எழிலரசி, வேந்தன் மற்றும் அனைவரும் ஷாப்பிங் செய்த அதே வேலையில் இருவரின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை துணையை பார்க்க போகும் படலத்ததிற்கு அழைக்க.. முதலில் அவரவர் தாய்மாமன் மற்றும் அத்தைகளை அழைக்கச் சென்றயிருந்தனர்.
‘ எழிலரசியின் தாய்மாமா சக்கரவர்த்தியை பார்க்க அருணாச்சலமும். லட்சுமியும் சென்றனர். சக்கரவர்த்தி விவசாயம் பணியை செய்துவருகிறார். அவர்கூட தன் அப்பா மற்றும் மகன் சுரேந்தரும் உதவி செய்வார்கள். வயது முதிர்வின் காரணமாக அப்பா சில நேரம் மட்டுமே வருவார். பையன் மற்றும் மருமகள் அர்ச்சனாவுடன் தங்களின் வீட்டின் பக்கத்தில் காய்கறி மற்றும் மளிகை கடை வைத்துள்ளார்கள். அங்கு உள்ள பெரும்பான்மையான காய்கறிகள் அனைத்தும் தங்கள் தோட்டத்தில் இருந்து வருபவைதான். அவர்கள் வீட்டிற்கு போன்கால் செய்து விட்டு சென்றதால்.. அனைவரும் அங்கு இருந்தனர். ‘
” மாமா.. எழிலரசிக்கு நல்ல வரன் வந்துயிருக்கு. மாப்பிள்ளை பையன் இதே ஊர் தான். இங்கு அன்னபூரணி ஹோட்டல் வைத்துயிருப்பவர்களின் பையன் வேந்தன் என்பவர்தான் மாமா. பையன் சென்னையில் வேலை செய்கிறார். நேற்று தான் பையன் மற்றும் எழிலின் அனைத்து பொருத்தமும் பார்த்தோம். எல்லாம் நன்றாக இருப்பதால்.. பையன் இப்ப இங்குதான் இருக்கிறார். அதனால்இன்னைக்கு மதியம் தான்.. வர ஞாயிறு அன்று அவங்க பையனோட நம்ம எழிலரசிய பார்க்கவருவதாக கூறினார்கள். இருவருக்கும் பிடித்திருந்தா உறுதி கூட அன்றைக்கே வைத்துக்கொள்ளானு சொல்லி இருக்காங்க. ”
” வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வந்து பையனை பார்த்துவிட்டு.. அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்து.. அடுத்தடுத்து நடக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்கனும். அதற்கு நீங்கள் அனைவரும் வந்து அதனை சிறப்பித்து தரனும். ” என அனைவரையும் அழைத்தார். லட்சுமியும் தன் அப்பா,அம்மா,அண்ணா, அண்ணி, மருமகன், மகளை தன் சார்பாக அழைத்தார்.
” ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.. நம்ம எழில் குட்டிக்கு எங்க ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் பா. எல்லோரும் கண்டிப்பா வந்து நல்ல சிறப்பா செய்து கொடுக்கிறோம் மா லட்சுமி. ”
எழிலரசி அத்தை அம்பிகா “ நல்லா சிறப்பா செய்துவிடலாம் அண்ணி.. நேரம் கம்மியா வேறு இருக்கு. அவங்க பக்கத்தில் இருந்து நிறைய பேர் வருவாங்க.. நிறைய வேலையிருக்கும்.. அதனால நாளை மாலையே நானும்.. அத்தையும் வந்து விடுரோம் அண்ணி. ”
” ம்.. சரிங்க அண்ணி.. வாங்க.. நீங்க கிளம்பியதும் போன் பண்ணுங்க.. இன்பா வந்து கூட்டிவருவான்.”
” அப்ப பார்த்துக்களாம் அண்ணி.. ” அவர்களுக்கு சாப்பிட சிற்றுண்டிகளை கொடுத்தார்.அவர்கள் சாப்பிட்டவுடன் திரும்பவும் அனைவரையும் அழைத்து விட்டு.. நேராக அருணாச்சலத்தின் தங்கைகளின் வீட்டிற்கு சென்றனர்.
