புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 3.1
வேலுவின் வண்டி சத்தத்தில் வெளியே எட்டி பார்த்த பவித்ரா , அவன் கையில் சிறு தூக்கு இருப்பதை பார்த்தவள் வேகமாக சென்று அதை வாங்கி திறந்து பார்த்து , பெரியம்மா குடுத்து விட்டாங்களப்பா என கேட்க
ம்ம் உன் பெரியம்மா தான் உனக்குனு குடுத்தாங்க, அப்பத்தா என்க ஆயி? தூக்கை திறந்து மனம் பிடித்தவள் , உள்ளரா டி.வி.ல நாடகம் பாக்குறாங்க என தகப்பனின் கேள்விக்கு பதில் அளித்து உண்பதில் கவனம் செலுத்த , மகளை சிறு புன்னகையோடு பார்த்தவன் தன் பெரியம்மா சரசுவை தேடி சென்றான் , கூடத்தில் அமர்ந்து மும்மரமாக நாடகம் பார்த்து கொண்டிருந்தவர் , அவனை பார்த்ததும் வாய்யா வேலு ! போன சோலி என்னாச்சு ,என்ன சொன்னா அந்த சக்காளத்தி இனிமேட்டு ஒழுங்கா வேலைக்கு போவள இல்ல ஊர் வம்பு வாங்கி திரிவாள , அரசாங்க வேலை வாங்கி குடுத்துருக்க உம் பேரா கெடுக்காமலே ,
பெரியம்மா சொன்ன அரசாங்க வேலையில் சிரிப்பு வெடித்து கிளம்ப மனம் விட்டு சிரித்தவன் , பெரியத்தா நான் அரசாங்கம் நடத்துரனாக்கும் வேலை போட்டு குடுக்க யார் வேன்னாலும் கண்மாய் வேலைக்கு போலம் , உம்மா பவுசு பேச்ச அவகிட்ட வைக்காதிக என் சிண்ட புடிச்சு ஆஞ்சுருவ , இப்பத்தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல,
அந்த சிரிக்கிக்கு நீ தான் மகனே இடம் குடுக்குற , ஊரே மரியாதையா பாக்குற என்ற மகன என்னா போடு போடுற நீங்களும் அவ சொல்லுக்கு பம்மிகிட்டு நிக்குதிக , ஒருத்தன் வாயில் இருந்து வருமா காட்டு ராசானு இந்த சிமிட்டி என்னனா பயமில்லாமல் காட்டு ராசா மவன்னு கூப்டுற நீங்க ஏத்து ஒரு வர்த்தக பேசமாட்டிக , செவுட்டு சேர்ந்து நாலு அப்பு விட்ட அடுத்து பேச வாய் வருமாங்குறேன்.
வேலுவின் தந்தை நெல்லையப்பன் பெரிய சம்சாரி காடு கரை , தோட்டம்,தோப்பு என்றே அவர் எண்ணம் ,செயல் எல்லாம் விவசாயம் தான் ரொம்ப சிறு வயதிலே பல மாற்றம் கொண்டு வந்தவர் வானம் பார்த்த பூமியாக இருந்த காட்டு பகுதி இவர் போராடி கொண்டு வந்த ஆறு நீர் பாசன வழிமுறை தான் தரிசாக கிடந்த நிலம் முப்போகம் விளையும் பூமியாக மாறியது , அதன் பின் தான் காய்கறி விவசாயத்தோடு வாழ தோப்பு , தென்னை என்று நீண்ட கால வெள்ளாமை வளரத் தொடங்கியது , அதனால் தான் அந்த பகுதி மக்கள் நெல்லையப்பணை விவசாயத்தின் மீது கொண்ட அன்பால் “ காட்டு ராசா” என்று சொல்ல தொடங்கி பின் அதுவே பெயரானது , அதுவம் இப்ப இருக்கும் தலைமுறை அவர் பெயரை கூட சொல்லாமல் பஞ்சாயத்தார் என மரியாதையாக அழைக்க, சம்மு மட்டுமே அப்பெயர் கொண்டு வேலுவை அழைப்பாள், அவ்வளவு கோபம் வரும் சரசு ஆத்தாக்கு , இருவரும் எப்போதும் எலியும் பூனையும் தான் , ஆனால் இருவருக்குள்ளும் தாய் , மகள் உறவுக்கான பாசம் இருக்கும் , இவர்கள் சண்டை போடுவதை வேலு காதிலே வாங்கமாட்டான், பவி குட்டிக்கு ஒரு நல்ல பொழுது போக்கு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்ப்பாள். சம்முவை எவ்வளவு சாடினலும் அவளுக்கு நல்ல வழி காட்ட சொல்லி ஒவ்வொரு வெள்ளி கிழமையும் அம்மனுக்கு விளக்கு ஏற்றி வேண்டுதல் வைப்பார்.
