‘ சித்ராவின் மூத்த அண்ணாவின் குடும்பத்திற்கு.. வேந்தனின் திருமணத்திற்கு அவனின் விருப்பபடி பெண்பார்க்க ஆரம்பித்தது.. ஞாயிறு பார்க்க போக முடிவு எடுத்துயிருப்பது.. அதன்பிறகு காலையில் அவன் நடந்துக் கொண்டுயிருந்த விதம்.. பின் சம்மதம் தெரிவித்தது.. பின் இப்போது முடிவெடுத்து இருப்பதுவரை அவர்களுக்கு தெரியும். இருந்தாலும் மகிழ்ச்சியை நேரடியாக பகிர்ந்து கொள்ள வேண்டுமே என கணேஷ் வீட்டில் இருந்து பெரிய அண்ணா வீட்டிற்கு வந்தனர். அங்கு ராகவன் அண்ணா.. ராஜேஸ்வரி அண்ணி.. அவர்களின் இரண்டாவது மகன் கண்ணன் மனைவி தீபா இருந்தனர். ‘
” வாங்க ரவி மாப்பிள்ளை.. வாம்மா சித்ரா.. ” அழைப்பை ஏற்று புன்னகையுடன் அமர்ந்தவர்களிடம்.. ” எப்படியிருக்கான் என் மருமகன் வேந்தன். காலையில் இங்குயிருந்து தான் கோயிலுக்கு போனான். நாம்ம எப்படி?. அவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க.. நான் அங்க வரனு நினைத்தால் அவன் நமக்கு எந்த வேலையும் வைக்காம எல்லாம் முடித்து விட்டான். ” புன்னகையுடன் கூற..
” அண்ணா.. நீங்க தான் அவனை மெச்சிக்கணும்.. காலையில் அவன் பண்ணத நினைத்தால்!.. இப்ப கூட எனக்கு BP ஏறுது.. ஆனா என் மருமகளை நினைத்தால் வந்த எல்லாம் ஓடிவிடும். ”
” என்ன?. உங்க மருமகள் பார்ப்பதிற்குளே.. நினைத்தாளே!. ரொம்ப சந்தோசமா இருக்குனு சொல்லிறிங்க?.”
” ஆமா அண்ணி.. மதியம் இவன் பண்ண காரியத்தால் எழிலரசி ரொம்ப பயந்துயிருப்பாளோனு!.. எனக்கு கஷ்டமாக இருந்துச்சு. அதன் எழிலரசி குரலையாவது கேட்கலாம் என்று வேந்தனை போன் பண்ண சொல்லி நாங்க ஸ்பிக்கரில் கேட்டோம். ஆனா அது எழிலுக்கு தெரியாது.. எழில் எவ்வளவு நேர்மறையா எல்லாத்தையும் யோசித்து.. ரொம்ப அழகாக பேசினா அண்ணி. ” என்று போன் உரையாலை மேலோட்டமாக கூறினார்.
” ம்.. ரொம்ப நல்லா பொண்ணா!.. இருக்கா அண்ணி.. வேந்தன் ரொம்ப அதிஷ்டகாரன் தான். அவனையும் நல்லா பார்த்துப்பா.. குடும்பத்தையும் நல்லா பார்த்துப்பா. சரி எல்லாம் கடைக்கு போகனும் என்று சொன்னாங்க?..”
” ம்.. எல்லாரும் கடைக்கு வேந்தனோட தான் போயிருக்காங்க. ” அவர் கூறிக் கொண்டு இருக்கும் போது..
” சித்தி.. அத்த இதப் பாருங்க.. ” தீபா தன் சித்ராவிடமும் ராஜியிடமும் வாட்சப் வீடியோவை காண்பித்தாள்.
” இந்த பொண்ணுங்கள என்ன அண்ணி பண்ணுறது?.. காலையில் அவன் பண்ணினான்.. இப்ப இந்த பொண்ணுங்க. ஞாயிறு பார்க்க தானே போறோம்.. அதுக்குள்ள இவங்களுக்கு என்ன அவரசம்?..”
எழிலரசியை சந்தித்து.. அவளுடன் பேசிக் கொண்டு இருப்பதை.. அமைதியா நின்றுக் கொண்டுயிருந்த காவ்யா, வினோ.. தீபா தாய்மையுற்று 6ஆம் நடக்கிறது. கணவன் வந்திருக்க.. வீட்டில் இருக்கிறார். அவள் எழிலரசியை பார்ப்பதற்காக கால் செய்தது.. அவர்கள் இப்போது மாட்டிக் கொண்டனர்.