‘ அனைவரது வீடும் சுற்றி இரண்டு மூன்று கிலோமீட்டர்க்கு உள்ளே தான் இருக்கிறது. அருணாச்சலத்தின் இரண்டு தங்கைகள் அண்ணன், தம்பிகளை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் வீடு கட்டுவதற்கு தேவையான சிமிண்ட், ஐல்லி, செங்கற்கள், கம்பிகள் விற்கும் வியாபாரம் செய்கிறார்கள். ‘
‘ இரண்டு வீடுகளாக எதிர்எதிர் புறமாகவும்.. நடுவில் கார், பைக் வைப்பதற்கு ஏற்றவாறு சுற்றிலும்சுவர் எழுப்பி.. வண்டிகளை வைத்து மூடுவது போன்றும்.. இதற்கு மேலே இரு அறைகள் உள்ளது. வீட்டில் உள்ள பெரியவர்கள் கீழேயும்.. சிறியவர்கள் மேலேயும் இருப்பர்.. வீடு பார்ப்பதற்கு ப வடிவில் இருக்கும் நடுவில் காலி சிமிண்ட் போட்ட காலிஇடமாக இருக்கும்.. அதன் மேலே கூம்பு வடிவில் ஓடு போடப்பட்டு இருப்பதால்.. அனைவரும் விடுமுறை நாட்களில் மிகஅதிக நேரம் இங்குதான் செலவிடுவர். ‘
‘ அத்தைகளுக்கு எழிலை தங்கள் இரு மகன்களில் எவரையேனும் கல்யாணம் செய்துவைக்க ஆசைக் கொண்டனர். ஆனால் எங்கே?. எழிலை பார்த்து கல்யாணம் செய்து கொள் என மட்டும் கேட்க மாட்டார்கள். அவள் கூப்பிட வேண்டும் என்பதற்காக மட்டுமே தங்கள் மகன்களை மாமா என்று அழைப்பாள். ‘
‘ ஏனெனில் எழில் அவர்களின் மகன்களை அண்ணா என்று கூப்பிடாத குறையாகதான் அவர்களை பார்ப்பாள்.. எண்ணுவாள்.. நடந்துக் கொள்வாள். அதனிலும் மேலாக அவளின் கல்யாண விருப்பதை.. தங்கள் அண்ணனிடம் கூறியதிலிருந்து இருவரும் அவள் மேல் கோபத்தில் தான் உள்ளார்கள். இருந்தாலும் தன் அண்ணன்களிடம் தங்களின் மகள் மேகாவை.. இன்பாவிற்கு கல்யாணம் முடிக்கவேண்டும் என்பதற்காக கோபத்தை வெளிபடுத்தாமல் பொறுமையாக இருக்கிறார்கள். ‘
‘ இன்பாவிற்கு எழிலரசி என்றால் உயிர். அவ்வளவு பிடிக்கும். அவளின் அனைத்திற்கும் உறுதுணையாக இருப்பவன். எழிலரசியும் அவனிற்கு சளைத்தவள் இல்லை. இன்பா இப்போதே தனியாக மில் ஆரம்பிக்க.. அவனிற்கு பிள்ளையார் சுழியே அவளே.. அதை திறந்து வைத்ததும் அவள் தான். அந்த அளவிற்கு இன்பாவின் வாழ்க்கையில் இணைந்திருப்பவள். அதனால் தான் அமைதியாக இருக்கிறார்கள். ‘
முதலில் முதல் தங்கை தேவகி வீட்டிற்கு சென்றனர். அங்கு அண்ணன் மகளும்.. அவர்களின் மருமகளுமான ஆர்த்தியும், தேவகி மட்டுமே இருந்தனர்.
” வாங்க அண்ணா.. வாங்க அண்ணி ” அழைத்து உட்கார வைத்தார். அவர்களும் ‘ வரோம் மா.. வரோம் அண்ணி.. ‘ அவர்களை நலம் விசாரித்து.. சில நிமிடங்களில் ஆர்த்தி குடிப்பதற்கு காபி கொடுக்க..
மகள் கொடுத்த காபியை பருகிக்கொண்டு இருந்தார்கள். அருணாச்சலத்தின் போன்னிற்கு அழைத்து.. தேவகியின் கணவனும்.. மருமகன் அருட்செல்வமும் சற்று நேரத்தில் வருவதாக கூறியிருந்தார். இருவருக்காகவும் காத்துயிருந்த நேரத்தில் சில பொதுவான விசயங்களை பேசிக் கொண்டுயிருந்தனர். அவர்களுடைய இரண்டாவது தங்கை ராதா உள்ளே வந்தார்.
” ரொம்ப நேரம் முன்னமே கால் பண்ணுனிங்க?.. அண்ணா.. அண்ணி இப்பதான் வந்திங்களா?.. ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.
” ஆமாம் ராதா இப்ப சிறிது நேரம் முன்பு தான் வந்தோம் மா. நாங்க சக்கரவர்த்தி மாமா வீட்டுக்கு போய் விட்டு அப்படியே வருகிறோம். இந்நேரம் வந்தா தானே.. வரதராஜன், சுந்தர்ராஜன் இரண்டுபேரையும் சேர்த்து எல்லாரையும் ஒன்னா பார்க்க முடியும் அதனால் தான் ராதா.”
“ எதுக்கு சக்கரவர்த்தி மாமா வீட்டிற்கு போய்யிருக்கிங்க?.. அதுவும் இல்லாம இங்கேயும் எல்லாரையும் உன்னா பார்க்கனும் என்று சொல்லுறிங்க.. என்ன?.. விஷயம் அண்ணா..”
” எல்லா நல்ல விஷயம் தான்மா.. நம்ம எழிலரசிக்கு.. ” என்று ஆரம்பிக்கும் போது.. தேவகியின் கணவன் வரதராஐனும்.. ராதா கணவன் சுந்தர்ராஜன்.. மருமகன்கள் அருட்செல்வமும், அருள்நிதி தன் மகள் இளமதி, குழந்தைகளுடனும் உள்ளே வந்தார்கள். அவர்களையும் நலம் விசாரித்துவிட்டு அனைவரும் காற்றோறமாக வெளியில் அமர்ந்தனர்.
