அவர்களில் விஸ்வநாதன்.. வினோ கூறியது போல அவரின் அம்மா பத்மா.. தங்கைகளுக்கு நகைவாங்க வேண்டும் என கூறி.. தன் தங்கைகள் ரேவதி, சங்கவி மற்றும் இறந்த சித்தி மகளான தங்கை தாமரைக்கும் சேர்த்து.. சென்னையில் இருந்தே தங்கம், வைரம் கலந்த ஒன்றுபோலான ஆரம் வாங்கி வந்துயிருந்தான். அதைதான் அவனின் தங்கைகள் பட்டுசேலையுடன் அணிந்து எல்லோருமே இங்கு இருந்தே ரிசெப்ஷன் செல்வது போல தயாராகி வந்தனர்.
ஆனால் அதற்கு உரியவர்கள் கல்யாண உடையில் அனைவரையும் வரவேற்றனர்.
விஸ்வநாதன் தங்கைகள்.. வேந்தன், எழிலரசி பற்றி மேலோட்டமாக தெரிந்துகொண்டு.. அதிலே உஷார் அடைத்து இப்போதுதான் பழக்கம்போல.. வீட்டிற்கு தன் கணவனுடன் வந்து பழக ஆரம்பித்து விட்டார்கள்.
‘ EV கம்பெனி ஆரம்பிக்க போகும்.. EVA மருந்துவமனையில்.. குழந்தை பிரசவிக்கும் பெண்களுக்கு.. அவர்கள் தங்கும் நாட்களில் இலவசமாக.. அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றார் போலான உணவு.. அவர்களின் அறைக்கே எடுத்துச்செல்லும் சமையல் பகுதியும்..
வேறு சிகிச்சைக்கு என்று தங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனியாகவும்.. மற்றவர்களுக்கு தனியாக என குறைந்த விலையில் கேன்டீனும் வைக்க உள்ளனர். ‘
அதனை அன்னபூரணி ஹோட்டல் ஏற்க வேண்டும் என கேட்டு.. அதற்கு சரி என கூறி.. அதை முழவதும் பார்த்துகொள்ளும் பொறுப்பை..
காவ்யா அம்மா, அப்பா.. எழிலரசி, காவ்யா வேறுபாடு, பிரச்சனை பற்றி கூறும்முன்னே..
மாணிக்கம், ரவிந்திரன் கடை ஒப்பந்தத்திற்கு சரி என வேந்தனின் நண்பர்கள் முவரிடம் கூறும்போதே.. ராஜேஷ் தான் அதை பார்த்துக் கொள்ளவான் என ஒருமாதம் முன்பே கூறியிருக்கிறார்கள் என்பது.. நேற்று இரவுதான் அவர்களுக்கு தெரிந்தது.
அதனால் காவ்யா வீட்டினர் எதற்கும் தாங்கள் எழிலரசி பற்றி இழுக்காமல் இருந்தாலே தங்களுக்கு வேண்டியதை சரியாக ஆரம்பித்தால்.. தானாகவே தங்கள் பிள்ளைக்கு நினைத்தை விட நல்லது நடக்கும் புரிந்துகொண்டனர்.
அதனால் பத்மா வீட்டினருடன் காவ்யா வீட்டினரும்.. அருணாச்சலம், லட்சுமியிடம்.. அவர்களின் வீட்டிற்கே வந்து போன வாரம் நடந்த பிரச்சனை போல் இனி நடக்காது என உறுதி அளித்தும் சுமுகமாக அவர்களும் எழிலரசி வீட்டினருடன் பழக ஆரம்பித்து.. ரவிந்திரன், சித்ராவிடம் முறை விருந்திற்கு வேந்தன், எழிலரசியை தங்கள் வீட்டிற்கு அழைத்தார்கள்.
கீழ்தளத்தில் பெரியவர்கள் இவ்வாறு இருக்க.. மற்றவர்கள் மேல் ஹாலில் வந்துவிட்டனர். அங்கும் டிவியிருக்க பாட்டு சேனல்.. அதுபாட்டிற்கு ஒடிக்கொண்டுயிருக்க..
ரேவதி, தாமரையின் கணவர் இருவரும் அவர் மாமனார் சுவாமிநாதனுடன் இருந்ததால் மாடி ஹால் எழிலரசியின் மேக்கப் அறையாக மாறியிருந்தது.