” அண்ணி பொண்ணுங்க தானே பேசுறாங்க.. அதனால ஒன்னும் பிரச்சனை ஆகாது..” என அவர் கூறிக் கொண்டுயிருக்கும் போது வேந்தனும் அருகில் இருப்பதை பார்த்து..
” என்ன அண்ணி பண்ணுதுங்க இந்த பொண்ணுங்க?.. அதுவும் வேந்தனுடன். ” அவரும் சித்ராவிடம் புலம்பினார்.
ரவியும்.. ராகவனும்.. அவர்களின் பேச்சை கேட்டு ” என்னம்மா?. என்ன அந்த போனில்.. ” எனக் கேட்டவுடன் கண்ணன் போனை ரவியிடம் கொடுத்தார். அவர் அதை பார்த்தவுடன் சிரித்துக் கொண்டுயிருந்தார்.
என்ன இவர் சிரிக்கிறார்?.. என்று அவர்கள் எல்லோரும் அருகில் வந்து பார்க்க.. அப்போதுதான் ‘ சத்யா எழிலரசிக்கு ஸ்விட் ரொம்ப பிடிக்கும்!.. ஹோட்டல் வைத்துயிருப்பவரை கல்யாணம் செய்து கொள்வாள்..’ என தான் கூறியதாக வேந்தனிடம் கூறிக் கொண்டுயிருந்தை பார்த்துக் கொண்டுயிருந்தனர்.
சித்ரா மென்மையாக சிரித்துக் கொண்டே.. ” என்ன?.. உங்களுக்கு எல்லாம் ஸ்விட் என்றால் பிடிக்காத?. என் மருமகளுக்கு கொஞ்சம் அதிகமா பிடிக்குமாம்!.. அதுக்கென்ன இப்ப?.. ”
” நாங்க ஒன்றும் செல்லவே இல்லையே.. சித்ரா. நான் என்ன நினைத்தேனா?. வேந்தன் நம்ம கடையிலேயே.. எப்ப ஸ்விட் கடை ஆரம்பிப்பிக்கலாம்?.. என பற்றி பேசுவான் பாரேன். ” என அவர்கூறும் போதே.. அங்கு அவர்கள் கிளம்புவதற்கான பேச்சு ஆரம்பித்தும் வீடியோ கால் கட்டானது.
” அதனால என்ன அண்ணா?. என் மகளுக்குகாக ஆரம்பிக்காம.. யாருக்காக ஆரம்பிக்க போறிங்க?.. வேண்டாம் என சொல்லி விடுவிங்களா என்ன?.. அண்ணா அண்ணி.. எழில்ல பார்த்திங்களா பாவாடை தாவணியில் எவ்வளவு அழகாக இருக்கா?. எல்லாரும் சிரிக்கவும்.. சின்னபொண்ணு மாதிரி யோகாவிடம் பேசுறா.. மதியம் பேசுனதா சொன்ன பொண்ணு.. இந்த பொண்ணு என்று சொன்னா.. யாரும் நம்பமாட்டாங்க. பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசி.. அழகாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள் என நினைக்கிறேன். ”
மேலும் பல விசயங்கள் அவளைப்பற்றியும்.. அவர்கள் எழிலின் வீட்டிற்கு போக என்னவெல்லாம் செய்ய வேண்டியவற்றையும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து.. ரவியும்.. சித்ராவும் அவர்கள் எல்லோரையும் முறையாக அழைத்துவிட்டு.. தங்களின் வீட்டிற்கு சென்றனர்.
அடுத்தநாள் மற்றவர்களை போனில் அழைத்தால் போதும் என்று எண்ணிக்கொண்டும்.. எழிலை நினைத்தும் வீடு வந்தடைத்தனர்.
ரவிந்திரன், சித்ராவும்.. வீடு சேர்ந்த சிறிது நேரத்தில் மகள், மருமகளுடன்.. வேந்தனுக்கு பதிலாக கமலேஷ் அழைத்து வந்ததை பார்த்து.. வேந்தன் எங்கே என்று அவர்கள் கேட்கவில்லை?.. மற்றவர்களும் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என சொல்லவில்லை. அவர்கள் கால் செய்த போது.. தீபா காமிராவை கட் செய்துயிருந்தாள். எல்லோரும் பார்த்தார்கள் என்பது தெரியாது. ரவிக்கும் சித்ராவிற்கும்.. எழிலரசியை வீட்டில் விட வேந்தன் சென்றுயிருக்கிறான் என்று புரிந்துவிட்டது. சிறிது நேரத்தில் கழித்து வேந்தன் வர.. பிறகு அனைவரும் சாப்பிட்டு ஹாலில் அமர்ந்து இருந்தனர்.
