” நம்ம சம்மதத்தை சீக்கிரம் வீட்டல சொன்னா.. எல்லாரும் ரொம்ப சந்தோஷம் படுவாங்க.. அதேசமயம் கொஞ்சம்.. ரிலாக்ஸ்ம் ஆவாங்க. எல்லாரும் என்னை நினைச்சு பயந்துட்டும் வேற இருப்பாங்க. நீங்க பண்ண கலாட்டாவ பார்த்து… அண்ணி போய் என்ன சொல்லி வச்சாங்களோ?.. தெரியல வேற.” வேந்தன் நீட்டிய கையை பிடித்து எழுந்த அரசி.. சற்று படப்படப்புடன் சொல்லிக் கொண்டேயும்.. வேந்தனின் பிடித்த கையை விடாமல் நடந்து வந்தவள்.
சட்டென்று நின்றவள்.. ” ஆனா.. இப்ப வீட்டல இருங்கறவங்கள.. பார்க்க கொஞ்சம் கூச்சம்மா!. வேற இருக்கு. இப்ப வீட்டுக்கு போனவுடனே.. நாம்ம முடிவு பண்ணத சொல்லனுமா? இல்ல என்ன சொல்லுறது?.. “
‘ வேந்தன் புன்னகையுடனே.. அவள் வெக்கத்தினால் சிவந்த கன்னங்கள்.. படப்படப்பில் அலைபாயும் கண்கள்.. பதற்றத்தில் தன் கையை அழுத்தப் பற்றியிருப்பது.. அதில் அவள் உணரும் பாதுகாப்பு என அவளை உணர்ந்து, மகிழ்ந்து, ரசித்தவன் மனதிலும் பல உணர்வுகள். ‘
ஒரமாக நின்றவர்கள்.. “ அரசி.. நான் சொல்வதை கவனி. அவங்க யாரும் பயப்பட மாட்டாங்க. நான் போன் பேசும் போதே.. உன்ன பிடிச்சுயிருக்கு.. அதனால உன்னோட பேசனும்.. என்று சொல்லி தான் அனுமதி வாங்கினேன். அதனால.. நாம்ம எப்படி பேசிப்போம்?.. என்று தான் கொஞ்சம் பதட்டமாக இருப்பாங்க. ஓகேயா. நாம்ம போய்.. நம்ம எடுத்த முடிவ சொன்னா போதும்.. நான் பண்ண கலாட்டாவ.. மறந்தே போயிடுவாங்க. எப்படா!.. நாம்ம.. மாப்பிள்ளை பார்ப்போம்.. என்னை வரவேற்க போறோம் என காத்துக் கொண்டு இருப்பாங்க. ” விரிந்த புன்னகையுடன் கூற..
‘ அரசி.. இப்போது சிரிப்பும்… முறைப்புமாக வேந்தனை பார்த்தாள். ‘
” அப்புறம்.. நாம்ம வீட்டுக்கு போனவுடனேயே.. யாரும் நம்மள திருமணத்திற்கு சம்மதம்மா? இல்லையா? என்று கேட்கமாட்டாங்க. அதற்கு ஏற்றார்போல.. நம் சம்மதத்தை.. நான் வேறுவிதமா.. அவங்களுக்கு நான் தெரியப்படுத்தி விடுகிறேன். ஆனா நம்மள தனியா.. கேட்டா மட்டும் … நம்ம சம்மதத்த.. வாய்மொழி மூலமாக சொல்லிவிடலாம். ஓகேயா. அதனால இப்ப நீ இந்த நிமிடத்த என்கூட சந்தோஷ்மா!.. என்ஜய் பண்ணு. நீ எதுக்கும் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்ல.. சரியா.
நீ ரொம்ப டையடா.. தெரியுற.. வீட்டுக்கு போனவுடன் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி எந்திரி. அதுக்குள்ள நான் நம்ம வீட்டுப் பெரியவங்க கிட்ட சில விஷயங்கள் பேச வேண்டி இருக்கு.. நான் அவங்கிட்ட பேசிட்டு.. நான் உனக்கு 6மணிக்கு மேல கால் பண்ணி சொல்கிறேன். சரியா?.. நான் இப்ப உன் அண்ணாவுக்கு இப்ப கால் பண்ணா.. அவங்க வர சரியா இருக்கும் ” அவளின் ஒரு கையை பற்றிவாறே அவ்விடத்திலே உடனே இன்பாவிற்கு கால் செய்தான்.
இன்பாவுடன் பேசியிருந்த வேந்தனையே பார்த்திருந்தவள்.. ‘ ரொம்ப டையடா.. தெரியுற.. நீ வீட்டுக்கு போனவுடன் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி எந்திரி.. சரியா?..
