வயநாடு. இயற்கை அழகும்.. காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் அதன் நறுமணத்தின் நடுவில் இருக்கும் மரவீட்டின் உள்ளே..
ஆதவனின் தங்கநிற கதிர் தன் முயல்குட்டியின் கன்னத்தில் பட்டு.. கன்னம் தங்கம் போல் மின்ன.. சில நிமிடங்கள் அதிலிருந்து முத்த புதையல் எடுத்தபின்..
இயற்கையின் அழகை தன் எழிலரசியுடன் ரசிக்க வேண்டி.. அவளை அள்ளிஅணைத்து வெளியே வந்தவன்..
நீச்சல் குளம் அருகில் சூரியன் வந்து சில மணிநேரம் கடந்தநிலையிலும் அங்கு குளிர் இருக்க.. தன்னவளின் தூக்கம் கலையாதவாறு தன்னுள் இறுக்கி அமர்ந்தான்.
வயிற்று வலியால் அதிகாலை தான் தூங்க ஆரம்பித்த தன் அரசியின் சோர்ந்த முகத்திலும்..
தன் நெஞ்சாங்கூட்டில் எங்கேயோ தனக்கே தெரியாமல் முடிந்து வைத்திருந்த தன் தனுவுடன் திருமணம் முடிந்து!. தனுமாமாவின் முழு சொத்தாகி விட்டதின்..
சந்தோஷம், பூரிப்பு.. அவள் முகத்தில் பிரகாசித்தது. அந்த பூரிப்பில் தன்னவளின் முயல்போல் புசுபுசுவென இருக்கும் கன்னங்கள்.. ஒருவாரத்திலே முன்பை விட இன்னும் அதன் மென்மையும், பளபளப்பும் கூடியிருந்தது.
அதனை அறிந்தபின் பார்த்திருக்க முடியாமல்.. தன்னவள் முதல் இரவன்று தனக்கு சொல்லி கொடுத்தபடி மென்மையாக கடித்தான். தன்னை உணர்ந்து மெல்லிய விரிந்த புன்னகையுடன் அவளின் கை தன் கழுத்தை அழுத்தி.. இன்னும் வேண்டும் என்று கேட்டாள்.
அதே நேரம் வயிற்றுவலியால் அவள் புருவம் சுருங்க.. அதை நிவிவிட்டபடியே.. அவள் கேட்டதை கொடுத்து கொண்டுயிருந்தவனின் நினைவு..
தங்களின் தாம்பத்திய தொடங்க நாளின் அடுத்தநாள் அற்புத அதிகாலையில்.. எவ்வித வலியோ, சோர்வே இன்றி.. துள்ளளுடன் அவனின் வெண்பட்டு சட்டையை அணிந்து தன் வெற்று மார்பின் மேல்படுத்து தன்னை கொஞ்சி கொஞ்சி தன்னிடம் அவள் வேண்டியதை பெற்றுக்கொண்ட பின்னே.. இருவரும் மறுவீட்டிற்கு கிளம்பினோம்.
அன்று தன்னவள் உடல்.. நொடியில் அனைத்தையும் சுகமாக ஏற்க காரணம்.. இவ்வயிற்று வலி.. அதனால் வரும் சோர்வை விட.. அவளின் பெண்மையை தனக்கு பரிசளித்த போது உணர்ந்தவலி.. பல மடங்கு குறைவு போலும்.
விரைவில் இந்த வயிற்றுவலியும் ஒருபொருட்டு இல்லை என தன்னவளை மாற்ற வேண்டும் என.. இன்னும் அவளை தன்னுக்குள் புதைத்து உறுதி எடுத்துக்கொண்டு..
யாரும் இல்லாத அந்த பெரிய மரவீட்டின் வெளியே குளிரும், வெயிலும் சமளவிலும்.. வசதியாக சாய்வாக அமரும்படியான இருக்கை இருக்க..
இரவு அரசிக்கு எண்ணெய்மசாஜ், சுடுநீர் ஒத்தடம் அவனும் அவள் தூங்கும் நேரம் தான் தூங்கியதால்.. உடன் வந்தவர்களுக்கு, வீட்டிற்கும் தகவல் கூறி, அவர்களையும் விசாரித்தபின்.. அவனும் சிறிது நேரம் உறங்கினான்.