மேலும் சிறிது நேரத்தில் கமலேஷ் உடன் காவ்யாவும் கிளம்பிவிட.. இப்போது வினோ ஞாயிறு நிகழ்ச்சி முடிந்துதான் கிளம்புவதால் அக்கா தங்கைகள் அவர்களின் கணவன் குழந்தைகளுடன்அங்கு தான் இருந்தார்கள். கார்த்திக்கேயனும் விஸ்வநாதனும்.. ரவிந்தரனுடன் பேசிக் கொண்டு இருக்க.. வேந்தன் ஷோபாவில் கால்களை மடக்கி.. மடியில் லாப்டாப்பை வைத்து அமர்ந்து இருந்தான்.
மகன் அருகில் அமர்ந்த சித்ரா.. ” வேந்தா.. எல்லாம் பேசிட்டு இருக்காங்க.. நீ என்னடானா லாப்டாப் பார்த்துட்டு இருக்க. ”
” முக்கியமான ஆபிஸ் வேலை ம்மா. இன்னும் 15 நிமிடத்தில் முடிந்துவிடும் ” வேலையை பார்த்துக் கொண்டே அம்மாவிடம் பதில் கூறி.. தான் சொன்ன நேரத்திற்குள்ளேயே அவன் வேலையை முடித்த நேரம்.. அவன் போனில் மெசேஜ் ஒலிக்கேட்டது. யார்?. என்று பார்த்தும் மென் புன்னகையுடன் அதற்கு பதில் அளித்துவிட்டு.. திரும்பவும் லாப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டுயிருந்தான்.
திரும்பவும் அவனை பார்த்த சித்ரா..” இன்னமும்மா உன் வேலை முடியல?.. ” அவன் பார்த்துக் கொண்டுயிருக்கும் அவனுடைய லாப்டாப்பை எதார்த்தமா பார்க்க.. அதில் அவர்களுடைய கடையின் படம் வரவும் அவரும் பார்த்தார்.
அதில் கடை முழுவதையும் எடுத்துயிருக்கும் வீடியோ.. கடையில் வேலை செய்பவர்களின் பணியினை குறித்த விவரங்கள்.. கடையின் கணக்குகள் என அனைத்தையும் அடுத்தடுத்து அருகில் இருப்பவர்.. தன்னை அம்மா பார்க்கிறார் என்பது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டுயிருந்தான். அவன் சென்னையில் இருந்தாலும் கடையினை குறித்த விவரங்கள்.. கணக்குகள் அனைத்தும் தினமும் அவனுக்கு சென்றுவிடும் என்று சித்ராவிற்கு தெரியும்தான். ‘ ஆனால் ஏன்? இப்போது இந்த நேரத்தில் அனைத்தையும் ஒருசேர மாற்றி மாற்றி பார்க்கிறான்?.. ‘
சித்ராவின் அருகில் அமர்ந்துயிருந்த ரவிந்திரனிடம்..” என்னங்க வேந்தன் பார்த்துக் கொண்டுயிருப்பதை பாருங்களே..” அவரிடம் சொல்ல.. அவரும் பார்த்தார். பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே.. ” நான் உன்கிட்ட சொன்னேன்ல நம்ம ஹோட்டலில் ஸ்விட் செக்ஷ்ன்.. அவன் ஆரம்பிக்க நினைப்பானு.. அதுக்காக பார்ப்பானாயிருக்கும்.” ‘ அப்படியா!.?. ‘ என்று சித்ரா தலையசைத்து கேட்க.. ரவியும் ‘ ஆம் ‘ என்று கண்களை முடித்திறந்தார்.
இவர்களின் மெளன சம்பாஷணைகளை யோசனையிடன் நிமிர்ந்தவன் பார்த்திட.. ‘ நம்மள பற்றியதா தான் இருக்குமோ.. இப்போதைக்கு நாம்ம பார்த்தவரைக்கும் போதும் டா.. நாளைக்கு கடைக்கு சென்று இது குறித்து பார்த்துவிட்டு பிறகு யோசித்துக் கொள்ளலாம். முயல்குட்டி வேற.. நம்ம காலுக்காக வெட்டிங்.. சிறிது நேரம் இவர்களிடம் பேசிவிட்டு.. அறைக்கு சீக்கிரம் செல்லவேண்டும். ‘ என எண்ணிக் கொண்டே.. அனைத்தையும் எடுத்து வைத்து.. அவர்களின் பேச்சில் சென்று ஐக்கியமானான்.
