விடை பெற்று சென்றுவிட்டனர். பின்னர் வேந்தன், எழிலரசி சிறிது மட்டுமே சாப்பிட்டு.. அவரவர் வீட்டிற்கும் கிளம்பினர்.
வேந்தனின் தன் அரசியை அள்ளிக்கொண்டு தங்களின் வீட்டில் தங்களின் அறைக்குள் தன் முயல்குட்டியை உட்கார வைத்து.. அவளின் இடையை கட்டிக்கொண்டு மடியில் படுத்தான். தன்விரல் நுனியில் மருதாணி இல்லாததால் தனுவின் கூந்தலை கோதினாள். சில நொடிகளில் தலைதிருப்பி அரசியின் முகம் பார்த்து படுத்தான்.
தன்னவளிற்கு நெற்றி முத்தம் கொடுத்து.. அவள் முகம் முழுவதும் கைவிரலால் வருடி.. கண்களின் பார்த்திருந்தவன்.. ” முயல்குட்டி ” புன்னகையுடன்.. ” ஓய் முயல்குட்டி ” அவள் முறைப்புடன் கூடிய வெக்கத்துடன்.. ” தனு ” அவள் இப்போது அவன் செய்த வேலையை செய்தாள்.
இருவரும் ஒருசேர.. ” போட்டோ கியூட்டா இருந்து இல்ல. “
மெல்லிய புன்னகையுடன்.. ” முயல்குட்டி.. நான் தான்.. உனக்கு முயல்குட்டி டிரஸ் போட்டுவிட்டு.. நீ பாடுவதை நான் பக்கத்திலே பார்த்திருந்து, அப்பவும் நீ என் கன்னத்தை பிடித்திழுத்து, என் கழுத்தை கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்குற.
உன்னைய நான் இளமதி வந்த பின்ன கூட கொடுக்கமா குழந்தைகள் தின விழா முடியும் வரை தூக்கியே வைத்திருந்தனா. மஞ்சு சொன்னதா.. ரோஹித் மெசேஜ் பண்ணியிருக்கான். ” கூறியதும்..
இளமதி தோழி.. மஞ்சு கொடுத்த அன்றைய தினம் எடுத்த புகைபடத்தை ரோஹித் தன் போனிற்கு அனுப்பியதை பார்த்தபடி எழுந்து அமர்ந்தவன்.. கடைசியை கூறியதும் வார்த்தை தெரியவில்லை.. தங்களை நினைத்தாதே ஆச்சரியம் கொண்டு அதன் மகிழ்ச்சியை தன் அரசியின் இதழிலை சுவைத்து கொண்டா ஆரம்பித்து விட்டான்.
வேந்தன் எழிலரசி புகைபட நேரத்திற்காக.. இருவரின் பள்ளி, கல்லூரி, உறவினர்கள் அனைவரிடமும் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கேட்டு இருக்க..
அவர்கள் அனுப்பியதில் புகைபடம் ஒவ்வொன்றையும்.. மூவரும் இதற்கு என்று நேரம் ஒதுக்கி.. பார்த்து கொடுத்தை தான் திரையிட்டனர்.
அதில் மஞ்சு என்பவர் அனுப்பியதில் இருந்தனர்.. 5வயது எழிலரசி, 11வயது வேந்தனின் பொக்கிஷ புகைபடங்கள்.
நெற்றி முத்தம் கொடுத்து.. மருதாணியை கழுவிய பின் அவளின் உள்ளங்கையில் முத்தம் பதித்து.. ” ஐ லவ் யூ முயல்குட்டி. ” பரிசு கவரில் வைத்திருந்ததை கொடுக்க.
அதை பிரித்து பார்த்தவள்.. ” தனு மாமா என்ன இது? “
கண்கள் கலங்கி கேட்டபவளின் கண்களில் முத்தமிட்டு.. ” இந்த வீடு என் பங்கும் உனக்குதான் என்பது கூட.. அனைத்தும் உன் பெயருக்கு மாற்றியது. இதை அங்கே கொடுக்க வேண்டியது..
கம்பெனி, மருத்துவமனை பற்றி பேசியதால் கொடுக்க முடியல. ” இரண்டையும் நினைத்து மகிழ்ச்சி, கவலை என எந்த உணர்வையும் காண்பிக்காமல் மடியில் வைத்தபடி அவள் இருக்க..