வேந்தன், எழிலரசி திருமணம் முடிந்த அடுத்த நாள் காலையில் மறுவீடு என எழிலரசி வீடு , பாட்டிவீடு.. மீண்டும் குலதெய்வ கோயில் சென்று வந்தும்..
மதியமே ஐந்து ஜோடிகளில்.. சம்பந்தி விருந்து என்று கணேஷ் வீடு மற்ற எல்லோர் வீட்டிலும் வைக்கபட்டு.. இரண்டாம் நாள் ஐந்து ஜோடிகளும்அருகில் உள்ள வேந்தன், எழிலரசி குடும்பங்களில் உள்ள தாய்மாமா, அக்கா, தங்கைகள் வீடு தனித்தனியாக சென்று..
அங்கிருந்து மதுரைவழியாக இரு சொகுசு காரில் நான்காம் நாள் காலை குமுளிக்கு சித்ராவின் சித்தி, சித்திப்பா வீட்டிற்கு வந்தனர். அங்கேயே அவர்களுக்கு சில மாமாமுறையினர் விருந்தும்.. பின் தேனிக்கு கிளம்பி அங்கு அக்கா, தங்கைகள் என அனைவரும் அங்கு இருக்கும் அவர்களின் மற்றொரு தாத்தா, பாட்டியின் வீட்டில் விருந்து முடிந்து..
அடுத்தநாள் காலையில் அஸ்வின்– நந்தினி, பார்த்திபன்– மேகா மதுரை சென்று தேன்நிலவிற்காக அந்தமான் சென்றுவிட.. மற்றவர்கள் கோவை சென்றார்கள்.
அங்கு சந்துரு.. இன்பா, திலகன், சத்யா, வினோத், தீபிகா மற்றும் இவர்களுடன் எழிலரசி வீடு ரெனவேட் செய்ய உதவிய.. தன் தாத்தா, பாட்டியுடன் இருக்கும் மாமா வீட்டிற்கு அழைத்து சென்று தன்னுடைய மிக நெருங்கிய உறவுகளாய் மாறியவர்களுக்கு..
தன் அம்மா, அப்பா உடன் சில குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து.. அவர்களுடன் அனைவருக்கும் விருந்து கொடுத்து.. பின் சொகுசுவேனில் ஊட்டி கிளம்பி..
அங்கிருந்தவர்களுக்கு நம்ம சந்துரு இப்படி உறவுகளுடன் ஒன்றியும், சிரிப்புடனும் பேசுவானா?.!. என அனைவரையும் எண்ண வைத்தான்.
அவன் மாற்றத்திற்கு காரணமான வேந்தன் எழிலரசி.. கடந்த நாட்களில் தேவையான நேரம் மட்டுமே அனைவருடன் இருப்பார்கள்.. மற்ற இடைபட்ட நேரங்களில் பைக் எடுத்து கொண்டு..
அரசி தனுமாமாவுடன் அருகில் இருக்கும் இனிப்பு கடை, கிணறு, அருவி, பழத்தோட்டம் மற்றும் தங்களின் பிரத்தேக உலகில் இருப்பார்கள்.
ஆனால் இன்று அரசியின் உடல்நிலை எவ்வாறு இருக்கும் என அறிந்து.. ஊட்டில் ஒருநாள் இரவுமட்டும் இருந்துவிட்டு மதியம் மேல் கிளம்பி வயநாடு வந்துவிட்டனர். மற்றவர்கள் இரவுதான் வருவார்கள்.
இந்த ஒருநாள் மட்டும் தன் தனுமாமாவின் கழுத்தை இறுக்கியே அவளைவிட அவனே உடல், மனம் இரண்டையும் சோர்வடைய செய்திடுவாள்.
இருவரும் நன்றாக உறங்கியிருந்த நேரம்.. எழிலரசியின் காதுகளில் பறவைகள் கூப்பிடும் ஒலி.. மிக அருகில் கேட்டுக்கொண்டே இருக்க மெதுவாக கண் திறந்தாள் வேந்தனின் அரசி.