கண்முடி அமர்ந்தவளை தான் ஏன் என புரியாமல் சிலர் பார்க்க.. வசுந்தரா காரணம் கூற.. ” வசுந்தரா உங்க அண்ணா, அண்ணியும் புதுசா புதுசா பண்ணுறாங்க. ஆனா அதை பார்க்க சுவாரஸ்சியமாவும் இருக்கு.” எந்த வித முகமாற்றம் இன்றி மெல்லிய புன்னகையுடனே ரேவதி கூறினாள்.
அவளும் கணவனுடன் பேசிக் கொண்டியிருந்தாலும்.. தன் அரசியை அனைவர்முன்னும் ரசித்திருக்கும் அண்ணாவை பார்த்து.. புன்னகையுடன் ‘ ஆம் ‘ என தலையசைத்தாள். சிறிதுநேரத்தில் வேந்தன், எழிலரசி உடை மாற்ற செல்ல.. அனைவரும் கீழே வந்துவிட்டனர்.
‘ ரிசெப்ஷனிற்காக திருமணமான பெண்கள் எல்லோரும் கோரா, பனாரஸ், காஞ்சி பட்டுவகைகளில் உள்ள ஆக்னஸ் வகை சேலைகளும்.. அவர்களின் விருப்ப நகைகளையும்.. மற்ற பெண்கள் டிசைனர் சுடி, லெஹங்காவும்..
ஆண்கள் வேலை, தொழில்முறை நண்பர்கள்தான் அதிகம் வருவார்கள் என தங்களின் விருப்ப உடைகளை அணிந்துயிருந்தார்கள். ‘
சித்ரா, லட்சுமி.. வசுந்தரா வந்தவுடன் தர்ஷினி, நந்தினி, மேகா ஜோடிகளையும் ‘ ஒன்றாக நீங்களே பிளான் செய்யுங்கள் ‘ என கூறி எழிலரசி வீட்டிற்கு அழைக்க.. அவர்களும் வந்து பெண்கள் அதுபற்றி பேச ஆரம்பித்தனர்.
நாலு ஆண்கள் வேறு ஒன்றையும் அப்படியே முடித்து வர பிளான் செய்ய.. இன்பா.. அரசி, வேந்தன் கூறியதை கூற.. அவர்களுக்கு சரிதான்.. துணைகளிடம் கேட்டு உறுதி செய்யலாம் என நினைத்து.. அவர்களுக்கு நால்வரும் மெசேஜ் செய்ய..
தர்ஷினி, வசுந்தரா சரி எனகூற.. நந்தினி, மேகா இருவரும் தங்களின் விருப்பம் ‘ அந்தமான் ‘ சொல்ல வேண்டும் என கூற.. அதனை மற்றவர்களிடமும், மற்ற இரு பெண்களிடமும் கூற.. அவரவர் விருப்பம் என முடிவாகி..
பெரியம்மா, சித்தி, அத்தை வீடுகளுக்கு சென்று.. அங்கிருந்தே இரு ஜோடிகள் அந்தமான் செல்லலாம்.. மற்றவர்கள் கேரளா செல்லாம் என முடிவெடுத்து அதனை ஐந்து ஜோடிகளுக்கும் அனுப்பி.. பின் உறுதி செய்து.. அதற்கு ஏற்றார்போல் விருந்தினர் வீடுகளுக்கு செல்ல பிளான் செய்தனர்.
மாடியில் வேந்தன் தன் அரசியின் அலங்காரங்தை ஆராயும் வேலையை தொடங்கிவிட்டான்.. ‘ மெரூன் நிற மென்மையான மெல்லிய சேலையில்.. சேலை வடிவமைப்பாளர் பட்டு சரிகையினால் உடல்முழுவதும் பூக்கள், இலை, கொடிகளை வடிவமைத்து.. கீழ் சேலைமடிப்பிற்கு மட்டும் பொட்டுபோல் வடிவமைப்பு.. அது பார்க்க தாவணி போன்று இருந்தது. தங்கநிற சரிகை பாடர். இதன்பிளவுஸ் அடர் சிவப்பு வண்ணம்.. அதில் பட்டுசரிகையினால் கொடி, சிறிய இலை மட்டுமேயான டிசைன். ‘
‘ இதற்கு அலங்காரம்.. முகத்திற்கு தங்க நிறமும், கண்களுக்கு மயக்கம் கருமை, பிரவுன் அலங்காரம். நேர்த்தியான புருவத்தின் நடுவில் மெரூன் வண்ண பொட்டு. ‘ இந்த அறையிலே இப்படி மின்னுறா.. இன்னும் மாலைநேர மணமேடையில்.. ‘ ம்ஹம்.. தன் பாடுதான் பெரும்பாடுபோல.. ‘ பெருமுச்செடுத்து கண்களின் மேல் மென் முத்தம் பதித்தான்.