வேந்தனின் அரசியானவளோ.. தன் அறையில் தன்னவனை தான் நினைத்திருந்தாள். தனு.. இன்னும் ஒருமணி நேரத்திற்குள்ளாக வீடியோ கால் செய்வதாக கூறியிருக்கிறான். அவன் தன்னை பாவாடை தாவணியில் இருந்தது.. மாற்ற வேண்டாம் என்றோ.. மாற்றிவிடு என்றும் கூறவில்லை.. ஏனெனில் அவன் தன்னை ரசனையாக!.. ஏதோ கூறவருவதை போலவே பார்த்தான். எதுவும் கூறுகிறானோ.. இல்லையோ அவனுக்கு இந்த உடை நான் உடுத்தியிருப்பது பிடித்துயிருக்கிறது. முதன்முறை இருவருக்குமா வீடியோ கால். அதனால் உடை மாற்றலமா?… வேண்டாம்மா?.. என யோசித்து ஒருவழியாக முடிவு எடுத்துவிட்டாள்.
இங்கோ வேந்தன்.. தன் வீட்டினருடன் பேசிக் கொண்டுயிருந்தாலும் இந்நாளில் நடந்த நிகழ்வுகளையும்.. தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் அவ்வப்போது நினைவில் வந்து மனது துள்ளாட்டம் போட்டது. அதனிடையே அவனின் செல்ல முயல்குட்டியும் வந்தாள். அய்யோ அவள் காத்துக் கொண்டுயிருக்கிறாள் வேற..
இதுபோல உறவினர்கள் ஒன்று சோர்ந்தால் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டுயிருந்து கடைசி ஆளாக படுக்க போகும் ஆள் தான். ஆனால் இப்போது முதல் ஆளாக போக வேண்டுமே. ஒரே நாளில் தன் நடவடிக்கைகளை வீட்டினர் முன் மாற்ற வேண்டி வரும் என்று.. அவன் என்ன கனவா கண்டான்!. எப்படி அறைக்கு போவது?.. என்று எண்ணிக் கொண்டே தன் போனில் மணியை பார்த்தான். அவன் அரசியிடம் கூறிய நேரத்தை கடந்து பதினைத்து நிமிடங்கள் ஆனாது.
வேந்தன் போனை பார்த்த நேரம்.. வினோ தன் அண்ணை பார்த்துவிட்டு பின் யோகாவை தோளில் தட்டி வேந்தனை காண்பித்தாள். இருவரும் அவனை பார்த்து சிரித்துவிட்டு.. ” வேந்தா எனக்கு காட்ஸ் விளையாட வேண்டும் போல இருக்கு டா.. விளையாடலாம்மா?.. நாம விளையாடி ரொம்ப நாளாச்சு இல்ல?.. “
அவன் பதில் சொல்ல போகும் நேரம் அவனின் அரசியிடமிருந்து மெசேஜ் டோன் வந்தது. அவள் வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தாள்.. ” தனு ” என்ற தன்னவளின் தனக்கான அழைப்பு மட்டும் தான் கேட்டான்.
அடுத்த நொடி வேந்தன் எதையும்?. யாரை பற்றியும் யோசிக்கவில்லை. ” அக்கா நீங்க எல்லாம் ஆரம்பித்து விளையாடுங்க… நான் அரைமணி நேரத்தில் வருகிறேன்.” என்று கூறிவிட்டு தன் அறைக்கு செல்ல..
அவன் போகும் வேகத்தை பார்த்தே.. அவன் யாருடன் பேச செல்கிறான்?. என்று புரிந்து.. ” சரி டா நாங்க எல்லாம் விளையாடுகிறோம்.. நீ பொறுமையா நாளை காலை எழுந்துவா தம்பிபி.. ” என்று யோகா அவன் அறைகே கேட்டும் அளவிற்கு சிரிப்புடன் கூறினார்.. அனைவரின் சிரிப்பு சத்தமும் கூடவே கேட்டது.
‘ இவ்வளவு நேரம் எப்படி அவர்களிடம் சொல்லிவிட்டு வருவது என்று யோசித்தவன்.. தன்னவளின் தனு என்ற அழைப்பே அவனை எதுவும் யோசிக்கவிடாமல்.. வேந்தனை அவன் அறைக்கு அழைத்து வந்தது. ‘
வேந்தன் அரசிக்கு முதலில் கால் செய்ய.. மதியம் ஒலித்த அதேபாடல்.. அதனை புன்னகையுடன் கேட்க ஆரம்பித்தவன்.. அவள் அவனின் அழைப்பை கட் செய்துவிட்டு.. உடனே வீடியோ கால் செய்தாள்.
