“எனக்கு ஒரு ஐடியா வந்துருக்கு. நீ பேசாம வயிறு வலிக்குதுன்னு பொய் சொல்லி, உன் ரூம்ல படுத்துக்கோ பஞ்சு. எப்படியும் நீ அப்படி படுத்திருந்தா, அவன் வந்து உன்னை விசாரிப்பான். அப்புறம் உங்கிட்ட பேசிருவான் சரியா?”, என்று சொன்னாள் சகுந்தலா.
“சூப்பர் ஐடியா அத்தை அவங்க வரட்டும்”, என்று சிரித்தாள் பஞ்சு.
அன்று முழுவதும் ஊரை சுற்றி விட்டு இரவு தான் வந்து சேர்ந்தார்கள் இருவரும். சகுந்தலா தான் கதவை திறந்தாள்.
“சாப்ட்டியாம்மா”, என்று விசாரித்தான் ஆதி.
“ஹ்ம்ம் ஆச்சு ஆச்சு”, என்று சொன்னாள் சகுந்தலா.
“மாத்திரை போட்டுடீங்களாம்மா?”, என்று விசாரித்தான் சீனி.
“ஆச்சு ஆச்சு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”
“நாங்க வெளியவே சாப்டுட்டோம் மா”, என்று சொன்னான் ஆதி.
“அம்மாடி பூவு”, என்று அங்கு இருந்தே சத்தம் கொடுத்தாள் சகுந்தலா.
“என்னங்க அத்தை?”
“அந்த சாப்பாட்டுல தண்ணி ஊத்தி போடு. காலைல இவனுங்களுக்கு அது தான் சாப்பாடு”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள் சகுந்தலா.
“இந்த குளிர்ல பழைய சோறா?”, என்று வாய் விட்டே சொன்னான் சீனி.
“அதாவது கிடைக்குதேன்னு சந்தோச படு. குட் நைட் டா”. என்று சொல்லி விட்டு தன்னுடைய அறை கதவை மெதுவாக திறந்தான் ஆதி.
கட்டில் வெறுமையாக இருந்தது. பாத்ரூம் கதவும் திறந்து கிடந்தது.
“எங்க போய்ட்டா?”, என்று யோசித்து கொண்டே பூனை போல் மெதுவாக நடந்தான் ஆதி.
மெதுவாக போன ஆதியின் காதில் “ஆ அம்மா”, என்ற முனங்கல் சத்தம் மட்டும் கேட்டது.
“மாமா வந்துட்டாங்க டி பஞ்சு. அத்தை சொன்ன ஐடியாவையும், பூவு சொன்ன ஐடியாவையும் சேத்து செயல் படுத்து”, என்று தனக்குள் சொல்லி கொண்டு, “ச்சி ச்சி இந்த மாமாவை பேச வைக்க என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு?”, மெதுவாக தன் மார்பில் கிடந்த சேலையை கீழே சரித்து விட்டு “ஆ அம்மா”, என்று மெதுவாக சத்தம் கொடுத்தாள் பஞ்சு.
“ஐயோ என்ன ஆச்சு?”, என்ற படி சத்தம் வந்த திசை பக்கம் பாத்தான். கட்டிலுக்கு அந்த புறம் தரையில் பஞ்சு படுத்திருந்தாள்.
“ஏய் வர்ணா, என்ன ஆச்சு டி?”, என்ற படியே அவள் அருகில் சென்றவன் அவள் நிலையை பார்த்து திகைத்தான்.
கண்கள் போன திசையை அடக்கி விட்டு, அவள் அருகே அமர்ந்து, அவள் சேலையை தூக்கி அவள் மீது போட்டு விட்டு, அவள் தலையை தூக்கி தோளில் சாய்த்து கொண்டான்.
“ஐ வர்ணான்னு கூப்டுட்டான்”, என்று நினைத்து கொண்டு “ஆ அம்மா, வயிறு வலிக்குது மாமா”, என்று சொல்லி கொண்டே அவன் மேல் சாய்ந்தாள் பஞ்சு.
