ஆரஞ்சு வண்ண சட்டை, பட்டுவேஷ்டியில் இன்பா, சந்துரு, திலகன், கமலேஷ் இருக்க..
சத்யா, வசுந்தரா பேபிபிங் சேலையின் உடல்.. அடர்பச்சை அகலமான பாடர் மற்றும் பிளவுஸ். அதில் வசுந்தரா தங்களின் கல்யாணத்திற்கு என்று வாங்கிய தங்கம், வைரம் கலந்த நெக்லஸ், ஆரம், தோடு.. சிறிய அளவிளான உட்டியானம், நெற்றி சூட்டி என அழகு பதுமையாக இருக்க..
சத்யா தங்கம், வைரம் கலந்த ஆரம் மற்றும் தோடு.. தங்கவைர வளையல்களின் இடையில் உடைக்கு ஏற்ற கண்ணாடி வளையலில் அம்சமாக இருந்தாள்.
ஹாலில் இன்பா தவிர மற்றவர்களை எதிர்பார்க்காததால்.. ஒரு நொடி பின்சென்று முன்வந்தவன்..
புன்னகையுடன்.. ” வசு, சத்யா நீங்க எப்ப வந்தீங்க? ஏன் இங்க வெளிய நிக்குறீங்க?. அரசி இந்நேரம் வந்துயிருப்பாளே?. ” கூறியபடியே தன்னவள் அறைக்கு செல்ல.. அடி எடுத்து வைத்தவனை கைபிடித்தாள் வசுந்தரா.
” அண்ணா உங்கள அம்மா வீட்டிற்கு.. உடனே எங்களோட கூட்டிட்டு வரச்சொன்னாங்க. ” தயக்கத்துடன் கூற..
” ஏன்??. அரசி கிளம்பிய பின் அங்கதானே வருவோம். “
” ம்.. அண்ணி வருவாங்க. ஆனா நீங்க நம்ம சொந்தகாரங்க வீட்டிற்கு வரும்முன் நீங்க அங்க இருந்தா நல்லாயிருக்கும்மா. நேற்றே நீங்க தனியா போய் மெஹந்தி போட்டுவிட்டது பிடிக்கல.
எதுவும் வாய் திறந்து சொல்ல.. ஆனா லட்சுமி அத்த கூட சரியா முகம் கொடுத்து பேசல. அதான் அவங்க வந்துட்டா நீங்க இங்க இருப்பதா சொன்னா ஏதாவது தப்பா பேசிடுவாங்களோனு நினைக்கிறாங்க. “
சரி என தலையசைத்து.. அரசியை அழைத்து.. அறை உள்ளே சென்றவன்.. பத்தாவது நிமிடம் தன்னவளை சாப்ட் சிலக் சேலையை விரித்து விட்டது போல கட்டி.. சிறு அலங்காரம் மற்றும் அவளின் பொருட்களுடன் வெளிவந்து ‘ போகலாம் ‘ என பார்த்தான்.
திலகன் பெருமுச்சு விடுத்து.. ” டேய் இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் டா. எழிலரசி கூட அவங்க அப்பா, அம்மா.. சொந்தகாரங்களுடன் தான் அங்க வரனும். “
அவனை முறைத்து.. ” அது எனக்கு தெரியாதா?. நாம்ம பெரிய வீட்டிற்கு போகல. நாங்க இருக்கும் வீட்டில் இருக்கேன்.. சொன்னா யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க தானே?. “
வசுவை பார்க்க.. அவள் ‘ தெரியலையே ‘ என கமலேஷை பார்க்க.. வேந்தனின் அந்த வீட்டிற்கான விருப்பம் தெரிந்ததால் வீட்டில் இருப்பவர்கள் ஒன்றும் சொல்ல வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில்.. அவன் ‘ இல்லை ‘ என தலையசைத்தான்.
” இங்க வரும் சித்தி, பெரியம்மாவ அங்க அழைத்து வா. ” இன்பாவிடம் கூற..
அவன் சரி என கூறி.. கண் சிறிது கலங்கி வேந்தனை கட்டிக்கொண்டும்.. எழிலரசியை நெற்றி முத்தம் கொடுக்க..
அவளிற்கு பிடித்த அசோக அல்வாவை.. சந்துரு, இன்பா இருவரும் இருவருக்கும் ஊட்டி விட்டு.. ” திருமண வாழ்த்துகள் குட்டிம்மா. மாமா. ” இருவரும் ஒருசேர கூறினர். எழிலரசி இன்று திட்டமாட்டாள் என்ற நம்பிக்கை.