தன் மடியில் அமர்ந்து தோள் சாய்ந்திருந்தவளின் எண்ணம் புரிந்து அமைதியாக இருந்தவன்.. அவள் தலையில் தன் தலை வைத்து.. ” நான் கல்யாணம் முன் கொடுக்கனும் வேண்டும் என்று நினைத்தேன்.. அவங்க நமக்கு கல்யாண பரிசு கொடுக்க நினைத்து இன்னைக்கே கொடுத்துயிருக்காங்க. “
” ம்.. ஆனா என்கிட்ட நீ சொல்லாத விஷயம் அவங்களுக்கு தெரிந்துயிருக்கு. அதனால தான்அவங்க.. நீ நினைத்து போல செய்ய படிப்பு தேவையில்லைனு.. ஹாப்பிட்டால் கட்ட முடிவு எடுத்துயிருக்காங்க. அவங்களாவது.. ” முடிக்கும் முன் வேந்தன் இதழில் விரல் வைத்து..
” அரசி அவங்களுக்கும் ஸ்கூல் பிரண்டஸ் கிட்ட பேசுபோது தான் தெரிந்து இருக்கும். அதேசமயம் உனக்கு தெரியாது என்பதும் தெரிந்து இருக்கும். நானே சொல்லம இருக்கனா.. ஏதோ காரணம் இருக்கும் என்று இருப்பாங்க. நீ இதை யோசிக்காத டி. ” அவள் கன்னத்தில் முத்தமிட்டு..
சரி அது எப்படி அவங்க EVA பெயர் வைத்தாங்க?. நீ யார்கிட்டயாவது நம்ம குழந்தைகள் பெயர் அ வில் தான் ஆரம்பிக்கும் என்று சொன்னாயா?. ”
அவள் முழித்து.. பின் முறைத்து.. அவனின் கன்னம், கை என பல இடங்களில் கிள்ளியவாறே.. ” ஏன்டா நீ குழந்தைகளுக்கு என்று நான் வாங்கிய நகைகளில் அவங்க பெயர் இருக்கே. அதை நல்லா பார்க்கலையா?. “
அவள் தன் மடி அமர்ந்தே தன்னை கிள்ளி.. கோபமுடன் பேசி முச்சு வாங்கி அமர்ந்துயிருப்பவளை.. அவளை ஒரு வழி செய்ய தோன்றிய மனதை புன்னகையுடன் அடக்கி.. காதில் உதடு உரச.. ” முயல்குட்டி உன்னைய பார்த்தபின் தான் குழந்தைகளுக்கு வாங்கிய நகைய பார்க்க வேண்டும் என்று அன்னைக்கு நான் பார்க்கல. ஆனா இப்ப பெயர் வைத்தபின் அதை பார்க்க தோன்றுகிறது. ” தான் கூறியதை கேட்டு வதனம் சிவந்து இருந்தவளை கீழே உட்கார வைத்து.. உள்அறையில் இருந்து எடுத்து வந்தான்.
தன் முயல்குட்டியை மடியில் அமரவைத்து.. இரு பெண், ஒரு ஆண்.. மூவருக்குமான எழிலரசி கைகளால் டிசைன் செய்த பட்டு உடைகள் முதலில் பார்க்க..
அடுத்து தங்க, வைரம் கலந்த அஜெஸ்ட் டைப்பில் நகைகள்.. அதில் இருந்த செயினில் இருந்த இதயம் வடிவில் இருந்த டாலரில் தங்கள் மற்றும் குழந்தைகளின் ஆங்கிலத்தின் முதல் எழுத்து வைரம் மற்றும் எமரால்ட் கற்கள்இருந்தது..
அதை எத்தனை வருடம் சென்றாலும் அவர்கள் போட்டுக் கொள்ளளாம். பின் அவர்கள் சாப்பிட தேவையான வெள்ளி பொருட்களில் குழந்தைகளின் பெயர்கள் அலர், அஸ்வி, அகன் பொறிக்கபட்டு இருப்பதை கண்களால் கண்டு மகிழ்ந்தனர்.
பின் தன் அரசியின் மோதிரவிரலை அதன் மேல் வைத்து.. அந்த விரலை தான் பிடித்து இருவரும் தடவி பார்த்தனர்.
அந்த விரலை பிடித்து அதற்கு பல முத்தம் கொடுத்தான். அது அவளின் கால் நுனி விரல்வரை பரவி.. அவளிற்கு பல உணர்வுகளை தோற்றுவித்தது. அதனை விரல் மடக்கி அடக்கியவள்.. தன்னவனை பார்க்க அவனோ அவளின் போட்நெக் டாப்பில் கழுத்து மச்சம் அவனின் கண்களுக்கு மிக அருகில் தெரிந்தும் இவ்வளவு நேரம் தன்னை கட்டுபடுத்திக் கொண்டுயிருந்தவன்.. அவளின் உணர்வால் சிவந்த கழுத்தை பார்த்தபின்.. தனக்கான மச்சத்தில் மென்முத்தம் பதித்தான். அதனால் தானாக கண்கள் மூட.. மூடிய விழிகளில் சில முத்தம் பதித்தான்.