“வர்ணா மா, இங்க பாருடா. என்ன மா செய்யுது? என்ன திடிர்னு வயிறு வலி?”, என்று கேட்டு கொண்டே அவளை தூக்கி மெதுவாக படுக்கையில் படுக்க வைத்தான். அங்கு இருந்த தலையணையை தூக்கி அவள் தலை அடியே வைத்தான் ஆதி.
ஒரு நிமிடம் அவனுக்கு என்ன செய்ய என்றே தெரிய வில்லை. அடுத்த நொடி “அவள் வயிறு வலியை நிறுத்தணும். அம்மாவை கூப்பிடலாம். லெமன் புழிஞ்சு கொடுக்க சொல்லலாம்”, என்று நினைத்து அவளை விட்டு நகர போனான்.
நகர போனவனை, பஞ்சுவின் கைகள் பிடித்து தன்னை நோக்கி இழுத்தது.
அவள் பிடித்ததில் அவள் புறம் திரும்பியவன் “என்ன மா? ரொம்ப வலிக்குதா? இரு இப்ப சரியாகிரும் என்ன? மாமா இருக்கேன் டா”, என்று மறுபடியும் நகர போனான்.
மறுபடியும் அவனை இழுத்து கட்டிலில் அமர வைத்தவள், அவன் மீதே சாய்ந்து கொண்டு “ஹ்ம்ம் மாமா ரொம்ப வலிக்குது. என்கூடவே இருங்க. எனக்கு பயமா இருக்கு”, என்று சொல்லி அவனை கட்டி பிடித்து கொண்டாள்.
அவள் பிடித்திருந்த விதத்தை வைத்தே அறிந்து கொண்டான் நடிக்கிறாள் என்று. வயிறு வலியில் ஆறுதலுக்கு அணைப்பதற்கும்,
ஆசையில் அணைப்பதற்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?
“அட பாவி, இது தான் உங்க பிளானா? எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? இப்படி பிடிச்சிருந்தா மனுஷன் எப்படி டி கோபத்தை இழுத்து பிடிச்சு வைக்கிறது?”, என்று நினைத்து கொண்டு அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் “இரு வர்ணா வரேன்”, என்று சொல்லி விட்டு அவளை விட்டு விலகி நடந்தான்.
அந்த அறையில் இருந்த மேசை டிராயரை திறந்தான் ஆதி.
“என்னது தேடுறான்?”, என்று நினைத்து கொண்டே, அவனை கூர்மையாக பார்த்தாள் பஞ்சு.
அவளை திரும்பி பார்த்தான் ஆதி. சாதாரணமாக அவனை பார்த்து கொண்டிருந்த பஞ்சு, அவன் திரும்பி பார்த்ததும் வயிறை பிடித்து கொண்டு “ஆ”. என்று சொல்லி வலிப்பது போல நடித்தாள்.
“நடிக்கவா செய்ற? இரு டி வரேன்”, என்று நினைத்து தனக்குள் சிரித்து கொண்டான் ஆதி.
அவன் எடுத்து வந்த பொருளை பார்த்து, உண்மையிலே அலறினான் பஞ்சு.
அங்கே ஊசியில் மருந்தை ஏற்றி கொண்டே, அவளை நோக்கி நடந்து வந்தான் ஆதி.
“ஐயையோ! இவன் ஊசியை தூக்கிட்டு வாரானே”, என்று நினைத்து கொண்டாள்.
அடுத்த நொடி பெட்டில் இருந்து குதித்து இறங்கிய பஞ்சு “ஹி ஹி,
வலி போய்ட்டு மாமா”, என்று சிரித்தாள்.
அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன், “திருப்பியும் வரும் வர்ணா. ஊசி போட்டா தான் சரியாகும்”, என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கினான்.
“அது தான் சரியாகிருச்சுல்ல. ஊசி வேண்டாம்”, என்று அழுதாள் பஞ்சு.
“அதெல்லாம் கிடையாது. ஊசி போட்டா தான் சரியா போகும். நீ கிட்ட வா”, என்று சொல்லி ஊசி போட தயாரானான். அங்கும், இங்கும் அவன் கைக்கு சிக்காமல் ஓடி கொண்டிருந்தவளை விரட்டி பிடித்தான் ஆதி.