‘ குளித்து வெளிவர தனு தன் சேலைக்கு மடிப்பு வைத்திருந்தவன்.. உடனே அவளிடம் தேவையானதை கொடுத்து குளியல் அறையில் அதைமாற்றி.. இரவுஉடையின் சட்டையோடு வரக்கூறியவன்.. தன்னவளை பொம்மை போல நினைத்து.. அவளிற்கு சேலை கட்டிவிட்டு சிறுஅலங்காரம் செய்து கூந்தலை முன்பே காயவைத்து இருந்ததால்.. கிளிப் போட்டு.. அவனுடன் அந்தரத்தில் நின்று அதரமுத்தம் சில பல வாங்கி விட்டு.. புகைபடம் எடுத்து கொண்டு வெளிவர..
தனுவின் பேச்சின் போது சோகமான முகத்துடன் இருந்த அண்ணாவை பார்த்தவள்.. அண்ணாவின் தனுவுடன் அணைப்பு, தனக்கு தந்த நெற்றி முத்தமும், இனிப்பு கொடுத்து.. வாழ்த்துக்கூறிய பின்தான் தனக்கு இன்று கல்யாணம்.. தான் இனி இந்த வீட்டில் அதிகம் இருக்க மாட்டேன்.. அதனால் அண்ணா கலங்குகிறான் என புரிந்தது.
புன்னகையுடன் இன்பாவின் முதுகை அணைத்து.. ” டேய் அண்ணா நீ இப்படி அழுகுற அளவிற்கு என்ன ஆச்சு.?. நீ என்னை நினைத்து அழுறீயா? இல்ல தனுவை நினைத்து அழுறீயா?. ” அவன் முழிக்க..
அவனை கிள்ளி..” ஓ.. அப்ப தனு இனி அடிக்கடி வரமாட்டாருனு அழுதியா?. “
‘ ஆம் இல்லை ‘ தலையசைக்க.. புன்னகையுடன் பார்த்த வேந்தன்.. அவன் தங்கைக்காக தான் அழுதுயிருப்பான் என தெரியுமாகையால்..
” அரசி நேரம் ஆச்சு. இன்பா நீயும் கூடவே வா. வரவங்களை மாமா கூட்டிட்டு வருவாங்க. ” கூறியபடியே வந்தவன்.. மற்றவர்களை முன்னே போககூறி..
அரசியை நிற்க வைத்து.. அவளுடன் அவர்களின் இடத்தில் அவளின் வெற்றிடையை இறுக்கபிடித்து.. அவளை தோள் அணைப்பில் வைத்து புகைபடம் எடுத்து கீழே வர.. அங்கு வீட்டினர் அனைவரும் தயாராகி இருந்தனர்.
பின் பூஜை அறையில் பாட்டி அவர்களுக்கு நெற்றியில் பிரசாதம் வைத்தபின்.. ஆசிர்வாதம் செய்தவுடன்.. எழிலரசியை விட வேந்தனும்.. எழிலரசி தங்கள் வீட்டில் இருந்து.. புகுந்த வீட்டிற்கு சொல்வதை விட..
வேந்தனை தான் அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகவும் மிஸ் செய்வோம் என்ற ரீதியில்.. ‘ அவனிடம் நன்றாக சாப்பிடு, பாட்டி எழிலரசியை காண்பித்து முறைத்து.. நீ அவளிற்கு அதிகம் வேலை செய்யாதே.. ‘ என பல அறிவுரை கூறினர்.
இதனை அடங்கபட்ட புன்னகையுடன் அவனவள் உட்பட பார்த்தனர். ஆனால் மனதில் குறுகிய காலத்தில் மாப்பிள்ளை என்றதை விட மகள், பையனை விட இவன் அதிகம் அவர்கள் மனதில் எந்த அளவிற்கு பதிந்துள்ளான் என எண்ணி மகிழ்ந்தனர்.
புன்னகையுடன் பார்த்திருந்த எழிலரசியை சிறிது முறைத்து இருவருக்கும் சத்துமாவு கஞ்சி.. அனைவருக்கும் காபி போட சமையல் அறைக்கு சொல்ல.. அவனின் அரசி புன்னகையுடன் பின்னால் சென்றாள். மற்றவர்கள் அவனை அறிந்து அனைவரும் ஹாலில் அமர்ந்தனர்.