அரசியின் அழைப்பை ஏற்றவுடன்.. மாலையில் தன்னவளை ரசனையுடன் பார்த்த அதே பாவாடை தாவணி உடையில்.. தான் வாங்கிக் கொடுத்த ஜாதிமல்லி சூடி.. மலர்ந்த பூவிற்கு ஈடான இன்முகத்துடன் இருந்த தன் அரசியை இவ்வாறு எதிர்பார்க்காததால்.. எல்லோரும் இருந்ததால் சாதாரண பார்வையில் பார்த்திருந்தவன்.. இப்போது உரிமை பார்வை செலுத்தி.. சில நொடிகள் அவளையே பார்த்திருந்தான்.
” ஹேய் முயல்குட்டி!.. உன்ன இப்ப பாவாடை தாவணியில் எதிர்பார்க்கவே இல்லடா!.. ”
அவனின் முயல்குட்டி என்ற புது அழைப்பில் ஒரு நொடி என்ன கூப்பிடான்?.. என்று உணர்ந்து.. ” என்ன பேர் சொல்லிக் கூப்பிட்டிங்க?.. முயல்குட்டியா?.. “
வேந்தன் அப்போதுதான் அவன் கூப்பிட்டதை உணர்ந்து.. மனத்திற்குள் அவளை நேரில் பார்க்கும்போது அவளிற்காக அவனின் செல்லப்பெயரை கூறி.. பிறகு அழைக்க வேண்டும் என நினைத்துயிருந்தேன். ஆனால் இப்போது.. அவனை மறந்து அவளை பார்த்திருந்ததால் அறியாமல் வந்துவிட்டது.. சரிரி.. எப்ப கூறினாள் என்ன?.. ஒரு நாள் முன்னதாக இவளிடம் கூறிவிட்டேன். அவ்வளவுதான் என்று நினைத்துவிட்டு..
” ஆமா. எனக்கு நீ.. முயல் குட்டி மாதிரி தான் தெரியிற.. அதான். ” மெல்லிய சிரிப்புடன் கூறியவன்.
” என்ன?.. இந்த உடை போட்டதற்கு என்னை பார்த்தவுடன் ஏன்டா?.. போடோம் என்ற அளவிற்கு புலம்பின.. ஆனா இப்ப இன்னும் உடை மாற்றாமல் இருக்க?.. ஏன்?.. எனக்கு இந்த உடைபிடிக்கும்மா?. பிடிக்காதா?. என்று உனக்கு தெரியும்மா?. “
அரசி வெக்கம் கலந்த புன்னகையுடன் ” ம்.. அதெல்லாம் உங்களுக்கு இந்த உடை பிடிக்கும் என்று எனக்கு தெரியும். எனக்கும் அப்ப உங்களிடம் பேச முடியவில்லை. உங்களுக்கும் இது பிடிச்சிருந்தது.. எனக்கு உங்க முன்னாடி இந்த உடையில் இருக்க பிடிச்சியிருக்கு. முதல் தடவை வீடியோ கால் பார்க்கிறோம்மா.. அதான் மாற்றல. நீங்க கேட்டிங்களே என்பதற்காக நான் கேட்கிறேன். நல்லாயிருக்கேனா?.. உங்களுக்கு பிடித்துயிருக்கா?.. ”
வேந்தன் உரிமை பார்வையுடன்.. ” ரொம்ப அழாக!. இருக்க அரசி.. எனக்கு ரொம்ப பிடித்துயிருக்கு!… ஆனா இனிமேல் வீட்டில் இருக்கும் போது மட்டும் போட்டுக் கொள்.. வெளியில் தனியாக வரும்போது போடாதா.. சரியா. அப்புறம் என்பாடு தான் திண்டாட்டம் ஆகிவிடும். ” என்று அவன் கூற
அவள் ஏன்?.. என்பது போல ஓரு பார்வை பார்க்க..
” அது வந்து முயல்குட்டி.. நீ இந்த உடையில் ரொம்ப அழகாக இருக்கியா வேற.. யாருட இந்த பொண்ணு பாவாடை தாவணியில்.. என எவனாவது உன்னை இனிமேல் பார்த்தா எனக்கு கொஞ்சம் கோபம் வருமா.. அதனால்தான். ”
அரசி முறைத்துக் கொண்டே ” ஓ.. அப்ப முன்னாடி என்னை பார்த்த தப்பில்லையா?.. “
” தப்பா பார்த்தா?.. தப்புதாம்மா.. ஆனா சும்மா நல்லாயிருக்காங்க!..என பார்த்தால் ஒன்னும் இல்ல டா. ” என அவன் கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
” அப்ப சார் அது மாதிரி சும்மா நிறைய பேரை பார்த்துயிருக்கிங்க போல?.. ”
வேந்தன் அவளை மையல் பார்வையுடன் ” ம்ம்.. ஆமாம் நானும் சிறிது வருடத்திற்கு முன்பு.. ஒரு பொண்ணை மட்டும் கவனித்து பார்த்துயிருக்கிறேன். ( மனத்திற்குள் இப்பவும் பார்த்துக் கொண்டுயிருக்கிறேன்)..”