“ஐயோ மாமா, எனக்கு வயிறு வலியே இல்லை. நீங்க பேசணும்னு தான் நடிச்சேன். அத்தையும், பூவும் தான் ஐடியா கொடுத்தாங்க. மன்னிச்சிருங்க மாமா. என்கிட்ட பேசுங்களேன்”, என்று உண்மையை உளறி கடையில் கெஞ்சினாள் பஞ்சு.
“அவங்க அறிவு இல்லாம சொன்னா, நீ ஏன் அதை கேக்குற? ஒரு நிமிசத்தில் பயந்தே போய்ட்டேன். எப்ப பாத்தாலும் எனக்கு டென்ஷன் தான் கொடுப்பியா பஞ்சு? போ. உன்கிட்ட இனி நான் பேசவே மாட்டேன்”, என்று மறுபுறம் திரும்பி கொண்ட ஆதி, அவளுக்கு முகம் தெரியாத படி நின்று கொண்டு சிரித்தான்.
அழுவதற்கு தயாராய் நின்றாள் பஞ்சு.
“கஷ்ட படுத்தியது போதும்”, என்று நினைத்து அவள் அருகே செல்ல போனான் ஆதி. ஆனால், அவள் அழுது கொண்டே சகுந்தலா அறைக்குள் ஓடியே போனாள்.
சிரித்து கொண்டே அவள் பின்னாடியே போனான் ஆதி.
உள்ளே சகுந்தலாவும், பஞ்சுவும் பேசுவது கேட்டு அப்படியே வெளியே நின்றான் ஆதி.
“என்ன பஞ்சு? எதுக்கு இப்படி ஓடி வர?”
“போங்க அத்தை, நீங்க சொன்ன பிளான் ஊத்திக்கிச்சு. மாமா நிஜமாவே ஊசியை போட வராங்க”
“ஐயையோ கண்டு பிடிச்சிட்டானா?”
“ஹ்ம்ம், ஊசியை பாத்த உடனே நானே உளறிட்டேன்”
“லூசு ஒரு ஊசி தான, வாங்கிக்க வேண்டியது தான? அப்படியே நடிப்பை கண்டின்யு செஞ்சிருந்தா, அப்புறம் பேசிருப்பான். இப்ப எல்லாம் போச்சு”
“போங்க அத்தை, எனக்கு ஊசி எல்லாம் பயம்”
“இப்படி பயந்தா என்ன செய்ய பஞ்சு? போச்சு போ. சரி வேற எதாவது யோசிப்போம்”
“மறுபடியும் மாமா என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க அத்தை. மாமா ஏன் அத்தை பேச மாட்டிக்காங்க? நான் தெரியாம செஞ்சிட்டேன் அத்தை. மனசுல நான் மாமாக்கு நிகர் இல்லைன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அதான், அன்னைக்கு அப்படி பேசினேன். மனசார என்னால சொல்ல முடியுமா சொல்லுங்க? நானே என்னை கஷ்ட படுத்திகிட்டு தான் சொன்னேன். இப்ப பேசவே மாட்டிக்காங்க அத்தை. எனக்கு கஷ்டமா இருக்கு. அழுகையா வருது”, என்று அழவே ஆரம்பித்து விட்டாள் பஞ்சு.
இப்போது பஞ்சு பேசியது சகுந்தலாவுக்கும், ஆதிக்கும் கஷ்டமாக இருந்தது.
அவள் அருகில் வந்த சகுந்தலா அவள் தலையை தடவி கொடுத்து “என்ன மா சின்ன பிள்ளை மாதிரி அழுது கிட்டு?”, என்று கேட்டாள்.