முழித்ததும் பார்த்தது தன் மன்னவனின் கலையான முகத்தில் வைத்திருக்கும் மீசை குழந்தையை.
கடந்த நாட்களில் இருவரில் யார் நினைத்தை?. நினைத்த நேரத்தில் யார் சாதிக்கிறார்கள் என்று அறியதா.. கணக்கிட முடியாத அளவிற்கு.. இருவரும் போட்டி போட்டு தங்களின் உரிமையானவர்களை படித்தார்கள். இப்போது போர்வைக்குள் அவனின் உரிமையான இடத்தில் பிடித்திருக்கும் இறுக்கிய அணைப்பு.. அதில் தான் உணரும் கதகதப்பு.. அந்நிலையிலும் அவளை ஏதேதோ செய்து.. தனுமாமா வேண்டும் என கேட்டது. பாவம் தனு தூங்கட்டும் என தன்னை அடக்கி.. அவன் முகத்தில் பட்டும்படாமல் சாய்ந்தாள்.
தன் பார்வையை இயற்கையிடம் திருப்பினாள். மரங்களின் இடையில் சூரியன்.. மரங்களின் இடையில் இருக்கும் காபி தோட்டத்தின் பூக்கள், இலைகளின் மேல்இருக்கும் பனிதுளிகளில் அதன் ஒளி. அதன் இருபக்கத்தின் நடுவில் இருக்கும் நடைபாதை. அதில் தன்னவனின் கைகளில் மிதந்து சென்றால். ‘ ம்ஹம் சுகமோ.. சுகம். ‘
ஆங்காங்கே இருக்கும் குடில் போன்ற வடிவத்தில் தனியான மரவீடு. ‘ அங்க தான் அறையின் உள்ளேயே நீச்சல் குளம் இருக்கும்போல. ‘
தனக்கு முன்னால் இருப்பதை பார்த்தால்.. ‘ என்னால முடியாதுதான் இதுதோட சேர்ந்த வியூ நல்லா இருக்குனு புக் பண்ணியிருக்கானா?. ஹாட் வாட்டர் வரும் என்று சொன்னான். கால்களையாவது உள்ளவிட்டு தனுவோட உட்காரனும். ‘
வயிற்றில் பசி சத்தமும்.. உடல் வேறு தேவை கேட்க. வேந்தனை பார்த்தாள்.. நன்றாக அயர்ந்து தூங்குகிறான் என இறுக்க பிடித்துயிருக்கும் அவனின் கைகளை மெதுவாக சிறிது விலக்க..
சட்டென்று அவனின் கை அவளை அவனுள் இழுத்துக்கொண்டது. தன்னை எழுப்பாமல் எழ நினைத்த அவளிற்கு.. அவனின் மீசை ரோமத்தை பின்கழுத்தில் தேய்த்து முத்த ஊர்வலம் நடத்தி.. அதன்மூலம் தனக்கும்.. தன்னவளின் அடங்கிய உணர்வையும் உயிர்த்தெழ செய்து.. ‘ நாம்மாக வேண்டும்?. ‘ என கூறி..
அதற்கு முன் அவளின் தேவை என்ன என்று தெரிந்தவன்.. முத்த நடையில் தூக்கி சென்று குளியல்அறையில் விட்டவன்.. குறிப்பிட்ட நிமிடத்தில் அனுமதியின்றி உள்ளே சென்று.. இருவரின் விருப்பங்களை நிறைவேற்றினான்.
அரசியின் கூந்தலை சாம்பிராணி கொண்டு காயவைத்து.. கிளப் போட்டு கூந்தலின் வாசனை பிடிக்க.. அவனின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என வேகமாக அவனிடம் திரும்பி.. கன்னம் பிடித்திழுத்து.. ” தனு பசிக்குது டா. ”
‘ கண்டுபிடித்துவிட்டாளே ‘ என புன்னகையுடன் ‘ அப்படியா?. ‘ என அவளை அப்படியே கையில் ஏந்தி.. மென்மையாக இதழ் முத்தம் கொடுத்து..