அனைவரையும் பார்த்தவாறு.. ” நான் இப்ப ஏன்?.. எல்லாரையும் ஒன்னா பார்க்கனும் சொன்னேனா.. நம்ம எழிலுக்கு.. இந்த ஊரிலேயே மாப்பிள்ளை வரன் வந்துயிருக்கு. அவங்க வர ஞாயிறுக்கிழமை எழில பார்க்க வராங்க.. ” என்று கூறிக் கொண்டு இருந்த போது..
தேவகி ” என்ன அண்ணா?.. ஒரு போனவாரம் தான் வரன் பார்க்க ஆரம்பிக்கனும் சொல்லி அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்து.. அவங்க எழிலை பார்க்க வராங்கனு சொல்லுறிங்க.. நல்ல மாப்பிள்ளை தானா?.. நல்லா எல்லாவற்றை பற்றி விசாரித்து விட்டிங்களா?..” என அடுஅடுத்து கேள்விகளை கேட்டார்.
ராதா ” ஆமாம் அண்ணா.. அத்தை, மாமன் மகன் எனக்கு வேண்டானு.. உன் மக சொல்லி.. வெளி குடும்பத்தில் போய் நீ மாப்பிள்ளை பார்த்துயிருக்க. இந்த ஊர் மாப்பிள்ளைனு வேற சொல்லிறிங்க. மாப்பிள்ளை குடும்பம், வசதி, படிப்பு எப்படி?.. நாளை பின்ன.. உன் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வந்து.. அதை நினைத்து நீ கவலைபடக்கூடாது இல்லையா?.. அதான் முதலே எல்லாத்தை பற்றியும் நல்லா விசாரித்து விட்டிங்களா?..” என ராதாவும் அடுஅடுத்து அவரின் மகளின் முடிவையும் அவளின் முடிவிற்கு துணை நிற்கும் தன் அண்ணாவையும் மறைமுகமாக குறைகூறி அவரிடமே கேள்விகளை கேட்டார்.
‘ ஆரம்பத்திலேயே இவ்வாறு எதிர்மறையாக கூறுபவர்களை என்ன சொல்லுவது?. என்று தான் புரியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் தங்களின் மகள் விருப்பம் போலவும்.. தங்கள் கவலையை போக்கும் படியாக.. உள்ளூரிலேயே வரம் அமைந்து விட்டதே என எவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தார்கள்!. தங்களின் மகள், தங்கையின் மனதை உணர்ந்து செயல்படுத்துகிறார்.. அவளின் அப்பா, தந்தை. அவர் எதை பற்றியும் அறிந்துக் கொள்ளலாமலா?.. விசாரிக்காமலா?.. தன் மகளின் திருமணத்தை ஆரம்பித்து அதனை செயல்படுத்துவார். அவளின் வாழ்கை துணையுடன்.. அவளின் எதிர்கால வாழ்க்கை மிக சிறப்பாவே அமையும். ‘ தங்களின் நந்தனார், அத்தைகளின் பேச்சிற்கு லட்சுமி, ஆர்த்தி, இளமதிக்கு கண்கள் கலங்கி.. மனதிற்குள்ளே புலம்பினர்.
அருள்நிதி தன் அம்மா.. தன் மாமானாரிடம் அவர் கூறியதை கேட்டு.. ” அம்மா.. ஆரம்பத்தில்லே பிரச்சனை, கவலைபடபோறிங்கனு.. கண்டதை சொல்லிட்டு இருக்கீங்க. மாமா என்ன விசாரிக்காமையா?. அவங்கள வீட்டுக்கு வரச் சொல்லியிருப்பார். இதெல்லாம் எழில் மேல இருக்க அக்கறையில் கேட்கிறிங்களா?.. இல்ல உங்க பையன கட்டமாட்டேன் என்று சொன்னதற்காக அவரையும் மற்றவர்களையும் பயப்பட வைக்கிற மாதிரி பேசுறிங்களா?.” சற்று கோபமாகவே கேட்டான்.
‘ அவனுக்கும் தெரியுமே.. இன்று அவர்கள் கோயில் பார்த்து பேசியது.. அதற்காக அனைவரின்அனுமதி பெற்றது.. அதன்பிறகு அவர் நடந்து கொண்டவிதம்.. அவரின் பெற்றோர் பேசிய விதம் அனைத்தும் திருப்தியாகவும் இருந்தது. அங்கு கேட்ட இருந்த எவருக்கும் வெளியிடத்தில் குடுக்கிறோம் என்ற உணர்வு துளியும் தோன்றவில்லை.. வேந்தனை நேரில் பார்க்காமலையே சொந்த தம்பி என்ற உணர்வு அருள்நிதிக்கு ஏற்பட்டது. எழிலரசி வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரம்பத்திலேயே இது போன்ற பேச்சுகளை வளரவிடாமல் தடுக்க வேண்டும். ‘
” என்ன அருள்?.. ராதா என்ன தப்பா கேட்டுட்டா?.. நம்ம வீட்டு பசங்கள விட்டுட்டு.. வேற மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. அதனால நல்லா விசாரிச்சிங்ளா? என்று தானே கேட்டா. அதுக்கு எதுக்கு உன் அம்மாவிடம் கோபமாக கேட்குற?. ஏன் உன் மனைவியின் தங்கையை நாங்க ஒன்னும் கேட்க கூடாதா?. ” தன் தங்கையின் பேச்சு சரி என்பது போல தேவகி கேட்க.