“அத்தை, எனக்கு என் மாமா வேணும்”, என்று சகுந்தலாவின் தோள் சாய்ந்தவள் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
“ஏய் பஞ்சு அழுறதை நிப்பாட்டு. உன் மாமா உன்னை விட்டு எப்படி போவான் சொல்லு? நீ பேசுனது அவனுக்கு கஷ்டமா இருந்துருக்கும். நீ மறுபடியும் உன்னோட தாழ்வு மனப்பாண்மைல, இப்படி பேச கூடாதுன்னு தான் கோபமா இருக்கான். ரெண்டு நாளில் சரியாகிருவான் மா. அழாத”
“இப்பவும் நான் முட்டாளா தான் அத்தை இருக்கேன். மாமா எனக்கு வேணும்னு தோணுது. நான் படிச்சிருந்தா, இப்ப இப்படி பேசிட்டு மாமா கிட்ட வெறுப்பை வாங்கியிருக்க மாட்டேன். மறுபடியும் நான் படிச்சிருக்கலாம், அப்படின்னு தான் எண்ணம் வருது அத்தை”
“பஞ்சு, வாழ்க்கைல எது முக்கியம்? எது அவசியம்? எது தேவைன்னு புரிஞ்சிக்கோ. படிப்பு ஒரு தேவையே தவிர, அது இல்லைனா எதுவுமே இல்லனு சொல்ற அளவுக்கு, அது முக்கியம் இல்லை. இன்னும் சொல்ல போனா படிக்காதவங்க தான் இப்போதைக்கு சந்தோசமா இருக்காங்க. இப்ப உன்கிட்ட கடவுள் முன்னாடி வந்து, உனக்கு நிறைய படிப்பை தரேன். நீ தான் இந்த உலகத்துல அறிவாளியா இருப்பனு சொல்றார். அது மட்டும் இல்லாம உன் முன்னாடி உன் மாமாவும், உன் படிப்பும் இருக்கு உனக்கு ரெண்டுல எது வேணும்னு கேக்குறார். நீ அவர் கிட்ட எதை கேப்ப?”
“என் மாமாவை தான் கேப்பேன்?”
“நீ தான் படிக்கலைன்னு கவலை படுறல்ல? அப்புறம் எதுக்கு படிப்பு கேக்காம, உன் மாமாவை கேப்ப?”
“என்ன அத்தை கேள்வி, எனக்கு மாமா தான முக்கியம்? அவர் இல்லாம நான் எப்படி இருக்க முடியும்? மாமா தான் வேணும். வேற எதுவும் வேண்டாம்”
“இப்ப புரியுதா? நீ இப்படி நினைக்கும் போது, அதையே தான அவனும் நினைப்பான். வர்ணா வர்ணா அப்படின்னு உன் பின்னாடியே சுத்திட்டு வரவனை போய், இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கோன்னு சொன்னா, அவன் என்ன செய்வான் சொல்லு. கோபம் வருவது இயற்கை பஞ்சு. சீக்கிரம் சரியாகிருவான். உனக்கு நீ செஞ்ச தப்பு புரியுதா பஞ்சு?”
“அன்னைக்கே புரிஞ்சது அத்தை. ஆனா, இப்ப தான் தெளிவா புரிஞ்சது. ஆனா, மாமா என்கிட்ட பேச மாட்டிக்காங்க. எப்படி பேச வைக்கன்னு தெரியலை. இப்பவும் கோபமா பேசிட்டாங்க”, என்று சொன்னாள் பஞ்சு.
“நீ இனிமே இப்படி நினைக்காம இரு. அதுவே போதும். அவனுக்கு யார் கூடவும் சண்டை போட்டு பேசாம எல்லாம் இருக்க தெரியாது. அவன் ஒரு டம்மி பீஸ் பஞ்சு. கோபமா இருக்குற மாதிரி நடிப்பான். நீ எதாவது அவனை டார்ச்சல் பண்ணு பேசிருவான். டார்ச்சல் கூட வேண்டாம். மாமான்னு சொல்லி காலுல விழுந்துரு, அப்படியே உருகிருவான். இல்லைன்னா ஒரு முத்தத்தை கொடுத்து சமாதான படுத்து. காதல் அப்படின்னு ஒன்னு இருக்குற வரைக்கும், யார் மேலயும் நமக்கு வெறுப்பு வராது பஞ்சு”
“கண்டிப்பா பேசிருவாங்க தான அத்தை?”
“பேசாம எங்க போக போறான்?”
“என்னை பார்த்து டம்மி பீஸ்ன்னு சொல்லி கொடுத்துட்டு இருக்கா பாரு? இந்த அம்மா இருக்காளே”, என்று பல்லை கடித்தான் ஆதி.
காதல் மலரும்….