காபி தோட்டத்தை பார்த்து கொண்டே இருவரும் சாப்பிடும் படியான இருக்கையில்.. அரசிக்கு மீன் வறுவல், நண்டு, இறால் சூப், குழைய வைத்தசாதம்.. வேந்தனுக்கு இதனுடன் மீன் குழம்பு தயார் நிலையில் இருக்க..
வேந்தன் அரசியை சாதம்குறைவாகவும்.. மீதியை அதிகம் சாப்பிட வைத்தான். இயற்கையை ரசித்தும்.. இருவரின் கையை.. உணவோடு சுவைத்து அமைதியாகவே ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அமைதியாக சாப்பிட்டுமுடிந்தனர்.
ஊதாநிற லாங் ஸ்கர்ட், மஞ்சள் நிற முழங்கைவரை டாப் அணிந்த தன் முயல்குட்டியை அவள் தன்தோளில் சாய்த்து ‘ காபி தோட்டத்தின் நடுவே தன்னவனின் கைகளில் அடங்கி நடத்து சொல்லும் சுகம் வேண்டும்!. ‘ என்ற விருப்பத்தை அவள் கூறாமலே நிறைவேற்றி..
அவளை அப்படியே அறைக்கு தூக்கி சொல்லதான் நினைத்தான்.. ஆனால் அவளின் முகம் வலியை உணர்த்த.. எங்கே உள்ளே சென்றால் படுத்துவிடுவாள் என மனதை அடக்கி..
அருகில் இருந்த இடங்களுக்கு சென்று பல புகைபடங்கள் எடுத்து மீண்டும் வர இரவு ஆகிவிட்டான்.
அங்கே நண்பர்கள், உறவுகள் இவர்களுக்காக காத்திருந்து.. சாப்பிட்ட பின் வந்தவர்களில்.. கதிரவன்– தர்ஷினி மட்டும் தனியாக இருந்த குடிலுக்கு சொல்ல..
கமலேஷ்– வசுந்தரா நீச்சல் குளம் வேண்டாம் என கூறியதால் வேந்தன்– எழிலரசி அறை அருகில்.. நீச்சல் குளம் இல்லாத அறையிலும்.. மற்றவர்களில் பெண்கள் இருவர், ஆண்கள் நால்வரும் ஒரு அறை என அனைவரும் உறங்க சென்றவிட்டனர்.
வேந்தன்.. எழிலரசி அறைக்கு வந்து தன் தேவைகளை முடித்து வந்ததும்.. வெளி நீச்சல்குளத்திற்கு அழைத்து வந்து.. தன் மடியில் அரசியை அமர வைத்தவன்..
தங்கள் முன்னால் நட்சத்திரங்கள் மற்றும் தன் ஒளியை இன்று மக்களுக்கு அதிகம் காண்பித்து வெள்ளி நிற தேவதையாக காட்சி அளிக்கும் முழு வெண்ணிலாவை கண்கள் பார்த்திருந்திருக்க..
அவர்களின் அருகில் சிறிய ரூம் ஹீட்டரும், நீச்சல் குள நீரும் சுடாக இருக்க.. தன்கால்களுடன் தன்னவளின் கால்களை நீரில் பின்னி பிணைத்து வைத்திருந்தான்.
இருவரும் குளிரிலும் இதமாக அமர்ந்திருப்பதால்.. எழிலரசி தன்னவனின் அளவிற்கு அதிகமான இறுக்கம், சூழல் அவள் காலுடன் தன்னவனின் கால்களை பிணைக்க.. இதற்குமேல் வேண்டாம் என மெதுவாக எழுந்து மெல்லிய விளக்கொளி வீசியிருந்த அறையில் அவளிற்கு தேவையான.. தேவையான இடமான அவளின் அடிவயிற்றில் மென்முத்தம் கொடுத்து அவளை இந்நாள் முழுவதும் அதிகம் வலி உணராத அளவிற்கு செய்துவிட்ட திருப்தியுடன் அவனும்..
தனுவின் செயல் புரிந்து இனி வரும் காலங்களில் கூட தனுமாமா இதுபோல தாயுமானவனாய்.. பார்த்துகொள்ளும் பட்சத்தில்.. தான் எந்த வலியையும் தாங்களாம்.. ஆனால் அவன் தாங்கமாட்டானே. தனக்கு ‘ இனி வலியின் உணர்வை உணரதாத அளவிற்கு தனக்கு புது சக்தி கொடு விநாயகா!. ‘ என இறைவனிடம் வேண்டி அவளும் என இருவரும் உறங்கிவிட்டனர்.