வசுந்தரா தான்.. எழிலரசியை விட தன் அண்ணாவின் மேல் அதிகம் பாசம் வைத்திருப்பதை பார்த்து.. ‘ தான் தன் அன்பை புரிந்துகொள்ளாமல்.. தன் கல்யாணத்தின் போது இதுபோலான சில அற்புத நிமிடங்களை இழந்து விட்டேன் ‘ என நடந்ததை எண்ணி வருந்தி கமலேஷ் கையை பிடித்தபடி அமர..
அவன் தன் துணையின் கண்களில் தெரிந்த கவலையை புரிந்து.. ” தாரா பெரியவங்க பல பேரை பார்த்த அனுபவதில் வேந்தனை புரிந்து கொண்டாங்க. நீ நடந்து கொண்டது சரியில்லதான்.. ஆனா அதில் நீ செய்யதை யோசித்து.. முழுமையா புரிந்து கொண்டா.. அதை சரிசெய்திடலாம். எல்லாவற்றிக்கும் சேர்த்து வேந்தன் கடமையா எண்ணாமா..
உன்னிடம் பழையபடி முழு அன்பை மட்டும் செலுத்தி.. அவன் நடந்து கொள்ளும் காலம் நிறைய இருக்கு. பழச நினைத்து கவலைபடாத. ” சிரியே என பார்க்க.. அவள் புன்னகையுடன் சரி என தலையசைத்தாள்.
இதை கமலேஷ் அருகில் இருந்த திலகன்.. ஏதோ கதை கேட்பது போல தாடையில் கை வைத்த படி கேட்டுயிருந்தவன்.. ‘ ம்.. இன்னும் வருங்காலத்திலும் நிறைய பஞ்சாயத்தை பார்ப்போம் போல.’ புன்னகையுடன் எண்ணியபடியே.. அவர்களை விட்டு தன் தியாவின் மீது.. தன்னை திருப்பினான்.
அரசியை மேடையில் அமர வைத்து நினைத்தை வேகமாக முடித்து.. இன்பாவை அழைத்து காபி கொடுத்தனுப்பிவன்.. அரசியின் முன்நின்று அவளை பார்த்தபடியே குடிக்க ஆரம்பித்தவன்.. தன்னவளின் கண்வசியத்தால் அவள் இதழுடன் இணைத்து இருவரும் இருவராக.. ஆனால் இதழ் ஒன்று என குடித்து முடித்தனர். இறுதியில் ‘ கேடி முயல்குட்டி.. ‘ என அவசர இதழ் முத்தம் அவளிற்கு வழங்கினான்.
சந்துரு அங்கு இருக்க.. மீதி நால்வருடன் வேந்தன் எழிலரசியும்.. தன்னவள் வீட்டின் முன் தனியாக சில புகைபடங்கள் எடுத்தபின்.. அவனின் வீடு சென்றார்கள்.
அங்கு தயாராக இருந்த அழகுநிலைய பெண்களின் மூலம்.. எழிலரசி வேந்தனின் தாத்தா, பாட்டி அறையில் தயாராகி முடித்து பெண்கள் வெளிவந்த அந்த நிமிடம்.. தன் முயல்குட்டியை காண வேந்தன் உள்ளே சென்றுவிட்டான்.
‘ எழிலரசி அழகுநிலைய பெண்கள் செய்யும் அலங்காரத்தை தான் பார்க்கும் முன் தன் தனுமாமா தான் பார்க்க வேண்டும் என்பது அவளின் கட்டளை. நேற்று மாலை போலவே கண்மூடி இருந்தவளிடம்.. அலங்காரம் முடிந்த பின் கூறி.. அவளை நிற்க வைத்து.. அவர்கள் வெளியே வந்தவுடன்.. தன் அரசியை சென்று பார்த்தவன் ஒருமுறை கண்மூடி திறந்தான்.
‘ தன்னவளின் முன் நின்று.. இலைபச்சை வண்ண காஞ்சிபுரம் சில்க் சேலை. அதன் உடல்பகுதியில் தங்கநிற பட்டுசரிகையினால் பூக்கள் அதன் கொடிகளுடன் படர்ந்து இருப்பது போலான வடிவங்கள் உடல்முழுவதும். இதன் பாடர் ரோஜா, பர்புல், பீச் மூன்றுவண்ணத்தில் இருபக்க டிசைன், அதன்நடுவே அடர்த்தியான ரோஜா நிற பிளைன் சரிகை என பெரியபாடர். இதற்கு பிளவுஸ் பர்புல் வண்ணம் அதில் பீச், இளஞ்சிவப்பு, தங்கம் மூன்று வண்ணம் கலந்த நூல் வேலைபாடு இருந்தது.
