நம்ம சந்துரு அண்ணன் தான் பார்த்துட்டு அட்மிட் பண்ணிட்டு உங்களுக்கு கால் பண்ணி எடுக்காததால, எனக்கு போன் பண்ணிட்டாரு!
நீங்க சீக்கிரம் வாங்க” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
அவன் மருத்துவமனைக்கு விரைந்தான்.
அதற்குள் ராமுவை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
ரிசப்சனில் காத்திருந்தாள் மகி.
“ஏங்க.. இங்க இருக்கேன்” என்றவளிடம் ஓடி வந்தான் ராஜு.
“எப்படி ஆச்சு?” என்றவன்,
“நீ இரு.. நான் சந்துரு கிட்ட கேட்டுக்கிறேன்” என்று அவனைத் தேடி உள்ளே சென்றான்.
அவனைக் கண்டதும் ஓடி வந்தான் சந்துரு.
“டேய்.. எப்படிடா?” என்று கேட்ட ராஜுவிற்கு அழுகை வரும் போல இருந்தது.
“ஹிட் அண்ட் ரன்டா. அண்ணனை அடிச்சுப் போட்டுட்டு நிறுத்தாம போய் இருக்காங்க!
அடிச்சது தூக்கினதுல அவர் ரோடு ஓரமா ஒரு மரத்தடியில் விழுந்து கிடந்திருக்காரு.
அவரோட புல்லட் கொஞ்சம் தள்ளி விழுந்து கிடந்தது!
அவரை நிறைய பேர் கடந்து போய் இருக்காங்க.
அவர் கெட்ட நேரம், எவனோ குடிகாரப் பயல் குடிச்சுட்டு விழுந்து கிடக்கிறான்னு நினைச்சுட்டு யாருமே அவர காப்பாத்தல!
நான் அந்த பக்கமா போனவன், முதலில் வண்டியைத் தான் பார்த்தேன்.
நான் தானே உனக்காக அத புக் பண்ணி வச்சதும், ஃபேன்சி நம்பர் வாங்கி கொடுத்ததும்!
அதனால ராமு அண்ணன் வண்டி ஏன் இப்படி விழுந்து கிடக்குன்னு கொஞ்சம் இறங்கிப் போய் பார்த்தா அண்ணன் ரத்த வெள்ளத்தில் கிடக்காரு.
ரத்தம் பூராவும் மண் உறிஞ்சி இருக்கு! அதனால டக்குன்னு பார்க்கிறவங்க கண்ணுல அது படவே இல்லை!
உடனே உனக்கு போன் அடிச்சேன். நீ எடுக்கவே இல்லை!
அப்புறம் வேற வழியில்லாம மகிக்கு அடிச்சு, அதுவும் உடனே கிளம்பி வந்து ஹாஸ்பிட்டலில் கட்ட சொன்ன அட்வான்ஸ் அமவுன்ட்டும் உடனே நெட் பாங்கிங் மூலம் கட்டிடுச்சு. இப்ப ஆபரேசன் நடந்துட்டு இருக்கு!
என்னென்னமோ சொல்றாங்கடா..
கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் காப்பாத்தி இருக்க முடியாது.. அது இதுன்னு.
அது தான் இப்ப எல்லாம் சரி ஆகிடுச்சே” என்று ஆறுதல் சொன்னாள் மகி.
என்ன சொல்லியும் வனிதா விடிய விடிய உறங்கவே இல்லை!
விடிந்து விடியாத நேரத்தில் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் போய் விட்டாள் அவள்.
“நானும் வரேன்” என்று சொல்லி ப்ரியாவும் அவளுடனே சென்று விட்டாள்.
மகி, பரமேஸ்வரி உதவியுடன், கமலா அம்மாவுக்கும் யாழினிக்கு காலை உணவு சமைத்து சாப்பிட வைத்து விட்டு தானும் உண்டு விட்டு மாத்திரைகள் போட்டுக்கொண்டு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றாள்.
எல்லோரும் இருவர் இருவராக சென்று ராமுவைப் பார்த்து விட்டு வந்தார்கள்.
ராமு கண் விழித்துப் பார்த்து அம்மாவையும் வனிதாவையும் கண்டு விட்டு அழுதான்.
பின் அங்கிருக்கும் நர்ஸ் மெல்லியதாக ஆனால் உறுதியாக அவர்களை வெளியே போக சொல்லி விட்டார்.