அடுத்து வந்த ஒருநாள் அவள் வேண்டியது போல அதிக வலி இல்லாமல்.. இல்லை உணராமல் அவளவன் வைத்திருக்க.. கூட அவளும் இருக்க.. அதன்பிறகு சுத்தமாய் இல்லை.
அதனால் அனைவரிடம் கொஞ்சம்.. தன் அண்ணாவிடம் சற்று அதிகம்.. தன்னவனிடம் மிக மிக மிக அதிகமான துள்ளளுடன்.. தன் தேன்நிலவை கொண்டாடிக் கொண்டுயிருந்தாள் வேந்தனின் கேடி முயல்குட்டி.
அவளின் தனுதான் ஜோடிகளாய் நண்பர்கள், தங்கை இல்லாமல் இருக்க.. தன்னவளுடன் அதிகநேரம் இருக்க வேண்டும் என்பதை செயல்படுத்த முடியாமல் திண்டாடி போனான்.
ஆரம்பம் முதலே தன் காதலில் கரைந்து.. தன்னிடம் அவளை முழுமையாக ஒப்படைத்துதிருந்தாள்.
இப்போது திருமணம் முடிந்து சொல்லவும் வேண்டும்மா?. வார்த்தை இல்லை. நானாக அவள் சோர்ந்துவிடுவாள் என தன் தேடலை முடித்தாலே ஒழிய.. அவளிடம் இருந்து.. போதும் என்ற அறிகுறியே தெரியாது. அதனால் தன்னவள்.. தான் நினைத்த நேரம் இன்னும் இன்னும் வேண்டும் என தோன்றும். அதை செய்யமுடியமால்.. அதை அடக்கி நண்பர்களிடம் முன்போல் அமைதியாக இருக்க.. ஆனால் பார்வை முழுவதும் தன்னவளிடம் இருக்க..
வயநாடு கிளம்பி கோழிகோடு, திரிசூர், அதிரப்பள்ளி அருவி, குருவாயூர், ஆலப்புலா வந்தபின்.. இன்னும் இரு நாட்கள் இருக்க..
தன் பளபளக்கும் முகத்தில் அவனின் அரசியை அவ்வப்போது பார்த்து வரும் ஏக்கத்தை கண்டுகொண்ட ஆண்கள்.. கதிரவன் ஜோடி முதற்கொண்டு.. ஏதோ ஏதோகாரணம் கூறி அனைவரும் இவர்களை மட்டும் விட்டுவிட்டு கிளம்பிவிட்டனர்.
கிளம்பும் முன் திலகன் மட்டும் ” டேய் இன்னும் இரண்டுநாள் சேர்ந்து கூட கூட இருந்துட்டு வா. ஆனா இங்கமாதிரி உன் முகத்தை ஊரில் வந்து வைத்து மானத்தை வாங்காத. கல்யாண ஆன கதிரவனையே வெக்கப்பட வைக்கற. “
‘ அவ்வளவு அப்பட்டமாவா நான் அரசிய பார்த்தேன்?. ‘ என்ற கேள்வியுடன் திலகனை பார்க்க..
‘ ஆமா டா ‘ என அவனின் சிவந்த கன்னத்துடன் இருக்கும் பல புகைபடத்தை காண்பித்தான். புன்னகையுடன் அதை வாங்கி பார்த்து.. அனைத்தும் தன் போனிற்கு அனுப்பி.. பின் அழித்துவிட்டு போன்னை கொடுக்க..
அவன் புன்னகையுடன்… ” டேய் என் போனில் மட்டும் நீ இருக்கல.. பொண்ணுங்க போன் முதற்கொண்டு நீ இருக்க. ” இது போல் என்றும் இருக்க வேண்டும் என கட்டியணைத்து வாழ்த்து கூறி கிளம்பிவிட்டான்.