‘ அரசி அவன் கண்களையோ.. இல்லையெனில் வார்த்தைகளையோ.. அப்போது கவனித்திருந்தால் அவளுக்கு சுகமான உணர்வை அளித்துயிருக்கும்.. எங்கே.. அவன் ” ம்ம்.. ” என்று கூறியவுடனே.. ‘ போடா என்னால அதெல்லாம் கேட்க முடியாது ‘ என்று நினைத்து அவனை அவள் கவனிக்கவில்லை. ‘
அரசி உடனே அவனை முறைத்துக் கொண்டே ” எனக்கு எதுவும் கேட்கல.. எனக்கு தேவையில்ல. அதவிடுங்க. ஏன்?.. இப்ப வர இவ்வளவு நேரம்?.. ” என அதைப்பற்றி பேச பிடிக்காமல் பேச்சை மாற்றினாள்.
வேந்தன் அவளின் எண்ணம் புரிந்து புன்னகையுடன் ” என்ன முயல் கோபமா?.. இல்ல.. சரிஅதவிடு.. ” என்று கூறி நேரம் ஆனதற்கான காரணத்தை கூறினான்.
” அய்யோ விநாயகா!.. நல்லா என்னை மாட்டிவிட்டு வந்துயிருக்கிங்க.. உங்கள..” இப்படியாக சில திட்டுகள்.. கேள்வி பதில்கள்.. விருப்பங்கள்.. ஸ்விட் நத்திங்ஸ் என பேசி கடந்த போது மணிஇரவு 11.45
நேரத்தை பார்த்தவன்.. இப்போது இதை அவளிடம் கூறியே ஆக வேண்டும் என நினைத்து ” அரசி ” என மென்மையாக அழைத்தான். ” அரசி எனக்கு இன்றைக்கு நமக்கான புது உறவின் தொடக்கம். அதில் நிகழ்ந்த நிகழ்வுகள்.. இப்ப உன்னுடன் பேசுவது.. என எல்லாம் நினைக்கும் போது மனசில் ஒரு புதுவித உணர்வு!.. முயல்குட்டி. அதனால நான் உனக்கு இப்ப ஒன்னு கொடுக்கனும். உன் முகத்தை என் அருகில் கொண்டு வாயேன். “
அவன் கூறியதை கேட்டுக் கொண்டுயிருந்தவளுக்கும் இதே எண்ணம்தான். அதனை கேட்டுக்கொண்டே வந்தவள் கடைசி வரியை கேட்டவுடன்.. என்ன கூறுவது?. செய்வது என தெரியவில்லை.. ஒரு நொடி யோசித்தவள்.. பின் அவன் கண்டிப்பாக தவறாக எதையும் உணர்ந்து கூறியிருக்க மாட்டான் என்ற அவள் மனம் கூறியவுடன்.. அவள் முகத்தை அவன் முன் கொண்டு சென்றாள்.
வேந்தனும் அவளின் யோசனையான முகபாவனைகளை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவள் யோசித்து பின் தன்னை நம்பி தன் முன்னால் தன் முயல்குட்டி தன் முகத்தை கொண்டு வந்ததில் மகிழ்ந்து.. அவள் முகத்தில் கண்களை பார்த்துக் கொண்டே.. ” அரசி நான் இப்ப.. உன் நெற்றியில் முத்தம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.. அதுதான் இன்றைய நாளை முழுமையாக்கும்.. முயல்குட்டி. என்னிடம் வாங்கிக்கொள்ள சம்மதம்மா?. “
‘ அவனின் நெற்றி முத்தம் தருவதாகான.. சம்மதம்மா?.. என்று கேட்ட பின்பும்.. அவள் தன் தனுவிடம் மறுப்பாளா என்ன?.. ‘
தலை தானாக ‘ சம்மதம் ‘ என ஆட்டியது.