இதே அக்கறையான குரலில்.. சில வார்த்தைகள் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு.. நான் இவர ஏற்கனவே.. பார்த்து.. பேசி இருக்கனா?.. கேட்போமா?.. நல்லா இருக்குமா?.. இல்ல இல்ல.. கேட்க வேண்டாம். ‘
வேந்தன் அரசி தன் முகத்தை பார்த்து யோசிப்பதை பார்த்தவன்.. ” அரசிம்மா.. நீ என்னிடம் எதாவது கேட்கனும்மா?.”
” ம்.. ம்ஹூம்.. ” என ‘ ஆம்.. இல்லை ‘ என்று தலையை ஆட்ட..
மெல்லிய புன்னகையுடன்.. ” அப்ப ஏதோ இருக்கு.. பரவால்ல.. எப்ப கேட்கனும் என்று தோனுதோ.. அப்ப கேளு. ” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் இருவரும் நடக்க ஆரம்பிக்கும் போது தான் அந்த இடத்தை கவனித்தான் வேந்தன்.
தன்னவளின் ஆசை ஞாபகம் வந்து அதை நிறைவேற்ற. சற்றென்று ஒரு அற்புதமான யோசனை தோன்றியது. சுற்றி ஒரு பார்வை பார்த்து.. ” அரசி.. அரசி.. உன் சேலை முந்தானைய முன்னாடி இழுத்து பிடுச்சுக்கவே..” தன்னவளை இனிமையாக அழைத்து கூற..
அவளே.. ” எதுக்கு??..” என்று கேட்டுக் கொண்டே இழுத்து பிடித்தாள்..
வேந்தன்.. அவள் முத்தானையை இழுத்து பிடித்தவுடன்.. அவள் உணரும் முன்.. நொடிக்கும் குறைவான நேரத்தில்.. அவளின் இடையை பற்றி சற்று உயரம் தூக்கினான்.. அவன் அவளை.. தூக்கிய உயரத்திற்கு அங்கு.. கோயில் மணி இருந்தது..
” அரசி.. அந்த மணியை 3 தடவை அடியே. ”
அரசிக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.. வேந்தன் ஏதோ கூறுகிறான் என குரல் தனக்கு கீழே கேட்கிறதே என குனிந்து பார்த்து கேட்கும் போதுதான்.. இவனால் தான் தூக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை உணர்ந்தாள். வேந்தனின் விரல்கள்.. அவள் இடையில் சிறிதுகூட படவில்லை தான்.. இருந்தாலும் அவள் உடல் முழுவதும்.. ஏதோ ஒரு இனிமையான உணர்வால் கூசி.. சிலிர்த்தது… நடுங்கியது.
” அரசி.. அந்த மணியை 3 தடவை அடியே ” என்று கூறும்போது தான் அவள் தலைக்கு மேல் கோயில் மணி இருந்ததையே பார்த்தாள்.
‘ இந்த மணிய அடிக்கதான் தூக்கினாங்களா?.. ( அப்புறம் எதுக்குமா தூக்கனும் என அவளின் மனசாட்சி கேட்க.. ) மணியை அவங்களே அடிக்க வேண்டியது தானே.. ‘
அவனிடமே.. ” நீங்களே மணியடிக்க வேண்டியது தானே.. எதுக்கு என்னை தூக்கினிங்க..” என அவன் தூக்கிய நிலையிலேயே கேட்டாள்..
வேந்தன் அவளை அழகாக சுமந்து கொண்டு.. ” எனக்கு.. என் மனைவியோட 3 தடவை மணி அடிக்கனு.. என்று வேண்டுதல்!. அதனால் தான். இனி எல்லாம் நல்லபடியா நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு 3 தடவை அடி அரசி. “
‘ இதற்கு மேல் அவள் கேள்வி கேட்பாள்?. புன்னகையுடன் தலையசைத்து.. ஒரு நொடி கண்களை மூடி கடவுளிடம் வேண்டி அரசி மணியை அடிக்க. சுமந்து இருந்தவன்.. தன்னவளின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி.. அவளை தூக்கியிருந்த.. சுகமான!. இனிமையான!. இந்த சில நிமிடங்களை தன் நினைவுப் பெட்டகத்தில் சேகரித்து.. சேமித்து வைத்துக் கொண்டான். பிறகு அவளை மென்மையாக கண்களை பார்த்துக் கொண்டே.. தரையில் இறக்கினான். இறக்கிய பிறகும் சிலநொடிகள் அவள் இன்னும் தன்மேல் இருப்பது போன்ற உணர்வுடன் நின்று அவளை பார்த்துக்கொண்டு இருந்தான். ‘