அதன்பிறகு குமரகம், மூணார் சென்று ஐந்து நாட்கள் தன்னவளை விடாமல் படித்து, அவளுடன் பாட்டு பாடி, நடனம் ஆடி என தங்களின் தேன்நிலவை இந்தியாவில் முடித்தனர்.
உடன் இருந்தவர்கள்.. ஊருக்கு சென்ற அன்றே திலகன், தீபிகா பாட்டி உடல்நிலை காரணமாக.. மாற்றி வைத்த திலகன்– சத்யா.. வினோத்– தீபிகா திருமணத்தை..
வேந்தனும் அரசியும் தன் நெருக்கிய நண்பர்கள், இன்பாவின் இன்னொரு தங்கையின் திருமணத்தை மூவரும் இணைத்து அடுத்த பத்துநாட்களில்..
வேந்தன்– எழிலரசிக்கு திருமணம் நடக்க விருந்த ஊரின் அருகில் இருந்த மண்டபத்தில் மிகமிக கோலாகலமாக நடந்தி முடித்தனர்.
சத்யா தனியார் வங்கி ஒன்றில் இரண்டாம் கட்டம்வரை தேர்வாயிருக்கிறாள். வங்கி பணியில் தேர்வனால் அது..
இல்லையெனில் புதிதாக பிளவுஸ் டிசைன் கடை.. சில நாட்களுக்கு பிறகு EV அழகுநிலையம் அருகில்.. முதல்தளம் கம்பெனி கட்டிய பிறகு மாறிவிடும். அதனால் அதன்பிறகு வைத்துக்கொள்ளாம் என திலகனிடம் சந்தோஷ் கூறி சென்றுயிருத்தான்.
இப்போது சத்யா வங்கிபணியும் இருக்கு.. தன் துணையின் யோசனையான சிறிது நாட்கள் முயற்சி செய்யலாம் என கடை வைக்கும் முடிவிலும் இருக்கிறார்கள்.
தீபகா இப்போதே வினோத் கல்லூரியில் துணை பகுதி நேர விரிவுரையாளர். ஆறுமாதத்தில் விரிவுரையாளர் தான்.
மற்ற நான்கு ஜோடி தாங்கள் முடிவு எடுத்த படி தொடங்கியிருக்க.. மற்றவர்கள் சிலர்.. தங்களின் அடுத்த தலைமுறையினரை எதிர்பார்க்கும் அனைவரும் தங்கள் வயோதிக காலத்தை அமைதியாக நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் எனவும்..
இவர்களோடு இளையவர்கள் எல்லோர் வாழ்க்கையும்.. அவர்களின் இயல்பு நிலைக்கும் திரும்பி.. சீராக செல்ல தொடங்கிவிட்டது.
இதன் இடையில் சந்துருவிற்கு.. அவன் அப்பாவின் கரைக்குடியில் இருக்கும் நண்பர் மகளுடன்.. (https://punandjokes.com/) திருமணம் உறுதியாகும் நிலையில் உள்ளது.
வேந்தன்– எழிலரசி நிச்சியம்போது குறிந்த கல்யாண தேதி நாள் என்றால்.. தேன்நிலவிற்காக புக் செய்திருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு..
இன்னொரு தேன்நிலவு கொண்டாட சென்று.. இருவரும் தன் அரசியை வேந்தனும், தன் தனுமாமாவை எழிலரசியும் நிதானமாக, தெளிவாக புரிந்து.. தொடர்ந்து படித்ததின் பயனாய்..
தங்களின் இரு உயிர்களுடன் வேந்தன்,எழிலரசியும் சென்னை வந்து.. நண்பர்களின் வீடுகளில் இரு நாட்கள்.. தங்களின் பிளாட்டில் இருநாட்கள் என ஒரு மாதம் கழித்து.. புதுக்கோட்டை வந்து சேர்ந்தனர்.
தங்களின் பிரதேக அறையில் தினமும் தேன்நிலவுடன் கொண்டியிருந்த தனுவும், அரசியும் அடுத்தமாதம்..
தன்முயல்குட்டி தன்னை அப்பாவாகவும், தன் தனுமாமா தன்னை அம்மாவாகிய சந்தோஷ!. அதுவும் தாங்கள் எதிர்பார்த்த இரட்டைதான் என்ற செய்தியை மூன்று வீடுகளுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கபட்டது.