தன் அம்மாவின் பேச்சை கேட்ட அருட்செல்வம் ” அம்மா, சித்தி.. மாப்பிள்ளை பற்றி விசாரிச்சிங்களா?.. பின்னாடி பிரச்சனை வந்தா கஷ்டம் எனக் கூறியிருந்தா?. யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. ஆனா நீங்க இரண்டு பேரும்.. எங்க பசங்கள பண்ணல.. என்று குறைசொல்லி.. மற்றதை சொல்லுறிங்க.. முதலில் நீங்க ஒன்னு நல்லா புரிந்துக் கொள்ளுங்க. எழிலரசிக்கு மட்டும் திருமணத்தில் இஷ்டம் கிடையாது என்று இல்ல.. உங்க பசங்க அஸ்வின் மற்றும் கதிரவன் இருவருக்கும் விருப்பம் கிடையாது. உங்களுக்கே தெரியும் எழிலரசி.. அவங்க இரண்டு பேரையும் அண்ணா என்று கூப்பிடாத குறைதான். “
” ஏன் என்னையும் அருளையும் அவங்க அக்காக்களை கல்யாணம் செய்கிறவரை.. எங்களஅண்ணா என்றுதான் கூப்பிடுவா. கல்யாணத்திற்கு பிறகு தான் ஆர்த்தியும்.. இளமதியும் தான் எழில்லமாமானு கூப்பிடவைக்க படாதபாடு பட்டாங்க.. அதுவும் உங்களுக்கு தெரியும். யாருக்கும் விருப்பம் இல்லாத போது எதுக்கு நீங்க அதைப்பற்றி பேசி எல்லாத்தையும் சடங்கப்படுத்தி.. உங்களையும் வருத்திக்காதிங்க. ” தன் அன்னை மற்றும் சித்திக்கு தெளிவுப்படுத்தினான்.
ஆர்த்தியும்.. இளமதியும் அவளை மாற்ற அவர்கள் பட்டபாட்டை இப்போது அதனை நினைத்தால் கூட சிரிப்புவரும். செல்வத்தின் கூற்றை தான் அவனின் அப்பாவும்.. சித்தாப்பாவும் நினைத்தார்கள். அக்கா, தங்கைகளின் விருப்பத்திற்கு தன் அண்ணாவின் குடுப்பத்திலிருந்து இரு மருமகளை எடுத்து.. மகளையும் அண்ணாவின் பையனுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது.. பிறகு எதற்காக வருந்த வேண்டும்.
அருட்செல்வமே மீண்டும் ஆரம்பித்தான் ” சித்தி உங்களுக்கு மாப்பிள்ளை பற்றியும் அவர்களின் குடும்பத்தை பற்றியும் நன்றாக தெரியவேண்டும் எனில் ஒன்றும் பிரச்சனையில்லை.. பையன் வீட்டிலிருந்து ஞாயிறு தானே வீட்டுக்கு வராங்க?.. மாமா விசாரித்துப் இருப்பார்கள் தான் இருந்தாலும் பையன் பேரும்.. அவங்க வீடு.. அம்மா அப்பா பேர் மட்டும் சொல்லுங்க.. காலையில் எல்லா தகவலையும் உங்களுக்கு நான் கொடுக்கிறேன். ”
” ரொம்ப சந்தோஷம் மருமகனே.. நான் பையனை பற்றி கூறுகிறன்.. என் தங்கச்சிங்க திருப்திக்காக நீங்களும் விசாரிங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.” அனைவரும் இப்போது அனைவரும் நிம்மதியாக உணர்ந்தனர். ஆனால் அக்கா, தங்கை இருவருக்கு மட்டும் மனம் ஏற்றுக்கொள்ள தடுமாறியது.
” பையன் பேரு வேந்தன். இங்கு அன்னபூரணி ஹோட்டல் வைத்துயிருப்பவர்களின் பையன் தான். அண்ணன் தம்பி இரண்டுபேரும் தான் வைத்துயிருக்காங்க.. அதில தம்பி பையன் தான் வேந்தன். இவருக்கு 2தங்கைகள் இவரு ஒரு பையன்தான். இப்ப சென்னையில் ரிசேச் கம்பெனியில் வேலைசெய்கிறார். ” விவரம் கூறி..
அப்படியே அனைவரையும் பெண் பார்க்கும் படலத்திற்கு அனைவரும் வந்து அதனை சிறப்பித்து தர வேண்டும் என அருணாச்சலம் அனைவரையும் அழைக்க.. உடன் லட்சுமியும் அண்ணி.. அண்ணா.. இரண்டு மருமகன்களையும்.. இரு மகளையும் தன் சார்பாக அழைத்தார்.