‘அரசியும்.. வேந்தன் அடி அரசி.. என்று கூறியவுடன் ஒரு நொடி கண்களை மூடி கடவுளிடம்.. ‘ வாழ்க்கையின் அடுத்த நிலை.. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்.. ‘ என வேண்டி மணியை அடித்தவுடன்.. வேந்தன் கண்களை பார்த்துக் கொண்டே தரையில் இறக்கினான். இறக்கிய பிறகும் சில நொடிகள் அவன்மேல் இன்னும் தான் இருப்பது போன்ற உணர்வுடன் நின்று கொண்டு இருக்க. இருவரும் யாரோ வருகிறார்கள் என்ற பேச்சு குரல் கேட்டபிறகு தான்.. நிகழ்காலத்திற்கு வந்தார்கள். ‘
அரசிக்கு ஏன் அவன் தூக்கினான்? என்று கண்டிப்பாக தெரிந்தாக வேண்டும். மீண்டும் அவனிடம்.. ” எதுக்கு இந்த மணிய அடிக்க என்னைய தூக்கினிங்க.. நீங்களே அடிக்க வேண்டியது தானே.. “
வேந்தன் புன்னகையுடன் ” அது நானும் கோயிலிருந்து கிளம்பும் போது மணி அடிப்பேன்.. நீயும் அடிப்ப.. அதான் இரண்டு பேரும் ஒன்னாகிட்டோமே.. அதனால இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து நின்று.. உனக்கு எனக்கும் சேர்த்து.. உன்னைய மணி அடிக்க சொன்னேன்.. உனக்கு இந்த மணிய அடிக்க பிடிக்கும் தானே?.. அதனால் தான். சரி சரி.. உங்க அண்ணா இன்பா வந்துவிடுவாங்க.. வாவா.. மணியாச்சு. ” என அவளை யோசிக்க நேரம் கொடுக்காமல் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
அரசிக்கு வேந்தன் தன்னை குழப்புகிறான் என்று புரிந்தது.. மணியாச்சு என்று கூறவும்.. சரி என்று அவன் கூட சென்றாள்.
வேந்தன் மற்றும் அரசியும் நேராகச் சென்று நின்ற இடம்.. பூக்கடை. அங்கு ஜாதிமல்லியும், மல்லிகை பூக்களில் பல பூச்சரங்களையும்.. அரசி உடனே வைக்க என வாங்கி ஒரமாக நின்றார்கள்.
” அரசி.. இந்தா வைத்துக்கொள். இந்த மாதிரி நல்ல விசயம் முடிவு பண்ணினா.. பூ கொடுப்பாங்க. வீட்டல எல்லாரும் வந்து இருந்தா கொடுத்து இருப்பாங்க. அதான் உனக்கு நான் இப்ப வாங்கி கொடுத்தேன்.. நீயே வைத்துக்கொள்வாயா?.. இல்ல நான் வைத்துவிடட்டுமா?.. ” என சாதாரணமாக கூறிக் கேட்க..
‘ அரசி.. கோயில் மணி அடித்துவிட்டு நேராக அவர்கள் பூகடை வந்து.. நிறைய பூக்களை வாங்கிய உடன்.. அவன் தனக்காக பூ வாங்கியதற்கே.. ஒரு இனிமையான உணர்வுடன்.. சிறிது நேரம் முன்பு.. தான் சாப்பிட கேட்டவுடன்.. அக்கறையடன் வாங்கி வந்தான்.. இப்போது வீட்டின் உறுப்பினராய் தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளையும்.. தன் மனைவியாக வருபவளை முறையாக நடத்த வேண்டும் என்று எண்ணுகிறான். அதனிலும் தன்னவன் எனக்கு.. முதன்முதலாக பூ வாங்கி கொடுக்கிறான் என்ற தான் உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்த எழிலரசி வேந்தன் கொடுத்த பூவை பார்த்துக் கொண்டே.. அவன் கூறியதை சரியாக கேட்காமல்.. ‘ சரி ‘ என தலையசைக்க..’
வேந்தன்.. அரசியின் சரி.. என்பதில் இனிமையான அதிர்ச்சியுடன் அவளின் கண்களை பார்க்க.. அவள் இந்த உலகத்தில் இல்லை என்பது தெரிந்து. மெல்லிய புன்னகையுடன்.. ” அரசிசி.. நானே பூவை வைத்துவிடட்டுமா மா??.. ” என்று அவள்.. காதருகே.. சென்று அமைதியாக கேட்டான்.
அரசியும்.. வேந்தன் தன் காதருகே வந்து திரும்பம் கேட்கவும் தான்.. அதன் அர்த்தம் புரிந்து.. சுயம் உணர்ந்து.. நிகழ்காலத்திற்கு வந்து.. வெக்கத்துடன் முகம் சிவந்து.. அவனை பார்க்க முடியாமல்.. சுற்றுப்புறத்தை பார்ப்பது போல பார்த்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு..
” இல்ல.. நான்.. நானே பூவ வச்சுக்குவேன்..” எனக் கூறி பூவை வைத்துக் கொண்டாள்.