‘ நெற்றி வகுடு எடுத்து அதை தளர்ந்தபடியாக கூந்தலை பின்னல் போட்டு அதன் நடுவில்வெள்ளை, பச்சை வண்ணசிறு பூக்கள் கொண்டு அலங்கரித்து இருந்தனர். ‘ நெற்றி வகுட்டிற்கு முத்தமிட்டு.. சிறிய அளவில் சிவப்பு குங்குமம் இட்டு.. அதில் சிறிது தன் நெற்றியில் வைத்தான்.
தாலி மட்டும் இருக்க.. மச்சத்திற்கு முத்தம் வைத்து.. பின் மீசை ரோமத்தால் கழுத்தை சிவக்க வைத்து.. தன் கன்னத்தையும் அவனவள் இழுத்து தன் கன்னம் சிவந்துபின்..
தன் நண்பர்கள் மூலம் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ‘ பிரத்தேகமான வைரம், மரகதம் கலந்த நெக்லஸ், தோடு ‘ போட்டுவிட்டான்.
அதன்பின் தன் அரசியின் காதில் மெல்லிய குரலில் உதடு உரச தாங்கள் பிளான் செய்ததற்கு வசுந்தரா, தர்ஷினி மட்டும் சம்மதம் கூறியதை கூற.. அவனை மாலையாக அவள் கைகள் கோர்க்க.. அவற்றின் அர்த்தம் புரிந்து அவளை இடைபிடித்து தன் உயரத்திற்கு தூக்க.. அது தெரிந்தபின்.. கண்திறக்க போனவளை..
வசதியாக சுவரோடு சாய்ந்து தன்மனைவி முயல்முட்டி.. தங்களின் ரிசெப்ஷனிற்கான.. சேலை அலங்காரத்தில் அம்சமாக இருப்பவளிடம் மயங்கியிருக்க.. அவளின் வெண்ணிலா இதழை மென்மையாக சுவைத்து அவளின் சுவாசம் வாங்கி தன்னை தெளிய வைக்க வேண்டி.. அவளிற்கு ஆழ்ந்த முத்தம் கொடுத்து.. மீண்டும் அவளை இறுக்க கண்கள் முடவைத்தான்.
புன்னகையுடன் அவளின் பாசமான விழியை எதிர்பார்த்திருக்க.. அவளோ முறைத்து ‘ ஏன்டா‘ தன் இதழ் சென்று பார்க்க.. ” இனி முயல்குட்டிக்கு முத்தம் கொடுக்க எனக்கு காரணம் தேவையில்லடி. ” மீண்டும் அதை செய்து புன்னகையுடன் பார்த்தான்.
‘ போடா ‘ முறைப்பும் சிரிப்புமாக தன்னவனை பார்த்தாள்.. பின் சட்டென்று சற்று பின்னால் சாய்ந்தும், பக்கவாட்டிலும் பார்க்க.. சரியாக தெரியதாலால் இறங்கி.. பின்னால் வந்து அவளவனை பார்த்தாள்..
‘ கடல்பச்சை வண்ண ஷெர்வானி.. அதில் சிவப்புநூல் மற்றும் தங்கதிற மங்கம் வேலைபாடு.. பிளைன் பேட் ‘ மீண்டும் அவனை தூக்க வைத்து அவனின் முகம்முழுவதும் முத்தமிட்டு.. ” அழகாக இருக்கீங்க தனு. “
முத்தம் அனைத்தும் ரசித்து.. பின் நெற்றி முட்டி.. கள்ளபுன்னகையுடன்.. ” ஏன்டி நீ டிரஸ் மட்டும்தானே பார்த்த?. ” அவனின் பேச்சு ஒன்று.. பார்வை வேறாக இருக்க.. முதலில் இரண்டிற்கும் புரியாமல் விழித்தவள்.. பின் உடல் சிலிர்த்து வார்த்தை வாராமல் அவனின் கன்னத்தின் மீது சாய்ந்து கொண்டாள்.