அரசி புன்னகையுடன் ” ஆனா.. ஒரு நிபந்தனை. ”
வேந்தன் அவள் சம்மதம் என்று தெரிவித்தவுடன் மனம் சிறகு இல்லாமல் பறக்க.. பிறகு ஒரு நிபந்தனை என்றவுடன்.. ” என்ன?.. பார்த்தும்மா.. என்னால செய்ய முடியும் என்பதுபோல சொல்லு. ”
அரசி புன்னகையுடன் ” அதெல்லாம் உங்களால் முடியும். சொன்ன பிறகு பண்ணமுடியாது என சொல்லக்கூடாது. சரியா.. நிபந்தனையை சொல்லட்டும்மா?.. வேண்டாம்மா?..” அதிகாரமாக கேட்டாள்.
வேந்தன் சிரிப்புடனே.. “உன் நிபந்தனையை நிறைவேற்றுவதே இந்த வேந்தனின் முதல் கடமை. முதல்ல சொல்லு முயல்குட்டி.. இன்னும் ஐந்து நிமிடம் தான் இருக்குடா. ”
அரசி வெக்கப் புன்னகையுடன் ” இப்ப எத்தனை முத்தம் நெற்றியில் கொடுக்கிறிங்களோ.. அதனைவிட இரண்டு மடங்கு நேரில் பார்க்கும் போது கொடுக்க வேண்டும். ”
வேந்தன் ‘ அய்யோ என் முயல்குட்டி!. ‘ அவன் கண்கள் சிறிது கலங்கி.. அவள் தன் முன்னால் நிஜமாக இருப்பதை போலவே உணர்ந்து.. வீடியோவில் அவள் நெற்றியில் பல முத்தங்களை கொடுத்தான். எவ்வளவு என்று இருவருக்கும் தெரியாது. அவன் அறையில் இன்றைய நாளின் முடிவு.. இல்லை அடுத்த நாளிற்கான தொடக்கமாக.. பன்னிரண்டு மணி ஆனாதற்கான மணிஓசை எங்கிருந்தோ கேட்டது.
தன்னவனிடமிருந்து பல முத்தங்களை பெற்றவளின் கண்களும் கலங்கியிருந்தது. அவன் முத்தம் கொடுத்தபின் அவளை பார்த்துக் கொண்டோ இருப்பதை உணர்ந்து.. ” தனு ஏன் எனக்கு? உங்களிடம் இன்னைக்கு தான் உங்கள பார்த்து போலவே தோன்ன மாட்டேங்குது? அதேபோல நீங்க நடந்து கொள்வதை பார்த்தாலும்.. நமக்கு முன்பே பழக்கம் போலவே இருக்கு. அதனால எதையும் உரிமையா கேட்க தோனுது.”
‘ வேந்தன் அவளுக்கு அளித்த முத்தத்தின் இனிமையில் அரசியின் மீதுயிருந்து.. பார்வையை திருப்பாதிருந்த போது.. அவளின் கேள்வியில் உள்ளம் பூரித்து போனது. அவள் தன்னை ஏதோ!.. வகையில் உணர்கிறாள் என்றும்.. தன்னை எங்கேயோ பார்த்து இருக்கிறோம்!.. என்று தன் நினைவுகளில் தேடுகிறாள் என்றும் நினைக்கும் போதே சுகமாக இருந்தது. அதுவே தனக்கு போதும் என எண்ணியவன். இனி இதற்கு மேல் தன்னை நினைத்து முயல்குட்டி.. குழப்பிக் கொள்வதை பார்க்க விரும்பவில்லை. ‘
” அரசி.. உனக்கு நான் இப்ப என்ன பதில் தந்தா சந்தோஷமா!. திருப்தியா.. நல்லாயிருக்கும் என எண்ணுகிறாயோ!.. அதையே நீ ஏற்றுக்கொள் முயல்குட்டி. நான் ஞாயிறு அன்று.. உனக்கான இந்த விளக்கத்தை உன்ன.. என் அருகில்.. இல்லையெனில் மடியில் வைத்து.. நீ கேட்ட முத்தத்தை உனக்கு கொடுத்துக் கொண்டே சொல்றேன். ” மெல்லிய விரிந்த புன்னகையுடன்.. அதே சமயம் சாதாரணமாக கூறினான்.