வேந்தன்.. தன்னவள் அரசி.. கனவு உலகத்திலிருந்து.. நிகழ்காலத்திற்கு வந்து.. அவள் முகம்சிவந்து.. பிறகு சமாளித்து.. நானே வைத்துக் கொள்கிறேன் என்பது வரை.. அவளின் ஒவ்வொரு முகபாவத்தையும் பார்த்து தன் கண் என்ற புகைப்பட கருவியில்.. புகைப்படங்களாக எடுத்து.. இதயம் என்ற மெமரி கார்டுல் பாதுகாத்துக் கொண்டான்.
அரசி பூ வைத்து முடிக்கும் வரை பார்த்துக் கொண்டு இருந்தவன்.. அவளின் கையை மெதுவாகப்பற்றி.. ” அரசி.. நம்ம கல்யாணத்திற்கு முன் நான் உன்கூட இருக்கும் போது.. நான்.. நானே பூ வாங்கி.. நானே வைத்து விடனும். நான் இங்க இருக்கும் வரை எப்படியாவது.. நான் வாங்கிய பூவ.. உன் வீட்டல உனக்கு கிடைக்கும்படி நான் பார்த்துப்பேன்.. அதை நீ வைக்கனும்.. இது என் விருப்பம்.. உனக்கு இதில் விருப்பம்தானே?.. “
‘ அரசி அவன் சொன்னதை கேட்டவுடன்.. விநாயகா.. இவன் காலையில் இருந்து கொடுக்கும் இன்ப அதிர்ச்சிய ஏற்றுக்கொண்டு.. ஒருநாளைக்கு நான் எவ்வளவுக்கு தான் சரி.. சரி.. என் சம்மதத்தை கூறுவது. இவ்வளவு அழகாக கேட்கிறான்.. யாராவது.. இல்ல எந்த பெண்ணாவது?. தலைவன் ஆகப்போறவன்!. கேட்கும் போது மறுப்பு கூறுவாளா டா என் வேந்தனே. ‘
புன்னகையுடன்.. ” இவ்வளவு தூரம் ஆசையாக கேட்கிறிங்க.. அதனால் எனக்கு எல்லாம் ஓகே.. ஆனா பெரியவங்க இருக்கும் போது.. எப்படி வைத்துவிடுவிங்க??..”
” உனக்கு விருப்பம்தானே?. அதெல்லாம் நான் பார்த்துக்கொள்வேன்.. இப்ப.. இந்த ஜாதிப்பூவ ஈவ்னிங் வைச்சுகோ.. மல்லிபூவ நாளை காலை வைச்சுகோ.. நாளை ஈவ்னிங் வீடு தேடி வரும். ” மகிழ்ச்சியில் யோசனை கூறி.. பின் அவளின் கையை பற்றியவாறு அரசியின் அண்ணனிற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் இருவரின் செயல்களையும் ஒருவன் பார்த்துக் கொண்டு இருந்தான்.. அவர்கள் கோயிலின் உள்ளிருந்து நேராக பூக்கடைக்கு வந்தது.. அவன் எதோ பேசியதற்கு அவளின் முகமாற்றம்.. பிறகு அவன் புன்னகையுடன் அவள் கையை பற்றி. ஏதோ கூற.. அதற்கு அவள் சிரிப்புடன்.. சரி என்பதுபோல.. தலையை ஆட்டியதும்.. அவன் புன்னகையுடன் சந்தோஷப்பட்டு.. அவள் கையை அழுத்தப்பற்றி.. யாரோ ஒருவருக்கு காத்துக் கொண்டு இருந்தனர்.. இவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைந்து சற்று வாடிய முகத்துடன்.
வேந்தனுக்கும்.. அரசிக்கும்.. இவ்வளவு நேரம் ஒன்றும் தெரியவில்லை.. இன்பாவிற்காக காத்துக்கொண்டு இருந்தப்போது தான் இருவரும் உணர்ந்தனர். தாங்கள்.. தங்கள் வீடுகளுக்கு இப்போது செல்ல வேண்டும். இனிமேல் எப்போது என்று இருவருக்கும் தெரியாது. வீட்டிற்கு போனவுடன் தான் முடிவு தெரியும். அதனால் இருவரும் அமைதியாக கைகளை பற்றியவாறு.. அந்த தருணத்தை அனுபவித்து கொண்டு இருந்தனர்.
” ஏன் அமைதியா இருக்க? அரசி. வீட்டுக்கு போனவுடன் வீடியோ கால் பார்த்துக் கொள்ளலாம். நேரடியாக.. நாம தனியாக பேச.. இனிமே அதிக நேரம் கிடைக்காமா தெரியல. ஏதாவது சொல்லு, கேளு…இல்ல பேசு அரசி. ”
” உங்கள பற்றிதான் நினைத்து கொண்டு இருந்தேன்… ” எனக் கூறிக் கொண்டு இருக்கும்போது..