அவளின் உடல் சிலிர்ப்பு அவன் கை உணர்ந்து.. அவனும் கூட வார்த்தை இன்றி.. பார்க்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்தான். இருவரும் நிமிட நேரம் அமைதியாய் இருந்தார்கள்.
பின்தான் எழிலரசிக்கு கேட்க வந்த கேள்வி ஞாபகம் வர.. அவனின் முகம் பார்த்து ” தனு கமலேஷ் அண்ணா, வசுந்தரா ஏதும் வேண்டானு சொன்னாங்களா?. அவங்களா தானே வரேனு சொன்னாங்க?. ”
” தெரியல டி. அப்படி ஏதும் பேச்சு வந்துயிருந்தா.. இன்பா மெசேஜ் செய்துயிருப்பான். எனக்கு அவங்க வராங்களே அதுபோதும். எங்க கமலேஷ் வசுந்தரா படிக்கிறானு வேண்டானு சொல்லிவிடுவானே நினைத்தேன். “
அவனை கன்னம் கிள்ளி.. மெல்லிய புன்னகையுடன்.. ” அண்ணா என்ன லூசா. வசுந்தராவோட கல்யாணம் ஆன பின்ன படிப்ப காரணமா வைத்து.. குடும்பம் தான் நடத்தமாட்டேனு சொன்னார். லவ்வரா இருக்க மாட்டேனே சொல்ல. அதான் நம்ம கூட வர நல்ல சான்ஸ் மிஸ் பண்ணாமா.. முதல் ஆளா இரண்டு பேரும் சரி சொல்லியிருப்பாங்க. ”
அவளை கிள்ளி.. ” பின்ன ஏன்டி இந்த கேள்வி கேட்ட?. ”
” அவங்களா வரேன் தானே சொன்னாங்க?. இல்ல எல்லோரும் போறோம் அதனால யாரும் அவங்களை கேள்வி கேட்பாங்களோ?.. இல்ல தப்பா எடுத்துபாங்களோனு நினைத்து.. இல்ல கம்பல் பண்ணி.. சரி சொன்னாங்களானு கேட்டேன். ”
” ம்.. நீ சொன்ன மாதிரியோ.. இல்ல நானும் நீயும் நம்ம கூட வர சொல்லும்போது.. அப்படி யோசிக்க வாய்ப்பு இல்ல. அப்படியே இருந்தாலும் அது அவங்க தனிப்பட்ட விஷயம் டி. வரேன் சொல்லிட்டாங்க அவ்வளவுதான். ” சரி என தலையசைத்து..
தாங்களும் போவதற்கு கன்னத்தில் முத்தமிட்டு.. அவள் தன்னை ‘ இறக்குடா ‘ என கீழே பார்க்க..
அவளை முறைத்து.. ” என்னடி காலையில் வரைக்கும் தூக்கினா.. நானா இறக்கும்வரை அமைதியா இருப்ப.. இப்ப நீயா இறக்கிவிட சொல்லுற?. ” கொழுப்பா?. என இதழை பார்த்தும்.. என புருவம் உயரத்தியும் கேள்வி கேட்க.
அவனின் இதழை தொட்டு.. கன்னம் சிவக்க.. ” ம்.. முன்னாடி நீ தூக்கிட்டு வந்தா.. அந்த வேலைய மட்டும்தான் பார்ப்ப. இப்ப நீ தூக்கிய அடுத்த நொடியில் இருந்து முத்தம் கொடுத்திட்டே இருக்க. எனக்கு.. எனக்கு.. ” வார்த்தை வர தடுமாற..
தன் அரசியின் காதில் ” நீ தானேடி கல்யாணம் முடிந்து டிரையல் பார்க்க சம்மதம் சொல்லிட்ட.. அதான் ஆரம்பித்தேன். நீ திருப்பி கொடு. ” என அவளை மயக்கும்.. அவனின் மெல்லிய விரித்த.. மயக்கும் புன்னகையுடன் அவள் செவ்விதழை பார்த்து கூறி.. அவளை தன்நிலை இழக்க செய்து.. தன்னவனின் இதழில் அவனால் உருவான உணர்வை திருப்ப கொடுக்க.. அங்கே இதழ் ஒத்திகை நடத்தி முடித்தனர்.