வரதராஐன் ” கண்டிப்பா எல்லாரும் வந்துவிடுவோம் மச்சான்.. எழிலரசிக்காக நான் முதல் ஆளாக நான் அங்கு இருப்பேன். ” அவர் கூறியதை சிலர்கேட்டு மகிழ்ந்தும்.. சிரித்தும் இருக்க.. சுந்தர்ராஐனும்.. இளமதியும் அமைதியாக இருந்தனர்.
இவர்களை கவனித்த அருணாச்சலம்.. ” என்ன?.. சின்ன மச்சான்.. இளமதி.. என்னமா?.. இரண்டுபேரும் அமைதியா இருக்கிங்க?. ”
இளமதிக்கு நேற்று அப்பா போனில் கூறும் போது நன்றாக கேட்டாள் தான். ஆனால் அவளுக்கு முதன்முறையாக மாப்பிள்ளை.. வரன்.. அவர்களின் விவரம் அனைத்தும் கேட்பது புதிது.. வீட்டில் அனைத்தும் பார்த்துயிருப்பார்கள் என்ற எண்ணத்தில் இருந்தாள். பையனின் போட்டோவை தன் தங்கைக்கு பொருத்தம்மா?.. என்றளவில் மட்டுமே பார்த்தாள்.. இப்போது பையனின் விவரத்தை நேரடியாக கூறி கேட்க.. ஒரே ஊர் என்று தெரிந்தால் பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் என உணர்வில் தனக்கு தெரிந்தவரா இருக்குமோ?.. என்று எண்ணினாள். இளமதியின் போன் பிள்ளையின் கையில் இருந்து.
இரண்டு பேரும் ஒருசேர ” பையனோட போட்டோ இருக்கா?..”
” ஏன்? மதி ” என்று கேட்டுக் கொண்டே தன்னுடைய போனிலிருந்து பையனின் போட்டோவைகாண்பித்தான். அருள்நிதி மற்றும் இளமதிக்கு பையனை பற்றியும்.. இன்று நடந்ததும் தெரியும்.. ஆனால் ஞாயிறு வருவது இருவருக்கும் புதிது. அருணாச்சலத்திற்கு அவர்களிடம் நேரடியாக சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணம்தான்.
சுந்தர்ராஐனுக்கு அருணாச்சலம் போன் கொடுத்தார். அவர் சிறிதுநேரம் பார்த்துவிட்டு மற்றவர்களிடம் கொடுத்தார். மற்றவர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.
இளமதி இது இது யோசித்துவிட்டு.. அவளுடைய ஞாபகத்தில் வந்தான்.. ” இவனா?.. ” இருவருக்கும் கேட்கும்படி கூறினாள்.
” உனக்கு தெரிந்த பையனாம்மா?.. ”
” உனக்கு இவரை தெரியும்மா மதி?..”
இளமதி ” இவனை எனக்கு நல்லாவே தெரியும். ” கூறிக் கொண்டே தன் அப்பாவையும் கணவனையும் பார்த்தாள். இருவரும் முறைத்துக் கொண்டு இருந்தனர்.. ஏன்?. அவள் நினைக்க.. ‘ அச்சச்சோ.. ‘
” சாரிப்பா.. எனக்கு இவரை நல்லாவே தெரியும்ப்பா. நானும் இவரும் ஒன்னாதான் ஸ்கூல படிச்சோம். ரொம்ப நல்லபையன் தான் ப்பா.. நல்லாதான் படிப்பார்.. ஆனா அதற்கு ஏற்றார் போல்.. வாய் பேசுவதும் அதிகம் தான் ப்பா. ”
” மதி.. உனக்கு அப்ப ரொம்ப நல்லா தெரிந்தவர்னா?.. இப்பவும் உங்களுக்கு பேஸ்புக்.. ஸ்கூல் வாட்சப்ல பழக்கம் இருக்கா?. ”
” இல்லங்க.. எனக்கு ஸ்கூலிலே எனக்கு அதிகம் பழக்கம் இல்ல. நல்லா தெரியும் அவ்வளவுதான். அவங்க அக்கா பெயர் யோகலட்சுமி தானே?.. அவங்க வீடு காந்தி நகர் தானே?. “
” ஆமாம் மா.. அவங்க அக்கா பெயர் யோகலட்சுமி தான்ம்மா.. அவங்க ஒன்னாயிருந்தப்ப.. வீடு இருந்த தெரும்மா.. இப்ப அவங்க 4வருடமா அதற்கு அடுத்த தெருல இருக்காங்க மா. “
” சரிப்பா.. ஆர்த்தி அக்காக்கூட படுச்சுவங்க தான் யோகலட்சுமி. எனக்கு அந்த அக்கா மூலமா தான் நல்லா தெரியும். ஆர்த்தி அக்கா உங்களுக்கு ஸ்கூல் படித்த யோகலட்சுமி அக்கா ஞாபகம் இருக்கா?.. ”
” இருக்கு மதி. ” என்று அவர் கூறக் கொண்டு இருக்கும் போது..