“எழில் ” என்று அவளை அழைக்க திரும்பி பார்க்க.. அங்கு எழிலரசியின் அண்ணா இன்பா வந்தார்.
வேந்தன் போன்கால் செய்து அழைத்த போது.. கோயிலின் பக்கத்தில் இருந்ததால் சிறிது நேரத்திலேயே வந்தவிட்டான். அவன் வந்த நேரம் தான் இருவரும் வெளியே வந்தனர். அதன்பிறகு இவன் தான் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான். ஏனெனில் நேற்று தான் அப்பா இந்த வரன் பற்றி கூறினார்.. திடீர் என்று காலை அனைவருக்கும் போன் செய்து தங்கையுடன் பேச வேண்டும் என்று அனுமதி வாங்கி தங்கையுடன் பேசினார்.
அவர்களின் குடும்பம், உணவகம் பற்றி தெரியும் தான்.. ஆனால் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி தெரிய வேண்டுமே. அதனால் சிறிது நேரம் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தான்.. அனைத்து விதத்திலும்.. முழுவதும் திருப்திகரமாக இருந்தது. தன் தங்கைக்கு நல்ல துணையாக இருப்பார் என்று மனம் சொன்னது. வீட்டில் உள்ளவர்கள் அதிக தடவை அழைத்தால்.. நேரம் ஆகிவிட்ட தன் காரணத்தால் அவர்களிடம் வந்தான்.
‘ வேந்தன்.. தங்களை நோக்கி வந்தவனிடத்தில் இருந்த சில முக ஒற்றுமைகள் வைத்தே.. அவன் தன் அரசியின் அண்ணா என்று அறிந்து கொண்டான். மெதுவாக அரசி உணராதவாறு கைகளை எடுத்துக்கொண்டான். ஆனால் அரசி அவனை நெருங்கி நின்றபடி ” அண்ணா. ” அவனின் முகம்பார்த்து கூற..
அவளின் நெருக்கமே.. தன்னவளிற்கு தன்னை எந்த அளவிற்கு பிடித்துயிருக்கிறது?. என்பதை கூறியது. புன்னகையுடன் சரி என தலையசைத்தவாறே.. அவன் சற்று தள்ளி நின்றுக்கொண்டு.. விரிந்த புன்னகையுடன்.. ” ஹாய் இன்பன். நல்லாயிருக்கிங்களா?.. சாப்பிட்டாச்சா?.. ” உணவகம் வைத்திருப்பவன் என்பதை நிருப்பிக்கிறார்.
” நல்லாயிருக்கேன் மாமா. சாப்பிட்டேன்.. ” என இன்பன் தங்கையின் கணவராக ஏற்றுக்கொண்டதற்கான மாமா என்ற அழைப்பில்.. அடுத்த மகிழ்ச்சி கடலில் முழ்கினான்.
இன்பன் என்ன பேசுவது?. என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதுதே வேந்தன்.. ” சாரி இன்பன். ஞாயிறு வீட்டல வந்து பார்க்க வேண்டியது.. இன்னைக்கே பார்க்க வேண்டியது ஆயிற்று. வீட்டல எல்லாத்தையும் கொஞ்சம் பதட்டபட வச்சுட்டேன். ஆனாலும் நல்லதுக்கு தான். ” அரசியை அர்த்ததுடன் பார்த்து கூற..
அவளோ ‘ எதை சொல்லுறான்?? ‘ என அவள் முகம் பல பாவனை காட்டா. அதை பார்த்து இருவரும் சிரித்துவிட்டு.. அவளின் முறைப்பை பெற்றனர்.
பின் மெல்லிய புன்னகையுடன்.. ” இன்பா நீங்க எழிலரசியை அழைத்து கொண்டு ஶ்ரீஇனிப்பகத்திற்கு வாங்க. அங்கு போய் பேசலாம். ” அரசியிடம் திரும்பி.. கண்களால் விடைப்பெற கேட்டான்.
” சரி ” என இன்பா வார்த்தைகளாலும்.. அரசி தலையசைத்தும்.. கண்களில் முறைத்தும் கூறினாள். வேந்தன் அரசி முறைத்ததை பார்த்து புன்னகையுடன் சிரித்துக் கொண்டு தன் பைக்கை எடுத்துக் சென்றான்.
” இவ்வளவு நேரம் அரசி அரசிமா.. என்று கூறிவிட்டு.. எழிலரசி என்று கூறியது மட்டும் அல்லாமல் வேறு ஒன்றும் கூறாமல்.. அண்ணாவுடன் வா.. என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். இவனை என்ன பண்ணுவது?. ” என்று மனத்திற்குள் திட்டுவதாக நினைத்து வெளியில் கேட்கும் படி திட்டிக் கொண்டுஇருந்தாள்.
இன்பா.. சிரிப்புடன் அருகில் சென்று.. ” எழில்.. எழில்மா.. இல்ல இல்ல எழில் ” என அழைக்க..