தங்கள் ரிசெப்ஷனிற்காக.. பெற்றோர்கள்.. உறவினர்களை அழைத்து சென்றுயிருக்க.. இருவரும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் காரில் இன்பா உடன் ரிசெப்ஷன் நடக்கும்..
தங்களின் பேக்டீரி கட்டபோகும் இடத்தின் முன் நிற்க.. இருவரும் கதவு திறக்க அதன் கைபிடி வைக்கும் முன்பே.. கதவு திறந்தது.
அங்கே வேந்தனின் பக்கம் சந்தோஷ், அரசியின் பக்கம் ரோஹித், ராகேஷ் புன்னகையுடன் வரவேற்றனர். அவர்கள் மூவரும் இன்பாவை போல கீரீம்கலர் ஷெர்வானி.. அதில்மெரூன்நிற நூல் வேலைபாடு இருந்த உடையை அணிந்திருந்தனர்.
வேந்தன், எழிலரசி அவர்களை விட புன்னகையுடன் இறங்கி.. அவர்களை தோள் அணைத்து வரவேற்றனர். இன்பா அவர்களை கைபிடித்து வரவேற்றான். அவர்கள் அப்போது தான் வந்திருப்பதற்கான அடையாளமாக.. அவர்களின் முன் மூவரும் வந்த அவர்களின் கருப்பு நிற லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி பாதுகாவலருடன் நின்றது.
இப்போது அரசி அவர்களை முறைப்புடன் பார்த்து நின்றாள். ஏன்?. என புரிந்து.. ரோஹித் புன்னகையுடன்.. ” தெய்வமே நீங்க சொன்னபடி கேட்டு.. காரிலே தூங்கிட்டு தான் வந்தோம். இன்னைக்கு நீங்க இப்படியெல்லாம் கோபபட கூடாது. பாருங்க உங்க கோபத்தை பார்த்து எல்லாம் பயந்துபோய் அங்கேயே நீக்குறாங்க. “
இவர்களை வரவேற்றக வாசலில் நின்ற பெற்றோர்கள் மூவரை பார்த்து ஒரமாக.. தன்னை பார்த்து புன்னகையுடன் நிற்க.. அதை மாற்றி கூறி மீண்டும் அவளின் முறைப்பு.. பின் அது அழகிய புன்னகையாக மாறியது.
‘ தங்கள் வேந்தன் அரசிக்கு சிறிய குடைபிடிப்பது போன்ற அலங்காரமுள்ள தோரணபூக்கள் தனியாக தேவையில்லை என..
வழிநெடுக்கும் பூக்களின் தோதரணங்கள் இருக்க.. பெற்றோர்கள்.. சில உறவினர்கள் முன்னே சொல்ல..
அண்ணா இன்பா மற்றும் ரோஹித், சந்தோஷ், ராகேஷ் சுற்றி இருக்க..
பின்னால் தான் அண்ணாக்களாக நினைக்கும் அருட்செல்வம், அருள்நிதி, சுரேந்திரன், ஈஸ்வர், அஸ்வின், கதிரவன், சந்துரு மற்றும் பார்த்திபன் வர..
இத்தனை மச்சான்களின் நடுவில்.. பச்சை நிற ஷெர்வானி அணிந்த மன்னவன் வேந்தன்.. மெரூன், சிவப்பு கலந்த டிசைனர் சேலை, வைரம், மரகதம் நெக்லஸ், அதில் தான் காலை அணிவித்த மஞ்சள் தாலி கயிறு மின்ன இருந்த அரசி எழிலரசியின் கைபிடித்த படி இருவரும் எழில்வேந்தனாக..
மேடையின் மூன்று பக்கமும்.. சிவப்பு, வெள்ளை நிற ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்டும்..
தலையின் மேல்பகுதியில் இளம்பச்சை இலைகள் படர்ந்தும்.. அதன்நடுவே இருக்கும் அலங்கார பெரிய விளங்குகளால் அந்த மேடையை பளிச்சென்று காட்ட..
அதன் நடுவில் இருந்த ev எழுத்தை ஒன்றாக இணைத்த e எழுத்துபோல இருந்த.. மணமக்கள் உட்காரும் படியான பூக்களின் இருக்கையில் இருவரும் அமர்ந்தார்கள். ‘
அனைவருக்கும் புதுவிதமாக அழகாக இருக்க.. வேந்தன், எழிலரசிக்கு மட்டும்.. நாங்கள் இருவர் இன்று ஒன்றாகி விட்டோம் என்பதை குறிப்பது போல அவ்வளவு நிறைவாக இருந்தது.