திருமண அலங்காரத்தில் முடியிருக்கும் கண்களே ஆளை மயக்க.. திறந்தால் தான் தாங்குவேனா!. என பயந்து.. உடலின் வெப்பம் அனைத்தையும் முயல்குட்டியின் கருவிழி கண்களின் மேல் இறக்கிவிட்டான். அவளின் கன்னத்தில் ஆங்காங்கே ஒன்றிரண்டு வடுகளின் தடம் இருந்தாலும் முயல்குட்டி போன்று பிடித்து கொஞ்ச தோன்றும் கன்னம், அது பஞ்சு போன்று மென்மையாகவும்.. எப்போதும் பொலிவுடன் தான் இருக்கும். இன்று இன்னும் மின்னியது. அதன் மேல் கொடுக்க ஆசைதான்!. ஆனால் அதில் புதைந்தால் ஒன்றுடன் தன் அதரத்திற்கு நிறுத்த தெரியாதே என.. அதனைவிட்டு அவளின் இடைவளைத்து தனக்குள் இழுத்து இறுக்கிஅணைத்து.. அவளின் இதழ்மேல் மென்முத்தம் பதித்து தான்கொடுத்த லாப்பாம் சுவை என்னவென்று சோதித்தான். தேன் மற்றும்ஆப்பிள் சுவை. ‘
‘ ஒருகையால் அப்படியே அவளை தூக்கி.. டென்பிள் டிசைன் நகைகள், அதில் ரூபிகற்களில் உள்ள நெற்றி சுட்டியின் நெற்றி வகுட்டின் பகுதியை தூக்கி.. வகுட்டின் மீதும், அடுத்து கழுத்தைசுற்றி.. கழுத்து மச்சத்தில் ஆழ்ந்து என முத்தம் பல பதித்தான்.
அவளின் விழிநீர் அவனின் கையின் மேல் விழுந்தது. அது ஏன்?. எனவும் புரிந்தது. இந்த இருஇடமும் தங்களின் உரிமையை.. இன்று என்னிடம் இருந்து பெறப்போகிறது.
இதற்கு நான் பல வருடமும்.. அவள் அதற்கு எல்லாம் சேர்த்து மூன்று மாதங்கள் என எங்களின் காத்திருப்பு நிறைவேற போகிறது. அவளின் மார்பின் சேலைமேல் பட்டும்படாமல் முத்தம் கொடுத்து இருவரும் உடலில் சிலிர்பை உணர்த்தனர். அதனை இருவரும் அழுத்தமாக தங்களின் இறுக்கத்தில் காண்பித்தனர்.
எழிலரசி கண் திறக்க.. தன் சேலையை போன்றே பட்டுசட்டை, தன் சேலையின் பாடர்கலந்த கரையுடைய பால்வண்ண வேஷ்டியுடன்.. என்றும் போல் வழுவழு கன்னத்துடன்.. அடர் மீசை மட்டும் வைத்து இருக்கும் தன் தனுமாமாவின் கன்னம் பிடித்திழுத்து.. தன் கையை தன் உதட்டில் வைக்க.. அதில் செல்லமாக கோபம் கொண்டு.. அவளின் இதழிற்கு மென்மையான தண்டனை வழங்கினான். ‘
‘ பின் அவளின் காதும்.. அவனின் மீசை ரோமமும் மெளனமொழி மட்டும் பேசி.. அவனின் பார்வைபின் சென்றது.. தான் பார்த்ததை சோதிக்க மெதுவாக அவளை இறக்கி.. பின் திருப்பி நாட் பிடித்திழுத்தான்.. சரியாக இருக்க.. தான் அவளை சோதிக்க அனுமதி தந்ததற்கு அவளின் முதுகுமச்சத்தில் முத்தம் பதித்து..
சாமங்கிபூ, இளஞ்சிவப்புரோஜா, பச்சை சாமந்திபூ மூன்றுமலர்களை தாளம்பூநாரில் கட்டி.. அதனை விரிந்த கூந்தலின் நடுவில் சூடியிருந்த.. அதன் வாசத்தை தன் உயிர் வரை உள்ளிழுத்து.. அரசியை திருப்பி அவளின் இதழ் மூலம் அவளிடமே பகிர்த்து விட்டான். அவளை இறுக்க தனக்குள் புதைத்து கட்டியணைத்து.. அவளின் அழகை மீண்டும் கண்களால் பரிசோதித்து.. கண்களின் மையை சரி செய்து.. நெற்றி முத்தம் பதித்து.. தன் அரசியுடன் தங்களின் திருமணத்திற்கு செல்ல தன் அரசியை வெளியே அழைத்து வந்தான். ‘
அங்கு இருந்தவர்களுடன்.. எழிலரசி வீட்டினர் அக்கா, மாமா என முக்கியமானவர்கள்.. கூடவே வேந்தன் வீட்டினர் சித்ரா, ரவிந்திரன், ராகவன், சுமதி, கார்த்திக், விஸ்வநாதனும் இருந்தனர். இருவரையும் கல்யாண உடையில் பார்த்தும்..