இன்பாவிற்கு தங்கள், வேந்தன் உறவு முறையினர்களிடமும் நிறைய திருமண சம்மந்தம்? வர.. அருணாச்சலம்– லட்சுமி அவனிடம் திருமண எண்ணம் பற்றி கேட்க..
அவன் தன் முன்பு எடுத்த முடிவான வேந்தன்– எழிலரசி இருபெண் குழந்தையின் காதுகுத்திற்கு பிறகுதான் தன் கல்யாணம் என கூறியிருந்ததால்..
எழிலரசி வீடு அப்போதில் இருந்தே இருகுழந்தைகள், திருமணம் கனவில் மிதக்க ஆரம்பிக்க..
அவர்களின் எழிலரசி.. வேந்தனின் அரசி மெதுவான நடையை தன் தனுமாமாவின் கைகோர்த்தபடி.. தன்னவன் தனக்காக உருவாக்கியிருந்த தோட்டத்தில் அவன் ஊட்டிவிடும் ரசகுல்லாவை சாப்பிட்ட படியே நடக்க ஆரம்பித்தாள்.
அதன்பின் அதற்கான பரிசை தன் தனுமாமாவிடம் தங்களின் பிரத்தேக அறையில்.. மிக கவனமுடன் எடுத்துக்கொண்டாள். இப்போதும் அவனின் கேடிமுயல்குட்டி அதே துள்ளளுடன் இருப்பதை பார்த்து.. அவளவனும் இன்னும் இன்னும் நாம் வேண்டும் என அவனின் அரசி என்னும் புத்தகத்தை கவனமுடன் படித்தான்.
வேந்தன் பல வருடங்கள்.. தன் அரசிக்காக.. அவளின் மீதான உரிமை காத்திருப்பிற்கு பலனாய்.. அவனின் முயல்குட்டியின் திருமண விருப்பத்தின் மூலமாகவே.. அவளவன் தன்னவன் தனுவின் முன்னால் காட்சி அளித்து.. கேட்ட வரம் கொடுத்து.. அவனை முழுமையாக ஆட்சி செய்ய ஆரம்பித்துயிருந்தாள்.
அதன்பின் வேந்தன்– எழிலரசி தங்கள் திருமணத்தை தங்களின் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்துடன் செய்தவர்கள்.. தங்கள் மூன்று குழந்தைகள், குடும்பம் பற்றிய எதிர்கால கனவுகள்.. தாங்கள் மற்ற எல்லா உறவுகளுடன்.. நாங்கள் இப்படி தான் எனக்கூறி.. அதன் வழியிலே சென்றும்..
தன் அரசியுடன், நண்பர்களுடன் சேர்ந்து என தொழில் பற்றிய எதிர்கால திட்டங்கள் அனைத்தும்.. அவர்களின் எண்ணப்படி எந்த சூழ்நிலையிலும் நிறைவேறும்..
வேந்தனாகிய தனுவும்.. எழிலரசி ஆகிய அரசியும்.. தன் முயல்குட்டி, தன் தனுமாமாவிற்கு நிறைவேற்றி விடுவார்கள் என்ற மனநிறைவுடனும்..
வேந்தனும் எழிலரசியும்.. தங்களின் நெஞ்சுக்குள் முடுஞ்சு வைத்திருந்த.. அவர்களின் காதல், ஆழ் மன உணர்வுகள், அன்பு , முத்த எண்ணிக்கை, ஊடல், கூடல் இன்னும் இன்னும் பெருகும் என்ற திருப்தியுடன்..
அவர்களின் வாழ்க்கையை அவர்களின் கையில் கொடுத்து விடைபெறுவோம். ( விடைபெறுகிறேன்.)
அக்விசரண்யா. (சரண்யா)
உயிர் உருவாத
உருக்குளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத
திசை அறியாத
பறவையைப்போல
பறக்கவும் ஆச
உன்னோடு தூர
வாழ்கை தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை
நான் உன்கூட
உன் நெனப்பு
நெஞ்சு குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
மனசுல ஒரு வித வலிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா
கண்ணே கண்ணே
காலம் தோரும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்
சுபம்