சுந்தர்ராஐன் ” மாமா எனக்கு இப்ப தான் ஞாபகம் வருது.. அவங்க வீடு கட்டுனப்ப நம்ம கிட்ட தான் சிமெண்ட், இரும்பு வாங்கினாங்க. அப்ப அந்த தம்பி பெங்களூரிலில் தான் வேலை பார்த்தாங்க.. ஆனாலும் அங்கயிருந்தே வீட்டுக்கு தேவையானதை ஆடர் பண்ணிவிடும். பணமும் அந்த பையன்தான் அனுப்பி வைக்கும். நல்லா பொறுப்பா.. பொறுமையாதான் பேசுவாரு. நான் தொழில்ல இதுநாள் பார்த்த வரைக்கும் பெரியவங்க தான் வீடு கட்டுறப்ப இந்த மாதிரி வேலைய பண்ணுவாங்க. ஆனா அந்த பையன் தான் எல்லாம் பண்ணியது. ரொம்ப நல்ல பையன் தான் மாமா. நம்ம எழிலை கண்டிப்பா நல்லா பார்த்துக் கொள்ளுவார் மாமா. ” வேந்தனை பற்றி தனக்கு தெரிந்தவற்றைகூறினார்.
” ரொம்ப சந்தோஷமா இருக்கு மச்சான்.. வேந்தனை உங்களுக்கும்.. இளமதிக்கும் தெரிந்து இருக்கிறது. நீங்க கூறிய செய்தி நல்ல விதமாகவே இருக்கிறது. செல்வமும் மீண்டும் விசாரிப்பதாகவே கூறியிறுக்கிறார்.” அதனை உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
அருணாச்சலம், லட்சுமி இருவருக்கும் மிகவும் திருப்தியாக இருந்தது.. இவர்களை போன்றே மற்றவர்களும் நினைக்க.. தேவகி, ராதா மட்டும் பார்ப்போம்.. பார்ப்போம்.. என்ற பார்வை மட்டுமே. அதன் பிறகு எல்லோரும் தங்களின் எண்ணங்களை பரிமாறினர். வீட்டிற்கு செல்ல நேரம் ஆவதால் அனைவரிடமும் மீண்டும் மறுமுறை அழைத்துவிட்டு.. மன நிம்மதியுடன் அங்குயிருந்து புறப்பட்டனர்.
‘ அருணாச்சலமும்.. லட்சுமியும்.. இவ்வாறு உறவினர்களை அழைத்த இதேநேரம்.. ரவிந்திரனும்.. சித்ராவும் அழைக்க சென்றனர் சித்ராவின் அண்ணாக்களை அழைக்க சென்றனர். ‘
‘ சித்ராவின் இரண்டு அண்ணாக்களில் மூத்த அண்ணா ராகவன்.. நன்றாக எல்லோரிடம் பழகக் கூடியவர்.. வேந்தனுக்கு மிகவும் பிடித்தவர்.. அதனிலும் அவரின் இருமகன்களும் வேந்தனிடம் நண்பர்களாக இருக்க கூடியவர்கள். வேந்தனின் அன்பான அக்கா யோகா மற்றும் இரண்டாம் பையனின் மனைவி தீபாவும் நெருக்கமான அன்பான அக்காதான்.. இதனால் பெரிய அண்ணா குடும்பம் வேந்தனுக்காக எல்லாவிதத்திலும் பக்கபலமாக இருக்கக் கூடியவர்கள். ‘
‘ இரண்டாம் அண்ணா.. கணேஷ் – சுமதி. சுமதி ரவிந்தரனின் ஒரே தங்கை. வேந்தனுக்கு தன் அத்தையை பிடிக்கும். ஆனால் ராகவன் மாமாவிடம் பழகுவதை போல.. கணேஷ் மாமாவிடம் பழகமாட்டான். அங்கு இரு ஆண்கள் மட்டுமே அதனால் அடிக்கடி செல்வான்.. அவர்களும் நன்றாக பழகுவதால் அவர்களின் உறவில் நெருக்கம் அதிகம் இருக்கும். இங்கு கமலேஷ் உடன் நண்பனை போன்ற பழக்கம் மற்றும் உறவுதான். ஆனால் இரு பெண்கள் இருப்பதால் அவன் அங்கு செல்லமால்.. அவனை பெரிய மாமாவீட்டிற்கு வரவழைத்து தான் எங்கும் செல்வான். ‘
‘ நந்தினி, சாருலதா இருவரும் இரு தங்கைகளின் தோழிகள்.. அதனால் தன் வீட்டிற்கு அவர்கள் அடிக்கடி வருவர்கள்.. வந்தால் நலம்.. படிப்பு விசாரித்துவிட்டு.. நேரத்தை பொறுத்து தன் அறைக்கு இல்லை வெளியில் சென்றுவிடுவான். ‘
‘ வேந்தனிடம் அவனின் 25வயதில்லேயே நந்தினியை திருமணம் செய்ய கேட்டார்கள்.. தனக்கு இதுநாள் வரை நந்தினியின் மேல் திருமணம் பற்றிய எண்ணம் தோன்றியதும் இல்லை.. எனக் கூறி மறுத்துவிட்டான். சரி சாருலதாவையாவது மணந்துக் கொள்வாயா?.. எனக் கேட்க.. ‘