வேலுக்கு சம்மு தனி தான் அவள் சொல்லுக்கு எப்போதும் மரியாதை இருக்கும் , சிறு வயதில் விளையாட்டு கூட்டாளியாக சேர்ந்த ஜோடி அவள் பெரிய பெண்ணாகி, வேலு இளந்தாரி வட்டத்தில் சேர்ந்த போதும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள உரிமை, அன்பு மாறாமல் தான் இருந்தது. மாமன் மகள் மீது விருப்பம் கொண்டு அவள் பின் சுற்ற ஏற்பட்ட சிறு இடைவெளி ஒதுக்கமாகி ,திருமணத்தின் பின் அவளை சுத்தமாக மறந்து விட்டான் , முழுக்க அவன் தவறு தான், தாமரை உடனான அவன் திருமணத்தின் பின் தன் மனைவி , குடும்பம் , பிள்ளையென ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டான் , ஆனால் அந்த வட்டத்திற்குள் ஆண் நண்பர்களுக்கு இருந்த அனுமதி பெண் அவளுக்கு இல்லை, சம்மு மீது அவன் காட்டும் அக்கறை தாமரைக்கு பிடிக்காமல் போக குறைத்து கொண்டான் சம்மு உடனான நட்பை.
ஆண் பெண் நட்பு என்பது ஒரு வரையறைக்குள் வந்துவிடும் போல, பவித்ரா பிறக்கும் போது தான் சம்மு கல்யாணம் , கேள்விப்பட்ட போதும் திருமணத்திற்கு செல்லும் அளவிற்கு நேரம் இல்லை அல்லது நேரம் ஒதுக்கவில்லை.
இப்போது நினைத்து வருந்ததா நாள் இல்லை, கோபம் அளவு கடந்த கோபம் அவன் மீதே , தான் கொஞ்சம் சுதாரிச்சு இருக்கணும், என்ன ஏது என்று வள்ளி அத்தையிடமாது கேட்டிருக்கனும் , தன் குடும்பத்தில் ஒரு பெண் இருந்தால் அவ்வாறு தான் கண்டு கொள்ளாமல் இருப்போமா ? தன் நண்பனின் தங்கைகளுக்கு கூட வரன் பார்த்தானே , சம்முவை விட்டு விட்டானே, தான் அவ்வளவு சுயநலமாக நடந்து விட்டு இப்போது வந்து அக்கறையாக கேட்டால் கோபப்படாமல் என்ன செய்வாள் , தான் ஒதுக்கியது போல் தன்னை ஒதுக்காமல் நட்பு பராட்டுவதே பெரிது.
எல்லா பெண்களுக்கும் இருப்பது போலத்தான் தாமரைக்கும் தன் கணவன் தனக்கு மட்டுமே உரிமையானவன் என்ற எண்ணமும், சம்மு சொல்லுக்கு வேலு அடிபணிவதும் பிடிக்கமல் போக அதையும் மீறி சம்முவின் துடுக்கு பேச்சும் , உரிமை சாடலும் அவளை நேரடியாகவே ஒதுக்கி வைக்க போதுமானதாக இருந்தது. தாமரை செயல் புரிந்தாலும் வேலு மீது கொண்ட அன்பே அவளை அனுசரித்து போக வைத்தது. ஆனால் தாமரைக்கு தன் தோட்டத்தில் கூலி வேலைக்கு வரும் பெண் தன் புருஷனை பேர் சொல்லி அதாட்டுவதா அப்படி என்ன பெரிய நட்பு , அதை உடைத்தே ஆகவேண்டும் என்ற வெறி உண்டாக, தாமரைக்கு சிரமம் இல்லாமலே சம்முவை ஒதிக்கு விட்டான் வேலு. அவன் எண்ணம் எல்லாம் தாய்க்கும் பிடிக்கவில்லை, மனைவிக்கும் பிடிக்கவில்லை அப்புறம் எதுக்கு அவளுடன் நட்பு , தன் குடும்ப அமைதி முக்கியம் வீணாக வீட்டில் ஏன் சண்டை சச்சரவு என அவன் ஒதுங்க , புரிந்த சம்மு தானாகவே தள்ளி போய் விட்டாள், வேலு ஒதுக்கம் அவள் எதிர்பாரதது , வேதனையாக இருந்தும் நிதர்சனம் புரிய ஏற்றுக் கொண்டாள். தன் கல்யாணத்திற்கு மட்டுமே அவனை அழைத்தாள் , பவி பிறந்த சமயம் என்பதால் அவன் கவனத்தில் இல்லை சம்மு.
மற்றவர்கள் என்ன சொன்னாலும் தனக்கு எங்கே போனது புத்தி , தாய்க்கு எப்போதும் சம்முவை பிடிக்காது அவர் சொல்லிய போதும் கேட்கதவன் மனைவி வந்து சொல்லிய போது தங்களுக்கான உறவை சொல்லி புரிய வைக்காமல் , மகுடிக்கு மயங்கும் பாம்பாக அவள் சொல்லுக்கு கட்டுப்பாட்டு அவளின் தூய அன்பை தள்ளி வைத்ததுக்கு நல்ல பரிசு அல்லவா வாழ்க்கை கொடுத்து இருக்கிறது.