இருக்கைமேல் உட்காரும்போதே.. ஊஞ்சலில் தன்னவன் மேல் அடங்கி இருப்பது போல இருக்க.. அதனை தன்னவனின் கையில் காண்பித்தாள். அவனும் அதையே உணர்த்து அவளின் கையை தன்கைகளில் இறுக்க பிடித்தான்.
அதன்பின் இருவருக்கும் ‘ பச்சைகாம்பு, வெள்ளை நிற பூக்கள் இருக்கும் பேபி பிரெத் பூக்கள், வெள்ளை மற்றும் பிங்நிற சிறிய ரோஜாவினால் மாலை தொடுத்திருந்த.. ‘
அந்த ரிசெப்ஷன் மாலையை இருவரின் தாய்மாமா சக்கரவர்த்தி, ராகவனும் கொடுக்க.. அதனை இருவரும் இருவரின் இதழை பார்த்து மெல்லிய புன்னகையுடன் அணிவிக்க..
அதே வேலை அவர்களின் எதிர்புறம் வானில் பலவண்ண வாணவேடிக்கை செய்து ரிசெப்ஷனை ஆரம்பித்தனர்.
நண்பர்கள் மூவரும் இணைத்து மீண்டும் வாழ்த்து.. அவர்களின் மனைவிகள் ராகினி, ரிமா, ரேஷ்மா லண்டனில் தோழியின் திருமணமும் இன்று என்பதால் உடனே வரமுடியாத காரணத்தையும்.. அவர்கள் வாழ்த்து கூற சொல்லியதையும் கூறி.. இன்பாவுடன் சேர்த்து புகைபடம் எடுத்தபின்..
இருவரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அவர்களின் குடும்பங்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள், வேந்தன் சென்னை, பெங்களூரில் வேலை செய்தவர்கள், அங்கும் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் அவர்களின் துணைகள், EV கம்பெனியில் வேந்தனை தெரிந்தவர்கள், பெற்றோர்கள் , உறவினர்களின் தொழில்முறை நண்பர்கள் என வாழ்த்து, ஆசிர்வாதம், புகைபடம் என எடுத்துசெல்ல..
அதில் எழிலரசி விருப்பி சாப்பிடும் இனிப்பு.. அதனை வாங்கும் கடையின் உரிமையாளர்கள் வந்து எழிலரசியை ஆச்சரியபட வைத்தனர். வேந்தன் இவர்களுக்கு மட்டும் அவனே அழைப்பு விடுவித்தான்.
மற்றவர்கள் அனைவரில் முக்கியமானவர்களுக்கு அவனும்.. மீதியை அவன் சார்பாக அழைப்பு, வந்து சொல்வதற்காக ஏற்பாடு என அனைத்தும் நிகழ்ச்சியை நடத்தும் கம்பெனி பார்த்துக்கொண்டது.
நண்பர்கள் மூவரும் தங்களின் எழிலரசி, வேந்தனிற்கு அவ்வப்போது வெண்ணீர், ஜீஸ் கொடுத்து..
அவர்களின் பெற்றோர்களிடம் அன்பு, பணிவு.. உறவினர்களிடம் அளவான பேச்சு.. வருந்தினர்களிடம் ஆளிற்கு ஏற்ற அணுகுமுறை, தேவையானதிற்கு கட்டளை என தங்களின் செல்வநிலை அனைத்தும் ஒதுக்கி வைத்து..
நிகழ்ச்சி ஆரம்பம் முதல்.. குடும்ப புகைபடத்தில் இருந்தும்.. ஜோடிகள் தனியாக புகைபடம் எடுத்து.. அதன்பின் இருவர், இன்பா, திலகன், வினோத் அவர்களின் துணைகளான சத்யா, தீபிகா அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு.. நிகழ்ச்சி முடியும் வரை இன்பாவுடன் இணைந்து..
இருவரின் குடும்ப உறவுகள் வியக்கும் அளவிற்கும் தங்கள் இரு முக்கியமானவர்களின் ரிசெப்ஷனை முடித்து..