அவர்களிடம்.. ” இங்க பாருங்க எனக்கு இருவரையும் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் எந்நாளும் எனக்கு இருந்தது இல்லை. நீங்க யாரேனும் பேசுவதை கேட்டு.. இருவருக்கும் நான் சாதாரணமா பேசினால் கூட.. அவர்கள் மனதில் வேறு எண்ணம் வரக்கூடாது என்ற காரணத்தால்.. நான் இரண்டுபேர் கூட பேசவே மாட்டேன். ”
” இப்ப நான் சொல்வதை நல்லா கேட்டுக்கோங்க.. எனக்கு இவங்க என்று மட்டும் இல்ல.. வேற உறவுமுறையில் கூட.. யார் மீதும் எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் தோன்றியது இல்லை.. இனி தோன்ற போவதும் இல்லை. நான் திருமணம் செய்யப்போகும் பெண்.. கண்டிப்பாக வெளியில் இருந்துவரும் பெண்தான். எப்போது எனக்கு திருமணம் செய்ய விருப்பம் என்று நான் கூறும்போது.. அப்போது போய் பெண்ணை பார்க்கலாம்.. அதனால் என்னிடம் இனிமே திருமணம் பற்றி நீங்க பேசவேக்கூடாது. ” என்று அனைவர் முன்பும் தெளிவாக கூறிவிட்டான்.
‘ எல்லோருக்கும் அவன் தாய்மாமன் மகளை!.. இல்லை உறவுமுறையில் உள்ளவர்களையாவது!.. திருமணம் செய்ய வேண்டும் என்பது விருப்பம்!.. ஆனால் அவன் மறுத்து விட்டாதால்.. அவனின் மீது அப்போதே அனைவருக்கும் வருத்தம். ‘
‘ இவனின் திருமண எண்ணத்தை அறிந்த இருபெண்களில் சாருலதா சின்ன பெண் என்பதால் அப்போதே மறந்துவிட்டாள். நந்தினிக்கு சிறு ஈகோ கூட.. உனக்கு நான் வேண்டாம் என்றால் எனக்கும் நீ வேண்டாம்.. என்று முடித்துவிட்டாள். ‘
‘ ஆனால் கணேஷிற்கு வருத்ததை மீறிய கோபமும் உண்டு. அதனால் வேந்தனைவிட எல்லாவிதத்திலும் ஒருபடி மேலாக தன் பெண்ணிற்கு வரன் தேடிக் கொண்டு இருக்கிறார். அதற்காகவே தன் பொண்ணை இன்னும் மேலே படிக்க வைத்தார்.. அவளும் நன்றாக படித்து முடித்து.. இப்போது பெங்களூரில் பெயர் பெற்ற கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளாள். ‘
‘ கணேஷ்.. ரவிந்திரன் தங்கையை மணந்துயிருப்பதால் அவர் எப்போதும் தனக்கு மற்றவர்களை விட ஒருபடி மேல் தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என எண்ணம் கொண்டவர். அதேபோல்தான் தன் தங்கையை மணந்த ரவிந்திரனுக்கும்.. அவர் ஒருபடி மேல்தான் மரியாதைசெலுத்துவார். அதன் காரணத்தால் மட்டுமே வேந்தனின் மீதான எல்லா கோபத்தையும் புறம் தள்ளி.. வசுந்தரா- கமலேஷ் திருமணத்தை உறுதி செய்தார். ‘
‘ இதில் அத்தை சுமதிக்கு வேந்தனின் முடிவில் எந்த கவலையும் இல்லை. அவனின் வாழ்க்கைதுணை யாராக இருந்தாலும்.. அவன் எந்த பிரச்சனையும் இல்லாமல் கணவன் மனைவி குழந்தைகளுடன் சீரும் சிறப்புமாக இருந்தால் போதும். தங்கள் மகள்களுக்கும் நல்ல வாழ்க்கைஅமையும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ‘
கணேஷ் வேலை விஷயமாக வெளியூர் செல்வதால் முதலில் அவர் வீட்டிற்கு சென்றார்கள். ” வாங்க அண்ணி.. வாங்க அண்ணா.. ” என்று அழைத்து இருவரையும் அமரவைத்தார்.
” அண்ணி.. எப்படி இருக்கிங்க? அண்ணா இன்னும் கிளம்பி விடவில்லை தானே?.. என்று எங்க சாருவ காணும்?.. நந்தினி எப்படி இருக்கா?..”
” மாமா கிளம்பிட்டு இருக்கார். சாரு அவ தோழிய பார்க்க போய்யிருக்கா.. நந்தினி நல்லாஇருக்கா அண்ணி. என்ன அண்ணி உங்க முகத்தில் ஒரு பொழிவு தெரியுது. என்ன நல்ல விஷேசம்!. ஏதும் நடக்க போகுதா அண்ணி?.. “
எப்படி அண்ணி?.. ” ஆமா அண்ணி நல்ல விஷேசம்தான். அண்ணா வரட்டும். ” கூறிக் கொண்டுயிருக்கும் போது.. கணேஷ் தன் அறையிலிருந்து வந்தார்.