எழில் அவன் சிரிப்புடன் பேசுவதை பார்த்து “ என்ன ண்ணா.. எதுக்கு சிரிக்கிற?. “
” இவ்வளவு நேரம் நீ மனசுல பேசுறதா நினைத்துக் கொண்டு.. வாய்விட்டு.. நான் கேட்கற மாதிரி பேசிட்ட. சரி சரி.. வா எழில் அவர் சொன்ன கடைக்கு போகலாம்” காரிருந்த இடத்திற்குசென்றார்கள்.
‘ எழில் என்ன வாய்விட்டு பொலம்பிட்டனா?.. அய்யோ! இந்த இன்பா வேற சிரிக்கிறான்.. இப்பவே வாய்விட்டு பொலம்ப விட்டுடான்.. இன்னும் என்னலாம் பண்ணபோறனோ?.. ‘ என இப்போது சரியாக மனத்திற்குள் பேசிக் கொண்டே.. இருவரும் இனிபகத்திற்கு சென்றனர்.
எழிலும் இன்பாவும் கடையின் முன் இறங்கிய போது.. வேந்தன் நின்றுயிருக்க.. இருவரையும் உள்ளே அழைத்து சென்று மூன்று போர் உட்காரும் வட்ட மேசையில் உட்கார்ந்தனர். இன்பாவிற்கு பாசந்தியும்.. அரசி, வேந்தனுக்கும் எலுமிச்சை ஜுஸ் வந்தது.
” இன்பா.. ஸ்விட் சாப்பிடுங்க.. உங்க தங்கச்சி என்னை கணவனாக ஏற்றுக் கொள்ள சம்மதம் சொல்லிட்டாங்க. ” என மலர்ந்த புன்னகையுடன் அரசியை பார்த்துக் கொண்டே கூறினான்.
இன்பா மகிழ்ச்சியான புன்னகையுடன் தங்கையை பார்த்துவிட்டு.. ” ரொம்ப சந்தோஷம்!. வாழ்த்துக்கள் மாமா. நான் மட்டும் தான் ஸ்வீட் சாப்பிடுறேன்.. இதுக்காரணமான நீங்க ரெண்டுபேரும் சாப்பிடல்ல.. ”
” நாங்க சக்கரைபொங்கல் சாப்பிட்டோம்.. வீட்டல போய் சாப்பாடு சாப்பிடனும் இல்ல.. அதனால் லைட்டா எங்களுக்கு இந்த ஜுஸ்போதும். “
‘ எழிலுக்கு இங்கு எதற்கு வந்தோம்?.. எனக் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே.. இனிப்பும்.. ஜுஸ் வந்தது.. வேந்தன் அண்ணாவிடம் சட்டென்று!.. நான் சம்மதம் சொன்னதை கூறுவான் என்று எதிர்பார்க்காததால் அண்ணனை பார்த்து ‘ என்ன கூற?. ‘ என்ற யோசனையும்.. வேந்தனை ‘ இவன் என்னிடம் அடிவாங்காமல் போக மாட்டான் போல ‘ என முறைத்துக் கொண்டும் இருந்தாள்.
இன்பா எழிலை பார்த்துக் கொண்டே ” நீங்க என்னிடம்.. இப்ப சொல்லப்போறத.. எழில் கிட்ட சொல்லலையா மாமா. விட்டா அடித்து விடுவானு நினைக்கிறேன்.. நீங்க கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்ளுங்க.. ஏற்கனவே உங்கள இப்ப வரும்போதே திட்டிக் கொண்டே வந்தா.. பார்த்து இருந்துங்கோங்க. ” இன்பாவிற்கு வேந்தனை தங்கையின் மாப்பிள்ளையாக பார்த்தவுடனே பிடித்தது.. இப்போது தங்கையின் சம்மதம்.. அவனை சாதாரணமாக, உரிமையாக பேச வைத்தது.
அரசியிடம் திரும்பியவன்.. ” அப்படியா அரசி.. அடிப்பியா என்னை. வாங்கிட்டா போச்சு. ” என்று விஷம புன்னகையுடன் மெல்லிய குரலில் கூற..
‘ எழிலிற்கு இப்போது இந்த அண்ணணை என்ன பண்ணலாம்?. என்று தோன்றியது. அவளால் வேந்தனை பார்க்க முடியவில்லை. அவன் கூறியதிலும்.. கூறிய விதத்திலும்.. கூறும்போது புன்னகைத்திலும் ஏதோ மறைபொருள் இருப்பது போல இருந்தது. அவன் முகத்தை காணமுடியாமல் வெக்கம்!. அழையா விருந்தாளியாய் அவளுள் வந்துவிட்டது. ஜுஸ் குடிப்பதே தன் கடமை என்பது போலவும்.. கடையை சுற்றிப் பார்ப்பதுபோல.. வேந்தனை பார்க்காமல் குடித்துக் கொண்டு இருந்தாள். அதனையும் அவன் கண்டுகொண்டான். ஆண்கள் இருவரும் இனிப்பு சாப்பிட்டும்.. ஜுஸ் குடித்து முடித்தனர். அப்போது கடையின் ஊழியர் ஒருவர் இரண்டு பைகள் கைகள் நிறைய இனிப்பு, கார உணவுப்பொருட்களை கொண்டு வந்தார்.