ஜோடிகளை அனைவருடன் எழிலரசி வீட்டிற்கு அழைத்து சென்று.. சிறிதுநேரம் அங்கு இருந்துவிட்டு.. குடும்பம் விரித்தி அடைய வேண்டும் தம்பதிகள் ஆசிர்வாதம் செய்தபின்.. இரவு சடங்கிற்காக வேந்தனின் வீட்டு வாசலில் அவர்களும் வாழ்த்தி கூறி அனுப்பி வைத்து.. மனநிறைவுடன் சென்னை சென்றார்கள்.
தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்க.. தாங்கள் எதிர்காலத்திற்காகவே பார்த்து பார்த்து கட்டிய வீட்டினுள்..
தன் முயல்குட்டியை, அரசியை, எழிலரசியை.. உறுதி அன்று வாசலில் தூக்கியதை போல இல்லாமல்.. முழுஉரிமையுடன் அவளை தூக்கி இறுக்க பற்றி தன்னக்குள் அடக்கி.. தான் காத்திருந்த நிமிடத்திற்கு எல்லாம் விடைபெற்று.. விடைகொடுத்து..
தன்னவளை தங்கள் அறையினுள்.. பூக்களினால் அலங்காரம் செய்த கட்டிலில் இருவருமாக அமர்ந்து.. தன்னவளை முத்தத்தால் குளிப்பாட்டி.. அவளிடம் ஒன்றை கொடுத்து.. கூறி தங்களின் பித்தேக அறைக்கு சென்றான்.
‘ மென்மையான வெண்பட்டு சரிகையால் ஆன சேலை.. தலை, முக அலங்காரம் மாற்றமின்றி.. தாலி, அவள் எப்போதும் அணியும் செயின் என எழிலரசி.. ‘ அவர்களுக்கு மட்டுமேயான அறையை திறக்க சில நொடிகள் தடுமாறிய நேரம்..
அவளவன் ‘ வெண்பட்டு சட்டை, மடித்த வேஷ்டியுடன்..’ தன் அரசியின் பக்கவாட்டில் நின்றுயிருந்தவன்.. அவள் தடுமாறிய நிமிடத்தில்..
எழிலோவியமாக இருந்தவளை கண்களால் ரசித்து.. அவளின் பின்னிருந்து தன் தொடுகை உணரும்படியாக அவளை அள்ளி எடுத்து.. ஆளை மயக்கம் வாசனை மெழுகுவர்த்தி மட்டும் மூன்றே மூன்று எரியும் அறையினுள் உள்ள இருவர் படுக்கையில்.. தன்னவளுடன் அப்படியே இருவரும்மாக படுத்தான்.
தன் அரசியை அவனும்!. தன் தனுமாமாவை அவளும்!. என இருவரும் பேசாமல் அணைத்து இருக்க.. தன் அரசியை அப்படியே தன் மேல் போட்டு கொண்டான். இருவருக்கும் தங்களின் இதயதுடிப்பு மட்டுமே அவ்வறையில் கேட்டது.
” முயல்குட்டி ஐ லவ் யூ டி. ” அவளின் நெற்றி முத்தம் கொடுத்து ‘ சம்மதமா?.’ என கேட்க.. மெல்லிய புன்னகையுடன் ” லவ் யூ தனுமாமா ” தன்னவனின் கன்னத்தை கடித்து.. ‘ சம்மதம் ‘ கூற..
ஒரு நொடி அவளின் செய்கையில் அதிர்ந்து.. ” ஹேய் முயல்குட்டி நான் தான் உன் கன்னத்தை முதலில் கடிக்க நினைத்தேன். நீ அதுக்குள்ள முந்திக்கிட்ட. ”
அவளின் கன்னத்தில் மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து.. பின் மென்மையாக கடிக்க ஆரம்பித்து.. அது முடியாமல் மீண்டும் இதமான முத்தம் கொடுத்தான்.
அவளின் இதழ் விரிந்த புன்னகை அவனின் கன்னத்திற்கு தெரிய.. ” ஓ.. நான் கொடுக்கமாட்டேனே.. என் முயல்குட்டிக்கு தெரிந்து.. இப்படிதான் கடிக்க வேண்டும் என்று டிரையல் காண்பித்தியா?. ”
‘ ஆம் ‘ என இப்போது அவனின் கன்னத்தில் பல முத்தம் கொடுக்க.. அவளவன் அதிக புன்னகையுடன்.. ” ஏன்டி.. என்னைய கேள்வி கேட்டதனு சொல்லுறியா?. இல்ல எல்லாம் கேள்விக்கும்.. சரி என்ற பதிலிற்கான முத்தமாடி. ”
ஆம் ஆம் என நெற்றியில் முத்தம் கொடுத்து சம்மதம், இரண்டாவதிற்கு ஆம் என்ற பதில் கிடைக்க..