” வாங்க மாமா.. வாம்மா.. சித்ரா.என்னம்மா.. எனக்கு இரண்டு மூன்று தடவை கால் பண்ணியிருக்கிங்க?? இந்த நேரத்தில் இரண்டு பேரும் வேற வந்துயிருக்கிங்க. ஏதாவது முக்கியமான விசயம்மா?..”
” ஆமா கணேஷ். வேந்தனுக்கு கல்யாண சம்பந்தம் அமைந்துயிருக்கு.. பொண்ணு இங்க நம் ஊர்தான். நாம வர ஞாயிறு அன்னைக்கு பொண்ணு பார்த்துட்டு வரலானு முடிவு செய்து.. அதற்காக உங்கள எல்லாம் அழைக்க கிளம்பினப்ப.. நீ வெளியூர் போறனு கார்த்தி போன் பண்ணினான்.. அதான் நீ கிளம்பி விடுவாயோ!.. என நினைத்து.. நாங்க வருகிறோம் என சொல்வதற்காக கால் பண்ணினோம். ”
‘ கணேஷ் அதுக்குள்ள பொண்ணு அமைந்து.. பார்க்க போறீங்களா?.. இவன் இவ்வளவு சீக்கிரம் பொண்ணு பார்க்க ஒத்துக் கொண்டானா?.. ” அப்படியா மாமா!.. ரொம்ப சந்தோஷம் சித்ரா.. “
சுமதி முக மலரச்சியுடன் ” அப்படியா அண்ணி!.. ரொம்ப சந்தோஷம் அண்ணா.. ஒரு வழியா வேந்தன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டானா?..”
“ ஆமாம் அண்ணி. சம்மதம் சொல்லிவிட்டான். எனக்கும் ரொம்ப சந்தோஷம் அண்ணா. ”
” எப்ப எல்லாம் முடிவானது சித்ரா?.. வேந்தன் உடனே சரினு சொல்லி விட்டானா?.. ” என்று தன் சந்தேகத்தை தெளிவுப்படுத்த எண்ணினான்.
” பொண்ணு வீட்டலயிருந்து நேற்றுதான் அவங்க முடிவ சொன்னாங்க. நேற்று தான் வேந்தன் லீவ் போட்டு இங்கு வந்தான். இன்னைக்கு காலையில் தான் அவனிடம் பேசி சரினு அவன் சொன்ன பிறகுதான் பொண்ணு வீட்டல பேசினோம். வேந்தன் இங்குயிருப்பதால் ஞாயிறு அவங்க வீட்டிற்கு வரோம்னு சொன்னோம். அவங்க பொண்ணிடம் கேட்டுவிட்டு.. இப்ப சாய்ந்திரம் தான் அவங்க ஞாயிறு வருவதற்கு உறுதிப்படுத்தினாங்க. ”
” கணேஷ், சுமதி ம்மா.. பொண்ணை பார்க்க போகும் போது.. அங்கு இருவருக்கும் கல்யாணத்தில் விருப்பம் என்றால் அப்படியே.. அன்னைக்கே உறுதியும் பண்ணிவிடலாம் என கேட்டோம். அவங்களும் சரினு சொல்லிவிட்டாங்க பா. அதனால் உறுதியும் பண்ணுவது போலதான் நாம்ம போகனும். “
” ஓ.. சரிங்க மாமா.. அதற்கு ஏற்றார் போல பார்த்துக் கொள்ளலாம். நான் நாளை இரவு இல்ல.. ஞாயிறு காலையில் வந்துவிடுவேன். எல்லாரும் வந்துவிடுவோம் மாமா. பொண்ணு என்ன பண்ணுறாங்க?.. அவங்க வீட்டல என்ன பண்ணுறாங்க?.. “
” பொண்ணு வீட்டல அரிசி,பருப்பு மொத்த வியாபாரமும்.. அரிசி மில் வைத்துயிருக்காங்க. பொண்ணு MBA முடித்துயிருக்கு. கல்யாணத்திற்கு பிறகு தான் வேலைக்கு போக வேண்டும் என இப்பபோதைக்கு அவங்க கடை.. மில்லிற்கு போய் பார்த்துக் கொள்ளுதா. ”
அப்படியா!. அப்ப இந்த பொண்ணை வேந்தன் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்வது சந்தேகம்தான். ஞாயிறு பார்க்கத்தானே போகிறோம் என நினைத்து.. ” சரி மாமா.. ” என்று மட்டும் கூறினார்.
அவருக்கு மேலும் சில கேள்விகள் கேட்க வேண்டும் என தோன்றியது தான். ஆனால் அவரின் ஈகோ தடுத்தது. பிறகு நமக்கு தெரியாமல் என்ன நடக்கப் போகிறது?? என்று நினைத்து விட்டுவிட்டார்.