அன்று இவன் சேலைக்கு அனைவரிடமும் சண்டையிட்டதில் தப்பே இல்லை என்னும் அளவிற்கு.. தாங்கள் அனைவரும் தேர்வு செய்த உடையின் வண்ணம்.. அவனின் விருப்ப வண்ணம் கலந்து.. சேலை மற்றும் வேஷ்டி சட்டை.. மிகவும்அழகாக!. இருந்தது.
ஆனால் என்ன?. அதன் விலையும் அதிகம் என அதன் மென்மை மற்றும் சரிகை கூறியது. அவர்களின் உடையுடன் சேர்த்து.. கல்யாண, காதல் இரண்டு கலையும் சேர்ந்த முகம் இருவரும் ஜொலித்தனர்.
தர்ஷினி, வசுந்தரா இருவருமே ஒருசேர வந்து கண்மை எடுத்து அவர்களுக்கு திஷ்டி வைத்தனர். இருவரும் தன் அக்கா, அண்ணாவை கட்டி கொண்டு வாழ்த்தும் தெரிவித்தனர். புன்னகையுடன் வேந்தன், எழிலரசியும் கட்டிக்கொண்டு நன்றி தெரிவித்தனர்.
வேந்தனிற்கு இப்போது வசு, அம்மா மற்றும் சிலரின் மீது சிறிது வருத்தம் இன்னும் மனதில் உள்ளதுதான். தானும் , எழிலரசியும் எங்களின் எண்ணத்தில் இருந்து என்றும் மாறபோவதில்லை..
ஆனால் அனைவர்மீது இருக்கும் வருத்தம்.. இன்னும் சிறியதாக, பெரியதாக மாறுவது அவர்களின் நடவடிக்கையில் தான் உள்ளது என இருவரும் முடிவெத்து..
அதனை அப்படியே ஒரம்கட்டிவிட்டு.. தங்களின் திருமண வைபவத்தின் ஒவ்வொரு நொடியையும்!. உறங்காமல் கூட அனுபவித்து கொண்டுயிருக்கின்றனர்.
தங்கைகளை அடுத்து.. லட்சுமி, சித்ரா, நாயகி பாட்டி, அம்மாச்சி, அருணாச்சலம், ரவிந்திரன் கடைசியாக இன்பாவும் வந்து பூரித்து கட்டியணைத்து விடுவித்தனர். இன்பா தங்கையின் அருகில் நின்று கொண்டான்.
வேந்தன் செல்லமாக முறைக்க.. அவன் பாவமாக பார்க்க.. நடுவில் புன்னகையுடன் தன் அண்ணாவிற்காக.. தன் தனுவை முறைக்க.. அவன் ‘ போடி ‘ என அவளையும்.. புன்னகையுடன் இன்பாவை ‘ நில் ‘ என பார்த்தான். இதனை அனைவரும் மெல்லிய புன்னகையுடன் பார்த்தனர்.
ரவிந்திரன் தங்களின் பூர்விகவீடு.. அடுத்த தெரு தானே என்பதால்.. வேந்தன், எழிலரசி இருவருக்கும் சேர்த்து மாப்பிள்ளை, பெண் அழைப்பை ஒரே அழைப்பாக வைத்துக் கொள்ளலாம் என..
வீட்டில் இருந்த உறவினர்களுடன் சேர்ந்து.. தெருவின் ஆரம்பித்தில் இருந்த விநாயகர் கோயிலில் இருந்து.. எழிலரசி வீட்டினர் ஏற்பாடு செய்திருந்த மேளதாளத்துடன்.. வேந்தன் புன்னகையும், ஆனந்தமாய்.. தன் அரசியுடன் மெல்லிய குளிர்காற்றில் அனைவருடன் சேர்ந்து நடந்து செல்கின்றான்.
சித்ராவிற்கு.. மகனின் கல்யாண கோலம் மனம் முழுவதும் சந்தோஷத்தை நிரப்பியிருந்தது. ஆனால் அவனின் அரசியின் மீதான வார்த்தைகளில் வரையறுக்க முடியாத காதல் புரிந்தாலும்.. இன்னும் அதனை மனசு ஏற்றும் ஏற்காமலும் இருக்கிறது தான். இது விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருப்பதால்.. பழைய சித்ராவாக புன்னகையுடன் வலம்வருகிறார்.