அவளிடம் மெல்லிய குரலில்.. ” முயல்குட்டி வீட்டிற்கு இப்ப கிளம்பினா சரியா இருக்கும். ” அவளின் தன்நிலை அடைய தோள்வளையில் சாய்த்த பின்.. அனைத்தும் எடுத்து வைத்தவன்.. இத்தனை நாள் நினைவுகளை எண்ணியபடி அறையை கண்களால் சுற்றி பார்த்தான்.
மணி பனிரெண்டு ஆன பின் மனம் முழுவதும் செல்வியாக இருக்கும் முயல்குட்டியின் நறுமணத்தை நிரப்பி.. துள்ளளுடன் அவளை தன் முகம் முன் கொண்டுவந்து..
தன் அரசியின் நெற்றிமுட்டி.. ” முயல்குட்டி நமக்கு இன்னைக்கு கல்யாணம்டி.. வேந்தனாகிய.. தனுமாமாவ கல்யாணம் செய்ய கொள்ள சம்மதமா?. ” அவளை மயக்கம் புன்னகை மற்றும் புருவம் உயர்த்தி கேட்க.
‘ சம்மதமாவா?!. ‘ ஒரு நொடி முழித்தவள்.. பின் ‘ இவனை ‘ செல்லமாக திட்டி.. உதடு மடித்து கடித்து.. மெல்லிய புன்னகையுடன்.. கண்களை பார்த்தவாறே தலைமட்டும் அசைத்தாள்.
அவனோ சிறிது கண்கலங்கி.. தன் பாக்கெட்டியில் வைத்திருந்த நகை பெட்டியில் இருந்த இருவருக்குமான.. கல்யாண மோதிரத்தில் தன் அரசிக்கான மோதிரத்தை.. அவள் இதழில் மென்முத்தம் பதித்த பின்.. அவளது வலது கையின் ஆள்காட்டி விரலில் நெற்றி முட்டியபடியே போட்டுவிட்டான்.
தனக்கானதை தன்னவளின் நீட்டும் போதே.. மெல்லிய புன்னகையுடன்.. ” நான் என் முயல்குட்டிய என் அரசிம்மாவான எழிலரசிய கல்யாணம் செய்து கொள்ள முழு சம்மதம் சம்மதம் சம்மதம். “
அவளோ அவனின் தான் கேட்கும் முன்னே கூறிய சம்மதத்தில்.. ‘ தனுமாமா ‘ என முகம் முழுவதும் முத்தமிட்டு.. அவனின் விரலில் அணிவிக்க.. அவனோ குறையாக விட்ட இடத்தை நிரப்ப.. அவளின் இடைபிடித்து தன்னுள் இறுக்கி.. கழுத்தை பிடித்து அழுத்தமாக அவள் அதரத்தில் முத்தம் பதித்தான்.
அடுத்த பதினைத்தாவது நிமிடம் எழிலரசியின் வீட்டில் இருந்த ஊஞ்சலில் இருந்தனர். இன்னும் சில நிமிடத்தில் திருமணத்திற்காக கிளம்ப வேண்டும்.
தன் அரசியை தனக்குள் புதைத்து கொண்டு.. அவள் தலையில் சாய்ந்தபடி இருவரும் சில நிமிடங்கள் கண்கள் முடியிருந்தவர்கள்.. இருவரும் மாறிமாறி முத்த பரிமாற்றம் செய்து கொண்டபின்.. மனம் முழுவதும் நிறைவுடன் ஊஞ்சலில் இருந்து எழுந்தனர்.. மருதாணி விழா உடையுடன் சில புகைபடங்கள் எடுத்துக் கொண்டனர்.
பின் தன் முயல்குட்டிக்கு உடனே தேவையானதை எடுத்து வைத்துவிட்டு.. அவள் உடைமாற்றி குளிக்க செல்வதற்காக வெளியில் நின்றவன்.. அவள் சென்றவுடன் உள்ளே கோயிலில் தேவையானத்தை எடுத்து வைத்ததை.. திரும்ப ஒருமுறை சரி பார்த்தவன்..
இந்த அறையிலும் தங்களின் நினைவுகளை புன்னகையுடன் நினைத்து பார்த்த படியே இன்பா அறைக்கு சென்று.. மாப்பிள்ளையாக தயாராகி வர..
மச்சான் இன்பா ஹாலில் நின்றான். உடன் சந்துரு, திலகன், சத்யா, வசு, கமலேஷ் இருந்தனர்.