வேந்தன் இனிப்புகள் அடங்கிய பைகளை..” இன்பா வீட்டல எல்லோருக்கும் இனிப்புவகைகள். மற்றொரு பையை கொடுத்து.. இத உங்க அண்ணி சுரபி வீட்டல என் சார்பா இப்ப கொடுத்துவிடுங்க.. நான் பிறகு போன் பண்ணுகிறேன் என்று சொல்லி விடுறிங்களா. ”
பை நிறைய இனிப்புகளை பார்த்தவன்.. ” எதுக்கு மாமா இவ்வளவு இனிப்பு வகைகள்.. வீட்டல சந்தோஷத்தை பகிர கொஞ்சம் போதுமே.. ஒரு பைகளில் இருக்கும் இனிப்பை எடுத்து நான் அண்ணி வீட்டுக்கு கொடுத்து விடுகிறேன் மாமா.. இதை நீங்க வீட்டுக்கு கொண்டு போங்க மாமா. ”
வேந்தன் புன்னகையுடன்.. ” பரவாயில்ல இன்பா. நீங்களே வீட்டுக்கு கொண்டு போங்க எங்க வீட்டலயிருந்து பெரியவங்க பேசுவாங்க.. பிறகு இன்னும் நிறைய இனிப்பு வகைகள் தேவைப்படும். ”
இவர்களின் பேச்சுவார்த்தையை பார்த்துக் கொண்டு இருந்த எழில் எதுக்கு? என்பது போல வேந்தனை பார்த்தாள்.. இன்பா புரிந்தும் புரியாமலும் வேந்தனை பார்த்தான்..
வேந்தன் இவர்களின் பார்வையின் எண்ணத்தை உணர்ந்து ” இன்பா.. எழிலரசிய நாங்க முறையா உங்க வீட்டுக்கு வந்து.. நாங்க.. நான் அரசியோட பேசி.. அதன்பிறகு எல்லாம் நல்லபடியா முடிந்து இருக்கும். ஆனா இன்றைக்கு எதிர்ப்பார்க்காமா நாங்க பேசிவிட்டோம்.. பெரியவங்க கொஞ்சம் அப்சட்டாக இருப்பாங்க.. அதனால இனிமேல் நடப்பது எல்லாம் பெரியவங்க மூலம் முறையா நடந்தா நல்லாயிருக்கும்.. நீங்க வீட்டுக்கு போனவுடன் பேசுவாங்க. நான் ஏன் இப்படி சொன்னேன்?. என்று அப்ப புரியும். ”
” ம்.. புரியுது மாமா. ” என்றான்.. இன்பா போன்னில் மெசேஜ் வர.. அதை எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தான்.
‘ வேந்தன் இன்பாவிடம் கூறியதை கேட்டவள்.. இதுபோல தன்னிடமும் கூறினான்.. எல்லோர் பற்றியும் நினைக்கிறான் அழகு!.’ என பெறுமையாகவும் என்னும்போதே.. ‘ ஆனா ரொம்ப அடக்கமா பேசுறானே.. நம்ப முடியலேயே!.. இவர் அவங்க சொன்னப்படி நடக்க போறாங்களா?.. இல்ல நீங்க சொன்னப்படி அவங்க நடக்க போறாங்களா?.. ‘ என்பது போல தன்னவனை பார்த்தாள்.
வேந்தன்.. இன்பா போன்னை பார்க்கவும்.. தன் முயல்குட்டியின் பதில் என்னவாக இருக்கும் என்று.. தன்னை அவளிடம் திருப்பிவன்.. அவளின் பார்வை உன்னை நம்ப முடியலேயே.. என அவள் கண்கள் கேள்வி கேட்க.. ‘ நம் எண்ணத்தை கண்டுப்பிடுச்சுட்டாளோ!. ‘ மனதில் புன்னகைத்து.. கிளம்ப முன்.. சம்திங் கொடுக்கனும்.. ஒன்னு பார்க்க வேண்டுமே ‘ என மனம் ஏங்க.
தன்னவளை பார்த்து மென்குரலில் ” நம்புடா அரசி.. நான் ரொம்ப நல்ல பிள்ளை. ” என சிரிப்புடன் கூறி.. அவளை பார்த்து அழகாக ஒற்றை கண்ணால் சிமிட்ட..