ஆனால் மேகா, நந்தினி மட்டும் இனி இங்கு நடக்கும் நிகழ்வுகள் போல் வருங்காலத்திலும் இதுபோல வித்தியாசமான நிகழ்வுகளை பலவற்றை பார்க்கவேண்டுமே என.. இப்போதே இதனை பார்த்து சகித்து பழகிகொள்ள வேண்டும் என தங்களின் எரிச்சலை.. தன் துணைக்கு பயந்து உள்ளுக்குள்ளே மறைத்து..பெரிய வீட்டிற்கு நடந்து சென்றவர்களுடன் நாத்தனார், அண்ணியும் பேசியபடி உடன் சென்றனர்.
இதனை பார்த்திபனும், அஸ்வின் அவர்களின் முகத்தை பார்த்து படித்து ‘ ம்..பழகி கொண்டா சரி எனவும்.. இனி அம்மா, அப்பா உடன் இருந்தே.. தங்களின் விருப்ப வேலையை செய்து.. தங்கள் காதல், குடும்ப வாழ்க்கையும்.. இனி சுவாரஸ்சியம் கலந்து இருக்கும் என மனதில் நினைத்து மாமா, மச்சானும்..
கதிரவன், தர்ஷினி அவளின் மற்றொரு அண்ணாவாக மாறிய கணவனின் நண்பன் சந்துரு மூவருடன் பேசிய படியே நடந்தனர்.
அரசி தன்னவன் தன் மீதான காதல் பிறந்து, வளர்ந்து.. விருட்சமான வீடான.. அவனின் தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தே.. தங்களின் திருமணத்திற்கு கிளம்புகிறோம் என்ற மனநிறைவும், மகிழ்ச்சியுமாய்..
பூஜைஅறையில் வேந்தன், எழிலரசி.. பாட்டி, தாத்தாவிடம் பிரசாதம் பூசி, தம்பதிகளாக அனைவரிடம் ஆசிர்வாதம் என அனைத்தும் முடிந்தபின்..
சிலர் ஹோட்டலில் இருந்தே நேராக கோயிலுக்கு சென்றபடியால்.. மணமக்கள், பெரியவர்கள், இளையவர்கள் மற்றும் விஸ்வநாதன், காவ்யா, நண்பர்களின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக ஓரே சொகுசு பஸ்சில்..
நேற்று விட்ட ஆட்டம், பாட்டத்தை இப்போது அனைவரும் ஆடி, பாடியபடி.. சுற்றிலும் பசுமையான நடுவே எழிலரசி , வேந்தன் திருமணம் நடக்கும் சிவன் கோயிலின் உள்ளே அனைவரும் நுழைத்தனர்.
இறைவனை வணங்கி.. அதன்பின் யோகா, காவ்யா, வசுந்தரா, சுரபி, இளமதி குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து.. வேந்தன் எழிலரசி திருமண முகூர்த்தநாளை இனிதே தொடங்கி வைத்தனர். அந்த நேரத்தில் மணமக்கள் இருவரும் போட்டோ எடுத்தனர்.
கோயிலின் உள்ளே இருக்கும் இடத்தில்.. வேந்தன் எழிலரசி திருமணத்திற்காக பச்சைதென்னைஓலையில் நான்கு தூண் கொண்ட.. வட்ட வடிவமேடை உருவாகி.. அதில் சிவப்புரோஜா, மல்லிகை சேர்த்த மாலைகள், தாமரை, மஞ்சள்சாமந்தி, சாமங்கி, துளசி சேர்ந்த மாலைகளால் மணமேடையில் உருவாக்கியிருந்தனர்.
தூண்களின் அருகில் மணமக்களின் வாழ்வு செழிப்படைய.. இருவரின் வீட்டில் இரண்டுநாள் முன் முளைபாலிகை தினம் அன்று முளைந்த நவதானிய பானைகளும், இருவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என கொத்துகொத்துகாக இருக்கும்.. தென்னை பூகொத்து, தென்னை இளநீர், பாக்கு, வாழைபழம் முதலியவை பல வைக்கபட்டு இருந்தன. இதில்சில பந்தலின்இருக்கும் வாழைமரத்திலும் இருக்கும்.