அவளை அப்படி கீழ்திருப்பி.. அவளின் பக்கவாட்டில் அவன் படுத்து.. தன்னை மயக்கும் தன் அரசியின் கருவிழி கண்களை மெல்லிய விளக்கொளியில் பார்த்தான். அது சிறிது கலங்கி இருந்தது.
” முயல்குட்டி நமக்கு கல்யாணத்தின் நடுவில் நடந்ததை நினைத்து பார்த்தியா?. ”
அவளும் அவனின் தோள் வளைவில் புதைந்து ‘ ஆம் ‘ என மார்பில் இதழ் பதிக்க..
” நீ ரிலாக்ஸ் ஆவதற்கு டைம் கொடுத்தா.. தேவையில்லாத யோசித்துயிருக்க. ” சிறிது கோபத்துடன் கேட்க..
” தேவையில்லாம யோசிக்கல தனு. நமக்கு இப்படி அவசரமா தான் கல்யாணம் செய்ய என்று இருந்தா. ஏன் முன்னாடியே நடக்கல? இல்ல உங்க காத்திருப்பிற்காவது நமக்கு உறுதி அன்று குறித்த கல்யாண நாளில் நடந்துயிருக்கலாம் என்று.. இந்த அறைய பார்த்தும் பழசு எல்லாம் தோனுச்சு. “
அவளின் பக்கவாட்டில் இருந்த அவர்களின் உறுதி, நிச்சிய நாளில் எடுத்த புகைபடங்கள் மெல்லிய விளங்கு வெளியில் கூட தெரிய.. அதை பார்த்தும் அவளிற்கு அனைத்தும் ஞாபகம்வர.. அதனால் தன்னை மீறி கலங்கி தன்னவனின் கேள்விக்கு பதில் அளித்தாள்.
அவளின் கன்னத்தை அழுத்தமாக கடித்து.. பின் மென் முத்தம் பதித்து.. ” ம்.. தோனும் டி .. தோனும். மாமா உனக்கு ஒரு வாரமா டிரைனிங் சரியா கொடுக்கல போல. “
அவனின் மீசையை பிடித்திழுத்து.. ” தனுமாமா டிரையிங் சரியாதான் கொடுத்தார். கற்று கொண்ட நான்தான் சரியா கவனிக்கல போல. அதான் ஞாபகம் வந்து.. ” முடிக்கும் முன்..
தன் முயல்குட்டியின் கற்கண்டு சுவை இதழை தன் தேங்காய்பால் சுவை இதழில் பொருத்தி.. அவளின் தனுமாமாவின் முயல்குட்டி மீதான உணர்வுகளை.. அவளின் பெண்மைக்கு தெரியபடுத்தி.. அவளை பொறுமையாக படிக்க ஆரம்பிக்க..
அவனின் அரசியும் இத்தனைநாள் தன் தனுமாமாவின் காதலை வியந்து அவனின் கைகளுக்குள் அடக்கி இருப்பவள்.. அவளவனின் ஒருமுத்ததில் அவனுள் தன்னை உணர்த்து.. தன்னவனின் புரட்டி படிக்கும்.. அரசி என்னும் புத்தகம் ஆனாள்.
ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்
வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ
மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்
செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்
ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்
தனுவாகிய வேந்தனும்.. அரசியான எழிலரசியும் தங்கள் இருவரின் காதல், புரிதல், தோழமையுடனான அன்பு என திருமண வாழ்க்கை தொடங்கி.. இருவரும் தன் தனுமாமா, அரசிக்காவே காத்திருந்த தங்களின் பெண்மை, ஆண்மையை பரிசளித்து.. உயிரும் உயிரும் சேர்த்து எழில்வேந்தன் என்று ஒருவராகி தாம்பத்திய வாழ்க்கையை தொடங்கிவிட்டனர். தன்னவளை படித்து முடிக்கும் எண்ணம் இல்லாமல் அவளிள் முழ்கி தன் அரசியின் சோர்வு உணரும்வரை தொடர்ந்தான்.