வேந்தனுக்கு வேண்டியது உடனே கிடைத்துவிட்டது. தன் முயல்குட்டியின் அழகான முறைக்கும் கண்களும்.. கூடவே சிவப்பேரிய கன்னங்களும் அவன் கண்களுக்கு கிடைத்தவிட. அவள் பதில்அளிக்கும் முன்.. புன்னகையுடன் ” கிளம்பலாம் இன்பா. ” வேந்தன் எழுந்தான்.
” 10 நிமிடம் ” வேகமாக எழுந்து.. கடையின் முன் செல்ல பார்த்தவனிடம்.. ” இன்பா ஸ்விட் வாங்க போறிங்களா? ” ஆம் என தலையசைக்க.. ” அதெல்லாம் வேண்டாம் இன்பா.. முறையொல்லாம் வேண்டாம். என்னோட சந்தோஷத்துக்காக வாங்கி கொடுத்தேன். உங்க சந்தோஷதை நான் வரும்போது வெளிப்படுத்துங்க.. சரியா” வேந்தன் கூறிக் கொண்டு இருக்கும்போது ஒருவர் ஒரு பையை வேந்தனிடம் கொடுக்க.. அதை அரசியிடம் கொடுத்தான்.
” அரசிக்கு பிடிக்குமேனு வெள்ளை பூசணிக்காய் அல்வா. இங்க நல்லா இருக்கும். இப்பசெய்ய முடியுமானு கேட்டேன். அதான் செய்துவிட்டு வர நேரம் ஆகிவிட்டது.” இன்பாவிடம் கூறி தன்னவளை பார்த்தான்.
சிரிப்புடன் ” மாமா.. இதுல எனக்கும் பங்கு இருக்கா? எனக்கும் பிடிக்கும் அதான் கேட்டேன். ”
புன்னகையுடனே.. “ அது.. அதுவந்து.. அரசியா கொடுத்தா வாங்கி சாப்பிடலாம். “
” அப்ப நான் சாப்பிட்ட மாதிரிதான்.. சரி மாமா.. சீக்கிரம் பார்க்கலாம். நாங்க கிளம்புகிறோம். எழில் நான் காரில் இருக்கிறேன் வா. ” காரை நோக்கிச் சென்றான்.
வேந்தனும் அரசியும் ஒரு நிமிடம் அமைதியாக நின்று.. ” நான் கிளம்புறேன் ” என மெல்லிய குரலில் கூறினாள்.
அவள் குரலில் இருந்த வருத்தம் புரிந்தாலும்.. அது பிடிக்காமல்.. ” அரசி.. அரசி.. வீட்டுக்கு போனவுடன் சாப்பாடு சாப்பிட்டு.. இந்த ஸ்விட்ட சூடயிருக்கும் போது கொஞ்சமா சாப்பிட்டு தூங்கு. நான் 6 மணிக்கு மேல கால் பண்ணுகிறேன்.. சரியா.. ” சில மணிநேரங்களில் பார்க்க போகிறோம் என்பதை என லைட்டா அரசியின் கையை பிடித்து கூறி விடுவித்தான். அவளும் சரி என பார்த்து. இருவரும் அமைதியாக நடந்து வந்தனர்.
இப்போது அரசிக்கு இருவரின் அமைதி பிடிக்காமல்.. ” ம்ம்.. அநியாயத்திற்கு ரொம்ப நல்லவனா இருக்குகிறிங்க.. நீங்க பண்ணுறத பார்க்க. அப்ப்பா என்னால முடியல. முதல நீங்க போய் உங்க முளைக்கு ஓய்வு கொடுங்க.. பாவம்அது. ”
வேந்தன் கிளம்பும் போது சிரித்த முகமாக இருக்க வேண்டும் எனக் ஏதோ கூறுகிறாள் என்று உணர்ந்து. ” அப்ப நல்ல பையனாக இருக்க கூடாது சொல்லுற.. அப்ப நான் கெட்டப்பையனாக இருந்தா?.. உனக்கு பிடிக்கும்!.. அப்படிதானே. அப்ப சரி..
அடுத்த தடவை பார்க்கும் போது பாரு என்னைய. நீ போய் தூங்க ஆரம்பி.. நான் உன் பின்னாடியே வரேன். ”
அவள் ‘ என்ன?. ‘ என அதிர்வு பார்வை பார்க்க.. ” கனவுல மா அரசி..” புன்னகையுடன் தன் அரசியை அவள் அண்ணாவுடன் வழியனுப்பினான். பிறகு தன் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இனிப்புகளையும் வாங்கிக் கொண்டு தன் வீடு நோக்கிச் சென்றான்.
வீட்டில் தனித்தனியாக வந்தவர்கள்.. இப்போது தங்களின் மனத்திற்குள் மற்றொருவரை சுமந்துக்கொண்டு இருவராக சென்றார்கள்.