இருபக்கமும் பெரிய வெள்ளிவிளக்குகள் சுடர்விட்டு எரிய.. அதன் நடுவில் சீர்தட்டுகளின் வைக்கபட்டு இருந்தனர். அதன் அருகில் படைத்த பொங்கல் வைத்தபின் சில நிமிடங்கள் கழித்து..
மேடையை பார்த்தவாறு அமர்ந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் வேந்தன், எழிலரசி தனித்தனியாக வந்து.. அனைவரையும் வணங்கி அமர்ந்து.. பூஜை செய்து காப்புகட்டிய பின்..
அருணாச்சலம், லட்சுமி ஆனந்த கண்ணீருடன் தங்கள் மகள் எழிலரசியை கன்னிகாதானம் செய்து.. வேந்தன் மற்றும் ரவிந்திரன், சித்ராவிடம் ஒப்படைத்தனர். அடுத்த நிமிடம் மகளை எனக்கு கொடுத்து.. நான் இன்னொரு மகனை உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என தன் பெற்றோர் மூலம் அரசிக்கு செய்ததை போல செய்து.. அருணாச்சலம், லட்சுமி, எழிலரசி கையில் வேந்தன் ஒப்படைக்க பாட்டான். இதனை அவனின் விருப்பமாக மகிழ்வுடனே நிறைவேற்ற பட்டது.
அதன்பின் தங்களின் திருமண உடை மற்றும் நகைகளை இருவரின் பெற்றோர் மற்றும் தாய்மாமா கைகளில் இருந்து வாங்கி கொண்டனர். இதற்கு மட்டும் வேந்தன் புன்னகையுடன் அனுமதி கொடுத்திருந்தான்.
வேந்தன் இங்கும் தன் அரசியை அவள் பார்க்கும் முன்னே.. அவளின் மணமகள் தோற்றத்தை பார்த்த பின்பே..
இன்பா, விஸ்வநாதன், கமலேஷ் , கார்த்திக் மற்றும் நண்பர்கள் சூழ மணவறைக்கு வந்து.. அடுத்தடுத்த சடங்குகள் செய்த வண்ணம் இருந்தவன்..
தன்னவளின் கொழுசு சத்ததில் திரும்பி பார்க்க.. அங்கே யோகா, வினோ, வசுந்தரா, இளமதி, சத்யா சூழ வந்தவள்.. தன்னவனின் விழிபார்வைக்கு காத்திருந்த அவனின் முயல்குட்டி.. மெல்லிய புன்னகையுடன் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி!. தன் தனுவை கன்னம் சிவக்க வெக்கபட வைத்து..
தன்னவள் விரும்பும் மெல்லிய விரிந்த புன்னகையுடன்.. தங்களின் திருமணத்தை நடத்தும் ஐயரை பார்க்க வைத்தாள். அருகில் இருந்தவர்கள் என்றும் போல இவர்களின் கூத்தை சிரிப்பும், முறைப்புமாக பார்த்தனர்.
‘ தன் அரசி இயற்கையாய் இருக்கும் அழகும்.. இயற்கையின் மூலம் தான் கண்டுபிடித்த பொருட்களின் மூலமும்.. தொடந்து மூன்று நாட்கள் நலங்கு மாவு தடவியது.. தான் அவளிற்கு ஆயில்மசாஜ் செய்த விட்டது என அனைத்தும் சேர்ந்து..
அழகுக்கு அழகு சேர்த்து எழிலரசி என்ற பெயருக்கு ஏற்றார் போலவும்.. தன்னவள் திருமண நகை பற்றி கூறிய பின்.. தன் விருப்ப நகையை.. அவள் போடுவதற்கு ஏற்றவாறு அதிகம் எடையில்லாத வைரம், தங்கம், ஆங்காங்கே மரகதம், ரூபி கலந்த தலைமுதல் இடைவரை அணிந்த ஆபரணத்தில்..
தங்கநிறம் காஞ்சிபுரம் சிலக் சேலை.. அதன் உடல்பகுதியில் பறவைகளின் வடிவங்களை தங்கபட்டுசரிகை கொண்டு நெய்திருக்க.. பாடர் அடர்மஞ்சள்நிறம் அதில் தங்கம் சரிகை மட்டுமே அதின் ஒரத்தில் பன்னீர்பூ நிறம்.. இதற்கான பிளவுஸ் பிளைன் தங்கம் மற்றும் மஞ்சள் வண்ணம்.. அதில் தங்கநிற சரிகையினால் மங்கம் வேலைபாடு செய்திருந்தது.