‘ இதனை கேட்டவள்.. அவன் கூறியதை திருப்ப நினைத்து.. என்ன என்ன சொல்கிறான் இவன்?. என்ன எண்ணுகிறனோ!.. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்மா. அப்ப அப்போ எனக்கு தனுவை.. என்னவனாக!.. பார்த்தவுடனே உணர்ந்தவனை.. எனக்கு முன்பே தெரியும்மா!.. பழக்கம்மா!.. பின் அவன் கூறியதற்கு.. முறைப்பு.. சிரிப்பு.. வெக்கம்.. மகிழ்ச்சி.. கூச்சம் என்ற பலவண்ண கலவையாக இருந்தவள்.. இவனை!. வேந்தனை பார்க்கவே முடியாமல் பின் சட்டென்று ஒரு முடிவு எடுத்தாள். ‘
‘ அரசியின் முகமாற்றத்தை பார்த்து ரசித்துக் கொண்டுயிருந்தான்.. ஏதோ சொல்லப் போறா முயல்குட்டி.. அவள் கூறப்போகும் பதிலுக்க அவளையே பார்த்தான். அதுதான் அவனுக்கு இப்போது மிகவும் இஷ்டமா வேலையாச்சே. ‘
அரசி அவளின் உணர்வுகளை சற்று ஒதுக்கி வைத்து.. ” நான் உங்ககிட்ட இனி ஞாயிறு அன்று தான் பேசுவேன், பார்ப்பேன். ” வீடியோ கால் சேர்த்தும் கூற..
ஏதோ சொல்லப் போகிறாள் என்று நினைத்தான் தான் என்பதால்.. ” ஏன்ம்மா?.. ” காரணம் மட்டும் அறிய வேண்டி.. சாதாரணமாக தான் கேட்டான்.
” அதுவந்து நீங்க தான் காரணம்!.. ” அவன் புரியாமல் பார்க்க..
அவள் புரிந்து.. ” எனக்கு இப்ப நீங்க சொன்னிங்கள.. எனக்கு உங்களை முன்பே தெரிந்திருக்கலாம் என்று. எனக்கு யோசித்து ஞாபகம் வந்தா சரி.. வரவில்லைனா?. பெண்பார்க்கும் நிகழ்ச்சியில் கூட.. உங்கள பார்க்கும் போது யோசனையில் இருப்பேன் என்று நினைக்கிறேன். ”
” நாம்ம கோவில்ல பார்த்துக் கொள்ளவில்லை என்றால்.. நாம்ம யார்?.. எப்படி?.. என்ற எதிர்பார்ப்பு இருவருக்கும் இருந்துயிருக்கும் தானே!.. ஆனால் அந்த சூழ்நிலை இப்ப நமக்கு இல்ல. “
” இன்றைக்கு ஒருநாள் நாம் பார்க்காமல், பேசாமல் இருந்தால்.. நான் உங்களை எப்போது?.. எங்கு பார்த்தேன்?.. என யோசிக்காமல் இருப்பேன். நமக்குள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி செல்வதற்காக நீங்களும்.. கேட்பதற்காக நானும் காத்திருப்பது.. என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும். இந்த அனுபவம் நமக்கு புதிது. அதனால்.. ” அவள் கூறவர
வேந்தன் உடனே.. ” எனக்கு ஓகே அரசி.. நீ சொல்ல வருவது எனக்கு புரியிது. எனக்கு உன்னோட இந்த யோசனை ரொம்ப பிடுச்சுயிருக்கு. இருவரும் நாளையே.. நேரடியாக பார்த்து பேசலாம். அதுவரை போனில் பேசுவது.. பார்ப்பது வேண்டாம் என்று சொல்லுற. என் அரசியான முயல்குட்டியிடம் சொல்லபோகும் தருணத்திற்காக காத்திருப்பேன். ” புன்னகையுடன் கூறினான்.
அரசியும் புன்னகையுடன் ” ம்ம்.. சரி.. இப்ப வைக்கவா?.. ”
” ம்ம் சரி.. நல்லா தூங்கும்மா.. வைக்கிறேன்.” கூறியவுடன் கண்களால் அவள் நெற்றியை பார்த்தான்.
அவனை பார்த்துக் கொண்டுயிருந்தவளும் கண்கள் போகும் திசையை பார்த்து.. அவள் கண்கள்தானாக மூடி.. அவன் நெற்றியில் முத்தம் கொடுப்பதை ஏற்றுக் கொண்டாள். பின் இருவரும் வாயை திறத்து பேச தோன்றாமல்.. தலையை மட்டும் அசைத்து வீடியோ காலில் இருந்து விடைப்பெற்றனர்.
இருவரும் தாங்கள் இவ்வளவு நேரம் பேசியவற்றை எண்ணிக் கொண்டே தூங்கியும் போனார்கள். சில நிமிடங்களுக்கு முன் முடிந்த.. நேற்றைய ஒரு நாளிலேயே அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆச்சரியம், அதிர்ச்சி, காதல், காதலின் தொடக்கம் என இருந்தது. இனிவரும் நாட்களில் அவர்களுக்கு என்னென்ன கொடுக்கப் போகிறதோ.?.