இவை எல்லாம் விட இரண்டுமாதம் முன்பு இருந்த உடல் எடைக்கு மீண்டும் வந்து.. இளமைவனப்புடன் இருக்கும் தன் முயல்குட்டி.. இன்னும் சில நிமிடங்களில் அவனின் உரிமையானவளாக போகிறாள் என்ற மகிழ்வில்.. அவனிற்கு உரிமையான இடத்தில் முத்தம் பதித்துவிட்டு.. தன் முயல்குட்டியின் வாசனையை சுமந்தபடி மணமேடைக்கு வந்திருந்தான். ‘
அவளவனின் கண்ணிற்கு அழகு தேவதையாக இருப்பவள்.. தன்னவனின் வலதுபக்கம் அருகில் அமர்ந்தவுடன்.. அரசியின் தனுமாமா வெளியே வந்துவிட்டான்.
அவள் அமர்ந்தபின் அவனிற்கு கிடைத்த ஒருநிமிடத்தில் அவனின் இடத்திற்கு அருகில் அவனின் முச்சுக்காற்று படும் அளவிற்கு சென்று.. ” முயல்குட்டி உள்ள பார்த்தவிட இங்க ரொம்பவே சோதிக்கிறடி. நாம்ம வேண்ணா நைட்டுக்கு முன்ன.. கல்யாணம் முடிந்து காலையிலேயே ஒரு டிரையல் பார்க்கலாமா? ” அவளின் தோடு அடியில் இருந்த முத்தில் மாட்டியிருந்த.. முடியை எடுத்துவிட்டு அமைதியாக ஐயரையும், மற்றவர்களையும் பார்த்தான்.
‘ வேந்தன் தன் அரசியின் சேலை தங்கநிற பட்டுசரிகையினால் நெய்த வடிவமைப்பை போன்ற பட்டுசட்டை, பட்டுவேஷ்டி அதில் மஞ்சள்நிற கரையில் தன் உடல்பகுதியின் வடிவமைப்பு இருந்தது. அதேமாதிரியே தான் தோளில் இருந்த அங்கவஸ்திரமும் இருந்தது. ‘
கேட்டவளோ ஒரு நொடி அதிர்ந்து அவளும்.. சில நிமிடங்களில் தன் மன்னவனாக மாறப்போகும்.. தன் தனுவாகிய வேந்தனின் மிக அருகில் சென்று.. ” தனுமாமா நீ கேட்ட டிரையலிற்கு.. மூன்றுமாதம் முன் உறுதி அன்னைகே சம்மதம் சொல்லிட்டேன்பா. ” அவனின் சட்டையில் இல்லாத தூசியை தட்டிவிட்டு ஐயரை பார்க்க..
கேட்டவன் ‘ கேடி முயல்குட்டி.. ‘ என அவளிற்கு பதில் அளிக்க சாய போகையில்..
சட்டென்று.. வேந்தன், எழிலரசியின் நடுவில் நின்ற வேந்தனின் அண்ணா ஈஸ்வர், தங்கையின் வினோவின் குழந்தைகள்.. யாழினி, விசாகன் இருவரின் நடுவில் தலை நுழைத்து..
ஆளுக்கு ஒருபக்கமாக திரும்பி..” நீங்க ஆடாம அமைதியா உட்கார வேண்டுமாம் அம்மா, அத்த சொன்னாங்க. ” மழலை மாறாத குரலில் கூற..
வேந்தன், எழிலரசி இருவரும் அவர்களின் கன்னத்தில் முத்தம் பதித்து ‘ ம்.. சரி ‘ என தலையசைத்து.. நேராக திரும்பும் முன்.. இருவரும் ஒருசேர தன்துணைகளிடம் ஒற்றை கண் சிமிட்டி புன்னகையுடன் திரும்பினர்.
திரும்பிய பின் தங்களின் செய்கையை.. பார்த்து சிரித்த ஐயர், வீடியோ, போட்டோ எடுப்பவர் மற்றும் மூன்று நண்பர்களின் அடங்கபட்ட சிரிப்பை பார்த்த பின்பே இருவரும் தங்களின் செய்கையை உணர்ந்தனர்.
அதன்பின் தங்களின் செய்கை எண்ணி இருவருமே சிரிப்போடு கூடிய வெக்க சிவப்புடன் இருந்த அவ்வேலை..
ஐயர் வேந்தன் கைமேல் அரசியின் கையை வைக்க கூற.. அவளும் வைக்க.. அவளின் மென்மையான கையை.. இன்னும் மென்மையாக பற்றி இருவரும் உடல் சிலிர்ப்புடன் ஒருநொடி பார்த்து.. பின் மனம்முழுவதும் ஒன்றி பூஜை செய்தார்கள்.